இப்படியும் ஒரு தேடியந்திரம்-1

del-1எத்தனையோ வகை தேடியந்திரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்! மனித மாமிச தேடியந்திரம் பற்றி அறிவீர்களா?
.
பெயரே விசித்திரமாகவும், வில்லங் கமாகவும் இருப்பதாக தோன்றுகிறதா? உண்மையில் இது விவகாரமான தேடியந்திரம்தான்! இதனை கண்டு அஞ்சி நடுங்காத சீனர்களே கிடையாது என்றும் சொல்லலாம்.

பல அப்பாவி சீனர்கள் யோசிக்காமல் செய்த தவறுக்காக இந்த தேடியந்திரத்திடம் தலை வணங்கி இருக்கின்றனர். இன்னும் சிலர் கண்ணீர் விட்டு குறையாக மன்னிப்பு கேட்டு மண்டி யிட்டிருக்கின்றனர். வேறு சிலரோ ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆக கொஞ்சம் பயங்கரமான தேடியந்திரம்தான்! ஆனால் கூகுலுக்கு போட்டியான தேடியந் திரமோ, கூகுலைப் போன்ற தேடியந்திரமோ அல்ல! சொல்லப் போனால் இது சம்பிரதாயமான தேடியந்திரமே அல்ல! இணைய வாசிகள் கூட்டு முயற்சியில் நடத்தப்படும் தேடுதல் வேட்டையே இந்த பெயரில் குறிப்பிடப்படுகிறது.

இந்த வேட்டை ஒரு தொடர் நிகழ்வாக நடைபெற்று வருவதே, கவனத்திற்கு உரியதாகவும், கவலை அளிப்பதாகவும் அமைந்துள்ளது. இன்டெர்நெட் உலகில் மனித சக்தி தேடியந்திரம் என்னும் கருத்தாக்கம் தற்போது பிரபலமாக பேசப் படுகிறது. தேடல் முடிவுகளை பட்டியலிட, இணையவாசிகளின் பங்களிப்பையும் பரிந்துரையையும் பயன்படுத்திக் கொள்ளும் புதுயுக தேடியந்திரங்கள் இவ்வாறு குறிப் பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவை ஹின் பவர்டு சர்ச் இன்ஜின்ஸ் என்று அழைக்கப் படுகின்றன. ஆனால் சீனாவிலோ கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், ஹியுமன் ஃபிளஷ் சர்ச் இன்ஜினாக உருவெடுத்துள்ளது.

தவறு செய்த ஒருவரைப்பற்றிய தனிப்பட்ட விவரங்களை தேடிப்பிடித்து, இன்டெர்நெட்டில் அவற்றை பகிரங்கமாக வெளியிட்டு, தலைகுனிய வைக்கும் செயல்தான் இப்படி குறிப்பிடப்படுகிறது.

இந்தப் போக்கின் தீவிரத்தை உணர ஒரு சில உதாரணங்களை பார்க்கலாம்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு உண்டானது. பூகம்பத்தை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஒரு இளம்பெண், வெப் கேமரா முன் அமர்ந்து தனது கருத்துக்களை பதிவு செய்து வெளியிட்டார்.

எப்போது டிவியை திருப்பினாலும், பலியான உடல்களையும், காய மடைந்த மனிதர்களையும் காட்டிக் கொண்டிருக் கின்றனர். இவற்றை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழியில்லையே எனக்கூறிய அந்த இளம்பெண், “ஒரு சிலர் தானே பலியாகி உள்ளனர். எப்படியும் சீனாவில் கோடிக் கணக்கானோர் உள்ளனரே’ என்றும் பேசியிருந்தார்.

மனிதாபிமானமற்ற பேச்சு தான்! கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் இளம்பெண் ஒருவர் இப்படி பேசியிருப்பது திடுக் கிடத்தான் வைக்கும். வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் தான் இது.

