குழந்தைக்கு வயது 60

மூர்த்தி பெரிதானாலும் கீர்த்தி (மிகவும்) சிறியது. ஆரம்ப கால கம்ப்யூட்டர்களை இப்படித்தான் வர்ணிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய கம்ப்யூட்டர் ஒன்று தனது மணி விழாவை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல்60 என்னும் பெயரில் மான்செஸ்டர் நகரம் அதற்கு கோலாகலமாக தயாராகி இருக்கிறது.
.
இந்த பின்னணியில் அந்த கம்ப்யூட்டரின் அருமை பெருமைகளை கொஞ்சம் பார்ப்போம்.
குறிப்பிட்ட அந்த கம்ப்யூட்டரின் “கீர்த்தி’ சிறியதே தவிர சரித்திரத்தில் அதன் முக்கியத்துவம் மகத்தானது.

கம்ப்யூட்டர் வல்லுனர்கள் மத்தியில் “பேபி’ என்றே செல்லமாக குறிப்பிடப்படும் அந்த கம்ப்யூட்டர், அந்த கால வழக்கப்படி தனக்கென ஒரு பெயர்தொடராலேயே அழைக்கப் பட்டது. “ஸ்மால் ஸ்கேல் எக்ஸ்பரி மென்ட்ஸ் மெஷின்’ என்பது அதன் பெயர் சுருக்கமாக (எஸ்எஸ்இஎம்) கம்ப்யூட்டர் வரலாற்றை திரும்பிப்பார்க்கும்போது இந்த இயந்திரம் மாபெரும் மைல் கல்லாக காட்சி தருவதோடு, முதல் நவீன கம்ப்யூட்டர் என்னும் அந்தஸ்தையும் தாங்கி நிற்கிறது.

பல விதங்களில் இந்த கம்ப்யூட்டர் சிறப்பு வாய்ந்தது. ஒரு பெரிய அறையை கற்பனை செய்து கொள்ளுங்கள் இந்த கம்ப்யூட்டர் அந்த அறை அளவுக்கு பெரியதாக படைக்கப்பட்டது. அதனால் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் என்று பார்த்தால், தற்போதைய செல்போனில் இருக்கும் சிப்புகள் கூட மேம்பட்டதாக இருக்கும்.

ஆனால் பேபி என்று அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டரில் என்ன விசேஷம் என்றால் இது சகல கலா வல்லவனாக இருந்தது என்பதுதான்! அதாவது பல வேலைகளை செய்யக்கூடிய திறன் படைத்ததாக அமைந்திருந்தது. அந்த காலத்தில் இது மிகப்பெரிய விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போதெல்லாம் அதாவது, 1940களில் கம்ப்யூட்டர்கள் மலை போன்ற தோற்றத்தோடு உருவாக்கப் பட்டாலும், அவை குறிப்பிட்ட “ஒரே’ ஒரு வேலையை மட்டுமே செய்து முடிக்கும் திறன் பெற்றிருந்தன. இரண்டாவதாக ஒரு வேலையை செய்ய வைக்க வேண்டும் என்றால் அந்த கம்ப்யூட்டரை மீண்டும் உருவாக்குவதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் “பேபி’ கம்ப்யூட்டர் இத்தகைய நிர்பந்தம் இல்லாமல் பல வேலையை செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. இதனை சாத்தியமாக்கும் வகையில் கொஞ்சம் போல நினைவுதிறனையும் (128 பைட்ஸ்) பெற்றிருந்தது.

இட்ட கட்டளைகளை நிறைவேற்றித்தரும் ஆற்றலை இந்த நினைவுத்திறனே சாத்தியமாக்கியது. இந்த காரணத்தினாலேயே இது உலகின் முதல் நவீன கம்ப்யூட்டர் என்ற அடைமொழியோடு மரியாதையோடு குறிப்பிடப்படுகிறது. புரோகிராம்களின் அடிப்படையில் செயல்படக்கூடியதாக இருந்ததா லேயே இன்றைய பர்சனல் கம்ப்யூட்டர்கள் லேப்டாப்கள் ஆகிய வற்றுக்கெல்லாம் முன்னோடியாகவும் புகழப்படுகிறது.

புராதன கால அபாகஸ் கருவியில் இருந்த கம்ப்யூட்டரின் வரலாறு துவங்கி விடுகிறது என்றாலும், நெடுங்காலம் வரை இத்தகைய முயற்சி எல்லாமே அடிப்படையில் கணக்கு போடும் இயந்திரங்களாகவே இருந்தன.

கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் பேஜ் 1837ல் முதல் முதலில் கம்ப்யூட்டருக்கான அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்தார். “அனல்டிகல் இன்ஜின்’ என்று சொல்லப்படும் இந்த இயந்திரத்துக்கான அடிப்படைகளை அவர் உருவாக்கித் தந்தாரே தவிர, உண்மையில் அவர் எந்த இயந்திரத்தையும் உருவாக்கவில்லை.

