ஸ்பேமை விரும்பும் பூமியிலே…

சந்தேகப்படும் படியான  இமெயில் வந்து சேர்ந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதனை டெலிட் செய்து விடுங்கள் என்பதே இன்டெர்நெட் உலகில் அழுத்தம், திருத்தமாக நிபுணர்கள் வழங்கும் ஆலோசனையாக இருக்கிறது.

.
இந்த ஆலோசனைக்கு  செவி சாய்க்க மறுத்தால், அதன் பிறகு மாட்டிக் கொண்டு விழிக்க நேரிடும். பலர் இப்படி கையை சுட்டுக் கொண்ட பிறகு இமெயில் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க கற்று கொண்டுள்ளனர்.

அதாவது  அழைப்பு இல்லாமல் வந்து சேரும் இமெயில்கள் என்று பொருள். இன்டெர்நெட் உலகில் இத்தகைய இமெயில்கள் ஸ்பேம் என்று  மிகுந்த வெறுப்போடு குறிப்பிடப்படுகின்றன.

அழையா விருந்தாளியாக  வந்து சேரும் கதைக்கு உதவாத  இமெயில் செய்திகள் இப்படி ஸ்பேம் என்று குறிப்பிடப்படுகின்றன.  ஸ்பேம்  எனும் வார்த்தைக்குள் அடங்கக்கூடிய இமெயில்கள் எண்ணிலடங்கா ரகங்களை சேர்ந்தவையாக இருக்கின்றன.
ஆரம்ப காலத்தில்  விளம்பர வாசகங்களை தாங்கி வந்த இத்தகைய  மெயில்கள், வெறும் தொல்லையாக மட்டுமே கருதப்பட்டன.

வயக்ராவை வாங்குங்கள், ஒரே நாளில் கோடீஸ்வரராவதற்கான வழி, அதிர்ஷ்டம் அழைக்கிறது, உடல் இளைக்க  எளிய முறை என்பது போன்ற விஷயங்களை தாங்கி வந்த  இந்த மெயில்கள், அதிகபட்சமாக  இணையவாசிகளின் நேரத்தை மட்டுமே வீணடித்து வந்தன.

பெரும்பாலும்  பலர் இந்த மெயில்களை அலட்சியம் செய்து விடுவது உண்டு.  ஆயிரத்தில் ஒருவர்,  ஆர்வத்தின் காரணமாக இதனை கிளிக் செய்தால், தொடர்ந்து  வீண் மெயில்களின் தாக்குதலுக்கு அவர் இலக்காக வேண்டியிருக்கும்.

இதெல்லாம் தொடக்க கால அனுபவங்கள். ஸ்பேம் பெருமை பரவ பரவ இணையவாசிகள் விவரமானவர்களாகி இத்தகைய மெயில்களை பார்த்தாலே  யோசிக்காமல் டெலிட் பட்டனை அழுத்த கற்று கொண்டுவிட்டனர்.

ஆனால் போகப்போக ஸ்பேம் மெயில்கள் ஆபத்தான வடிவில் வந்து சேரத் தொடங்கின. இணையவாசி களுக்கு  எப்படியாவது ஆசை வார்த்தை காட்டி அவர்களுக்கு மோசடி வலைவிரிக்கும்  முயற்சிகளாக இவை அமைந்தன.  இதில் பலர் ஏமாந்து தங்களது பணத்தை பறிகொடுத்திருக் கின்றனர். 

இந்த கட்டத்தில் ஸ்பேம் மெயில்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. இவை தொல்லை மட்டுமில்லை, ஆபத்தும் கூட என்று எச்சரிக்கப்பட்டது.

