எதிர்காலம் சொன்ன கம்ப்யூட்டர்

யாரையாவது பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று சொல்வது வசைச் சொல்லாக தான் அமையும். பொறுப்பானவர்கள் தங்கள்  மிகுந்த அக்கறை கொண்டவர்களின் நிகழ்கால போக்கு குறித்த  வேதனை மற்றும் விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக இப்படி வசைப்பாடுவதாக புரிந்து கொள்ளலாம்.
.
பெரும்பாலும் தகப்பன் (அ) தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவர்கள், மகன் (அ) இளைய சகோதரர்களை பார்த்து சொல்லும் வசை இது.

இது வெறுப்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சாபமாக கூட இருக்கலாம். ஆனால் இது கனிப்பின் கீழ் வருமா?

எதிர்காலத்தில் ஒருவர் மாடு மேய்க்கப் போவதாக கணித்துச் சொல்ல முடியுமா? கணித்துக் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்களா? இல்லை மாடு மேய்க்கப் போவதாகச் சொன்னால் அதை இழிவாகத் தான் கருத வேண்டுமா?

ஒருவர் மாடு மேய்க்கப் போகிறார் என்பது சரியான கணிப்பாக ஏன் இருக்க கூடாது?
அதிகார வர்க்கத்தில் ஒரு சில பதவிகள் தண்டனையின் அடையாள மாக தகுதியிறக்கமாக கருதப்படுவது போல மாடு மேய்ப்பது, வேறு வேலைக்கு தகுதி இல்லாததாலேயே நிகழ்வாக நடைமுறை வாழ்க்கையில்  கருதப் படுகிறது.

மாடு மேய்ப்பதை இப்படி கருத வேறு சமூக காரணங்களும் இருக்கின்றன. ஆனால் தொழில் வாய்ப்புகள் பற்றி யோசிக்கும் போது அவற்றில் பெரும்பாலனோரால் விருப்பப்படும் தொழில்களை யாருமே விரும்பி ஏற்காத இந்த தொழில் உணர்த்த உதவுகிறது.

மாடு மேய்ப்பதை விடுங்கள்! யாராவது விரும்பி சிறை அதிகாரியானது உண்டா? நான் கார் மெக்கானிக்காக வருவேன் என நினைத்து திட்டமிட்டு செயல் பட்டவர்கள் எத்தனை பேர்? விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டு குமாஸ்தாவாக பணியாற்ற நேர்ந்தது விதிவசமா? (அ) விதியின் யதார்த்தமா?

பள்ளி பருவத்திலும், கல்லூரி நாட்களிலும், எல்லோருமே, டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது போல தான் விருப்பம்  கொள்கின்றார்களேத் தவிர, மளிகை கடை நடத்த வேண்டும் என்றோ, கூட்டுறவு சங்க தலைவராக வேண்டும் என்றோ நினைத்த துண்டா?

இப்படி விரும்பப்படும் வேலை களும், தொழில்களும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும். ஒரு சிலரின் தேர்வு, வலுவான அடிப்படையைச் சார்ந்ததாக இருக்கும்.பல நேரங்களில், ஒருவித மந்தை உணர்வின் அடிப்படையில், முழு ஈடுபாடு இல்லாமலேயே, டாக்டராக விரும்புகிறேன், விண்வெளி வீரராக விரும்புகிறேன் என சொல்வதுண்டு.

வாழ்க்கையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் இருக்கும் போது, இப்படி ஒரு சில வேலையை மட்டுமே விரும்பி நாடுவது சரியா? விரும்பிய வண்ணம் வேலை என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதிர்ஷ்டம் பலரை பொறுத்தவரை நினைப்பது  ஒன்றாகவும், வாய்ப்பது வேறொன்றாகவுமே அமைந்து விடுகிறது.

ஆக, ஒருவர் வரும் காலத்தில் என்ன வேலை பார்க்கப் போகிறார் என்பதை கணித்துச் சொல்ல முடியுமா?

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில், இத்தகைய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்நாட்டின் எடின்பர்க் பல்கலைக் கழகம் இதற்காக  என்றே “ஜிக்கேல்’ என்னும் பெயரில் ஒரு சாப்ட்வேரை உருவாக்கியது.

மாணவர்கள் எதிர்காலத்தில்  என்னவாக வரக்கூடும் என்பதை, கணித்துச் சொன்ன இந்த சாப்ட்வேர், அந்த காலக்கட்டத்தில் ஏக பரபரப்பை உண்டாக்கியது.

