குடும்பத்தை இணைக்கும் நெட்

 

பிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் வியட்நாம் நாட்டை பொறுத்தவரை இன்டெர்நெட் பேரூதவியாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்நாட்டில் நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக குடும்ப உறவுகளை பேணிக் காப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆபத்பாந்தவன் போல இன்டெர்நெட் அமைந்திருக்கிறது.

சதாசர்வகாலம் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இது போல குடும்ப உறுப்பினர்கள் அன்பை பரிமாறிக் கொள்ள நேரமும், வாய்ப்பும் குறைந்திருக்கும் கால கட்டத்தில் இன்டெர்நெட் குடும்ப பந்தத்தை வளர்த்துக் கொள்வதற்கான வழியாக அமைந்திருக்கிறது.

வியட்நாமை சேர்ந்த பல தம்பதிகள், தங்களது குடும்ப வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள இன்டெர்நெட், இமெயில், எஸ்.எம்.எஸ். போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு அழகான உதாரணமாக குயன் ஹாது எனும் பெண்மணியின் கதையை சொல்லலாம்.

இவர் வியட்நாமின் தலைநகரில் உள்ள தபால் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.
இவர் தினமும் 9 மணிக்கு வேலைக்கு செல்கிறார். வாரத்தில் பல நாட்கள் இரவு நேரத்தில் பணி புரிய வேண்டும். இவரது மகனுக்கோ காலையில் பள்ளி நேரம் துவங்குகிறது.

இவரது கணவர் 6.30 மணிக்கு மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று அப்படியே வேலைக்கு போய் விடுகிறார். அவர் திரும்பி வரும் நேரத்தில் மனைவி இரவு ஷிப்ட் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். இப்படியிருந்தால் குடும்பம் என்ன ஆவது?

ஆனால் நல்லவேளையாக இன்டெர்நெட் உதவியோடு இந்த தம்பதி தங்களது உறவை உயிர்ப்போடு வைத்திருக்கின்றனர். கணவன் காலையில் புறப்பட்டுச் சென்றதும், மகனை பள்ளியில் விட்டு விட்டதாக ஒரு எஸ்எம்எஸ்சை தட்டி விடுகிறார்.

அதன் பிறகு மனைவி தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எஸ்எம்எஸ் மூலம் கணவன் மற்றும் மகன் பற்றி விசாரித்து செய்தி அனுப்புகிறார். இதற்கான பதிலும் எஸ்எம்எஸ் மூலமே வந்து சேர்கிறது.

இந்த உரையாடலை சுவாரசியமாக்குவதற்காகவும் சுலபமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் ஸ்மைலி என்று சொல்லப்படும் இன்டெர்நெட் அடையாள குறிகளை இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உதாரணமாக முரண்டு பிடிக்கும் ஒரு முகத்தை கணவர் அனுப்பி வைத்தார் என்றால் மகன் சாப்பிட மறுப்பதாக அர்த்தம். அதே போல பலமாக தலையசைக்கும் படம் வந்தது என்றால் இப்போது விவாதத்துக்கு நேரமில்லை என்று அர்த்தம்.

இப்படியாக வேலைப்பளுவுக்கு இடையே அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பரஸ்பரம் தொடர்பில் இருக்கின்றனர். சில நேரங்களில் மனைவி வழக்கத்தை விட முன்னதாக வீட்டுக்கு வந்து விட்டால் கணவனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி மகனை பள்ளியிலிருந்து தான் அழைத்து வந்து விடுவதாக கூறுகிறார்.

இமெயில் மூலமும் இந்த செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர். கணவன், மனைவி இருவருமே அலுவலகம் சென்றதும் செய்யும் முதல் வேலை இன்டெர்நெட் முன் அமர்ந்து இமெயிலை அனுப்புவதாகத்தான் இருக்கிறது.

மனைவிக்கு செய்தித்தாள்களை படிக்க நேரமில்லை என்பதால் கணவன் சுவாரசியமான செய்திகள் இருந்தால் அதையும் இமெயிலில் அனுப்பி வைக்கிறார். இதே போல மற்றொரு தம்பதியினர் தங்களது மகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்து எஸ்எம்எஸ் அனுப்பும் கலையை கற்றுத் தந்து வருகிறார்கள்.

குடும்பத்தோடு தொடர்பு கொள்ள இதை விட வேறு சிறந்த வழியில்லை என்று இவர்கள் கருதுகின்றனர். எஸ்எம்எஸ் செய்தி மூலம் நேரில் பார்ப்பது போல தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது என்று ஒரு கருத்து இருக்கிறது.

ஆனால் இந்த தம்பதியோ மகள் எஸ்எம்எஸ் அனுப்ப எடுத்துக் கொள்ளும் நேரத்தை வைத்தே அவள் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்பதை கண்டுபிடித்து விட முடிவதாக கூறுகின்றனர்.

அந்த அளவுக்கு இவர்கள் இடையே தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இருக்கிறது. கம்யூனிச நாடான வியட்நாம் ஆரம்பத்தில் இன்டெர்நெட்டுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால் பிறகு அதனை தளர்த்திக் கொண்டது.

இதன் விளைவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 ஆயிரமாகவே இருந்தது. தற்போது இது 50 லட்சத்தை தொட்டு இருக்கிறது.
வியட்நாமில் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்த இன்டெர்நெட்டை பெருமளவு பயன்படுத்திக் கொள்வதே இதற்கு முக்கிய காரணம்.

 

பிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் வியட்நாம் நாட்டை பொறுத்தவரை இன்டெர்நெட் பேரூதவியாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்நாட்டில் நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக குடும்ப உறவுகளை பேணிக் காப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆபத்பாந்தவன் போல இன்டெர்நெட் அமைந்திருக்கிறது.

