இணையத்திற்கு ’நோ’ சொல்ல வைக்கும் டிஜிட்டல் பத்திரிகை!

disconnectபுதிதாக டிஜிட்டல் பத்திரிகை ஒன்று உதயமாகி இருக்கிறது. அந்த பத்திரிகை புதியது மட்டும் அல்ல முற்றிலும் புதுமையானதாகவும் அமைந்திருக்கிறது. ’டிஸ்கனெக்ட்’ எனும் இந்த டிஜிட்டல் பத்திரிகையை ஆன்லைனில் படிக்க முடியாது, ஆப்லைனில் மட்டும் தான் படிக்க முடியும். அதாவது, இணைய வசதியை துண்டித்தால் மட்டுமே இந்த பத்திரிகையை படிக்க முடியும்.

டிஜிட்டல் பத்திரிகை என்றாலே இணைத்தில் வாசிக்க கூடிய இணைய இதழ் என்று தானே பொருள். அப்படியிருக்க இணைய இணைப்பை துண்டித்தால் மட்டுமே வாசிக்க கூடிய பத்திரிகையை டிஜிட்டல் இதழ் என்று எப்படி சொல்ல முடியும் என்று கேட்கலாம். ஆனால் இந்த அழகான முரணை மையமாக கொண்டே கிறிஸ் போலின் (Chris Bolin) என்பவர் இந்த புதுமையான டிஜிட்டல் பத்திரிகையை உருவாக்கி இருக்கிறார்.

இந்த பத்திரிகைக்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் (https://thedisconnect.co/one/) நுழைந்ததுமே கொட்டை எழுத்துக்களில் தி டிஸ்கனெக்ட் எனும் பெயர் வரவேற்கிறது. அதன் மீது இதழ் ஒன்று குளிர் காலம் 1 என பருவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆர்வத்துடன் இதழின் உள்ளடக்கத்தை தேடினால், ஆச்சர்யமே உண்டாகும். ஏனெனில்,” தயவுசெய்து இணைய வசதியை துண்டிக்கவும்” எனும் வாசகமே கண்ணில் படும். இது பார்வைகள், கதைகள் மற்றும் கவிதைகள் கொண்ட ஆப்லைனில் மட்டுமே படிக்க கூடிய பத்திரிகை என்ற விளக்கமும் அதனுடன் இடம்பெற்றிருக்கும். எனவே இந்த பத்திரிகையை காண, இணைய வசதியை செயலிழக்கச்செய்யவும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த கட்டளைக்கேற்ப இணைய வசதியை துண்டிதால் மட்டுமே இதழின் உள்ளடக்கத்தை வாசிக்க முடியும். அப்படி தான் போலின் இந்த டிஜிட்டல் இதழை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

இணைய வசதியை செயலிழக்கச்செய்ததுமே, வழக்கமான டிஜிட்டல் இதழ் போல டிஸ்கனெக்ட் இதழின் கட்டுரைகள் திரையில் தோன்றுகிறது. கதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இணையத்தை விமர்சிக்கும் கட்டுரை ஒன்றும் இதில் அடங்கும். மற்ற கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எல்லாமே மனிதர்களுக்கும் தொழில்நுட்பத்திற்குமான உறவை மையமாக கொண்டிருக்கின்றன.

ஆக, இணையத்தில் இருந்து வாசகர்களை கொஞ்ச நேரமேனும் விடுவிப்பது தான் இந்த பத்திரிகையின் நோக்கம். டிஜிட்டல் இதழ் என்றாலும் கூட அதை வாசித்து மகிழ இணையத்தை விட்டு வெளியேற வேண்டும். வீட்டிலும் அலுவலகத்திலும் டெஸ்க்டாப், வெளியே சென்றால் ஸ்மார்ட்போன் என பெரும்பாலான நேரங்களில் நாம் தொழில்நுட்பத்திரைகளில் மூழ்கி இருக்கும் காலத்தில், இணையத்தில் இருந்து வெளியேற தூண்டும் ஒரு விஷயம் தேவை தான். அந்த தூண்டுதலும் இணையத்தில் இருந்தே வருவது கொஞ்சம் சுவாரஸ்யமான முரண் தான். அதை தான் போலின் தனது பத்திரிகை மூலம் செய்திருக்கிறார்.

