சுயநல நெட்

உலகில் சுயநலமே மேலோங்கியிருப்பதாக உங்களில் பலர் கருதலாம். உலகில் எப்படியோ, இன்டெர்நெட் உலகைப் பொறுத்தவரை இணையவாசிகள் எல்லாம் சுயநலமிக்கவர்களாக மாறிவருகின்றனர்.

.
இன்டெர்நெட் நிபுணரான ஜேக்கப் நீல்சன் இந்தகருத்தைதான் உறுதிபட தெரிவித்திருக்கிறார். இன்டெர் நெட்டைப்பொறுத்தவரை நீல்சன் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால், அது சரியாகத்தான் இருக்கும்.

காரணம், மனிதன் ஆழமான ஆய்வு மேற்கொள்ளாமல் மேலோட்டமாக எல்லாம் எந்த கருத்தையும் கூறுவதில்லை. அதோடு, இன்டெர்நெட் பயன்பாடு சார்ந்த விஷயத்தில் அவர் ஒரு மன்னராகவே இருந்து வருகிறார்.

இன்டெர்நெட் பயன்பாடு என்பது எத்தனை நுட்பமானது என்பதை உணர்த்தக்கூடிய பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து பயன்பாட்டு நிபுணர் என்னும் பட்டப்பெயரையும் நீல்சன் வாங்கி வைத்திருக்கிறார்.

இன்டெர்நெட் பயன்பாடு தொடர்பான விஷயங்களை தொடர்ந்து கவனித்து வரும் அவர், அவ்வப்போது இதுகுறித்த தமது பார்வைகளை வெளியிட்டும் வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை அவர் இன்டெர்நெட் பயன்பாடு குறித்த விரிவான அறிக்கையையும் வெளியிடுவது வழக்கம்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்டெர்நெட் பயன்பாடு தொடர்பான அறிக்கைதான் இணையவாசிகளை சுயநலம் தொடர்பான கருத்தை முன்வைத்திருக்கிறது. சுயநலம் என்றவுடன் நிஜ உலகில் நாம் பார்க்கக்கூடிய சுயநலத்தோடு ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.

நீல்சன் இங்கே குறிப்பிடும் சுயநலம் என்பது இணையவாசிகளின் கவனம் சிதறாமல் எது தேவையோ, அதனை தீர்மானித்துக்கொள்ளும் தன்மையைத் தான். இன்டெர்நெட் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. இணைய தளங்களின்எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதோடு, இணைய சேவைகளும் புதிது புதிதாக அறிமுகம் ஆகிக்கொண்டிருக்கின்றன.

முன் இருந்தது போல் இன்டெர்நெட் இன்று எளிமையாக இல்லை. இன்டெர் நெட்டும் சரி, அதில் கொட்டிக்கிடக்கும் தளங்களும் சரி மிகவும் சிக்கலாகியிருக்கின்றன. எனவே இன்டெர்நெட்டில் தகவல்களை தேடிச்செல்லும் ஒருவர், வழிமாறி சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. அவர்களின் கவனத்தை சிதறடிக்கக்கூடிய அநேக விஷயங்கள் இன்டெர்நெட்டில் இருக்கின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி இணையாவாசிகள் தங்கள் நோக்கத்தில் தெளிவாக இருக்கின்றனர் என்று நீல்சன் தமது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பிட்ட இணையதளத்தை தேடிவரும் இணையவாசிகள் அதற்கு முன்பாகவே தங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து இருக்கின்றனர் என்றும், இணையதளத்தில் எதிர்பார்த்த தகவல்கள் கிடைத்ததும் வந்த வேலை முடிந்து விட்டதாக அவர்கள் வெளியேறி விடுகின்றனர் என்றும் நீல்சன் தெரிவிக்கிறார்.

பலரது விஷயத்தில் ஒருவித அவசர தன்மையே காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
இணையதளங்கள் பல்வேறு உப சேவைகளை வழங்கி வந்தாலும் கூட, பலர் அவற்றையெல்லாம் அலட்சியப் படுத்த தயாராக இருக்கின்றனர். மேலும் பொருட்களை விற்பனை செய்யும் இன்டெர்நெட் வர்த்தகம் சார்ந்த முயற்சிகளையும் அவர்கள் கண்டுகொள்ள தயாராக இல்லை.

தங்களுக்கு எது தேவையோ அதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். இது சுயநலம் என்றாலும், யாருக்கும் பாதகம் இல்லாத சுயநலம்தான். ஆனால் இணையவாசிகளை கவர்வதற்காகவென்று பல்வேறு அம்சங்களைக்கொண்ட இணைய தளங்களை வடிவமைத்து வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரும் செய்திதான். ஏமாற்றம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் தரலாம்.

