பிரிண்டர் போராட்டம்

அமெரிக்கர்கள் கருத்து சுதந்திரத்தை எந்த அளவுக்கு முக்கிய மாக கருதுகின்றனர் என்பதற்கு பிரிண்டரின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் உளவாளியை எதிர்த்து அவர்கள் தொடங்கி யிருக்கும் போராட்டமே சான்று. பிரிண்டருக்குள் உளவாளி ஒளிந்து இருப்பதாக கூறினால் நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் உண்மை அதுதான். பெரும்பாலான லேசர் பிரிண்டர்கள் உளவாளி களுடனே வருகிறது. அதாவது உங்கள் பிரிண்டர் மூலம் உங்களை அரசு உளவு பார்க்க முடியும் என்பதே விஷயம்.

.
இன்னமும் நம்ப முடியாமல் இருக்கிறதே என்றால் பிரிண்டரில் அச்சாகும் காகிதத்தின் பின்னே பதிவாகும் கண்ணுக்கு தெரியாத மஞ்சள் புள்ளிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அநேக லேசர் பிரிண்டர்கள் அச்சிடும் காகிதத்தில் நமக்கு தேவையான தகவல்களை அச்சிட்டு தருவதோடு, அதன் பின்பக்கத்தில் மஞ்சள் புள்ளிகளையும் அச்சிட்டு வைக்கின்றனர். 

இந்த மஞ்சள் புள்ளிகளை சாதாரணமாக பார்த்தால் தெரியாது. ஆனால் நீலநிற விளக்கொளியிலோ அல்லது நுண்நோக்கி மூலம் பார்த்தாலோ பளிச்சென்று தெரியும்.
அப்போதும் கூட இந்த மஞ்சள் புள்ளிகளுக்கு என்ன அர்த்தம் என்பது விளங்காது. ஏதோ அலங்காரம் அல்லது தற்செயலாக பதிவான புள்ளிகள் என்று நினைக்க தோன்றும்.
உண்மை அதுவல்ல. அந்த புள்ளிகள் தெளிவான ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. அவை குறிப்பிட்ட அந்த காகிதம் எந்த பிரிண்டரில் அச்சிடப்பட்டது என்பதற்கான சங்கேத குறிப்புகளை உள்ளடக்கி இருக்கிறது. அதன் மூலம் எந்த பிரிண்டரிலிருந்து அது அச்சிடப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

வேறுவிதமாக கூறுவதாயின் அச்சிடப்பட்ட எந்த காகிதத்தையும் அதன் பின்னே உள்ள மஞ்சள் புள்ளிகளின் மூலம் அதனை அச்சிட்டது யார் என்பதை கண்டுபிடித்து விடலாம்.
பொதுவாக அரசு அமைப்புகள், இந்த வசதியை தேவைப்படும் காலத்தில் பயன்படுத்திக் கொள்கின்றன. லேசர் பிரிண்டர்களின் நேர்த்தியான தன்மையை சாதகமாக்கிக் கொண்டு போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க வாய்ப்பு இருப்பதால் அதனை கண்டுபிடிக்க ஒரு வழி தேவை என்பதால் அமெரிக்க அரசாங்கம் தனது உளவு அமைப்பின் மூலம் இத்தகைய வழியை ஏற்படுத்தி தருமாறு பிரிண்டர் தயாரிப்பு நிறுவனங் களிடம் கேட்டுக் கொண்டது.
அதன் பலனாகவே பெரும்பாலான பிரிண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மஞ்சள் புள்ளிகளை அச்சடிக்கும் வசதியை தங்கள் பிரிண்டர்களில் பொருத்தி விடுகின்றனர்.

இதன் பின்னே உள்ள நோக்கம் பொதுநலன் கருதியதுதான் என்றாலும் பல அமெரிக்கர்கள் இதனை ஒரு பிரச்சனையாக கருதுகின்றனர். அரசாங்கத்தால் ஒரு காகிதத்தை வைத்துக் கொண்டே அதனை அச்சிடுபவரை கண்டுபிடித்து விடக் கூடிய வசதி தங்கள் அந்தரங்கத்தின் மீதான தாக்குதல் என்று கருதுகின்றனர்.