இந்த சாப்ட்வேர் தேர்வு செய்து சொன்ன வேலைகள் பலரது கனவுகளை தகர்த்தெறிந்தது.
1980 களில், இந்த  சாப்ட்வேர் அறிமுகமான போது, அதனிடம் விவரங்களை சமர்ப்பிக்க, மாணவர்கள் மத்தியில் அப்படியொரு ஆர்வம் இருந்தது. எதிர்கால  கனவுகளில்  மிதந்தபடி, அது நிறைவேறுமா? என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு, மாணவர்கள் இந்த சாப்டவேர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

விளையாட்டில் விருப்பம் உண்டா? வெளிப்புறத்தில்  பணியாற்ற விரும்புவீர்களா? ஆம் எனில், அப்போது  இதமான சூழல் தேவை  (அ) எந்த சூழலும் சம்மதமா? விலங்குகளை பிடிக்குமா? வியர்வை சிந்த உழைக்கத் தயாரா?  குழந்தைகளை கொஞ்சுவீர்களா? என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கு மாணவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில், அவர்கள் எதிர்காலத்தில் என்ன வேலை பார்ப்பார்கள் என்பதை இந்த சாப்ட்வேர் கணித்துச் சொல்லியது.

சிலரை சாப்ட்வேர் புன்னகைக்க வைத்தது. பலரை வெறுப்பேற்றியது. ஒரு சிலரை திகைப்பில் ஆழ்த்தியது. டாக்டர், இன்ஜினியர் என்று சொன்னது மட்டும் அல்லாமல், சிறை அதிகாரி, பன்றி வளப்பவர், கார் மெக்கானிக் போன்ற வேலைகளையும் சாப்ட்வேர்  சொன்னது. ஜிம் கிளாஸ் என்றும் உளவியல் பேராசிரியர் தான்  இந்த சாப்ட்வேரை உருவாக்கியவர் எடின்பர்க் பல்கலையில் பணியாற்றியவர் இவர்.

சாப்ட்வேரின் தீர்ப்பு எல்லோரையும் திருப்திப்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் கிளாஸ், மனதில் நினைத்துக்கூடப் பார்க்காத வேலைகளை சாப்ட்வேர் சொல்வதை சரியான விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

அந்த கட்டத்தில் மாணவர்கள் முன், உள்ள அவர்கள் பரிசீலிக்கத்தக்க மாற்று வாய்ப்புகளை முன் வைத்து, அவர்களுக்கு பொறுத்தமான  வேலைகளுக்கு எல்லையை விரிவு படுத்த உதவும் செயலாக அதனை கருத வேண்டும் என்கிறார் அவர்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சாப்ட்வேர் மற்றும் அதன் பாதிப்பு பற்றி  ஒரு டாக்குமென்ட் தயாரித்து வெளியிடப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இன்னும் இந்த சாப்ட்வேர் புழக்கத்தில் இருக்கிறது. “ஒஐஞ்ஞ்இச்டூ’ என்று தளத்தின் மூலமாக அந்த சாப்ட்வேர் பல  இளைஞர்கள்  தங்கள் எதிர்கால பாதையை தேர்வு செய்ய உதவ வருகிறது.

எதிர்காலம் பற்றிய கணிப்பு குறித்த  சுவாரசியமான பல கேள்விகளை குறித்து சாப்ட்வேர் எழுப்புகிறது. இங்கே இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் என்பது வெகுஜன  புத்தகத்திற்கு வராத காலத்தில்  அந்த சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது அதனிடம் கேள்விகளை சமர்ப்பித்தவர்கள் பதிலுக்காக  வாரக் கணக்கில் காத்திருந்தனர். அதன் பிறகு தான் டாட் மேட்ரிசில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட முடிவுகள் வந்து சேர்ந்தன. இப்போதோ ஆன்லைனில் சமர்ப்பித்தவுடன் கிளிக் செய்தால் முடிவை உடனேயே பார்த்து விடலாம்.

கம்ப்யூட்டர் அப்படி வளர்ந்து விட்டது. இதனை 1980களில் எத்னை பேர் சரியாக கனித்திருப்பார்கள்.

