சைக்கிள் மீது லேப்டாப்

லேப்டாப் கம்ப்யூட்டர் என்றதும் சைக்கிள்களை நினைத்து பார்க்க தோன்றாது, கார்களைத் தான் நினைத்து பார்க்க தோன்றும். அதிலும் வசதியான சொகுசு கார்கள். ஆனால் இனியும் அப்படியிருக்க வேண்டியதில்லை.  இப்போது காரில் செல்பவர்கள் தங்களது மடி மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து கொண்டு பணியாற்றியபடி செல்வதை பார்ப்பது போல, வரும் காலத்தில் சைக்கிள் மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருப்பதையும் சர்வசகஜமாக பார்க்க நேரிடலாம்

இதன் அர்த்தம் சைக்கிள் வைத்திருப்பவர்கள்  எல்லாம் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விடுவார்கள் என்பதல்ல.  அதற்கு  புரட்சிகரமான மாற்றம் முதலில் ஏற்பட்டாக வேண்டும்.
அப்போதுதான் சைக்கிளில் செல்பவர்கள் எல்லாம்  லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கக் கூடிய நிலை உண்டாகும்.

இப்போது லேப்டாப் வைத்திருப்பவர்கள் எல்லாம் சைக்கிள்  வாங்கி அதன் மீது லேப்டாப்பை வைத்து பயன்படுத்தும் நிலை வரக்கூடும் என்பதே விஷயம்.
சைக்கிள் என்றால் சாதாரண சைக்கிள் இல்லை. உடற்பயிற்சிக்காக பயன்படுத்தக் கூடிய சைக்கிள்.

சைக்கிள் மீது  ஏன் லேப்டாப்பை வைத்து கொள்ள வேண்டும் என்ற  சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். ஒரே கல்லில் 2 மாங்காயை அடிப்பது போல, ஒரே செயலில் 2 பலன்களை பெறுவதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அதாவது லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு  தேவையான மின்சக்தியை பெறுவதற்காக சார்ஜ் செய்ய வேண்டிய  பிரச்சனைக்கும் தீர்வு கண்டுவிடலாம்.

அதே நேரத்தில் அதிக முயற்சி இல்லாமல் தீவிர முயற்சி செய்து நல்ல உடல் தகுதியோடு இருப்பதையும் உறுதி செய்து கொள்ளலாம்.  இந்த இரண்டுமே லேப்டாப் மற்றும் சைக்கிள் ஒன்றிணைவதால்  சாத்தியமாகிறது என்பதுதான்  மிகவும் விசேஷமானது.

எப்படி என்றால் சைக்கிள் ஓட்டும் போது ஏற்படக் கூடிய விசையை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வழியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலமாக லேப்டாப் பேட்டரியை சார்ஜ் செய்து விடலாம்.  ஆக சைக்கிளை மிதித்து கொண்டே இருந்தால் போதும் உடற்பயிற்சி செய்ததுபோல்  இருக்கும். அதே நேரத்தில்  லேப்டாப்புக்கு தேவையான மின்சாரத்தையும் உற்பத்தி செய்து விடலாம்.

இந்த புதுமையான வழியை அமெரிக்காவில் உள்ள  கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.  பாராட்டத்தக்க முயற்சி  என்று சொல்லத் தோன்றுகிறதா? இதில் விசேஷம் என்னவென்றால், இதன் பின்னே உள்ள முக்கிய ஆய்வாளர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து  அமெரிக்காவில் குடியேறிய லஷ்மி ராவ் என்பவர், எம்ஐடியில்  உயர் பதவியில் இருக்கிறார். உலகம் முழுவதும் ஆய்வுப்பணிகளுக்காக புகழ் பெற்ற எம்ஐடி பல்கலைக்கழகத்தில் அவர் தகவல் தொழில்நுட்ப எரிபொருள் ஒருங்கிணைப்பாளர் என்னும் பதவியை வகித்து வருகிறார். 