அதோடு இந்த விஷயத்தை வெளிப்படையாக குறிப்பிடாமல் நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருப்பதும் மாபெரும் தவறு என்று கருதுகின்றனர். மேலும் யாராவது ஒருவர் இந்த மஞ்சள் புள்ளிகள் விஷயத்தை கண்டுபிடித்து இது தொடர்பாக தங்களது பிரிண்டர் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தால் உடனே உளவுத் துறை அமைப்பு அவர்களை தேடிக் கொண்டு வந்து விசாரணை நடத்த தொடங்கி விடுகிறது.
மஞ்சள் புள்ளிகள் பற்றி புகார் செய்பவர், தவறான நோக்கம் கொண்டவராக இருக்க வேண்டும் எனும் கருத்தே இதற்கு காரணம். இதனையும் தனிநபர் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

இதற்கு எதிராக தங்கள் மனஉணர்வை வெளிப்படுத்து வதற்காக அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்ஐடி பல்கலையை சேர்ந்த மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சீயிங் எல்லோ பிராஜக்ட் எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். தங்களது பிரிண்டரில் அச்சாகும் காகிதத்தில் மஞ்சள் புள்ளிகள் தென்பட்டால் அது பற்றி உடனடியாக பிரிண்டர் நிறுவனத்திற்கு புகார் செய்யுமாறு இதன் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இப்படி நூற்றுக்கணக்கானவர்கள் புகார் செய்யும் போது உளவுத் துறை யாரிடம் என்று விசாரணை நடத்தும் பார்க்கலாம் என்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம். இதற்காக தனியே இணைய தளத்தை அமைத்து இந்த பிரச்சனை யின் பின்னணியை விளக்கி
மஞ்சள்  புள்ளிகள் பற்றி புகார் செய்யுமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர். இதுவரை நூற்றுக்கணக்கானோர் இதனை படித்து விட்டு மஞ்சள் புள்ளிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.

 
| |

அமெரிக்கர்கள் கருத்து சுதந்திரத்தை எந்த அளவுக்கு முக்கிய மாக கருதுகின்றனர் என்பதற்கு பிரிண்டரின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் உளவாளியை எதிர்த்து அவர்கள் தொடங்கி யிருக்கும் போராட்டமே சான்று. பிரிண்டருக்குள் உளவாளி ஒளிந்து இருப்பதாக கூறினால் நம்ப முடியாமல் இருக்கும். ஆனால் உண்மை அதுதான். பெரும்பாலான லேசர் பிரிண்டர்கள் உளவாளி களுடனே வருகிறது. அதாவது உங்கள் பிரிண்டர் மூலம் உங்களை அரசு உளவு பார்க்க முடியும் என்பதே விஷயம்.

.
இன்னமும் நம்ப முடியாமல் இருக்கிறதே என்றால் பிரிண்டரில் அச்சாகும் காகிதத்தின் பின்னே பதிவாகும் கண்ணுக்கு தெரியாத மஞ்சள் புள்ளிகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அநேக லேசர் பிரிண்டர்கள் அச்சிடும் காகிதத்தில் நமக்கு தேவையான தகவல்களை அச்சிட்டு தருவதோடு, அதன் பின்பக்கத்தில் மஞ்சள் புள்ளிகளையும் அச்சிட்டு வைக்கின்றனர். 

இந்த மஞ்சள் புள்ளிகளை சாதாரணமாக பார்த்தால் தெரியாது. ஆனால் நீலநிற விளக்கொளியிலோ அல்லது நுண்நோக்கி மூலம் பார்த்தாலோ பளிச்சென்று தெரியும்.
அப்போதும் கூட இந்த மஞ்சள் புள்ளிகளுக்கு என்ன அர்த்தம் என்பது விளங்காது. ஏதோ அலங்காரம் அல்லது தற்செயலாக பதிவான புள்ளிகள் என்று நினைக்க தோன்றும்.
உண்மை அதுவல்ல. அந்த புள்ளிகள் தெளிவான ஒரு விஷயத்தை உணர்த்துகின்றன. அவை குறிப்பிட்ட அந்த காகிதம் எந்த பிரிண்டரில் அச்சிடப்பட்டது என்பதற்கான சங்கேத குறிப்புகளை உள்ளடக்கி இருக்கிறது. அதன் மூலம் எந்த பிரிண்டரிலிருந்து அது அச்சிடப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