இன்டெர்நெட் வர்த்தகம் சார்ந்த முயற்சிகளை இணையவாசிகளை புறக்கணிப்பதுபோல, செய்திகள் மற்றும் தகவல்களை தேர்வு செய்து வழங்கும் இணையதளங்களின் முயற்சிகளையும் அநேகமாக புறந்தள்ளிவிடுகின்றனர் என்று நீல்சன் தெரிவிக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் இணையவாசிகள் தாங்கள் தேடும் விஷயத்தை இன்டெர்நெட் மூலம் பெறுவதன் வெற்றிவிகிதம் 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணையதளங்களின் மிகச்சிறந்த வடிவமைப்பு இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் கூறுகிறார். இத்தனைக்கும் மத்தியில் இன்னமும் தேடியந்திரங்களே கோலோச்சுவதாக வும், பெரும்பாலான இணையவாசிகள் தேடியந்திரங்கள் மூலமே தகவல்களை தேடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேடியந்திரங்களில் கூகுலே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மிகச்சரியான போட்டி தேடியந்திரம் ஒன்று உருவாகாத வரை கூகுலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தேடியந்திரங்கள் முழுமையானது என்று சொல்லி விடுவதற்கில்லை. நீண்டகால நோக்கில் பார்த்தால், கூகுலை விட நல்லதொரு தேடியந்திரம் உருவாக்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்று நீல்சன் நம்புகிறார்.

——————

உலகில் சுயநலமே மேலோங்கியிருப்பதாக உங்களில் பலர் கருதலாம். உலகில் எப்படியோ, இன்டெர்நெட் உலகைப் பொறுத்தவரை இணையவாசிகள் எல்லாம் சுயநலமிக்கவர்களாக மாறிவருகின்றனர்.

.
இன்டெர்நெட் நிபுணரான ஜேக்கப் நீல்சன் இந்தகருத்தைதான் உறுதிபட தெரிவித்திருக்கிறார். இன்டெர் நெட்டைப்பொறுத்தவரை நீல்சன் ஒரு விஷயத்தை சொல்கிறார் என்றால், அது சரியாகத்தான் இருக்கும்.

காரணம், மனிதன் ஆழமான ஆய்வு மேற்கொள்ளாமல் மேலோட்டமாக எல்லாம் எந்த கருத்தையும் கூறுவதில்லை. அதோடு, இன்டெர்நெட் பயன்பாடு சார்ந்த விஷயத்தில் அவர் ஒரு மன்னராகவே இருந்து வருகிறார்.

இன்டெர்நெட் பயன்பாடு என்பது எத்தனை நுட்பமானது என்பதை உணர்த்தக்கூடிய பல ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்து பயன்பாட்டு நிபுணர் என்னும் பட்டப்பெயரையும் நீல்சன் வாங்கி வைத்திருக்கிறார்.

இன்டெர்நெட் பயன்பாடு தொடர்பான விஷயங்களை தொடர்ந்து கவனித்து வரும் அவர், அவ்வப்போது இதுகுறித்த தமது பார்வைகளை வெளியிட்டும் வருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை அவர் இன்டெர்நெட் பயன்பாடு குறித்த விரிவான அறிக்கையையும் வெளியிடுவது வழக்கம்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்டெர்நெட் பயன்பாடு தொடர்பான அறிக்கைதான் இணையவாசிகளை சுயநலம் தொடர்பான கருத்தை முன்வைத்திருக்கிறது. சுயநலம் என்றவுடன் நிஜ உலகில் நாம் பார்க்கக்கூடிய சுயநலத்தோடு ஒப்பிட்டு குழப்பிக்கொள்ளக்கூடாது.

நீல்சன் இங்கே குறிப்பிடும் சுயநலம் என்பது இணையவாசிகளின் கவனம் சிதறாமல் எது தேவையோ, அதனை தீர்மானித்துக்கொள்ளும் தன்மையைத் தான். இன்டெர்நெட் வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. இணைய தளங்களின்எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதோடு, இணைய சேவைகளும் புதிது புதிதாக அறிமுகம் ஆகிக்கொண்டிருக்கின்றன.

