கண்ணாடிகளுக்கு பெயர் பெற்ற பெல்ஜியம் நாடு இபே இணையதளத்தில் ஏலத்திற்கு வந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் இபே இணையதளத்தில் சகஜமானதுதான். வினோதமான பொருட்கள் இபேயில் ஏலத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல.
அதே போல ஊர்களும், நாடுகளும் இபேயில் விலைக்கு வருவதும் நடந்திருக்கிறது. இபே மூலம் ஒரு முழு கிராமமே விற்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. அது உண்மையாக நிகழ்ந்தது.
.
ஆனால் நாடுகள் விற்பனைக்கு வருவது என்பது உண்மை என்பதை விட கேலியாகவோ, விளையாட் டாகவோதான் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த கேலிக்கு பின்னே ஒரு தெளிவான நோக்கம் அல்லது ஆற்ற முடியாத கோபம் இருந்திருக்கிறது. உண்மையில் இபே இணையதளத்தில் ஒரு விஷயத்தை விற்பனைக்கென பட்டியலிடுவதன் மூலம் எளிதாக உலகின் கவனத்தை ஈர்த்து விடலாம்.
அந்த வகையில் ஒரு வலுவான செய்தியை தெரிவிக்க இப்படி இபேவில் நாடுகளை விற்பதாக அறிவிப்பதுண்டு. ஈராக் போரின் போது அமெரிக்காவில் ஆக்கிரமிப்பு உணர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈராக் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே பாணியில் தற்போது ஐரோப்பிய நாடான பெல்ஜியம் இபேயில் விற்பனைக்கு வந்திருக் கிறது. அந்நாட்டை சேர்ந்த ஆசிரியரும், முன்னாள் பத்திரிகை யாளருமான கேரிட் சிக்ஸ் என்பவர் பெல்ஜியத்தை விற்பதாக அறிவித்திருக்கிறார்.
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள பெல்ஜியத்தை விலை கொடுத்து வாங்கினால் ராஜா மற்றும் நீதிமன்றம் இலவசமாக கிடைக்கும் என்று இதற்காக இபேவில் அவர் உருவாக்கிய விளம்பர பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் எதிர்பார்த்ததுபோலவே இந்த அறிவிப்பு உலகின் கவனத்தை ஈர்த்தது.
இபே கலாச்சாரம் பற்றி அறியாதவர்களுக்கு இது வியப்பை அல்லது அதிர்ச்சியை அளிக்கலாம். ஒரு நாட்டை விற்பனைக்கு கொண்டு வருவதா? என்னதான் விளையாட்டு என்றாலும் அதற்கு நாடுதான் கிடைத்ததா? என்றெல்லாம் கேட்க தோன்றலாம். இந்த நடவடிக்கைக்கு பின்னே உள்ள நோக்கத்தை தெரிந்து கொண்டால் இந்த கேள்விகளுக்கான விடை கிடைத்து விடும்.
பெல்ஜியம் நாட்டில் தற்போது கடும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இந்த விஷயம் தலைப்பு செய்தியில் இடம் பிடிக்காததால் பெரும்பாலா னோருக்கு தெரியாமலே போயிருக்கலாம். ஆனால் பெல்ஜியம் நாட்டில் உள்ளவர்கள் இந்த நெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெல்ஜியம் நாட்டில் டச்சு மொழி பேசுபவர்கள் மற்றும் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் இடையே அரசியல் மோதல் இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இந்த இரு கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு இன்னமும் முடிவு தெரியவில்லை.
நூறு நாட்கள் ஆன பிறகும் ஆட்சியமைக்க முடியாமல் கட்சிகள் சண்டையிட்டு கொண்டிருப்பதால் சராசரி பெல்ஜியம் மக்கள் வெறுத்துப் போயிருக்கின்றனர். இவர்களில் ஒருவரான கேரிட் சிக்ஸ் வெறுத்து போனதோடு கொதித்தும் போயிருக்கிறார்.
