தீராத புதிராக தொடரும் பிட்காயின் நிறுவனர் மர்மம்!

bi1
பிட்காயின் நிறுவனர் யார்? இந்த கேள்விக்கான பதில் சடோஷி நாகமோட்டோ என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் சடோஷி யார் ? எனும் கேள்விக்கான பதில் தான் ஒருவருக்கும் தெரியாது.
விடை தெரியாத புதிராகவே இந்த கேள்வி நீடிக்கிறது. பிட்காயின் பற்றி அறிந்தவர்கள் அனைவரும், இதற்கான பதிலை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருந்தாலும், பிட்காயின் நிறுவனர் யார்? என்பது மாபெரும் மர்மமாகவே நீடிக்கிறது.

இந்த கேள்விக்கான பதிலாக ஆஸ்திரேலிய தொழில்முனைவோர் கிரேக் ரைட் என்பவர் நான் தான் சடோஷி என்று அறிவித்து, அதற்கான ஆதாரங்களை சமர்பித்துள்ள நிலையிலும் கூட இந்த மர்மம் இன்னமும் தொடர்வது தான் பிட்காயின் நிறுவனர் புதிரை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.

இணைய உலகில் புழங்குபவர்கள் பிட்காயின் பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுவதை கேள்விப்பட்டிருக்கலாம். கிரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் நாணயம், இணைய பணம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் பிட்காயின், தொழில்நுட்ப பிரியர்களால் புதுயுக நாணயம் என்றும் கொண்டாடப்படுகிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. டிஜிட்டல் வடிவிலான பிட்காயின் முற்றிலும் அரூப வடிவிலானது. – அது கம்ப்யூட்டர் குறியீடுகளாக மட்டுமே இருக்கிறது. எந்த ஒரு மத்திய வங்கியாலும் வெளியிடப்படாமல், முற்றிலும் இணைய சமூகத்தால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் நாணயமாக பிட்காயின் விளங்குகிறது.

பிட்காயினில் பரிவர்த்தனை செய்யலாம். பொருட்களை வாங்கலாம். ஆனால் மற்ற நாணயம் போல பிட்காயினை பெறுவது அத்தனை எளிதல்ல. பிட்காயின் வெளியிடப்படாதது என்பதால் அதை கம்ப்யூட்டர் வலைப்பின்னல் மூலம் அகழ்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு முறையும் ஒரு தொழில்நுட்ப புதிரை விடுவிக்க வேண்டும். ஒவ்வொரு முறையில் பிட்காயின் வலைப்பின்னலில் புதிதாக நாணயம் இணைவதோடு, அதற்கு உதவி செய்யும் வகையில் தனது கம்ப்யூட்டர் ஆற்றலை பகிர்ந்தவருக்கு பிட்காயின்கள் கிடைக்கும்.

பிட்காயினை பெற வேண்டும் என்றால் பிட்காயின் முகவரி இருக்க வேண்டும். 27- 34 எழுத்து+எண்கள் கொண்ட இந்த முகவரியை சேமித்து வைக்க பிட்காயின் பர்ஸ் இருக்க வேண்டும்.
பிட்காயின் பரிவர்த்தனை ரகசியமானது. ஆனால் அந்த பரிவர்த்தனையின் டிஜிட்டல் சுவடு முழுவதும் சேமிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.ஏனெனில் ஒவ்வொரு முறை பரிவர்த்தனை செய்யும் போதும் டிஜிட்டல் கையெழுத்திட வேண்டும்.

