எஸ்.எம்.எஸ். வழி நாவல்

last1பின்லாந்தை நோக்கியா நாடு என்றும் சொல்லலாம். செல்போன் தேசம் என்றும் சொல்லலாம். இரண்டுமே பொருத்தமாகத்தான் இருக்கும். செல்போன் மற்றும் செல்போன் சார்ந்த சேவைகளை பயன்படுத் துவதில் இந்த ஸ்கான்டிநேவிய தேசம் முன்னிலையில் இருக்கிறது.
.
செல்போன் பயன்பாட்டையும், எஸ்எம்எஸ்சையும், ஆரம்பத்திலேயே கச்சிதமாக பிடித்து கொண்ட தேசங் களில் பின்லாந்தும் ஒன்று. பேசுவது போலவே, எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொள்வது பின்லாந்து வாசிகளுக்கு சர்வசகஜமாகியிருக்கிறது.

இதன் அடையாளமாக தற்போது பின்லாந்தில் எஸ்எம்எஸ் மூலமே எழுதப்பட்ட நாவல் வெளியாகியிருக்கிறது. எஸ்எம்எஸ் இலக்கிய வாகனமாக கருதப்பட்டு அந்த வகையில், அதன் பயன்பாடு, கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் வெகு பிரபலமாக இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளும் இதில் மும்முரமாக இருக்கின்றன. எஸ்எம்எஸ் மூலமே நாவல்கள் எழுதப்படும் அளவுக்கு நிலமை முன்னேறியிருக்கிறது. இந்நிலையில் பின்லாந்து, எஸ்எம்எஸ் மூலம் எழுதப்பட்ட நாவலை பதிப்பித்திருக்கிறது. எஸ்எம்எஸ் சார்ந்த பெரும்பாலான இலக்கிய முயற்சிகள், வாசகர்களிடம் படைப்புகளை கொண்டு செல்வதற்கான வாகனமாக அதனை பயன்படுத்த முற்பட்டிருக்கிறது.

எஸ்எம்எஸ் செய்திகள் மூலம் படைப்புகளை அனுப்பி விடுவது சுலபமாக இருந்து வருகிறது. ஆனால் பின்லாந்து நாவல் கொஞ்சம் வித்தியாசமானது. இது எஸ்எம்எஸ் செய்திகளாலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது.

தி லாஸ்ட் மெசேஜஸ் என்பது இந்த நாவலின் தலைப்பு. அதாவது கடைசி செய்திகள் என்று பொருள் வரும். பின்லாந்தை சேர்ந்த ஐடி ஆசாமி ஒருவர், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வருகிறார்.

இந்த நாடுகளில் புதிய அனுபவத்தை பெறும் அவர், சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு தொடர்பு கொள்வதற்காக எஸ்எம்எஸ் செய்திகளை பயன்படுத்துகிறார்.

இப்படி அவர் அனுப்பி வைக்கும் எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் அவருக்கு வந்து சேரும் எஸ்எம்எஸ் செய்திகள் ஆகியவற்றை மட்டும் கொண்டே இந்த முழு நாவலும் எழுதப்பட்டுள்ளது.

சற்றேறக்குறைய 332 பக்கங்களை கொண்ட இந்த நாவல், மொத்தம் 1000 எஸ்எம்எஸ் செய்திகளை கொண்டிருக்கிறது. பின்லாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஹன்னு லுன்ட்டியாலா இந்த கற்பனை பாத்திரத்தை உருவாக்கி நாவலை எழுதி முடித்திருக்கிறார்.

எஸ்எம்எஸ்சில் பார்க்கக் கூடிய இலக்கண பிழை, எழுத்து பிழை உள்ளிட்ட அனைத்து குணாதிசயங் களையும் இந்த நாவலில் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

மேலோட்டமாக பார்க்கும் பொழுது எஸ்எம்எஸ் செய்திகளுக்கு வரையறை இருப்பது போல தோன்றினாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் எஸ்எம்எஸ் செய்திகள் எப்படி நம்முடைய மன உணர்வுகள் மற்றும் தனி குணத்தை பிரதிபலிக்க போதுமானதாக இருக்கிறது என்பதை இந்த நாவல் உணர்த்தும் என்று அவர் கூறுகிறார்.

இந்த நாவல் வாசகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. அதன் காரணமாக இது மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு வெளியிடப்பட உள்ளதாம்.

பின்லாந்துவாசிகள் எதற்கெடுத் தாலும் செல்போனை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பது, இந்த நாவலை அவர்கள் மத்தியில் எளிதாக கொண்டு சேர்த்துள்ளது.

