இணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் !


இது தான் இணைய வரைபடம்

இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண புள்ளிகளுடன் மின்னும் அந்த படத்தை பார்த்தாலே உலகின் எந்த பகுதிகளில் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். சிவப்பு புள்ளிகள் அதிக அடர்த்தியை குறிக்கும். நீல புள்ளிகள் குறைவான எண்ணிக்கையை குறிக்கின்றன. இணையத்துடன் இணைகக்ப்பட்ட சாதனங்களுக்கு எல்லாம் கோரிக்கை அனுப்பி தகவல் திரட்டி இந்த வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த வரைபடத்தை வருங்காலத்தில் அப்டேட் செய்யும் எண்ணமும் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மேதர்லி சாதாரண நபர் இல்லை. ஷோடன் எனும் தேடியந்திரத்தை அவர் நடத்தி வருகிறார். உலகிலேயே திகிலூட்டும் தேசியந்திரம் என இது வர்ணிக்கப்படுகிறது. இணையம் மூலம் எவரும் தொடர்பு கொண்டு ஹேக் செய்து விடக்கூடிய வெப்கேம்களையும் , இதர சாதனங்களையும் தேடி அடையாளம் காட்டுகிறது இந்த தேடியந்திரம். ஆனால் இந்த சேவை தவறான பயன்பாட்டிற்கானது அல்லது, இணைய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கானது என்கிறார் மேதர்லி.

மேதர்லியின் இணைய வரைபடம் ; https://imgur.com/aQUHzgu

ஷோடன் தேடியந்திரம்; http://www.shodanhq.com/

*****

அமிதாப்புக்கு 15 மில்லியன் லைக்ஸ்

பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு 71 வயதானாலும் கூட இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் இளைஞனுக்குரிய உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன் பயனாக அமிதாப் பேஸ்புக்கில் ஒரு மைல்கல்லை தொட்டுள்ளார். ஆம் பேஸ்புக்கில் அவருக்கு 15 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளன. இது பற்றி அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதிக பேஸ்புக் லைக் பட்டியலில் இந்திய நட்சத்திரங்களில் சல்மான் கான் தான் முன்னிலையில் இருக்கிறார் ( 19,143,677 லைக்ஸ்). ஆனால் அமிதாப்பிற்கு டிவிட்டரில் பாலோயர்கள் அதிகம் ( 9.85 மில்லியன்).

*****

ஒரு பேராசிரியரின் பெருந்தன்மை

2-marybeardjpg_2857755b
பிரபலங்கள் துவங்கி சாதாரண இணையவாசிகள் வரை இணையத்தில் பலரும் சீண்டலுக்கும் தாக்குதலுக்கும் இலக்காவது தொடந்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சீண்டல்கள் சில நேரங்களில் எல்லை மீறிச்சென்று விடுதலால் அதற்கு இலக்கானவர்கள் மனம் வெதும்பி இணையத்தில் இருந்தே விலகிச்சென்றிருக்கின்றனர். சிலர், விஷமத்தனமாகவும் ,துவேஷமாகவும் கருத்து தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக பதிலடி கொடுக்க முறப்பட்டதும் உண்டு. ஆனால் கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் மேரி பியரட் தன் மீது ஆவேச தாக்குதல் நடத்திய வாலிபரை மன்னித்து அவர் மனதையும் மாற்ற வைத்திருக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் ஆலிவர் ராலிங்ஸ் எனும் 20 வயது வாலிபர் ,பேராசிரியர் பியர்ட்டின் ஒரு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் மீது மோசமான தாக்குதலை தொடுத்திருந்தார். ’வயதான கிழமே வாயை மூடு முதலில் .. என கூறியிருந்தவர் அதன் பிறகு மிக மோசமான கருத்தையும் கூறியிருந்தார். இதனால் வெறுத்துப்போன பேரசிரியர் தனது டிவிட்டர் பக்கதில் இது பற்றி தெரிவித்திருந்தார். டிவிட்டரில் அவருக்கு 42,000 பாலோயர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்த கருத்தை ரீடிவீட் செய்து வாலிபர் ராலிங்சிற்கு கண்டனம் தெரிவித்தனர். ஒரு சிலர் ராலிங்க்ஸ் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தருகிறோம் அவன் அம்மாவிடம் இது பற்றி முறையிடுங்கள் என்றும் சொல்லியிருந்தனர்.
இணைய உலகமே ராலிங்கிஸிற்கு எதிராக பொங்கியது எனலாம். ஆனால் பேராசியரோ பின்னர் ரேடியோ பேட்டி ஒன்றில், அந்த வாலிபரை மன்னித்து விட்டதாகவும் வாய்ப்பு கிடைத்தால் அவரை நேரில் சந்தித்து , இது போல இனி செய்யக்கூடாது என அறிவுரை சொல்லவும் விரும்புவதாக தெரிவித்தார்.
சொன்னது போலவே ,பேராசிரியர் ராலிங்சை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது ராலிங்க்ஸ் பேராசிரியரிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டதுடன் தொர்ந்து இமெயில் மூலம் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் அளவுக்கு இருவரும் நட்பாகி இருக்கின்றனர்.
அது மட்டும் அல்ல, பேராசிரியர் பியர்ட் அந்த வாலிபருக்கு வேலைவாய்ப்புக்கான பரிந்துரையும் செயதிருக்கிறார்.
எப்போது கூகிளில் ராலிங்க்ஸ் பற்றி தேடினாலும் இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வந்து நின்று அவனது வேலைவாய்ப்பை பாதிக்க்கப்போகிறது. ஒரு நிமிட மடத்தனத்தால் அவனது வாழ்க்கை பாழாக வேண்டுமா? என்று பேராசிரியர் இது தொடர்பாக நியூயார்கர் பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