நிதி அமைப்புகள் தலையீடு இல்லாததால் முற்றிலும் சுயேட்சையானது மற்றும் டிஜிட்டல் வடிவிலானது என்பதால் தொழில்நுட்ப பிரியர்கள் முதல் சைபர் குற்றவாளிகள் வரை பலரது கவனத்தை ஈர்த்துள்ள பிட்காயின் அன்மை காலங்களில் வங்கியாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதன் உள்ளார்ந்த அம்சமாக இருக்கும் பிளாக்செயின் எனப்படும் தொழில்நுட்பம் இணைய பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டிருப்பதே இதற்கு காரணம். எனவே தான் வங்கித்துறையில் இருப்பவர்கள் பிட்காயினை இயக்கும் தொழில்நுட்பத்தை மற்ற பரிவர்த்தனையின் அடிப்படையாக கொள்ள முடியுமா என பரிசிலிக்கத்துவங்கியுள்ளனர்.
பிட்காயினின் செயல்பாடு கொஞ்சம் புதிரானது தான். அதைவிட புதிரானது அதன் தோற்றம் பற்றிய கேள்விக்கான பதில்!
bi2
பிட்காயின் 2009 ல் அறிமுகமானது. ஆனால் பிட்காயின் நிறுவனர் என்று யாரும் முன்னிறுத்தப்படவில்லை. சடோஷி நாகமோட்டோ எனும் தனி மனிதர் அல்லது அந்த பெயர் பின்னே உள்ள குழுவால் இந்த நாணய முறை அறிமுகம் செய்யப்பட்டதாக கருதப்பட்டது. துவக்கத்தில் தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட ஒரு சிலர் மத்தியில் மட்டுமே புழக்கத்தில் இருந்ததால், இதன் நிறுவனர் பற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. நாளடைவில் பிட்காயின் புதுமை மற்றும் அதன் செயல்பாடுகள் கவனத்தை ஈர்த்து பிரபலமானது. பிட்காயின் செல்வாக்கு வளர்ந்து கொண்டே வந்த நிலையில், அதன் நிறுவனர் பற்றிய மர்மமும் வளர்ந்து கொண்டே வந்தது.
மைய அமைப்பு இல்லாத பிட்காயினை உருவாக்கியவர் பற்றி பெயர் தவிர வேறு விவரங்கள் தெரியாமல் இருப்பது எத்தகைய ஆர்வத்தை தூண்டியிருக்கும் என சொல்ல வேண்டியதில்லை. ஆக, எதிர்பார்க்க கூடியது போலவே இணைய உலகில் பிட்காயின் நிறுவனர் தேடலும் துவங்கியது. பிட்காயின் நிறுவனர் யார் எனும் கேள்விக்கு விடை காணும் தேடுதல் வேட்டையில் பல பத்திரிகையாளர்கள் ஈடுபட்டனர்.

2014 ம் ஆண்டில் டோரியன் சடோஷி என்பவர் பிட்காயின் நிறுவனர் சடோஷியாக கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நியூஸ்விக் இதழ் பற்றிய முகப்பு கட்டுரையை வெளியிட்டது. ஆனால் சடோஷியாக அடையாளம் காணப்பட்ட நபர், நானில்லை சடோஷி என அலறி அடித்து ஓடியது இந்த விவகாரத்தின் மர்மத்தை மேலும் ஆழமாக்கியது.

நிஜமான நிறுவனரே நேரில் வந்து நின்றாலும், அவர் தான் சடோஷி என்று உறுதி செய்து கொள்வது கடினம் என்னும் நிலை உருவானது.
இப்போது இது தான் நடந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழில்முனைவோரான கிரேக் ரைட் என்பவர், உலகத்தாரே நம்புங்கள், நான் தான சடோஷி என அறிவித்துள்ளார். அதை நிருபிக்கும் வகையில் முதல் பிட்காயின் பரிவர்த்தனையை செயல்படுத்த தான் பயன்படுத்திய பிட்காயின் சாவியை இயக்கு காண்பித்திருக்கிறார்.
bi3
பிபிசி உள்ளிட்ட சில செய்தி நிறுவனங்களிடம் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டு ஆதாரத்தை அளித்தவர், ” இதன் (பிட்காயின்) முக்கிய அங்கமாக நான் இருந்தேன். ஆனால் மற்றவர்களும் உதவினர்” என்று கூறியுள்ளார்.
பிட்காயின் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானியான கெவின் ஆண்டர்சன், கிரேக் ரைட் தான் பிட்காயின் நிறுவனர் என்பதை நம்பலாம் என கூறியிருக்கிறார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் பிரபல் தொழில்நுட்ப பத்திரிகையான வயர்டு, ரகசிய புலணாய்வு செய்து ஆஸ்திரேலியாவின் கிரேக் ரைட் தான் சடோஷி என விரிவான கட்டுரை வெளியிட்டது. பிட்காயின் உருவாக்கம் தொடர்பாக ரைட்டிடம் இருந்து திருடப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு இந்த செய்தி வெளியானது. கிஸ்மடோ தொழில்நுட்ப இதழிலும் இது வெளியானது.

