ஒரு எழுத்தாளரும் டிவிட்டர் மோதலும்

வாசகனை பார்த்து வாயை மூடு என்று சொல்லும் உரிமை எழுத்தாளனுக்கு இருக்கிற‌தா?அப்படி சொல்லும் எழுத்தாளனை எப்ப‌டி மதிப்பது?ஆண‌வ‌ம் எழுத்தாள‌னுக்கு அழ‌கு என்றாலும் வாச‌கர்கள் மீதான‌ ச‌ர்வாதிகார‌மாக‌ அத‌னை மாற‌ அனும‌திக்க‌லாமா?

இதென்ன‌ திடீர் இல‌க்கிய‌ விசார‌ம் என்று கேட்க‌த்தோன்ற‌லாம்?அடிப்ப‌டையில் இல‌க்கிய‌ ஆர்வ‌ம் கொண்ட‌வ‌ன் என்றாலும் இந்த‌ ப‌திவு இலக்கிய‌ம் தொட‌ர்பான‌து அல்ல‌.டிவிட்ட‌ரில் த‌ன‌து ச‌ர்வாதிகார‌ முக‌த்தை காண்பித்து இனைய‌வாசிக‌ளோடு மோத‌லில் ஈடுப‌ட்ட‌ சேத்த‌ன் ப‌க‌த் தொட‌ர்பான்து இந்த ப‌திவு.

சேத்த‌ன் ப‌க‌த்தை நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.ஐஐடி ,ஐஐஎம் ப‌ட்ட‌தாரியான‌ ப‌க‌த் ஃபைவ் பாயிண்ட் சம் ஒன் எனும் நாவல் மூலம் எழுத்தாள‌ராக‌ அறிமுக‌மாகி இன்று முழு நேர‌ எழுத்தாள‌ராக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்டிருக்கிறார். ப‌க‌த்தின் நாவ‌ல்க‌ளின் இல‌க்கிய‌த்த‌ர‌ம் குறித்து க‌ருத்து வேறுபாடு இருந்தாலும் ச‌ம‌கால‌ ச‌மூக‌த்தை குறிப்பாக ஐடி ம‌ற்றும் கால் சென்ட‌ர் போன்ற‌ தொழில்நுட்ப‌ த‌லைமுறையின் பாதிப்புக‌ளை அவ‌ர‌து நாவ‌ல் பிர‌திப‌லிக்கின்ற‌ன‌.

ஆனால் ப‌க‌த்தின் எழுத்து ந‌டை சுவையானது என்கின்றனர். அதுவே அவ‌ரை பிர‌ப‌ல‌மான‌வராக்கியிருக்கிற‌து. அவர‌து எல்லா நாவ‌ல்க‌ளுமே வேக‌மாக‌ விற்ப‌னையாகும் ர‌க‌த்தைச்சேர்ந்த‌வை.ப‌க‌த் பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர் ம‌ட்டும‌ல்ல‌ டிவிட்ட‌ரிலும் பிர‌ப‌ல‌மாக‌ இருப்ப‌வ‌ர்.

குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தும் இந்திய‌ர்க‌ளில் அதிக‌ பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ளை பெற்றிருப்பவ‌ர்.ஒர‌ள‌வு துடிப்பாக‌ டிவிட்ட‌ரில் க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்து வ‌ருப‌வ‌ர்.

ப‌க‌த்தின் டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ஆர்வ‌த்தோடு ப‌டித்து வ‌ருப‌வ‌ர்க‌ள் ஆயிர‌க்கண‌க்கில் இருக்கின்ற‌ன‌ர்.அவ‌ர்க‌ளோடு தான் ப‌க‌த் மோத‌லில் ஈடுப‌ட்டு மூக்குடைப்ப‌ட்டிருக்கிறார்.சுமார் நா‌ன்கு ம‌ணி நேர‌ம் நீடித்த‌ இந்த‌ மோத‌லின் போது ச‌க‌ வாச‌க‌ர்க‌ள் அவ‌ரோடு க‌டுமையான‌ வாக்கு வாத்த‌தில் (டிவிட்ட‌ர் வாத‌ம்)ஈடுப‌ட்ட‌ன‌ர்.

ப‌க‌த் எரிச்ச‌லை வெளிப்ப‌டுத்த‌ வாச‌க‌ர்க‌ள் அவ‌ரை சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்துள்ள‌ன‌ர்.இறுதியில் ப‌க‌த் கோப‌ப்ப‌ட்டு த‌ன‌து அதிகார‌த்தை காட்டி மிர‌ட்ட வேண்டியிருந்த‌து.

க‌ள்ள‌ச்ச‌ந்தையில் விற்ப‌னையாகும் புத்த‌க‌த்தை வாங்கிப்ப‌டிப்ப‌து தொட‌ர்பாக‌ ப‌க‌த் தெரிவித்த‌ க‌ருத்திலிருந்து இந்த‌ விவாத‌ம் ஆர‌ம்ப‌மான‌து.

பிர‌ப‌லாமாக‌ விற்ப‌னையாகிக்கொண்டிருக்கும் புத்த‌க‌த்தை அனும‌தியில்லாம‌ல் அச்சிட்டு குறைந்த‌ விலைக்கு விற்ப‌து ந‌ம்மூரில்,வாடிக்கை தானே.லான்ட் மார்க்கில் 500 1000 என‌ விற்றுக்கொண்டிருக்கும் ப‌ள‌ப‌ள‌ புத்த‌க‌ங்க‌ளை ந‌டைபாதை க‌டைக‌ளில் 50 க்கும் 100 க்கும் வாங்கிவிட‌ முடியும்.

