டிவிட்டரில் பதிலடி கொடுத்த அதிபர்.

டிவிட்டர் மூலம் பதிலடி கொடுக்க துணிந்த தலைவர்களின் பட்டியலில் எஸ்டோனியா நாட்டு அதிபரும் சேர்ந்திருக்கிறார்.எஸ்டோனியாவின் பொருளாதார நிலை குறித்து பொருளாதார மேதை பால் குர்க்மேன் வைத்த விமர்சனத்திற்கு தான் அந்நாட்டு அதிபர் டிவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

பதிலடி என்பது சாதாரணமான சொல்.எஸ்டோனிய அதிபர் உண்மையில் குருக்மேனுக்கு எதிராக டிவிட்டரில் ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.கோபத்தை கொட்டித்தீர்த்து விட்டார்.

எஸ்டோனியா ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு.இணைய பயன்பாட்டில் முன்னுதாரணமாக இருப்பதாக பாராட்டப்படு தேசம்.மின் நிர்வாகம்,மின் வாக்குப்பதிவு போன்ற விஷயங்களில் எஸ்டோனியா உலகிற்கே வழி காட்டுவதாக வர்ணிக்கப்படுகிற‌து.

இப்போது ஐரோப்பா முழுவதும் பொருளாதார சூறாவளி வீசிக்கொண்டிருக்கும் நிலையில் எஸ்டோனியா மட்டும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை சமாளித்து வருவதாக பாராட்டப்படுகிறது.

இது தான் பரவலான கருத்தாக இருந்தாலும் பால் குருக்மேன் தனது வலைப்பதிவில் இதற்கு மாறான கருத்தை முன்வைத்திருந்தார்.

குருக்மேன் பொருளாதார உலகின் புகழ் பெற்று விளங்குபவர்.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவரான குருக்மேன் பொருளாதார விமர்சகராகவும் அறியப்படுகிறார்.பொருளாதார பிரச்ச‌னைகள் குறித்த தனது கருத்துக்களை முன்வைப்பதில் தீவிரமாக இருப்பவர்.

பொருளாதார நிலை குறித்த கட்டுரைகளையும் பதிவுகளையும் எழுதி வரும் குருக்மேன் பரவலாக பாராட்டப்படும் எஸ்டோனியாவின் பொருளாதார நிலவரம் குறித்து தனது வலைப்பதிவில் விமர்சனம் செய்திருந்தார்.எஸ்டோனியா எடுத்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்றாலும் பொருளாதார வளர்ச்சியில் அந்நாட்டு போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என அவர் எழுதியிருந்தார்.இதற்கான காரணங்களையும் அவர் விரிவாகவே முன்வைத்திருந்தார்.

எல்லோரும் தனது நாட்டை பாராட்டிக்கொண்டிருக்கும் போது குருக்மேன் மட்டும் வேறு விதமான கருத்து சொன்னால் எஸ்டோனிய அதிபருக்கு கசக்கத்தானே செய்யும்.அதிலும் குருக்மேன் கருத்துக்களுக்கு தனி செல்வாக்கு இருக்கும் நிலையில் அவரது விமர்சனத்தை அலட்சியப்படுத்த முடியாது தானே.

அதனால் தான் எஸ்டோனிய அதிபர் தாமஸ் ஹென்டிரிக் இல்விஸ் இந்த விமர்சனத்தால் கடும் அதிருப்திக்கு ஆளானார்.மாற்று கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது பதவியில் இருப்பவர்கள் ஆவேசம் கொள்வது இயல்பானது தான்.அதனை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் தான் மாறுபடும்.

எஸ்டோனிய அதிபரை பொருத்தவரை தனது அதிருப்தியை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்றோ அல்லது ராஜதந்திரத்தோடு வெளிப்படுத்த வேண்டும் என்றோ நினைக்காமல் டிவிட்டரில் பொங்கி எழுவது என தீர்மானித்து குருக்மேனுக்கு சாட்டையடி கொடுப்பது போன்ற குறும்பதிவுகளை வெளியிட்டார்.

