டிவிட்டருக்கு ஒரு சோதனை

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஜன்னல்களை மட்டும் திறந்து வைத்து கொண்டு செய்திக்காற்றை முழுமையாக சுவாசிக்க முடியுமா? இந்த கேள்விக்கான பதிலை  கண்டறிவதற்கான பரிசோதனையில் ஐந்து பத்திரிக்கையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 அந்த‌ ஐந்து ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளும் ஐந்து நாட்க‌ள் ஒரு பண்ணைவீட்டில் தங்க உள்ளனர்.இந்த நாட்களின் போது அவர்கள் கடுமையான செய்தி விரதம் மேற்கொள்வார்கள்.அதாவ‌து டிவி பார்க்க மாட்டார்கள்.நாளிதழ் படிக்க மாட்டார்கள்.வனொலியும் கேட்க மாட்டார்கள்.இண்டெர்நெட்டிலும் உலாவக்கூடாது.
அவர்கள் செய்யக்கூடியதெல்லாம் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் உலா வரலாம்.அவ்வளவு தான்.அதனை கொண்டே அவர்கள் தங்கள் செய்தி நிறுவனங்களூக்கு உலக நடப்பு பற்றி செய்தி க‌ண்ணோட்டத்தை வழங்க வேண்டும்.

இவ‌ற்றைத்த‌விர‌ வேறு க‌ட்டுப்பாடுக‌ளும் உண்டு.அந்த‌ ப‌ண்ணை வீட்டில் இருக்கும் க‌ம்ப்யூட்ட‌ர்க‌ளில் ப‌ழைய‌ த‌க‌வ்ல்க‌ள் எதுவும் இல்லாம‌ல் வெறுமையாக்வே இருக்கும். அவ‌ர்க‌ளிட‌ம் கொடுக்க‌ப்ப‌டும் செல்போனை கொண்டு இண்டெர்நெட்டில் உலா வ‌ர‌ முடியாது.

டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக் இர‌ண்டுமே செய்தி வெளியீட்டில் உத‌வுவ‌தாக‌ பேச‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. அதிலும் குறிப்பாக‌ குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ர் புதிய‌ செய்திக‌ளை தெரிந்து கொள்ள‌வும் செய்திக்ளை வெளியிட‌வும் ஏற்ற‌தாக‌ இருப்ப‌தாக‌ புக‌ழ‌ப்ப‌டுகிற‌து.

ஈரான் தேர்த‌ல் பிர‌ச்ச‌னையின் போது டிவிட்ட‌ர் அட‌க்கு முறைக்கு ந‌டுவே செய்தியை வெளிக்கொண‌ர்வ‌தில் பெரும் புர‌ட்சியையே உண்டாக்கிய‌து. ச‌மீப‌த்தில் ஹைதி நில‌ந‌டுக்க‌த்தின் போது கூட‌ டிவிட்ட‌ர் செய்தி வெளியிட்டு சாத‌ன‌மாக‌ பேரூத‌வி புரிந்த‌து.

அதே நேர‌த்தில் டிவிட்ட‌ர் மூல‌ம் பொய் செய்திக‌ளையும் வ‌த‌ந்திக‌ளையும் வெளியிடுவ‌தும் சுலப‌மாக‌ இருக்கிற‌து.என்வே டிவிட்ட‌ர் செய்திக‌ளீன் ந‌ம்ப‌க‌த்த‌ன‌மை குறித்த கேள்விக‌ள் உள்ள‌ன‌.
இந்த‌ பின்ன‌ணியில் டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக்கின் செய்தி வெளியீட்டுத்தன்மையின் வ‌ர‌ம்புக‌ளை ப‌ரிசோதித்து பார்த்து விடுவ‌து என்று தீர்மானித்து தான் இந்த‌ ப‌ரிசோத்னைக்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌து.
அடுத்த் மாத‌ம் முத‌ல் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ இந்த‌ ப‌ரிசோத‌னை முய‌ற்சியில் க‌ன‌டா,சுவிஸ்,பிரான்ஸ்,பெல்ஜிய‌ம்,நாடுக‌ளைச்சேர்ந்த‌ வானொலி நிருப‌ர்க‌ள் ப‌ங்கேற்க‌ உள்ள‌ன‌ர். பிரான்சில் இந்த‌ சோத்னை நிக‌ழ‌ உள்ள‌து.

செய்தி வெளியிட்டில் டிவிட்ட‌ரை எந்த‌ அள‌வுக்கு ந‌ம்ப‌லாம் என்று இந்த‌ சோத‌னை உண‌ர்த்தும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஜன்னல்களை மட்டும் திறந்து வைத்து கொண்டு செய்திக்காற்றை முழுமையாக சுவாசிக்க முடியுமா? இந்த கேள்விக்கான பதிலை  கண்டறிவதற்கான பரிசோதனையில் ஐந்து பத்திரிக்கையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 அந்த‌ ஐந்து ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளும் ஐந்து நாட்க‌ள் ஒரு பண்ணைவீட்டில் தங்க உள்ளனர்.இந்த நாட்களின் போது அவர்கள் கடுமையான செய்தி விரதம் மேற்கொள்வார்கள்.அதாவ‌து டிவி பார்க்க மாட்டார்கள்.நாளிதழ் படிக்க மாட்டார்கள்.வனொலியும் கேட்க மாட்டார்கள்.இண்டெர்நெட்டிலும் உலாவக்கூடாது.
அவர்கள் செய்யக்கூடியதெல்லாம் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் உலா வரலாம்.அவ்வளவு தான்.அதனை கொண்டே அவர்கள் தங்கள் செய்தி நிறுவனங்களூக்கு உலக நடப்பு பற்றி செய்தி க‌ண்ணோட்டத்தை வழங்க வேண்டும்.