*****

விண்ணில் இருந்து ஒரு லைவ் பேட்டி!
2stronaut_3014794b
சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் பிரபலங்களுடனான கேள்வி பதில் பகுதி மிகவும் பிரபலமானது. அதாவது பிரபலங்கள் பேஸ்புக் வாயிலாக பயனாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சில வாரங்களுக்கு முன் பெண் கல்வி போராளியான பாகிஸ்தான் இளம்பெற் மலாலா இதில் பங்கேற்றார்.
இந்நிலையில் பேஸ்புக்கில் முதல் முறையாக விண்ணில் இருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வசிக்கும் விண்வெளி வீரர் அலக்சாண்டர் ஜெர்ஸ்ட் ( Alexander Gerst ) இதன் மூலம் விண்வெளியில் இருந்து கேள்விகள்க்கு பதில் அளித்தார்.
ஒவ்வொரு முறை விண்கள ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்து பூமியை பார்க்கும் போது கண்ணில் நீர் வந்துவிடுகிறது என ஜெர்ஸ்ட் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது கூறினார். பூமியை மேலிருந்து பார்ப்பது அற்புதமான அனுபவம் என்று கூறியவர் , நான் நினைத்ததை விட அது மிகவும் சிறியதாக இருக்கிறது, ஒரே நேரத்தில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவை எல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது என்றும் கூறிருந்தார். விண்வெளியில் வேலை பார்க்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 12 மணீ நேரம் பணியாற்றுவதாகவும் ஒரு மணி நேரம் குடும்பத்துடன் பேசவும், மெயில் அனுப்பவும் கிடைப்பதாக அவர் கூறியிருந்தார். நவம்பரில் பூமிக்கு திரும்ப உள்ள ஜெர்ஸ்ட் விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் அற்புத அனுபவத்தை தான் மிஸ் செய்ய வேண்டிருக்கும் என்று கூறியுள்ளார். இருந்தாலும் மழையில் நனைவது , காட்டில் மரங்களுக்கு நடுவே சுற்றுவது போன்ற பூமி தரும் சுகங்களுக்கு ஈடில்லை என்றும் கூறியுள்ளார்.

