மலேரியா இனி இல்லை

கொடிது, கொடிது மலேரியா கொடிது என்று சொல்லப்படுவதன் தீவிரத்தை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை.
.
குறைந்தபட்சம் நகர்புற வாழ் இந்தியர்களுக்கேனும் மலேரியா அச்சுறுத்தக் கூடிய நோயாக தோன்ற வாய்ப்பில்லை. மலேரியாவை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் போதிய மருந்துகள் இருக்கின்றன.

மலேரியா ஒரு காலத்தில் கொடிய நோயாக விளங்கியது என்னவோ உண்மைதான். மலேரியா என்றாலே அலறும் அளவுக்கு உயிரை பறிக்கும் நோயாக இருந்திருக்கிறது.
ஆனால் தற்போது மலேரியாவை குணமாக்குவதற்காக மருந்துகள் வந்துவிட்டன.
ஐரோப்பாவில், ஆசியாவின் பல பகுதிகளில் மலேரியா நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஏழைகள் நிறைந்த ஆப்பிரிக்க நாடுகளை பொறுத்த வரை இவ்வாறு கூற முடியவில்லை.

ஆப்பிரிக்காவில் மலேரியா இன்னமும் உயிர்க்கொல்லி நோயாக நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. மலேரியாவின் பிடியில் ஆப்பிரிக்க கண்டம் சிக்கித்தவிப்பதை பார்த்தால் ஐயோ பாவம் ஆப்பிரிக்கா என்றே சொல்ல தோன்றும்.

இந்த நோயினால் ஆப்பிரிக்கா படும் பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நேஷனல் ஜியாகரபிக் இதழில் மலேரியா நோய் பற்றி வெளியாகி உள்ள முகப்பு கட்டுரையை படிக்க வேண்டும். அதற்கு நேரம் இல்லாதவர்கள் ஒரு சில புள்ளி விவரங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒரு குழந்தை மலேரியாவுக்கு பலியாகி கொண்டிருக்கிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள், மலேரியா தாக்குதலில் தப்பிப் பிழைப்பது என்பது அபூர்வமாகவே இருக்கிறது. அப்படியே தப்பிப் பிழைத்தாலும் அவர்கள் ஆயுள் முழுவதும் லேசான மூளைகோளாறு அல்லது கற்றுக் கொள்வதில் குறைபாடு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கர்ப்பிணிகள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டால் பிறக்கும் குழந்தை ரத்தச் சோகையோடு வளர நேர்கிறது. சுருக்கமாக சொன்னால் ஆப்பிரிக் காவில் குழந்தைகள் மத்தியில் ஏற்படும் அகால மரணத்திற்கு மலேரியாவே முன்னணி காரணமாக விளங்குகிறது.

இத்தோடு பாதிப்பு நின்று விடுவதில்லை. பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவும் பாதிப்புகள் தொடர்கின்றன. நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மலேரியா நோய் அச்சத்தால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீடும் குறைந்து போகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 1200 கோடி டாலர்கள் பொருளாதார இழப்பை மலேரியா நோய் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மலேரியாவுக்கு எதிரான தற்காப்பு வசதியோ அல்லது சிகிச்சைக்கான வாய்ப்போ இல்லாத ஏழைகளையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது என்பதோடு, இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையை இந்த நோயே குலைத்து விடுகிறது.

இந்த நோயை கட்டுப்படுத்துவது சாத்தியம் மற்றும் நோய்க்கான சிகிச்சையும் இருக்கிறது என்னும் நிலையில் ஆப்பிரிக்கா இப்படி படாதபாடுபடுவது வேதனை யானதுதான்.
இந்த வேதனையில் பங்கேற்க நினைத்தால் அதை விட முக்கியமாக இந்த பிரச்சனைக்கு உங்களால் முடிந்த அளவுக்கு தீர்வு காண நினைத்தால் நோ மோர் மலேரியா (nomoremalaria.com). இணையதளம் பற்றி தெரிந்து கொள்வது அல்லது ஆப்பிரிக்கா நாடுகளில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த நோய் தாக்காமல் தடுக்கவும் தேவையான உதவிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.