ஆனால் பன்ச் கார்டு மூலம் கட்டளை களை உள்ளீடு செய்யலாம் என்னும் அவரது யோசனையே பின்னால் கம்ப்யூட்டருக்கான ஆதாரமாக அமைந்தது. 1936ல் “ஆலன் டியுரிங்’ கம்ப்யூட்டர் இயந்திரத்துக்கு தேவையான சாமுந்திரிகா லட்சணம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

இரண்டாம் உலகப்போரின் போதே கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களுக்கான அவசியம் பெரிதும் உணரப்பட்டு அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தன. முதல் குறிப்பிடத்தக்க வெற்றி 1941ல் பதிவானது. ஜெர்மனி விஞ்ஞானிகள், ஙூ3 என்னும் பெயரில் இந்த கம்ப்யூட்டரை உருவாக்கினர்.

கம்ப்யூட்டர்களின் தாய்மொழியான “பைனரி அமைப்பின் கீழ் புரோகிராம்’களை செயல்படுத்தும் ஆற்றல் இதனிடம் இருந்தது. இருப்பினும் இதற்கு நினைவுத்திறன் கிடையாது.

ஆகவே தகவல்களை சேமித்து வைக்கும் ஆற்றலும் இருக்கவில்லை. இதே காலத்தில் அமெரிக்காவில் “அடனாசாப்ட் பெரி’ கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. இந்த கம்ப்யூட்டரும் பல சமன்பாடுகளை செயல்படுத்தும் ஆற்றலை மட்டுமே கொண்டிருந்தது.

அடுத்ததாக பிரிட்டனில் கொலசல் என்னும் ராட்சத கம்ப்யூட்டரும் (தோற்றத்தில் தான்) அமெரிக்காவில் ஹார்டுவர்டு மார்க்1 என்னும் கம்ப்யூட்டரும் வடிவமைக்கப் பட்டன.

ஆனால் நினைவுத்திறன் மற்றும் பல வேலைகளை செய்யும் ஆற்றலை பெற்றிருக்க வேண்டும் என்னும் அடிப்படை அம்சங்களில் ஏதாவது ஒன்றில் இவை முழுமையடைய வில்லை.

இதனிடையே இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலையில் சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சி சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தது. யுத்த காலத்தில் அமெரிக்காவின் “கொலாசஸ்’ கம்ப்யூட்டர் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்த மேக்ஸ் நியூமன் என்னும் நிபுணர் மான்செஸ்டர் பல்கலைக்கு கணித பேராசிரியராக வந்து சேர்ந்தார்.

அவரை தொடர்ந்து டாம் கில்பர்ன் மற்றும் பிரெட்டி வில்லியம்ஸ் ஆகிய நிபுணர்களும் வந்து சேர்ந்தனர். இவர்கள் கூட்டு முயற்சியின் பயனாக 1948ல் ஸ்மால் ஸ்கேன் எக்ஸ்பெரிண்டல் மெஷின் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டது.

முதல் நவீன கம்ப்யூட்டர் உருவான கதை இதுதான்! மான்செஸ்டர் இதன் 60வது ஆண்டு விழாவை பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. இந்த கம்ப்யூட்டரை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்தவர் இல்லை.

மூன்று பேர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர். அவர்களை கவுரவிக்கவும் மான்செஸ்டர் பல்கலை தீர்மானித்துள்ளது. இந்த கம்ப்யூட்டரின் வருகைக்கு பிறகே நவீன கம்ப்யூட்டரின் சகாப்தம் துவங்கியது. பல காலம் மான்செஸ்டர் அதன் மையமாக விளங்கியது.

1960 களின் கம்ப்யூட்டரின் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தை உணர்ந்து முதன் முதலில் “கம்ப்யூட்டர்அறிவியல்’ என்னும் தனிப்பாடப் பிரிவை மான்செஸ்டர் பல்கலை அறிமுகம் செய்தது. 1965ல் இந்த பாடப்பிரிவு அறிமுகமானது.

ஆனால் 1970களில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை இந்த இடத்தை பிடித்துக்கொண்டு விட்டது. அதன் பிறகு கம்ப்யூட்டர்களின் மையம் சிலிக்கான் பல்லத்தாக்கிற்கு மாறிவிட்டது!.