*****

ஆண்ட்ராய்டுக்கு சீனா பதிலடி

இணையத்தை பொருத்தவரை சீனாவின் வழி தனி வழி தான். உலகமே தேடியந்திரம் என்றாலே கூகிள் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் சீனாவில் பெய்டு தான் தேடியந்திர ராஜா. அதே போல குறும்பதிவு சேவையாட ட்விட்டருக்கு நிகரான சீனாவில் வெய்போ குறும்பதிவு சேவை செல்வாக்கு பெற்றிருக்கிறது. மின்வணிகத்தை பொருத்தவரை அலிபாபா தான் சீனத்து அமேசான். இப்போது சீனா , ஓப்பரேட்டிங் சிஸ்டத்திலும் தனக்கான தனி வழியை நாட முடிவு செய்திருக்கிறது.
இணைய உலகில் பிரபலமாக இருக்கும் மைரோசாப்டின் விஸ்டோஸ் மற்றும் மொபைல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்டராய்டுக்கு போட்டியாக உள்நாட்டில் உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய சீனா தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் இந்த ஆப்பரேடிங் சிஸ்டம் அறிமுகமாக இருக்கிறது. முதல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் அதன் பிறகு ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஓ.எஸ் பயன்பாட்டிற்கு வரலாம் என கூறப்படுகிறது.
மார்ச் மாதம் இதற்கான சாப்ட்வேர் கூட்டு ஏற்படுததப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சுயசார்பு தணிக்கை சார்ந்த்தாகவும் இருக்கிறது. எனவே தான் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் தனது இணைய சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதை அது விரும்பவில்லை. சாப்ட்வேர் மூலம் அமெரிக்கா உளவு பார்ப்பதாகவும் சீனா குற்றம்சாட்டுகிறது.
ஓ.எஸ் தொடர்பான் இன்னொரு செய்தி, மைரோசாப்ட் விண்டோசின் அடுத்த வடிவமான விண்டோஸ் 9.0 செப்டம்பர் 30 ந் தேதி அறிமுகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தெர்ஷ்ஹோல்ட் எனும் கோட்நேம் கொண்ட இந்த வடிவில் விண்டோஸ் 8 ல் சொல்லப்பட்ட குறைகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லபடுகிறது.

*****

சுயபட சர்ச்சைக்கு சுவையான முடிவு
2macaca_nigra_selfie
சுயபடம் (selfie.) என்பது சுயம்புவான படமாகவே கருப்பட வேண்டும் என அமெரிக்க காப்புரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு சுயபட காப்புரிமை தொடர்பான சர்ச்சைக்கான தீர்ப்பாகவும் அமைந்துள்ளது. நிச்சயம் இந்த கருத்து புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டருக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கும். அவர் தான் இந்த சுயபட சர்ச்சையின் மையத்தில் இருப்பவர். இல்லை, இந்த சர்ச்சையின் மையமாக இருப்பது ஒரு குரங்கு எடுத்த புகைப்படம். அந்த புகைப்படம் தனக்கு சொந்தமானது என்னும் உரிமையை நிலை நாட்ட ஸ்லேட்டர் போராடி வருகிறார்.
குரங்கு எடுத்த படத்திற்காக ஸ்லேட்டர் எப்படி உரிமை கொண்டாடலாம் ? இந்த கேள்வி தான் சர்ச்சையின் சுவாரஸ்யமே.
விஷயம் இது தான். பிரிட்டனைச்சேர்ந்த வனவிலங்கு புகைப்பட கலைஞரான டேவிட் ஸ்லேட்டர் 2011ல் இந்தோனேசியாவின் சுலாவேசி தீவுகளில் அங்குள்ள மாகாவு (macaque ) ரக குரங்குகளை படமெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது குரங்கு ஒன்று அவரது காமிராவை பறித்துக்கொண்டு சென்று அதை வைத்து கிளிக்கி தள்ளியது. இப்படி குரங்கு எடுத்த படங்களில் சுயபடமும் ஒன்று. அதாவது தன்னைத்தானே எடுத்துக்கொண்ட் புகைப்படம். குரங்கு காமிராவை பார்த்து சிரிப்பது போன்ற அந்த படம் பத்திரிகைகளில் வெளியாகி தலைப்புச்செய்தியானது.
அந்த படம் தான் ஸ்லேட்டருக்கு தலைவலியாகவும் மாறியது. அந்த புகைப்படத்தை ஆன்லைன் களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வாகிக்கும் விக்கிமீடியா தனது புகைப்படங்கள் பகுதியில் இடம்பெற வைத்தது. இங்குள்ள படங்கள் எல்லாமே காப்புரிமை இல்லாதவை என்பதால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஆனால் ஸ்லேட்டர், தனது காமிராவில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தனக்கு சொந்தமானது என கருதுகிறார். அந்த படத்தை எல்லோரும் பயன்படுத்த அனுமதிப்பதால் தனது வருமானம் பாதிப்பதாகவும் ஆகவே அந்த புகைப்படத்தை தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஸ்லேட்டர் விக்கிமீடியாவிடம் கோரிக்கை வைத்தார்.
விக்கிமீடியா இதை ஏற்க மறுத்துவிட்டது. குரங்கு எடுத்த சுயபடத்திற்கான காப்புரிமை ஸ்லேட்டருக்கு உரியது அல்ல எனவே படத்தை காப்புரிமை இல்லாததாகவே கருதுவோம் என கூறிவிட்டது.
விக்கிமீடியா டெக்னிக்கலாக பேசுகிறது, காமிரா விசையை அழுத்தியதை தவிர இதில் பல விஷயங்கள் இருக்கின்றன, இதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஸ்லேட்டர் சொல்கிறார்.
காமிரா தன்னுடையது என்பதால் அதில் குரங்கு எடுத்த சுயபடமும் தனக்கு உரிமையானது என்பது அவரது வாதம்.
இந்நிலையில் அமெரிக்க காப்புரிமை அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குரங்கு எடுத்த சுயபடம் ,யானை வரைந்த ஓவியம் போன்றவை எல்லாம் காப்புரிமை பெற முடியாதவை என கூறியுள்ளது.
ஆக குரங்கு எடுத்த சுயபடம் யாருக்கும் சொந்தமில்லாதது!.