எரிபொருள் சிக்கனத்திற்கான புதிய வழிகளை கண்டறிவது இவரது முக்கியபணியாக இருக்கிறது. அதிலும் தற்போது நீக்கமற நிறைய தொடங்கிய இருக்கும் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்களை இயக்க தேவைப்படும் மின்சாரத்தின் அளவை  குறைத்து அதற்கான மாற்று வழிகளை கண்டுபிடிப்பது அவரது முக்கிய ஆய்வாக இருக்கிறது. 

இந்த திசையில் தீவிரமாக பணியாற்றி வரும் அவரை, அமெரிக்காவின் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று தங்களது கல்லூரி ஆய்வுக்காக அணுகியது.  லேப்டாப் கம்யூட்டரை இயக்க சைக்கிளின் விசையை பயன்படுத்த முடியுமா என்று அந்த குழு அறிய விரும்பியது.  லஷ்மி ராவ் அந்த குழுவினரோடு  இணைந்து பணியாற்றி இதற்கான வழியை உருவாக்கி கொடுத்திருக்கிறார். 

உடற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் சைக்கிளில் தேவையான  மாற்றத்தை செய்து அதில் லேப்டாப்பை வைத்து கொண்டு பெடலை மிதிக்கக் கூடிய வகையில் வடிவமைப்பில் மாற்றம் செய்து கொடுத்தார்.

இதன் விளைவாக பெடலை மிதித்து கொண்டிருக்கும் போதே மின்சாரம் உற்பத்தியாகி விடுகிறது. அந்த மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்பட்டு, அங்கிருந்து லேப்டாப்புக்கு மாற்றப்படும். ஒரு அரை மணி நேரம்  சைக்கிளிளை மிதித்தால் போதும் லேப்டாப்பை இயக்குவதற்கு  தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து விடலாம்.  லேப்டாப்பை தனியே சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. 

அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்த பலனையும் பெற்று விடலாம். சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முறை,  பரவலான கவனத்தை பெற்றுள்ளது.  நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தால் நாளை அனைவராலும் பயன்படுத்தக் கூடிய  நிலை வரலாம்.

லேப்டாப் கம்ப்யூட்டர் என்றதும் சைக்கிள்களை நினைத்து பார்க்க தோன்றாது, கார்களைத் தான் நினைத்து பார்க்க தோன்றும். அதிலும் வசதியான சொகுசு கார்கள். ஆனால் இனியும் அப்படியிருக்க வேண்டியதில்லை.  இப்போது காரில் செல்பவர்கள் தங்களது மடி மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து கொண்டு பணியாற்றியபடி செல்வதை பார்ப்பது போல, வரும் காலத்தில் சைக்கிள் மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருப்பதையும் சர்வசகஜமாக பார்க்க நேரிடலாம்

இதன் அர்த்தம் சைக்கிள் வைத்திருப்பவர்கள்  எல்லாம் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விடுவார்கள் என்பதல்ல.  அதற்கு  புரட்சிகரமான மாற்றம் முதலில் ஏற்பட்டாக வேண்டும்.
அப்போதுதான் சைக்கிளில் செல்பவர்கள் எல்லாம்  லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கக் கூடிய நிலை உண்டாகும்.

இப்போது லேப்டாப் வைத்திருப்பவர்கள் எல்லாம் சைக்கிள்  வாங்கி அதன் மீது லேப்டாப்பை வைத்து பயன்படுத்தும் நிலை வரக்கூடும் என்பதே விஷயம்.
சைக்கிள் என்றால் சாதாரண சைக்கிள் இல்லை. உடற்பயிற்சிக்காக பயன்படுத்தக் கூடிய சைக்கிள்.

சைக்கிள் மீது  ஏன் லேப்டாப்பை வைத்து கொள்ள வேண்டும் என்ற  சந்தேகம் உங்களுக்கு ஏற்படலாம். ஒரே கல்லில் 2 மாங்காயை அடிப்பது போல, ஒரே செயலில் 2 பலன்களை பெறுவதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அதாவது லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கு  தேவையான மின்சக்தியை பெறுவதற்காக சார்ஜ் செய்ய வேண்டிய  பிரச்சனைக்கும் தீர்வு கண்டுவிடலாம்.

