இவர் கம்ப்யூட்டர் வைரஸ் பாய்ந்த மனிதர்

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண்டுள்ளார்.இந்த முதல் மனிதர் என்பது கொஞ்சம் முக்கியமானது.இதன் பொருள் இனி வரும் காலங்களில் மேலும் பலர் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்படலாம் என்பதே.

சொல்லப்போனால் பேராசிரியர் கசான் இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரஸை ஏற்றிக்கொண்டிருக்கிறார்.அது மட்டுமல்ல இந்த வைரஸை மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளுக்கும் பரவ விட்டு காண்பித்திருக்கிறார்.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக வைரஸ் கம்ப்யூட்டர் ,லேப்டாப்,ஸ்மார்ட் போன் செல்போன் என பரவி தற்போது மனித சிப்புக்குள்ளும் நுழைந்து விட்டது.இதனை உலகிற்கு உணர்த்திய பேராசிரியரின் செயல் துணிச்சலானது;அதே நேரத்தில் தொலை நோக்கு மிக்கது.

பேராசிரியர் மனித குலத்தின் நலனுக்காக தன்னையே சோதனை கூடமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.

எல்லாம் சரி பேராசிரியரின் உடலுக்குள் சிப் வந்தது எப்படி?அதை ஏன் அவர் விரும்பி வைரஸ் உலாவும் வாகனமாக மாற்ற வேண்டும்?

இந்த கேள்விக்கான பதில் கேசன் ஆர்வம் காட்டும் துறையில் அடங்கியிருக்கிறது.இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலையில் பேராசிரியார பணியாற்றும் சைபர்நெட்டிக்ஸ் துறையின் நிபுணராக அறியப்படுகிறார்.சைபர்நெட்டிக்ஸ் என்பது கம்ப்யூட்டர் சார்ந்த பொது வார்த்தை. அதற்கு பரந்து விரிந்த அர்த்தம் உண்டு.மனிதன் மற்றும் இயந்திரங்கள் சந்திக்கும் புள்ளி தொடர்பான ஆய்வும் இதில் அடங்கும்.

இந்த உறவில் ஆர்வம் கொண்டவர் தான் காசன்.

ஆம் மனித குலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வதோடு நில்லாமல் அதனை தழுவிக்கொள்ளவும் முயன்று வருகிறது.இதன் பயனாக மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் இடையிலான தொடர்பு,உறவு மேலும் நெருக்கமாகி கொண்டிருக்கிறது.உடல் உறுப்புக்குள் கம்ப்யூட்டர் சிப்பை பொருத்திக்கொள்வது தான் இதன் முதல் படி.

ஒரு சிப்புக்குள் ஒராயிரம் விஷயங்களை அடக்கிவிடலாம் இல்லையா? இந்த ஆற்றலை பயன்படுத்தி சின்ன்சஞ்சிறு சிப்பை உடலின் ஒரு அங்கமாக்கி ஹைடெக்கான செயல்பாடுகளை சாத்தியமாக்கிகொள்ளலாம்.உதராணமாக கையில் சிப்பை வைத்து கொண்டு அதனை அடையாள அட்டையாக பயன்படுத்தாலாம்.

ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள பிரபலாமான கடற்கரை விடுதியில் விஐபி உறுப்பினர்களுக்கு இப்படி கை விரலுக்குள் பொருந்திய சிப்பை அடையாள அட்டையாக வழ்ங்கியுள்ளனர்.அந்த சிப்புக்குள் அவர்களைப்பற்றிய தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். விடுதிக்குள் நுழையும் போது அவர்கள் கை காட்டினால் போதும் கம்ப்யூட்டர் அவர்கள் யார் என்பதை புரிந்து கொன்டு உள்ளே அனுமதித்துவிடும்.வாயிலில் நின்று பதில் சொல்ல வேண்டியதில்லை.

அதே போல விடுதியில் இருந்து வெளியேறும் போது உறுப்பினர்கள பயன்படுத்திய வசதிகளுக்கான தோகையும் சிப்பில் தானாகவே கணக்கிடப்பட்டிருக்கும்.கட்டணம் செலுத்தக்கூட இதனையே பயன்படுத்தலாம்.