நாட்டின் நலனை மறந்து விட்டு கட்சிகள் இப்படி அடித்துக் கொள்வதை கண்டிக்க நினைத்த அவர், அதற்கான சிறந்த வழி இபே தளத்தில் நாட்டை விற்பதாக அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தார்.
இந்த வினோத அறிவிப்பு பலரது கவனத்தை ஈர்த்து பெல்ஜியத்தின் பிரச்சனையையும் தெரிந்து கொள்ள வைத்திருக்கிறது. பெல்ஜியம் மிகவும் விலை மதிப்பு மிக்கது. அதனை மறந்து விட்டு சண்டை போட்டுக் கொண்டிருப்பது சரியல்ல என்பதை இந்த விளம்பரத்தின் மூலம் உணர்த்த விரும்பியதாக கேரிட் சிக்ஸ் கூறுகிறார். இபே நிர்வாகமும் இதனை அங்கீகரிக்கிறது.
பெல்ஜியம் மகத்தான நாடு. அதனை விற்பது வெட்கப்பட வேண்டிய செயல் என்பது போன்ற செய்தியை உணர்த்திய இந்த விளம்பரத்தை இடம் பெற வைப்பதில் மகிழ்ச்சியே என்று இபே சார்பில் கூறப்பட்டுள்ளது.
பெல்ஜியம் நாட்டில் உள்ளவர்கள் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஒரு சிலர் பெல்ஜியத்தை வாங்குவதற்காக தாங்கள் தர தயாராக இருக்கும் விலையையும் குறிப்பிட்டு ஏலம் கேட்க ஆரம்பித்து விட்டனர். இதனையடுத்து இபே இந்த விளம்பரத்தை அகற்றி விட்டது.
கண்ணாடிகளுக்கு பெயர் பெற்ற பெல்ஜியம் நாடு இபே இணையதளத்தில் ஏலத்திற்கு வந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? இதெல்லாம் இபே இணையதளத்தில் சகஜமானதுதான். வினோதமான பொருட்கள் இபேயில் ஏலத்திற்கு வருவது ஒன்றும் புதிதல்ல.
அதே போல ஊர்களும், நாடுகளும் இபேயில் விலைக்கு வருவதும் நடந்திருக்கிறது. இபே மூலம் ஒரு முழு கிராமமே விற்கப்பட்ட சம்பவங்களும் உண்டு. அது உண்மையாக நிகழ்ந்தது.
.
ஆனால் நாடுகள் விற்பனைக்கு வருவது என்பது உண்மை என்பதை விட கேலியாகவோ, விளையாட் டாகவோதான் அமைந்திருக்கிறது. ஆனால் இந்த கேலிக்கு பின்னே ஒரு தெளிவான நோக்கம் அல்லது ஆற்ற முடியாத கோபம் இருந்திருக்கிறது. உண்மையில் இபே இணையதளத்தில் ஒரு விஷயத்தை விற்பனைக்கென பட்டியலிடுவதன் மூலம் எளிதாக உலகின் கவனத்தை ஈர்த்து விடலாம்.
அந்த வகையில் ஒரு வலுவான செய்தியை தெரிவிக்க இப்படி இபேவில் நாடுகளை விற்பதாக அறிவிப்பதுண்டு. ஈராக் போரின் போது அமெரிக்காவில் ஆக்கிரமிப்பு உணர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஈராக் விற்பனைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே பாணியில் தற்போது ஐரோப்பிய நாடான பெல்ஜியம் இபேயில் விற்பனைக்கு வந்திருக் கிறது. அந்நாட்டை சேர்ந்த ஆசிரியரும், முன்னாள் பத்திரிகை யாளருமான கேரிட் சிக்ஸ் என்பவர் பெல்ஜியத்தை விற்பதாக அறிவித்திருக்கிறார்.
மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள பெல்ஜியத்தை விலை கொடுத்து வாங்கினால் ராஜா மற்றும் நீதிமன்றம் இலவசமாக கிடைக்கும் என்று இதற்காக இபேவில் அவர் உருவாக்கிய விளம்பர பக்கத்தில் தெரிவித்திருந்தார். அவர் எதிர்பார்த்ததுபோலவே இந்த அறிவிப்பு உலகின் கவனத்தை ஈர்த்தது.
இபே கலாச்சாரம் பற்றி அறியாதவர்களுக்கு இது வியப்பை அல்லது அதிர்ச்சியை அளிக்கலாம். ஒரு நாட்டை விற்பனைக்கு கொண்டு வருவதா? என்னதான் விளையாட்டு என்றாலும் அதற்கு நாடுதான் கிடைத்ததா? என்றெல்லாம் கேட்க தோன்றலாம். இந்த நடவடிக்கைக்கு பின்னே உள்ள நோக்கத்தை தெரிந்து கொண்டால் இந்த கேள்விகளுக்கான விடை கிடைத்து விடும்.
பெல்ஜியம் நாட்டில் தற்போது கடும் அரசியல் நெருக்கடி நிலவி வருகிறது. இந்த விஷயம் தலைப்பு செய்தியில் இடம் பிடிக்காததால் பெரும்பாலா னோருக்கு தெரியாமலே போயிருக்கலாம். ஆனால் பெல்ஜியம் நாட்டில் உள்ளவர்கள் இந்த நெருக்கடியால் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
பெல்ஜியம் நாட்டில் டச்சு மொழி பேசுபவர்கள் மற்றும் பிரெஞ்சு மொழி பேசுபவர்கள் இடையே அரசியல் மோதல் இருந்து வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் இந்த இரு கூட்டணிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டு இன்னமும் முடிவு தெரியவில்லை.
நூறு நாட்கள் ஆன பிறகும் ஆட்சியமைக்க முடியாமல் கட்சிகள் சண்டையிட்டு கொண்டிருப்பதால் சராசரி பெல்ஜியம் மக்கள் வெறுத்துப் போயிருக்கின்றனர். இவர்களில் ஒருவரான கேரிட் சிக்ஸ் வெறுத்து போனதோடு கொதித்தும் போயிருக்கிறார்.
நாட்டின் நலனை மறந்து விட்டு கட்சிகள் இப்படி அடித்துக் கொள்வதை கண்டிக்க நினைத்த அவர், அதற்கான சிறந்த வழி இபே தளத்தில் நாட்டை விற்பதாக அறிவிப்பதுதான் என்று முடிவு செய்தார்.
இந்த வினோத அறிவிப்பு பலரது கவனத்தை ஈர்த்து பெல்ஜியத்தின் பிரச்சனையையும் தெரிந்து கொள்ள வைத்திருக்கிறது. பெல்ஜியம் மிகவும் விலை மதிப்பு மிக்கது. அதனை மறந்து விட்டு சண்டை போட்டுக் கொண்டிருப்பது சரியல்ல என்பதை இந்த விளம்பரத்தின் மூலம் உணர்த்த விரும்பியதாக கேரிட் சிக்ஸ் கூறுகிறார். இபே நிர்வாகமும் இதனை அங்கீகரிக்கிறது.
பெல்ஜியம் மகத்தான நாடு. அதனை விற்பது வெட்கப்பட வேண்டிய செயல் என்பது போன்ற செய்தியை உணர்த்திய இந்த விளம்பரத்தை இடம் பெற வைப்பதில் மகிழ்ச்சியே என்று இபே சார்பில் கூறப்பட்டுள்ளது.
பெல்ஜியம் நாட்டில் உள்ளவர்கள் இந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஒரு சிலர் பெல்ஜியத்தை வாங்குவதற்காக தாங்கள் தர தயாராக இருக்கும் விலையையும் குறிப்பிட்டு ஏலம் கேட்க ஆரம்பித்து விட்டனர். இதனையடுத்து இபே இந்த விளம்பரத்தை அகற்றி விட்டது.