இது ஒய் 2 கே நாவல்

kevinஉலகை பிடித்தாட்டியது ஒரு பூதம். உலகையே மிரளச் செய்து, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த அந்த பூதம் கடைசி யில் ஒன்றுமில்லாமல் போனது! அதன் பிறகு உலகம் அதனை மறந்தும் போனது!

.
‘ஒய் 2 கே’வை நினைவில் இருக்கி றதா? புத்தாயிரமாவது நெருங்கி கொண்டிருந்த நிலையில், ‘எல்லாமே தவறாகப் போகிறது. என்னவெல் லாமோ விபரீதங்கள் நிகழப்போகிறது’ என்றெல்லாம் பீதியடையச் செய்தது.

ஒய் 2 கே என்னும் பூதம். கம்ப்யூட்டர் களுக்கு உலகம் பழகி, அவை வாழ்க்கையில் நீக்கமற கலந்துவிட்ட நேரத்தில்தான், சாப்ட்வேர் நிபுணர்கள் அந்த குண்டை எடுத்து வீசினர்.

2000-மாவது ஆண்டை தொட்ட துமே, கம்ப்யூட்டர்களுக்கு கிறுக்கு பிடித்துப்போய்விடும். அதனால், பிரளயமே ஏற்பட்டு பூலோகமே சர்வநாசமாகிவிடலாம். இப்படித்தான் திகிலை ஏற்படுத்தினர்.

ஆரம்பத்தில், சாமான்யர்கள் இது பற்றி கவலையில்லாமல் இருந்தனர். ஆனால் வையம் தழுவிய விழிப் புணர்வு இல்லாவிட்டால் மனித குலத்தை மாபெரும் அழிவிலிருந்து காக்க முடியாமல்போய்விடுமே என அஞ்சிய நிபுணர்கள் வெகு விரைவில் பாமரர்களுக்கு ‘ஒய் 2 கே’வை புரிய வைப்பதில் வெற்றி பெற்றனர். அதனால் ‘ஒய் 2 கே’ பூதம் ஒவ்வொரு வரையும் பிடித்தாட்டத் தொடங்கியது. பிரச்சனை என்னவென்று பலருக் கும் புரிந்தது.

வருடங்களை எழுதும் போது, கடைசி இரண்டு இலக்கத்தை மட்டும் எழுதும் பொதுவான சோம்பேறித்தனம் உண்டல்லவா? சாப்ட்வேர் நிபுணர் களும், இந்த சோம்பலுக்கு ஆட்பட்டு, வருடங்கள் வரும் இடங்களில் எல்லாம் கடைசி இரண்டு இலக்கத்தை மட்டுமே பயன்படுத்தினர். அதாவது ‘1947’ என குறிப்பிட வேண்டிய இடத்தில் ‘47’ என சுருக்கத்தை மட்டுமே கையாண்டனர்.

இதற்கு சோம்பல் மட்டுமே காரணம் இல்லை. சாப்ட்வேர் நிபுணர்களின் சிக்கன அணுகுமுறையே பிரதான காரணம். இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். கம்ப்யூட்ட ரின் செயல்திறனும், அதன் நினை வாற்றலும் பல மடங்கு அதிகமாகி இருக்கும் காலம் இது.

ஆனால், 1990-கள் வரை, கம்ப்யூட் டரின் நினைவாற்றல் கொள்ளளவுக்கு வரம்பு இருந்ததால், அதன் பயன் பாட்டில் சிக்கனம் அவசியமா னது. எனவேதான் புரோகிராம்களை எழுதும் போது, எங்கெல்லாம் மிச்சம் பிடிக்க முடியும் என பார்த்தனர். வருடங்களை குறிப்பிடும்போது இரண்டு இலக் கங்களை சுருக்கி எழுதும் குறுக்கு வழியை கையாள்வது இயல்பானதா கவே அமைந்தது.

துவக்கத்தில் இந்த சிக்கனத்தால் பெரும் பிரச்சனை வரக்கூடும் என ஒருவரும் நினைக்கவில்லை. ஆனால், ‘2000’மாவது ஆண்டை நெருங்கி கொண்டிருந்த நிலையில் தான், இது எத்தனை பெரும் தவறு என உரைத்தது.

