இமெயில் கால பாதிப்பு

முகத்தை  நேருக்கு நேராக பார்த்து பேசுவது ஒருகலைதான். அதிலும் அரிதாகிவரும் கலை. அதுதான் கவலையாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க ஆய்வாளரான ராபின் ஆப்ரஹாம்ஸ்.  அரசியல் ஊழல் மயமாகி வருவதாக கவலைப்படுவது போல, சமூகம் குற்றமயமாகிவருவதாக விசனப் படுவதை போல, தற்கால தலைமுறை தொட்டாச்சிணுங்கி மயமாகி வருவதாக வருத்தப்படுகிறார் ஆப்ரஹாம்ஸ்

புகழ் பெற்ற ஹார்வர்டு பிஸ்னஸ் பள்ளியை சேர்ந்த ஆய்வாளரும்,  உளவியல் நிபுணருமான  ஆப்பிரஹாம்ஸ்  நடைமுறை வாழ்க்கையில்  நாம் பின்பற்ற வேண்டிய  நுணுக்கங்களை, கற்றுத்தேர்ந்தவர்.  இதுபற்றி அவர் அவ்வப்போது அவர் எழுதியும் வருகிறார். 

தினசரி சமூக நிகழ்வுகளையும், அதில் நாம் கவனிக்கத்தவறும் மாற்றங்களையும் அவர் உன்னிப்பாக கவனித்து வருபவர்.  அதன் பயனாக பேச்சுக்கலை மெல்ல மறக்கப்பட்டு வருவதாக அவர் கண்டறிந்து எச்சரித்துள்ளார். பேச்சுக்கலை என்றதும் மேடையில் நின்றபடி மைக்முன்  நின்று கூட்டத்தினரை மயக்கும் வகையில் சொற்பொழிவாற்றுவதை நினைத்து விட வேண்டாம்.  அல்லது அரங்கிலோ, பலர் முன்னிலையிலோ உணர்ச்சி பொங்க பேசி, உள்ளத்தில் இருப்பதை புரிய வைப்பதையோ நினைக்க வேண்டாம். 

அவர் சொல்வது, தினமும் நாம் பார்க்கும் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்களோடு முகத்தோடு முகம் பார்த்தபடி பேசும் சாதாரண உரையாடல் கலையைத்தான். இப்படி முகத்தை நோக்கியபடி பேசும் ஆற்றல் அருகி வருவதாக அவர்  தெரிவிக்கிறார். 
இமெயில், எஸ்.எம்.எஸ்., போன்றவை மூலம் தொடர்பு கொள்வது அதிகரித்து வருவதன் காரணமாக நேருக்கு நேர் பேசுவது குறைந்து கொண்டே போவதாக  அவர்  கூறுகிறார். 
எதற்கெடுத்தாலும், இமெயில் அனுப்பும் பழக்கம் உண்டாகிவிட்டது. இமெயில்  இல்லாத நேரத்தில் செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ்.சில் தொடர்பு கொள்வது சகஜமாக இருக்கிறது. 
இது மட்டுமல்லாமல், ஐபாடுகளில் பாட்டு கேட்டபடி பயணிக்கிறார்கள்.  இதன் விளைவாக பேசுவதற்கான  வாய்ப்புகள் குறைந்து கொண்டே  போகின்றன. 

இது அநேகமாக பலரும் அறிந்ததுதான். ஆனால் இதனால் ஏற்பட்டுவரும் பாதிப்பைத்தான் யாரும் இன்னமும் உணர்ந்ததாக தெரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்புக்கான சாதனங்களையும், வழிகளையும் அதிகமாக்கி தந்திருப்பதால்  சிக்கலான சமூக சூழலில் இருந்து விலகிக்கொள்ளும் மனப்போக்கு  உண்டாகியிருக்கிறது.  இது, பலரை மற்றவர்களிடமிருந்து சுருங்கி தங்களுக்குள் அடைபட்டு கொள்ளும் தன்மை கொண்டவர்களாக  மாற்றி வருகிறது. 

