சாட்டையடி இணைய தளம்

ஒரு பக்க இணைய தளங்களில் மிகச் சிறந்த இணைய தளம் என்று அந்த தளத்தை குறிப்பிடலாம். தற்காலிக இணைய தளம், சாட் டையடி (தரும்) தளம், என்றெல்லாம் அந்த தளத்தை வர்ணிக்கலாம். எப்படி குறிப்பிட்டாலும் அந்த தளம் ஆகச் சிறந்த தளங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.
.
ஒற்றை குறிக்கோளோடு ஒரே ஒரு பக்கம் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ள அந்த இணைய தளத்தில் அதிக விஷயங்கள் கிடையாது. ஒரே ஒரு நீண்ட விளக்கம் மட்டும் தான்!

அந்த விளக்கத்தை அளித்திருப்பவர் “கேரி டீன்’ என்னும் இங்கிலாந்து கோடீஸ்வரர். டீன் 19 ஆண்டு மணவாழ்க்கைக்கு பிறகு தனது மனைவி ஹெலனை விவாகரத்து செய்திருக்கிறார். விவாகரத்து தொடர்பான விளக்கம் அளிப்பதற்காக தான், டீன்டைவர்ஸ் (deandivorce.com) என்னும் பெயரில் ஒரு பக்க இணைய தளத்தை அமைத்திருக்கிறார்.

யார் இந்த டீன்? அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தால் யாருக்கு என்ன? அதற்காக ஏன் இந்த தளத்தை அவர் அமைக்க வேண்டும்? அவர் தரும் விளக்கத்தை கேட்க யாருக்கு ஆதரவு இருக்கிறது?

எல்லாமே சரியான கேள்விகள் தான்! உண்மையில் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டிருந்தால் டீன் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். ஆனால் வேறு கேள்விகள் அவரை நோக்கி கேட்கப் பட்டதாலேயே டீன் தனது விவாகரத்து பற்றி விளக்கம் அளிக்க முன் வந்தார்.

கோடீஸ்வரர் சாபம் என்று உலகில் ஒன்று உண்டல்லவா? அதற்கு டீனும் இலக்கானார். அதாவது, பிரபலமாக இருப்பவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பேசுவதில் பொது மக்களுக்கு அலாதியான ஆனந்தம் உண்டா யிற்றே! இந்த ஆர்வத்துக்கு பத்திரிகைகளும் தீனி போட, மெய்யோ, பொய்யோ என்று கூட யோசிக்காமல், இல்லாததையும், பொல்லாததையும் பேசுவதுண்டு!

டீன் விவாகரத்து செய்த பிறகு அவரைப்பற்றியும் இப்படி தான் பேசிக் கொண்டனர்.
கோடீஸ்வரரான டீன், தனது மாஜி மனைவியிடம் கஞ்சத்தனமாக நடந்து கொண்டதாகவும், பெரும் செல்வம் இருந்தும் போதிய ஜீவனாம்சம் வழங்க வில்லை என்பதுதான் இந்த பேச்சுக் களின் சாரம்சம். இது எந்த அளவுக்கு சரி என்றெல்லாம் யாரும் யோசித்துப் பார்த்ததாக தெரிய வில்லை. ஆனால் கேரிடீனை பேராசைக்காரர் என்றும் கல் நெஞ்சக்காரர் என்றும் பேசிக் கொண்டனர்.

இப்படி ஊரே புரளி பேசும் போதும் பெரிய மனிதர்கள் என்ன செய்ய முடியும்!
எத்தனையே பிரபலங்களும், பெரிய மனிதர்களும் இத்தகைய தனி மனித தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின் றனர். அவர்களில் யாருமே செய்யாத விஷயத்தை கேரி டீன் செய்ய தீர்மானித்தார்.

வதங்களின் ஊற்றுக்கண்ணை அடைக்கும் வகையில் தானே விளக்கம் அளித்து விடுவதே சரியென நினைத்த டீன், இதற்காக டீன்வெர்ஸ் டாட்காம் தளத்தை அமைத்து, அதில் தனது விவாகரத்து ஒப்பந்த விவரங்களை நீதிமன்ற ஆவணத்தில் உள்ளது உள்ளபடியே இடம் பெற வைத்து விட்டார்.

டீன் மற்றும் ஹெலன் டீன் விவாகரத்து பற்றிய உண்மைகள் என்னும் தலைப்பிலான அந்த விளக் கத்தை அவர் தொடங்கியிருந்த விதமே அற்புதமாக இருந்தது. கொஞ்சம் கவித்துவமாகவும் இருந்தது.