திருட்டு சிடி போல‌ இது மிக‌ப்பெரிய‌ குடிசைத்தொழிலாக‌ இருக்கிற‌து.இந்த‌ புத்த‌க‌ங்க‌ளை அச்சிடுவ‌து யார்,அதெப்ப‌டி இவ‌ர்க‌ள் பெஸ்ட் செல்ல‌லாராக‌ பார்த்து திருட்டுத்த‌ன‌மாக‌ அச்சிடுகின்ற‌ன‌ர் என்ப‌து புரியாத‌ புதிர்.

நிச்ச‌ய‌ம் ப‌திப்பாள‌ர்க‌ளும் எழுத்தாள‌ர்க‌ளும் புத்த‌க‌ திருட்டு ப‌திப்பை விரும்புவ‌தில்லை.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இத‌ற்கு எதிராக‌ குர‌ல் கொடுப்ப‌தும் உண்டு.

சேத்த‌ன் ப‌க‌த்தும் இப்ப‌டிதான் த‌ன்னுடைய‌ டிவிட்ட‌ர் ப‌திவில் குர‌ல் கொடுத்தார்.

என்னுடைய‌ புத்த‌க்த்தை க‌ள்ள‌ச்ச‌ந்தையில் வாங்கிப்ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் அத‌னை காசு கொடுத்து வாங்கிப‌டிக்க‌ கூடிய‌வ‌ர்க‌ளோ என்று என்று கூறிய‌ ப‌க‌த் திருட்ட் ப‌திப்புக‌ளால் தான் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் பாதிக்க‌ப்ப‌டுவ‌தாக‌ தெரிவித்தார்.அதோடு நிறுத்தாம‌ல் க‌ள்ள‌ப்புத்த‌க‌ ச‌ந்தையான‌து ப‌திப்புல‌க‌ம் ம‌ற்றும் இல‌க்கிய‌த்தை பாதிப்ப‌தாக‌ தெரிவித்துவிட்டு இத‌ன் கார‌ன‌மாக‌வே ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ள் வெளிநாநடுக‌ளுக்கு சென்றுவிடுவாதாக‌ கூறியிருந்தார்.இந்திய‌ர்க‌ள் ப‌டைப்பாற்ர‌லுகு ம‌திப்பு கொடுப்ப‌தாக் இருந்தால் திருட்டு புத்த‌க்த்தை வாங்க‌ வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தார்.

அத‌ன்பிற‌கு, காப்புரிமைக்கு ம‌திப்ப‌ளிகாத‌ ச‌மூக‌ம் க‌ண்டுபிடிப்பில் சிற‌ந்து வில‌ங்குவ‌தில்லை என்று கூறியவர் எனவே எத்த‌கைய‌ இந்தியா தேவை என‌ தீர்மானியுங்க‌ள் என‌ கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒரு எழுத்தாள‌ரிட‌ம் இருந்து எதிர்பார்க்க‌ கூடிய‌ க‌ருத்துக்க‌ளே இவை. இதில் த‌வ‌றேதும் இல்லை.ஆனால் இத‌ற்கு ம‌றுப‌க்க‌மும் இருக்கிற‌து அல்ல‌வா?க‌ள்ள‌ச்ச‌ந்தையில் புத்த‌க‌ங்க‌ளை வாங்க‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு .அவ‌ற்றில் முக்கிய‌மான‌வை புத்த‌க‌த்தின் விலை. விண்ணைத்தொடும் அள‌வுக்கு விலை இருப்ப‌தாலேயே க‌ள்ள‌ச்ச‌ந்தை ஏற்ப‌டுவ‌தாக‌ கூற‌லாம்.

அத‌ற்காக‌ க‌ள்ள‌ச்ச‌ந்தையை நியாய‌ப‌டுத்தவில்லை. அத‌ன் இருப்பை ச‌ரியாக‌ புரிந்து கொள்ள‌ வேண்டும் என்றே நினைக்கிறேன்.டிவிட்ட‌ரில் ப‌க‌த் தெரிவித்த‌ க‌ருத்துக்களை ப‌டித்த‌ ப‌ல‌ருக்கும் இதே சிந்த‌னை ஏற்ப‌ட்டிருக்க‌லாம். அவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் ,டிவிட்ட‌ரில் அவ‌ர‌து பெய‌ர் ஃபிலையூஃஃபுல்ஸ் ,ச‌ற்றே கிண்ட‌லாக‌ இத‌ற்கு ப‌தில‌ளித்தார். எல்லாவ‌ற்றையும் இந்தியாவின் முன்னேற்றத்தோடு தொட‌ர்பு ப‌டுத்து ப‌ழ‌கிவிட்ட‌து இல்லையா? என்று அவ‌ர் தெரிவித்த‌தை ப‌டித்த‌தும் ப‌க‌த் அதிருப்தி அடைந்து ‘ஆம் எல்லாம் முனேற்ற‌த்தோடு தொட‌ர்புடைய‌வை தான் உங்க‌ளூக்கு பிடிக்காவிட்ட‌ல் க‌ண்ணை மூடிக்கொள்ள‌வும்’ என‌ ஆவேச‌மாக் ப‌தில் அளித்தார்.

உட‌னே ஃபிலையூஃஃபுல்ஸ் ச‌ரி ‘இன்று நீங்கள் (பகத்) ச‌ரியான‌ மன‌நிலையில் இல்லை போலும்.என்ன‌ செய்வ‌து ராய‌ல்டி செக்கிற்காக‌ காத்திருக்கிறிர்க‌ள் என‌ நினைக்கிறேன்’என‌ எழுதினார்.