‘47’-ஐ, 1947 என கம்ப் யூட்டர் புரிந்து கொள்ளும். ஆனால், 1999 முடிந்து 2000 வரும்போது, ‘00’ என்று மட்டும் அல்லவா காட்டும்! இதை கம்ப்யூட்டர் ‘2000’ என புரிந்து கொள்ளாமல், ‘1000’ என்றோ, ‘3000’ என்றோ புரிந்து கொண்டுவிட்டால் சிக்கல் இல்லையா? என்பது கேள்விகள் அலைமோதின. இல்லை-, ‘00’ என் னும் எண்களை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளாமலே குழம்பி நின்றால் என் னாகும் என்னும் அச்சமும் உண்டானது.

இன்சூரன்ஸ்அலுவலகம், வங்கிகள், வாகன அலுவலகம், சம்பள பட்டு வாடா, பதிவு போன்ற எங்கெல்லாம் வருடங்கள் முக்கிய பங்கு வகிக்கி றதோ, அங்கெல்லாம் இந்த பிரச்சனை யால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

பாதிப்பு இல்லை, விபரீதம் காத்திருப் பதாகவும் சொல்லப்பட்டது. ஏடிஎம் இயந்திரங்கள் கேள்வி கேட்காமல் பணத்தை வாரியிறைக்கலாம், மூடப் பட்ட லிப்ட்கள் திறக்கப்படாமல் போகலாம். நடுவழியில் விமானங்கள் திசைமாறலாம், சம்பள கணக்கு தாறுமாறாகலாம்…

இதுபோன்ற பெரும் பிழைகள் எல்லாம், புத்தாயிரமாண்டில் அடியெடுத்து வைத்ததும் சர்வ சகஜமாக நிகழலாம்! இப்படித்தான் பேசப்படலாயிற்று! இதற்கு மாற்று மருந்து தேட வேண் டிய அவசரத்தோடு, உலகம் முடுக்கி விடப்பட்டது. ‘ஒய் 2 கே’ பக் என்று சொல்லப்பட்ட, இப்பிரச்சனைக்கு தீர்வு காண, கம்ப்யூட்டரில் வருடங்கள் இடம் பெற்ற பகுதிகளை திருத்தி எழுத தொடங்கினர்.

குறித்த நேரத்திற் குள் இந்த பணியை நிறைவேற்றிவிட முடியுமா? என்னும் கேள்விக்குறி யோடு வீராவேசத்தில் மாற்று புரோ கிராம்கள் எழுதப்பட்டன. இந்த பர பரப்பு பீதியால் அதிகம் பயனடைந்தது இந்திய சாப்ட்வேர் புலிகள்தான். ‘ஒய் 2 கே’ மாற்று மருந்து ஒப்பந்தங்கள் பெரும்பாலும் அவர்களைத்தான் தேடி வந்தன. இதையெல்லாம் இன்று நினைத் துப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

எப்படி எல்லாம் பயம் காட்டப்பட்டது. கடைசியில் ஒன்றும் நடக்காமல் போனது. மற்ற வருடங்களைப் போலவே புத்தாயிரமாண்டும் கோலா கலத்தோடு பிறந்தது. கொண்டாட்டங் களின் மத்தியில் ‘ஒய் 2 கே’ மறந்தது. அதன் பிறகு காணாமலும் போனது! இப்போது எதற்கு இந்த பழங்கதை?

அமெரிக்கர் ஒருவர் இந்த கேள்வியை கேட்க வைப்பதற்காகவே ஒரு நாவலை எழுதியுள்ளார். ‘ஒய் 2 கே’ பிரச்சனை பூதாகரமாக அச்சுறுத்திவிட்டு, கடைசியில் ஒன்று மில்லாமல் போனது. உலகம் அதனை மறந்தும் விட்டது.

ஆனால் ‘கெவின் ஷே’ மறக்கத் தயாராக இல்லை. உலகம் அதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் விரும்பினார். அதற்காக அவர் எழுதியுள்ள நாவல்தான், ‘தி என்ட் ஆப் ஐ நோ இட்’. தமிழில் இதனை மொழிபெயர்த்தால், ‘நான் அறிந்த வகையிலான முடிவு’ என்பது போல வரும்.