பார்சிலோனா கடற்கரை விடுதி கோடிஸ்வர வாடிக்கையாளர்களூக்கான விஷேச வசதியாக் ஒரு புதுமைக்காக இதனை அறிமுகம் செய்துள்ளது.ஆனால் காலப்போக்கில் இப்படி சிப்பை சொருகி கொள்வது மேலும் பரவலாகிவிடும் என்று கருதப்படுகிறது.
இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.ஏற்கனெவே இத்தகைய சிப்களை விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மற்றும் பின்தொடர்ந்து ஆய்வு செய்ய பயன்படுத்தி வருகிறோம்.

இதையே அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்று மனித செயலபாடுகளையும் சிப்புகளால் மேம்படுத்தலாமே என்று நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.இது தொடர்பான பல்வேறு சோதனை மற்றும் முன்னோடி முயற்சிகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

அர்சி அளவுக்கு ஒரு சிப்பை கை விரல் போன்றவற்றில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்டால் மந்திரக்கோல் போல மாயங்களை நிகழ்த்தலாம்.

இவ்வளவு ஏன் தனியே ஏடிஎம் கார்டுகளே தேவைப்படாது.கையில் உள்ள சிப்பையே கார்டாக பயன்படுத்தலாம். அப்படியே ஒருஅரின் பருத்துவ விவரங்களையும் சிப்பிலேமித்து வைக்கலாம்.அவசர நிலையின் போது அந்த சீப்பை ஸ்கேன் செய்தால் போதும் அவரின் மருத்துவ வரலாற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கலாம்.

இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன.விஷயம் என்னவென்றால் மனிதனும் இயந்திரமும் நெருங்கி வருகின்றன.

இப்போது பெரும்பாலும் ஆய்வு நிலையிலேயே இருந்தாலும் எதிர்காலத்தில் மனித இயந்திர கலப்பு நடைமுறை முக்கியத்துவம் பெறலாம்.அப்போது ஏற்படக்கூடிய விளைவுகளை பயன்களை ஆய்வு செய்து பார்ப்பது தான் பேராசிரியர் காசனின் நோக்கம்.

கம்ப்யூட்டர் சிப் என்றதும் வைரஸ் இல்லாமல் இருக்குமா?இந்த வைரஸ் மனித சிப்பையும் பாதிக்குமா? இப்படி ஒரு சந்தேகம் காசனுக்கு ஏற்பட்டதன் விளைவாகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரசை ஏற்றிவிட்டார்.பின்னர் அந்த சிப்பை பயன்படுத்திய போது மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளும் வைரஸ் பரவியது.

இது காசன் எதிர்பார்த்தது தான். உடலுக்குள் பொருத்தப்படும் சிப் வைரஸால் பாதிக்கப்படால் விபரீதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கருதிய அவர் இதனை நிருபித்தும் காட்டியிருக்கிறார்.

யோசித்துப்பாருங்கள் நாளை யார் வேண்டுமானாலும் கையில் வைரஸை வைத்துக்கொண்டு உலக கம்ப்யூட்டர்களை செயல் இழக்க வைக்கலாம்.தெரியாமலும் இந்த விபரீதம் நிகழலாம்

இவற்றை ஏதோ அறிவியம் புனைகதை என்றும் அலட்சியப்படுத்தமுடியாது.பேஸ்மேக்கர் போன்ற சாதனங்கள் ஏற்கனவே ம்னித உடலுக்குள் நுழைந்தாகி விட்டது.மேலும் பல மருத்துவ பயன்பாடுகள் வர உள்ளன.

ஆக எதிர்காலம் இயந்திரங்களின் அதிசயம் மற்றும் ஆபத்துக்கள் நிரைந்ததாகவே இருக்கிறது.

உலகிலேயே கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்பட்ட முதல் மனிதர் என்று இங்கிலாந்து பேராசிரியர் மார்க் காசன் தன்னை வர்ணித்துக்கொண்டுள்ளார்.இந்த முதல் மனிதர் என்பது கொஞ்சம் முக்கியமானது.இதன் பொருள் இனி வரும் காலங்களில் மேலும் பலர் கம்ப்யூட்டர் வைரசால் பாதிக்கப்படலாம் என்பதே.

சொல்லப்போனால் பேராசிரியர் கசான் இந்த ஆபத்தை உணர்த்துவதற்காகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரஸை ஏற்றிக்கொண்டிருக்கிறார்.அது மட்டுமல்ல இந்த வைரஸை மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளுக்கும் பரவ விட்டு காண்பித்திருக்கிறார்.

ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனிதனை கடித்த கதையாக வைரஸ் கம்ப்யூட்டர் ,லேப்டாப்,ஸ்மார்ட் போன் செல்போன் என பரவி தற்போது மனித சிப்புக்குள்ளும் நுழைந்து விட்டது.இதனை உலகிற்கு உணர்த்திய பேராசிரியரின் செயல் துணிச்சலானது;அதே நேரத்தில் தொலை நோக்கு மிக்கது.

பேராசிரியர் மனித குலத்தின் நலனுக்காக தன்னையே சோதனை கூடமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்.

எல்லாம் சரி பேராசிரியரின் உடலுக்குள் சிப் வந்தது எப்படி?அதை ஏன் அவர் விரும்பி வைரஸ் உலாவும் வாகனமாக மாற்ற வேண்டும்?

இந்த கேள்விக்கான பதில் கேசன் ஆர்வம் காட்டும் துறையில் அடங்கியிருக்கிறது.இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலையில் பேராசிரியார பணியாற்றும் சைபர்நெட்டிக்ஸ் துறையின் நிபுணராக அறியப்படுகிறார்.சைபர்நெட்டிக்ஸ் என்பது கம்ப்யூட்டர் சார்ந்த பொது வார்த்தை. அதற்கு பரந்து விரிந்த அர்த்தம் உண்டு.மனிதன் மற்றும் இயந்திரங்கள் சந்திக்கும் புள்ளி தொடர்பான ஆய்வும் இதில் அடங்கும்.

இந்த உறவில் ஆர்வம் கொண்டவர் தான் காசன்.

ஆம் மனித குலம் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்வதோடு நில்லாமல் அதனை தழுவிக்கொள்ளவும் முயன்று வருகிறது.இதன் பயனாக மனிதனுக்கும் இயந்திரத்துக்கும் இடையிலான தொடர்பு,உறவு மேலும் நெருக்கமாகி கொண்டிருக்கிறது.உடல் உறுப்புக்குள் கம்ப்யூட்டர் சிப்பை பொருத்திக்கொள்வது தான் இதன் முதல் படி.

ஒரு சிப்புக்குள் ஒராயிரம் விஷயங்களை அடக்கிவிடலாம் இல்லையா? இந்த ஆற்றலை பயன்படுத்தி சின்ன்சஞ்சிறு சிப்பை உடலின் ஒரு அங்கமாக்கி ஹைடெக்கான செயல்பாடுகளை சாத்தியமாக்கிகொள்ளலாம்.உதராணமாக கையில் சிப்பை வைத்து கொண்டு அதனை அடையாள அட்டையாக பயன்படுத்தாலாம்.

ஸ்பெயினின் பார்சிலோனாவில் உள்ள பிரபலாமான கடற்கரை விடுதியில் விஐபி உறுப்பினர்களுக்கு இப்படி கை விரலுக்குள் பொருந்திய சிப்பை அடையாள அட்டையாக வழ்ங்கியுள்ளனர்.அந்த சிப்புக்குள் அவர்களைப்பற்றிய தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். விடுதிக்குள் நுழையும் போது அவர்கள் கை காட்டினால் போதும் கம்ப்யூட்டர் அவர்கள் யார் என்பதை புரிந்து கொன்டு உள்ளே அனுமதித்துவிடும்.வாயிலில் நின்று பதில் சொல்ல வேண்டியதில்லை.

அதே போல விடுதியில் இருந்து வெளியேறும் போது உறுப்பினர்கள பயன்படுத்திய வசதிகளுக்கான தோகையும் சிப்பில் தானாகவே கணக்கிடப்பட்டிருக்கும்.கட்டணம் செலுத்தக்கூட இதனையே பயன்படுத்தலாம்.

பார்சிலோனா கடற்கரை விடுதி கோடிஸ்வர வாடிக்கையாளர்களூக்கான விஷேச வசதியாக் ஒரு புதுமைக்காக இதனை அறிமுகம் செய்துள்ளது.ஆனால் காலப்போக்கில் இப்படி சிப்பை சொருகி கொள்வது மேலும் பரவலாகிவிடும் என்று கருதப்படுகிறது.
இதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.ஏற்கனெவே இத்தகைய சிப்களை விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க மற்றும் பின்தொடர்ந்து ஆய்வு செய்ய பயன்படுத்தி வருகிறோம்.

