எஸ்.எம்.எஸ்- 25; தொழில்நுட்ப யுகத்தின் புதிய மொழி

Neilவாட்ஸ் அப் யுகத்தில் எஸ்.எம்.எஸ் சேவை பின்னுக்குத்தள்ளப்பட்டு, அதன் பிரகாசமும் மங்கியிருக்கலாம். ஆனால் அதன் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு சற்று அந்நியமாக இருந்தாலும் கூட, எஸ்.எம்.எஸ் சேவை வளரும் நாடுகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் இன்னமும் தகவல் தொடர்பிற்கான எளிய வழியாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, எஸ்.எம்.எஸ் சேவை தனக்கே உரிய புதிய மொழியையும் புழக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இன்றைய இமோஜிகளுக்கும், சித்திர எழுத்துக்களுக்கும் இந்த குறுஞ்செய்தி சேவை தான் முன்னோடி.

எஸ்.எம்.எஸ் சேவை தனது வெள்ளிவிழாவை கொண்டாடும் நிலையில், இதன் வரலாற்றையும் வளர்ச்சியையும் திரும்பிப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். ஆம், எஸ்.எம்.எஸ் சேவை அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.

1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ம் தேதியில் தான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ்  செய்தி அனுப்பப்பட்டது. அது ஒரு வழி செய்தி என்பது மட்டும் அல்ல, கம்ப்யூட்டரில் இருந்தே அனுப்பி வைக்கப்பட்டது என்பதும் ஆச்சர்யமான விஷயம். அப்போது வோடோபோன் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த பிரிட்டனைச்சேர்ந்த நீல் பாப்வொர்த் என்பவர் தான் தன்னுடைய சக பொறியாளரான ரிச்சர்டு ஜார்விசுக்கு உலகின் முதல் எஸ்.எம்.எஸ் செய்தியை அனுப்பி வைத்தார். ஜார்விஸ் தான் வைத்திருந்த ஆர்பிட் போனில் அதை பெற்றுக்கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ எனும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே அந்த செய்தியில் இருந்தன.

நாம் இப்போது செய்யக்கூடியது போலவே ஜார்விஸ் உடனே அந்த சரித்திர புகழ் பெற்ற செய்திக்கு பதில் அனுப்பிவிடவில்லை. ஏனெனில் அப்போது செல்போன்களில் அந்த வசதி இல்லை. எஸ்.எம்.எஸ் வடிவில் செய்திகளை மட்டுமே பெற முடிந்தது.

முதல் எஸ்.எம்.எஸ் செய்தியை அனுப்பியது நீல் பார்ப்வொர்த், வெள்ளி விழா பரபரப்புக்கு நடுவே இந்த நிகழ்வை நினைவு கூறும் போது,” 1992 ல் எம்.எம்.எஸ் அனுப்பிய போது டெக்ஸ்ட் செய்வது இந்த அளவு பிரபலமாகும் என்றும், இமோஜிகள் மற்றும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் மேசேஜிங் சேவைகளுக்கு வழி வகுக்கும் என்றெல்லாம் தெரியாது’ என கூறியிருக்கிறார்.

தன் பிள்ளைகளிடமே அண்மையில் தான், முதல் எஸ்.எம்.எஸ் பெருமை பற்றி கூறியதாக தெரிவிக்கும் பாப்வொர்த், இப்போது திரும்பி பார்க்கையில், கிறிஸ்துமஸ் வாழ்த்துச்செய்தி மொபைல் வரலாற்றில் முக்கிய தருணமாக அமையும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் வெள்ளிவிழாவை கொண்டாடும் வகையில் அவர் அந்த வாழ்த்துச்செய்தியை தற்போதைய இமோஜியுடன் சேர்த்து அனுப்பியிருக்கிறார்.

