இணையம் அறிவோம்; இணையம் காப்போம்

 

’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட பரிந்துரைகள் அடிப்படையில் இணைய சமநிலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளன. இது இணைய சமநிலை ஆர்வலர்களையும், இணைய சுதந்திர ஆதாரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இணைய சமநிலை தொடர்பான பரிந்துரைகளை நவம்பர் 28 ம் தேதி டிராய் வெளியிட்டது. இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி நிறுவனங்கள் எந்த வகையான உள்ளடக்கத்திற்கும் (சேவை) இடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்பதும், இத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் அவை யாருடனும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளக்கூடாது என்பதும் பரிந்துரைகளின் முக்கிய அம்சமாக அமைகின்றன. சாமானியர்களின் நோக்கில் பார்த்தால், இதன் பொருள் இணைய சேவை நிறுவனங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. எல்லா வகையான இணைதளங்களையும், சேவைகளையும் அவை ஒன்றாகவே கருத வேண்டும். எனவே இணையவாசிகள் ஏற்கனவே உள்ளது போலவே எந்த மாறுதலும் இல்லாமல் இணைத்தை அணுகலாம்.

டிராயின் இந்த பரிந்துரைகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன. கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கு மேலாக இணைய சமநிலை தொடர்பான பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பரிசீலித்து வந்த டிராய், இது தொடர்பான தனது பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. இவை இணைய சமநிலைக்கு ஆதரவாக அமைந்திருப்பது ஒரு விதத்தில் இணையவாசிகளுக்கும், இணைய சமநிலை ஆதாரவாளர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாடு தழுவிய அளவில் வெடித்த இணைய சமநிலை போராட்டம் நினைவிருக்கலாம். அப்போது டிராய், ஓவர் தி டாப் சேவைகள் என சொல்லப்படும் வாட்ஸ் அப் , ஸ்கைப் போன்ற சேவைகள் குறித்து, பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்கும் வகையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் இணைய சமநிலைக்கு பாதகமான விஷயங்கள் இருந்தன.

இணைய போராட்டம்

இதனையடுத்து இணைய சுதந்திரத்தை காக்கும் நோக்கத்தோடு இணையவாசிகள் திரண்டனர். இணைய சமநிலைக்கு ஆதாரவான இணையதளங்கள் அமைக்கப்பட்டு, இதை வலியுறுத்தும் வகையில் மெயில்கள் லட்சக்கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் பயனாக குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்க முற்பட்ட ஏர்டெல் ஜீரோ போன்ற சர்ச்சைக்குறிய திட்டங்கள் கைவிடப்பட்டன. பின்னர் பேஸ்புக் நிறுவனம் ஜீரோபேசிஸ் எனும் பெயரில் குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்கும் திட்டமும் கைவிடும் சூழல் உருவானது.

இந்நிலையில் தான், டிராயின் பரிந்துரைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த பரிந்துரைகள் தொலைத்தொடர்பு துறையால் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பிறகே இவை அமலுக்கு வரும். எனினும் அடிப்படையில் இணைய சமநிலைக்கு திட்டவட்டமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் பரிந்துரைகள் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என்றே பரவலாக கருதப்படுகிறது. ”இணையம் என்பது யார் ஒருவருக்கு சொந்தமானது அல்ல, எனவே அது திறந்த தன்மை கொண்டதாக, எல்லோரும் அணுக கூடியதாக இருப்பதே சரியானது” என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியதை இங்கே பொருத்திப்பார்க்க வேண்டும்.

டிராய் பரிந்துரைகளில் ஒரு சில போதாமைகள் இருப்பதாக இணைய சமநிலை ஆதாரவாளர்கள் கருதினாலும், ஒட்டுமொத்தமாக வரவேற்க தக்கதாகவே இருக்கிறது. அது மட்டும் அல்ல, சர்வதேச அளவில் இணைய சமநிலைக்கு ஆதரவான மிகவும் வலுவான நிலைப்பாடாக இது அமைந்திருப்பதாகவும் பாராட்டப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இணைய புதுமைகளின் இருப்பிடம் என போற்றப்படும் சிலிக்கான் வேலி அமைந்திருக்கும் அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட இணைய சமநிலைக்கு ஆதாரவான விதிகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ள நிலையில் இந்திய நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் முரண் நகை என்னவெனில், அமெரிக்காவில் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்ஸ் சேர்மனாக இருக்கும் இந்திய அமெரிக்கரான அஜித் பாய் என்பவர் தான் இந்த நடவடிக்கையின் மையமாக இருக்கிறார் என்பது தான்.