நம்மூரில் இப்படி ஒருவர் சொல்லி யிருந்தால் என்ன செய்திருப்போம்! “இப்படியும் ஒரு பெண்ணா’ என கோபத்தை வெளிப்படுத்தி சும்மா விட்டிருப்போம். ஆனால் சீனாவில் நடந்த கதையே வேறு.

இந்த வெப் கேமரா பேச்சு கண்ணில் பட்டதுமே கொதித்துப் போன இணையவாசிகள் “”உன்னை சும்மா விட்டோமா பார்” என்று காரியத்தில் இறங்கி விட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் எல்லாம் அந்த இளம்பெண் யார், அவரது பெயர் என்ன, அவர் எங்கே பணி புரிகிறார் போன்ற விவரங்களை எல்லாம் தோண்டி எடுத்து, இன்டெர் நெட்டில் வெளியிட்டு விட்டனர்.

அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்ட அந்தரங்க விவரங்களும் வெளியிடப்பட்டன. அவருடைய பொறுப்பற்ற பேச்சு, விவாதிக்கப்பட்டு, விமர்சிக் கப்பட்டு, கண்டனத்திற்கும் ஆளானது. இணைய குழுக்கள், அரட்டை அறைகள் என இன்டெர்நெட் முழுவதும் அந்த இளம்பெண் கடும் கண்டனத்திற்கு ஆளானார்.

“இந்த பெண்ணை அவமானப் படுத்துங்கள்’ என்று ஒரு இணை யவாசி கோபமாக எழுதியிருந்தார். ஆயிரக் கணக்கானோர் அதை தான் செய்து கொண்டிருந்தனர்.
இந்த கோபாவேசம் உச்சத்தை தொட்டதன் விளைவாக, உள்ளூர் போலீசார் தலையிட்டு அந்த பெண்ணை கைது செய்தனர்.

இளம்பெண்ணின் செயல் தவறு என்றாலும், அவர் மீது எந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பது எனத் தெரியாமல் காவலர்கள் குழம்பித் தவித்தனர். அந்த இளம்பெண் நிச்சயம் இத்தகைய தாக்குதலை எதிர் பார்த்திருக்க மாட்டார். ஏதோ மனதில் தோன்றியதை பேசி, வெளியிட்டு விட்டார். அதை நினைத்து அவரே கூட பின்னர் வருந்தியிருக்கலாம். இல்லை என்றாலும் கூட அவரது செயல் எந்த பெரிய அதிர்வையும் ஏற்படுத்தி இருக்காது.

ஆனால் சீன இணையவாசிகள் அப்படி எல்லாம் விட்டு விட தயாராக இல்லை. யாராவது ஒருவர் ஏற்க முடியாத செயலில் ஈடுபடுவது இன்டெர்நெட் மூலம் தெரிய வருமானால், உடனே அவர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் திரட்டி வெளியிட்டு அசிங்கப்படுத்தி விலகுகின்றனர். யாரோ முகம் தெரியாத நபர் பற்றிய விவரங்களை தேடுவது ஒன்றும் அத்தனை சுலப மானதல்ல. ஆனால் சீன இணைய வாசிகள் பலர் இந்த தேடலில் ஈடுபடத் தயாராக இருப்பதால், ஒருவரின் ஜாதகத்தையே வெளியி டுவது சாத்தியமாகிறது.

பொதுவாக தகவல்களை தேட கூகுல் போன்ற தேடியந்திரங்களை தானே பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக ஒருவரைப்பற்றிய விவரங்களை தேடி கண்டுபிடிக்க இணையவாசிகளே களத்தில் இறங்கி விடுவதால், இந்த முயற்சி ஹயுமன் ஃபிளஷ் சர்ச் இன்ஜின் என்று அழைக்கப்படலாயிற்று! தமிழில் மாமிச தேடியந்திரம் என்று சொல்லலாம்!
(நாளை தொடரும்)…..’

del-1எத்தனையோ வகை தேடியந்திரங்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்! மனித மாமிச தேடியந்திரம் பற்றி அறிவீர்களா?
.
பெயரே விசித்திரமாகவும், வில்லங் கமாகவும் இருப்பதாக தோன்றுகிறதா? உண்மையில் இது விவகாரமான தேடியந்திரம்தான்! இதனை கண்டு அஞ்சி நடுங்காத சீனர்களே கிடையாது என்றும் சொல்லலாம்.