ப‌க‌த்தால் பொருத்துக்கொள்ள‌ முடிய‌வில்லை.’போதும் நிறுத்து.இத‌ற்கு மேல் க‌ருத்து சொன்னால் வெளியேற்றி விடுவேன்’ என‌ எச்ச‌ரித்தார்.

அவ்வ‌ள‌‌வு தான் ச‌க‌ டிவிட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ள் கொதித்துப்போய் விட்ட‌ன‌ர்.அது வ‌ரை விவாத‌த்தில் ப‌ங்கேற்காம‌ல் இருந்த‌வ‌ர்க‌ள் க‌‌ச்சை க‌ட்டிக்கொண்டு க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்த‌ன‌ர்.ஜோஜோ பிலி‌ப் என்ப‌வ‌ர் ‘எத‌ர்காக‌ வாச்க‌ர்க‌ளை ம‌ட்டும் குறை கூறுகிறீர்க‌ள் ,புத்த‌க‌ம் ம‌லிவு விலைக்கு கிடைக்கும் போது அதை வாங்குவ‌தில் என்ன‌ த‌வ‌று ‘என‌ கேட்டார்.

அத‌ற்கு ப‌க‌த் , உங்க‌ள் வங்கி கணக்கில் இருந்து என்னால் ப‌ண‌ம் எடுக்க‌ முடிந்தால் அதுவும் த‌ப்பிலையே என ப‌தில் கேள்வி கேட்டார்.உட‌னே பிலிப் ‘புத்த‌க‌ங்க‌ளின் விலை கைக்கு எட்டாம‌ல் இருப்ப‌தால் தான் க‌ள்ல‌ச்ச‌ந்தைக்கான‌ தேவை வ‌ருகிற‌து. இத‌ற்கு ப‌திப்பாள‌ர்க‌ளின் பேராசையே கார‌ண‌ம் என்று ப‌தில‌டி கொடுத்தார்.

ப‌திப்பாள‌ர்,போலீஸ், எல்லோருக்கும் இதில் ப‌ங்கிருக்கும் போது வாச‌க‌னிஅ ம‌ட்டும் ஏன் குறை கூற‌ வேண்டும் என்றும் அவ‌ர் கேள்வி எழுப்பினார்.

ப‌க‌த் த‌ன‌து ப‌திலில் “யாருக்கும் பொறாமை இல்லை.உங்க‌ளால் வாங்க‌ முடியாவிட்டால் வீடு விடுங்க‌ள். கார் வாங்க‌ முடியாவிடால் திருடுவீர்க‌ளா?’என‌ கேட்டார்.பிலிப் அத‌ற்கு ‘நான் திருட‌ மாட்டேன் ஆனால் ஆயிர‌ம் ரூபாய்க்கு கார் கிடைத்தால் வாங்குவேன்’ என்றார்.

மேலும் விற்ப‌வ‌ரை விட்டு விட்டு வாங்கி படிப்ப‌வ‌ரை ஏன் குறை சொல்கிறீர்க‌ள் என்றும் கேட்டிருந்தார்.

இத‌னைய‌டுத்து ப‌க‌த்,இன்னொரு முறை புத்த‌க திருட்டு ப‌திப்பை ஆதிரித்துப்பேசினால் உங்களையும் வேளியேற்றி விடுவேன் என‌ எச்சரித்தார்.

ஒரு விவாத‌த்தின் போது க‌ருத்துக்கு ப‌தில் சொல்வ‌தே முறை.எதிர்த்து பேசுவப‌வ‌ரை வாயை மூட‌ச்சொல்வ‌து என்ன‌ நியாய‌ம்.ப‌க‌த் அத‌னை தான் செய்தார்.விளைவு ம‌ற்ற‌ டிவிட்ட‌ர் ப‌யனாளிக‌ள் சேர்ந்து கொண்டு அவ‌ரை தாக்கின‌ர்.

அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளுக்கு டிவிட்ட‌ர் விவாத‌த்தில் ப‌க‌த் மீதான‌ தாக்குத‌லே முக்கிய‌ ப‌ங்கு வ‌கித்த‌து.

மொத‌த்தில் ப‌க‌த்தின் மூக்குடைந்த‌து என‌ சொல்ல‌லாம்.

இந்த‌ விவாத்திலிருந்து கிடைக்கும் படிப்பினைக‌ள் அநேக‌ம் என்று சொல்ல‌லாம்.முத‌லில் இது டிவிட்ட‌ரின் ஆற்ற‌லை உண‌ர்த்துகிற‌து.பெரிய‌ எழுதாள‌ராக‌ இருந்தாலும் டிவிட்ட‌ரில் அவ‌ர் ச‌ம‌ம் தான். வாச‌க‌னின் கேள்விக்கு அவ‌ர் ப‌தில் சொல்லியாக‌ வேண்டும். டிவிட்ட‌ர் அடிப்ப‌டையில் ஒரு ப‌கிர்வு சாத‌ன‌ம் என்ப‌தை உண‌ராத‌வ‌ர்க‌ள் அதில் முக‌த்தில் க‌ரியை பூசிக்கொள்வ‌தை த‌விற‌ வேறு வ‌ழியில்லை.