நாவலின் தலைப்பே விசேஷமானது தான். உள்ள பக்கத்தின் சாராம்சத்தையும், நாவலின் நோக்கத்தையும், பொடி வைத்து பேசுவதுபோல பூடகமாக உணர்த்திவிடும் தலைப்பு.
தி என்ட்: அதாவது ‘முடிவு’ என்பது. ஒரு விதத்தில் உலகின் அழிவு என்னும் அர்த்தத்திலும் இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.

‘ஒய் 2 கே’ பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்த்த போது, அழிவுகாலம் நெருங்கிவருகிறது என்னும் அச்சமே மைய கருத்தாக இருந்தது. அப்படி எதுவும் நிகழவில்லை என்பது வரலாறு. இந்நிலையில், நான் அறிந்த வகையிலான ‘முடிவு’ என்னும் தலைப்பு, பேரழிவு கூச்சல்கள் எல்லாம் பொய்த்தப்போய், பிரச்சனை எங்கோபோய் முடிந்தது என்னும் மறைக்கப்பட்ட/மறக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

ஏ நாவல் ஆப் மில்லினியம் அன்சிட்டி, (புத்தாயிரமாண்டை உலுக்கிய கவலை பற்றிய நாவல்) என்னும் துணைத் தலைப்பு இதனை மேலும் அழகாக விளக்குகிறது. ‘ஒய் 2 கே’வை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் இல்லை இது. ‘ஒய் 2 கே’ பூதம் உலகை உலுக்கி கொண்டிருந்தபோது, நாளிதழ்களும் பத்திரிகைகளும் பிரச்சினையை விளக்கி, அலசும் வகையில் பக்கம் பக்கமாக எழுதி தள்ளின.

இந்த பரபரப்புக்கு தூபம் போடும் வகையில் நாவல்களும் எழுதப்பட்டன. திரைப்படங்கள் மற்றும் டாக்குமென்ட்ரிகளும் எடுக்கப்பட்டன. ‘ஒய் 2 கே’வை மையப்படுத்தினால் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாம் என்னும் நோக்கத்தில் உருவாக்கப் பட்டது.

ஆனால், ‘ஒய் 2 கே’ அலை ஓய்ந்த பிறகு, அதில் இனியும் ஆர்வம் இல்லை என்றான பிறகு, எழுதப்பட்ட முதல் நாவல் கெவின் ஷேவினுடையது. காலத்தை பின்னோக்கி பார்க்கும் முயற்சி என்பதால், ‘ஷே’ நாவலை நகைச்சுவை கலந்து, ‘ஒய் 2 கே’ கூத்து மீதான நையாண்டியாக எழுதியிருந் தார்.

‘ஒய் 2 கே’ நிகழ்வை திரும்பி பார்த்து, அப்போது நடந்ததை கேலியும் கிண்டலுமாக விவரித்திருப்பதால், நாவல் சுவாரசியமாக படிக்கும் வகையில் அமைந்துவிட்டது என்கின்றனர்.

‘ரான்டல் நைட்’தான் நாவலின் கதாநாயகன். அவரது பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. ரான்டல், குழந்தைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்துபவர். ரான்டல் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இன்டெர்நெட்டிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. இன்டெர் நெட்டில் ‘ஒய் 2 கே’ பிரச்சனையை படித்து தெரிந்து கொள்ளும் அவர் திடுக்கிட்டுப் போகிறார். தொடர்ந்து ‘ஒய் 2 கே’ பற்றி விரிவாக ஆய்வு செய்யத் தொடங்குகிறார்.

‘ஒய் 2 கே’ தொடர்பான குழுக்களில் நடக்கும் விவாதங்களிலும் பங்கேற்கிறார். விளைவு ரான்டலை பீதி பற்றிக் கொள்கிறது. ‘ஒய் 2 கே’வால் உலகிற்கு கேடு வரப்போகிறது என பதறிப்போய் எதிர்வர உள்ள பேரழிவை தடுத்து நிறுத்த ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடிக்கிறார்.