இவ‌ற்றைத்த‌விர‌ வேறு க‌ட்டுப்பாடுக‌ளும் உண்டு.அந்த‌ ப‌ண்ணை வீட்டில் இருக்கும் க‌ம்ப்யூட்ட‌ர்க‌ளில் ப‌ழைய‌ த‌க‌வ்ல்க‌ள் எதுவும் இல்லாம‌ல் வெறுமையாக்வே இருக்கும். அவ‌ர்க‌ளிட‌ம் கொடுக்க‌ப்ப‌டும் செல்போனை கொண்டு இண்டெர்நெட்டில் உலா வ‌ர‌ முடியாது.

டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக் இர‌ண்டுமே செய்தி வெளியீட்டில் உத‌வுவ‌தாக‌ பேச‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. அதிலும் குறிப்பாக‌ குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ர் புதிய‌ செய்திக‌ளை தெரிந்து கொள்ள‌வும் செய்திக்ளை வெளியிட‌வும் ஏற்ற‌தாக‌ இருப்ப‌தாக‌ புக‌ழ‌ப்ப‌டுகிற‌து.

ஈரான் தேர்த‌ல் பிர‌ச்ச‌னையின் போது டிவிட்ட‌ர் அட‌க்கு முறைக்கு ந‌டுவே செய்தியை வெளிக்கொண‌ர்வ‌தில் பெரும் புர‌ட்சியையே உண்டாக்கிய‌து. ச‌மீப‌த்தில் ஹைதி நில‌ந‌டுக்க‌த்தின் போது கூட‌ டிவிட்ட‌ர் செய்தி வெளியிட்டு சாத‌ன‌மாக‌ பேரூத‌வி புரிந்த‌து.

அதே நேர‌த்தில் டிவிட்ட‌ர் மூல‌ம் பொய் செய்திக‌ளையும் வ‌த‌ந்திக‌ளையும் வெளியிடுவ‌தும் சுலப‌மாக‌ இருக்கிற‌து.என்வே டிவிட்ட‌ர் செய்திக‌ளீன் ந‌ம்ப‌க‌த்த‌ன‌மை குறித்த கேள்விக‌ள் உள்ள‌ன‌.
இந்த‌ பின்ன‌ணியில் டிவிட்ட‌ர் ம‌ற்றும் ஃபேஸ்புக்கின் செய்தி வெளியீட்டுத்தன்மையின் வ‌ர‌ம்புக‌ளை ப‌ரிசோதித்து பார்த்து விடுவ‌து என்று தீர்மானித்து தான் இந்த‌ ப‌ரிசோத்னைக்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌து.
அடுத்த் மாத‌ம் முத‌ல் தேதி துவ‌ங்க‌ உள்ள‌ இந்த‌ ப‌ரிசோத‌னை முய‌ற்சியில் க‌ன‌டா,சுவிஸ்,பிரான்ஸ்,பெல்ஜிய‌ம்,நாடுக‌ளைச்சேர்ந்த‌ வானொலி நிருப‌ர்க‌ள் ப‌ங்கேற்க‌ உள்ள‌ன‌ர். பிரான்சில் இந்த‌ சோத்னை நிக‌ழ‌ உள்ள‌து.

செய்தி வெளியிட்டில் டிவிட்ட‌ரை எந்த‌ அள‌வுக்கு ந‌ம்ப‌லாம் என்று இந்த‌ சோத‌னை உண‌ர்த்தும் என்று எதிர்பார்க்க‌ப்ப‌டுகிற‌து.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டருக்கு ஒரு சோதனை

  1. ஆமா இந்த தகவலை எப்படி ட்நிட்டரில் அனுப்பறது ?(ஃபாலோ மீ கானோமெ)

    Reply
  2. A.V.Roy

    உம்முடைய ஆக்கங்கள் அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்..

    என்னுடைய கம்ப்யூட்டர் இல் சில folderகள் 212kb என்ற அளவிலே காண்பிக்கின்றது. இது ஒரு வைரஸ் தாக்கம் என்பது புரிகிறது. எனது போட்டோ களை மீள பெற்று கொள்ள என்ன செய்ய முடியும். எதாவது சிறந்தவழியினை கூற முடியுமா???

    Reply
  3. A.V.Roy

    சில மாதங்களுக்கு முன்பு கொள்ளளவுடைய 274 mb photos பலவற்றை save பண்ணி இருந்தேன். ஆனால் தற்போது அது 212 kb என்றும் சில folders 232kb என்றும் காண்பிக்கின்றது(எந்த விதfile களும் அதனுள் இல்லை), சில ebooks யும் இல்லாமல் காண்பிக்கின்றது..நீங்கள் காட்டிய சுட்டியின் மூலம் என்னால் முடியவில்லை.

    Reply
  4. Shbaash Sariyaana Poaddi ………………………
    http://wp.me/KkRf

    Reply
  5. // அதே நேர‌த்தில் டிவிட்ட‌ர் மூல‌ம் பொய் செய்திக‌ளையும் வ‌த‌ந்திக‌ளையும் வெளியிடுவ‌தும் சுலப‌மாக‌ இருக்கிற‌து//

    இது twitter மட்டும் இல்லை பொதுவாக இணையத்துக்கும் பொருந்தும் என நினைகிறேன்

    Reply

Leave a Comment to rk.சதீஷ்குமார் Cancel Reply

Your email address will not be published.