இதுவரை ஸ்பேம் மெயில்களை டெலிட் செய்வதால்  நேரம் இழப்பு மட்டுமே ஏற்பட்டு வந்தது.  உருப்படியான  இமெயில்களை  தேடிப்படிப்பதற்கு முன்பாக பயனில்லா இமெயில்களை  எல்லாம்  டெலிட் செய்வது என்பதே முக்கிய வேலையாக அமைந்து, இணையவாசிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த அனுபவமே மேல் என்று சொல்லக்கூடிய வகையில் இணையவாசிகளை  ஏமாற்றி  மோசடி செய்யும்  விதவிதமான ஸ்பேம்கள், இமெயில் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பதே நல்லது என்னும் எண்ணத்தைஏற்படுத்தி உள்ளன.
இப்போது ஸ்பேம் விஷயத்தில் அநேகமாக எல்லோருமே உஷாராகி விட்டார்கள் என்று சொல்லலாம்.  தெரியாதவர்களிடமிருந்து வந்திருக்கும் இமெயில்கள் என்றால் உடனே டெலிட் செய்யும் பழக்கம்  பலருக்கு வந்து விட்டது.

இந்நிலையில் ஸ்பேம் மெயில்களை  பார்த்தவுடன் டெலிட் செய்யாமல் அவற்றை ஆர்வத்தோடு பிரித்து, படித்து தொடர்பு கொள்ளும் வேலையை  இணையவாசிகள் பலர் செய்துள்ளனர்.

அந்த பலரை அடிமுட்டாள்கள் என்று நினைக்கவேண்டியதில்லை. அவர்கள் அனைவரும் இவற்றால் மோச மான  விளைவு ஏற்படலாம் என்பதை  நன்கு தெரிந்த நிலை யிலேயே ஸ்பேம் மெயில்களுக்கு பதிலளித்திருக்கின்றனர்.

ஸ்பேம் மெயில்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை  தெரிந்து கொள்வதற்காக வைரஸ் தடுப்பில்  புகழ் பெற்ற மெக் அஃபி என்னும் நிறுவனம் புதுமையான பரிசோதனை ஒன்றை நடத்த தீர்மானித்தது. அதன்படி  ஸ்பேம் மெயில்களை வரவேற்று  பதிலளிக்கும் போது என்னாகும் என  அறிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சூப்பர் ஸ்பேம் மீ என்னும் பெயரில் இதற்காக ஒரு திட்டம் தயார் செய்யப்பட்டு 50 இணையவாசிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தான் ஸ்பேம் மெயில்களுக்கு விரும்பி பதிலளித்திருக்கின்றனர்.
இதனை ஒரு விஷப்பரீட்சை என்று கூட சொல்லலாம். ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த

பரிசோதனையில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிய வந்துள்ளன.
ஸ்பேம் மெயிலுக்கு பதிலளித்தால் நாளென்றுக்கு 70 மெயில்கள் வரை வந்து சேர்வதாக தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல்  இப்படி தொடர்பு கொள்பவர்கள் இணையவாசிகளின்  கண்களில் மண்ணை தூவிவிடக்கூடிய அளவுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் வாசகங்களை எழுதி அனுப்புவதும் தெரிய வந்துள்ளது.

இணையவாசிகளுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் ஏற்படாத வழிமுறைகளை இவர்கள் புதிது புதிதாக கண்டறிந்து வருவதும் இந்த சோதனையின் மூலம்  நிபுணர்களுக்கு  தெரிய வந்துள்ளது.

இதுவரை ஆங்கிலத்தையே பிரதான மொழியாக பயன்படுத்தி வந்தநிலை மாறி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாட்டு மொழிகளையும் பயன் படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
காலப்போக்கில் மேலும் பல மொழிகளும் சேர்ந்து கொள்ளலாம் என அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக ஸ்பேம் தடுப்பில் புதிய அணுகுமுறை வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது.

ஸ்பேம் பெறுபவர்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும், இத்தாலி 3வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முன்னிலை பெறாதது கண்டு பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

 

சந்தேகப்படும் படியான  இமெயில் வந்து சேர்ந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அதனை டெலிட் செய்து விடுங்கள் என்பதே இன்டெர்நெட் உலகில் அழுத்தம், திருத்தமாக நிபுணர்கள் வழங்கும் ஆலோசனையாக இருக்கிறது.