மூர்த்தி பெரிதானாலும் கீர்த்தி (மிகவும்) சிறியது. ஆரம்ப கால கம்ப்யூட்டர்களை இப்படித்தான் வர்ணிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய கம்ப்யூட்டர் ஒன்று தனது மணி விழாவை இப்போது கொண்டாடிக்கொண்டிருக்கிறது. டிஜிட்டல்60 என்னும் பெயரில் மான்செஸ்டர் நகரம் அதற்கு கோலாகலமாக தயாராகி இருக்கிறது.
.
இந்த பின்னணியில் அந்த கம்ப்யூட்டரின் அருமை பெருமைகளை கொஞ்சம் பார்ப்போம்.
குறிப்பிட்ட அந்த கம்ப்யூட்டரின் “கீர்த்தி’ சிறியதே தவிர சரித்திரத்தில் அதன் முக்கியத்துவம் மகத்தானது.

கம்ப்யூட்டர் வல்லுனர்கள் மத்தியில் “பேபி’ என்றே செல்லமாக குறிப்பிடப்படும் அந்த கம்ப்யூட்டர், அந்த கால வழக்கப்படி தனக்கென ஒரு பெயர்தொடராலேயே அழைக்கப் பட்டது. “ஸ்மால் ஸ்கேல் எக்ஸ்பரி மென்ட்ஸ் மெஷின்’ என்பது அதன் பெயர் சுருக்கமாக (எஸ்எஸ்இஎம்) கம்ப்யூட்டர் வரலாற்றை திரும்பிப்பார்க்கும்போது இந்த இயந்திரம் மாபெரும் மைல் கல்லாக காட்சி தருவதோடு, முதல் நவீன கம்ப்யூட்டர் என்னும் அந்தஸ்தையும் தாங்கி நிற்கிறது.

பல விதங்களில் இந்த கம்ப்யூட்டர் சிறப்பு வாய்ந்தது. ஒரு பெரிய அறையை கற்பனை செய்து கொள்ளுங்கள் இந்த கம்ப்யூட்டர் அந்த அறை அளவுக்கு பெரியதாக படைக்கப்பட்டது. அதனால் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் என்று பார்த்தால், தற்போதைய செல்போனில் இருக்கும் சிப்புகள் கூட மேம்பட்டதாக இருக்கும்.

ஆனால் பேபி என்று அழைக்கப்படும் இந்த கம்ப்யூட்டரில் என்ன விசேஷம் என்றால் இது சகல கலா வல்லவனாக இருந்தது என்பதுதான்! அதாவது பல வேலைகளை செய்யக்கூடிய திறன் படைத்ததாக அமைந்திருந்தது. அந்த காலத்தில் இது மிகப்பெரிய விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

அப்போதெல்லாம் அதாவது, 1940களில் கம்ப்யூட்டர்கள் மலை போன்ற தோற்றத்தோடு உருவாக்கப் பட்டாலும், அவை குறிப்பிட்ட “ஒரே’ ஒரு வேலையை மட்டுமே செய்து முடிக்கும் திறன் பெற்றிருந்தன. இரண்டாவதாக ஒரு வேலையை செய்ய வைக்க வேண்டும் என்றால் அந்த கம்ப்யூட்டரை மீண்டும் உருவாக்குவதை தவிர வேறு வழியில்லை.

ஆனால் “பேபி’ கம்ப்யூட்டர் இத்தகைய நிர்பந்தம் இல்லாமல் பல வேலையை செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப் பட்டிருந்தது. இதனை சாத்தியமாக்கும் வகையில் கொஞ்சம் போல நினைவுதிறனையும் (128 பைட்ஸ்) பெற்றிருந்தது.

இட்ட கட்டளைகளை நிறைவேற்றித்தரும் ஆற்றலை இந்த நினைவுத்திறனே சாத்தியமாக்கியது. இந்த காரணத்தினாலேயே இது உலகின் முதல் நவீன கம்ப்யூட்டர் என்ற அடைமொழியோடு மரியாதையோடு குறிப்பிடப்படுகிறது. புரோகிராம்களின் அடிப்படையில் செயல்படக்கூடியதாக இருந்ததா லேயே இன்றைய பர்சனல் கம்ப்யூட்டர்கள் லேப்டாப்கள் ஆகிய வற்றுக்கெல்லாம் முன்னோடியாகவும் புகழப்படுகிறது.

புராதன கால அபாகஸ் கருவியில் இருந்த கம்ப்யூட்டரின் வரலாறு துவங்கி விடுகிறது என்றாலும், நெடுங்காலம் வரை இத்தகைய முயற்சி எல்லாமே அடிப்படையில் கணக்கு போடும் இயந்திரங்களாகவே இருந்தன.

கம்ப்யூட்டரின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் பேஜ் 1837ல் முதல் முதலில் கம்ப்யூட்டருக்கான அடிப்படை கோட்பாடுகளை முன்வைத்தார். “அனல்டிகல் இன்ஜின்’ என்று சொல்லப்படும் இந்த இயந்திரத்துக்கான அடிப்படைகளை அவர் உருவாக்கித் தந்தாரே தவிர, உண்மையில் அவர் எந்த இயந்திரத்தையும் உருவாக்கவில்லை.