ஆனால் இதற்கான போலினை தொழில்நுட்ப விரோதி என்று நினைத்துவிடக்கூடாது. அவர் ஒரு மென்பொருளாலர். அந்த திறனை கொண்டு தான் இந்த பத்திரிகையை உருவாக்கி இருக்கிறார். இணைய நுடபம் நல்லது தான் என்றாலும், பலரும் அதிலேயே முடங்கி கிடப்பது பிடிக்கவில்லை என்கிறார். இணையத்திற்கு அடிமையாகி விடும் இந்த தன்மையை தனது சொந்த வாழ்க்கையில் உணர்ந்ததன் பயனாகவே இது பற்றி தீவிரமாக யோசித்திருக்கிறார். மணிக்கணக்கில் இணையத்தில் உலாவியபடி இருப்பதால் நேரம் தான் வீணாகிறேதேத்தவிர உருப்படியாக எதுவும் நடப்பதில்லை என்கிறார் அவர்.

இணையத்தில் கவனச்சிதறலை குறைக்க உதவும் சேவைகளும் செயலிகளும் பல இருந்தாலும் கூட, சில நேரங்களில் இணையத்தை துண்டிப்பதே செயல்திறனுக்கான வழி என்கிறார். இதை உணர்த்தவே, டிஸ்கனெக்ட் பத்திரிகை என்கிறார்.

எல்லாம் சரி, இணைய வசதி இல்லாமல் பத்திரிகையை படிப்பது தொழில்நுட்ப நோக்கில் எப்படி சாத்தியமாகிறது என கேட்கலாம். பிரவுசர்களில் இருக்கும் குறிப்பிட்ட வசதியை பயன்படுத்தி இதை சாத்தியமாக்கி கொண்டுள்ளார். இணையதள முகவரியை கிளிக் செய்ததுமே மொத்த பத்திரிகையும் பதவிறக்கம் ஆகிவிடுகிறது. ஆனால் அந்த உள்ளடக்கம் கண்ணுக்குத்தெரியாமல் மறைந்து இருக்கிறது. இணைய வசதி துண்டிக்கப்பட்ட செய்தியை பிரவுசர் உணர்ந்ததும் இந்த உள்ளடக்கம் தோன்றுகிறது என அவர் விளக்கம் தருகிறார்.

போலின் ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு இணையதளத்தை உருவாகி இருந்தார். ஆப்லைன் எனும் பெயரிலான அந்த இணையதளத்தையும், இணைய வசதி துண்டித்தால் மட்டுமே அணுகும் வகையில் வடிவமைத்திருந்தார்.  (https://chris.bolin.co/offline/ ) அந்த தளத்தில் நுழைந்ததுமே இந்த பக்கத்தை பார்க்க நீங்கள் இணையத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனும் வாசகம் தோன்றும். இணையத்தை துண்டித்தால் தான் அந்த தளத்தை அணுக முடியும்.

அதன் பிறகு, இணையத்தில் நேரத்தை வீணடிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கட்டுரையை வாசிக்கலாம். சோதனை முறையில் அமைக்கப்பட்ட இந்த தளத்தின் தொடர்ச்சியாகவே தற்போது ஆப்லைனில் வாசிக்க கூடிய டிஜிட்டல் பத்திரிகையாக உருவாகியிருக்கிறது. இந்த காலாண்டு இதழை தொடர்ந்து புதிய அம்சங்களுடன் கொண்டு வரவும் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான நிதி திரட்டும் வழிகளையும் அவர் தேடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்.

சரி, இந்த புதுமை இதழுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது. அமோகமாக இருக்கிறது, ஆனால் விமர்சனமும் இல்லாமல் இல்லை என்கிறார் போலின். ஒரு சிலர், இணைய பழக்கத்தை குறைப்பது தான் நோக்கம் என்றால், அச்சு பத்திரிக நடத்த வேண்டியது தானே, ஏன் இந்த டிஜிட்டல் பத்திரிகை என கேலியாக கேட்பதாக கூறும் போலின், இதற்கு மாறாக பலரும், இந்த முயற்சியின் தன்மையை புரிந்து கொண்டு ஆதரிப்பதாகவும் கூறுகிறார். இந்த பத்திரிகையை தேடிப்போய் வாங்க வேண்டாம், இதற்காக மரங்களை வெட்ட வேண்டாம் என்றெல்லாம் அவர்கள் குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கிறார்.