*****

துணிகளை சுத்தமாக்கும் ரோபோ மீன்.

2lectroluxdesignlab_
கொரியாவை சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் ரோபோ மீன்கள் கொண்டு துணிகளை சுத்தமாக்கும் வஷிங் மிஷினை உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார். இந்த ரோபோ மீன்கள் துணியின் உள்ள அழுக்கை எல்லாம் உறிஞ்சி எடுத்துவிடும் என்பதால் சலவைத்தூள் இல்லாமலே துணி துவைத்து விடலாம் .
சான் யோப் ஜியோங் (Chan Yeop Jeong. ) எனும் அந்த வடிவமைப்பாளர் உருவாக்கி உள்ள வாஷிங் மெஷினின் பெயர் பெசிரா. இது பார்த்தற்கு வாஷிங்மெஷின் போல இல்லாமல் அழகிய மீன் தொட்டி போல இருக்கும். இந்த தொட்டியில் உள்ள தண்ணீரில் டோஃபி ( Dofi) எனும் குட்டி ரோபோ மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும்.
இந்த ரோபோ மீன்கள் தான் ,துணிகளில் உள்ள அழுக்குகளை எல்லாம் உறிஞ்சி எடுத்து விடுகிறது. ரோபோ மீன்களில் கண்கள் போல பொருத்தப்பட்டுள்ள காமிரா மூலம் துணிகளில் உள்ள அழுக்கை கண்டுபிடித்து செயல்படுகிறது.
மனிதர்கள் கால்களில் உள்ள அழுக்குகளை உணவாக கொண்டு தூய்மையாக்கும் டாக்டர் பிஷ் என்று சொல்லப்படும் காரா ருஃபா ( Garra rufa) மீன்களை அடிப்படையாக கொண்டு இந்த துணிகளை சுத்தமாக்கும் ரோபோ மீன்களுக்கான எண்ணம் பிறந்ததாக வடிவமைப்பாளர் ஜியோங் சொல்கிறார்.
எலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் நடத்திய புதுமையான வாஷிங் மிஷின் வடிவமைப்பு போட்டிக்காக இந்த ரோபோ மீன் ஐடியாவை அவர் சமர்பித்திருக்கிறார்.
இந்த முறையில் சலவைத்தூளும் தேவை கிடையாது என்கிறார் ஜியோங். ரோபோ மீன் துணிகளை சுத்தமாக்கி தருவதோடு தொட்டியில் உள்ள தண்ணீரையும் சுத்தமாகவே வைத்திருப்பதால் நீரை மீண்டும் பயன்படுத்தலாம் என்கிறார்.
ஆக இந்த எந்திரம் சுற்றுச்சூழலுக்கு நட்பானது என்கிறார். எலக்ட்ரோலக்ஸ் டிசைன்லேப் தளத்தில் இந்த ரோபோ மீன் பற்றிய விரிவான விவரங்கள் மற்றும் அவை செயல்படும் விவரங்கள் வீடியோவுடன் இடம்பெற்றுள்ளன.
மீன் தொட்டி வடிவில் இருப்பதால் இதை வீட்டில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இதில் துணி துவைக்கும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாமாம்.
இப்போதைக்கு சிறந்த வடிவமைப்பு கருத்தாக்கமாக மட்டுமே இது இருக்கிறது. இந்த ரோபோ மீன் துணி துவைக்க, அதாவது தயாரிப்புக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை.
ரோபோ மீன் துணை துவைப்பதை பார்க்க: http://electroluxdesignlab.com/2014/development-blog/chan-yeop-jeong/
——