மலேரியா நோய் ஏன் ஏற்படுகிறது. அது எப்படி பாதிப்பை செலுத்துகிறது போன்ற விளக்கங்களை சுருக்கமாக அளிக்கும் இந்த தளம் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை யும் தெரிவிக்கிறது.

மலேரியாவை குணமாக்கு வதற்கான மருந்துகள் உலகின் மற்ற பகுதிகளில் எளிதாக கிடைக்கும் நிலையில் ஆப்பிரிக்க மக்கள் மட்டும் இந்த நோயின் பாதிப்புக்கு இலக்காகி உயிரை விடுவது பரிதாபத்துக்குரியது என்பதை உணர்த்தி அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த தளம் தூண்டுகோலாக விளங்குகிறது.

மலேரியாவை கட்டுப்படுத்த விரிவான செயல்பாடுகள் தேவை என்பதை விளக்கும் இந்த தளம், பிரதானமாக கொசு வலையில் வாங்கி கொடுப்பது பேரூதவியாக இருக்கும் என்று தெரிவிக்கிறது. பெரும்பாலும் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடிப்பதால் கொசு வலையை பயன்படுத்துவது இந்த நோய்க்கு ஆளாகும் வாய்ப்பை வெகுவாக குறைத்து விடுகிறது.

அதிலும் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்ட மருந்து தடவப்பட்ட கொசு வலை நோயின் தாக்கத்தை முற்றிலுமாக விலக்கி விடுகிறது.

இதை தவிர நோய் பாதிப்பவர் களுக்கு மருந்துகளை வழங்குவது, நோய் பரவாமல் தடுக்க தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவது போன்ற விழிப்புணர்வு செயல் களையும் இந்த தளம் மேற்கொண்டு வருகிறது.

இந்த தளத்தின் மூலமே நன்கொடை வழங்கி இந்த முயற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அது உயிர் காக்கும் சேவையாக இருக்கும்.

கொடிது, கொடிது மலேரியா கொடிது என்று சொல்லப்படுவதன் தீவிரத்தை நம்மால் முழுமையாக உணர்ந்து கொள்ள வாய்ப்பில்லை.
.
குறைந்தபட்சம் நகர்புற வாழ் இந்தியர்களுக்கேனும் மலேரியா அச்சுறுத்தக் கூடிய நோயாக தோன்ற வாய்ப்பில்லை. மலேரியாவை கட்டுப்படுத்தவும், குணப்படுத்தவும் போதிய மருந்துகள் இருக்கின்றன.

மலேரியா ஒரு காலத்தில் கொடிய நோயாக விளங்கியது என்னவோ உண்மைதான். மலேரியா என்றாலே அலறும் அளவுக்கு உயிரை பறிக்கும் நோயாக இருந்திருக்கிறது.
ஆனால் தற்போது மலேரியாவை குணமாக்குவதற்காக மருந்துகள் வந்துவிட்டன.
ஐரோப்பாவில், ஆசியாவின் பல பகுதிகளில் மலேரியா நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஏழைகள் நிறைந்த ஆப்பிரிக்க நாடுகளை பொறுத்த வரை இவ்வாறு கூற முடியவில்லை.

ஆப்பிரிக்காவில் மலேரியா இன்னமும் உயிர்க்கொல்லி நோயாக நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது. மலேரியாவின் பிடியில் ஆப்பிரிக்க கண்டம் சிக்கித்தவிப்பதை பார்த்தால் ஐயோ பாவம் ஆப்பிரிக்கா என்றே சொல்ல தோன்றும்.

இந்த நோயினால் ஆப்பிரிக்கா படும் பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நேஷனல் ஜியாகரபிக் இதழில் மலேரியா நோய் பற்றி வெளியாகி உள்ள முகப்பு கட்டுரையை படிக்க வேண்டும். அதற்கு நேரம் இல்லாதவர்கள் ஒரு சில புள்ளி விவரங்களையாவது தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளில் ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒரு குழந்தை மலேரியாவுக்கு பலியாகி கொண்டிருக்கிறது.

ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள், மலேரியா தாக்குதலில் தப்பிப் பிழைப்பது என்பது அபூர்வமாகவே இருக்கிறது. அப்படியே தப்பிப் பிழைத்தாலும் அவர்கள் ஆயுள் முழுவதும் லேசான மூளைகோளாறு அல்லது கற்றுக் கொள்வதில் குறைபாடு ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகின்றனர்.