முதல் எஸ்.எம்.எஸ் செய்திய அனுப்பியவர் பாப்வொர்த் என்றாலும் அதன் பிரம்மா எனும் பெருமைக்கு உரியவர் பின்லாந்தைசேர்ந்த பொறியாளரான மேட்டி மக்கோனென் (Matti Makkonen ) என்பவர் தான். 1984 ம் ஆண்டு இவர் தான் முதன் முதலில் செல்லுலார் வலைப்பின்னல் வழியே செய்திகளை அனுப்பி வைப்பதற்கான கருத்தாக்கத்தை முன் வைத்தார். ஆனால் மக்கோனென் ஒருபோதும் தன்னை எஸ்.எம்.எஸ் கண்டுபிடிப்பாளர் என மார்தட்டிக்கொண்டதில்லை. பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கும் பழக்கம் இல்லாத மெக்கோனென் சில ஆண்டுகளுக்கு முன் அபூர்வமாக அளித்த பேட்டியில், இது ஒரு கூட்டு கண்டுபிடிப்பு என்று கூறியிருக்கிறார். அது உண்மை தான். எம்.எம்.எஸ்-ன் அடிநாதமாக விளங்கும் 160 எழுத்துக்கள் எனும் கட்டுப்பாட்டை முதலில் முன்வைத்தவர்கள் ஜெர்மனி பொறியாளர்களான பிரிதெல்ம் ஹில்லேபிராண்ட் மற்றும் பெர்னார்டு ஹிலேபார்ட் ( Friedhelm Hillebrand and Bernard Ghillebaert ) ஆவர்.

1993 ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பி பெறும் வசதியை அறிமுகம் செய்தது. அப்போது விற்பனை செய்யப்பட்ட நோக்கியா போன்களில் குறுஞ்செய்தி வருகையை உணர்த்தும் பீப் ஒலி மிகவும் பிரபலம். அதன் பிறகு மெல்ல குறுஞ்செய்தி பிரபலமானது. 1999 ல் தான் பல்வேறு செல்போன் சேவைகளுக்கு இடையே குறுஞ்செய்தி அனுப்பும் வசதி அறிமுகமாகி இந்த சேவை மேலும் பரவலானது.

எஸ்.எம்.எஸ் செய்திக்கு 160 எழுத்துகள் எனும் கட்டுப்பாடு இருந்தாலும் அதுவே அதன் தனித்தன்மையாக அமைந்து நவீன யுகத்திற்கான புதிய சுருக்கெழுத்து மொழியை கொண்டு வந்தது. வார்த்தை சிக்கனத்தை கடைப்பிடிப்பதற்காக, ஆங்கில எழுத்துக்களை சுருக்கி பயன்படுத்தும் வழக்கத்தையும், இவற்றில் பல புதுமைகளையும் அறிமுகம் செய்தது. ஒரு சிலர் இதை மொழியை சிதைக்கும் செயலாக விமர்சித்தாலும், மொழியியல் வல்லுனர்களே இந்த மாற்றங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, இவை மொழியின் பரிணாமத்தில் ஒரு வளர்ச்சிப்போக்கே என்று கூறுகின்றனர். இன்று இவை பலவகையான இமோஜிகளாக பரினமித்துள்ளன. இவற்றையே கூட ஒரு தனி மொழி என கருதுபவர்களும் இருக்கின்றனர்.

சுருக்கெழுத்து மூலம் மொழி பயன்பாட்டில் புதுமைகளை கொண்டுவந்ததைவிட, தகவல் பரிமாற்றத்தில் இவை ஆற்றும் பங்கு போற்றத்தக்கது. அதிலும் குறிப்பாக பேரிடர் காலங்களில் எஸ்.எம்.எஸ் செய்தி மூலம் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப்பணிகள் பற்றிய தகவல்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடிகிறது. கிராமப்புறங்களில் மருத்துவ சேவை தகவல்களையும், அரசு திட்ட தகவல்களையும் கொண்டு செல்வதற்கு ஏற்ற வாகனமாக எஸ்.எம்.எஸ் விளங்குகிறது. இந்தியாவின் கேரளாவில் மற்றும் உலகின் பல பகுதிகளில் மீனவர்களுக்கு மீன் விலையை செல்போனில் தெரிவிப்பது, விவசாய தகவல்களை கொண்டு சேர்ப்பது போன்றவற்றுக்கு எஸ்.எம்.எஸ் வசதியே கைகொடுத்திருக்கிறது. இப்படி எஸ்.எம்.எஸ் சார்ந்த பல முன்னோடி முயற்சிகளை கூறலாம்.

