பின்னணியில் ஒரு தேடல்

சும்மாதானே இருக்கிறீர்கள். பயனுள்ளதாக ஏதாவது செய்ய கூடாதா? என்று யாரிடமாவது கேட்டால் (யாரிடம் கேட்டாலும்) உங்களுக்கு வேறு வேலை கிடை யாதா? எனும் பாணியில் கோபமாக திருப்பி கேட்டு விடுவார்கள். ஆனால் உங்கள் கம்ப்யூட்டர் சும்மாதானே இருக்கிறது. சும்மா இருக்கும் நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள சம்மந்தமா என்று கேட்டால் யார் வேண்டு மானாலும் சம்மதிக்கக் கூடும்.

 

இப்படி உலகம் முழுவதும் பலர் சம்மதித்திருக்கின்றனர். அவர்களின் கம்ப்யூட்டர்கள் சும்மா இருக்கும் நேரத்தில் மகத்தான செயலின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகின்றன.
பொதுவாக மிகப் பெரிய அளவில் கம்ப்யூட்டரில் செயலாற்றல் தேவைப்படும் பிரம்மாண்டமான திட்டங்களை சிறுசிறு பகுதியாக பிரித்து தனித்தனி கம்ப்யூட்டர்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இவை செயல்பட்டு வருகின்றன.
பூமிக்கு வெளியே உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளதா என்பதை அறிவதற்கான பிரம்மாண்ட சாப்ட்வேர் இந்த முயற்சியை துவக்கி வைத்தது. 

அதன் பிறகு புற்றுநோய்க்கான ஆதார மரபணுவை கண்டறியும் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இப்படி சிதறிக் கிடக்கும் கம்ப்யூட்டர் களின் ஆற்றலை பயன்படுத்தி வருகின்றன.

இதே பாணியில் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் ஸ்கிரீன்சேவரை நுழைத்து தூங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர்களை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தலாம்.
இதற்கான உயிர்த் துடிப்பு மிக்க உதாரணமாக மிஸ்சிங் கிட் சேவர் திட்டத்தை குறிப்பிடலாம். உண்மையிலேயே இந்த திட்டத்தின் பின்னே உள்ள யோசனை அற்புத மானது; நிகழ வைக்கக் கூடியது. நடைமுறையில் மிகவும் அவசிய மானது.

குழந்தைகள் பல்வேறு காரணங் களால் காணாமல் போகின்றனர். காணாமல் போகும் குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பது கடினமான காரியம்தான். குழந்தைகள் காணாமல் போகும் துரதிருஷ்டவசமான அனுபவத்திற்கு ஆளாகும் பெற்றோர்களில் எத்தனை பேருக்கு அவர்கள் திரும்பி கிடைக்கும் பாக்கியம் சாத்திய மாகிறது என்று தெரியவில்லை.
இந்த நிலைக்கு குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல் வதற்கில்லை. விஷயம் என்னவென்றால் குழந்தை காணாமல் போன உடனேயே அது பற்றிய தகவல் பரவலாக்கப்பட்டு அனைத்து முனைகளிலும் 

யாராவது ஒருவர் தேடும் நிலை இருந்தால் அநேக குழந்தைகளை கண்டு       பிடித்து விடலாம். இல்லை யென்றால் காணாமல் போன குழந்தை கிடைப்பது என்பது அதிர்ஷ்டத்தை சார்ந்ததே! காணாமல் போன விவரத்தை தெரிவிப்பதற்காக இப்போது புகைப் படங்களை சுவரொட்டிகளாக ஒட்டுவது, விளம்பரம் செய்வது, டிவியில் காண்பிப்பது போன்ற யுக்திகள் பின்பற்றப்படுகின்றன.

இதெல்லாம் விட சக்தி வாய்ந்த யுக்தி உங்கள் கம்ப்யூட்டரில் குவிந்து இருக்கிறது. அதனை ஒரு அற்புதமான ஸ்கிரீன் சேவரின் மூலம் தட்டி எழுப்பி விடலாம். ஸ்கிரீன் சேவர் பொதுவாக அழகானதாகவும், அலங்காரமான தாகவும் மட்டுமே கருதப்படுகிறது. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்கிரீன் சேவர் காணாமல் போன குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கக் கூடிய ஆயுதமாகவும் மாறலாம். அதற்கு ஒருவர் செய்ய வேண்டிய தெல்லாம் காணாமல் போன குழந்தைகளை தேடி கண்டு பிடிப்பதற்கான அமைப்பு வெளியிட்டுள்ள ஸ்கிரீன் சேவரை பயன்படுத்த சம்மதிப்பது மட்டுமே.

கனடாவை சேர்ந்த குளோபல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்ஸ் எனும் அமைப்பு, காணாமல் மற்றும் சுரண்டப்படும் தேசிய மையத்தின் ஆதரவோடு இந்த ஸ்கிரீன் சேவரை உருவாக்கியுள்ளது.  இந்த ஸ்கிரீன் சேவரில் என்ன விசேஷமென்றால் சமீபத்தில் காணாமல் போன குழந்தைகளின் புகைப்படங்கள் இதில் இடம் பெற்றிருக்கும். அவ்வப்போது புதிய படங்கள் மாறிக் கொண்டே  இருக்கும்.