முன் இருந்தது போல் இன்டெர்நெட் இன்று எளிமையாக இல்லை. இன்டெர் நெட்டும் சரி, அதில் கொட்டிக்கிடக்கும் தளங்களும் சரி மிகவும் சிக்கலாகியிருக்கின்றன. எனவே இன்டெர்நெட்டில் தகவல்களை தேடிச்செல்லும் ஒருவர், வழிமாறி சென்றுவிட வாய்ப்பு இருக்கிறது. அவர்களின் கவனத்தை சிதறடிக்கக்கூடிய அநேக விஷயங்கள் இன்டெர்நெட்டில் இருக்கின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி இணையாவாசிகள் தங்கள் நோக்கத்தில் தெளிவாக இருக்கின்றனர் என்று நீல்சன் தமது ஆய்வில் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பிட்ட இணையதளத்தை தேடிவரும் இணையவாசிகள் அதற்கு முன்பாகவே தங்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து இருக்கின்றனர் என்றும், இணையதளத்தில் எதிர்பார்த்த தகவல்கள் கிடைத்ததும் வந்த வேலை முடிந்து விட்டதாக அவர்கள் வெளியேறி விடுகின்றனர் என்றும் நீல்சன் தெரிவிக்கிறார்.

பலரது விஷயத்தில் ஒருவித அவசர தன்மையே காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
இணையதளங்கள் பல்வேறு உப சேவைகளை வழங்கி வந்தாலும் கூட, பலர் அவற்றையெல்லாம் அலட்சியப் படுத்த தயாராக இருக்கின்றனர். மேலும் பொருட்களை விற்பனை செய்யும் இன்டெர்நெட் வர்த்தகம் சார்ந்த முயற்சிகளையும் அவர்கள் கண்டுகொள்ள தயாராக இல்லை.

தங்களுக்கு எது தேவையோ அதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர். இது சுயநலம் என்றாலும், யாருக்கும் பாதகம் இல்லாத சுயநலம்தான். ஆனால் இணையவாசிகளை கவர்வதற்காகவென்று பல்வேறு அம்சங்களைக்கொண்ட இணைய தளங்களை வடிவமைத்து வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் தரும் செய்திதான். ஏமாற்றம் மட்டுமல்ல, அதிர்ச்சியும் தரலாம்.

இன்டெர்நெட் வர்த்தகம் சார்ந்த முயற்சிகளை இணையவாசிகளை புறக்கணிப்பதுபோல, செய்திகள் மற்றும் தகவல்களை தேர்வு செய்து வழங்கும் இணையதளங்களின் முயற்சிகளையும் அநேகமாக புறந்தள்ளிவிடுகின்றனர் என்று நீல்சன் தெரிவிக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகளில் இணையவாசிகள் தாங்கள் தேடும் விஷயத்தை இன்டெர்நெட் மூலம் பெறுவதன் வெற்றிவிகிதம் 60 சதவீதத்திலிருந்து 75 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணையதளங்களின் மிகச்சிறந்த வடிவமைப்பு இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் அவர் கூறுகிறார். இத்தனைக்கும் மத்தியில் இன்னமும் தேடியந்திரங்களே கோலோச்சுவதாக வும், பெரும்பாலான இணையவாசிகள் தேடியந்திரங்கள் மூலமே தகவல்களை தேடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேடியந்திரங்களில் கூகுலே தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. மிகச்சரியான போட்டி தேடியந்திரம் ஒன்று உருவாகாத வரை கூகுலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் தேடியந்திரங்கள் முழுமையானது என்று சொல்லி விடுவதற்கில்லை. நீண்டகால நோக்கில் பார்த்தால், கூகுலை விட நல்லதொரு தேடியந்திரம் உருவாக்கப்படும் சாத்தியம் இருக்கிறது என்று நீல்சன் நம்புகிறார்.

——————

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “சுயநல நெட்

  1. RAM

    Primarily all the internet users first finish their agendas, with the help of their search engines wheather it is google , yahoo , fire-fox, rediff…then only they come to blogger account in the leasure time. Because…definetely, everybody will be preoccupied by their job functions…and give at most priority to that using internet services…online bokkings FLIGHT or TRAIN in emergencies is more useful with the advent of internet technology….apart from that many people do on line trading …..global interviews using web cam…medical treatments…live surgeries ….and so on…no doubt..internet becomes part and parcel of our life….of course we do have some selfishness…because of the busy schedules…if people get leisure time…they will definetely look into the other paraparnellias’s….but it should be genuine….as every body knows….lots of scams starts with ads and people become annoyed…..if every thing is controlled by govt. then this selfishness slowly comes down….this is a wild guess only…let us wait and see.

    Reply
  2. Good.

    As Ram Said we should wait and see.

    Reply

Leave a Comment

Your email address will not be published.