அமெரிக்காவில் விவாதம்

இணைய சமநிலை இல்லாத நிலை உருவானால், என்ன எல்லாம் பாதிப்பு ஏற்படு என்று அமெரிக்காவும், சிலிக்கான வேலியும் மிகத்தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இணைய புதுமைக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேட்டு வைத்துவிடலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க வல்லுனர்கள் சிலர் நாமறிந்த வகையில் இணையம் முடிவுக்கு வந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். எப்படியேனும் இணைய சமநிலையை காப்பாற்ற வேண்டும் எனும் போராட்டமும் அங்கு வலுத்திருக்கிறது.

இணைய சமநிலையின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இதற்கான விளக்கத்தை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, இணையத்தின் அடிப்படையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இணையம் இன்றியமையாதது என்பது எல்லோருக்கும் தெரியும். இ-காமர்ஸ், பண பரிவர்த்தனை, பொழுதுபோக்கு, இணைய கல்வி என எல்லாவற்றுக்கும் இணையத்தை பயன்படுத்த முடிகிறது. இப்படி இணையம் மிகவும் பழக்கமாகி விட்டதால் பலரும் இணையம் என்றால் என்ன என்றெல்லாம் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால் இது இப்போது மிகவும் அவசியமாகிறது.

இணைய ஆற்றல்

இணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல் என்று குறிப்பிடப்படுகிறது, கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களும், கையடக்க சாதனங்களும் அந்த வலையில் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட தொலைபேசி உள்ளிட்ட அனைத்துவிதமான வலைப்பின்னல்களில் இருந்தும் இணையம் மிகவும் மாறுபட்டது. ஏனெனில் இணையம் மையமில்லாதது. இணையம் எந்த ஒரு அமைப்பு அல்லது நாடு அல்லது நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே தான் தணிக்கை முயற்சிகளை எல்லாம் மீறி இணையம் அடிப்படையில் சுதந்திரமானதாக இருக்கிறது. இந்த மையமில்லாத அம்சம் என்பது இணையத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பிலும் இருப்பதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இணையம் மையமாக கட்டுப்படுத்த முடியாத வகையிலேயே அதன் வடிவமைப்பும் அமைந்துள்ளது. இணையம் எனும் வலைப்பின்னலில் இணையும் புதிய முனைகள் (nodes) மூலமே வலுப்பெறும் வகையில் இணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இணைய போக்குவரத்தை தாங்கியிருக்கும் ரவுட்டர்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை எல்லால் விட, இந்த வலைப்பின்னலில் இணையும் புதிய சாதனங்கள் மற்றும் சேவைகள் மூலம் தான் அது தனக்கான புதிய ஆற்றலை பெறுகிறது. இந்த வகை வடிவமைப்பை ‘எண்ட் டூ எண்ட்’ டிசைன் என குறிப்பிடுகின்றனர்.

இந்த இடத்தில் இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப தாக்கத்தால் நவீன சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தாக்கத்தை உணர்த்தும் வகையில் சமகால சமூகத்தை வலைப்பின்னல் சமூகம் என மானுவல் காஸ்டெல்ஸ் எனும் சமூகவியல் அறிஞர் குறிப்பிடுவதை நினைத்துப்பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும். நம் சமூகம் தற்போது வலைப்பின்னல்களை அடிப்படை சமூக கட்டமைப்பாக கொண்டிருப்பதாக மாறியிருக்கிறது என கூறும் காஸ்டெல்ஸ் உலகமயமாதலும், இணையம் மூலமான அணி சேர்தலும், போராட்டங்களும் இதன் வெவ்வேறு அம்சங்கள் என்கிறார். இந்த வலைப்பின்னலில் எந்த ஒரு தனி முனைக்கும் முக்கியத்துவம் கிடையாது, இதில் இணையும் புதிய முனைகளே இதன் ஆற்றலுக்கு முக்கிய காரணம் என காஸ்டெல்ஸ் குறிப்பிடுகிறார். பழைய முனைகள் முக்கியத்துவம் இழந்து விலகிப்போவதும், புதிய முனைகள் முன்னுக்கு வருவதும் சகஜமானது என்றும் அவர் குறிப்பிடுகிறார். மையமில்லாத தன்மையே இந்த யுகத்தின் தன்மை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இந்த கருத்தாக்கங்களை விவரித்து அவர் இன்பர்மேஷன் ஏஜ் எனும் மூன்று பகுதி புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

ஏன் தேவை?