ப‌க‌த் என்ன‌ செய்திருக்க‌ வேண்டும்.தொட‌ர்ந்து த‌ன்னுடைய‌ வாதத்தை விள‌க்கியிருக்க‌ வேண்டும்.அதைவிட்டு வாச‌க‌னை விர‌ட்ட‌ முற்படும் தவறை ஏன் செய்ய வேண்டும்? பெரிய எழுத்தாள‌ன் என்னும் ஆண‌வ‌ம் தானே.எழுத்தாள‌ன் சொல்வ‌தெல்லாம் இறுதியான‌தாகி விடுமா?அதுவும் டிவிட்ட‌ர் யுக‌த்தில் இது சாத்திய‌மா என்ன‌?

வாசகனை பார்த்து வாயை மூடு என்று சொல்லும் உரிமை எழுத்தாளனுக்கு இருக்கிற‌தா?அப்படி சொல்லும் எழுத்தாளனை எப்ப‌டி மதிப்பது?ஆண‌வ‌ம் எழுத்தாள‌னுக்கு அழ‌கு என்றாலும் வாச‌கர்கள் மீதான‌ ச‌ர்வாதிகார‌மாக‌ அத‌னை மாற‌ அனும‌திக்க‌லாமா?

இதென்ன‌ திடீர் இல‌க்கிய‌ விசார‌ம் என்று கேட்க‌த்தோன்ற‌லாம்?அடிப்ப‌டையில் இல‌க்கிய‌ ஆர்வ‌ம் கொண்ட‌வ‌ன் என்றாலும் இந்த‌ ப‌திவு இலக்கிய‌ம் தொட‌ர்பான‌து அல்ல‌.டிவிட்ட‌ரில் த‌ன‌து ச‌ர்வாதிகார‌ முக‌த்தை காண்பித்து இனைய‌வாசிக‌ளோடு மோத‌லில் ஈடுப‌ட்ட‌ சேத்த‌ன் ப‌க‌த் தொட‌ர்பான்து இந்த ப‌திவு.

சேத்த‌ன் ப‌க‌த்தை நீங்க‌ள் அறிந்திருக்க‌லாம்.ஐஐடி ,ஐஐஎம் ப‌ட்ட‌தாரியான‌ ப‌க‌த் ஃபைவ் பாயிண்ட் சம் ஒன் எனும் நாவல் மூலம் எழுத்தாள‌ராக‌ அறிமுக‌மாகி இன்று முழு நேர‌ எழுத்தாள‌ராக‌ அங்கீக‌ரிக்க‌ப்ப‌ட்டிருக்கிறார். ப‌க‌த்தின் நாவ‌ல்க‌ளின் இல‌க்கிய‌த்த‌ர‌ம் குறித்து க‌ருத்து வேறுபாடு இருந்தாலும் ச‌ம‌கால‌ ச‌மூக‌த்தை குறிப்பாக ஐடி ம‌ற்றும் கால் சென்ட‌ர் போன்ற‌ தொழில்நுட்ப‌ த‌லைமுறையின் பாதிப்புக‌ளை அவ‌ர‌து நாவ‌ல் பிர‌திப‌லிக்கின்ற‌ன‌.

ஆனால் ப‌க‌த்தின் எழுத்து ந‌டை சுவையானது என்கின்றனர். அதுவே அவ‌ரை பிர‌ப‌ல‌மான‌வராக்கியிருக்கிற‌து. அவர‌து எல்லா நாவ‌ல்க‌ளுமே வேக‌மாக‌ விற்ப‌னையாகும் ர‌க‌த்தைச்சேர்ந்த‌வை.ப‌க‌த் பிர‌ப‌ல‌ எழுத்தாள‌ர் ம‌ட்டும‌ல்ல‌ டிவிட்ட‌ரிலும் பிர‌ப‌ல‌மாக‌ இருப்ப‌வ‌ர்.

குறும்ப‌திவு சேவையான‌ டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தும் இந்திய‌ர்க‌ளில் அதிக‌ பின்தொட‌ர்ப‌வ‌ர்க‌ளை பெற்றிருப்பவ‌ர்.ஒர‌ள‌வு துடிப்பாக‌ டிவிட்ட‌ரில் க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்து வ‌ருப‌வ‌ர்.

ப‌க‌த்தின் டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை ஆர்வ‌த்தோடு ப‌டித்து வ‌ருப‌வ‌ர்க‌ள் ஆயிர‌க்கண‌க்கில் இருக்கின்ற‌ன‌ர்.அவ‌ர்க‌ளோடு தான் ப‌க‌த் மோத‌லில் ஈடுப‌ட்டு மூக்குடைப்ப‌ட்டிருக்கிறார்.சுமார் நா‌ன்கு ம‌ணி நேர‌ம் நீடித்த‌ இந்த‌ மோத‌லின் போது ச‌க‌ வாச‌க‌ர்க‌ள் அவ‌ரோடு க‌டுமையான‌ வாக்கு வாத்த‌தில் (டிவிட்ட‌ர் வாத‌ம்)ஈடுப‌ட்ட‌ன‌ர்.

ப‌க‌த் எரிச்ச‌லை வெளிப்ப‌டுத்த‌ வாச‌க‌ர்க‌ள் அவ‌ரை சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்துள்ள‌ன‌ர்.இறுதியில் ப‌க‌த் கோப‌ப்ப‌ட்டு த‌ன‌து அதிகார‌த்தை காட்டி மிர‌ட்ட வேண்டியிருந்த‌து.

க‌ள்ள‌ச்ச‌ந்தையில் விற்ப‌னையாகும் புத்த‌க‌த்தை வாங்கிப்ப‌டிப்ப‌து தொட‌ர்பாக‌ ப‌க‌த் தெரிவித்த‌ க‌ருத்திலிருந்து இந்த‌ விவாத‌ம் ஆர‌ம்ப‌மான‌து.

