டொமைன் ரகசியம் -3

நேற்றைய தொடர்ச்சி

உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த விவரம் தெரியும். பசுபிக் மகா கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டமாக இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கான இணையதள முகவரி டாட் டிகே என்று முடிகிறது. இந்த முகவரிக்கான உரிமையைத் தான் ஜூர்பியர் தனது பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டார்.
.

ஆனால் இந்த முகவரியை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை பெற அவர் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. காரணம் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருக்கிறதா? என்பது இணைய முகவரிகளை பதிவு செய்யும் மூல அமைப்பான ஐகானுக்கே தெரியவில்லை. எனவே இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஜூர்பியர் இல்லாத நாட்டின் பெயரை குறிப்பிட்டு கதை விடுகிறாரா என்று சந்தேகப்பட்டனர்.

பின்னர் ஜூர்பியர் அரும் பாடுபட்டு அந்த நாட்டின் இருப்பை நிரூபித்து அதற்கான உரிமையை பெற்றுக் கொண்டார். உண்மையில் 2001ம் ஆண்டு டொமைன் பெயர் உரிமையில் முதலீடு செய்ய அவர் முடிவு செய்த போது நான்கு நாட்டு முகவரிகளை பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது.

அவை பாலஸ்தீனம், கிழக்கு தைமூர், பிட்கைரன் மற்றும் டோகேலா. அதாவது இந்த நான்கு நாடுகளின் முகவரி உரிமையும் பதிவு செய்யப்படாமலேயே இருந்தது. பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு தைமூர் இரண்டுமே பிரச்சனை பூமிகளாக இருப்பதால் அந்நாடுகளின் முகவரிகள் பதிவு செய்யப்படாமல் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியது.

தினசரி வாழ்க்கையே செத்துப் பிழைக்கும் அனுபவமாக இருக்கும் போது டொமைன் பெயர் பற்றியெல்லாம் யோசிக்க யாருக்கு தோன்றும். இவற்றில் டோகேலா பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று ஜூர்பியர் தீர்மானித்தார். பதிவு செய்து கொண்டதுமே டாட் டிகே எனும் பெயரில் ஒரு திட்டத்தையும் தொடங்கினார்.

முன்னணி நிறுவனங்களை டிகே எனும் பதத்தோடு முடியும் முகவரிகளை பதிவு செய்து கொள்ள ஊக்குவிக்கும் திட்டமாக இது அமைந்தது. இந்த பெயரில் முகவரிகள் பதிவு செய்து கொள்ளப்படும் போது அவருக்கு ஒரு வருமானம் கிடைக்கும். அந்த பெயரில் உள்ள தளங்களில் கூகுல் விளம்பரங்களை இடம் பெற செய்து அதன் மூலமும் வருமானத்தை பெற முடியும்.

இவ்வாறு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை அவர் டோகேலா நாட்டிற்கு வழங்கி விடுகிறார். அதுதான் டாட் டிகே திட்டத்தின் முக்கிய பகுதி. இந்த திட்டம் டோகேலா நாட்டின் பொருளாதாரத்திற்கு பக்கபலமாக நிற்கும் வகையில் அமைந்துள்ளது. பசுபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இந்த தீவுக் கூட்ட நாட்டில் அதிகம் போனால் 1500 பேர் இருப்பார்கள். இந்த நாட்டில் உள்ளவர்களை விட இந்த நாட்டிலிருந்து வெளியே போய் வசிக்கும் டோகேலாவாசிகள்தான் அதிகம்.

நியூசிலாந்து நாட்டுக்கு அருகே உள்ளது இந்நாடு. அரசியல் ரீதியாக தனி நாடு அந்தஸ்து இல்லை. நியூசிலாந்துக்கு கீழ்பட்ட தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக இது அமைந்துள்ளது. நிதியுதவி உட்பட பல விஷயங் களுக்கு இந்நாடு நியூசிலாந்தைத் தான் நம்பி இருக்கிறது. 1994 வரை இந்நாடு தகவல் தொடர்புக்கு ரேடியோ தொலைபேசித்தான் நம்பி இருந்தது. அதன் பிறகு செயற்கைக் கோள் தொலைபேசிக்கு மாறியது. ஆனால் டாட் டிகே திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அந்நாட்டில் இன்டெர்நெட் தொலைபேசி வசதி சாத்தியமானது.

