மொழி காக்கும் சாப்ட்வேர்

ஆங்கிலத்தில்தான் எத்தனை விதமான ஆங்கிலம் இருக்கின் றன. நம்மூரில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவதை தமிங்கிலிஷ் என்று சொல்கின்றனர். அதே போல வடநாட்டில் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுவதை இந்திங்கிலிஷ் என்று சொல்கின்றனர்.
இப்படி ஊருக்கு ஊர், நாடுக்கு நாடு ஆங்கிலம் வேறுபடுகிறது. ஆங்கிலத்தின் ஆதிக்கம் காரண மாக உள்ளூர் மொழிகள் பாதிக்கப் படுவதாக புகார் கூறப்படுகிறது. மொழிகள் முற்றாக அழிந்து போகாவிட்டாலும், ஆங்கில கலப்பால் அவற்றின் தூய்மை குறைந்து போவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

நவீன வாழ்க்கையில் ஆங்கி லத்தை தவிர்க்க இயலாமல் போகும்போது, இத்தகைய மொழிக்கலப்பையும் புறந்தள்ளு வதற்கு இல்லை. இத்தகைய மொழி கலப்பால் ஏற்படும் பாதிப்பு பற்றி மொழியி யல் வல்லுனர்கள் தீவிரமாக யோசனை செய்து வருகின்றனர். மொழிக்கலப்பிலிருந்து முற்றிலு மாக விடுபட முடியுமா என்று தெரியவில்லை. அதற்கான வழிகள் என்ன? அவை எந்த அளவுக்கு சாத்தியம்? என்ப தெல்லாம் விவாதத்துக்குரிய விஷயங்கள்.

ஆனால் இன்டெர்நெட் யுகத்தில் இந்த மொழி கலப்பு பற்றி கூடுத லாக கவலைப்பட வேண்டியிருக் கிறது. அல்லது வேறு விதமாக சொல்வதாயின், மொழி கலப்பு பற்றி அவ்வளவாக கவலைப்பட தேவையில்லாத நிலை ஏற்பட்டி ருக்கிறது என்று சொல்லலாம். இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்போல தோன்றலாம்.

ஆனால் இதில் முரண் எதுவும் இல்லை. நோய்க்கு நோயே மருந்து என்று வல்லுவர் காதல் பற்றி கூறியது போல, இந்த பிரச்சனைக்கு இன்டெர் நெட்டே மருந்தாகியிருக்கிறது.
இன்டெர்நெட்டில் ஆங்கிலத் தின் ஆதிக்கம் அதிகம் இருப்ப தாக கூறப் படுகிறது. இது
வெளிப்படையாக தெரிந்த விஷயம்தான்.

இன்டெர்நெட் முகவரிகளில் தொடங்கி, இன்டெர்நெட்டில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வரை எல்லாமே ஆங்கில மயம்தான். மற்ற உலக மொழிகள் எல்லாம் ஆங்கிலத்துக்கு அடுத்த நிலையில்தான் உள்ளன.

எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஆங்கிலத்தில் தகவல்களை தேடுவது மற்றும் ஆங்கிலத்திலேயே தகவல்களை பதிவு செய்வது என்பது வெகு இயல்பானதாக இருக்கிறது.
தாய்மொழியில் இன்டெர் நெட்டை பயன்படுத்துவது என்பது பல நாடுகளில்குறைவா கவே உள்ளது. உலகின் நாகரீக தொட்டிகளில் ஒன்றான கிரீஸ் நாட்டிலும் இதே நிலைதான்.

கிரீஸ் நாட்டில் உள்ளவர்கள் கிரேக்க மொழியை வெகு வேகமாக மறந்து வருவதாக ஒரு கருத்து இருக்கிறது. இன்டெர் நெட் யுகத்தில் இது இன்னமும் தீவிரமாகியிருப்பதாக கூறப் படுகிறது. கிரீஸ் நாட்டில் உள்ளவர்கள் குறிப்பாக இளைய தலைமுறை யினர் இமெயில் அனுப்புவதில் தொடங்கி, பிலாக் தளங்களில் கருத்துக்களை பதிவு செய்வது வரை லத்தீனும், ஆங்கிலமும் கலந்த மொழியைத்தான் பயன்படுத்துகின்றனராம்.

கிரீக்ங்கிலிஷ் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் இந்த மொழிக் கலப்பு செல்போனில் எஸ்எம்எஸ் செய்தி அனுப்புவதிலும் ஆதிக்கம் செலுத்துகின்றதாம். இதன் காரணமாக கிரீஸ் நாட்டில் கிரேக்க மொழியின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இது நிச்சயம் பிரச்சனைதான்.