பல அப்பாவி சீனர்கள் யோசிக்காமல் செய்த தவறுக்காக இந்த தேடியந்திரத்திடம் தலை வணங்கி இருக்கின்றனர். இன்னும் சிலர் கண்ணீர் விட்டு குறையாக மன்னிப்பு கேட்டு மண்டி யிட்டிருக்கின்றனர். வேறு சிலரோ ஓடி ஒளியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆக கொஞ்சம் பயங்கரமான தேடியந்திரம்தான்! ஆனால் கூகுலுக்கு போட்டியான தேடியந் திரமோ, கூகுலைப் போன்ற தேடியந்திரமோ அல்ல! சொல்லப் போனால் இது சம்பிரதாயமான தேடியந்திரமே அல்ல! இணைய வாசிகள் கூட்டு முயற்சியில் நடத்தப்படும் தேடுதல் வேட்டையே இந்த பெயரில் குறிப்பிடப்படுகிறது.

இந்த வேட்டை ஒரு தொடர் நிகழ்வாக நடைபெற்று வருவதே, கவனத்திற்கு உரியதாகவும், கவலை அளிப்பதாகவும் அமைந்துள்ளது. இன்டெர்நெட் உலகில் மனித சக்தி தேடியந்திரம் என்னும் கருத்தாக்கம் தற்போது பிரபலமாக பேசப் படுகிறது. தேடல் முடிவுகளை பட்டியலிட, இணையவாசிகளின் பங்களிப்பையும் பரிந்துரையையும் பயன்படுத்திக் கொள்ளும் புதுயுக தேடியந்திரங்கள் இவ்வாறு குறிப் பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் இவை ஹின் பவர்டு சர்ச் இன்ஜின்ஸ் என்று அழைக்கப் படுகின்றன. ஆனால் சீனாவிலோ கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், ஹியுமன் ஃபிளஷ் சர்ச் இன்ஜினாக உருவெடுத்துள்ளது.

தவறு செய்த ஒருவரைப்பற்றிய தனிப்பட்ட விவரங்களை தேடிப்பிடித்து, இன்டெர்நெட்டில் அவற்றை பகிரங்கமாக வெளியிட்டு, தலைகுனிய வைக்கும் செயல்தான் இப்படி குறிப்பிடப்படுகிறது.

இந்தப் போக்கின் தீவிரத்தை உணர ஒரு சில உதாரணங்களை பார்க்கலாம்.
சீனாவின் தென்மேற்கு பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டு மிகப்பெரிய அளவில் உயிரிழப்பு உண்டானது. பூகம்பத்தை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், ஒரு இளம்பெண், வெப் கேமரா முன் அமர்ந்து தனது கருத்துக்களை பதிவு செய்து வெளியிட்டார்.

எப்போது டிவியை திருப்பினாலும், பலியான உடல்களையும், காய மடைந்த மனிதர்களையும் காட்டிக் கொண்டிருக் கின்றனர். இவற்றை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் வேறு வழியில்லையே எனக்கூறிய அந்த இளம்பெண், “ஒரு சிலர் தானே பலியாகி உள்ளனர். எப்படியும் சீனாவில் கோடிக் கணக்கானோர் உள்ளனரே’ என்றும் பேசியிருந்தார்.

மனிதாபிமானமற்ற பேச்சு தான்! கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் இளம்பெண் ஒருவர் இப்படி பேசியிருப்பது திடுக் கிடத்தான் வைக்கும். வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய செயல் தான் இது.

