இனி ரசிகர்கள் ராஜ்ஜியம்

இந்தியா இன்னொரு அணியோடு  கிரிக்கெட் போட்டியில் ஆடிக் கொண்டிருக்கிறது. போட்டியின் பரபரப்பான கட்டம். ஆடுகளத்தின் நடுவே இருக்கும் அந்த நட்சத்திர ஆட்டக்காரர் அடுத்த பந்தை எப்படி ஆடப்போகிறார் என்பது அவருக்கே தெரியாது.  அதை அவர்  பவுண்டரிக்கு விளாசப்போகிறாரா, அல்லது சிக்சர் அடிக்கப்போகிறாரா, இல்லை அருகே தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்கப்போகிறாரா என்பதை யாரோ தீர்மானிக்கப்போகிறார்கள்.

.
அடுத்த அரை மணி நேரத்திற்கு அவர் நின்று நிதானமாக ஆட வேண்டுமா அல்லது அடித்து நொறுக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதும் அவரது கையில் இல்லை.  அதையும் வேறு யாரோதான் தீர்மானிக்கப்போகிறார்கள்.

அந்த யாரோ, வேறு யாருமல்ல, சாட்சாத் ரசிகர்களேதான்.  ஒவ்வொரு பந்துக்கும் அல்லது ஒவ்வொரு முக்கியமான கட்டத்துக்கும் முன்பாக அவர்கள், அணியின் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானித்து சொல்லப்போகிறார்கள்.  அதைத்தான் வீரர்கள் பின்பற்ற வேண்டும்.

இந்த முடிவை ரசிகர்கள் தன்னிச்சையாக எடுக்க முடியாது. அவர்களுக்குள் விவாதித்து, வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்தாக வேண்டும். ஏகமனதாக கருதப்படும் அந்த முடிவை வீரர்கள் செயல்படுத்த வேண்டும்.

இப்படியொரு காட்சியை விவரித்தால் நம்ப முடியாததாக தோன்றலாம்.  ஆனால் இன்டெர்நெட் புண்ணியத்தால் இது சாத்தியமாக வாய்ப்புள்ளது. அதற்கான முதல்படி ஏற்கனவே  எடுத்துவைத்தாகிவிட்டது.பிரிட்டனில் உள்ள கால்பந்து குழு ஒன்றை ரசிகர்களே  விலைக்கு வாங்கியிருக்கின்றனர்.

இன்டெர்நெட் மூலம் விவாதம் நடத்தி, அந்த குழுவின் செயல்பாடுகளை  வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் உத்தேசத்தோடு, அதனை  இன்டெர்நெட் மூலமே விலைக்கு வாங்கியிருக்கின்றனர். இன்டெர்நெட் மூலம் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்கு கிடைத்த  பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

இன்டெர்நெட் மூலம் ரசிகர்களே ஒன்றிணைந்து தங்கள் கையில் கூடுதல் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை எடுத்து கொள்வது  இப்போது வேகமாக பிரபலமாகி வருகிறது.
இந்த பின்னணியில், பிரிட்டனில் உள்ள கால்பந்து குழு ஒன்றை ரசிகர்கள் சார்பில்  விலைக்கு வாங்குவதற்காக  மைஃபுட்பால் கிளப் என்னும் பெயரில் இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த தளத்தின் நோக்கம் குறிப்பிடப்பட்டு, ரசிகர்களிடமிருந்து பங்குத் தொகை கோரப்பட்டது. குறிப்பிட்ட அளவிலான  தொகை சேர்ந்ததும் கால்பந்து குழுவை விலைக்கு வாங்கி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. எந்த குழுவை வாங்குவது என ரசிகர்களே வாக்களித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதே போல குழுவின் ஒவ்வொரு செயலையும் ரசிகர்களே தீர்மானிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

வீரர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்கப்பட வேண்டும், எந்த வீரரை அணியில் சேர்க்க வேண்டும், அணியின் வியூகம், அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும் போன்ற விஷயங்களையெல்லாம் இந்த இணைய தளம் மூலம் ரசிகர்களே விவாதித்து முடிவெடுப்பார்கள்.

வில் புரூக்ஸ் என்னும் பத்திரிகையாளர் மனதில் உதித்த இந்த எண்ணத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்த கால்பந்து ரசிகர்களின் ஆதரவு கிடைத்து, எதிர்பார்த்ததை விட அதிக நிதி சேர்ந்து விட்டது. இதன் பயனாக பிரிட்டனில் உள்ள  எப்ஸ்பிலீட் யுனைடெட் என்னும் அணியை  இந்த தளம் விலைக்கு வாங்கியிருக்கிறது. இந்த  குழுவில் 51 சதவிகித பங்குகளை  ரசிகர்கள் கட்டுப்படுத்த உள்ளனர்.