.
இந்த ஆலோசனைக்கு  செவி சாய்க்க மறுத்தால், அதன் பிறகு மாட்டிக் கொண்டு விழிக்க நேரிடும். பலர் இப்படி கையை சுட்டுக் கொண்ட பிறகு இமெயில் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க கற்று கொண்டுள்ளனர்.

அதாவது  அழைப்பு இல்லாமல் வந்து சேரும் இமெயில்கள் என்று பொருள். இன்டெர்நெட் உலகில் இத்தகைய இமெயில்கள் ஸ்பேம் என்று  மிகுந்த வெறுப்போடு குறிப்பிடப்படுகின்றன.

அழையா விருந்தாளியாக  வந்து சேரும் கதைக்கு உதவாத  இமெயில் செய்திகள் இப்படி ஸ்பேம் என்று குறிப்பிடப்படுகின்றன.  ஸ்பேம்  எனும் வார்த்தைக்குள் அடங்கக்கூடிய இமெயில்கள் எண்ணிலடங்கா ரகங்களை சேர்ந்தவையாக இருக்கின்றன.
ஆரம்ப காலத்தில்  விளம்பர வாசகங்களை தாங்கி வந்த இத்தகைய  மெயில்கள், வெறும் தொல்லையாக மட்டுமே கருதப்பட்டன.

வயக்ராவை வாங்குங்கள், ஒரே நாளில் கோடீஸ்வரராவதற்கான வழி, அதிர்ஷ்டம் அழைக்கிறது, உடல் இளைக்க  எளிய முறை என்பது போன்ற விஷயங்களை தாங்கி வந்த  இந்த மெயில்கள், அதிகபட்சமாக  இணையவாசிகளின் நேரத்தை மட்டுமே வீணடித்து வந்தன.

பெரும்பாலும்  பலர் இந்த மெயில்களை அலட்சியம் செய்து விடுவது உண்டு.  ஆயிரத்தில் ஒருவர்,  ஆர்வத்தின் காரணமாக இதனை கிளிக் செய்தால், தொடர்ந்து  வீண் மெயில்களின் தாக்குதலுக்கு அவர் இலக்காக வேண்டியிருக்கும்.

இதெல்லாம் தொடக்க கால அனுபவங்கள். ஸ்பேம் பெருமை பரவ பரவ இணையவாசிகள் விவரமானவர்களாகி இத்தகைய மெயில்களை பார்த்தாலே  யோசிக்காமல் டெலிட் பட்டனை அழுத்த கற்று கொண்டுவிட்டனர்.

ஆனால் போகப்போக ஸ்பேம் மெயில்கள் ஆபத்தான வடிவில் வந்து சேரத் தொடங்கின. இணையவாசி களுக்கு  எப்படியாவது ஆசை வார்த்தை காட்டி அவர்களுக்கு மோசடி வலைவிரிக்கும்  முயற்சிகளாக இவை அமைந்தன.  இதில் பலர் ஏமாந்து தங்களது பணத்தை பறிகொடுத்திருக் கின்றனர். 

இந்த கட்டத்தில் ஸ்பேம் மெயில்களிடம் மிகுந்த எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. இவை தொல்லை மட்டுமில்லை, ஆபத்தும் கூட என்று எச்சரிக்கப்பட்டது.