ஆனால் இந்த பிரச்சனையை சமாளிக்க கிரீஸ் நாட்டில் உள்ள தொழில்நுட்ப கில்லாடிகள் ஒரு புதிய வழியை கண்டுபிடித் துள்ளனர். அவர்கள் கிரேக்க மொழியிலேயே தகவல்களை பதிவு செய்யக்கூடிய சாப்ட் வேரை உருவாக்கியுள்ளனர்.

இந்த சாப்ட்வேரை பயன்படுத்த கிரேக்க மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லோரும் தங்களுக்கு தெரிந்த கிரீக்ங்லிஷ் பாணியி லேயே தகவல்களை பதிவு செய்யலாம். இந்த சாப்ட்வேர் கிரீக்ங்லிஷ் பாணியில் உள்ள தகவல்களை தானாகவே கிரேக்க மொழியில் மாற்றித்தந்து விடும். இவ்விதமாக கிரேக்கர்கள் கிரேக்க மொழியிலேயே தகவல்களை இடம்பெறச் செய்யலாம்.

இன்டெர்நெட் மூலம் கிரேக்க மொழியின் பயன்பாட்டை ஊக்குவிக்க நினைக்கும் அமைப்பு ஆல் கிரீக் டூ மீ என்னும் பெயரில் இந்த சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது. கிரேக்கநாட்டைச் சேர்ந்த பலர் இதனை வரவேற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக வெளி நாடுகளில் வசிக்கும் கிரேக்கர்கள் இதனை இருகரம் நீட்டி வரவேற்றுள்ளனர். ஆனால் இன்னும் சில தீவிர கிரேக்க மொழி ஆர்வலர்களோ பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக இந்த சாப்ட்வேர் கிரீக்ங்லிஷ் பயன் பாட்டைத்தானே ஊக்குவிக்கும் என்று புலம்புகின்றனர்.

ஆங்கிலத்தில்தான் எத்தனை விதமான ஆங்கிலம் இருக்கின் றன. நம்மூரில் ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவதை தமிங்கிலிஷ் என்று சொல்கின்றனர். அதே போல வடநாட்டில் இந்தி மற்றும் ஆங்கிலம் கலந்து பேசுவதை இந்திங்கிலிஷ் என்று சொல்கின்றனர்.
இப்படி ஊருக்கு ஊர், நாடுக்கு நாடு ஆங்கிலம் வேறுபடுகிறது. ஆங்கிலத்தின் ஆதிக்கம் காரண மாக உள்ளூர் மொழிகள் பாதிக்கப் படுவதாக புகார் கூறப்படுகிறது. மொழிகள் முற்றாக அழிந்து போகாவிட்டாலும், ஆங்கில கலப்பால் அவற்றின் தூய்மை குறைந்து போவதாக கவலை தெரிவிக்கப்படுகிறது.

நவீன வாழ்க்கையில் ஆங்கி லத்தை தவிர்க்க இயலாமல் போகும்போது, இத்தகைய மொழிக்கலப்பையும் புறந்தள்ளு வதற்கு இல்லை. இத்தகைய மொழி கலப்பால் ஏற்படும் பாதிப்பு பற்றி மொழியி யல் வல்லுனர்கள் தீவிரமாக யோசனை செய்து வருகின்றனர். மொழிக்கலப்பிலிருந்து முற்றிலு மாக விடுபட முடியுமா என்று தெரியவில்லை. அதற்கான வழிகள் என்ன? அவை எந்த அளவுக்கு சாத்தியம்? என்ப தெல்லாம் விவாதத்துக்குரிய விஷயங்கள்.

ஆனால் இன்டெர்நெட் யுகத்தில் இந்த மொழி கலப்பு பற்றி கூடுத லாக கவலைப்பட வேண்டியிருக் கிறது. அல்லது வேறு விதமாக சொல்வதாயின், மொழி கலப்பு பற்றி அவ்வளவாக கவலைப்பட தேவையில்லாத நிலை ஏற்பட்டி ருக்கிறது என்று சொல்லலாம். இந்த இரண்டு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்போல தோன்றலாம்.

ஆனால் இதில் முரண் எதுவும் இல்லை. நோய்க்கு நோயே மருந்து என்று வல்லுவர் காதல் பற்றி கூறியது போல, இந்த பிரச்சனைக்கு இன்டெர் நெட்டே மருந்தாகியிருக்கிறது.
இன்டெர்நெட்டில் ஆங்கிலத் தின் ஆதிக்கம் அதிகம் இருப்ப தாக கூறப் படுகிறது. இது
வெளிப்படையாக தெரிந்த விஷயம்தான்.