இந்த குழுவின் இயக்குனர் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முற்றிலும் புதிய விஷயம் என்று இதனை அவர் வர்ணித்துள்ளார். ரசிகர்களால் ஒரு குழு வாங்கப்பட்டு நடத்த இருப்பது புதியபாதையாக அமையலாம் என்று அவர் கூறியிருக்கிறார். இதே போல வேறு கால்பந்து குழுக்களும்  ரசிகர்களால் வாங்கப்படுமா? வாங்கப்பட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்றெல்லாம்  விவாதம் நடைபெற்று வருகிறது.

ரசிகர்களும் தங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியால் மகிழ்ந்து போயிருக்கின்றனர்.
அடுத்த போட்டி தொடங்குவதற்கு முன் அவர்கள் தங்கள் அணிக்கான வியூகங்களை வகுத்துத்தர உள்ளனர்.

வீரர்கள் தேர்வு, பயிற்சியாளர் கடைப்பிடிக்க வேண்டிய உத்தி ஆகியவைகளை அவர்கள் விவாதித்து, முன்வைக்க உள்ளனர். அதோடு போட்டியை இன்டெர்நெட் மூலம் நேரடியாக  அவர்கள் கண்டு ரசிக்க முடியும். (மைஃபுட்பால் கிளப் தளத்தின் மூலம்தான்).
அதோடு போட்டி முடிந்த பிறகு வீரர்கள் அவர்களோடு இமெயில் மூலம் உரையாடுவார்கள்.
போட்டி குறித்து வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையிலான விவாதமாக இது அமையும்.
இப்போதைக்கு போட்டியின் போது ரசிகர்கள் குறுக்கிட அனுமதிக்கப்படவில்லை. இந்த முறை வெற்றிபெற்றால் நாளை அதுவும் சாத்தியமாகும். அப்போது,  விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் விதமே மாறிவிடலாம்.  எப்படியும் சூதாட்ட தரகர்கள் மற்றும் வர்த்தக சக்திகள்  வீரர்கள் இயக்குவதை விட, ரசிகர்களே ஆட்டிவைப்பது மேலானதுதானே!

இந்தியா இன்னொரு அணியோடு  கிரிக்கெட் போட்டியில் ஆடிக் கொண்டிருக்கிறது. போட்டியின் பரபரப்பான கட்டம். ஆடுகளத்தின் நடுவே இருக்கும் அந்த நட்சத்திர ஆட்டக்காரர் அடுத்த பந்தை எப்படி ஆடப்போகிறார் என்பது அவருக்கே தெரியாது.  அதை அவர்  பவுண்டரிக்கு விளாசப்போகிறாரா, அல்லது சிக்சர் அடிக்கப்போகிறாரா, இல்லை அருகே தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்கப்போகிறாரா என்பதை யாரோ தீர்மானிக்கப்போகிறார்கள்.

.
அடுத்த அரை மணி நேரத்திற்கு அவர் நின்று நிதானமாக ஆட வேண்டுமா அல்லது அடித்து நொறுக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதும் அவரது கையில் இல்லை.  அதையும் வேறு யாரோதான் தீர்மானிக்கப்போகிறார்கள்.

அந்த யாரோ, வேறு யாருமல்ல, சாட்சாத் ரசிகர்களேதான்.  ஒவ்வொரு பந்துக்கும் அல்லது ஒவ்வொரு முக்கியமான கட்டத்துக்கும் முன்பாக அவர்கள், அணியின் அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானித்து சொல்லப்போகிறார்கள்.  அதைத்தான் வீரர்கள் பின்பற்ற வேண்டும்.

இந்த முடிவை ரசிகர்கள் தன்னிச்சையாக எடுக்க முடியாது. அவர்களுக்குள் விவாதித்து, வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்தாக வேண்டும். ஏகமனதாக கருதப்படும் அந்த முடிவை வீரர்கள் செயல்படுத்த வேண்டும்.

இப்படியொரு காட்சியை விவரித்தால் நம்ப முடியாததாக தோன்றலாம்.  ஆனால் இன்டெர்நெட் புண்ணியத்தால் இது சாத்தியமாக வாய்ப்புள்ளது. அதற்கான முதல்படி ஏற்கனவே  எடுத்துவைத்தாகிவிட்டது.பிரிட்டனில் உள்ள கால்பந்து குழு ஒன்றை ரசிகர்களே  விலைக்கு வாங்கியிருக்கின்றனர்.

இன்டெர்நெட் மூலம் விவாதம் நடத்தி, அந்த குழுவின் செயல்பாடுகளை  வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கும் உத்தேசத்தோடு, அதனை  இன்டெர்நெட் மூலமே விலைக்கு வாங்கியிருக்கின்றனர். இன்டெர்நெட் மூலம் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்கு கிடைத்த  பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.