இந்த ஸ்கிரீன் சேவரை பயன்படுத்துவதன் மூலமாக நமது கம்ப்யூட்டரில் இந்த காணாமல் போன குழந்தைகளின் படங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கும். இப்படி நாடெங்கும் இருக்கும் கம்ப்யூட்டர்களில் காணாமல் போன குழந்தைகளின் படங்கள் தென்பட்டு கொண்டே இருக்கும்போது தற்செயலாக குழந்தையை பார்த்த/ பார்க்க வாய்ப்புள்ள யார் கண்ணிலாவது அந்த படம் பட்டு அக்குழந்தை மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பெரும்பாலான நேரங்களில் காணாமல் போன குழந்தை நம்மை கடந்து போயிருக்கலாம். ஆனால் நமக்கு அது தெரிய வாய்ப்பில்லை. 

இப்போது இந்த ஸ்கிரீன் சேவர் அந்த வாய்ப்பை உண்டாக்கி விடும் சாத்தியமிருக்கிறது.
கனடாவில் உள்ள காவல் நிலையம் ஒன்று தங்கள் கம்ப்யூட்டர்களை அனைத்து கிரிமினல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் வரிசையாக சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தது. 

அதனை பார்க்க நேர்ந்த காவலர்கள் தீர்க்கப்படாமல் இருக்கும் வழக்குகள் தொடர்பான விழிப்புணர்வை பெற்று செயல்பட்டனர். இதனால் பல தீர்க்கப்படாத வழக்குகள் முடிவுக்கு வந்தன. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட உத்வேகத்தின் விளைவாக காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்கவும் இதே விதமான வழியை பயன் படுத்திக்கொள்ள மேற்சொன்ன ஸ்கிரீன் சேவர் உருவாக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் அமெரிக்காவை மனதில் கொண்டு இந்த ஸ்கிரீன் சேவர்  உருவாக்கப் பட்டுள்ளது.  உண்மை யில் ஒவ்வொரு நாட்டுக்கும் இப்படியொரு ஸ்கிரீன் சேவர் வேண்டும்.

சும்மாதானே இருக்கிறீர்கள். பயனுள்ளதாக ஏதாவது செய்ய கூடாதா? என்று யாரிடமாவது கேட்டால் (யாரிடம் கேட்டாலும்) உங்களுக்கு வேறு வேலை கிடை யாதா? எனும் பாணியில் கோபமாக திருப்பி கேட்டு விடுவார்கள். ஆனால் உங்கள் கம்ப்யூட்டர் சும்மாதானே இருக்கிறது. சும்மா இருக்கும் நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள சம்மந்தமா என்று கேட்டால் யார் வேண்டு மானாலும் சம்மதிக்கக் கூடும்.

 

இப்படி உலகம் முழுவதும் பலர் சம்மதித்திருக்கின்றனர். அவர்களின் கம்ப்யூட்டர்கள் சும்மா இருக்கும் நேரத்தில் மகத்தான செயலின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகின்றன.
பொதுவாக மிகப் பெரிய அளவில் கம்ப்யூட்டரில் செயலாற்றல் தேவைப்படும் பிரம்மாண்டமான திட்டங்களை சிறுசிறு பகுதியாக பிரித்து தனித்தனி கம்ப்யூட்டர்கள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் இவை செயல்பட்டு வருகின்றன.
பூமிக்கு வெளியே உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் உள்ளதா என்பதை அறிவதற்கான பிரம்மாண்ட சாப்ட்வேர் இந்த முயற்சியை துவக்கி வைத்தது. 

அதன் பிறகு புற்றுநோய்க்கான ஆதார மரபணுவை கண்டறியும் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இப்படி சிதறிக் கிடக்கும் கம்ப்யூட்டர் களின் ஆற்றலை பயன்படுத்தி வருகின்றன.

இதே பாணியில் ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் ஸ்கிரீன்சேவரை நுழைத்து தூங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர்களை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தலாம்.
இதற்கான உயிர்த் துடிப்பு மிக்க உதாரணமாக மிஸ்சிங் கிட் சேவர் திட்டத்தை குறிப்பிடலாம். உண்மையிலேயே இந்த திட்டத்தின் பின்னே உள்ள யோசனை அற்புத மானது; நிகழ வைக்கக் கூடியது. நடைமுறையில் மிகவும் அவசிய மானது.