பல்க் மேச்ஜிங் வசதி ஒரு பக்கம் மார்க்கெட்டிங் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டாலும், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் செய்திகளை கொண்டு சேர்ப்பதற்கான இதழியல் வாகனமாகவும் எஸ்.எம்.எஸ் இருந்துள்ளது. மொபைல் பணத்தின் முன்னோடி எனப்படும் கென்யாவில் பிரபலமான இருக்கும் மொபைல் பரிவர்த்தனை சேவையான எம்-பெசாவுக்கு அடிப்படையாக இருப்பதும் இந்த வசதி தான். கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தேர்தல் கால முறைகேடுகளை கண்காணிப்பதற்கான உஷாஹிதி (Ushahidi) எனும் எஸ்.எம்.எஸ் சார்ந்த மென்பொருள் சேவையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன், எஸ்.எம்.எஸ் பிரபலமாகத்துவங்கிய காலத்தில் எஸ்.எம்.எஸ் கதைகள், நாவல்கள் எல்லாம் புழக்கத்திற்கு வந்தன. குறிப்பாக ஜப்பானில் இந்த வகை நாவல்கள் மிகப்பிரபலமாக இருந்தன. அதிவேகமாக செய்திகளை டைப் செய்வதற்கான போட்டிகளும் நடத்தப்பட்டு எஸ்.எம்.எஸ் சாம்பியன்களுக்கு முடி சூட்டப்பட்டதும் உண்டு.

என்றாலும் இவற்றை எல்லாம் பழம் பெருமை என்று ஒதுக்கி விடமுடியாது. சாதாரன செல்போன்கள் புழக்கத்தில் இருக்கும் பல பகுதிகளில் இன்னனும் எஸ்.எம்.எஸ் தான் ராஜா. அங்கெல்லாம் தகவல் பரிமாற்றத்திற்கு இதைவிட்டால் வேறு சிறந்த வழியில்லை என்பது மட்டும் அல்ல, வளரும் நாடுகளில் இப்போதும் கூட எஸ்.எம்.எஸ் சார்ந்த புதுமையான சேவைகளை உருவாக்கி வருகின்றனர். அதனால் தான் டிவிட்டர் , வாட்ஸ் அப் என புதுப்புது சேவைகள் பல வந்தாலும், எஸ்.எம்.எஸ் சேவைக்கான தேவை இன்னும் குறையாமல் இருக்கிறது.

 

Neilவாட்ஸ் அப் யுகத்தில் எஸ்.எம்.எஸ் சேவை பின்னுக்குத்தள்ளப்பட்டு, அதன் பிரகாசமும் மங்கியிருக்கலாம். ஆனால் அதன் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு சற்று அந்நியமாக இருந்தாலும் கூட, எஸ்.எம்.எஸ் சேவை வளரும் நாடுகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் இன்னமும் தகவல் தொடர்பிற்கான எளிய வழியாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, எஸ்.எம்.எஸ் சேவை தனக்கே உரிய புதிய மொழியையும் புழக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இன்றைய இமோஜிகளுக்கும், சித்திர எழுத்துக்களுக்கும் இந்த குறுஞ்செய்தி சேவை தான் முன்னோடி.

எஸ்.எம்.எஸ் சேவை தனது வெள்ளிவிழாவை கொண்டாடும் நிலையில், இதன் வரலாற்றையும் வளர்ச்சியையும் திரும்பிப்பார்ப்பது பொருத்தமாக இருக்கும். ஆம், எஸ்.எம்.எஸ் சேவை அறிமுகமாகி 25 ஆண்டுகள் ஆகிவிட்டன.

1992 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ம் தேதியில் தான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ்  செய்தி அனுப்பப்பட்டது. அது ஒரு வழி செய்தி என்பது மட்டும் அல்ல, கம்ப்யூட்டரில் இருந்தே அனுப்பி வைக்கப்பட்டது என்பதும் ஆச்சர்யமான விஷயம். அப்போது வோடோபோன் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த பிரிட்டனைச்சேர்ந்த நீல் பாப்வொர்த் என்பவர் தான் தன்னுடைய சக பொறியாளரான ரிச்சர்டு ஜார்விசுக்கு உலகின் முதல் எஸ்.எம்.எஸ் செய்தியை அனுப்பி வைத்தார். ஜார்விஸ் தான் வைத்திருந்த ஆர்பிட் போனில் அதை பெற்றுக்கொண்டார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், ‘மெரி கிறிஸ்துமஸ்’ எனும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே அந்த செய்தியில் இருந்தன.

நாம் இப்போது செய்யக்கூடியது போலவே ஜார்விஸ் உடனே அந்த சரித்திர புகழ் பெற்ற செய்திக்கு பதில் அனுப்பிவிடவில்லை. ஏனெனில் அப்போது செல்போன்களில் அந்த வசதி இல்லை. எஸ்.எம்.எஸ் வடிவில் செய்திகளை மட்டுமே பெற முடிந்தது.

