டிவிட்டரால் வந்த வழக்கு

ciscofattyfailடிவிட்டரால் தொடரப்பட்ட முதல் அவதூறு வழக்கிற்கு இலக்கானவர் என்னும் பெருமையோடு அமெரிக்க பாடகி ஒருவர் வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறார்.

கார்ட்னி லவ் என்பது அவரது பெயர். அவருக்கும் பிரபல வடிவமைப்பு கலைஞர் ஒருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு டிவிட்டரில் வெளிப்பட பாடகி வம்பில் மாட்டிகொண்டிருக்கிறார்.
சைமோங்கிர் என்னும் அந்த வடிவமைப்பு கலைஞர் டெக்ஸாஸ் நகரில் வசித்து வருபவர். பல்வேறு பிரபலங்களுக்கு அவர் ஆடைகளை வடிவமைத்து தருகிறார். இணையதளம் மூலமும் விற்பனை செய்து வருகிறார்.

இண்டெர்நெட் வாயிலாக இவரிடம் இருந்து ஆடைகளை வாங்கியுள்ள பாடகி லவ் கடந்த பிப்ரவரி மாதம் அவரிடமிருந்து நேரிடையாக தனக்கு தேவையான ஆடைகளி ஆர்டர் செய்துள்ளார்.

இதிலிருந்து தான் பிரச்சனை ஆரம்பமானது.
ஆடைகளுக்கு 4000 டாலர் பில் தொகையை சைமோங்கிர் அனுப்பிவைத்திருக்கிறார். இதன் பிறகு பாடகிக்கு அவ்ர் மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டதாக சைமோங்கிர் கூறியுள்ளார்.
எது காரண‌மோ தெரியவில்லை, பாடகிக்கு வடிவமைப்பாளர் மீது கடுங்கோபம் உண்டானது என்னவோ உண்மை. இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் தீர்மானித்தார்.

இதற்கு டிவிட்டரை அவர் தேர்வு செய்தது தான் வழக்கில் முடிந்திருக்கிறது.

குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவை என வர்ணிக்கப்படும் டிவிட்டரில் பல பிரபலங்கள் த‌ங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்னும் கேள்விக்கு பதில் அளிப்பது தான் டிவிட்டர் பதிவின் இலக்கணம்.

நீங்கள் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்திர்கள் என்றால் , சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன் என டிவிட்டர் செய்யலாம். ஷாப்பிங் செல்வதாக இருந்தால் , அதையே குறிப்பிடலாம். பாடகி லவ்விற்கும் டிவிட்டரிடும் பழக்கம் இருக்கிறது. அவரோ அப்போது கோபத்தில் இருந்தார்.

டிவிட்டர் இலக்கணப்படி கோபத்தை கொட்டுவது தானே முறை. லவ் அதை தான் செய்தார்.

வடிஅவமைப்பாளர் மீது தனக்குள்ள கோபத்தை அப்படியே தனது ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார். கொஞ்ச‌ம் கடுமையாகவே கருத்துக்களை கூறியிருந்தார்.

நான் அறிந்தவரை மோசாமான‌ பெண்மணி என்றும்,மரணிக்கும் வரை அவருக்கு நிம்மதி கிடையாது என்றும் குறியிருந்தார். லவ் ரசிகர்கள் இதனை ரசித்திருக்கலாம். ஆனால் சைமோன்ங்கிர் இவற்றை படித்துவிட்டு கொதித்துப்போய்விட்டார்.
டிவிட்டர் மூலம் தன்னைப்பற்றி மோசமான பொய்யான கருத்துக்களை கூறி தன் இமேஜை பாழாக்கிவிட்டார் என்றும் இதற்கு நஷ்டஈடு தர உத்தர்விட வேண்டும் என்றூம் கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

வழக்கு என்ன ஆகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும் ; டிவிட்டர் செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்பிற்கான உதாரணமாக இந்த சம்பவம் அமைவதாக கருதப்படுகிறது.