குழந்தைகள் பல்வேறு காரணங் களால் காணாமல் போகின்றனர். காணாமல் போகும் குழந்தைகளை தேடி கண்டுபிடிப்பது கடினமான காரியம்தான். குழந்தைகள் காணாமல் போகும் துரதிருஷ்டவசமான அனுபவத்திற்கு ஆளாகும் பெற்றோர்களில் எத்தனை பேருக்கு அவர்கள் திரும்பி கிடைக்கும் பாக்கியம் சாத்திய மாகிறது என்று தெரியவில்லை.
இந்த நிலைக்கு குறிப்பிட்டு யாரையும் குற்றம் சொல் வதற்கில்லை. விஷயம் என்னவென்றால் குழந்தை காணாமல் போன உடனேயே அது பற்றிய தகவல் பரவலாக்கப்பட்டு அனைத்து முனைகளிலும் 

யாராவது ஒருவர் தேடும் நிலை இருந்தால் அநேக குழந்தைகளை கண்டு       பிடித்து விடலாம். இல்லை யென்றால் காணாமல் போன குழந்தை கிடைப்பது என்பது அதிர்ஷ்டத்தை சார்ந்ததே! காணாமல் போன விவரத்தை தெரிவிப்பதற்காக இப்போது புகைப் படங்களை சுவரொட்டிகளாக ஒட்டுவது, விளம்பரம் செய்வது, டிவியில் காண்பிப்பது போன்ற யுக்திகள் பின்பற்றப்படுகின்றன.

இதெல்லாம் விட சக்தி வாய்ந்த யுக்தி உங்கள் கம்ப்யூட்டரில் குவிந்து இருக்கிறது. அதனை ஒரு அற்புதமான ஸ்கிரீன் சேவரின் மூலம் தட்டி எழுப்பி விடலாம். ஸ்கிரீன் சேவர் பொதுவாக அழகானதாகவும், அலங்காரமான தாகவும் மட்டுமே கருதப்படுகிறது. அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்கிரீன் சேவர் காணாமல் போன குழந்தைகளை தேடி கண்டுபிடிக்கக் கூடிய ஆயுதமாகவும் மாறலாம். அதற்கு ஒருவர் செய்ய வேண்டிய தெல்லாம் காணாமல் போன குழந்தைகளை தேடி கண்டு பிடிப்பதற்கான அமைப்பு வெளியிட்டுள்ள ஸ்கிரீன் சேவரை பயன்படுத்த சம்மதிப்பது மட்டுமே.

கனடாவை சேர்ந்த குளோபல் சாப்ட்வேர் அப்ளிகேஷன்ஸ் எனும் அமைப்பு, காணாமல் மற்றும் சுரண்டப்படும் தேசிய மையத்தின் ஆதரவோடு இந்த ஸ்கிரீன் சேவரை உருவாக்கியுள்ளது.  இந்த ஸ்கிரீன் சேவரில் என்ன விசேஷமென்றால் சமீபத்தில் காணாமல் போன குழந்தைகளின் புகைப்படங்கள் இதில் இடம் பெற்றிருக்கும். அவ்வப்போது புதிய படங்கள் மாறிக் கொண்டே  இருக்கும்.

இந்த ஸ்கிரீன் சேவரை பயன்படுத்துவதன் மூலமாக நமது கம்ப்யூட்டரில் இந்த காணாமல் போன குழந்தைகளின் படங்கள் வரிசையாக வந்து கொண்டே இருக்கும். இப்படி நாடெங்கும் இருக்கும் கம்ப்யூட்டர்களில் காணாமல் போன குழந்தைகளின் படங்கள் தென்பட்டு கொண்டே இருக்கும்போது தற்செயலாக குழந்தையை பார்த்த/ பார்க்க வாய்ப்புள்ள யார் கண்ணிலாவது அந்த படம் பட்டு அக்குழந்தை மீட்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
பெரும்பாலான நேரங்களில் காணாமல் போன குழந்தை நம்மை கடந்து போயிருக்கலாம். ஆனால் நமக்கு அது தெரிய வாய்ப்பில்லை. 

இப்போது இந்த ஸ்கிரீன் சேவர் அந்த வாய்ப்பை உண்டாக்கி விடும் சாத்தியமிருக்கிறது.
கனடாவில் உள்ள காவல் நிலையம் ஒன்று தங்கள் கம்ப்யூட்டர்களை அனைத்து கிரிமினல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களையும் வரிசையாக சுற்றி வரும் வகையில் ஏற்பாடு செய்திருந்தது. 

அதனை பார்க்க நேர்ந்த காவலர்கள் தீர்க்கப்படாமல் இருக்கும் வழக்குகள் தொடர்பான விழிப்புணர்வை பெற்று செயல்பட்டனர். இதனால் பல தீர்க்கப்படாத வழக்குகள் முடிவுக்கு வந்தன. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட உத்வேகத்தின் விளைவாக காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்கவும் இதே விதமான வழியை பயன் படுத்திக்கொள்ள மேற்சொன்ன ஸ்கிரீன் சேவர் உருவாக்கப்பட்டுள்ளது.

கனடா மற்றும் அமெரிக்காவை மனதில் கொண்டு இந்த ஸ்கிரீன் சேவர்  உருவாக்கப் பட்டுள்ளது.  உண்மை யில் ஒவ்வொரு நாட்டுக்கும் இப்படியொரு ஸ்கிரீன் சேவர் வேண்டும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.