அண்மையில் பின்லாந்து பிரதமர், வான்ஹனன் தன்னுடைய காதலியை பிரிந்த போது, எஸ்எம்எஸ் மூலமே உறவை முறித்து கொண்டதாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு பின்லாந்தில் எஸ்எம்எஸ் கலாச்சாரம் செழிப்பாக இருக்கிறது.
—–

last1பின்லாந்தை நோக்கியா நாடு என்றும் சொல்லலாம். செல்போன் தேசம் என்றும் சொல்லலாம். இரண்டுமே பொருத்தமாகத்தான் இருக்கும். செல்போன் மற்றும் செல்போன் சார்ந்த சேவைகளை பயன்படுத் துவதில் இந்த ஸ்கான்டிநேவிய தேசம் முன்னிலையில் இருக்கிறது.
.
செல்போன் பயன்பாட்டையும், எஸ்எம்எஸ்சையும், ஆரம்பத்திலேயே கச்சிதமாக பிடித்து கொண்ட தேசங் களில் பின்லாந்தும் ஒன்று. பேசுவது போலவே, எஸ்எம்எஸ் மூலம் தொடர்பு கொள்வது பின்லாந்து வாசிகளுக்கு சர்வசகஜமாகியிருக்கிறது.

இதன் அடையாளமாக தற்போது பின்லாந்தில் எஸ்எம்எஸ் மூலமே எழுதப்பட்ட நாவல் வெளியாகியிருக்கிறது. எஸ்எம்எஸ் இலக்கிய வாகனமாக கருதப்பட்டு அந்த வகையில், அதன் பயன்பாடு, கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் வெகு பிரபலமாக இருக்கிறது.

ஐரோப்பிய நாடுகளும் இதில் மும்முரமாக இருக்கின்றன. எஸ்எம்எஸ் மூலமே நாவல்கள் எழுதப்படும் அளவுக்கு நிலமை முன்னேறியிருக்கிறது. இந்நிலையில் பின்லாந்து, எஸ்எம்எஸ் மூலம் எழுதப்பட்ட நாவலை பதிப்பித்திருக்கிறது. எஸ்எம்எஸ் சார்ந்த பெரும்பாலான இலக்கிய முயற்சிகள், வாசகர்களிடம் படைப்புகளை கொண்டு செல்வதற்கான வாகனமாக அதனை பயன்படுத்த முற்பட்டிருக்கிறது.

எஸ்எம்எஸ் செய்திகள் மூலம் படைப்புகளை அனுப்பி விடுவது சுலபமாக இருந்து வருகிறது. ஆனால் பின்லாந்து நாவல் கொஞ்சம் வித்தியாசமானது. இது எஸ்எம்எஸ் செய்திகளாலேயே உருவாக்கப் பட்டிருக்கிறது.

தி லாஸ்ட் மெசேஜஸ் என்பது இந்த நாவலின் தலைப்பு. அதாவது கடைசி செய்திகள் என்று பொருள் வரும். பின்லாந்தை சேர்ந்த ஐடி ஆசாமி ஒருவர், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் வருகிறார்.

இந்த நாடுகளில் புதிய அனுபவத்தை பெறும் அவர், சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு தொடர்பு கொள்வதற்காக எஸ்எம்எஸ் செய்திகளை பயன்படுத்துகிறார்.

இப்படி அவர் அனுப்பி வைக்கும் எஸ்எம்எஸ் செய்திகள் மற்றும் அவருக்கு வந்து சேரும் எஸ்எம்எஸ் செய்திகள் ஆகியவற்றை மட்டும் கொண்டே இந்த முழு நாவலும் எழுதப்பட்டுள்ளது.

சற்றேறக்குறைய 332 பக்கங்களை கொண்ட இந்த நாவல், மொத்தம் 1000 எஸ்எம்எஸ் செய்திகளை கொண்டிருக்கிறது. பின்லாந்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரான ஹன்னு லுன்ட்டியாலா இந்த கற்பனை பாத்திரத்தை உருவாக்கி நாவலை எழுதி முடித்திருக்கிறார்.

எஸ்எம்எஸ்சில் பார்க்கக் கூடிய இலக்கண பிழை, எழுத்து பிழை உள்ளிட்ட அனைத்து குணாதிசயங் களையும் இந்த நாவலில் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

மேலோட்டமாக பார்க்கும் பொழுது எஸ்எம்எஸ் செய்திகளுக்கு வரையறை இருப்பது போல தோன்றினாலும், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் எஸ்எம்எஸ் செய்திகள் எப்படி நம்முடைய மன உணர்வுகள் மற்றும் தனி குணத்தை பிரதிபலிக்க போதுமானதாக இருக்கிறது என்பதை இந்த நாவல் உணர்த்தும் என்று அவர் கூறுகிறார்.

இந்த நாவல் வாசகர்கள் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. அதன் காரணமாக இது மற்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டு வெளியிடப்பட உள்ளதாம்.

பின்லாந்துவாசிகள் எதற்கெடுத் தாலும் செல்போனை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பது, இந்த நாவலை அவர்கள் மத்தியில் எளிதாக கொண்டு சேர்த்துள்ளது.

அண்மையில் பின்லாந்து பிரதமர், வான்ஹனன் தன்னுடைய காதலியை பிரிந்த போது, எஸ்எம்எஸ் மூலமே உறவை முறித்து கொண்டதாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அளவுக்கு பின்லாந்தில் எஸ்எம்எஸ் கலாச்சாரம் செழிப்பாக இருக்கிறது.
—–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “எஸ்.எம்.எஸ். வழி நாவல்

  1. நல்ல தகவல். வாழ்க எஸ்எம்எஸ் கலாச்சாரம் …

    Reply

Leave a Comment

Your email address will not be published.