பாடகியின் கோபம் தொலைபேசி மூலமோ இ மெயில் மூலமோ வெளிப்பட்டிருந்தால் இந்த அளவு பிரச்சனை வந்திருக்காது. டிவிட்டர் எதையும் உடனடியாக‌ எல்லோரிடமும் கொன்டூ செல்லும் ஆற்றல் கொண்டது அல்லவா? அது தான் பாடகியின் கோபம் அவரை வம்பில் மாட்டி வைத்துள்ளது.
டிவிட்டரில் வெளிப்படுத்துன் கருத்துக்கள் உங்களை பிரச்சனையில் சிக்க வைக்கலாம் எனபதை இந்த சம்பவம் தெளிவாகவே உண்ர்த்துகிறது.

இதேபோல மற்றொரு சம்பவத்தில் அமெரிக்க இளம்பெண் ஒருவர் டிவிட்டரால் தனக்கு கிடைத்த வேலையை இழந்திருக்கிரார்.குறிப்பிட்ட அந்த பெண்ணிற்கு பிரபல நிறுவனமான சிஸ்கோவில் வேலை கிடைத்தது. அவரும் டிவிட்டர் முகவரி உள்ளவர் தான்.
வேலை கிடைத்த செய்தியை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? அந்த பெண் வெலை கிடைத்துவிட்டது என டிவிட்டர் செய்தார். அதோடு நிறுத்திகொண்டிருக்கலாம். ஆனால் டிவிட்டர் விடதே? நினைப்பதை அப்படியே பகிர தூண்டுவது தானே டிவிட்ட்ரின் சிறப்பு.

அவருக்கு அந்த வேலையில் கொஞ்சம் அதிருப்தி போலும்.அதை மறைக்காமல் டிவிட்ட‌ரில் தெரிவித்துவிட்டார். சிஸ்கோவில் வேலை கிடைத்ததுள்ளது. மகிழ்ச்சி தான்.நல்ல சம்பளம். ஆனால் தினமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதுவும் பிடிக்காத வேலைக்காக என்று அவ‌ர் குறைப்பட்டுக்கொணடார். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் அதிருப்தி ஏற்படுவது இயல்பு தானே? ஆனால் அதை வெளிப்ப்டையாக் சொல்ல‌லாமா? நண்பர்களிடம் மட்டும் சொல்லிக்கொள்வோம் தானே. அந்த இளம்பெண்ணும் ட்விட்டர் மூலம் தனது ந‌ட்பு வட்டத்தில் இதை பகிர்ந்துகொண்டார். டிவிட்டர் யுகத்தில் இது இயல்பு தானே. ஆனால் அவரது போதாத நேரம் சிஸ்கோ நிறுவன‌ உயரதிகாரி இதை படிதுவிட்டார்.

தான் படித்த விஷயத்தை டிவிட்ட‌ரிலேய பின்னூட்டமாக குறிப்பிட்டார். இந்த பெண்ணை எந்த அதிகாரி நேர்காணல் கண்டு வேலைக்கு சேர்த்தார் என தெரிய செய்ய வேண்டும் என்றூம் கூறியிறுந்தார். அவர் வேலை அவ்வளவு தான் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.

இப்படி யாராவது நல்ல வேலையை கெடுத்துகொள்வார்களா என்று பலரும் கேட்கின்றனர். இதனிடையே அவருக்கு சிஸ்கோ ஃபேட்டி (cisco fatty)என பெயரிட்டு இது ப‌ற்றி இண்டெர்நெட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது. டிவிட்டர் கொண்டு வந்துள்ள புதிய கலாச்சாரத்தினை எப்படி ஏதிர்கொள்வது என சிந்திக்கவும் வைத்துள்ளது.

இன்னொரு சுவார்ஸ்யமான விஷயம் தெரியுமா? சிஸ்கோஃபேட்டி என்னும் பெயரிலேயே ஒரு இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு டிவிட்டில் வெலை இழப்பது எப்படி என்னும் கேள்வியோடு ,இளம்பெண் டிவிட்டரால் வேலை இழந்த கதை கூறப்பட்டுள்ளது.

———-

link;
http://ciscofatty.com/

ciscofattyfailடிவிட்டரால் தொடரப்பட்ட முதல் அவதூறு வழக்கிற்கு இலக்கானவர் என்னும் பெருமையோடு அமெரிக்க பாடகி ஒருவர் வழக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறார்.

