மாம்பூவே…

ஒரு பாடலில் இலக்கிய தரத்தை எப்படி தீர்மானிப்பது. இதற்கான அளவுகோல் என்னவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். நாம் பார்க்க போகும் விஷயத்தை பொறுத்தவரை “இதயம்’ படத்தில் வரும் ஏப்ரல், மேயிலே… பாடலை இலக்கியத் தரம் மிக்கதாக வைத்துக் கொள்ளலாம். தான் சார்ந்த சமூகத்தின் சிறப்பு இயல்புகளை எடுத்துரைக்கும் தன்மை சிறந்த கவிதைகளுக்கு/பாடல்களுக்கு இருப்பதாக கருதப் படுகிறது. அந்த இலக்கணத்தின்படி பார்த்தால் இந்த பாடல் நமது சமூகத்தின், அதிலும் குறிப்பாக மண்ணின் மணத்தை சுட்டிக் காட்டுகிறது

 

ஏப்ரல், மேயிலே பசுமையே இல்லை காய்ந்து போச்சுடா எனும் இந்த வரி கோடைக் காலத்தில் தமிழக பகுதிக ளில் ஏற்படும் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை அழகாக பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் வானிலை சார்ந்த சுற்றுச்சூழல் மாற் றங்கள் மிகவும் சுவாரசிய மானவை; முக்கியமானவை. இந்த மாற்றங்கள் நம் கண்ணில் பட்டாலும் அநேகமாக கருத்தில் கொள்ளப்படுவதில்லை.  ஜப்பான் போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் வசந்தத்தின் வருகையை பூத்துக் குலுங்கும் செர்ரி மரங்கள் வண்ண மயமாக அறிவிக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத் தில் பறைச்சாற்றும் மலர்கள் இருக்கின் றன. கரிசல் காட்டை உள்ளடக்கிய நம் நாட்டில், செர்ரி பூக்களுக்கு நிகராக மாம்பூக்களை சொல்லலாம்.
கோடைக்காலம் இங்கு மாம்பழங் களுக்கான காலமாகவும் இருக்கிறது. அதன் வருகையை மாமரத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

அதே போல கோடையின் வெப்பத்தை வீதிகளில் நிறையும் தர்பூசணிகளும் கூடை, கூடையாக வரும் வெள்ளரி பிஞ்சுகளும் உணர்த்தும். பல நேரங்களில் இந்த பருவம் தப்பிப் போவதும் உண்டு; அப்போது காட்சி மாறும், அல்லது தாமதமாகும். இந்த மாற்றங்களையெல்லாம் கவனிப்பது அவசியம் என்று வலி யுறுத்துவதற்காக இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புராஜெக்ட் பட் பிரஸ்ட் எனும் பெயரில் தீட்டப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த இணைய தளம் இதே பெயரில் உருவாக்கப் பட்டுள்ளது. இலையுதிர் காலம் என்று சொல்வது போல, மொட்டு மலரும் காலம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். பட் பிரஸ்ட் என்றால் இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்.

பூக்கள் மலர்வதையும், கனிகள் உண்டாவதையும் குறித்து வைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இது ஏதோ வேண்டாத வேலை என்பது போல ஒரு எண்ணம் தோன்றலாம்.
அப்படியில்லை. இது தாவரவியலின் ஒரு பகுதி. இதற்கு பினாலஜி என்று சொல்கின்றனர். அதாவது பருவ நிலையால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய விஞ்ஞானம் என்று பொருள். தாவரங்கள் மற்றும் விலங்குகளின் போக்கில் ஏற்படும் மாற்றங்கள் இதன் பிரதான அங்கமாக விளங்குகின்றன.

மரங்களும், செடிகளும் எப்போது பூக்கின்றன; எப்போது காய்க்கின்றன என்பதை வைத்து இந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தாவர இனத்துக்கும், பூப்பதற்கும், காய்ப்பதற்கும் ஒரு காலம் இருக்கிறது. அவற்றின் தன்மைக்கேற்ப பருவ காலத்தோடு இது ஒத்துப் போகக் கூடியது.

உதாரணமாக வெப்பம் அதிகரிக்கும் போது செர்ரி மரங்கள் பூக்கும். குறிப்பிட்ட காலங்களில் வெப்பம் அதிகமாவது தாமதமானால் செர்ரி பூக்களும் தாமதமாக பூக்கும். பருவ நிலை மாற்றங்கள் சீராக இருந்தால் தாவரங்களும் சரியாக பூத்துக் காய்க்கும். பருவ நிலை மாறினால் தாவரங்களும் மாறி விடும்.