சதாசர்வகாலம் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இது போல குடும்ப உறுப்பினர்கள் அன்பை பரிமாறிக் கொள்ள நேரமும், வாய்ப்பும் குறைந்திருக்கும் கால கட்டத்தில் இன்டெர்நெட் குடும்ப பந்தத்தை வளர்த்துக் கொள்வதற்கான வழியாக அமைந்திருக்கிறது.

வியட்நாமை சேர்ந்த பல தம்பதிகள், தங்களது குடும்ப வாழ்க்கையை நிலைநிறுத்திக் கொள்ள இன்டெர்நெட், இமெயில், எஸ்.எம்.எஸ். போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கு அழகான உதாரணமாக குயன் ஹாது எனும் பெண்மணியின் கதையை சொல்லலாம்.

இவர் வியட்நாமின் தலைநகரில் உள்ள தபால் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.
இவர் தினமும் 9 மணிக்கு வேலைக்கு செல்கிறார். வாரத்தில் பல நாட்கள் இரவு நேரத்தில் பணி புரிய வேண்டும். இவரது மகனுக்கோ காலையில் பள்ளி நேரம் துவங்குகிறது.

இவரது கணவர் 6.30 மணிக்கு மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று அப்படியே வேலைக்கு போய் விடுகிறார். அவர் திரும்பி வரும் நேரத்தில் மனைவி இரவு ஷிப்ட் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். இப்படியிருந்தால் குடும்பம் என்ன ஆவது?

ஆனால் நல்லவேளையாக இன்டெர்நெட் உதவியோடு இந்த தம்பதி தங்களது உறவை உயிர்ப்போடு வைத்திருக்கின்றனர். கணவன் காலையில் புறப்பட்டுச் சென்றதும், மகனை பள்ளியில் விட்டு விட்டதாக ஒரு எஸ்எம்எஸ்சை தட்டி விடுகிறார்.

அதன் பிறகு மனைவி தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் எஸ்எம்எஸ் மூலம் கணவன் மற்றும் மகன் பற்றி விசாரித்து செய்தி அனுப்புகிறார். இதற்கான பதிலும் எஸ்எம்எஸ் மூலமே வந்து சேர்கிறது.

இந்த உரையாடலை சுவாரசியமாக்குவதற்காகவும் சுலபமாக தகவல்களை பரிமாறிக் கொள்வதற்காகவும் ஸ்மைலி என்று சொல்லப்படும் இன்டெர்நெட் அடையாள குறிகளை இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

உதாரணமாக முரண்டு பிடிக்கும் ஒரு முகத்தை கணவர் அனுப்பி வைத்தார் என்றால் மகன் சாப்பிட மறுப்பதாக அர்த்தம். அதே போல பலமாக தலையசைக்கும் படம் வந்தது என்றால் இப்போது விவாதத்துக்கு நேரமில்லை என்று அர்த்தம்.

இப்படியாக வேலைப்பளுவுக்கு இடையே அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டு பரஸ்பரம் தொடர்பில் இருக்கின்றனர். சில நேரங்களில் மனைவி வழக்கத்தை விட முன்னதாக வீட்டுக்கு வந்து விட்டால் கணவனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி மகனை பள்ளியிலிருந்து தான் அழைத்து வந்து விடுவதாக கூறுகிறார்.

இமெயில் மூலமும் இந்த செய்திகளை பரிமாறிக் கொள்கின்றனர். கணவன், மனைவி இருவருமே அலுவலகம் சென்றதும் செய்யும் முதல் வேலை இன்டெர்நெட் முன் அமர்ந்து இமெயிலை அனுப்புவதாகத்தான் இருக்கிறது.

மனைவிக்கு செய்தித்தாள்களை படிக்க நேரமில்லை என்பதால் கணவன் சுவாரசியமான செய்திகள் இருந்தால் அதையும் இமெயிலில் அனுப்பி வைக்கிறார். இதே போல மற்றொரு தம்பதியினர் தங்களது மகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்து எஸ்எம்எஸ் அனுப்பும் கலையை கற்றுத் தந்து வருகிறார்கள்.

குடும்பத்தோடு தொடர்பு கொள்ள இதை விட வேறு சிறந்த வழியில்லை என்று இவர்கள் கருதுகின்றனர். எஸ்எம்எஸ் செய்தி மூலம் நேரில் பார்ப்பது போல தகவல்களை தெரிந்து கொள்ள முடியாது என்று ஒரு கருத்து இருக்கிறது.

ஆனால் இந்த தம்பதியோ மகள் எஸ்எம்எஸ் அனுப்ப எடுத்துக் கொள்ளும் நேரத்தை வைத்தே அவள் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறாள் என்பதை கண்டுபிடித்து விட முடிவதாக கூறுகின்றனர்.

அந்த அளவுக்கு இவர்கள் இடையே தொழில்நுட்பம் பற்றிய புரிதல் இருக்கிறது. கம்யூனிச நாடான வியட்நாம் ஆரம்பத்தில் இன்டெர்நெட்டுக்கு கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால் பிறகு அதனை தளர்த்திக் கொண்டது.

இதன் விளைவாக சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்டெர்நெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 ஆயிரமாகவே இருந்தது. தற்போது இது 50 லட்சத்தை தொட்டு இருக்கிறது.
வியட்நாமில் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கையை நடத்த இன்டெர்நெட்டை பெருமளவு பயன்படுத்திக் கொள்வதே இதற்கு முக்கிய காரணம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.