ஒலி ஏணி கேளீர்

ladder1அந்த ஏணி சாதாரண ஏணி அல்ல. புதுமையான ஒலி ஏணி. அதன் படிக ளும் கூட சாதாரணமானவை அல்ல. அவையும் இசைமயமான பாடும் படிகள். வீட்டில் இருக்கும் மர ஏணியை, கால் வைக்கும்போதெல்லாம், கீதம் பாடும் சங்கீத ஏணியாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது, ஏணியை ஒரு இசைக் கருவி யாக உருவாக்கி விட்டார்கள். இந்த ஏணி வெறும் புதுமை மட்டு மல்ல, காலத்தின் கட்டாயம் என்கின்றனர்.
.
இன்டெர்நெட் யுகத்தில் தகவல் தொடர்பு வசதி, தெளிந்த நீரோடையா கவும், தங்கு தடையில்லா காட்டாறாக வும் பாயும் நிலையில் எந்த பொருளும் தனிமரமாக நின்று கொண்டிருப்பதில் பொருள் இல்லை. மக்கள் அவற்றை பயன்படுத்தினால் மட்டும் போதாது, தொடர்பு கொள்ளவும் சாத்தியம் இருக்க வேண்டும். சாதாரணமாக நினைக்கக் கூடிய ஏணிக்கும் இந்த கோட்பாடு பொருந்தும் என்னும் நோக்கத்தோடு, ஒலி ஏணி ஆங்கிலத் தில் டோன் லேட்ர்(Tone ladder) உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏணியின் உபயோகம் எல்லோரும் அறிந்ததே. பணி நிமித்தமாக அதில் ஏறி இறங்குவதை ஏற்ற இறக்கமான ஒத்திகையோடு தொடர்பு படுத்தி பார்க்கலாம். அதை தான் ஒலி ஏணி செய்கிறது.

விஷேசமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஒலி ஏணியில் உள்ள படிகள், தொடு உணர்வை புரிந்து கொள்ளக் கூடிய சென்சார் சாதனங்கள் பொருத்தப் பட்டுள்ளன. படியின் உள்ளே கண் ணுக்கு தெரியாத வகையில் கேபிள் களும் இணைக்கப்பட்டுள்ளன.

பாடும் படியான இதில் கை வைக்கும் போதும் சரி, கால் வைத்து ஏறும் போதும் சரி, அழகிய ஒலி வடிவம் உண்டாகும். படிகள் மீது கொடுக்கப் படும் அழுத்தத்திற்கு ஏற்ப, ஒலியின் அளவும் பலமாகவே இருக்கும். ஆக, படிகளில் கால் வைத்து ஏறி இறங்கும் தன்மைக்கு ஏற்றபடி, ஒலியும் மாறு படும். அந்த உணர்வோடு-, ஈடுபாடு காட்டி படிகளில் ஏறி இறங்கினால், இசைக்கருவியை மீட்டுவதுபோல சங்கீத அலைகளை எழுப்பவும் முடியும்.

ஒரு விதத்தில் பார்த்தால், ஒட்டுமொத்த உடலசைவை பயன் படுத்தி, இசையை உருவாக்க
வழி செய்வது இந்த ஏணியின் தனிச்சிறப்பு. முதல் பார்வைக்கு சிறுவர்கள் இந்த ஏணியில் ஏறி விளையாடுவதை பெரிதும் விரும்புவார்கள் என்று சொல்லத்தோன்றலாம். இல்லை, பெரியவர்களும் அதே விதமான ஆர்வத்தோடு, ஏணியில் விளையாடி மகிழலாம்.

இந்த ஏணி இரட்டை ஏணியாக ஜோடியாகவே வருவதால் துணைக்கு ஒருவரை அழைத்துக்கொண்டும் படிகளை பாட வைக்கலாம். ஒருவர் மற்றவர் எழுப்பும் ஒலிகளை கேட்ட படி, அதற்கு பதில் போல தம்முடைய இயக்கத்தை அமைத்துக் கொண்டால், நேரம் போவதுகூட தெரியாமல், இரு வர் மனதும் இணைந்த இசைமயமான விளையாட்டில் திளைத்திருக்கலாம்.