இப்படியொரு பூதம் தாக்குவதற்கு தயாராக உள்ள நிலையில் உலகமோ அதை அறியாமல் இருக்கிறதே என்றும் படபடக்கிறார். அவ்வாறுதான், உலகை காக்கும் மாபெரும் பொறுப்பை தனது தோள்களில் சுமக்க வேண்டும் என முடிவு செய்து, வேலையை உதறித்தள்ளிவிட்டு, நாடு தழுவிய விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்கிறார்.

‘ஒய் 2 கே’ பிரச்சனை தொடர்பான சகல விவரங்களையும் கையில் வைத்துக் கொண்டு ‘நான் சொல்வதை கேளுங்கள்’ என ஊர் ஊராக சென்று மக்களிடம் மன்றாடுகிறார். ஆபத்தை அறியாமல் அலட்சியமாக இருக்கின்றன என பதறும் அவரை மற்றவர்கள் கிறுக்கனாக பார்க்கின்றனர்.

கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பிரச்சனையின் பிரம்மாண்டத் திலும் அதை பிறருக்கு உணர்த்துவதிலும் மூழ்கிப்போயிருக்கும் ரான்டல், தான் திரட்டி வைத்திருக்கும் விவரங்களை எடுத்துச் சொல்ல என்னை நம்புங்கள் என மன்றாடுகிறார்.

‘ஒய் 2 கே’ வெடிகுண்டு பூமி மீது வெடிக்க காத்திருக்க அமெரிக்காவோ, அதிபரின் காதலி பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறதே என கொதித்து போகும் ரான்டல், அடுத்த அடுத்த ஊர்களுக்கு சென்று பேசிப்பார்க்கிறார்.

ரான்டல் பயமும் கவலையும் உண்மை தானா, உலகம் விழித்துக் கொள்ளுமா? என்னும் கேள்விகளோடு-, அவரது பயணம் தொடர்கிறது. கடைசியில் ஒன்றுமே ஆகவில்லை என்னும் உண்மை அறிந்த நிலையில் ரான்டலின் பயணத்தை பின் தொடர்வது சுவையாகவே இருப்பதாக விமர்சகர்கள் பாராட்டுகின்றனர்.

அந்த வகையில் சமகால நிகழ்வு தொடர்பான மிகச் சிறந்த நையாண்டியாக நாவல் அமைகிறது. ‘ஒய் 2 கே’ அச்சம் தவறானது மட்டம் அல்ல, தவரைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் கெவின் ஷே, மோசமான நிகழ்வுகள் நடக்கும் என்று உலகம் ஏன் நம்புகிறது என்னும் கேள்வியை நாவல் மூலம் எழுப்பியிருப்பதாக சொல்கிறார்.

பரபரப்பின் உச்சநிலையை விவரித்து, அதன் ஆதார இயல்புகளையும் அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். அமெரிக்காவின் போஸ்டனில் பிறந்து கேம்பிரிட்ஜில் படித்து, பின் உளவியல் பட்டமும் பெற்ற, ஷேவுக்கு சாப்ட்வேர் துறையில் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் இருந்தது. ‘ஒய் 2 கே’ தொடர்பான அதீத பரபரப்பால் ஏற்பட்ட தாக்கத்தையே நகைச்சுவையோடு நாவலாக்கி இருக்கிறேன் என்கிறார் அவர்.

‘மெக்ஸ்வேனி’ என்னும் நகைச்சுவை தளத்தில் கட்டுரைகள் எழுதி தனது நையாண்டி பாணிக்கு பட்டை தீட்டிக் கொண்டது நாவலில் அவருக்கு கைகொடுத்தது. ““டேகர் நேஷன்’ என்னும் இணையதளத்தை நடத்தி வரும் அவர், நாவலுக்காக ‘கேஷே’ டாட் காம் என்னும் தனிப்பகுதியை உருவாக்கி உள்ளார்.
—————

link;
www.kshay.com

kevinஉலகை பிடித்தாட்டியது ஒரு பூதம். உலகையே மிரளச் செய்து, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த அந்த பூதம் கடைசி யில் ஒன்றுமில்லாமல் போனது! அதன் பிறகு உலகம் அதனை மறந்தும் போனது!

