இணையமே நீ நலமா?

mozilla-release-internet-health-reportஇணையம் என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல: அது ஒரு பொது வளம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் அதன் ஆரோக்கியம் பற்றி கவலை கொண்டாக வேண்டும். இணையம் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறது? அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை? அவற்றை சரி செய்து இணைய ஆரோக்கியத்தை சீராக்குவது எப்படி? இது போன்ற கேள்விகளையும் பொறுப்புள்ள இணையவாசிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த கேள்விகளை அடிப்படையாக கொண்டு இணைய ஆரோக்கியத்தை அறிய வைப்பதற்கான முயற்சியில் மொசில்லா அமைப்பு இறங்கியுள்ளது. இது தொடர்பாக இணைய ஆரோக்கிய அறிக்கையின் முன்னோட்ட வடிவத்தை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கியத்துவம், தன்மைக்கேற்ப இந்த அறிக்கையும் ஓபன் சோர்ஸ் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதில் அனைவரும் பங்கேற்கலாம்; கருத்து தெரிவிக்கலாம், திருந்த்தலாம், மேம்படுத்தலாம்.
மொசில்லா அமைப்பை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தின் நன்கறியப்பட்ட பிரவுசர்களில் ஒன்றான பயர்பாக்ஸ் பிரவுசரை நிர்வகிக்கும் அறக்கட்டளையாக விளங்கும் மொசில்லா, இணைய சுதந்திரம், செயல்பாடு, தனியுரிமை பாதுகாப்பு தொடர்பான தன்னார்வ செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக அன்மையில் இணைய ஆரோக்கியத்தை அறியும் திட்டத்தை துவக்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக இணைய ஆரோக்கிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை மூலமாக, இணையத்தில் ஆரோக்கியமாக இருக்கும் விஷயங்கள், ஆரோக்கியம் இல்லாமல் இருப்பவை குறித்து இணையவாசிகளுடன் உரையாடலில் ஈடுபட விரும்புவதாக மொசில்லா செயல் இயக்குனர் மார்க் சுர்மன், இது தொடர்பான பதிவில் குறிப்பிட்டுள்ளார். இணையத்தின் எதிர்காலம் பற்றியும் நம் மனதில் கொண்டாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையம் துவக்கத்தில் எல்லோருக்குமானதாக இருந்தது என்றும், யாரும் எந்த கருத்தை வெளியிடக்கூடிய , எந்த செயலிலும் ஈடுபடக்கூடிய இடமாக இருந்தது என்றும், கூறியுள்ள சுர்மன், அதன் பிறகு நம்முடைய கூட்டு படைப்பாற்றல், கண்டுபிடிப்பு மற்றும் சுய வெளிப்பாட்டிற்கான உலகலாவிய மேடையாக உருவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பேஸ்புக் போன்ற ஒரு சில நிறுவனங்கள் தேடல், ஷாப்பிங், உரையாடல் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், வெப்காமிராக்கள் மீது பாட்கள் கொண்டு தாக்குதல் பெரும் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், நம்முடைய அளப்பரிய ஆற்றல் கொண்ட பொது வளமான இணையம் தொடர்ந்து பாதுகாப்பானதாக, நம்பகமானதாக நீடிக்க வாய்ப்புள்ளதா எனும் கேள்வி எழுதுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
நம்முடைய வாழ்க்கையில் இணையம் முழுவதும் சூழந்திருக்கும் நிலையில் இந்த கேள்வி மிகவும் முக்கியமானது என அவர் கருதுகிறார். இணையம் இப்போதைய சுற்றுச்சூழலாக உருவாகி இருப்பதால் அதன் ஆரோக்கியம் குறித்தும் கண்காணித்து கவலைகொண்டாக வேண்டும் என அவர் கூறுகிறார்.
இதற்காக தான் இணையவாசிகள் பங்கேற்போடு இணைய ஆரோக்கிய அறிக்கையை உருவாக்கும் முயற்சியில் மொசில்லா ஈடுபட்டுள்ளது. இணையத்தின் புதுமை, டிஜிட்டல் சமத்தும், மையமில்லா தன்மை, தனியுரிமை- பாதுகாப்பு , இணைய கல்வி ஆகிய ஐந்து அம்சங்களையும் இணைய ஆரோக்கியத்தின் முக்கிய அம்சமாக கருதி இவற்றின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால கவலை குறித்த கருத்துக்களை முன்னோட்ட அறிக்கையில் மொசில்லா வெளியிட்டுள்ளது.