இதனிடையே பிட்காயின் பணத்தை கொண்டு தங்க கட்டிகளை ரைட் வாங்க முற்பட்டதாகவும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் நீதிமன்றத்தை அவர் நாடியிருப்பதாகவும் கூறப்பட்டது. ரைட் தான் பிட்காயின் நிறுவனர் என உணர்த்தும் ஆதாரங்களாக இவை கருதப்படும் நிலையில், அவரே ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் பறந்து வந்து உண்மையை(!) முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இருப்பினும் பிட்காயின் சமூகத்தை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள், இது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெளிவான ஆதாரங்கள் தேவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சைபர் பாதுகாப்பு வல்லுனரான டான் கமின்ஸ்கி என்பவர், பிட்காயின் சாவிகளை மட்டும் வைத்து எதையும் நம்பி விட முடியாது என்று கூறியுள்ளார். கெவின் ஆண்டர்சனே கூட, ரைட் நிருபித்துக்காட்டிய முறை 100 சதவீதம் உத்தரவமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
ஆக, பிட்காயின் நிறுவனர் தானே என்று கிரேக் ரைட் ஒப்புக்கொண்டாலும் அவர் தான் சடோஷியா எனும் கேள்வி நீடிக்கிறது.
இந்த கேள்விக்கான பதில் எப்போது கிடைக்கும் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது!

மேலும் விவரங்களுக்கு: http://www.bbc.com/news/technology-36168863

—-
நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

bi1
பிட்காயின் நிறுவனர் யார்? இந்த கேள்விக்கான பதில் சடோஷி நாகமோட்டோ என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் சடோஷி யார் ? எனும் கேள்விக்கான பதில் தான் ஒருவருக்கும் தெரியாது.
விடை தெரியாத புதிராகவே இந்த கேள்வி நீடிக்கிறது. பிட்காயின் பற்றி அறிந்தவர்கள் அனைவரும், இதற்கான பதிலை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருந்தாலும், பிட்காயின் நிறுவனர் யார்? என்பது மாபெரும் மர்மமாகவே நீடிக்கிறது.

இந்த கேள்விக்கான பதிலாக ஆஸ்திரேலிய தொழில்முனைவோர் கிரேக் ரைட் என்பவர் நான் தான் சடோஷி என்று அறிவித்து, அதற்கான ஆதாரங்களை சமர்பித்துள்ள நிலையிலும் கூட இந்த மர்மம் இன்னமும் தொடர்வது தான் பிட்காயின் நிறுவனர் புதிரை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.

இணைய உலகில் புழங்குபவர்கள் பிட்காயின் பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுவதை கேள்விப்பட்டிருக்கலாம். கிரிப்டோ கரன்ஸி, டிஜிட்டல் நாணயம், இணைய பணம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் பிட்காயின், தொழில்நுட்ப பிரியர்களால் புதுயுக நாணயம் என்றும் கொண்டாடப்படுகிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. டிஜிட்டல் வடிவிலான பிட்காயின் முற்றிலும் அரூப வடிவிலானது. – அது கம்ப்யூட்டர் குறியீடுகளாக மட்டுமே இருக்கிறது. எந்த ஒரு மத்திய வங்கியாலும் வெளியிடப்படாமல், முற்றிலும் இணைய சமூகத்தால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் நாணயமாக பிட்காயின் விளங்குகிறது.