.
‘ஒய் 2 கே’வை நினைவில் இருக்கி றதா? புத்தாயிரமாவது நெருங்கி கொண்டிருந்த நிலையில், ‘எல்லாமே தவறாகப் போகிறது. என்னவெல் லாமோ விபரீதங்கள் நிகழப்போகிறது’ என்றெல்லாம் பீதியடையச் செய்தது.

ஒய் 2 கே என்னும் பூதம். கம்ப்யூட்டர் களுக்கு உலகம் பழகி, அவை வாழ்க்கையில் நீக்கமற கலந்துவிட்ட நேரத்தில்தான், சாப்ட்வேர் நிபுணர்கள் அந்த குண்டை எடுத்து வீசினர்.

2000-மாவது ஆண்டை தொட்ட துமே, கம்ப்யூட்டர்களுக்கு கிறுக்கு பிடித்துப்போய்விடும். அதனால், பிரளயமே ஏற்பட்டு பூலோகமே சர்வநாசமாகிவிடலாம். இப்படித்தான் திகிலை ஏற்படுத்தினர்.

ஆரம்பத்தில், சாமான்யர்கள் இது பற்றி கவலையில்லாமல் இருந்தனர். ஆனால் வையம் தழுவிய விழிப் புணர்வு இல்லாவிட்டால் மனித குலத்தை மாபெரும் அழிவிலிருந்து காக்க முடியாமல்போய்விடுமே என அஞ்சிய நிபுணர்கள் வெகு விரைவில் பாமரர்களுக்கு ‘ஒய் 2 கே’வை புரிய வைப்பதில் வெற்றி பெற்றனர். அதனால் ‘ஒய் 2 கே’ பூதம் ஒவ்வொரு வரையும் பிடித்தாட்டத் தொடங்கியது. பிரச்சனை என்னவென்று பலருக் கும் புரிந்தது.

வருடங்களை எழுதும் போது, கடைசி இரண்டு இலக்கத்தை மட்டும் எழுதும் பொதுவான சோம்பேறித்தனம் உண்டல்லவா? சாப்ட்வேர் நிபுணர் களும், இந்த சோம்பலுக்கு ஆட்பட்டு, வருடங்கள் வரும் இடங்களில் எல்லாம் கடைசி இரண்டு இலக்கத்தை மட்டுமே பயன்படுத்தினர். அதாவது ‘1947’ என குறிப்பிட வேண்டிய இடத்தில் ‘47’ என சுருக்கத்தை மட்டுமே கையாண்டனர்.

இதற்கு சோம்பல் மட்டுமே காரணம் இல்லை. சாப்ட்வேர் நிபுணர்களின் சிக்கன அணுகுமுறையே பிரதான காரணம். இப்போது நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். கம்ப்யூட்ட ரின் செயல்திறனும், அதன் நினை வாற்றலும் பல மடங்கு அதிகமாகி இருக்கும் காலம் இது.

ஆனால், 1990-கள் வரை, கம்ப்யூட் டரின் நினைவாற்றல் கொள்ளளவுக்கு வரம்பு இருந்ததால், அதன் பயன் பாட்டில் சிக்கனம் அவசியமா னது. எனவேதான் புரோகிராம்களை எழுதும் போது, எங்கெல்லாம் மிச்சம் பிடிக்க முடியும் என பார்த்தனர். வருடங்களை குறிப்பிடும்போது இரண்டு இலக் கங்களை சுருக்கி எழுதும் குறுக்கு வழியை கையாள்வது இயல்பானதா கவே அமைந்தது.

துவக்கத்தில் இந்த சிக்கனத்தால் பெரும் பிரச்சனை வரக்கூடும் என ஒருவரும் நினைக்கவில்லை. ஆனால், ‘2000’மாவது ஆண்டை நெருங்கி கொண்டிருந்த நிலையில் தான், இது எத்தனை பெரும் தவறு என உரைத்தது.