“விவாகரத்து புள்ளி விவரத்தில் ஒரு எண்ணிக்கையாகும் விருப்பத்தோடு யாரும் திருமணம் செய்து கொள்வ தில்லை. நிச்சயம் நான் அப்படி செய்து கொள்ளவில்லை. ஆனால் விவாகரத்து இன்றைய வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. எல்லாம் மாறுகிறது. மனிதர்கள் மாறுகின்றனர் நான் மாறியிருக்கிறேன்.

இந்த ஆரம்ப வரிகளே நேர்மையான விளக்கத்துக்கு அவர் தயராக இருப் பதை உணர்த்தி விடுகிறது அல்லவா? எதற்காக இந்தவிளக்கம் என கூற முற்படும் அடுத்த வரிகளில், அவர் சாட்டையை கையில் எடுத்துக் கொள்கிறார்.

இந்த தளத்தை நான் அமைத்ததற் கான காரணம் ஒன்றே ஒன்றுதான் எனது விவாகரத்து விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு வருக்கும் அது தொடர்பான உண் மையை தெரிவிப்பது தான் இதன் நோக்கம்.

கேரியாராக இருந்தால் என்ன? ஹெலன் யாராக இருந்தால் என்ன? என் விவாகரத்து பற்றி ஒருவரும் கவலைப் படாமல் இருந்தால் நன்றாக தான் இருந்திருக்கும் என்று மென்மையாக ஆவேசப்படும் டீன் உண்மை என்ன வென்று தெரியாமலேயே பலரும் பேசிக் கொண்டிருப்பதாகவும் இதெல் லாம் எப்படி தொடங்கியது என்றே தெரியவில்லை, எனவும் குறிப்பிடுகிறார்.

வதந்திகள் எப்படி தொடங்கியது என்பதை விட அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே முக்கியம் என்றும் கூறியுள்ள டீன் “மோச மானவன், பேராசைக்காரன், இதயமில் லாதவன்’ என்றெல்லாம் தன்னைப் பற்றி பேசுபவர்கள் கவனத்திற்கு உண்மையான தகவல் களை முன் வைப்பதற்காக கூறி, விவாகரத்து விவரங்களை விவரிக்கிறார்.

விவாகரத்துபெறும் மனைவிக்கு ரொக்கமாக, மூன்று மில்லியன் சொச்சம் பவுண்டுகளை தருவதாகவும் பிள்ளை கள் படிப்பிற்கான செலவை ஏற்பதா கவும் உறுதி அளிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளேன். அதோடு நகைகள், கார் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் வழங்கியிருக் கிறேன் என ஜீவனாம்ச விவரங்களை அனைத்தையும் பட்டியலிட்டு விடுகிறார்.

இவை எல்லாமே தனக்கும் தனது மாஜி மனைவிக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என நினைத்தாலும், அவதூறாக பேசியவர்களின் வாயை அடைக்க இவற்றை வெளியிட வேண்டிய தாகி விட்டது என்றும் அவர் வேதனையோடு குறிப்பிட் டுள்ளார்.

இவற்றை வெளியிடுவதன் நோக்கம் மாஜி மனைவியை அவமானப் படுத்துவதல்ல என்பதையும் மிகுந்த கன்னியத்தோடு தெளிவுபடுத்தி விடுகிறார்.
என்னைப்பற்றியும், நான் வழங்காத தொகைப்பற்றியும் விவாதம் செய்பவர் கள் இனி, அத்தகைய ஊகங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் வேண்டுகோளோடு இந்த விளக்கம் நிறைவடைகிறது.

மொத்த விஷயங்களும் ஒரு நீண்ட பக்கத்தில் அடங்கி விடுகிறது. வேறு இணைப்புகளோ, கூடுதல் தகவல்களோ கிடையாது. இந்த தளம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் நினைத் திருக்க வாய்ப்பில்லை. வதந்திகள் ஓயும் வரை அதற்கான விளக்கம் அளிக்கும் இடமாக மட்டுமே இருந்தால் போதும் என நினைத்து தளத்தை அந்த நோக்கத்திற்காக மட்டும் டீன் அமைத்தி ருக்கிறார்.

இந்த தளத்தை பார்த்த பிறகு எவருக்கும் அவரைப்பற்றி அவதூறு பேசத் தோன்ற வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு நாகரீகமாக சவுக்கடியும், சாட்டையடியும் கொடுத்து விடுகிறார் உண்மையையும் சொல்வதன் மூலம் மட்டுமே!