யாரையாவது பார்த்து நீ மாடு மேய்க்கத்தான் லாயிக்கு என்று சொல்வது வசைச் சொல்லாக தான் அமையும். பொறுப்பானவர்கள் தங்கள்  மிகுந்த அக்கறை கொண்டவர்களின் நிகழ்கால போக்கு குறித்த  வேதனை மற்றும் விரக்தியை வெளிப்படுத்தும் விதமாக இப்படி வசைப்பாடுவதாக புரிந்து கொள்ளலாம்.
.
பெரும்பாலும் தகப்பன் (அ) தகப்பன் ஸ்தானத்தில் உள்ளவர்கள், மகன் (அ) இளைய சகோதரர்களை பார்த்து சொல்லும் வசை இது.

இது வெறுப்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். சாபமாக கூட இருக்கலாம். ஆனால் இது கனிப்பின் கீழ் வருமா?

எதிர்காலத்தில் ஒருவர் மாடு மேய்க்கப் போவதாக கணித்துச் சொல்ல முடியுமா? கணித்துக் சொன்னாலும் ஏற்றுக் கொள்வார்களா? இல்லை மாடு மேய்க்கப் போவதாகச் சொன்னால் அதை இழிவாகத் தான் கருத வேண்டுமா?

ஒருவர் மாடு மேய்க்கப் போகிறார் என்பது சரியான கணிப்பாக ஏன் இருக்க கூடாது?
அதிகார வர்க்கத்தில் ஒரு சில பதவிகள் தண்டனையின் அடையாள மாக தகுதியிறக்கமாக கருதப்படுவது போல மாடு மேய்ப்பது, வேறு வேலைக்கு தகுதி இல்லாததாலேயே நிகழ்வாக நடைமுறை வாழ்க்கையில்  கருதப் படுகிறது.

மாடு மேய்ப்பதை இப்படி கருத வேறு சமூக காரணங்களும் இருக்கின்றன. ஆனால் தொழில் வாய்ப்புகள் பற்றி யோசிக்கும் போது அவற்றில் பெரும்பாலனோரால் விருப்பப்படும் தொழில்களை யாருமே விரும்பி ஏற்காத இந்த தொழில் உணர்த்த உதவுகிறது.

மாடு மேய்ப்பதை விடுங்கள்! யாராவது விரும்பி சிறை அதிகாரியானது உண்டா? நான் கார் மெக்கானிக்காக வருவேன் என நினைத்து திட்டமிட்டு செயல் பட்டவர்கள் எத்தனை பேர்? விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டு குமாஸ்தாவாக பணியாற்ற நேர்ந்தது விதிவசமா? (அ) விதியின் யதார்த்தமா?

பள்ளி பருவத்திலும், கல்லூரி நாட்களிலும், எல்லோருமே, டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும், ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்பது போல தான் விருப்பம்  கொள்கின்றார்களேத் தவிர, மளிகை கடை நடத்த வேண்டும் என்றோ, கூட்டுறவு சங்க தலைவராக வேண்டும் என்றோ நினைத்த துண்டா?

இப்படி விரும்பப்படும் வேலை களும், தொழில்களும் காலத்திற்கு ஏற்ப மாறுபடும். ஒரு சிலரின் தேர்வு, வலுவான அடிப்படையைச் சார்ந்ததாக இருக்கும்.பல நேரங்களில், ஒருவித மந்தை உணர்வின் அடிப்படையில், முழு ஈடுபாடு இல்லாமலேயே, டாக்டராக விரும்புகிறேன், விண்வெளி வீரராக விரும்புகிறேன் என சொல்வதுண்டு.

வாழ்க்கையில் எண்ணற்ற வேலை வாய்ப்புகள் இருக்கும் போது, இப்படி ஒரு சில வேலையை மட்டுமே விரும்பி நாடுவது சரியா? விரும்பிய வண்ணம் வேலை என்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கும். அதிர்ஷ்டம் பலரை பொறுத்தவரை நினைப்பது  ஒன்றாகவும், வாய்ப்பது வேறொன்றாகவுமே அமைந்து விடுகிறது.

ஆக, ஒருவர் வரும் காலத்தில் என்ன வேலை பார்க்கப் போகிறார் என்பதை கணித்துச் சொல்ல முடியுமா?

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில், இத்தகைய முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அந்நாட்டின் எடின்பர்க் பல்கலைக் கழகம் இதற்காக  என்றே “ஜிக்கேல்’ என்னும் பெயரில் ஒரு சாப்ட்வேரை உருவாக்கியது.

மாணவர்கள் எதிர்காலத்தில்  என்னவாக வரக்கூடும் என்பதை, கணித்துச் சொன்ன இந்த சாப்ட்வேர், அந்த காலக்கட்டத்தில் ஏக பரபரப்பை உண்டாக்கியது.