பிட்காயினில் பரிவர்த்தனை செய்யலாம். பொருட்களை வாங்கலாம். ஆனால் மற்ற நாணயம் போல பிட்காயினை பெறுவது அத்தனை எளிதல்ல. பிட்காயின் வெளியிடப்படாதது என்பதால் அதை கம்ப்யூட்டர் வலைப்பின்னல் மூலம் அகழ்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு முறையும் ஒரு தொழில்நுட்ப புதிரை விடுவிக்க வேண்டும். ஒவ்வொரு முறையில் பிட்காயின் வலைப்பின்னலில் புதிதாக நாணயம் இணைவதோடு, அதற்கு உதவி செய்யும் வகையில் தனது கம்ப்யூட்டர் ஆற்றலை பகிர்ந்தவருக்கு பிட்காயின்கள் கிடைக்கும்.

பிட்காயினை பெற வேண்டும் என்றால் பிட்காயின் முகவரி இருக்க வேண்டும். 27- 34 எழுத்து+எண்கள் கொண்ட இந்த முகவரியை சேமித்து வைக்க பிட்காயின் பர்ஸ் இருக்க வேண்டும்.
பிட்காயின் பரிவர்த்தனை ரகசியமானது. ஆனால் அந்த பரிவர்த்தனையின் டிஜிட்டல் சுவடு முழுவதும் சேமிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.ஏனெனில் ஒவ்வொரு முறை பரிவர்த்தனை செய்யும் போதும் டிஜிட்டல் கையெழுத்திட வேண்டும்.

நிதி அமைப்புகள் தலையீடு இல்லாததால் முற்றிலும் சுயேட்சையானது மற்றும் டிஜிட்டல் வடிவிலானது என்பதால் தொழில்நுட்ப பிரியர்கள் முதல் சைபர் குற்றவாளிகள் வரை பலரது கவனத்தை ஈர்த்துள்ள பிட்காயின் அன்மை காலங்களில் வங்கியாளர்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதன் உள்ளார்ந்த அம்சமாக இருக்கும் பிளாக்செயின் எனப்படும் தொழில்நுட்பம் இணைய பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆற்றல் கொண்டிருப்பதே இதற்கு காரணம். எனவே தான் வங்கித்துறையில் இருப்பவர்கள் பிட்காயினை இயக்கும் தொழில்நுட்பத்தை மற்ற பரிவர்த்தனையின் அடிப்படையாக கொள்ள முடியுமா என பரிசிலிக்கத்துவங்கியுள்ளனர்.
பிட்காயினின் செயல்பாடு கொஞ்சம் புதிரானது தான். அதைவிட புதிரானது அதன் தோற்றம் பற்றிய கேள்விக்கான பதில்!
bi2
பிட்காயின் 2009 ல் அறிமுகமானது. ஆனால் பிட்காயின் நிறுவனர் என்று யாரும் முன்னிறுத்தப்படவில்லை. சடோஷி நாகமோட்டோ எனும் தனி மனிதர் அல்லது அந்த பெயர் பின்னே உள்ள குழுவால் இந்த நாணய முறை அறிமுகம் செய்யப்பட்டதாக கருதப்பட்டது. துவக்கத்தில் தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட ஒரு சிலர் மத்தியில் மட்டுமே புழக்கத்தில் இருந்ததால், இதன் நிறுவனர் பற்றி யாரும் அலட்டிக்கொள்ளவில்லை. நாளடைவில் பிட்காயின் புதுமை மற்றும் அதன் செயல்பாடுகள் கவனத்தை ஈர்த்து பிரபலமானது. பிட்காயின் செல்வாக்கு வளர்ந்து கொண்டே வந்த நிலையில், அதன் நிறுவனர் பற்றிய மர்மமும் வளர்ந்து கொண்டே வந்தது.
மைய அமைப்பு இல்லாத பிட்காயினை உருவாக்கியவர் பற்றி பெயர் தவிர வேறு விவரங்கள் தெரியாமல் இருப்பது எத்தகைய ஆர்வத்தை தூண்டியிருக்கும் என சொல்ல வேண்டியதில்லை. ஆக, எதிர்பார்க்க கூடியது போலவே இணைய உலகில் பிட்காயின் நிறுவனர் தேடலும் துவங்கியது. பிட்காயின் நிறுவனர் யார் எனும் கேள்விக்கு விடை காணும் தேடுதல் வேட்டையில் பல பத்திரிகையாளர்கள் ஈடுபட்டனர்.