இணையம் சாத்தியமாக்கிய புதுமையில் இதுவும் ஒன்று தான் இல்லையா!

disconnectபுதிதாக டிஜிட்டல் பத்திரிகை ஒன்று உதயமாகி இருக்கிறது. அந்த பத்திரிகை புதியது மட்டும் அல்ல முற்றிலும் புதுமையானதாகவும் அமைந்திருக்கிறது. ’டிஸ்கனெக்ட்’ எனும் இந்த டிஜிட்டல் பத்திரிகையை ஆன்லைனில் படிக்க முடியாது, ஆப்லைனில் மட்டும் தான் படிக்க முடியும். அதாவது, இணைய வசதியை துண்டித்தால் மட்டுமே இந்த பத்திரிகையை படிக்க முடியும்.

டிஜிட்டல் பத்திரிகை என்றாலே இணைத்தில் வாசிக்க கூடிய இணைய இதழ் என்று தானே பொருள். அப்படியிருக்க இணைய இணைப்பை துண்டித்தால் மட்டுமே வாசிக்க கூடிய பத்திரிகையை டிஜிட்டல் இதழ் என்று எப்படி சொல்ல முடியும் என்று கேட்கலாம். ஆனால் இந்த அழகான முரணை மையமாக கொண்டே கிறிஸ் போலின் (Chris Bolin) என்பவர் இந்த புதுமையான டிஜிட்டல் பத்திரிகையை உருவாக்கி இருக்கிறார்.

இந்த பத்திரிகைக்காக அமைக்கப்பட்டுள்ள இணையதளத்தில் (https://thedisconnect.co/one/) நுழைந்ததுமே கொட்டை எழுத்துக்களில் தி டிஸ்கனெக்ட் எனும் பெயர் வரவேற்கிறது. அதன் மீது இதழ் ஒன்று குளிர் காலம் 1 என பருவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு ஆர்வத்துடன் இதழின் உள்ளடக்கத்தை தேடினால், ஆச்சர்யமே உண்டாகும். ஏனெனில்,” தயவுசெய்து இணைய வசதியை துண்டிக்கவும்” எனும் வாசகமே கண்ணில் படும். இது பார்வைகள், கதைகள் மற்றும் கவிதைகள் கொண்ட ஆப்லைனில் மட்டுமே படிக்க கூடிய பத்திரிகை என்ற விளக்கமும் அதனுடன் இடம்பெற்றிருக்கும். எனவே இந்த பத்திரிகையை காண, இணைய வசதியை செயலிழக்கச்செய்யவும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

இந்த கட்டளைக்கேற்ப இணைய வசதியை துண்டிதால் மட்டுமே இதழின் உள்ளடக்கத்தை வாசிக்க முடியும். அப்படி தான் போலின் இந்த டிஜிட்டல் இதழை உருவாக்கி இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார்.

இணைய வசதியை செயலிழக்கச்செய்ததுமே, வழக்கமான டிஜிட்டல் இதழ் போல டிஸ்கனெக்ட் இதழின் கட்டுரைகள் திரையில் தோன்றுகிறது. கதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இணையத்தை விமர்சிக்கும் கட்டுரை ஒன்றும் இதில் அடங்கும். மற்ற கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என எல்லாமே மனிதர்களுக்கும் தொழில்நுட்பத்திற்குமான உறவை மையமாக கொண்டிருக்கின்றன.

ஆக, இணையத்தில் இருந்து வாசகர்களை கொஞ்ச நேரமேனும் விடுவிப்பது தான் இந்த பத்திரிகையின் நோக்கம். டிஜிட்டல் இதழ் என்றாலும் கூட அதை வாசித்து மகிழ இணையத்தை விட்டு வெளியேற வேண்டும். வீட்டிலும் அலுவலகத்திலும் டெஸ்க்டாப், வெளியே சென்றால் ஸ்மார்ட்போன் என பெரும்பாலான நேரங்களில் நாம் தொழில்நுட்பத்திரைகளில் மூழ்கி இருக்கும் காலத்தில், இணையத்தில் இருந்து வெளியேற தூண்டும் ஒரு விஷயம் தேவை தான். அந்த தூண்டுதலும் இணையத்தில் இருந்தே வருவது கொஞ்சம் சுவாரஸ்யமான முரண் தான். அதை தான் போலின் தனது பத்திரிகை மூலம் செய்திருக்கிறார்.