இந்த மாற்றத்தை கவனித்து கொண்டிருப்பது முக்கியமானதாக பினாலஜி நிபுணர்கள் கருதுகின்றனர். காரணம், இந்த மாற்றம் ஏதோ செடி, கொடிகளோடு நின்று போய் விடுவதில்லை. இதனால் விலங்குக ளின் வாழ்க்கை முறையும் பாதிக்கப் படுகிறது. சுற்றுச்சூழலும் பாதிக்கப் படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேல் மனித குலத்தின் செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
நம்முடைய உணவு தானிய உற்பத்தி சீராக இருக்கிறதா என்பதை இந்த மாற்றங்களே தீர்மானிக்கின்றன.

நம்முடைய முன்னோர்கள் இதனை உணர்ந்தே விவசாயம் செய்து வந்தி ருக்கின்றனர். பல கலாச்சாரங்களில் பருவ நிலை மாற்றங்களை, தாவரங் கள் மீதான அதன் பாதிப்புகளை குறித்து வைத்துக் கொள்வதே இயல்பாக நடந்திருக்கிறது.

எழுத்துக்கலை போலவே இதிலும் சீனர்கள்தான் முன்னோடி. கிட்டத் தட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள் செடி, கொடிகள் பூக்கும் பருவங்களை ஆவணப்படுத்தி இருக்கின்றனர். ஜப்பானில் செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கும் காட்சி கொண்டாடப்பட்டு வந்திருப்பதோடு, குறித்து வைக்கப் பட்டும் இருக்கிறது. நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பழக்கம் இருக்கிறது. கனடாவில் பிளாண்ட் வாட்ச் என்ற அமைப்பு தாவரங்களை கவனித்து வருகிறது.

அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் ஏற்படும் இத்தகைய மாற்றங் களை குறித்து வைக்க வேண்டும் என்பதே பட் பிரஸ்ட் திட்டத்தின் நோக்கம். இதற்காக பொதுமக்களின் பங்களிப்பை கோரியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளில் தாவரங்கள் எப்போது பூக்கின்றன அல்லது பூக்க மறுக்கின்றன என்பதை கவனித்து இந்த தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.  இதன் மூலம் நாடு முழுவதும் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து கொண்டு அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை பெறலாம் என்று கருதப்படுகிறது

ஒரு பாடலில் இலக்கிய தரத்தை எப்படி தீர்மானிப்பது. இதற்கான அளவுகோல் என்னவாக வேண்டு மானாலும் இருக்கட்டும். நாம் பார்க்க போகும் விஷயத்தை பொறுத்தவரை “இதயம்’ படத்தில் வரும் ஏப்ரல், மேயிலே… பாடலை இலக்கியத் தரம் மிக்கதாக வைத்துக் கொள்ளலாம். தான் சார்ந்த சமூகத்தின் சிறப்பு இயல்புகளை எடுத்துரைக்கும் தன்மை சிறந்த கவிதைகளுக்கு/பாடல்களுக்கு இருப்பதாக கருதப் படுகிறது. அந்த இலக்கணத்தின்படி பார்த்தால் இந்த பாடல் நமது சமூகத்தின், அதிலும் குறிப்பாக மண்ணின் மணத்தை சுட்டிக் காட்டுகிறது

 

ஏப்ரல், மேயிலே பசுமையே இல்லை காய்ந்து போச்சுடா எனும் இந்த வரி கோடைக் காலத்தில் தமிழக பகுதிக ளில் ஏற்படும் வானிலை மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை அழகாக பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு பகுதியிலும் ஏற்படும் வானிலை சார்ந்த சுற்றுச்சூழல் மாற் றங்கள் மிகவும் சுவாரசிய மானவை; முக்கியமானவை. இந்த மாற்றங்கள் நம் கண்ணில் பட்டாலும் அநேகமாக கருத்தில் கொள்ளப்படுவதில்லை.  ஜப்பான் போன்ற நாடுகளை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் வசந்தத்தின் வருகையை பூத்துக் குலுங்கும் செர்ரி மரங்கள் வண்ண மயமாக அறிவிக்கும்.

ஐரோப்பிய நாடுகளில் குளிர் காலத் தில் பறைச்சாற்றும் மலர்கள் இருக்கின் றன. கரிசல் காட்டை உள்ளடக்கிய நம் நாட்டில், செர்ரி பூக்களுக்கு நிகராக மாம்பூக்களை சொல்லலாம்.
கோடைக்காலம் இங்கு மாம்பழங் களுக்கான காலமாகவும் இருக்கிறது. அதன் வருகையை மாமரத்தை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

அதே போல கோடையின் வெப்பத்தை வீதிகளில் நிறையும் தர்பூசணிகளும் கூடை, கூடையாக வரும் வெள்ளரி பிஞ்சுகளும் உணர்த்தும். பல நேரங்களில் இந்த பருவம் தப்பிப் போவதும் உண்டு; அப்போது காட்சி மாறும், அல்லது தாமதமாகும். இந்த மாற்றங்களையெல்லாம் கவனிப்பது அவசியம் என்று வலி யுறுத்துவதற்காக இணையதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

புராஜெக்ட் பட் பிரஸ்ட் எனும் பெயரில் தீட்டப்பட்டுள்ள திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த இணைய தளம் இதே பெயரில் உருவாக்கப் பட்டுள்ளது. இலையுதிர் காலம் என்று சொல்வது போல, மொட்டு மலரும் காலம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். பட் பிரஸ்ட் என்றால் இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்.