‘47’-ஐ, 1947 என கம்ப் யூட்டர் புரிந்து கொள்ளும். ஆனால், 1999 முடிந்து 2000 வரும்போது, ‘00’ என்று மட்டும் அல்லவா காட்டும்! இதை கம்ப்யூட்டர் ‘2000’ என புரிந்து கொள்ளாமல், ‘1000’ என்றோ, ‘3000’ என்றோ புரிந்து கொண்டுவிட்டால் சிக்கல் இல்லையா? என்பது கேள்விகள் அலைமோதின. இல்லை-, ‘00’ என் னும் எண்களை கம்ப்யூட்டர் புரிந்து கொள்ளாமலே குழம்பி நின்றால் என் னாகும் என்னும் அச்சமும் உண்டானது.

இன்சூரன்ஸ்அலுவலகம், வங்கிகள், வாகன அலுவலகம், சம்பள பட்டு வாடா, பதிவு போன்ற எங்கெல்லாம் வருடங்கள் முக்கிய பங்கு வகிக்கி றதோ, அங்கெல்லாம் இந்த பிரச்சனை யால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று அஞ்சப்பட்டது.

பாதிப்பு இல்லை, விபரீதம் காத்திருப் பதாகவும் சொல்லப்பட்டது. ஏடிஎம் இயந்திரங்கள் கேள்வி கேட்காமல் பணத்தை வாரியிறைக்கலாம், மூடப் பட்ட லிப்ட்கள் திறக்கப்படாமல் போகலாம். நடுவழியில் விமானங்கள் திசைமாறலாம், சம்பள கணக்கு தாறுமாறாகலாம்…

இதுபோன்ற பெரும் பிழைகள் எல்லாம், புத்தாயிரமாண்டில் அடியெடுத்து வைத்ததும் சர்வ சகஜமாக நிகழலாம்! இப்படித்தான் பேசப்படலாயிற்று! இதற்கு மாற்று மருந்து தேட வேண் டிய அவசரத்தோடு, உலகம் முடுக்கி விடப்பட்டது. ‘ஒய் 2 கே’ பக் என்று சொல்லப்பட்ட, இப்பிரச்சனைக்கு தீர்வு காண, கம்ப்யூட்டரில் வருடங்கள் இடம் பெற்ற பகுதிகளை திருத்தி எழுத தொடங்கினர்.

குறித்த நேரத்திற் குள் இந்த பணியை நிறைவேற்றிவிட முடியுமா? என்னும் கேள்விக்குறி யோடு வீராவேசத்தில் மாற்று புரோ கிராம்கள் எழுதப்பட்டன. இந்த பர பரப்பு பீதியால் அதிகம் பயனடைந்தது இந்திய சாப்ட்வேர் புலிகள்தான். ‘ஒய் 2 கே’ மாற்று மருந்து ஒப்பந்தங்கள் பெரும்பாலும் அவர்களைத்தான் தேடி வந்தன. இதையெல்லாம் இன்று நினைத் துப் பார்த்தால் வியப்பாக இருக்கும்.

எப்படி எல்லாம் பயம் காட்டப்பட்டது. கடைசியில் ஒன்றும் நடக்காமல் போனது. மற்ற வருடங்களைப் போலவே புத்தாயிரமாண்டும் கோலா கலத்தோடு பிறந்தது. கொண்டாட்டங் களின் மத்தியில் ‘ஒய் 2 கே’ மறந்தது. அதன் பிறகு காணாமலும் போனது! இப்போது எதற்கு இந்த பழங்கதை?

அமெரிக்கர் ஒருவர் இந்த கேள்வியை கேட்க வைப்பதற்காகவே ஒரு நாவலை எழுதியுள்ளார். ‘ஒய் 2 கே’ பிரச்சனை பூதாகரமாக அச்சுறுத்திவிட்டு, கடைசியில் ஒன்று மில்லாமல் போனது. உலகம் அதனை மறந்தும் விட்டது.

ஆனால் ‘கெவின் ஷே’ மறக்கத் தயாராக இல்லை. உலகம் அதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் விரும்பினார். அதற்காக அவர் எழுதியுள்ள நாவல்தான், ‘தி என்ட் ஆப் ஐ நோ இட்’. தமிழில் இதனை மொழிபெயர்த்தால், ‘நான் அறிந்த வகையிலான முடிவு’ என்பது போல வரும்.