இரண்டாவது ஏணியோடு, வயர்லஸ் தொடர்பு கொண்ட மூன்றாவது ஏணி யும் உண்டு. மேலும், ஒலி அலைக ளோடு, ஒளி வட்டங்களையும் உருவாக் கிட முடியும். படிகள்மேல் பாதம் பதிவதற்கு ஏற்ப, அருகே உள்ள திரையில் ஒளி வட்டங்கள் தோன்றி மறையும். இந்த வகையில், ஒலி ஏணி பங்கேற்பு விளையாட்டு மட்டும் அல்ல, பார்த்து மகிழக்கூடிய நிகழ்வுகளையும் கூடத் தான். ஒரு இசை நாடகம்போல, ஒலி- ஒளி நாடகத்தை நிகழச்செய்து பார்வை யாளர்களை மெய்மறக்க வைப்பதும் சாத்தியம்.

டிஜிட்டல் உலகின் மேன்மையை தொட்டுப்பார்க்கும் நவீன கலை கண்காட்சியில் ஒரு பகுதியாக, இந்த ஒலி ஏணி அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்கால சாத்தியங்களை அறிய இசையும் தொழில் நுட்பமும் சங்கமிக் கும் இடத்தில், சோதனை பயனாக வெள்ளோட்டம் விட்டும் பார்க்கும் முயற்சி. அட, என்ன புதுமை என லயித்து நின்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இதை பாட்டாளிகளின் ஏணியாகவும் போற்றலாம். ஏணிகளை அதிகம் பயன்படுத்துவது யார்? உழைக்கும் வர்க்கத்தினர்தானே.

உழைப்பாளிகள், சலிப்போடு ஏறி இறங்கும் சாதனமாக இல்லாமல் வேலை செய்யும் போதே, ஈடுபாட் டோடு இசைத்து மகிழும் இசை ஏணியாகவும் இது அமையலாம் தானே! பாட்டாளிகளின் களைப்பை விரட்ட வும் கைகொடுக்கலாம் தானே!

—-
link;
http://www.tonleiter.com/

ladder1அந்த ஏணி சாதாரண ஏணி அல்ல. புதுமையான ஒலி ஏணி. அதன் படிக ளும் கூட சாதாரணமானவை அல்ல. அவையும் இசைமயமான பாடும் படிகள். வீட்டில் இருக்கும் மர ஏணியை, கால் வைக்கும்போதெல்லாம், கீதம் பாடும் சங்கீத ஏணியாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது, ஏணியை ஒரு இசைக் கருவி யாக உருவாக்கி விட்டார்கள். இந்த ஏணி வெறும் புதுமை மட்டு மல்ல, காலத்தின் கட்டாயம் என்கின்றனர்.
.
இன்டெர்நெட் யுகத்தில் தகவல் தொடர்பு வசதி, தெளிந்த நீரோடையா கவும், தங்கு தடையில்லா காட்டாறாக வும் பாயும் நிலையில் எந்த பொருளும் தனிமரமாக நின்று கொண்டிருப்பதில் பொருள் இல்லை. மக்கள் அவற்றை பயன்படுத்தினால் மட்டும் போதாது, தொடர்பு கொள்ளவும் சாத்தியம் இருக்க வேண்டும். சாதாரணமாக நினைக்கக் கூடிய ஏணிக்கும் இந்த கோட்பாடு பொருந்தும் என்னும் நோக்கத்தோடு, ஒலி ஏணி ஆங்கிலத் தில் டோன் லேட்ர்(Tone ladder) உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஏணியின் உபயோகம் எல்லோரும் அறிந்ததே. பணி நிமித்தமாக அதில் ஏறி இறங்குவதை ஏற்ற இறக்கமான ஒத்திகையோடு தொடர்பு படுத்தி பார்க்கலாம். அதை தான் ஒலி ஏணி செய்கிறது.

விஷேசமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஒலி ஏணியில் உள்ள படிகள், தொடு உணர்வை புரிந்து கொள்ளக் கூடிய சென்சார் சாதனங்கள் பொருத்தப் பட்டுள்ளன. படியின் உள்ளே கண் ணுக்கு தெரியாத வகையில் கேபிள் களும் இணைக்கப்பட்டுள்ளன.