கார்ட்னி லவ் என்பது அவரது பெயர். அவருக்கும் பிரபல வடிவமைப்பு கலைஞர் ஒருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு டிவிட்டரில் வெளிப்பட பாடகி வம்பில் மாட்டிகொண்டிருக்கிறார்.
சைமோங்கிர் என்னும் அந்த வடிவமைப்பு கலைஞர் டெக்ஸாஸ் நகரில் வசித்து வருபவர். பல்வேறு பிரபலங்களுக்கு அவர் ஆடைகளை வடிவமைத்து தருகிறார். இணையதளம் மூலமும் விற்பனை செய்து வருகிறார்.

இண்டெர்நெட் வாயிலாக இவரிடம் இருந்து ஆடைகளை வாங்கியுள்ள பாடகி லவ் கடந்த பிப்ரவரி மாதம் அவரிடமிருந்து நேரிடையாக தனக்கு தேவையான ஆடைகளி ஆர்டர் செய்துள்ளார்.

இதிலிருந்து தான் பிரச்சனை ஆரம்பமானது.
ஆடைகளுக்கு 4000 டாலர் பில் தொகையை சைமோங்கிர் அனுப்பிவைத்திருக்கிறார். இதன் பிறகு பாடகிக்கு அவ்ர் மீது அதிருப்தி ஏற்பட்டுவிட்டதாக சைமோங்கிர் கூறியுள்ளார்.
எது காரண‌மோ தெரியவில்லை, பாடகிக்கு வடிவமைப்பாளர் மீது கடுங்கோபம் உண்டானது என்னவோ உண்மை. இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் தீர்மானித்தார்.

இதற்கு டிவிட்டரை அவர் தேர்வு செய்தது தான் வழக்கில் முடிந்திருக்கிறது.

குறுஞ்செய்தி வலைப்பதிவு சேவை என வர்ணிக்கப்படும் டிவிட்டரில் பல பிரபலங்கள் த‌ங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்’ என்னும் கேள்விக்கு பதில் அளிப்பது தான் டிவிட்டர் பதிவின் இலக்கணம்.

நீங்கள் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்திர்கள் என்றால் , சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன் என டிவிட்டர் செய்யலாம். ஷாப்பிங் செல்வதாக இருந்தால் , அதையே குறிப்பிடலாம். பாடகி லவ்விற்கும் டிவிட்டரிடும் பழக்கம் இருக்கிறது. அவரோ அப்போது கோபத்தில் இருந்தார்.

டிவிட்டர் இலக்கணப்படி கோபத்தை கொட்டுவது தானே முறை. லவ் அதை தான் செய்தார்.

வடிஅவமைப்பாளர் மீது தனக்குள்ள கோபத்தை அப்படியே தனது ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார். கொஞ்ச‌ம் கடுமையாகவே கருத்துக்களை கூறியிருந்தார்.

நான் அறிந்தவரை மோசாமான‌ பெண்மணி என்றும்,மரணிக்கும் வரை அவருக்கு நிம்மதி கிடையாது என்றும் குறியிருந்தார். லவ் ரசிகர்கள் இதனை ரசித்திருக்கலாம். ஆனால் சைமோன்ங்கிர் இவற்றை படித்துவிட்டு கொதித்துப்போய்விட்டார்.
டிவிட்டர் மூலம் தன்னைப்பற்றி மோசமான பொய்யான கருத்துக்களை கூறி தன் இமேஜை பாழாக்கிவிட்டார் என்றும் இதற்கு நஷ்டஈடு தர உத்தர்விட வேண்டும் என்றூம் கோரி லாஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.

வழக்கு என்ன ஆகிறது என்பது ஒருபுறம் இருக்கட்டும் ; டிவிட்டர் செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்பிற்கான உதாரணமாக இந்த சம்பவம் அமைவதாக கருதப்படுகிறது.

பாடகியின் கோபம் தொலைபேசி மூலமோ இ மெயில் மூலமோ வெளிப்பட்டிருந்தால் இந்த அளவு பிரச்சனை வந்திருக்காது. டிவிட்டர் எதையும் உடனடியாக‌ எல்லோரிடமும் கொன்டூ செல்லும் ஆற்றல் கொண்டது அல்லவா? அது தான் பாடகியின் கோபம் அவரை வம்பில் மாட்டி வைத்துள்ளது.
டிவிட்டரில் வெளிப்படுத்துன் கருத்துக்கள் உங்களை பிரச்சனையில் சிக்க வைக்கலாம் எனபதை இந்த சம்பவம் தெளிவாகவே உண்ர்த்துகிறது.