பிர‌ப‌லாமாக‌ விற்ப‌னையாகிக்கொண்டிருக்கும் புத்த‌க‌த்தை அனும‌தியில்லாம‌ல் அச்சிட்டு குறைந்த‌ விலைக்கு விற்ப‌து ந‌ம்மூரில்,வாடிக்கை தானே.லான்ட் மார்க்கில் 500 1000 என‌ விற்றுக்கொண்டிருக்கும் ப‌ள‌ப‌ள‌ புத்த‌க‌ங்க‌ளை ந‌டைபாதை க‌டைக‌ளில் 50 க்கும் 100 க்கும் வாங்கிவிட‌ முடியும்.

திருட்டு சிடி போல‌ இது மிக‌ப்பெரிய‌ குடிசைத்தொழிலாக‌ இருக்கிற‌து.இந்த‌ புத்த‌க‌ங்க‌ளை அச்சிடுவ‌து யார்,அதெப்ப‌டி இவ‌ர்க‌ள் பெஸ்ட் செல்ல‌லாராக‌ பார்த்து திருட்டுத்த‌ன‌மாக‌ அச்சிடுகின்ற‌ன‌ர் என்ப‌து புரியாத‌ புதிர்.

நிச்ச‌ய‌ம் ப‌திப்பாள‌ர்க‌ளும் எழுத்தாள‌ர்க‌ளும் புத்த‌க‌ திருட்டு ப‌திப்பை விரும்புவ‌தில்லை.வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இத‌ற்கு எதிராக‌ குர‌ல் கொடுப்ப‌தும் உண்டு.

சேத்த‌ன் ப‌க‌த்தும் இப்ப‌டிதான் த‌ன்னுடைய‌ டிவிட்ட‌ர் ப‌திவில் குர‌ல் கொடுத்தார்.

என்னுடைய‌ புத்த‌க்த்தை க‌ள்ள‌ச்ச‌ந்தையில் வாங்கிப்ப‌டிப்ப‌வ‌ர்க‌ள் அத‌னை காசு கொடுத்து வாங்கிப‌டிக்க‌ கூடிய‌வ‌ர்க‌ளோ என்று என்று கூறிய‌ ப‌க‌த் திருட்ட் ப‌திப்புக‌ளால் தான் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் பாதிக்க‌ப்ப‌டுவ‌தாக‌ தெரிவித்தார்.அதோடு நிறுத்தாம‌ல் க‌ள்ள‌ப்புத்த‌க‌ ச‌ந்தையான‌து ப‌திப்புல‌க‌ம் ம‌ற்றும் இல‌க்கிய‌த்தை பாதிப்ப‌தாக‌ தெரிவித்துவிட்டு இத‌ன் கார‌ன‌மாக‌வே ப‌ல‌ எழுத்தாள‌ர்க‌ள் வெளிநாநடுக‌ளுக்கு சென்றுவிடுவாதாக‌ கூறியிருந்தார்.இந்திய‌ர்க‌ள் ப‌டைப்பாற்ர‌லுகு ம‌திப்பு கொடுப்ப‌தாக் இருந்தால் திருட்டு புத்த‌க்த்தை வாங்க‌ வேண்டாம் என்றும் வேண்டுகோள் வைத்தார்.

அத‌ன்பிற‌கு, காப்புரிமைக்கு ம‌திப்ப‌ளிகாத‌ ச‌மூக‌ம் க‌ண்டுபிடிப்பில் சிற‌ந்து வில‌ங்குவ‌தில்லை என்று கூறியவர் எனவே எத்த‌கைய‌ இந்தியா தேவை என‌ தீர்மானியுங்க‌ள் என‌ கேள்வி எழுப்பியிருந்தார்.

ஒரு எழுத்தாள‌ரிட‌ம் இருந்து எதிர்பார்க்க‌ கூடிய‌ க‌ருத்துக்க‌ளே இவை. இதில் த‌வ‌றேதும் இல்லை.ஆனால் இத‌ற்கு ம‌றுப‌க்க‌மும் இருக்கிற‌து அல்ல‌வா?க‌ள்ள‌ச்ச‌ந்தையில் புத்த‌க‌ங்க‌ளை வாங்க‌ ப‌ல‌ கார‌ண‌ங்க‌ள் உண்டு .அவ‌ற்றில் முக்கிய‌மான‌வை புத்த‌க‌த்தின் விலை. விண்ணைத்தொடும் அள‌வுக்கு விலை இருப்ப‌தாலேயே க‌ள்ள‌ச்ச‌ந்தை ஏற்ப‌டுவ‌தாக‌ கூற‌லாம்.

அத‌ற்காக‌ க‌ள்ள‌ச்ச‌ந்தையை நியாய‌ப‌டுத்தவில்லை. அத‌ன் இருப்பை ச‌ரியாக‌ புரிந்து கொள்ள‌ வேண்டும் என்றே நினைக்கிறேன்.டிவிட்ட‌ரில் ப‌க‌த் தெரிவித்த‌ க‌ருத்துக்களை ப‌டித்த‌ ப‌ல‌ருக்கும் இதே சிந்த‌னை ஏற்ப‌ட்டிருக்க‌லாம். அவ‌ர்க‌ளில் ஒருவ‌ர் ,டிவிட்ட‌ரில் அவ‌ர‌து பெய‌ர் ஃபிலையூஃஃபுல்ஸ் ,ச‌ற்றே கிண்ட‌லாக‌ இத‌ற்கு ப‌தில‌ளித்தார். எல்லாவ‌ற்றையும் இந்தியாவின் முன்னேற்றத்தோடு தொட‌ர்பு ப‌டுத்து ப‌ழ‌கிவிட்ட‌து இல்லையா? என்று அவ‌ர் தெரிவித்த‌தை ப‌டித்த‌தும் ப‌க‌த் அதிருப்தி அடைந்து ‘ஆம் எல்லாம் முனேற்ற‌த்தோடு தொட‌ர்புடைய‌வை தான் உங்க‌ளூக்கு பிடிக்காவிட்ட‌ல் க‌ண்ணை மூடிக்கொள்ள‌வும்’ என‌ ஆவேச‌மாக் ப‌தில் அளித்தார்.