இந்த சாப்ட்வேர் தேர்வு செய்து சொன்ன வேலைகள் பலரது கனவுகளை தகர்த்தெறிந்தது.
1980 களில், இந்த  சாப்ட்வேர் அறிமுகமான போது, அதனிடம் விவரங்களை சமர்ப்பிக்க, மாணவர்கள் மத்தியில் அப்படியொரு ஆர்வம் இருந்தது. எதிர்கால  கனவுகளில்  மிதந்தபடி, அது நிறைவேறுமா? என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தோடு, மாணவர்கள் இந்த சாப்டவேர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.

விளையாட்டில் விருப்பம் உண்டா? வெளிப்புறத்தில்  பணியாற்ற விரும்புவீர்களா? ஆம் எனில், அப்போது  இதமான சூழல் தேவை  (அ) எந்த சூழலும் சம்மதமா? விலங்குகளை பிடிக்குமா? வியர்வை சிந்த உழைக்கத் தயாரா?  குழந்தைகளை கொஞ்சுவீர்களா? என்பது போன்ற பல கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றுக்கு மாணவர்கள் அளித்த பதில்களின் அடிப்படையில், அவர்கள் எதிர்காலத்தில் என்ன வேலை பார்ப்பார்கள் என்பதை இந்த சாப்ட்வேர் கணித்துச் சொல்லியது.

சிலரை சாப்ட்வேர் புன்னகைக்க வைத்தது. பலரை வெறுப்பேற்றியது. ஒரு சிலரை திகைப்பில் ஆழ்த்தியது. டாக்டர், இன்ஜினியர் என்று சொன்னது மட்டும் அல்லாமல், சிறை அதிகாரி, பன்றி வளப்பவர், கார் மெக்கானிக் போன்ற வேலைகளையும் சாப்ட்வேர்  சொன்னது. ஜிம் கிளாஸ் என்றும் உளவியல் பேராசிரியர் தான்  இந்த சாப்ட்வேரை உருவாக்கியவர் எடின்பர்க் பல்கலையில் பணியாற்றியவர் இவர்.

சாப்ட்வேரின் தீர்ப்பு எல்லோரையும் திருப்திப்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொள்ளும் கிளாஸ், மனதில் நினைத்துக்கூடப் பார்க்காத வேலைகளை சாப்ட்வேர் சொல்வதை சரியான விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

அந்த கட்டத்தில் மாணவர்கள் முன், உள்ள அவர்கள் பரிசீலிக்கத்தக்க மாற்று வாய்ப்புகளை முன் வைத்து, அவர்களுக்கு பொறுத்தமான  வேலைகளுக்கு எல்லையை விரிவு படுத்த உதவும் செயலாக அதனை கருத வேண்டும் என்கிறார் அவர்.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சாப்ட்வேர் மற்றும் அதன் பாதிப்பு பற்றி  ஒரு டாக்குமென்ட் தயாரித்து வெளியிடப் பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இன்னும் இந்த சாப்ட்வேர் புழக்கத்தில் இருக்கிறது. “ஒஐஞ்ஞ்இச்டூ’ என்று தளத்தின் மூலமாக அந்த சாப்ட்வேர் பல  இளைஞர்கள்  தங்கள் எதிர்கால பாதையை தேர்வு செய்ய உதவ வருகிறது.

எதிர்காலம் பற்றிய கணிப்பு குறித்த  சுவாரசியமான பல கேள்விகளை குறித்து சாப்ட்வேர் எழுப்புகிறது. இங்கே இன்னொரு சுவாரசியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் என்பது வெகுஜன  புத்தகத்திற்கு வராத காலத்தில்  அந்த சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது அதனிடம் கேள்விகளை சமர்ப்பித்தவர்கள் பதிலுக்காக  வாரக் கணக்கில் காத்திருந்தனர். அதன் பிறகு தான் டாட் மேட்ரிசில் பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட முடிவுகள் வந்து சேர்ந்தன. இப்போதோ ஆன்லைனில் சமர்ப்பித்தவுடன் கிளிக் செய்தால் முடிவை உடனேயே பார்த்து விடலாம்.

கம்ப்யூட்டர் அப்படி வளர்ந்து விட்டது. இதனை 1980களில் எத்னை பேர் சரியாக கனித்திருப்பார்கள்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “எதிர்காலம் சொன்ன கம்ப்யூட்டர்

Leave a Comment

Your email address will not be published.