இதேபோல மற்றொரு சம்பவத்தில் அமெரிக்க இளம்பெண் ஒருவர் டிவிட்டரால் தனக்கு கிடைத்த வேலையை இழந்திருக்கிரார்.குறிப்பிட்ட அந்த பெண்ணிற்கு பிரபல நிறுவனமான சிஸ்கோவில் வேலை கிடைத்தது. அவரும் டிவிட்டர் முகவரி உள்ளவர் தான்.
வேலை கிடைத்த செய்தியை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ள வேண்டாமா? அந்த பெண் வெலை கிடைத்துவிட்டது என டிவிட்டர் செய்தார். அதோடு நிறுத்திகொண்டிருக்கலாம். ஆனால் டிவிட்டர் விடதே? நினைப்பதை அப்படியே பகிர தூண்டுவது தானே டிவிட்ட்ரின் சிறப்பு.

அவருக்கு அந்த வேலையில் கொஞ்சம் அதிருப்தி போலும்.அதை மறைக்காமல் டிவிட்ட‌ரில் தெரிவித்துவிட்டார். சிஸ்கோவில் வேலை கிடைத்ததுள்ளது. மகிழ்ச்சி தான்.நல்ல சம்பளம். ஆனால் தினமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் அதுவும் பிடிக்காத வேலைக்காக என்று அவ‌ர் குறைப்பட்டுக்கொணடார். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தாலும் அதிருப்தி ஏற்படுவது இயல்பு தானே? ஆனால் அதை வெளிப்ப்டையாக் சொல்ல‌லாமா? நண்பர்களிடம் மட்டும் சொல்லிக்கொள்வோம் தானே. அந்த இளம்பெண்ணும் ட்விட்டர் மூலம் தனது ந‌ட்பு வட்டத்தில் இதை பகிர்ந்துகொண்டார். டிவிட்டர் யுகத்தில் இது இயல்பு தானே. ஆனால் அவரது போதாத நேரம் சிஸ்கோ நிறுவன‌ உயரதிகாரி இதை படிதுவிட்டார்.

தான் படித்த விஷயத்தை டிவிட்ட‌ரிலேய பின்னூட்டமாக குறிப்பிட்டார். இந்த பெண்ணை எந்த அதிகாரி நேர்காணல் கண்டு வேலைக்கு சேர்த்தார் என தெரிய செய்ய வேண்டும் என்றூம் கூறியிறுந்தார். அவர் வேலை அவ்வளவு தான் என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.

இப்படி யாராவது நல்ல வேலையை கெடுத்துகொள்வார்களா என்று பலரும் கேட்கின்றனர். இதனிடையே அவருக்கு சிஸ்கோ ஃபேட்டி (cisco fatty)என பெயரிட்டு இது ப‌ற்றி இண்டெர்நெட்டில் விவாதிக்கப்பட்டு வருகிறது. டிவிட்டர் கொண்டு வந்துள்ள புதிய கலாச்சாரத்தினை எப்படி ஏதிர்கொள்வது என சிந்திக்கவும் வைத்துள்ளது.

இன்னொரு சுவார்ஸ்யமான விஷயம் தெரியுமா? சிஸ்கோஃபேட்டி என்னும் பெயரிலேயே ஒரு இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு டிவிட்டில் வெலை இழப்பது எப்படி என்னும் கேள்வியோடு ,இளம்பெண் டிவிட்டரால் வேலை இழந்த கதை கூறப்பட்டுள்ளது.

———-

link;
http://ciscofatty.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டரால் வந்த வழக்கு

  1. டிவிட்டர் க்ரூப்ல வேலை பார்க்கிறீர்களா?

    டிவிட்டரை இந்தப் போடு போடுரீங்க பாஸ்

    Reply
    1. cybersimman

      டிவிட்டர் மாபெரும் இணைய நிகழ்வு.டிவிட்டர் பயன்படுத்தப்படும் விதமே தொடர்ந்து எழுத தூண்டுகிறது.

      Reply
  2. உங்கள் ரிப்ளைக்கு நன்றி பாஸ்.

    Reply
  3. கலக்கல் பதிவு.

    வாழ்த்துகள்.

    Reply

Leave a Comment

Your email address will not be published.