இணையம் என்பது எப்போதுமே எல்லோருக்குமான திறந்த மேடையாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இணையத்தில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு இருக்க வேண்டும், அனைவரும் தங்கள் வாழ்க்கையை, சமூகத்தை மேம்படுத்திக்கொள்ள இணையத்தை பயன்பட்டுத்திக்கொள்ளும் நிலை இருக்க வேண்டும் என்பது டிஜிட்டல் சமத்துவத்தின் முக்கிய அம்சமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 கோடி பேர் பயன்படுத்துவது, விக்கிபீடியா போன்ற திட்டங்கள் இதற்கு உதாரணமாக இருந்தாலும், இணையம் இன்னமும் முழுவதும் பரவலாகமால் இருப்பதும், ஏற்கனவே உள்ள வேறுபாடுகளை அதிகரிக்க கூடிய நிலையில் இருப்பதும் ஆரோக்கியமில்லா அம்சங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இணைய சீண்டுதல்- தாக்குதல் அதிகரித்து வருவதும் , பெண்கள் இதற்கு அதிகம் இலக்காவதும் முக்கிய பிரச்சனையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டு சமூக முயற்சி மற்றும் தொழில்நுட்ப முயற்சி ஆகியவற்றை கொண்டு இந்த பிரச்சனையை கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் தற்போதைய நிலை, பிரச்சனை அதற்கான தீர்வு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இணைய கல்வி பகுதியில், டிஜிட்டல் உலகில் கருத்துக்களை தெரிவித்து பங்கேற்கும் வாய்ப்பும் ஆற்றலும் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ஒரு முன்னோட்ட வடிவம் தான். இதை படித்துப்பார்த்து இணையவாசிகள் தங்கள் கருத்துக்களையும் திருத்தங்களையும் தெரிவிக்கலாம். அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்கள் குறித்தும் பங்களிப்பை செலுத்தலாம்.
சுற்றுச்சூழலை காக்க உருவான இயக்கம் போலவே இணையத்தின் ஆரோக்கியத்தை காப்பதற்கான ஒரு இயக்கம் உருவாக வேண்டும் என்பதும் இந்த முயற்சியின் அடிப்படை எண்ணமாக இருக்கிறது. நீங்களும் இதில் பங்கேற்க விரும்பினால்: https://internethealthreport.org/v01/about/

mozilla-release-internet-health-reportஇணையம் என்பது வெறும் தொழில்நுட்பம் அல்ல: அது ஒரு பொது வளம் என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ஆம் எனில் நீங்கள் அதன் ஆரோக்கியம் பற்றி கவலை கொண்டாக வேண்டும். இணையம் எந்த அளவு ஆரோக்கியமாக இருக்கிறது? அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள் எவை? அவற்றை சரி செய்து இணைய ஆரோக்கியத்தை சீராக்குவது எப்படி? இது போன்ற கேள்விகளையும் பொறுப்புள்ள இணையவாசிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த கேள்விகளை அடிப்படையாக கொண்டு இணைய ஆரோக்கியத்தை அறிய வைப்பதற்கான முயற்சியில் மொசில்லா அமைப்பு இறங்கியுள்ளது. இது தொடர்பாக இணைய ஆரோக்கிய அறிக்கையின் முன்னோட்ட வடிவத்தை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த முயற்சியின் முக்கியத்துவம், தன்மைக்கேற்ப இந்த அறிக்கையும் ஓபன் சோர்ஸ் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அதில் அனைவரும் பங்கேற்கலாம்; கருத்து தெரிவிக்கலாம், திருந்த்தலாம், மேம்படுத்தலாம்.
மொசில்லா அமைப்பை நீங்கள் அறிந்திருக்கலாம். இணையத்தின் நன்கறியப்பட்ட பிரவுசர்களில் ஒன்றான பயர்பாக்ஸ் பிரவுசரை நிர்வகிக்கும் அறக்கட்டளையாக விளங்கும் மொசில்லா, இணைய சுதந்திரம், செயல்பாடு, தனியுரிமை பாதுகாப்பு தொடர்பான தன்னார்வ செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக அன்மையில் இணைய ஆரோக்கியத்தை அறியும் திட்டத்தை துவக்கியுள்ளது. இதன் முதல் கட்டமாக இணைய ஆரோக்கிய அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கை மூலமாக, இணையத்தில் ஆரோக்கியமாக இருக்கும் விஷயங்கள், ஆரோக்கியம் இல்லாமல் இருப்பவை குறித்து இணையவாசிகளுடன் உரையாடலில் ஈடுபட விரும்புவதாக மொசில்லா செயல் இயக்குனர் மார்க் சுர்மன், இது தொடர்பான பதிவில் குறிப்பிட்டுள்ளார். இணையத்தின் எதிர்காலம் பற்றியும் நம் மனதில் கொண்டாக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இணையம் துவக்கத்தில் எல்லோருக்குமானதாக இருந்தது என்றும், யாரும் எந்த கருத்தை வெளியிடக்கூடிய , எந்த செயலிலும் ஈடுபடக்கூடிய இடமாக இருந்தது என்றும், கூறியுள்ள சுர்மன், அதன் பிறகு நம்முடைய கூட்டு படைப்பாற்றல், கண்டுபிடிப்பு மற்றும் சுய வெளிப்பாட்டிற்கான உலகலாவிய மேடையாக உருவாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பேஸ்புக் போன்ற ஒரு சில நிறுவனங்கள் தேடல், ஷாப்பிங், உரையாடல் போன்றவற்றில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், வெப்காமிராக்கள் மீது பாட்கள் கொண்டு தாக்குதல் பெரும் தாக்குதல் நடத்தப்படும் நிலையில், நம்முடைய அளப்பரிய ஆற்றல் கொண்ட பொது வளமான இணையம் தொடர்ந்து பாதுகாப்பானதாக, நம்பகமானதாக நீடிக்க வாய்ப்புள்ளதா எனும் கேள்வி எழுதுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.