ஆக, இணையத்தின் மையமில்லா தன்மையே அதன் ஆதார பலம். அந்த காலத்தில் உருவான நெட்ஸ்கேப் பிரவுசர், இபே ஏல தளம், ஜியோசிட்டிஸ் இணையதள சேவை மற்றும் இடையே அலையென எழுந்த பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகள், இப்போதைய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட புதுமையான சேவைகள் எல்லாம் உருவாக அடிப்படை காரணம் இணையம் திறந்த வெளி தன்மை கொண்டிருப்பதும், அங்கு எல்லோரும் சமம் என்பதுமே ஆகும்.

இந்த தன்மையை கட்டிக்காக்கவே இணைய சமநிலை எனும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. அதாவது இணைய சேவை நிறுவனங்கள் எந்த காரணத்திற்காகவும் இணையதளங்கள் அல்லது சேவைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் எல்லாவற்றையும் சமமாக நடத்த வேண்டும் என்பதாகும். இணைய சேவை நிறுவனங்கள் எந்த ஒரு சேவையையும், முடக்கவோ, வேகத்தை குறைக்கவோ செய்யக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது. இதே போல ஒரு சில தளங்களுக்கு அதிவேக பாதை அமைத்து தரவும் முயலக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் வீடியோ சேவை வழங்கும் தளங்களும் அதிவேக பாதை தேவை எனும் வாதத்தின் அடிப்படையில் இணைய சமநிலை எதிர்க்கப்படுகிறது. இதன் காரணமாக இணையத்திற்கு மாறுபட்ட கட்டண விகிதங்கள் வரலாம். அதைவிட முக்கியமாக குறிப்பிட்ட சில தளங்கள் முன்நிறுத்தப்பட்டு சில பின்னுக்குத்தள்ளப்படும் நிலை வரலாம். இது நுகர்வோரை பாதிக்கும். மேலும் இணைய சேவை நிறுவனங்களோடு கைகோர்த்து பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாவதை கடினமானதாக்கலாம்.

இணைய சமநிலை இன்மையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இன்னும் பெரிதாக பட்டியலிடலாம். அதைவிட எளிதாக இணைய சமநிலை இல்லாத போர்ச்சுகள் நாட்டில், இப்போது இணையவாசிகள் படும்பாட்டை பார்த்தாலே போதும் என்கின்றனர். இங்கு இணையவாசிகள் இணையத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல், கேபிள் டிவி பேக்கேஜ் போல குறிப்பிட்ட கட்டணத்திற்கு குறிப்பிட்ட வகை இணையதளங்களை பயன்படுத்தும் நிலை உருவாகி இருப்பதாக செய்திகளில் இருந்து அறிய முடிகிறது.

எனவே தான் இணைய சமநிலையும், அதில் இந்தியா எடுத்துள்ள வலுவான நிலைப்பாடும் முக்கியமாகிறது. இதை கட்டிக்காக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியம்!

 

 


 

நன்றி; தமிழ் இந்து நாளிதழில் எழுதியது

 

’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட பரிந்துரைகள் அடிப்படையில் இணைய சமநிலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளன. இது இணைய சமநிலை ஆர்வலர்களையும், இணைய சுதந்திர ஆதாரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இணைய சமநிலை தொடர்பான பரிந்துரைகளை நவம்பர் 28 ம் தேதி டிராய் வெளியிட்டது. இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி நிறுவனங்கள் எந்த வகையான உள்ளடக்கத்திற்கும் (சேவை) இடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்பதும், இத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் அவை யாருடனும் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளக்கூடாது என்பதும் பரிந்துரைகளின் முக்கிய அம்சமாக அமைகின்றன. சாமானியர்களின் நோக்கில் பார்த்தால், இதன் பொருள் இணைய சேவை நிறுவனங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை வேகத்தை அதிகரிக்கவோ, குறைக்கவோ முடியாது. எல்லா வகையான இணைதளங்களையும், சேவைகளையும் அவை ஒன்றாகவே கருத வேண்டும். எனவே இணையவாசிகள் ஏற்கனவே உள்ளது போலவே எந்த மாறுதலும் இல்லாமல் இணைத்தை அணுகலாம்.