2014 ம் ஆண்டில் டோரியன் சடோஷி என்பவர் பிட்காயின் நிறுவனர் சடோஷியாக கண்டறியப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. நியூஸ்விக் இதழ் பற்றிய முகப்பு கட்டுரையை வெளியிட்டது. ஆனால் சடோஷியாக அடையாளம் காணப்பட்ட நபர், நானில்லை சடோஷி என அலறி அடித்து ஓடியது இந்த விவகாரத்தின் மர்மத்தை மேலும் ஆழமாக்கியது.

நிஜமான நிறுவனரே நேரில் வந்து நின்றாலும், அவர் தான் சடோஷி என்று உறுதி செய்து கொள்வது கடினம் என்னும் நிலை உருவானது.
இப்போது இது தான் நடந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழில்முனைவோரான கிரேக் ரைட் என்பவர், உலகத்தாரே நம்புங்கள், நான் தான சடோஷி என அறிவித்துள்ளார். அதை நிருபிக்கும் வகையில் முதல் பிட்காயின் பரிவர்த்தனையை செயல்படுத்த தான் பயன்படுத்திய பிட்காயின் சாவியை இயக்கு காண்பித்திருக்கிறார்.
bi3
பிபிசி உள்ளிட்ட சில செய்தி நிறுவனங்களிடம் இந்த செய்தியை பகிர்ந்து கொண்டு ஆதாரத்தை அளித்தவர், ” இதன் (பிட்காயின்) முக்கிய அங்கமாக நான் இருந்தேன். ஆனால் மற்றவர்களும் உதவினர்” என்று கூறியுள்ளார்.
பிட்காயின் அறக்கட்டளையின் முதன்மை விஞ்ஞானியான கெவின் ஆண்டர்சன், கிரேக் ரைட் தான் பிட்காயின் நிறுவனர் என்பதை நம்பலாம் என கூறியிருக்கிறார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு இறுதியில் பிரபல் தொழில்நுட்ப பத்திரிகையான வயர்டு, ரகசிய புலணாய்வு செய்து ஆஸ்திரேலியாவின் கிரேக் ரைட் தான் சடோஷி என விரிவான கட்டுரை வெளியிட்டது. பிட்காயின் உருவாக்கம் தொடர்பாக ரைட்டிடம் இருந்து திருடப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக கொண்டு இந்த செய்தி வெளியானது. கிஸ்மடோ தொழில்நுட்ப இதழிலும் இது வெளியானது.

இதனிடையே பிட்காயின் பணத்தை கொண்டு தங்க கட்டிகளை ரைட் வாங்க முற்பட்டதாகவும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் நீதிமன்றத்தை அவர் நாடியிருப்பதாகவும் கூறப்பட்டது. ரைட் தான் பிட்காயின் நிறுவனர் என உணர்த்தும் ஆதாரங்களாக இவை கருதப்படும் நிலையில், அவரே ஆஸ்திரேலியாவில் இருந்து லண்டன் பறந்து வந்து உண்மையை(!) முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இருப்பினும் பிட்காயின் சமூகத்தை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள், இது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெளிவான ஆதாரங்கள் தேவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சைபர் பாதுகாப்பு வல்லுனரான டான் கமின்ஸ்கி என்பவர், பிட்காயின் சாவிகளை மட்டும் வைத்து எதையும் நம்பி விட முடியாது என்று கூறியுள்ளார். கெவின் ஆண்டர்சனே கூட, ரைட் நிருபித்துக்காட்டிய முறை 100 சதவீதம் உத்தரவமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
ஆக, பிட்காயின் நிறுவனர் தானே என்று கிரேக் ரைட் ஒப்புக்கொண்டாலும் அவர் தான் சடோஷியா எனும் கேள்வி நீடிக்கிறது.
இந்த கேள்விக்கான பதில் எப்போது கிடைக்கும் என்பது தான் புரியாத புதிராக இருக்கிறது!

மேலும் விவரங்களுக்கு: http://www.bbc.com/news/technology-36168863

—-
நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.