நன்றி; விகடன்.காம்


இது தான் இணைய வரைபடம்

இணையத்தில் தொடர்புடைய எல்லா சாதங்களையும் ஒரே வரைபடத்தில் கொண்டு வந்திருக்கிறார் அமெரிக்க சாப்ட்வேர் வல்லினரான ஜான் மேத்ர்லி. அதாவது இண்டெநெர் இணைப்பு கொண்டிருக்கும் எல்லா சாதனங்களையும் அவர் உலக வரைப்டத்தில் புள்ளிகாளாகி காட்டியிருக்கிறார். பல வண்ண புள்ளிகளுடன் மின்னும் அந்த படத்தை பார்த்தாலே உலகின் எந்த பகுதிகளில் இணைய இணைப்பு கொண்ட சாதனங்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். சிவப்பு புள்ளிகள் அதிக அடர்த்தியை குறிக்கும். நீல புள்ளிகள் குறைவான எண்ணிக்கையை குறிக்கின்றன. இணையத்துடன் இணைகக்ப்பட்ட சாதனங்களுக்கு எல்லாம் கோரிக்கை அனுப்பி தகவல் திரட்டி இந்த வரைபடத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த வரைபடத்தை வருங்காலத்தில் அப்டேட் செய்யும் எண்ணமும் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மேதர்லி சாதாரண நபர் இல்லை. ஷோடன் எனும் தேடியந்திரத்தை அவர் நடத்தி வருகிறார். உலகிலேயே திகிலூட்டும் தேசியந்திரம் என இது வர்ணிக்கப்படுகிறது. இணையம் மூலம் எவரும் தொடர்பு கொண்டு ஹேக் செய்து விடக்கூடிய வெப்கேம்களையும் , இதர சாதனங்களையும் தேடி அடையாளம் காட்டுகிறது இந்த தேடியந்திரம். ஆனால் இந்த சேவை தவறான பயன்பாட்டிற்கானது அல்லது, இணைய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கானது என்கிறார் மேதர்லி.

மேதர்லியின் இணைய வரைபடம் ; https://imgur.com/aQUHzgu

ஷோடன் தேடியந்திரம்; http://www.shodanhq.com/

*****

அமிதாப்புக்கு 15 மில்லியன் லைக்ஸ்

பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனுக்கு 71 வயதானாலும் கூட இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதில் இளைஞனுக்குரிய உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதன் பயனாக அமிதாப் பேஸ்புக்கில் ஒரு மைல்கல்லை தொட்டுள்ளார். ஆம் பேஸ்புக்கில் அவருக்கு 15 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளன. இது பற்றி அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அதிக பேஸ்புக் லைக் பட்டியலில் இந்திய நட்சத்திரங்களில் சல்மான் கான் தான் முன்னிலையில் இருக்கிறார் ( 19,143,677 லைக்ஸ்). ஆனால் அமிதாப்பிற்கு டிவிட்டரில் பாலோயர்கள் அதிகம் ( 9.85 மில்லியன்).