நமக்கு எதுமே தெரியாதது பற்றி எல்லாம் தெரிந்தது போல எழுதினால் போயிற்று என்னும் பொருள் பட அமைந்திருந்த அந்த குறும்பதிவில் குருக்மேனின் வலைப்பதிவுக்கும் இணைப்பு கொடுத்திருந்தார்.

குருக்மேன் தனக்கு தெரியாத விஷய்ம் குறித்து எழுதியுள்ளதாக இப்படி குறை கூறியிருந்த அதிபர் அடுத்த குறும்பதிவில் ,நோபல் பரிசு பெற்றிருந்தால் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாமா என்று இன்னும் காட்டமாகவே கேட்டிருந்தார்.

அதோடு இது பிரின்ஸ்டனுக்கும் கொலம்பியாவுக்கும் நடக்கும் மோதலா என்னும் கிண்டலாக கேட்டிருந்தார்.பிரின்ஸ்டன் பலகலை குருக்மேன் பணியாற்றும் பல்க‌லை.கொலம்பியா பலகலை எஸ்டோனிய அதிபர் பயின்ற பல்க‌லை.

இதன் பிறகு ,ஆனால் நமக்கு என்ன தெரியும் நாம் எல்லாம் அல்ப கிழக்கு ஐரோப்பியர்கள் தானே… என்னும் தெனியில் வஞ்ச புகழ்ச்சியாக ஒரு குறும்பதிவை வெளியிட்டு தனது தாக்குதலை முடித்து கொண்டார்.

எதிர்பார்க்க கூடியது போலவே இந்த டிவிட்டர் பதிலடி பலரது கவனத்தை ஈர்த்தது.ஒரு நாட்டின் அதிபரே விமர்சனத்திற்கு பதிலடி கொடுக டிவிட்டரில் நேரடியாக கச்சை கட்டிக்கொண்டு இற‌ங்கியது பரபரப்பை உண்டாக்கியது.

அதிபர் பயன்படுத்திய கடுமையான வார்த்தைகள் ஒரு வேளை எஸ்டோனிய அதிபரின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.ஆனால் இந்த குறும்பதிவுகள் எஸ்டோனிய அதிபரால் எழுத்தப்பட்டது தான் என்று அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே எஸ்டோனிய அதிபர் இந்த குறும்பதிவுகளை வெளியிட்ட போது மதுவின் ஆதிக்கத்தில் இருந்தாரோ என்ற சந்தேகமும் எழுப்ப பட்டது.அந்த அளவுக்கு அவரது பதிலடி காட்டமாக இருந்தது.

ஆனால் எஸ்டோனிய அதிபரோ இந்த டிவிட்டர் பதிலடி பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள எஸ்டோனியா மேற்கொண்டு வரும் சீரிய மற்றும் கடினமான முயற்சிகள் தொடராபான நேர்மையான தற்காப்பு என இமெயில் மூலம் உறுதியான விளக்கத்தை அளித்தார்.

இதன் மூலம் தனது நிலையில் தெளிவாக இருப்பதை அவர் உறுதி செய்தார்.ஆனால் இத்தனைக்கு நடுவிலும் குருக்மேன் அமைதியாகவே இருந்தார்.

அவரும் டிவிட்டரில் பதில் அளித்திருந்தால் உலகம் ஒரு டிவிட்டர் விவாதத்தை சந்தித்திருக்கும்!.

————–
குருக்மேனின் வலைப்பதிவு;http://krugman.blogs.nytimes.com/2012/06/06/estonian-rhapsdoy/

————
எஸ்டோனிய அதிபரின் டிவிட்டர் பதிவு;https://twitter.com/?tw_e=screenname&tw_i=210475404526501888&tw_p=tweetembed#!/IlvesToomas

—————
டிவிட்டரில் ஒரு மோதல்.;http://cybersimman.wordpress.com/2012/06/01/twitter-160/

டிவிட்டர் மூலம் பதிலடி கொடுக்க துணிந்த தலைவர்களின் பட்டியலில் எஸ்டோனியா நாட்டு அதிபரும் சேர்ந்திருக்கிறார்.எஸ்டோனியாவின் பொருளாதார நிலை குறித்து பொருளாதார மேதை பால் குர்க்மேன் வைத்த விமர்சனத்திற்கு தான் அந்நாட்டு அதிபர் டிவிட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார்.