டிராயின் இந்த பரிந்துரைகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டன. கடந்த ஒன்னரை ஆண்டுகளுக்கு மேலாக இணைய சமநிலை தொடர்பான பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை பரிசீலித்து வந்த டிராய், இது தொடர்பான தனது பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. இவை இணைய சமநிலைக்கு ஆதரவாக அமைந்திருப்பது ஒரு விதத்தில் இணையவாசிகளுக்கும், இணைய சமநிலை ஆதாரவாளர்களுக்கும் கிடைத்த வெற்றி என்றே சொல்ல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நாடு தழுவிய அளவில் வெடித்த இணைய சமநிலை போராட்டம் நினைவிருக்கலாம். அப்போது டிராய், ஓவர் தி டாப் சேவைகள் என சொல்லப்படும் வாட்ஸ் அப் , ஸ்கைப் போன்ற சேவைகள் குறித்து, பொதுமக்களிடம் இருந்து கருத்து கேட்கும் வகையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் இணைய சமநிலைக்கு பாதகமான விஷயங்கள் இருந்தன.

இணைய போராட்டம்

இதனையடுத்து இணைய சுதந்திரத்தை காக்கும் நோக்கத்தோடு இணையவாசிகள் திரண்டனர். இணைய சமநிலைக்கு ஆதாரவான இணையதளங்கள் அமைக்கப்பட்டு, இதை வலியுறுத்தும் வகையில் மெயில்கள் லட்சக்கணக்கில் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் பயனாக குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்க முற்பட்ட ஏர்டெல் ஜீரோ போன்ற சர்ச்சைக்குறிய திட்டங்கள் கைவிடப்பட்டன. பின்னர் பேஸ்புக் நிறுவனம் ஜீரோபேசிஸ் எனும் பெயரில் குறிப்பிட்ட சேவைகளை இலவசமாக வழங்கும் திட்டமும் கைவிடும் சூழல் உருவானது.

இந்நிலையில் தான், டிராயின் பரிந்துரைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த பரிந்துரைகள் தொலைத்தொடர்பு துறையால் பரிசீலிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பிறகே இவை அமலுக்கு வரும். எனினும் அடிப்படையில் இணைய சமநிலைக்கு திட்டவட்டமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில் பரிந்துரைகள் அமைந்துள்ளது வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது என்றே பரவலாக கருதப்படுகிறது. ”இணையம் என்பது யார் ஒருவருக்கு சொந்தமானது அல்ல, எனவே அது திறந்த தன்மை கொண்டதாக, எல்லோரும் அணுக கூடியதாக இருப்பதே சரியானது” என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா கூறியதை இங்கே பொருத்திப்பார்க்க வேண்டும்.

டிராய் பரிந்துரைகளில் ஒரு சில போதாமைகள் இருப்பதாக இணைய சமநிலை ஆதாரவாளர்கள் கருதினாலும், ஒட்டுமொத்தமாக வரவேற்க தக்கதாகவே இருக்கிறது. அது மட்டும் அல்ல, சர்வதேச அளவில் இணைய சமநிலைக்கு ஆதரவான மிகவும் வலுவான நிலைப்பாடாக இது அமைந்திருப்பதாகவும் பாராட்டப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இணைய புதுமைகளின் இருப்பிடம் என போற்றப்படும் சிலிக்கான் வேலி அமைந்திருக்கும் அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த காலத்தில் கொண்டு வரப்பட்ட இணைய சமநிலைக்கு ஆதாரவான விதிகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பு உருவாகி உள்ள நிலையில் இந்திய நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதில் முரண் நகை என்னவெனில், அமெரிக்காவில் பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்ஸ் சேர்மனாக இருக்கும் இந்திய அமெரிக்கரான அஜித் பாய் என்பவர் தான் இந்த நடவடிக்கையின் மையமாக இருக்கிறார் என்பது தான்.