முதல் எஸ்.எம்.எஸ் செய்தியை அனுப்பியது நீல் பார்ப்வொர்த், வெள்ளி விழா பரபரப்புக்கு நடுவே இந்த நிகழ்வை நினைவு கூறும் போது,” 1992 ல் எம்.எம்.எஸ் அனுப்பிய போது டெக்ஸ்ட் செய்வது இந்த அளவு பிரபலமாகும் என்றும், இமோஜிகள் மற்றும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் மேசேஜிங் சேவைகளுக்கு வழி வகுக்கும் என்றெல்லாம் தெரியாது’ என கூறியிருக்கிறார்.

தன் பிள்ளைகளிடமே அண்மையில் தான், முதல் எஸ்.எம்.எஸ் பெருமை பற்றி கூறியதாக தெரிவிக்கும் பாப்வொர்த், இப்போது திரும்பி பார்க்கையில், கிறிஸ்துமஸ் வாழ்த்துச்செய்தி மொபைல் வரலாற்றில் முக்கிய தருணமாக அமையும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

இதன் வெள்ளிவிழாவை கொண்டாடும் வகையில் அவர் அந்த வாழ்த்துச்செய்தியை தற்போதைய இமோஜியுடன் சேர்த்து அனுப்பியிருக்கிறார்.

முதல் எஸ்.எம்.எஸ் செய்திய அனுப்பியவர் பாப்வொர்த் என்றாலும் அதன் பிரம்மா எனும் பெருமைக்கு உரியவர் பின்லாந்தைசேர்ந்த பொறியாளரான மேட்டி மக்கோனென் (Matti Makkonen ) என்பவர் தான். 1984 ம் ஆண்டு இவர் தான் முதன் முதலில் செல்லுலார் வலைப்பின்னல் வழியே செய்திகளை அனுப்பி வைப்பதற்கான கருத்தாக்கத்தை முன் வைத்தார். ஆனால் மக்கோனென் ஒருபோதும் தன்னை எஸ்.எம்.எஸ் கண்டுபிடிப்பாளர் என மார்தட்டிக்கொண்டதில்லை. பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கும் பழக்கம் இல்லாத மெக்கோனென் சில ஆண்டுகளுக்கு முன் அபூர்வமாக அளித்த பேட்டியில், இது ஒரு கூட்டு கண்டுபிடிப்பு என்று கூறியிருக்கிறார். அது உண்மை தான். எம்.எம்.எஸ்-ன் அடிநாதமாக விளங்கும் 160 எழுத்துக்கள் எனும் கட்டுப்பாட்டை முதலில் முன்வைத்தவர்கள் ஜெர்மனி பொறியாளர்களான பிரிதெல்ம் ஹில்லேபிராண்ட் மற்றும் பெர்னார்டு ஹிலேபார்ட் ( Friedhelm Hillebrand and Bernard Ghillebaert ) ஆவர்.

1993 ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் செல்போனில் எஸ்.எம்.எஸ் அனுப்பி பெறும் வசதியை அறிமுகம் செய்தது. அப்போது விற்பனை செய்யப்பட்ட நோக்கியா போன்களில் குறுஞ்செய்தி வருகையை உணர்த்தும் பீப் ஒலி மிகவும் பிரபலம். அதன் பிறகு மெல்ல குறுஞ்செய்தி பிரபலமானது. 1999 ல் தான் பல்வேறு செல்போன் சேவைகளுக்கு இடையே குறுஞ்செய்தி அனுப்பும் வசதி அறிமுகமாகி இந்த சேவை மேலும் பரவலானது.