பதிலடி என்பது சாதாரணமான சொல்.எஸ்டோனிய அதிபர் உண்மையில் குருக்மேனுக்கு எதிராக டிவிட்டரில் ஆவேசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.கோபத்தை கொட்டித்தீர்த்து விட்டார்.

எஸ்டோனியா ஐரோப்பாவில் உள்ள சிறிய நாடு.இணைய பயன்பாட்டில் முன்னுதாரணமாக இருப்பதாக பாராட்டப்படு தேசம்.மின் நிர்வாகம்,மின் வாக்குப்பதிவு போன்ற விஷயங்களில் எஸ்டோனியா உலகிற்கே வழி காட்டுவதாக வர்ணிக்கப்படுகிற‌து.

இப்போது ஐரோப்பா முழுவதும் பொருளாதார சூறாவளி வீசிக்கொண்டிருக்கும் நிலையில் எஸ்டோனியா மட்டும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலைமையை சமாளித்து வருவதாக பாராட்டப்படுகிறது.

இது தான் பரவலான கருத்தாக இருந்தாலும் பால் குருக்மேன் தனது வலைப்பதிவில் இதற்கு மாறான கருத்தை முன்வைத்திருந்தார்.

குருக்மேன் பொருளாதார உலகின் புகழ் பெற்று விளங்குபவர்.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்றவரான குருக்மேன் பொருளாதார விமர்சகராகவும் அறியப்படுகிறார்.பொருளாதார பிரச்ச‌னைகள் குறித்த தனது கருத்துக்களை முன்வைப்பதில் தீவிரமாக இருப்பவர்.

பொருளாதார நிலை குறித்த கட்டுரைகளையும் பதிவுகளையும் எழுதி வரும் குருக்மேன் பரவலாக பாராட்டப்படும் எஸ்டோனியாவின் பொருளாதார நிலவரம் குறித்து தனது வலைப்பதிவில் விமர்சனம் செய்திருந்தார்.எஸ்டோனியா எடுத்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்றாலும் பொருளாதார வளர்ச்சியில் அந்நாட்டு போக வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது என அவர் எழுதியிருந்தார்.இதற்கான காரணங்களையும் அவர் விரிவாகவே முன்வைத்திருந்தார்.

எல்லோரும் தனது நாட்டை பாராட்டிக்கொண்டிருக்கும் போது குருக்மேன் மட்டும் வேறு விதமான கருத்து சொன்னால் எஸ்டோனிய அதிபருக்கு கசக்கத்தானே செய்யும்.அதிலும் குருக்மேன் கருத்துக்களுக்கு தனி செல்வாக்கு இருக்கும் நிலையில் அவரது விமர்சனத்தை அலட்சியப்படுத்த முடியாது தானே.

அதனால் தான் எஸ்டோனிய அதிபர் தாமஸ் ஹென்டிரிக் இல்விஸ் இந்த விமர்சனத்தால் கடும் அதிருப்திக்கு ஆளானார்.மாற்று கருத்துக்கள் முன்வைக்கப்படும் போது பதவியில் இருப்பவர்கள் ஆவேசம் கொள்வது இயல்பானது தான்.அதனை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் தான் மாறுபடும்.

எஸ்டோனிய அதிபரை பொருத்தவரை தனது அதிருப்தியை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும் என்றோ அல்லது ராஜதந்திரத்தோடு வெளிப்படுத்த வேண்டும் என்றோ நினைக்காமல் டிவிட்டரில் பொங்கி எழுவது என தீர்மானித்து குருக்மேனுக்கு சாட்டையடி கொடுப்பது போன்ற குறும்பதிவுகளை வெளியிட்டார்.