வேறுவிதமாக கூறுவதாயின் அச்சிடப்பட்ட எந்த காகிதத்தையும் அதன் பின்னே உள்ள மஞ்சள் புள்ளிகளின் மூலம் அதனை அச்சிட்டது யார் என்பதை கண்டுபிடித்து விடலாம்.
பொதுவாக அரசு அமைப்புகள், இந்த வசதியை தேவைப்படும் காலத்தில் பயன்படுத்திக் கொள்கின்றன. லேசர் பிரிண்டர்களின் நேர்த்தியான தன்மையை சாதகமாக்கிக் கொண்டு போலி ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க வாய்ப்பு இருப்பதால் அதனை கண்டுபிடிக்க ஒரு வழி தேவை என்பதால் அமெரிக்க அரசாங்கம் தனது உளவு அமைப்பின் மூலம் இத்தகைய வழியை ஏற்படுத்தி தருமாறு பிரிண்டர் தயாரிப்பு நிறுவனங் களிடம் கேட்டுக் கொண்டது.
அதன் பலனாகவே பெரும்பாலான பிரிண்டர் தயாரிப்பு நிறுவனங்கள் இந்த மஞ்சள் புள்ளிகளை அச்சடிக்கும் வசதியை தங்கள் பிரிண்டர்களில் பொருத்தி விடுகின்றனர்.

இதன் பின்னே உள்ள நோக்கம் பொதுநலன் கருதியதுதான் என்றாலும் பல அமெரிக்கர்கள் இதனை ஒரு பிரச்சனையாக கருதுகின்றனர். அரசாங்கத்தால் ஒரு காகிதத்தை வைத்துக் கொண்டே அதனை அச்சிடுபவரை கண்டுபிடித்து விடக் கூடிய வசதி தங்கள் அந்தரங்கத்தின் மீதான தாக்குதல் என்று கருதுகின்றனர்.

அதோடு இந்த விஷயத்தை வெளிப்படையாக குறிப்பிடாமல் நிறுவனங்கள் ரகசியமாக வைத்திருப்பதும் மாபெரும் தவறு என்று கருதுகின்றனர். மேலும் யாராவது ஒருவர் இந்த மஞ்சள் புள்ளிகள் விஷயத்தை கண்டுபிடித்து இது தொடர்பாக தங்களது பிரிண்டர் தயாரிப்பு நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தால் உடனே உளவுத் துறை அமைப்பு அவர்களை தேடிக் கொண்டு வந்து விசாரணை நடத்த தொடங்கி விடுகிறது.
மஞ்சள் புள்ளிகள் பற்றி புகார் செய்பவர், தவறான நோக்கம் கொண்டவராக இருக்க வேண்டும் எனும் கருத்தே இதற்கு காரணம். இதனையும் தனிநபர் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

இதற்கு எதிராக தங்கள் மனஉணர்வை வெளிப்படுத்து வதற்காக அமெரிக்காவின் புகழ் பெற்ற எம்ஐடி பல்கலையை சேர்ந்த மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து சீயிங் எல்லோ பிராஜக்ட் எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். தங்களது பிரிண்டரில் அச்சாகும் காகிதத்தில் மஞ்சள் புள்ளிகள் தென்பட்டால் அது பற்றி உடனடியாக பிரிண்டர் நிறுவனத்திற்கு புகார் செய்யுமாறு இதன் மூலம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இப்படி நூற்றுக்கணக்கானவர்கள் புகார் செய்யும் போது உளவுத் துறை யாரிடம் என்று விசாரணை நடத்தும் பார்க்கலாம் என்பதே இந்த பிரச்சாரத்தின் நோக்கம். இதற்காக தனியே இணைய தளத்தை அமைத்து இந்த பிரச்சனை யின் பின்னணியை விளக்கி
மஞ்சள்  புள்ளிகள் பற்றி புகார் செய்யுமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர். இதுவரை நூற்றுக்கணக்கானோர் இதனை படித்து விட்டு மஞ்சள் புள்ளிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர்.

 
| |

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.