நாவலின் தலைப்பே விசேஷமானது தான். உள்ள பக்கத்தின் சாராம்சத்தையும், நாவலின் நோக்கத்தையும், பொடி வைத்து பேசுவதுபோல பூடகமாக உணர்த்திவிடும் தலைப்பு.
தி என்ட்: அதாவது ‘முடிவு’ என்பது. ஒரு விதத்தில் உலகின் அழிவு என்னும் அர்த்தத்திலும் இங்கு பயன்படுத்தப் பட்டுள்ளது.

‘ஒய் 2 கே’ பிரச்சனை உலகின் கவனத்தை ஈர்த்த போது, அழிவுகாலம் நெருங்கிவருகிறது என்னும் அச்சமே மைய கருத்தாக இருந்தது. அப்படி எதுவும் நிகழவில்லை என்பது வரலாறு. இந்நிலையில், நான் அறிந்த வகையிலான ‘முடிவு’ என்னும் தலைப்பு, பேரழிவு கூச்சல்கள் எல்லாம் பொய்த்தப்போய், பிரச்சனை எங்கோபோய் முடிந்தது என்னும் மறைக்கப்பட்ட/மறக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

ஏ நாவல் ஆப் மில்லினியம் அன்சிட்டி, (புத்தாயிரமாண்டை உலுக்கிய கவலை பற்றிய நாவல்) என்னும் துணைத் தலைப்பு இதனை மேலும் அழகாக விளக்குகிறது. ‘ஒய் 2 கே’வை மையமாக வைத்து எழுதப்பட்ட முதல் நாவல் இல்லை இது. ‘ஒய் 2 கே’ பூதம் உலகை உலுக்கி கொண்டிருந்தபோது, நாளிதழ்களும் பத்திரிகைகளும் பிரச்சினையை விளக்கி, அலசும் வகையில் பக்கம் பக்கமாக எழுதி தள்ளின.

இந்த பரபரப்புக்கு தூபம் போடும் வகையில் நாவல்களும் எழுதப்பட்டன. திரைப்படங்கள் மற்றும் டாக்குமென்ட்ரிகளும் எடுக்கப்பட்டன. ‘ஒய் 2 கே’வை மையப்படுத்தினால் சுலபமாக வெற்றிபெற்றுவிடலாம் என்னும் நோக்கத்தில் உருவாக்கப் பட்டது.

ஆனால், ‘ஒய் 2 கே’ அலை ஓய்ந்த பிறகு, அதில் இனியும் ஆர்வம் இல்லை என்றான பிறகு, எழுதப்பட்ட முதல் நாவல் கெவின் ஷேவினுடையது. காலத்தை பின்னோக்கி பார்க்கும் முயற்சி என்பதால், ‘ஷே’ நாவலை நகைச்சுவை கலந்து, ‘ஒய் 2 கே’ கூத்து மீதான நையாண்டியாக எழுதியிருந் தார்.

‘ஒய் 2 கே’ நிகழ்வை திரும்பி பார்த்து, அப்போது நடந்ததை கேலியும் கிண்டலுமாக விவரித்திருப்பதால், நாவல் சுவாரசியமாக படிக்கும் வகையில் அமைந்துவிட்டது என்கின்றனர்.

‘ரான்டல் நைட்’தான் நாவலின் கதாநாயகன். அவரது பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. ரான்டல், குழந்தைகளுக்கான பொம்மலாட்ட நிகழ்ச்சியை நடத்துபவர். ரான்டல் பள்ளி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இன்டெர்நெட்டிலும் அவருக்கு ஆர்வம் உண்டு. இன்டெர் நெட்டில் ‘ஒய் 2 கே’ பிரச்சனையை படித்து தெரிந்து கொள்ளும் அவர் திடுக்கிட்டுப் போகிறார். தொடர்ந்து ‘ஒய் 2 கே’ பற்றி விரிவாக ஆய்வு செய்யத் தொடங்குகிறார்.

‘ஒய் 2 கே’ தொடர்பான குழுக்களில் நடக்கும் விவாதங்களிலும் பங்கேற்கிறார். விளைவு ரான்டலை பீதி பற்றிக் கொள்கிறது. ‘ஒய் 2 கே’வால் உலகிற்கு கேடு வரப்போகிறது என பதறிப்போய் எதிர்வர உள்ள பேரழிவை தடுத்து நிறுத்த ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடிக்கிறார்.