எஸ்.எம்.எஸ் செய்திக்கு 160 எழுத்துகள் எனும் கட்டுப்பாடு இருந்தாலும் அதுவே அதன் தனித்தன்மையாக அமைந்து நவீன யுகத்திற்கான புதிய சுருக்கெழுத்து மொழியை கொண்டு வந்தது. வார்த்தை சிக்கனத்தை கடைப்பிடிப்பதற்காக, ஆங்கில எழுத்துக்களை சுருக்கி பயன்படுத்தும் வழக்கத்தையும், இவற்றில் பல புதுமைகளையும் அறிமுகம் செய்தது. ஒரு சிலர் இதை மொழியை சிதைக்கும் செயலாக விமர்சித்தாலும், மொழியியல் வல்லுனர்களே இந்த மாற்றங்களை ஆய்வுக்கு உட்படுத்தி, இவை மொழியின் பரிணாமத்தில் ஒரு வளர்ச்சிப்போக்கே என்று கூறுகின்றனர். இன்று இவை பலவகையான இமோஜிகளாக பரினமித்துள்ளன. இவற்றையே கூட ஒரு தனி மொழி என கருதுபவர்களும் இருக்கின்றனர்.

சுருக்கெழுத்து மூலம் மொழி பயன்பாட்டில் புதுமைகளை கொண்டுவந்ததைவிட, தகவல் பரிமாற்றத்தில் இவை ஆற்றும் பங்கு போற்றத்தக்கது. அதிலும் குறிப்பாக பேரிடர் காலங்களில் எஸ்.எம்.எஸ் செய்தி மூலம் மீட்பு பணிகள் மற்றும் நிவாரணப்பணிகள் பற்றிய தகவல்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடிகிறது. கிராமப்புறங்களில் மருத்துவ சேவை தகவல்களையும், அரசு திட்ட தகவல்களையும் கொண்டு செல்வதற்கு ஏற்ற வாகனமாக எஸ்.எம்.எஸ் விளங்குகிறது. இந்தியாவின் கேரளாவில் மற்றும் உலகின் பல பகுதிகளில் மீனவர்களுக்கு மீன் விலையை செல்போனில் தெரிவிப்பது, விவசாய தகவல்களை கொண்டு சேர்ப்பது போன்றவற்றுக்கு எஸ்.எம்.எஸ் வசதியே கைகொடுத்திருக்கிறது. இப்படி எஸ்.எம்.எஸ் சார்ந்த பல முன்னோடி முயற்சிகளை கூறலாம்.

பல்க் மேச்ஜிங் வசதி ஒரு பக்கம் மார்க்கெட்டிங் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டாலும், போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத கிராமப்புற பகுதிகளில் செய்திகளை கொண்டு சேர்ப்பதற்கான இதழியல் வாகனமாகவும் எஸ்.எம்.எஸ் இருந்துள்ளது. மொபைல் பணத்தின் முன்னோடி எனப்படும் கென்யாவில் பிரபலமான இருக்கும் மொபைல் பரிவர்த்தனை சேவையான எம்-பெசாவுக்கு அடிப்படையாக இருப்பதும் இந்த வசதி தான். கென்யா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் தேர்தல் கால முறைகேடுகளை கண்காணிப்பதற்கான உஷாஹிதி (Ushahidi) எனும் எஸ்.எம்.எஸ் சார்ந்த மென்பொருள் சேவையும் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன், எஸ்.எம்.எஸ் பிரபலமாகத்துவங்கிய காலத்தில் எஸ்.எம்.எஸ் கதைகள், நாவல்கள் எல்லாம் புழக்கத்திற்கு வந்தன. குறிப்பாக ஜப்பானில் இந்த வகை நாவல்கள் மிகப்பிரபலமாக இருந்தன. அதிவேகமாக செய்திகளை டைப் செய்வதற்கான போட்டிகளும் நடத்தப்பட்டு எஸ்.எம்.எஸ் சாம்பியன்களுக்கு முடி சூட்டப்பட்டதும் உண்டு.

என்றாலும் இவற்றை எல்லாம் பழம் பெருமை என்று ஒதுக்கி விடமுடியாது. சாதாரன செல்போன்கள் புழக்கத்தில் இருக்கும் பல பகுதிகளில் இன்னனும் எஸ்.எம்.எஸ் தான் ராஜா. அங்கெல்லாம் தகவல் பரிமாற்றத்திற்கு இதைவிட்டால் வேறு சிறந்த வழியில்லை என்பது மட்டும் அல்ல, வளரும் நாடுகளில் இப்போதும் கூட எஸ்.எம்.எஸ் சார்ந்த புதுமையான சேவைகளை உருவாக்கி வருகின்றனர். அதனால் தான் டிவிட்டர் , வாட்ஸ் அப் என புதுப்புது சேவைகள் பல வந்தாலும், எஸ்.எம்.எஸ் சேவைக்கான தேவை இன்னும் குறையாமல் இருக்கிறது.

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.