கர்ப்பிணிகள் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டால் பிறக்கும் குழந்தை ரத்தச் சோகையோடு வளர நேர்கிறது. சுருக்கமாக சொன்னால் ஆப்பிரிக் காவில் குழந்தைகள் மத்தியில் ஏற்படும் அகால மரணத்திற்கு மலேரியாவே முன்னணி காரணமாக விளங்குகிறது.

இத்தோடு பாதிப்பு நின்று விடுவதில்லை. பொருளாதார மற்றும் சமூக ரீதியாகவும் பாதிப்புகள் தொடர்கின்றன. நோயால் பாதிக்கப்படும் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மலேரியா நோய் அச்சத்தால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுகிறது. வெளிநாட்டு முதலீடும் குறைந்து போகிறது. ஆப்பிரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 1200 கோடி டாலர்கள் பொருளாதார இழப்பை மலேரியா நோய் ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
மலேரியாவுக்கு எதிரான தற்காப்பு வசதியோ அல்லது சிகிச்சைக்கான வாய்ப்போ இல்லாத ஏழைகளையே இந்த நோய் அதிகம் பாதிக்கிறது என்பதோடு, இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலையை இந்த நோயே குலைத்து விடுகிறது.

இந்த நோயை கட்டுப்படுத்துவது சாத்தியம் மற்றும் நோய்க்கான சிகிச்சையும் இருக்கிறது என்னும் நிலையில் ஆப்பிரிக்கா இப்படி படாதபாடுபடுவது வேதனை யானதுதான்.
இந்த வேதனையில் பங்கேற்க நினைத்தால் அதை விட முக்கியமாக இந்த பிரச்சனைக்கு உங்களால் முடிந்த அளவுக்கு தீர்வு காண நினைத்தால் நோ மோர் மலேரியா (nomoremalaria.com). இணையதளம் பற்றி தெரிந்து கொள்வது அல்லது ஆப்பிரிக்கா நாடுகளில் மலேரியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் இந்த நோய் தாக்காமல் தடுக்கவும் தேவையான உதவிகளை இந்த அமைப்பு செய்து வருகிறது.

மலேரியா நோய் ஏன் ஏற்படுகிறது. அது எப்படி பாதிப்பை செலுத்துகிறது போன்ற விளக்கங்களை சுருக்கமாக அளிக்கும் இந்த தளம் அதனை கட்டுப்படுத்துவதற்கான வழிகளை யும் தெரிவிக்கிறது.

மலேரியாவை குணமாக்கு வதற்கான மருந்துகள் உலகின் மற்ற பகுதிகளில் எளிதாக கிடைக்கும் நிலையில் ஆப்பிரிக்க மக்கள் மட்டும் இந்த நோயின் பாதிப்புக்கு இலக்காகி உயிரை விடுவது பரிதாபத்துக்குரியது என்பதை உணர்த்தி அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த தளம் தூண்டுகோலாக விளங்குகிறது.

மலேரியாவை கட்டுப்படுத்த விரிவான செயல்பாடுகள் தேவை என்பதை விளக்கும் இந்த தளம், பிரதானமாக கொசு வலையில் வாங்கி கொடுப்பது பேரூதவியாக இருக்கும் என்று தெரிவிக்கிறது. பெரும்பாலும் மலேரியாவை பரப்பும் கொசுக்கள் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடிப்பதால் கொசு வலையை பயன்படுத்துவது இந்த நோய்க்கு ஆளாகும் வாய்ப்பை வெகுவாக குறைத்து விடுகிறது.

அதிலும் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்ட மருந்து தடவப்பட்ட கொசு வலை நோயின் தாக்கத்தை முற்றிலுமாக விலக்கி விடுகிறது.

இதை தவிர நோய் பாதிப்பவர் களுக்கு மருந்துகளை வழங்குவது, நோய் பரவாமல் தடுக்க தேவையான சூழ்நிலையை ஏற்படுத்துவது போன்ற விழிப்புணர்வு செயல் களையும் இந்த தளம் மேற்கொண்டு வருகிறது.

இந்த தளத்தின் மூலமே நன்கொடை வழங்கி இந்த முயற்சியில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். அது உயிர் காக்கும் சேவையாக இருக்கும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.