*****

ஒரு பேராசிரியரின் பெருந்தன்மை

2-marybeardjpg_2857755b
பிரபலங்கள் துவங்கி சாதாரண இணையவாசிகள் வரை இணையத்தில் பலரும் சீண்டலுக்கும் தாக்குதலுக்கும் இலக்காவது தொடந்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த சீண்டல்கள் சில நேரங்களில் எல்லை மீறிச்சென்று விடுதலால் அதற்கு இலக்கானவர்கள் மனம் வெதும்பி இணையத்தில் இருந்தே விலகிச்சென்றிருக்கின்றனர். சிலர், விஷமத்தனமாகவும் ,துவேஷமாகவும் கருத்து தாக்குதல் நடத்தியவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக பதிலடி கொடுக்க முறப்பட்டதும் உண்டு. ஆனால் கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் மேரி பியரட் தன் மீது ஆவேச தாக்குதல் நடத்திய வாலிபரை மன்னித்து அவர் மனதையும் மாற்ற வைத்திருக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் ஆலிவர் ராலிங்ஸ் எனும் 20 வயது வாலிபர் ,பேராசிரியர் பியர்ட்டின் ஒரு கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் மீது மோசமான தாக்குதலை தொடுத்திருந்தார். ’வயதான கிழமே வாயை மூடு முதலில் .. என கூறியிருந்தவர் அதன் பிறகு மிக மோசமான கருத்தையும் கூறியிருந்தார். இதனால் வெறுத்துப்போன பேரசிரியர் தனது டிவிட்டர் பக்கதில் இது பற்றி தெரிவித்திருந்தார். டிவிட்டரில் அவருக்கு 42,000 பாலோயர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்த கருத்தை ரீடிவீட் செய்து வாலிபர் ராலிங்சிற்கு கண்டனம் தெரிவித்தனர். ஒரு சிலர் ராலிங்க்ஸ் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தருகிறோம் அவன் அம்மாவிடம் இது பற்றி முறையிடுங்கள் என்றும் சொல்லியிருந்தனர்.
இணைய உலகமே ராலிங்கிஸிற்கு எதிராக பொங்கியது எனலாம். ஆனால் பேராசியரோ பின்னர் ரேடியோ பேட்டி ஒன்றில், அந்த வாலிபரை மன்னித்து விட்டதாகவும் வாய்ப்பு கிடைத்தால் அவரை நேரில் சந்தித்து , இது போல இனி செய்யக்கூடாது என அறிவுரை சொல்லவும் விரும்புவதாக தெரிவித்தார்.
சொன்னது போலவே ,பேராசிரியர் ராலிங்சை சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது ராலிங்க்ஸ் பேராசிரியரிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டதுடன் தொர்ந்து இமெயில் மூலம் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளும் அளவுக்கு இருவரும் நட்பாகி இருக்கின்றனர்.
அது மட்டும் அல்ல, பேராசிரியர் பியர்ட் அந்த வாலிபருக்கு வேலைவாய்ப்புக்கான பரிந்துரையும் செயதிருக்கிறார்.
எப்போது கூகிளில் ராலிங்க்ஸ் பற்றி தேடினாலும் இந்த சம்பவம் பற்றிய தகவல்கள் வந்து நின்று அவனது வேலைவாய்ப்பை பாதிக்க்கப்போகிறது. ஒரு நிமிட மடத்தனத்தால் அவனது வாழ்க்கை பாழாக வேண்டுமா? என்று பேராசிரியர் இது தொடர்பாக நியூயார்கர் பத்திரிகை பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