உட‌னே ஃபிலையூஃஃபுல்ஸ் ச‌ரி ‘இன்று நீங்கள் (பகத்) ச‌ரியான‌ மன‌நிலையில் இல்லை போலும்.என்ன‌ செய்வ‌து ராய‌ல்டி செக்கிற்காக‌ காத்திருக்கிறிர்க‌ள் என‌ நினைக்கிறேன்’என‌ எழுதினார்.

ப‌க‌த்தால் பொருத்துக்கொள்ள‌ முடிய‌வில்லை.’போதும் நிறுத்து.இத‌ற்கு மேல் க‌ருத்து சொன்னால் வெளியேற்றி விடுவேன்’ என‌ எச்ச‌ரித்தார்.

அவ்வ‌ள‌‌வு தான் ச‌க‌ டிவிட்ட‌ர் ப‌ய‌னாளிக‌ள் கொதித்துப்போய் விட்ட‌ன‌ர்.அது வ‌ரை விவாத‌த்தில் ப‌ங்கேற்காம‌ல் இருந்த‌வ‌ர்க‌ள் க‌‌ச்சை க‌ட்டிக்கொண்டு க‌ருத்துக்க‌ளை ப‌திவு செய்த‌ன‌ர்.ஜோஜோ பிலி‌ப் என்ப‌வ‌ர் ‘எத‌ர்காக‌ வாச்க‌ர்க‌ளை ம‌ட்டும் குறை கூறுகிறீர்க‌ள் ,புத்த‌க‌ம் ம‌லிவு விலைக்கு கிடைக்கும் போது அதை வாங்குவ‌தில் என்ன‌ த‌வ‌று ‘என‌ கேட்டார்.

அத‌ற்கு ப‌க‌த் , உங்க‌ள் வங்கி கணக்கில் இருந்து என்னால் ப‌ண‌ம் எடுக்க‌ முடிந்தால் அதுவும் த‌ப்பிலையே என ப‌தில் கேள்வி கேட்டார்.உட‌னே பிலிப் ‘புத்த‌க‌ங்க‌ளின் விலை கைக்கு எட்டாம‌ல் இருப்ப‌தால் தான் க‌ள்ல‌ச்ச‌ந்தைக்கான‌ தேவை வ‌ருகிற‌து. இத‌ற்கு ப‌திப்பாள‌ர்க‌ளின் பேராசையே கார‌ண‌ம் என்று ப‌தில‌டி கொடுத்தார்.

ப‌திப்பாள‌ர்,போலீஸ், எல்லோருக்கும் இதில் ப‌ங்கிருக்கும் போது வாச‌க‌னிஅ ம‌ட்டும் ஏன் குறை கூற‌ வேண்டும் என்றும் அவ‌ர் கேள்வி எழுப்பினார்.

ப‌க‌த் த‌ன‌து ப‌திலில் “யாருக்கும் பொறாமை இல்லை.உங்க‌ளால் வாங்க‌ முடியாவிட்டால் வீடு விடுங்க‌ள். கார் வாங்க‌ முடியாவிடால் திருடுவீர்க‌ளா?’என‌ கேட்டார்.பிலிப் அத‌ற்கு ‘நான் திருட‌ மாட்டேன் ஆனால் ஆயிர‌ம் ரூபாய்க்கு கார் கிடைத்தால் வாங்குவேன்’ என்றார்.

மேலும் விற்ப‌வ‌ரை விட்டு விட்டு வாங்கி படிப்ப‌வ‌ரை ஏன் குறை சொல்கிறீர்க‌ள் என்றும் கேட்டிருந்தார்.

இத‌னைய‌டுத்து ப‌க‌த்,இன்னொரு முறை புத்த‌க திருட்டு ப‌திப்பை ஆதிரித்துப்பேசினால் உங்களையும் வேளியேற்றி விடுவேன் என‌ எச்சரித்தார்.

ஒரு விவாத‌த்தின் போது க‌ருத்துக்கு ப‌தில் சொல்வ‌தே முறை.எதிர்த்து பேசுவப‌வ‌ரை வாயை மூட‌ச்சொல்வ‌து என்ன‌ நியாய‌ம்.ப‌க‌த் அத‌னை தான் செய்தார்.விளைவு ம‌ற்ற‌ டிவிட்ட‌ர் ப‌யனாளிக‌ள் சேர்ந்து கொண்டு அவ‌ரை தாக்கின‌ர்.

அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளுக்கு டிவிட்ட‌ர் விவாத‌த்தில் ப‌க‌த் மீதான‌ தாக்குத‌லே முக்கிய‌ ப‌ங்கு வ‌கித்த‌து.

மொத‌த்தில் ப‌க‌த்தின் மூக்குடைந்த‌து என‌ சொல்ல‌லாம்.