இப்படியொரு பூதம் தாக்குவதற்கு தயாராக உள்ள நிலையில் உலகமோ அதை அறியாமல் இருக்கிறதே என்றும் படபடக்கிறார். அவ்வாறுதான், உலகை காக்கும் மாபெரும் பொறுப்பை தனது தோள்களில் சுமக்க வேண்டும் என முடிவு செய்து, வேலையை உதறித்தள்ளிவிட்டு, நாடு தழுவிய விழிப்புணர்வு பயணத்தை மேற்கொள்கிறார்.

‘ஒய் 2 கே’ பிரச்சனை தொடர்பான சகல விவரங்களையும் கையில் வைத்துக் கொண்டு ‘நான் சொல்வதை கேளுங்கள்’ என ஊர் ஊராக சென்று மக்களிடம் மன்றாடுகிறார். ஆபத்தை அறியாமல் அலட்சியமாக இருக்கின்றன என பதறும் அவரை மற்றவர்கள் கிறுக்கனாக பார்க்கின்றனர்.

கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாவதை கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பிரச்சனையின் பிரம்மாண்டத் திலும் அதை பிறருக்கு உணர்த்துவதிலும் மூழ்கிப்போயிருக்கும் ரான்டல், தான் திரட்டி வைத்திருக்கும் விவரங்களை எடுத்துச் சொல்ல என்னை நம்புங்கள் என மன்றாடுகிறார்.

‘ஒய் 2 கே’ வெடிகுண்டு பூமி மீது வெடிக்க காத்திருக்க அமெரிக்காவோ, அதிபரின் காதலி பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறதே என கொதித்து போகும் ரான்டல், அடுத்த அடுத்த ஊர்களுக்கு சென்று பேசிப்பார்க்கிறார்.

ரான்டல் பயமும் கவலையும் உண்மை தானா, உலகம் விழித்துக் கொள்ளுமா? என்னும் கேள்விகளோடு-, அவரது பயணம் தொடர்கிறது. கடைசியில் ஒன்றுமே ஆகவில்லை என்னும் உண்மை அறிந்த நிலையில் ரான்டலின் பயணத்தை பின் தொடர்வது சுவையாகவே இருப்பதாக விமர்சகர்கள் பாராட்டுகின்றனர்.

அந்த வகையில் சமகால நிகழ்வு தொடர்பான மிகச் சிறந்த நையாண்டியாக நாவல் அமைகிறது. ‘ஒய் 2 கே’ அச்சம் தவறானது மட்டம் அல்ல, தவரைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்லும் கெவின் ஷே, மோசமான நிகழ்வுகள் நடக்கும் என்று உலகம் ஏன் நம்புகிறது என்னும் கேள்வியை நாவல் மூலம் எழுப்பியிருப்பதாக சொல்கிறார்.

பரபரப்பின் உச்சநிலையை விவரித்து, அதன் ஆதார இயல்புகளையும் அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். அமெரிக்காவின் போஸ்டனில் பிறந்து கேம்பிரிட்ஜில் படித்து, பின் உளவியல் பட்டமும் பெற்ற, ஷேவுக்கு சாப்ட்வேர் துறையில் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் இருந்தது. ‘ஒய் 2 கே’ தொடர்பான அதீத பரபரப்பால் ஏற்பட்ட தாக்கத்தையே நகைச்சுவையோடு நாவலாக்கி இருக்கிறேன் என்கிறார் அவர்.

‘மெக்ஸ்வேனி’ என்னும் நகைச்சுவை தளத்தில் கட்டுரைகள் எழுதி தனது நையாண்டி பாணிக்கு பட்டை தீட்டிக் கொண்டது நாவலில் அவருக்கு கைகொடுத்தது. ““டேகர் நேஷன்’ என்னும் இணையதளத்தை நடத்தி வரும் அவர், நாவலுக்காக ‘கேஷே’ டாட் காம் என்னும் தனிப்பகுதியை உருவாக்கி உள்ளார்.
—————

link;
www.kshay.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.