அதே நேரத்தில் அதிக முயற்சி இல்லாமல் தீவிர முயற்சி செய்து நல்ல உடல் தகுதியோடு இருப்பதையும் உறுதி செய்து கொள்ளலாம்.  இந்த இரண்டுமே லேப்டாப் மற்றும் சைக்கிள் ஒன்றிணைவதால்  சாத்தியமாகிறது என்பதுதான்  மிகவும் விசேஷமானது.

எப்படி என்றால் சைக்கிள் ஓட்டும் போது ஏற்படக் கூடிய விசையை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வழியை உருவாக்கியுள்ளனர். இதன் மூலமாக லேப்டாப் பேட்டரியை சார்ஜ் செய்து விடலாம்.  ஆக சைக்கிளை மிதித்து கொண்டே இருந்தால் போதும் உடற்பயிற்சி செய்ததுபோல்  இருக்கும். அதே நேரத்தில்  லேப்டாப்புக்கு தேவையான மின்சாரத்தையும் உற்பத்தி செய்து விடலாம்.

இந்த புதுமையான வழியை அமெரிக்காவில் உள்ள  கல்லூரி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர்.  பாராட்டத்தக்க முயற்சி  என்று சொல்லத் தோன்றுகிறதா? இதில் விசேஷம் என்னவென்றால், இதன் பின்னே உள்ள முக்கிய ஆய்வாளர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து  அமெரிக்காவில் குடியேறிய லஷ்மி ராவ் என்பவர், எம்ஐடியில்  உயர் பதவியில் இருக்கிறார். உலகம் முழுவதும் ஆய்வுப்பணிகளுக்காக புகழ் பெற்ற எம்ஐடி பல்கலைக்கழகத்தில் அவர் தகவல் தொழில்நுட்ப எரிபொருள் ஒருங்கிணைப்பாளர் என்னும் பதவியை வகித்து வருகிறார். 

எரிபொருள் சிக்கனத்திற்கான புதிய வழிகளை கண்டறிவது இவரது முக்கியபணியாக இருக்கிறது. அதிலும் தற்போது நீக்கமற நிறைய தொடங்கிய இருக்கும் கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப்களை இயக்க தேவைப்படும் மின்சாரத்தின் அளவை  குறைத்து அதற்கான மாற்று வழிகளை கண்டுபிடிப்பது அவரது முக்கிய ஆய்வாக இருக்கிறது. 

இந்த திசையில் தீவிரமாக பணியாற்றி வரும் அவரை, அமெரிக்காவின் கல்லூரி மாணவர்கள் குழு ஒன்று தங்களது கல்லூரி ஆய்வுக்காக அணுகியது.  லேப்டாப் கம்யூட்டரை இயக்க சைக்கிளின் விசையை பயன்படுத்த முடியுமா என்று அந்த குழு அறிய விரும்பியது.  லஷ்மி ராவ் அந்த குழுவினரோடு  இணைந்து பணியாற்றி இதற்கான வழியை உருவாக்கி கொடுத்திருக்கிறார். 

உடற்பயிற்சிக்காக பயன்படுத்தப்படும் சைக்கிளில் தேவையான  மாற்றத்தை செய்து அதில் லேப்டாப்பை வைத்து கொண்டு பெடலை மிதிக்கக் கூடிய வகையில் வடிவமைப்பில் மாற்றம் செய்து கொடுத்தார்.

இதன் விளைவாக பெடலை மிதித்து கொண்டிருக்கும் போதே மின்சாரம் உற்பத்தியாகி விடுகிறது. அந்த மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப்பட்டு, அங்கிருந்து லேப்டாப்புக்கு மாற்றப்படும். ஒரு அரை மணி நேரம்  சைக்கிளிளை மிதித்தால் போதும் லேப்டாப்பை இயக்குவதற்கு  தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து விடலாம்.  லேப்டாப்பை தனியே சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமிருக்காது. 

அதே நேரத்தில் உடற்பயிற்சி செய்த பலனையும் பெற்று விடலாம். சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முறை,  பரவலான கவனத்தை பெற்றுள்ளது.  நடைமுறைக்கு ஏற்றதாக இருந்தால் நாளை அனைவராலும் பயன்படுத்தக் கூடிய  நிலை வரலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.