இந்த‌ விவாத்திலிருந்து கிடைக்கும் படிப்பினைக‌ள் அநேக‌ம் என்று சொல்ல‌லாம்.முத‌லில் இது டிவிட்ட‌ரின் ஆற்ற‌லை உண‌ர்த்துகிற‌து.பெரிய‌ எழுதாள‌ராக‌ இருந்தாலும் டிவிட்ட‌ரில் அவ‌ர் ச‌ம‌ம் தான். வாச‌க‌னின் கேள்விக்கு அவ‌ர் ப‌தில் சொல்லியாக‌ வேண்டும். டிவிட்ட‌ர் அடிப்ப‌டையில் ஒரு ப‌கிர்வு சாத‌ன‌ம் என்ப‌தை உண‌ராத‌வ‌ர்க‌ள் அதில் முக‌த்தில் க‌ரியை பூசிக்கொள்வ‌தை த‌விற‌ வேறு வ‌ழியில்லை.

ப‌க‌த் என்ன‌ செய்திருக்க‌ வேண்டும்.தொட‌ர்ந்து த‌ன்னுடைய‌ வாதத்தை விள‌க்கியிருக்க‌ வேண்டும்.அதைவிட்டு வாச‌க‌னை விர‌ட்ட‌ முற்படும் தவறை ஏன் செய்ய வேண்டும்? பெரிய எழுத்தாள‌ன் என்னும் ஆண‌வ‌ம் தானே.எழுத்தாள‌ன் சொல்வ‌தெல்லாம் இறுதியான‌தாகி விடுமா?அதுவும் டிவிட்ட‌ர் யுக‌த்தில் இது சாத்திய‌மா என்ன‌?

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒரு எழுத்தாளரும் டிவிட்டர் மோதலும்

  1. அன்பின் சிம்மன்

    அருமையான இடுகை

    வாதம் என்று வரும்போது – எரிச்சலடையவோ – மட்டம் தட்டுவதோ – அதிகாரம் செலுத்துவதோ கூடாது. ஆதாதரபூர்வமான ஆக்க பூர்வமான வாதங்க்ளை வைக்க வேண்டும். அது தான் சரியான முறை

    நல்வாழ்த்துகள் சிம்மன்

    Reply
  2. “கார் வாங்க‌ முடியாவிடால் திருடுவீர்க‌ளா?’என‌ கேட்டார்.பிலிப் அத‌ற்கு ‘நான் திருட‌ மாட்டேன் ஆனால் ஆயிர‌ம் ரூபாய்க்கு கார் கிடைத்தால் வாங்குவேன்’ என்றார்”

    😀

    Reply
  3. அருமையான் பதிவு.அழகான கருத்துக்கள்.
    ஒரு எழுத்தாளனுக்கு இருக்ககூடிய மண்டை கர்வம்
    இவரிடம் அதிகமாக தெரிகிறது.
    சக வாசகர்கள் கொடுத்த பதிலடி சரியே.

    அபுல்பசர்.

    Reply
  4. உங்கள் மன நிலை சரியில்லை போல என்ற பதிலுக்கு பதில் கொடுக்காமலாவது விட்டிருக்கலாம்.. ஆத்திரத்தைக் காண்பிப்பதற்கு அமைதியே காத்திருக்கலாம்.. 🙁

    Reply
  5. ஆதவன்

    சரியான பதிலடி தான். வாசகர்களிடமிருந்து 🙂

    Reply
  6. இது மேல்தட்டு வர்க்க பொருளாதாரத் திமிர்..!

    நான் எவ்ளோ விலை வைத்தாலும் நீ அதை வாங்கித்தான் தீர வேண்டும் என்று சொல்வது ஒருவகையில் சர்வாதிகாரம்.. இந்த அதிகாரத்துக்கு துணை போகின்ற எழுத்தாளர்களும், பதிப்பாளர்களும்கூட திருடர்கள்தான்..!

    ஆனால் இவர்கள் எழுதுவது என்னவோ நமக்காக என்று சொல்லிக் கொள்வார்கள்.. தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் விற்பதைப் போல…

    எல்லா மட்டத்திலும் பணமே பிரதானம் என்றாகிவிட்டது.. இவர்களை முழுமையாக நாம் நிராகரித்தால் ஒழிய அவர்கள் திருந்த மாட்டார்கள்..!

    Reply
  7. saravanakumar

    அன்பின் சிம்மன்..

    முதல் முறையாக உங்கள் பதிவை வாசிக்கிறேன். மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

    Reply
  8. அப்படிப் போடு!

    Reply
  9. வெளியேற்றிவிடுவேன் என்ற சொல் twitterல் block செய்வதை குறிக்கவில்லை

    உங்கள் இடுகை தவறான தகவலை தருகிறது 🙁

    Reply
  10. டிவிட்டரில் block என்பது வேறு. நீங்கள் எழுதியிருக்கும் விதம் வேறு 🙁 🙁

    Reply
    1. cybersimman

      சரி தான். ஆனால் பிளாக் செயவது என்னும் அர்தத்திலேயே வெளியேற்றுவது என‌ எழுதியுள்ளேன்.டிவிடர் சார்ந்த முழு சொற்பட்டியல் தமிழில் உருவாகாத நிலையில் புரிதலுக்காக இந்த சொல்லை பய‌னப்டுத்தியுள்ளேன்.பிளாக் செய்வது என்று எழுதுவதைவிட அல்லது தடுத்து விடுவேன் என எழுதுவதை விட வெளியேற்றுவது என்ன எழுதும் போது தொடர்ந்துன்கருத்துக்களை வெளியிட அனுமதிக்க மாட்டேன் என புரிய வைக முடியும் என நினைத்தேன்.எப்படியும் திருத்ததிற்கு நன்றி. டிவிட்டர் செயல்பாடுகளை முழுவதும் புரிந்த ஒருவர் இந்த பதிவை படித்திருக்கிறார் என்பது மகிழ்சியை தருகிறது.