அமெரிக்காவில் விவாதம்

இணைய சமநிலை இல்லாத நிலை உருவானால், என்ன எல்லாம் பாதிப்பு ஏற்படு என்று அமெரிக்காவும், சிலிக்கான வேலியும் மிகத்தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக இணைய புதுமைக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வேட்டு வைத்துவிடலாம் என்று அஞ்சப்படுகிறது. அமெரிக்க வல்லுனர்கள் சிலர் நாமறிந்த வகையில் இணையம் முடிவுக்கு வந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்துள்ளனர். எப்படியேனும் இணைய சமநிலையை காப்பாற்ற வேண்டும் எனும் போராட்டமும் அங்கு வலுத்திருக்கிறது.

இணைய சமநிலையின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இதற்கான விளக்கத்தை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது, இணையத்தின் அடிப்படையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இணையம் இன்றியமையாதது என்பது எல்லோருக்கும் தெரியும். இ-காமர்ஸ், பண பரிவர்த்தனை, பொழுதுபோக்கு, இணைய கல்வி என எல்லாவற்றுக்கும் இணையத்தை பயன்படுத்த முடிகிறது. இப்படி இணையம் மிகவும் பழக்கமாகி விட்டதால் பலரும் இணையம் என்றால் என்ன என்றெல்லாம் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால் இது இப்போது மிகவும் அவசியமாகிறது.

இணைய ஆற்றல்

இணையம் என்பது வலைப்பின்னல்களின் வலைப்பின்னல் என்று குறிப்பிடப்படுகிறது, கோடிக்கணக்கான கம்ப்யூட்டர்களும், கையடக்க சாதனங்களும் அந்த வலையில் இணைந்துள்ளது. இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட தொலைபேசி உள்ளிட்ட அனைத்துவிதமான வலைப்பின்னல்களில் இருந்தும் இணையம் மிகவும் மாறுபட்டது. ஏனெனில் இணையம் மையமில்லாதது. இணையம் எந்த ஒரு அமைப்பு அல்லது நாடு அல்லது நிறுவனத்தால் கட்டுப்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே தான் தணிக்கை முயற்சிகளை எல்லாம் மீறி இணையம் அடிப்படையில் சுதந்திரமானதாக இருக்கிறது. இந்த மையமில்லாத அம்சம் என்பது இணையத்தின் தொழில்நுட்ப கட்டமைப்பிலும் இருப்பதை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இணையம் மையமாக கட்டுப்படுத்த முடியாத வகையிலேயே அதன் வடிவமைப்பும் அமைந்துள்ளது. இணையம் எனும் வலைப்பின்னலில் இணையும் புதிய முனைகள் (nodes) மூலமே வலுப்பெறும் வகையில் இணையம் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இணைய போக்குவரத்தை தாங்கியிருக்கும் ரவுட்டர்கள், கம்ப்யூட்டர்கள் போன்றவற்றை எல்லால் விட, இந்த வலைப்பின்னலில் இணையும் புதிய சாதனங்கள் மற்றும் சேவைகள் மூலம் தான் அது தனக்கான புதிய ஆற்றலை பெறுகிறது. இந்த வகை வடிவமைப்பை ‘எண்ட் டூ எண்ட்’ டிசைன் என குறிப்பிடுகின்றனர்.