நமக்கு எதுமே தெரியாதது பற்றி எல்லாம் தெரிந்தது போல எழுதினால் போயிற்று என்னும் பொருள் பட அமைந்திருந்த அந்த குறும்பதிவில் குருக்மேனின் வலைப்பதிவுக்கும் இணைப்பு கொடுத்திருந்தார்.

குருக்மேன் தனக்கு தெரியாத விஷய்ம் குறித்து எழுதியுள்ளதாக இப்படி குறை கூறியிருந்த அதிபர் அடுத்த குறும்பதிவில் ,நோபல் பரிசு பெற்றிருந்தால் எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாமா என்று இன்னும் காட்டமாகவே கேட்டிருந்தார்.

அதோடு இது பிரின்ஸ்டனுக்கும் கொலம்பியாவுக்கும் நடக்கும் மோதலா என்னும் கிண்டலாக கேட்டிருந்தார்.பிரின்ஸ்டன் பலகலை குருக்மேன் பணியாற்றும் பல்க‌லை.கொலம்பியா பலகலை எஸ்டோனிய அதிபர் பயின்ற பல்க‌லை.

இதன் பிறகு ,ஆனால் நமக்கு என்ன தெரியும் நாம் எல்லாம் அல்ப கிழக்கு ஐரோப்பியர்கள் தானே… என்னும் தெனியில் வஞ்ச புகழ்ச்சியாக ஒரு குறும்பதிவை வெளியிட்டு தனது தாக்குதலை முடித்து கொண்டார்.

எதிர்பார்க்க கூடியது போலவே இந்த டிவிட்டர் பதிலடி பலரது கவனத்தை ஈர்த்தது.ஒரு நாட்டின் அதிபரே விமர்சனத்திற்கு பதிலடி கொடுக டிவிட்டரில் நேரடியாக கச்சை கட்டிக்கொண்டு இற‌ங்கியது பரபரப்பை உண்டாக்கியது.

அதிபர் பயன்படுத்திய கடுமையான வார்த்தைகள் ஒரு வேளை எஸ்டோனிய அதிபரின் டிவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.ஆனால் இந்த குறும்பதிவுகள் எஸ்டோனிய அதிபரால் எழுத்தப்பட்டது தான் என்று அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே எஸ்டோனிய அதிபர் இந்த குறும்பதிவுகளை வெளியிட்ட போது மதுவின் ஆதிக்கத்தில் இருந்தாரோ என்ற சந்தேகமும் எழுப்ப பட்டது.அந்த அளவுக்கு அவரது பதிலடி காட்டமாக இருந்தது.

ஆனால் எஸ்டோனிய அதிபரோ இந்த டிவிட்டர் பதிலடி பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள எஸ்டோனியா மேற்கொண்டு வரும் சீரிய மற்றும் கடினமான முயற்சிகள் தொடராபான நேர்மையான தற்காப்பு என இமெயில் மூலம் உறுதியான விளக்கத்தை அளித்தார்.

இதன் மூலம் தனது நிலையில் தெளிவாக இருப்பதை அவர் உறுதி செய்தார்.ஆனால் இத்தனைக்கு நடுவிலும் குருக்மேன் அமைதியாகவே இருந்தார்.

அவரும் டிவிட்டரில் பதில் அளித்திருந்தால் உலகம் ஒரு டிவிட்டர் விவாதத்தை சந்தித்திருக்கும்!.

————–
குருக்மேனின் வலைப்பதிவு;http://krugman.blogs.nytimes.com/2012/06/06/estonian-rhapsdoy/

————
எஸ்டோனிய அதிபரின் டிவிட்டர் பதிவு;https://twitter.com/?tw_e=screenname&tw_i=210475404526501888&tw_p=tweetembed#!/IlvesToomas

—————
டிவிட்டரில் ஒரு மோதல்.;http://cybersimman.wordpress.com/2012/06/01/twitter-160/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.