இன்டெர்நெட் மூலம் ரசிகர்களே ஒன்றிணைந்து தங்கள் கையில் கூடுதல் அதிகாரம் மற்றும் பொறுப்புகளை எடுத்து கொள்வது  இப்போது வேகமாக பிரபலமாகி வருகிறது.
இந்த பின்னணியில், பிரிட்டனில் உள்ள கால்பந்து குழு ஒன்றை ரசிகர்கள் சார்பில்  விலைக்கு வாங்குவதற்காக  மைஃபுட்பால் கிளப் என்னும் பெயரில் இணைய தளம் ஒன்று உருவாக்கப்பட்டது.

இந்த தளத்தின் நோக்கம் குறிப்பிடப்பட்டு, ரசிகர்களிடமிருந்து பங்குத் தொகை கோரப்பட்டது. குறிப்பிட்ட அளவிலான  தொகை சேர்ந்ததும் கால்பந்து குழுவை விலைக்கு வாங்கி நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. எந்த குழுவை வாங்குவது என ரசிகர்களே வாக்களித்து முடிவு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதே போல குழுவின் ஒவ்வொரு செயலையும் ரசிகர்களே தீர்மானிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

வீரர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்கப்பட வேண்டும், எந்த வீரரை அணியில் சேர்க்க வேண்டும், அணியின் வியூகம், அணுகுமுறை என்னவாக இருக்க வேண்டும் போன்ற விஷயங்களையெல்லாம் இந்த இணைய தளம் மூலம் ரசிகர்களே விவாதித்து முடிவெடுப்பார்கள்.

வில் புரூக்ஸ் என்னும் பத்திரிகையாளர் மனதில் உதித்த இந்த எண்ணத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்த கால்பந்து ரசிகர்களின் ஆதரவு கிடைத்து, எதிர்பார்த்ததை விட அதிக நிதி சேர்ந்து விட்டது. இதன் பயனாக பிரிட்டனில் உள்ள  எப்ஸ்பிலீட் யுனைடெட் என்னும் அணியை  இந்த தளம் விலைக்கு வாங்கியிருக்கிறது. இந்த  குழுவில் 51 சதவிகித பங்குகளை  ரசிகர்கள் கட்டுப்படுத்த உள்ளனர்.

இந்த குழுவின் இயக்குனர் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். முற்றிலும் புதிய விஷயம் என்று இதனை அவர் வர்ணித்துள்ளார். ரசிகர்களால் ஒரு குழு வாங்கப்பட்டு நடத்த இருப்பது புதியபாதையாக அமையலாம் என்று அவர் கூறியிருக்கிறார். இதே போல வேறு கால்பந்து குழுக்களும்  ரசிகர்களால் வாங்கப்படுமா? வாங்கப்பட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்றெல்லாம்  விவாதம் நடைபெற்று வருகிறது.

ரசிகர்களும் தங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியால் மகிழ்ந்து போயிருக்கின்றனர்.
அடுத்த போட்டி தொடங்குவதற்கு முன் அவர்கள் தங்கள் அணிக்கான வியூகங்களை வகுத்துத்தர உள்ளனர்.

வீரர்கள் தேர்வு, பயிற்சியாளர் கடைப்பிடிக்க வேண்டிய உத்தி ஆகியவைகளை அவர்கள் விவாதித்து, முன்வைக்க உள்ளனர். அதோடு போட்டியை இன்டெர்நெட் மூலம் நேரடியாக  அவர்கள் கண்டு ரசிக்க முடியும். (மைஃபுட்பால் கிளப் தளத்தின் மூலம்தான்).
அதோடு போட்டி முடிந்த பிறகு வீரர்கள் அவர்களோடு இமெயில் மூலம் உரையாடுவார்கள்.
போட்டி குறித்து வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையிலான விவாதமாக இது அமையும்.
இப்போதைக்கு போட்டியின் போது ரசிகர்கள் குறுக்கிட அனுமதிக்கப்படவில்லை. இந்த முறை வெற்றிபெற்றால் நாளை அதுவும் சாத்தியமாகும். அப்போது,  விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும் விதமே மாறிவிடலாம்.  எப்படியும் சூதாட்ட தரகர்கள் மற்றும் வர்த்தக சக்திகள்  வீரர்கள் இயக்குவதை விட, ரசிகர்களே ஆட்டிவைப்பது மேலானதுதானே!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இனி ரசிகர்கள் ராஜ்ஜியம்

  1. சக் திவேல்,திருக்கொடிமாடச்செங்குன்றம்

Leave a Comment

Your email address will not be published.