இந்த இடத்தில் இணையம் உள்ளிட்ட தொழில்நுட்ப தாக்கத்தால் நவீன சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் தாக்கத்தை உணர்த்தும் வகையில் சமகால சமூகத்தை வலைப்பின்னல் சமூகம் என மானுவல் காஸ்டெல்ஸ் எனும் சமூகவியல் அறிஞர் குறிப்பிடுவதை நினைத்துப்பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும். நம் சமூகம் தற்போது வலைப்பின்னல்களை அடிப்படை சமூக கட்டமைப்பாக கொண்டிருப்பதாக மாறியிருக்கிறது என கூறும் காஸ்டெல்ஸ் உலகமயமாதலும், இணையம் மூலமான அணி சேர்தலும், போராட்டங்களும் இதன் வெவ்வேறு அம்சங்கள் என்கிறார். இந்த வலைப்பின்னலில் எந்த ஒரு தனி முனைக்கும் முக்கியத்துவம் கிடையாது, இதில் இணையும் புதிய முனைகளே இதன் ஆற்றலுக்கு முக்கிய காரணம் என காஸ்டெல்ஸ் குறிப்பிடுகிறார். பழைய முனைகள் முக்கியத்துவம் இழந்து விலகிப்போவதும், புதிய முனைகள் முன்னுக்கு வருவதும் சகஜமானது என்றும் அவர் குறிப்பிடுகிறார். மையமில்லாத தன்மையே இந்த யுகத்தின் தன்மை என்றும் அவர் குறிப்பிடுகிறார். இந்த கருத்தாக்கங்களை விவரித்து அவர் இன்பர்மேஷன் ஏஜ் எனும் மூன்று பகுதி புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

ஏன் தேவை?

ஆக, இணையத்தின் மையமில்லா தன்மையே அதன் ஆதார பலம். அந்த காலத்தில் உருவான நெட்ஸ்கேப் பிரவுசர், இபே ஏல தளம், ஜியோசிட்டிஸ் இணையதள சேவை மற்றும் இடையே அலையென எழுந்த பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் சேவைகள், இப்போதைய வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட புதுமையான சேவைகள் எல்லாம் உருவாக அடிப்படை காரணம் இணையம் திறந்த வெளி தன்மை கொண்டிருப்பதும், அங்கு எல்லோரும் சமம் என்பதுமே ஆகும்.

இந்த தன்மையை கட்டிக்காக்கவே இணைய சமநிலை எனும் கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. அதாவது இணைய சேவை நிறுவனங்கள் எந்த காரணத்திற்காகவும் இணையதளங்கள் அல்லது சேவைகளுக்கு பாரபட்சம் காட்டாமல் எல்லாவற்றையும் சமமாக நடத்த வேண்டும் என்பதாகும். இணைய சேவை நிறுவனங்கள் எந்த ஒரு சேவையையும், முடக்கவோ, வேகத்தை குறைக்கவோ செய்யக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது. இதே போல ஒரு சில தளங்களுக்கு அதிவேக பாதை அமைத்து தரவும் முயலக்கூடாது என வலியுறுத்தப்படுகிறது.

ஆனால் வீடியோ சேவை வழங்கும் தளங்களும் அதிவேக பாதை தேவை எனும் வாதத்தின் அடிப்படையில் இணைய சமநிலை எதிர்க்கப்படுகிறது. இதன் காரணமாக இணையத்திற்கு மாறுபட்ட கட்டண விகிதங்கள் வரலாம். அதைவிட முக்கியமாக குறிப்பிட்ட சில தளங்கள் முன்நிறுத்தப்பட்டு சில பின்னுக்குத்தள்ளப்படும் நிலை வரலாம். இது நுகர்வோரை பாதிக்கும். மேலும் இணைய சேவை நிறுவனங்களோடு கைகோர்த்து பெரிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்து புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாவதை கடினமானதாக்கலாம்.

இணைய சமநிலை இன்மையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இன்னும் பெரிதாக பட்டியலிடலாம். அதைவிட எளிதாக இணைய சமநிலை இல்லாத போர்ச்சுகள் நாட்டில், இப்போது இணையவாசிகள் படும்பாட்டை பார்த்தாலே போதும் என்கின்றனர். இங்கு இணையவாசிகள் இணையத்தை முழுமையாக பயன்படுத்த முடியாமல், கேபிள் டிவி பேக்கேஜ் போல குறிப்பிட்ட கட்டணத்திற்கு குறிப்பிட்ட வகை இணையதளங்களை பயன்படுத்தும் நிலை உருவாகி இருப்பதாக செய்திகளில் இருந்து அறிய முடிகிறது.

எனவே தான் இணைய சமநிலையும், அதில் இந்தியா எடுத்துள்ள வலுவான நிலைப்பாடும் முக்கியமாகிறது. இதை கட்டிக்காக்க வேண்டும் என்பது அதைவிட முக்கியம்!

 

 


 

நன்றி; தமிழ் இந்து நாளிதழில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.