பூக்கள் மலர்வதையும், கனிகள் உண்டாவதையும் குறித்து வைப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இது ஏதோ வேண்டாத வேலை என்பது போல ஒரு எண்ணம் தோன்றலாம்.
அப்படியில்லை. இது தாவரவியலின் ஒரு பகுதி. இதற்கு பினாலஜி என்று சொல்கின்றனர். அதாவது பருவ நிலையால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய விஞ்ஞானம் என்று பொருள். தாவரங்கள் மற்றும் விலங்குகளின் போக்கில் ஏற்படும் மாற்றங்கள் இதன் பிரதான அங்கமாக விளங்குகின்றன.

மரங்களும், செடிகளும் எப்போது பூக்கின்றன; எப்போது காய்க்கின்றன என்பதை வைத்து இந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு தாவர இனத்துக்கும், பூப்பதற்கும், காய்ப்பதற்கும் ஒரு காலம் இருக்கிறது. அவற்றின் தன்மைக்கேற்ப பருவ காலத்தோடு இது ஒத்துப் போகக் கூடியது.

உதாரணமாக வெப்பம் அதிகரிக்கும் போது செர்ரி மரங்கள் பூக்கும். குறிப்பிட்ட காலங்களில் வெப்பம் அதிகமாவது தாமதமானால் செர்ரி பூக்களும் தாமதமாக பூக்கும். பருவ நிலை மாற்றங்கள் சீராக இருந்தால் தாவரங்களும் சரியாக பூத்துக் காய்க்கும். பருவ நிலை மாறினால் தாவரங்களும் மாறி விடும்.

இந்த மாற்றத்தை கவனித்து கொண்டிருப்பது முக்கியமானதாக பினாலஜி நிபுணர்கள் கருதுகின்றனர். காரணம், இந்த மாற்றம் ஏதோ செடி, கொடிகளோடு நின்று போய் விடுவதில்லை. இதனால் விலங்குக ளின் வாழ்க்கை முறையும் பாதிக்கப் படுகிறது. சுற்றுச்சூழலும் பாதிக்கப் படுகிறது.

எல்லாவற்றுக்கும் மேல் மனித குலத்தின் செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.
நம்முடைய உணவு தானிய உற்பத்தி சீராக இருக்கிறதா என்பதை இந்த மாற்றங்களே தீர்மானிக்கின்றன.

நம்முடைய முன்னோர்கள் இதனை உணர்ந்தே விவசாயம் செய்து வந்தி ருக்கின்றனர். பல கலாச்சாரங்களில் பருவ நிலை மாற்றங்களை, தாவரங் கள் மீதான அதன் பாதிப்புகளை குறித்து வைத்துக் கொள்வதே இயல்பாக நடந்திருக்கிறது.

எழுத்துக்கலை போலவே இதிலும் சீனர்கள்தான் முன்னோடி. கிட்டத் தட்ட 1200 ஆண்டுகளுக்கு முன்னரே சீனர்கள் செடி, கொடிகள் பூக்கும் பருவங்களை ஆவணப்படுத்தி இருக்கின்றனர். ஜப்பானில் செர்ரி மரங்கள் பூத்துக் குலுங்கும் காட்சி கொண்டாடப்பட்டு வந்திருப்பதோடு, குறித்து வைக்கப் பட்டும் இருக்கிறது. நெதர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் இந்த பழக்கம் இருக்கிறது. கனடாவில் பிளாண்ட் வாட்ச் என்ற அமைப்பு தாவரங்களை கவனித்து வருகிறது.

அமெரிக்காவில் நாடு தழுவிய அளவில் ஏற்படும் இத்தகைய மாற்றங் களை குறித்து வைக்க வேண்டும் என்பதே பட் பிரஸ்ட் திட்டத்தின் நோக்கம். இதற்காக பொதுமக்களின் பங்களிப்பை கோரியுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பகுதிகளில் தாவரங்கள் எப்போது பூக்கின்றன அல்லது பூக்க மறுக்கின்றன என்பதை கவனித்து இந்த தளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.  இதன் மூலம் நாடு முழுவதும் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து கொண்டு அதன் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை பெறலாம் என்று கருதப்படுகிறது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “மாம்பூவே…

  1. இராசேந்திரன்

    நம் நாட்டில் இதுபோன்ற அமைப்பு ஏதும் இருக்கிரதா?

    Reply

Leave a Comment

Your email address will not be published.