      அன்புடன் சிம்மன்

      Reply
      1. //சரி தான். ஆனால் பிளாக் செயவது என்னும் அர்தத்திலேயே வெளியேற்றுவது என‌ எழுதியுள்ளேன்.//

        அது தான் தவறு !!

        டிவிட்டரின் நான் உங்களை block செய்தால் உங்களால் எனது டிவிட்களை படிக்க முடியாது. எனக்கு நீங்கள் DM நேரடி செய்தி அனுப்ப முடியாது

        நீங்கள் தொடர்ந்து டிவிட்டலாம் அதற்கு எந்த தடையும் கிடையாது

        //.பிளாக் செய்வது என்று எழுதுவதைவிட அல்லது தடுத்து விடுவேன் என எழுதுவதை விட வெளியேற்றுவது என்ன எழுதும் போது தொடர்ந்துன்கருத்துக்களை வெளியிட அனுமதிக்க மாட்டேன் என புரிய வைக முடியும் என நினைத்தேன்.//

        பகத் கருத்துக்களை வெளியிட அனுமதி மறுக்கவில்லை
        அது டிவிட்டரில் முடியாது
        நீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டுள்ளீர்கள்

        பகத் செய்தது அந்த குறிப்பிட்ட சிலர் இவருக்கு தனிப்பட்ட செய்தி Direct Message அனுப்பவதை தடை செய்தது தானே தவிர, அவர்கள் வெளியில் கூறுவதை தடை செய்ய வில்லை

        சுருங்க சொல்வது என்றால்

        நீங்கள் என்னை டிவிட்டரில் block செய்தால், என்னால் உங்கள் வீட்டில் நோட்டிஸ் போட முடியாது. ஆனால் ஊரெல்லாம் போஸ்டர் அடிக்க தடையில்லை

        Reply
      2. cybersimman

        புரிகிற‌து நண்பரே.இனி பிளாக்செய்வது என்றே பயன்படுத்துகிறேன்.விளக்கத்திற்கு ந‌ன்றி.

        Reply
  11. சேத்தன் மிகச் சிறந்த எழுத்தாளர். வசீகரமான உரைநடையில் எழுதுவார்.

    விவாதத்தில் சாரு நிவேதிதா போல் செயல்பட்டிருக்கிறார் போல,. அவருக்கு வாசகர்களின் பதிகள் நச்.

    Reply
  12. pugazh

    good information nice thought

    Reply
  13. அருமையான இடுகை

    Reply
  14. As you said, even celebrity are common people and are equal. That doesn’t give the right for a person to make personal remark. I am not sure about other books, but Chetans book does not cost 1000’s. The original price of his books doesn’t exceed Rs.100. And if someone cannot even spend money to support the writer, the writer has the right to show their dissatisfaction.

    And low cost cannot be justified for supporting piracy. For example, how would we as a blogger feel if someone rip off our blog post and put it on their blog. There are some bloggers who use CC license to protect their postings.
    People use high price as a reason for piracy. If one cannot afford few hundred rupees on a book which they really want to read, they should not disrespect the author by opting piracy. Instead they can use the local library or even borrow from friends. And there is nothing wrong in blocking someone when they delebrately start an argument for the sake of it.

    Reply
  15. Siva

    .உங்க‌ளால் வாங்க‌ முடியாவிட்டால் வீடு விடுங்க‌ள். கார் வாங்க‌ முடியாவிடால் திருடுவீர்க‌ளா?’என‌ கேட்டார்.பிலிப் அத‌ற்கு ‘நான் திருட‌ மாட்டேன் ஆனால் ஆயிர‌ம் ரூபாய்க்கு கார் கிடைத்தால் வாங்குவேன்’ என்றார்

    ———————————————

    I liked the answer…… 🙂

    Reply
  16. மிக அவசியமான தேவையான பதிவு இது. ‘Celebrity’ எழுத்தர்கள் அப்பிடி இப்பிடினு நாம தான் எல்லாரையும் ஏத்தி விட்டுறோம்..அப்புறம் இந்த மாதிரி அவிங்க ஆடும்போது கொஞ்சம் யோசிக்கிறோம்….

    Reply
  17. patippatharkku mikavum suvaiyaagavum athesamayam oru ezuththaalar enpavar variamurai illamal natanthu kolvathu mikavum kavalai alikkirathu ithanaal matra ezuthhaalarkalum paathikkappatakkoodum palar paarkkum valaiththalaththil ithupondru amaiyaamal paarththukkollalaam allathu ithupondru thotar pathivukal nigaznthathaal thaane thangalu viparamaaga ezuthiyulleerkal ithu varai Sethan Bagathai ariyaatha enakku avarai patri ariyakkoodiya unarvukalai alithuvitteerkal ithuve sethanukku vetrithaane.

    Reply
  18. //வெளியேற்றி விடுவேன்// No way! It is actually block you. That means, a certified Twitter user this @Chetan_Bhagat will make your tweeting life miserable, being totally blocked for life in Twitter word ( with that handle, email id etc. )

    Reply
    1. cybersimman

      yes .i stand corrected.

      Reply
  19. விமல்

    எழுத்தாளனுடன் விவாதம் செய்வது வரவேற்புக்குரியது.

    Reply

Leave a Comment

Your email address will not be published.