இத்தகைய நபர்களை பொதுவாக தொட்டாச்சிணுங்கிகள் என்று கூறுவோம். ஆனால் இன்று பலர் இப்படி தொட்டாச்சிணுங்கி களாகத்தான் இருக்கின்றனர். இமெயில் உலகத்தில் இயல்பாக இருக்கும் அவர்களால் சமூக சூழலில் சகஜமாக இருக்க முடிவதில்லை.  இத்தகைய போக்கு கவலைத்தரக்கூடியது என்று சொல்லும்  ப்பிரஹாம்ஸ், சமூக சூழலில் இருந்து விலகிக்கொள்ளும்  தன்மையானது ஒரு நோய்கூறாகவே  உருவாகியிருக்கிறது என்கிறார். இதில் மேலும் பிரச்சனை என்னவென்றால் இந்த நோயை குணமாக்க மருந்து மாத்திரையை நாட முடியாது என்பதுதான்.

இமெயில் காலத்துக்கு முன்பாக முகம்பார்த்து பேச முடியாத குறை வெகு சிலருக்கு மட்டுமே இருந்தது. இன்றோ பலர் இந்த குறைக்கு ஆளாகியிருக்கின்றனர்.  எனவே வரும் காலத்தில், சமூக உறவுகளை மேம்படுத்தி கொள்ள பழகும் கலையை தனியே  பயிற்றுவிக்க வேண்டி வரலாம் என்கிறார் அவர். 

கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுப்பது போல, சமூக சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்கிறார்.
ஆகவே இமெயில்களையும், எஸ்.எம்.எஸ்.களையும் கொஞ்சம் மறந்துவிட்டு, சமூக நிகழ்ச்சிகளில் அதிக அக்கறை செலுத்தினால், நமக்கும் நல்லது, நாம் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் நல்லது.  இதைத்தான்  தனது ஆய்வு உணர்த்துவதாக அழுத்தம், திருத்தமாக  ஆப்பிரஹாம்ஸ் கூறுகிறார்.

முகத்தை  நேருக்கு நேராக பார்த்து பேசுவது ஒருகலைதான். அதிலும் அரிதாகிவரும் கலை. அதுதான் கவலையாக இருக்கிறது என்கிறார் அமெரிக்க ஆய்வாளரான ராபின் ஆப்ரஹாம்ஸ்.  அரசியல் ஊழல் மயமாகி வருவதாக கவலைப்படுவது போல, சமூகம் குற்றமயமாகிவருவதாக விசனப் படுவதை போல, தற்கால தலைமுறை தொட்டாச்சிணுங்கி மயமாகி வருவதாக வருத்தப்படுகிறார் ஆப்ரஹாம்ஸ்

புகழ் பெற்ற ஹார்வர்டு பிஸ்னஸ் பள்ளியை சேர்ந்த ஆய்வாளரும்,  உளவியல் நிபுணருமான  ஆப்பிரஹாம்ஸ்  நடைமுறை வாழ்க்கையில்  நாம் பின்பற்ற வேண்டிய  நுணுக்கங்களை, கற்றுத்தேர்ந்தவர்.  இதுபற்றி அவர் அவ்வப்போது அவர் எழுதியும் வருகிறார். 

தினசரி சமூக நிகழ்வுகளையும், அதில் நாம் கவனிக்கத்தவறும் மாற்றங்களையும் அவர் உன்னிப்பாக கவனித்து வருபவர்.  அதன் பயனாக பேச்சுக்கலை மெல்ல மறக்கப்பட்டு வருவதாக அவர் கண்டறிந்து எச்சரித்துள்ளார். பேச்சுக்கலை என்றதும் மேடையில் நின்றபடி மைக்முன்  நின்று கூட்டத்தினரை மயக்கும் வகையில் சொற்பொழிவாற்றுவதை நினைத்து விட வேண்டாம்.  அல்லது அரங்கிலோ, பலர் முன்னிலையிலோ உணர்ச்சி பொங்க பேசி, உள்ளத்தில் இருப்பதை புரிய வைப்பதையோ நினைக்க வேண்டாம். 