ஒரு பக்க இணைய தளங்களில் மிகச் சிறந்த இணைய தளம் என்று அந்த தளத்தை குறிப்பிடலாம். தற்காலிக இணைய தளம், சாட் டையடி (தரும்) தளம், என்றெல்லாம் அந்த தளத்தை வர்ணிக்கலாம். எப்படி குறிப்பிட்டாலும் அந்த தளம் ஆகச் சிறந்த தளங்களில் ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை.
.
ஒற்றை குறிக்கோளோடு ஒரே ஒரு பக்கம் கொண்டதாக அமைக்கப்பட் டுள்ள அந்த இணைய தளத்தில் அதிக விஷயங்கள் கிடையாது. ஒரே ஒரு நீண்ட விளக்கம் மட்டும் தான்!

அந்த விளக்கத்தை அளித்திருப்பவர் “கேரி டீன்’ என்னும் இங்கிலாந்து கோடீஸ்வரர். டீன் 19 ஆண்டு மணவாழ்க்கைக்கு பிறகு தனது மனைவி ஹெலனை விவாகரத்து செய்திருக்கிறார். விவாகரத்து தொடர்பான விளக்கம் அளிப்பதற்காக தான், டீன்டைவர்ஸ் (deandivorce.com) என்னும் பெயரில் ஒரு பக்க இணைய தளத்தை அமைத்திருக்கிறார்.

யார் இந்த டீன்? அவர் தனது மனைவியை விவாகரத்து செய்தால் யாருக்கு என்ன? அதற்காக ஏன் இந்த தளத்தை அவர் அமைக்க வேண்டும்? அவர் தரும் விளக்கத்தை கேட்க யாருக்கு ஆதரவு இருக்கிறது?

எல்லாமே சரியான கேள்விகள் தான்! உண்மையில் இந்த கேள்விகளை எல்லாம் கேட்டிருந்தால் டீன் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார். ஆனால் வேறு கேள்விகள் அவரை நோக்கி கேட்கப் பட்டதாலேயே டீன் தனது விவாகரத்து பற்றி விளக்கம் அளிக்க முன் வந்தார்.

கோடீஸ்வரர் சாபம் என்று உலகில் ஒன்று உண்டல்லவா? அதற்கு டீனும் இலக்கானார். அதாவது, பிரபலமாக இருப்பவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பேசுவதில் பொது மக்களுக்கு அலாதியான ஆனந்தம் உண்டா யிற்றே! இந்த ஆர்வத்துக்கு பத்திரிகைகளும் தீனி போட, மெய்யோ, பொய்யோ என்று கூட யோசிக்காமல், இல்லாததையும், பொல்லாததையும் பேசுவதுண்டு!

டீன் விவாகரத்து செய்த பிறகு அவரைப்பற்றியும் இப்படி தான் பேசிக் கொண்டனர்.
கோடீஸ்வரரான டீன், தனது மாஜி மனைவியிடம் கஞ்சத்தனமாக நடந்து கொண்டதாகவும், பெரும் செல்வம் இருந்தும் போதிய ஜீவனாம்சம் வழங்க வில்லை என்பதுதான் இந்த பேச்சுக் களின் சாரம்சம். இது எந்த அளவுக்கு சரி என்றெல்லாம் யாரும் யோசித்துப் பார்த்ததாக தெரிய வில்லை. ஆனால் கேரிடீனை பேராசைக்காரர் என்றும் கல் நெஞ்சக்காரர் என்றும் பேசிக் கொண்டனர்.

இப்படி ஊரே புரளி பேசும் போதும் பெரிய மனிதர்கள் என்ன செய்ய முடியும்!
எத்தனையே பிரபலங்களும், பெரிய மனிதர்களும் இத்தகைய தனி மனித தாக்குதலுக்கு இலக்காகி இருக்கின் றனர். அவர்களில் யாருமே செய்யாத விஷயத்தை கேரி டீன் செய்ய தீர்மானித்தார்.

வதங்களின் ஊற்றுக்கண்ணை அடைக்கும் வகையில் தானே விளக்கம் அளித்து விடுவதே சரியென நினைத்த டீன், இதற்காக டீன்வெர்ஸ் டாட்காம் தளத்தை அமைத்து, அதில் தனது விவாகரத்து ஒப்பந்த விவரங்களை நீதிமன்ற ஆவணத்தில் உள்ளது உள்ளபடியே இடம் பெற வைத்து விட்டார்.

டீன் மற்றும் ஹெலன் டீன் விவாகரத்து பற்றிய உண்மைகள் என்னும் தலைப்பிலான அந்த விளக் கத்தை அவர் தொடங்கியிருந்த விதமே அற்புதமாக இருந்தது. கொஞ்சம் கவித்துவமாகவும் இருந்தது.