பாடும் படியான இதில் கை வைக்கும் போதும் சரி, கால் வைத்து ஏறும் போதும் சரி, அழகிய ஒலி வடிவம் உண்டாகும். படிகள் மீது கொடுக்கப் படும் அழுத்தத்திற்கு ஏற்ப, ஒலியின் அளவும் பலமாகவே இருக்கும். ஆக, படிகளில் கால் வைத்து ஏறி இறங்கும் தன்மைக்கு ஏற்றபடி, ஒலியும் மாறு படும். அந்த உணர்வோடு-, ஈடுபாடு காட்டி படிகளில் ஏறி இறங்கினால், இசைக்கருவியை மீட்டுவதுபோல சங்கீத அலைகளை எழுப்பவும் முடியும்.

ஒரு விதத்தில் பார்த்தால், ஒட்டுமொத்த உடலசைவை பயன் படுத்தி, இசையை உருவாக்க
வழி செய்வது இந்த ஏணியின் தனிச்சிறப்பு. முதல் பார்வைக்கு சிறுவர்கள் இந்த ஏணியில் ஏறி விளையாடுவதை பெரிதும் விரும்புவார்கள் என்று சொல்லத்தோன்றலாம். இல்லை, பெரியவர்களும் அதே விதமான ஆர்வத்தோடு, ஏணியில் விளையாடி மகிழலாம்.

இந்த ஏணி இரட்டை ஏணியாக ஜோடியாகவே வருவதால் துணைக்கு ஒருவரை அழைத்துக்கொண்டும் படிகளை பாட வைக்கலாம். ஒருவர் மற்றவர் எழுப்பும் ஒலிகளை கேட்ட படி, அதற்கு பதில் போல தம்முடைய இயக்கத்தை அமைத்துக் கொண்டால், நேரம் போவதுகூட தெரியாமல், இரு வர் மனதும் இணைந்த இசைமயமான விளையாட்டில் திளைத்திருக்கலாம்.

இரண்டாவது ஏணியோடு, வயர்லஸ் தொடர்பு கொண்ட மூன்றாவது ஏணி யும் உண்டு. மேலும், ஒலி அலைக ளோடு, ஒளி வட்டங்களையும் உருவாக் கிட முடியும். படிகள்மேல் பாதம் பதிவதற்கு ஏற்ப, அருகே உள்ள திரையில் ஒளி வட்டங்கள் தோன்றி மறையும். இந்த வகையில், ஒலி ஏணி பங்கேற்பு விளையாட்டு மட்டும் அல்ல, பார்த்து மகிழக்கூடிய நிகழ்வுகளையும் கூடத் தான். ஒரு இசை நாடகம்போல, ஒலி- ஒளி நாடகத்தை நிகழச்செய்து பார்வை யாளர்களை மெய்மறக்க வைப்பதும் சாத்தியம்.

டிஜிட்டல் உலகின் மேன்மையை தொட்டுப்பார்க்கும் நவீன கலை கண்காட்சியில் ஒரு பகுதியாக, இந்த ஒலி ஏணி அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்கால சாத்தியங்களை அறிய இசையும் தொழில் நுட்பமும் சங்கமிக் கும் இடத்தில், சோதனை பயனாக வெள்ளோட்டம் விட்டும் பார்க்கும் முயற்சி. அட, என்ன புதுமை என லயித்து நின்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், இதை பாட்டாளிகளின் ஏணியாகவும் போற்றலாம். ஏணிகளை அதிகம் பயன்படுத்துவது யார்? உழைக்கும் வர்க்கத்தினர்தானே.

உழைப்பாளிகள், சலிப்போடு ஏறி இறங்கும் சாதனமாக இல்லாமல் வேலை செய்யும் போதே, ஈடுபாட் டோடு இசைத்து மகிழும் இசை ஏணியாகவும் இது அமையலாம் தானே! பாட்டாளிகளின் களைப்பை விரட்ட வும் கைகொடுக்கலாம் தானே!

—-
link;
http://www.tonleiter.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.