ஆனால் இதற்கான போலினை தொழில்நுட்ப விரோதி என்று நினைத்துவிடக்கூடாது. அவர் ஒரு மென்பொருளாலர். அந்த திறனை கொண்டு தான் இந்த பத்திரிகையை உருவாக்கி இருக்கிறார். இணைய நுடபம் நல்லது தான் என்றாலும், பலரும் அதிலேயே முடங்கி கிடப்பது பிடிக்கவில்லை என்கிறார். இணையத்திற்கு அடிமையாகி விடும் இந்த தன்மையை தனது சொந்த வாழ்க்கையில் உணர்ந்ததன் பயனாகவே இது பற்றி தீவிரமாக யோசித்திருக்கிறார். மணிக்கணக்கில் இணையத்தில் உலாவியபடி இருப்பதால் நேரம் தான் வீணாகிறேதேத்தவிர உருப்படியாக எதுவும் நடப்பதில்லை என்கிறார் அவர்.

இணையத்தில் கவனச்சிதறலை குறைக்க உதவும் சேவைகளும் செயலிகளும் பல இருந்தாலும் கூட, சில நேரங்களில் இணையத்தை துண்டிப்பதே செயல்திறனுக்கான வழி என்கிறார். இதை உணர்த்தவே, டிஸ்கனெக்ட் பத்திரிகை என்கிறார்.

எல்லாம் சரி, இணைய வசதி இல்லாமல் பத்திரிகையை படிப்பது தொழில்நுட்ப நோக்கில் எப்படி சாத்தியமாகிறது என கேட்கலாம். பிரவுசர்களில் இருக்கும் குறிப்பிட்ட வசதியை பயன்படுத்தி இதை சாத்தியமாக்கி கொண்டுள்ளார். இணையதள முகவரியை கிளிக் செய்ததுமே மொத்த பத்திரிகையும் பதவிறக்கம் ஆகிவிடுகிறது. ஆனால் அந்த உள்ளடக்கம் கண்ணுக்குத்தெரியாமல் மறைந்து இருக்கிறது. இணைய வசதி துண்டிக்கப்பட்ட செய்தியை பிரவுசர் உணர்ந்ததும் இந்த உள்ளடக்கம் தோன்றுகிறது என அவர் விளக்கம் தருகிறார்.

போலின் ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு இணையதளத்தை உருவாகி இருந்தார். ஆப்லைன் எனும் பெயரிலான அந்த இணையதளத்தையும், இணைய வசதி துண்டித்தால் மட்டுமே அணுகும் வகையில் வடிவமைத்திருந்தார்.  (https://chris.bolin.co/offline/ ) அந்த தளத்தில் நுழைந்ததுமே இந்த பக்கத்தை பார்க்க நீங்கள் இணையத்தில் இருந்து வெளியேற வேண்டும் எனும் வாசகம் தோன்றும். இணையத்தை துண்டித்தால் தான் அந்த தளத்தை அணுக முடியும்.

அதன் பிறகு, இணையத்தில் நேரத்தை வீணடிப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான கட்டுரையை வாசிக்கலாம். சோதனை முறையில் அமைக்கப்பட்ட இந்த தளத்தின் தொடர்ச்சியாகவே தற்போது ஆப்லைனில் வாசிக்க கூடிய டிஜிட்டல் பத்திரிகையாக உருவாகியிருக்கிறது. இந்த காலாண்டு இதழை தொடர்ந்து புதிய அம்சங்களுடன் கொண்டு வரவும் திட்டமிட்டிருக்கிறார். இதற்கான நிதி திரட்டும் வழிகளையும் அவர் தேடிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்.

சரி, இந்த புதுமை இதழுக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது. அமோகமாக இருக்கிறது, ஆனால் விமர்சனமும் இல்லாமல் இல்லை என்கிறார் போலின். ஒரு சிலர், இணைய பழக்கத்தை குறைப்பது தான் நோக்கம் என்றால், அச்சு பத்திரிக நடத்த வேண்டியது தானே, ஏன் இந்த டிஜிட்டல் பத்திரிகை என கேலியாக கேட்பதாக கூறும் போலின், இதற்கு மாறாக பலரும், இந்த முயற்சியின் தன்மையை புரிந்து கொண்டு ஆதரிப்பதாகவும் கூறுகிறார். இந்த பத்திரிகையை தேடிப்போய் வாங்க வேண்டாம், இதற்காக மரங்களை வெட்ட வேண்டாம் என்றெல்லாம் அவர்கள் குறிப்பிடுவதாகவும் தெரிவிக்கிறார்.

இணையம் சாத்தியமாக்கிய புதுமையில் இதுவும் ஒன்று தான் இல்லையா!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.