ஆனால் பன்ச் கார்டு மூலம் கட்டளை களை உள்ளீடு செய்யலாம் என்னும் அவரது யோசனையே பின்னால் கம்ப்யூட்டருக்கான ஆதாரமாக அமைந்தது. 1936ல் “ஆலன் டியுரிங்’ கம்ப்யூட்டர் இயந்திரத்துக்கு தேவையான சாமுந்திரிகா லட்சணம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

இரண்டாம் உலகப்போரின் போதே கம்ப்யூட்டர் போன்ற இயந்திரங்களுக்கான அவசியம் பெரிதும் உணரப்பட்டு அதற்கான முயற்சிகளும் நடைபெற்று வந்தன. முதல் குறிப்பிடத்தக்க வெற்றி 1941ல் பதிவானது. ஜெர்மனி விஞ்ஞானிகள், ஙூ3 என்னும் பெயரில் இந்த கம்ப்யூட்டரை உருவாக்கினர்.

கம்ப்யூட்டர்களின் தாய்மொழியான “பைனரி அமைப்பின் கீழ் புரோகிராம்’களை செயல்படுத்தும் ஆற்றல் இதனிடம் இருந்தது. இருப்பினும் இதற்கு நினைவுத்திறன் கிடையாது.

ஆகவே தகவல்களை சேமித்து வைக்கும் ஆற்றலும் இருக்கவில்லை. இதே காலத்தில் அமெரிக்காவில் “அடனாசாப்ட் பெரி’ கம்ப்யூட்டர் உருவாக்கப்பட்டது. இந்த கம்ப்யூட்டரும் பல சமன்பாடுகளை செயல்படுத்தும் ஆற்றலை மட்டுமே கொண்டிருந்தது.

அடுத்ததாக பிரிட்டனில் கொலசல் என்னும் ராட்சத கம்ப்யூட்டரும் (தோற்றத்தில் தான்) அமெரிக்காவில் ஹார்டுவர்டு மார்க்1 என்னும் கம்ப்யூட்டரும் வடிவமைக்கப் பட்டன.

ஆனால் நினைவுத்திறன் மற்றும் பல வேலைகளை செய்யும் ஆற்றலை பெற்றிருக்க வேண்டும் என்னும் அடிப்படை அம்சங்களில் ஏதாவது ஒன்றில் இவை முழுமையடைய வில்லை.

இதனிடையே இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலையில் சக்தி வாய்ந்த கம்ப்யூட்டரை உருவாக்கும் முயற்சி சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தது. யுத்த காலத்தில் அமெரிக்காவின் “கொலாசஸ்’ கம்ப்யூட்டர் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்த மேக்ஸ் நியூமன் என்னும் நிபுணர் மான்செஸ்டர் பல்கலைக்கு கணித பேராசிரியராக வந்து சேர்ந்தார்.

அவரை தொடர்ந்து டாம் கில்பர்ன் மற்றும் பிரெட்டி வில்லியம்ஸ் ஆகிய நிபுணர்களும் வந்து சேர்ந்தனர். இவர்கள் கூட்டு முயற்சியின் பயனாக 1948ல் ஸ்மால் ஸ்கேன் எக்ஸ்பெரிண்டல் மெஷின் வெற்றிகரமாக வடிவமைக்கப்பட்டது.

முதல் நவீன கம்ப்யூட்டர் உருவான கதை இதுதான்! மான்செஸ்டர் இதன் 60வது ஆண்டு விழாவை பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. இந்த கம்ப்யூட்டரை உருவாக்கிய குழுவில் இடம் பெற்றிருந்தவர் இல்லை.

மூன்று பேர் இன்னமும் உயிரோடு இருக்கின்றனர். அவர்களை கவுரவிக்கவும் மான்செஸ்டர் பல்கலை தீர்மானித்துள்ளது. இந்த கம்ப்யூட்டரின் வருகைக்கு பிறகே நவீன கம்ப்யூட்டரின் சகாப்தம் துவங்கியது. பல காலம் மான்செஸ்டர் அதன் மையமாக விளங்கியது.

1960 களின் கம்ப்யூட்டரின் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தை உணர்ந்து முதன் முதலில் “கம்ப்யூட்டர்அறிவியல்’ என்னும் தனிப்பாடப் பிரிவை மான்செஸ்டர் பல்கலை அறிமுகம் செய்தது. 1965ல் இந்த பாடப்பிரிவு அறிமுகமானது.

ஆனால் 1970களில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலை இந்த இடத்தை பிடித்துக்கொண்டு விட்டது. அதன் பிறகு கம்ப்யூட்டர்களின் மையம் சிலிக்கான் பல்லத்தாக்கிற்கு மாறிவிட்டது!.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.