அவர் சொல்வது, தினமும் நாம் பார்க்கும் நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்களோடு முகத்தோடு முகம் பார்த்தபடி பேசும் சாதாரண உரையாடல் கலையைத்தான். இப்படி முகத்தை நோக்கியபடி பேசும் ஆற்றல் அருகி வருவதாக அவர்  தெரிவிக்கிறார். 
இமெயில், எஸ்.எம்.எஸ்., போன்றவை மூலம் தொடர்பு கொள்வது அதிகரித்து வருவதன் காரணமாக நேருக்கு நேர் பேசுவது குறைந்து கொண்டே போவதாக  அவர்  கூறுகிறார். 
எதற்கெடுத்தாலும், இமெயில் அனுப்பும் பழக்கம் உண்டாகிவிட்டது. இமெயில்  இல்லாத நேரத்தில் செல்போன் மூலம் எஸ்.எம்.எஸ்.சில் தொடர்பு கொள்வது சகஜமாக இருக்கிறது. 
இது மட்டுமல்லாமல், ஐபாடுகளில் பாட்டு கேட்டபடி பயணிக்கிறார்கள்.  இதன் விளைவாக பேசுவதற்கான  வாய்ப்புகள் குறைந்து கொண்டே  போகின்றன. 

இது அநேகமாக பலரும் அறிந்ததுதான். ஆனால் இதனால் ஏற்பட்டுவரும் பாதிப்பைத்தான் யாரும் இன்னமும் உணர்ந்ததாக தெரியவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்புக்கான சாதனங்களையும், வழிகளையும் அதிகமாக்கி தந்திருப்பதால்  சிக்கலான சமூக சூழலில் இருந்து விலகிக்கொள்ளும் மனப்போக்கு  உண்டாகியிருக்கிறது.  இது, பலரை மற்றவர்களிடமிருந்து சுருங்கி தங்களுக்குள் அடைபட்டு கொள்ளும் தன்மை கொண்டவர்களாக  மாற்றி வருகிறது. 

இத்தகைய நபர்களை பொதுவாக தொட்டாச்சிணுங்கிகள் என்று கூறுவோம். ஆனால் இன்று பலர் இப்படி தொட்டாச்சிணுங்கி களாகத்தான் இருக்கின்றனர். இமெயில் உலகத்தில் இயல்பாக இருக்கும் அவர்களால் சமூக சூழலில் சகஜமாக இருக்க முடிவதில்லை.  இத்தகைய போக்கு கவலைத்தரக்கூடியது என்று சொல்லும்  ப்பிரஹாம்ஸ், சமூக சூழலில் இருந்து விலகிக்கொள்ளும்  தன்மையானது ஒரு நோய்கூறாகவே  உருவாகியிருக்கிறது என்கிறார். இதில் மேலும் பிரச்சனை என்னவென்றால் இந்த நோயை குணமாக்க மருந்து மாத்திரையை நாட முடியாது என்பதுதான்.

இமெயில் காலத்துக்கு முன்பாக முகம்பார்த்து பேச முடியாத குறை வெகு சிலருக்கு மட்டுமே இருந்தது. இன்றோ பலர் இந்த குறைக்கு ஆளாகியிருக்கின்றனர்.  எனவே வரும் காலத்தில், சமூக உறவுகளை மேம்படுத்தி கொள்ள பழகும் கலையை தனியே  பயிற்றுவிக்க வேண்டி வரலாம் என்கிறார் அவர். 

கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுப்பது போல, சமூக சூழலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுத் தர வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்கிறார்.
ஆகவே இமெயில்களையும், எஸ்.எம்.எஸ்.களையும் கொஞ்சம் மறந்துவிட்டு, சமூக நிகழ்ச்சிகளில் அதிக அக்கறை செலுத்தினால், நமக்கும் நல்லது, நாம் சார்ந்திருக்கும் சமூகத்திற்கும் நல்லது.  இதைத்தான்  தனது ஆய்வு உணர்த்துவதாக அழுத்தம், திருத்தமாக  ஆப்பிரஹாம்ஸ் கூறுகிறார்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.