நம்முடைய வாழ்க்கையில் இணையம் முழுவதும் சூழந்திருக்கும் நிலையில் இந்த கேள்வி மிகவும் முக்கியமானது என அவர் கருதுகிறார். இணையம் இப்போதைய சுற்றுச்சூழலாக உருவாகி இருப்பதால் அதன் ஆரோக்கியம் குறித்தும் கண்காணித்து கவலைகொண்டாக வேண்டும் என அவர் கூறுகிறார்.
இதற்காக தான் இணையவாசிகள் பங்கேற்போடு இணைய ஆரோக்கிய அறிக்கையை உருவாக்கும் முயற்சியில் மொசில்லா ஈடுபட்டுள்ளது. இணையத்தின் புதுமை, டிஜிட்டல் சமத்தும், மையமில்லா தன்மை, தனியுரிமை- பாதுகாப்பு , இணைய கல்வி ஆகிய ஐந்து அம்சங்களையும் இணைய ஆரோக்கியத்தின் முக்கிய அம்சமாக கருதி இவற்றின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால கவலை குறித்த கருத்துக்களை முன்னோட்ட அறிக்கையில் மொசில்லா வெளியிட்டுள்ளது.
இணையம் என்பது எப்போதுமே எல்லோருக்குமான திறந்த மேடையாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது. இணையத்தில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு இருக்க வேண்டும், அனைவரும் தங்கள் வாழ்க்கையை, சமூகத்தை மேம்படுத்திக்கொள்ள இணையத்தை பயன்பட்டுத்திக்கொள்ளும் நிலை இருக்க வேண்டும் என்பது டிஜிட்டல் சமத்துவத்தின் முக்கிய அம்சமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 கோடி பேர் பயன்படுத்துவது, விக்கிபீடியா போன்ற திட்டங்கள் இதற்கு உதாரணமாக இருந்தாலும், இணையம் இன்னமும் முழுவதும் பரவலாகமால் இருப்பதும், ஏற்கனவே உள்ள வேறுபாடுகளை அதிகரிக்க கூடிய நிலையில் இருப்பதும் ஆரோக்கியமில்லா அம்சங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இணைய சீண்டுதல்- தாக்குதல் அதிகரித்து வருவதும் , பெண்கள் இதற்கு அதிகம் இலக்காவதும் முக்கிய பிரச்சனையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கூட்டு சமூக முயற்சி மற்றும் தொழில்நுட்ப முயற்சி ஆகியவற்றை கொண்டு இந்த பிரச்சனையை கட்டுப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ஒவ்வொரு அம்சம் தொடர்பாகவும் தற்போதைய நிலை, பிரச்சனை அதற்கான தீர்வு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இணைய கல்வி பகுதியில், டிஜிட்டல் உலகில் கருத்துக்களை தெரிவித்து பங்கேற்கும் வாய்ப்பும் ஆற்றலும் எல்லோருக்கும் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை ஒரு முன்னோட்ட வடிவம் தான். இதை படித்துப்பார்த்து இணையவாசிகள் தங்கள் கருத்துக்களையும் திருத்தங்களையும் தெரிவிக்கலாம். அறிக்கையில் இடம்பெற வேண்டிய கருத்துக்கள் குறித்தும் பங்களிப்பை செலுத்தலாம்.
சுற்றுச்சூழலை காக்க உருவான இயக்கம் போலவே இணையத்தின் ஆரோக்கியத்தை காப்பதற்கான ஒரு இயக்கம் உருவாக வேண்டும் என்பதும் இந்த முயற்சியின் அடிப்படை எண்ணமாக இருக்கிறது. நீங்களும் இதில் பங்கேற்க விரும்பினால்: https://internethealthreport.org/v01/about/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.