நம்மூரில் இப்படி ஒருவர் சொல்லி யிருந்தால் என்ன செய்திருப்போம்! “இப்படியும் ஒரு பெண்ணா’ என கோபத்தை வெளிப்படுத்தி சும்மா விட்டிருப்போம். ஆனால் சீனாவில் நடந்த கதையே வேறு.

இந்த வெப் கேமரா பேச்சு கண்ணில் பட்டதுமே கொதித்துப் போன இணையவாசிகள் “”உன்னை சும்மா விட்டோமா பார்” என்று காரியத்தில் இறங்கி விட்டனர். அடுத்த சில மணி நேரத்தில் எல்லாம் அந்த இளம்பெண் யார், அவரது பெயர் என்ன, அவர் எங்கே பணி புரிகிறார் போன்ற விவரங்களை எல்லாம் தோண்டி எடுத்து, இன்டெர் நெட்டில் வெளியிட்டு விட்டனர்.

அவரது பெற்றோர்கள் விவாகரத்து பெற்றவர்கள் உள்ளிட்ட அந்தரங்க விவரங்களும் வெளியிடப்பட்டன. அவருடைய பொறுப்பற்ற பேச்சு, விவாதிக்கப்பட்டு, விமர்சிக் கப்பட்டு, கண்டனத்திற்கும் ஆளானது. இணைய குழுக்கள், அரட்டை அறைகள் என இன்டெர்நெட் முழுவதும் அந்த இளம்பெண் கடும் கண்டனத்திற்கு ஆளானார்.

“இந்த பெண்ணை அவமானப் படுத்துங்கள்’ என்று ஒரு இணை யவாசி கோபமாக எழுதியிருந்தார். ஆயிரக் கணக்கானோர் அதை தான் செய்து கொண்டிருந்தனர்.
இந்த கோபாவேசம் உச்சத்தை தொட்டதன் விளைவாக, உள்ளூர் போலீசார் தலையிட்டு அந்த பெண்ணை கைது செய்தனர்.

இளம்பெண்ணின் செயல் தவறு என்றாலும், அவர் மீது எந்த பிரிவின் கீழ் நடவடிக்கை எடுப்பது எனத் தெரியாமல் காவலர்கள் குழம்பித் தவித்தனர். அந்த இளம்பெண் நிச்சயம் இத்தகைய தாக்குதலை எதிர் பார்த்திருக்க மாட்டார். ஏதோ மனதில் தோன்றியதை பேசி, வெளியிட்டு விட்டார். அதை நினைத்து அவரே கூட பின்னர் வருந்தியிருக்கலாம். இல்லை என்றாலும் கூட அவரது செயல் எந்த பெரிய அதிர்வையும் ஏற்படுத்தி இருக்காது.

ஆனால் சீன இணையவாசிகள் அப்படி எல்லாம் விட்டு விட தயாராக இல்லை. யாராவது ஒருவர் ஏற்க முடியாத செயலில் ஈடுபடுவது இன்டெர்நெட் மூலம் தெரிய வருமானால், உடனே அவர்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் திரட்டி வெளியிட்டு அசிங்கப்படுத்தி விலகுகின்றனர். யாரோ முகம் தெரியாத நபர் பற்றிய விவரங்களை தேடுவது ஒன்றும் அத்தனை சுலப மானதல்ல. ஆனால் சீன இணைய வாசிகள் பலர் இந்த தேடலில் ஈடுபடத் தயாராக இருப்பதால், ஒருவரின் ஜாதகத்தையே வெளியி டுவது சாத்தியமாகிறது.

பொதுவாக தகவல்களை தேட கூகுல் போன்ற தேடியந்திரங்களை தானே பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக ஒருவரைப்பற்றிய விவரங்களை தேடி கண்டுபிடிக்க இணையவாசிகளே களத்தில் இறங்கி விடுவதால், இந்த முயற்சி ஹயுமன் ஃபிளஷ் சர்ச் இன்ஜின் என்று அழைக்கப்படலாயிற்று! தமிழில் மாமிச தேடியந்திரம் என்று சொல்லலாம்!
(நாளை தொடரும்)…..’

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.