அதற்கு முன்பு இந்நாட்டில் மொத்தமே 12 கம்ப்யூட்டர்கள்தான் இருந்தன. ஆனால் டாட் டிகே வருவாய் மூலம் இன்டெர்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 200ஐ தொட்டது. அது மட்டுமல்லாமல் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இணையதளங்களின் மூலம் பாடல்களை டவுன்லோடு செய்வது, மை ஸ்பேஸ் போன்ற தளங்களை பார்ப்பது ஆகிய செயல் களிலும் ஈடுபட தொடங்கினர்.

இன்று இந்த நாட்டிற்கான பொருளாதாரத்தில் 10 சதவீத நிதி டாட் டிகே திட்டத்தின் மூலம் கிடைத்து கொண்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற வேண்டும் எனும் நோக்கத்தை இந்த திட்டம் நிறைவேற்றி வருவதாக டோகேலா நாட்டை சேர்ந்தவர்கள் பெருமைப்படுகின்றனர். இதற்காக இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிந்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் பஃகா பேட்டாய் என்கின்றனர். அதாவது அவர்கள் மொழியில் நன்றி என்று அர்த்தம்.

இப்படியாக ஜூர்பியர் டாட் டிகே முகவரிகளை பதிவு செய்வதன் மூலமே வருவாயை தேடிக் கொண்டு வருகிறார். இது குறுக்கு வழிதான். ஆனால் ஒரு நாட்டுக்கே உதவும் நியாயமான குறுக்கு வழி.

நேற்றைய தொடர்ச்சி

உலகில் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருப்பது உங்களுக்கு தெரியுமா? டச்சு தொழிலதிபர் ஜூர்பியருக்கு இந்த விவரம் தெரியும். பசுபிக் மகா கடலில் அமைந்திருக்கும் தீவுக் கூட்டமாக இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டுக்கான இணையதள முகவரி டாட் டிகே என்று முடிகிறது. இந்த முகவரிக்கான உரிமையைத் தான் ஜூர்பியர் தனது பெயரில் பதிவு செய்து வைத்துக் கொண்டார்.
.

ஆனால் இந்த முகவரியை பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை பெற அவர் மிகவும் கஷ்டப்பட வேண்டி இருந்தது. காரணம் டோகேலா எனும் பெயரில் ஒரு நாடு இருக்கிறதா? என்பது இணைய முகவரிகளை பதிவு செய்யும் மூல அமைப்பான ஐகானுக்கே தெரியவில்லை. எனவே இந்த அமைப்பில் உள்ளவர்கள் ஜூர்பியர் இல்லாத நாட்டின் பெயரை குறிப்பிட்டு கதை விடுகிறாரா என்று சந்தேகப்பட்டனர்.

பின்னர் ஜூர்பியர் அரும் பாடுபட்டு அந்த நாட்டின் இருப்பை நிரூபித்து அதற்கான உரிமையை பெற்றுக் கொண்டார். உண்மையில் 2001ம் ஆண்டு டொமைன் பெயர் உரிமையில் முதலீடு செய்ய அவர் முடிவு செய்த போது நான்கு நாட்டு முகவரிகளை பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு இருந்தது.

அவை பாலஸ்தீனம், கிழக்கு தைமூர், பிட்கைரன் மற்றும் டோகேலா. அதாவது இந்த நான்கு நாடுகளின் முகவரி உரிமையும் பதிவு செய்யப்படாமலேயே இருந்தது. பாலஸ்தீனம் மற்றும் கிழக்கு தைமூர் இரண்டுமே பிரச்சனை பூமிகளாக இருப்பதால் அந்நாடுகளின் முகவரிகள் பதிவு செய்யப்படாமல் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியது.

தினசரி வாழ்க்கையே செத்துப் பிழைக்கும் அனுபவமாக இருக்கும் போது டொமைன் பெயர் பற்றியெல்லாம் யோசிக்க யாருக்கு தோன்றும். இவற்றில் டோகேலா பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று ஜூர்பியர் தீர்மானித்தார். பதிவு செய்து கொண்டதுமே டாட் டிகே எனும் பெயரில் ஒரு திட்டத்தையும் தொடங்கினார்.