இதையே அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்று மனித செயலபாடுகளையும் சிப்புகளால் மேம்படுத்தலாமே என்று நிபுணர்கள் பலர் கருதுகின்றனர்.இது தொடர்பான பல்வேறு சோதனை மற்றும் முன்னோடி முயற்சிகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

அர்சி அளவுக்கு ஒரு சிப்பை கை விரல் போன்றவற்றில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்திக்கொண்டால் மந்திரக்கோல் போல மாயங்களை நிகழ்த்தலாம்.

இவ்வளவு ஏன் தனியே ஏடிஎம் கார்டுகளே தேவைப்படாது.கையில் உள்ள சிப்பையே கார்டாக பயன்படுத்தலாம். அப்படியே ஒருஅரின் பருத்துவ விவரங்களையும் சிப்பிலேமித்து வைக்கலாம்.அவசர நிலையின் போது அந்த சீப்பை ஸ்கேன் செய்தால் போதும் அவரின் மருத்துவ வரலாற்றை தெரிந்து கொண்டு அதற்கேற்ப சிகிச்சை அளிக்கலாம்.

இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன.விஷயம் என்னவென்றால் மனிதனும் இயந்திரமும் நெருங்கி வருகின்றன.

இப்போது பெரும்பாலும் ஆய்வு நிலையிலேயே இருந்தாலும் எதிர்காலத்தில் மனித இயந்திர கலப்பு நடைமுறை முக்கியத்துவம் பெறலாம்.அப்போது ஏற்படக்கூடிய விளைவுகளை பயன்களை ஆய்வு செய்து பார்ப்பது தான் பேராசிரியர் காசனின் நோக்கம்.

கம்ப்யூட்டர் சிப் என்றதும் வைரஸ் இல்லாமல் இருக்குமா?இந்த வைரஸ் மனித சிப்பையும் பாதிக்குமா? இப்படி ஒரு சந்தேகம் காசனுக்கு ஏற்பட்டதன் விளைவாகவே தனது கையில் பொருத்தப்பட்ட சிப்புக்குள் வைரசை ஏற்றிவிட்டார்.பின்னர் அந்த சிப்பை பயன்படுத்திய போது மற்ற கம்ப்யூட்டர் அமைப்புகளும் வைரஸ் பரவியது.

இது காசன் எதிர்பார்த்தது தான். உடலுக்குள் பொருத்தப்படும் சிப் வைரஸால் பாதிக்கப்படால் விபரீதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கருதிய அவர் இதனை நிருபித்தும் காட்டியிருக்கிறார்.

யோசித்துப்பாருங்கள் நாளை யார் வேண்டுமானாலும் கையில் வைரஸை வைத்துக்கொண்டு உலக கம்ப்யூட்டர்களை செயல் இழக்க வைக்கலாம்.தெரியாமலும் இந்த விபரீதம் நிகழலாம்

இவற்றை ஏதோ அறிவியம் புனைகதை என்றும் அலட்சியப்படுத்தமுடியாது.பேஸ்மேக்கர் போன்ற சாதனங்கள் ஏற்கனவே ம்னித உடலுக்குள் நுழைந்தாகி விட்டது.மேலும் பல மருத்துவ பயன்பாடுகள் வர உள்ளன.

ஆக எதிர்காலம் இயந்திரங்களின் அதிசயம் மற்றும் ஆபத்துக்கள் நிரைந்ததாகவே இருக்கிறது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இவர் கம்ப்யூட்டர் வைரஸ் பாய்ந்த மனிதர்

  1. Mohamed

    Arumaiyana pathivu..

    Reply
    1. cybersimman

  2. எதிர்காலம் இயந்திரங்களின் அதிசயம் மற்றும் ஆபத்துக்கள் நிறைந்ததாகவே இருக்கிறது என்பது உண்மைதான்!

    Reply
    1. cybersimman

      நிச்சயமாக.

      Reply
  3. மனிதன் அழிந்து போவதற்கான வழிகளை அவனே கண்டு பிடித்துக் கொண்டிருக்கிறான்.

    Reply
  4. Ithayellam padikkumpothu romba visithirama irukku.pudhumaiyana padhivu

    Reply

Leave a Comment to Idroos Cancel Reply

Your email address will not be published.