இதுவரை ஸ்பேம் மெயில்களை டெலிட் செய்வதால்  நேரம் இழப்பு மட்டுமே ஏற்பட்டு வந்தது.  உருப்படியான  இமெயில்களை  தேடிப்படிப்பதற்கு முன்பாக பயனில்லா இமெயில்களை  எல்லாம்  டெலிட் செய்வது என்பதே முக்கிய வேலையாக அமைந்து, இணையவாசிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த அனுபவமே மேல் என்று சொல்லக்கூடிய வகையில் இணையவாசிகளை  ஏமாற்றி  மோசடி செய்யும்  விதவிதமான ஸ்பேம்கள், இமெயில் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருப்பதே நல்லது என்னும் எண்ணத்தைஏற்படுத்தி உள்ளன.
இப்போது ஸ்பேம் விஷயத்தில் அநேகமாக எல்லோருமே உஷாராகி விட்டார்கள் என்று சொல்லலாம்.  தெரியாதவர்களிடமிருந்து வந்திருக்கும் இமெயில்கள் என்றால் உடனே டெலிட் செய்யும் பழக்கம்  பலருக்கு வந்து விட்டது.

இந்நிலையில் ஸ்பேம் மெயில்களை  பார்த்தவுடன் டெலிட் செய்யாமல் அவற்றை ஆர்வத்தோடு பிரித்து, படித்து தொடர்பு கொள்ளும் வேலையை  இணையவாசிகள் பலர் செய்துள்ளனர்.

அந்த பலரை அடிமுட்டாள்கள் என்று நினைக்கவேண்டியதில்லை. அவர்கள் அனைவரும் இவற்றால் மோச மான  விளைவு ஏற்படலாம் என்பதை  நன்கு தெரிந்த நிலை யிலேயே ஸ்பேம் மெயில்களுக்கு பதிலளித்திருக்கின்றனர்.

ஸ்பேம் மெயில்களால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை  தெரிந்து கொள்வதற்காக வைரஸ் தடுப்பில்  புகழ் பெற்ற மெக் அஃபி என்னும் நிறுவனம் புதுமையான பரிசோதனை ஒன்றை நடத்த தீர்மானித்தது. அதன்படி  ஸ்பேம் மெயில்களை வரவேற்று  பதிலளிக்கும் போது என்னாகும் என  அறிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சூப்பர் ஸ்பேம் மீ என்னும் பெயரில் இதற்காக ஒரு திட்டம் தயார் செய்யப்பட்டு 50 இணையவாசிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் தான் ஸ்பேம் மெயில்களுக்கு விரும்பி பதிலளித்திருக்கின்றனர்.
இதனை ஒரு விஷப்பரீட்சை என்று கூட சொல்லலாம். ஒரு மாத காலம் நடைபெற்ற இந்த

பரிசோதனையில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிய வந்துள்ளன.
ஸ்பேம் மெயிலுக்கு பதிலளித்தால் நாளென்றுக்கு 70 மெயில்கள் வரை வந்து சேர்வதாக தெரிய வந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல்  இப்படி தொடர்பு கொள்பவர்கள் இணையவாசிகளின்  கண்களில் மண்ணை தூவிவிடக்கூடிய அளவுக்கு மிகவும் புத்திசாலித்தனமான முறையில் வாசகங்களை எழுதி அனுப்புவதும் தெரிய வந்துள்ளது.

இணையவாசிகளுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் ஏற்படாத வழிமுறைகளை இவர்கள் புதிது புதிதாக கண்டறிந்து வருவதும் இந்த சோதனையின் மூலம்  நிபுணர்களுக்கு  தெரிய வந்துள்ளது.

இதுவரை ஆங்கிலத்தையே பிரதான மொழியாக பயன்படுத்தி வந்தநிலை மாறி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாட்டு மொழிகளையும் பயன் படுத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
காலப்போக்கில் மேலும் பல மொழிகளும் சேர்ந்து கொள்ளலாம் என அஞ்சப்படுகிறது.
இதன் காரணமாக ஸ்பேம் தடுப்பில் புதிய அணுகுமுறை வேண்டும் என்ற எண்ணமும் ஏற்பட்டிருக்கிறது.

ஸ்பேம் பெறுபவர்கள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் 2வது இடத்திலும், இத்தாலி 3வது இடத்திலும் உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முன்னிலை பெறாதது கண்டு பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.