முன்னணி நிறுவனங்களை டிகே எனும் பதத்தோடு முடியும் முகவரிகளை பதிவு செய்து கொள்ள ஊக்குவிக்கும் திட்டமாக இது அமைந்தது. இந்த பெயரில் முகவரிகள் பதிவு செய்து கொள்ளப்படும் போது அவருக்கு ஒரு வருமானம் கிடைக்கும். அந்த பெயரில் உள்ள தளங்களில் கூகுல் விளம்பரங்களை இடம் பெற செய்து அதன் மூலமும் வருமானத்தை பெற முடியும்.

இவ்வாறு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை அவர் டோகேலா நாட்டிற்கு வழங்கி விடுகிறார். அதுதான் டாட் டிகே திட்டத்தின் முக்கிய பகுதி. இந்த திட்டம் டோகேலா நாட்டின் பொருளாதாரத்திற்கு பக்கபலமாக நிற்கும் வகையில் அமைந்துள்ளது. பசுபிக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் இந்த தீவுக் கூட்ட நாட்டில் அதிகம் போனால் 1500 பேர் இருப்பார்கள். இந்த நாட்டில் உள்ளவர்களை விட இந்த நாட்டிலிருந்து வெளியே போய் வசிக்கும் டோகேலாவாசிகள்தான் அதிகம்.

நியூசிலாந்து நாட்டுக்கு அருகே உள்ளது இந்நாடு. அரசியல் ரீதியாக தனி நாடு அந்தஸ்து இல்லை. நியூசிலாந்துக்கு கீழ்பட்ட தன்னாட்சி உரிமை கொண்ட நாடாக இது அமைந்துள்ளது. நிதியுதவி உட்பட பல விஷயங் களுக்கு இந்நாடு நியூசிலாந்தைத் தான் நம்பி இருக்கிறது. 1994 வரை இந்நாடு தகவல் தொடர்புக்கு ரேடியோ தொலைபேசித்தான் நம்பி இருந்தது. அதன் பிறகு செயற்கைக் கோள் தொலைபேசிக்கு மாறியது. ஆனால் டாட் டிகே திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அந்நாட்டில் இன்டெர்நெட் தொலைபேசி வசதி சாத்தியமானது.

அதற்கு முன்பு இந்நாட்டில் மொத்தமே 12 கம்ப்யூட்டர்கள்தான் இருந்தன. ஆனால் டாட் டிகே வருவாய் மூலம் இன்டெர்நெட் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 200ஐ தொட்டது. அது மட்டுமல்லாமல் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இணையதளங்களின் மூலம் பாடல்களை டவுன்லோடு செய்வது, மை ஸ்பேஸ் போன்ற தளங்களை பார்ப்பது ஆகிய செயல் களிலும் ஈடுபட தொடங்கினர்.

இன்று இந்த நாட்டிற்கான பொருளாதாரத்தில் 10 சதவீத நிதி டாட் டிகே திட்டத்தின் மூலம் கிடைத்து கொண்டிருக்கிறது. பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற வேண்டும் எனும் நோக்கத்தை இந்த திட்டம் நிறைவேற்றி வருவதாக டோகேலா நாட்டை சேர்ந்தவர்கள் பெருமைப்படுகின்றனர். இதற்காக இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிந்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் பஃகா பேட்டாய் என்கின்றனர். அதாவது அவர்கள் மொழியில் நன்றி என்று அர்த்தம்.

இப்படியாக ஜூர்பியர் டாட் டிகே முகவரிகளை பதிவு செய்வதன் மூலமே வருவாயை தேடிக் கொண்டு வருகிறார். இது குறுக்கு வழிதான். ஆனால் ஒரு நாட்டுக்கே உதவும் நியாயமான குறுக்கு வழி.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டொமைன் ரகசியம் -3

  1. ஆனால் .tk யில் முடியும் தளங்களில் எதோ பிரச்சனை உள்ளதாக கேள்விபட்டேன் அது உண்மையா?

    Reply
    1. cybersimman

      let me find out and let you know.

      Reply
  2. Very interesting and informative post.

    Reply
  3. செந்தழல் ரவி

Leave a Comment to Expatguru Cancel Reply

Your email address will not be published.