இன்டெர்நெட் முகவரிகளில் தொடங்கி, இன்டெர்நெட்டில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வரை எல்லாமே ஆங்கில மயம்தான். மற்ற உலக மொழிகள் எல்லாம் ஆங்கிலத்துக்கு அடுத்த நிலையில்தான் உள்ளன.

எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஆங்கிலத்தில் தகவல்களை தேடுவது மற்றும் ஆங்கிலத்திலேயே தகவல்களை பதிவு செய்வது என்பது வெகு இயல்பானதாக இருக்கிறது.
தாய்மொழியில் இன்டெர் நெட்டை பயன்படுத்துவது என்பது பல நாடுகளில்குறைவா கவே உள்ளது. உலகின் நாகரீக தொட்டிகளில் ஒன்றான கிரீஸ் நாட்டிலும் இதே நிலைதான்.

கிரீஸ் நாட்டில் உள்ளவர்கள் கிரேக்க மொழியை வெகு வேகமாக மறந்து வருவதாக ஒரு கருத்து இருக்கிறது. இன்டெர் நெட் யுகத்தில் இது இன்னமும் தீவிரமாகியிருப்பதாக கூறப் படுகிறது. கிரீஸ் நாட்டில் உள்ளவர்கள் குறிப்பாக இளைய தலைமுறை யினர் இமெயில் அனுப்புவதில் தொடங்கி, பிலாக் தளங்களில் கருத்துக்களை பதிவு செய்வது வரை லத்தீனும், ஆங்கிலமும் கலந்த மொழியைத்தான் பயன்படுத்துகின்றனராம்.

கிரீக்ங்கிலிஷ் என்று பிரபலமாக குறிப்பிடப்படும் இந்த மொழிக் கலப்பு செல்போனில் எஸ்எம்எஸ் செய்தி அனுப்புவதிலும் ஆதிக்கம் செலுத்துகின்றதாம். இதன் காரணமாக கிரீஸ் நாட்டில் கிரேக்க மொழியின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. இது நிச்சயம் பிரச்சனைதான்.

ஆனால் இந்த பிரச்சனையை சமாளிக்க கிரீஸ் நாட்டில் உள்ள தொழில்நுட்ப கில்லாடிகள் ஒரு புதிய வழியை கண்டுபிடித் துள்ளனர். அவர்கள் கிரேக்க மொழியிலேயே தகவல்களை பதிவு செய்யக்கூடிய சாப்ட் வேரை உருவாக்கியுள்ளனர்.

இந்த சாப்ட்வேரை பயன்படுத்த கிரேக்க மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லோரும் தங்களுக்கு தெரிந்த கிரீக்ங்லிஷ் பாணியி லேயே தகவல்களை பதிவு செய்யலாம். இந்த சாப்ட்வேர் கிரீக்ங்லிஷ் பாணியில் உள்ள தகவல்களை தானாகவே கிரேக்க மொழியில் மாற்றித்தந்து விடும். இவ்விதமாக கிரேக்கர்கள் கிரேக்க மொழியிலேயே தகவல்களை இடம்பெறச் செய்யலாம்.

இன்டெர்நெட் மூலம் கிரேக்க மொழியின் பயன்பாட்டை ஊக்குவிக்க நினைக்கும் அமைப்பு ஆல் கிரீக் டூ மீ என்னும் பெயரில் இந்த சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது. கிரேக்கநாட்டைச் சேர்ந்த பலர் இதனை வரவேற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக வெளி நாடுகளில் வசிக்கும் கிரேக்கர்கள் இதனை இருகரம் நீட்டி வரவேற்றுள்ளனர். ஆனால் இன்னும் சில தீவிர கிரேக்க மொழி ஆர்வலர்களோ பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக இந்த சாப்ட்வேர் கிரீக்ங்லிஷ் பயன் பாட்டைத்தானே ஊக்குவிக்கும் என்று புலம்புகின்றனர்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “மொழி காக்கும் சாப்ட்வேர்

  1. இராஜராஜன்

    வணக்கம்

    ம்ம்ம்ம்…

    நல்ல விஷயம் தான்

    ஆனால் இந்த மென்பொருள் கற்றலை ஊக்குவிக்குமா அல்லது குறைக்குமா ?

    நன்றி

    Reply

Leave a Comment

Your email address will not be published.