“விவாகரத்து புள்ளி விவரத்தில் ஒரு எண்ணிக்கையாகும் விருப்பத்தோடு யாரும் திருமணம் செய்து கொள்வ தில்லை. நிச்சயம் நான் அப்படி செய்து கொள்ளவில்லை. ஆனால் விவாகரத்து இன்றைய வாழ்க்கையின் அங்கமாகி விட்டது. எல்லாம் மாறுகிறது. மனிதர்கள் மாறுகின்றனர் நான் மாறியிருக்கிறேன்.

இந்த ஆரம்ப வரிகளே நேர்மையான விளக்கத்துக்கு அவர் தயராக இருப் பதை உணர்த்தி விடுகிறது அல்லவா? எதற்காக இந்தவிளக்கம் என கூற முற்படும் அடுத்த வரிகளில், அவர் சாட்டையை கையில் எடுத்துக் கொள்கிறார்.

இந்த தளத்தை நான் அமைத்ததற் கான காரணம் ஒன்றே ஒன்றுதான் எனது விவாகரத்து விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொரு வருக்கும் அது தொடர்பான உண் மையை தெரிவிப்பது தான் இதன் நோக்கம்.

கேரியாராக இருந்தால் என்ன? ஹெலன் யாராக இருந்தால் என்ன? என் விவாகரத்து பற்றி ஒருவரும் கவலைப் படாமல் இருந்தால் நன்றாக தான் இருந்திருக்கும் என்று மென்மையாக ஆவேசப்படும் டீன் உண்மை என்ன வென்று தெரியாமலேயே பலரும் பேசிக் கொண்டிருப்பதாகவும் இதெல் லாம் எப்படி தொடங்கியது என்றே தெரியவில்லை, எனவும் குறிப்பிடுகிறார்.

வதந்திகள் எப்படி தொடங்கியது என்பதை விட அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே முக்கியம் என்றும் கூறியுள்ள டீன் “மோச மானவன், பேராசைக்காரன், இதயமில் லாதவன்’ என்றெல்லாம் தன்னைப் பற்றி பேசுபவர்கள் கவனத்திற்கு உண்மையான தகவல் களை முன் வைப்பதற்காக கூறி, விவாகரத்து விவரங்களை விவரிக்கிறார்.

விவாகரத்துபெறும் மனைவிக்கு ரொக்கமாக, மூன்று மில்லியன் சொச்சம் பவுண்டுகளை தருவதாகவும் பிள்ளை கள் படிப்பிற்கான செலவை ஏற்பதா கவும் உறுதி அளிக்கவும் ஒப்புக் கொண்டுள்ளேன். அதோடு நகைகள், கார் போன்ற விலை உயர்ந்த பொருட்களையும் வழங்கியிருக் கிறேன் என ஜீவனாம்ச விவரங்களை அனைத்தையும் பட்டியலிட்டு விடுகிறார்.

இவை எல்லாமே தனக்கும் தனது மாஜி மனைவிக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என நினைத்தாலும், அவதூறாக பேசியவர்களின் வாயை அடைக்க இவற்றை வெளியிட வேண்டிய தாகி விட்டது என்றும் அவர் வேதனையோடு குறிப்பிட் டுள்ளார்.

இவற்றை வெளியிடுவதன் நோக்கம் மாஜி மனைவியை அவமானப் படுத்துவதல்ல என்பதையும் மிகுந்த கன்னியத்தோடு தெளிவுபடுத்தி விடுகிறார்.
என்னைப்பற்றியும், நான் வழங்காத தொகைப்பற்றியும் விவாதம் செய்பவர் கள் இனி, அத்தகைய ஊகங்களை நிறுத்திக் கொள்ளலாம் என்றும் வேண்டுகோளோடு இந்த விளக்கம் நிறைவடைகிறது.

மொத்த விஷயங்களும் ஒரு நீண்ட பக்கத்தில் அடங்கி விடுகிறது. வேறு இணைப்புகளோ, கூடுதல் தகவல்களோ கிடையாது. இந்த தளம் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றும் அவர் நினைத் திருக்க வாய்ப்பில்லை. வதந்திகள் ஓயும் வரை அதற்கான விளக்கம் அளிக்கும் இடமாக மட்டுமே இருந்தால் போதும் என நினைத்து தளத்தை அந்த நோக்கத்திற்காக மட்டும் டீன் அமைத்தி ருக்கிறார்.

இந்த தளத்தை பார்த்த பிறகு எவருக்கும் அவரைப்பற்றி அவதூறு பேசத் தோன்ற வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு நாகரீகமாக சவுக்கடியும், சாட்டையடியும் கொடுத்து விடுகிறார் உண்மையையும் சொல்வதன் மூலம் மட்டுமே!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.