*****

விண்ணில் இருந்து ஒரு லைவ் பேட்டி!
2stronaut_3014794b
சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக்கில் பிரபலங்களுடனான கேள்வி பதில் பகுதி மிகவும் பிரபலமானது. அதாவது பிரபலங்கள் பேஸ்புக் வாயிலாக பயனாளிகளின் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்கள். சில வாரங்களுக்கு முன் பெண் கல்வி போராளியான பாகிஸ்தான் இளம்பெற் மலாலா இதில் பங்கேற்றார்.
இந்நிலையில் பேஸ்புக்கில் முதல் முறையாக விண்ணில் இருந்து கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. விண்வெளியில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் வசிக்கும் விண்வெளி வீரர் அலக்சாண்டர் ஜெர்ஸ்ட் ( Alexander Gerst ) இதன் மூலம் விண்வெளியில் இருந்து கேள்விகள்க்கு பதில் அளித்தார்.
ஒவ்வொரு முறை விண்கள ஜன்னலில் இருந்து எட்டிப்பார்த்து பூமியை பார்க்கும் போது கண்ணில் நீர் வந்துவிடுகிறது என ஜெர்ஸ்ட் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது கூறினார். பூமியை மேலிருந்து பார்ப்பது அற்புதமான அனுபவம் என்று கூறியவர் , நான் நினைத்ததை விட அது மிகவும் சிறியதாக இருக்கிறது, ஒரே நேரத்தில் தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவை எல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடிகிறது என்றும் கூறிருந்தார். விண்வெளியில் வேலை பார்க்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 12 மணீ நேரம் பணியாற்றுவதாகவும் ஒரு மணி நேரம் குடும்பத்துடன் பேசவும், மெயில் அனுப்பவும் கிடைப்பதாக அவர் கூறியிருந்தார். நவம்பரில் பூமிக்கு திரும்ப உள்ள ஜெர்ஸ்ட் விண்ணில் இருந்து பூமியை பார்க்கும் அற்புத அனுபவத்தை தான் மிஸ் செய்ய வேண்டிருக்கும் என்று கூறியுள்ளார். இருந்தாலும் மழையில் நனைவது , காட்டில் மரங்களுக்கு நடுவே சுற்றுவது போன்ற பூமி தரும் சுகங்களுக்கு ஈடில்லை என்றும் கூறியுள்ளார்.

*****

ஆண்ட்ராய்டுக்கு சீனா பதிலடி

இணையத்தை பொருத்தவரை சீனாவின் வழி தனி வழி தான். உலகமே தேடியந்திரம் என்றாலே கூகிள் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் சீனாவில் பெய்டு தான் தேடியந்திர ராஜா. அதே போல குறும்பதிவு சேவையாட ட்விட்டருக்கு நிகரான சீனாவில் வெய்போ குறும்பதிவு சேவை செல்வாக்கு பெற்றிருக்கிறது. மின்வணிகத்தை பொருத்தவரை அலிபாபா தான் சீனத்து அமேசான். இப்போது சீனா , ஓப்பரேட்டிங் சிஸ்டத்திலும் தனக்கான தனி வழியை நாட முடிவு செய்திருக்கிறது.
இணைய உலகில் பிரபலமாக இருக்கும் மைரோசாப்டின் விஸ்டோஸ் மற்றும் மொபைல் உலகில் ஆதிக்கம் செலுத்தும் ஆண்டராய்டுக்கு போட்டியாக உள்நாட்டில் உருவான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்ய சீனா தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் இந்த ஆப்பரேடிங் சிஸ்டம் அறிமுகமாக இருக்கிறது. முதல் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் அதன் பிறகு ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஓ.எஸ் பயன்பாட்டிற்கு வரலாம் என கூறப்படுகிறது.
மார்ச் மாதம் இதற்கான சாப்ட்வேர் கூட்டு ஏற்படுததப்பட்டதாக சீன செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின் சுயசார்பு தணிக்கை சார்ந்த்தாகவும் இருக்கிறது. எனவே தான் வெளிநாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் தனது இணைய சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதை அது விரும்பவில்லை. சாப்ட்வேர் மூலம் அமெரிக்கா உளவு பார்ப்பதாகவும் சீனா குற்றம்சாட்டுகிறது.
ஓ.எஸ் தொடர்பான் இன்னொரு செய்தி, மைரோசாப்ட் விண்டோசின் அடுத்த வடிவமான விண்டோஸ் 9.0 செப்டம்பர் 30 ந் தேதி அறிமுகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தெர்ஷ்ஹோல்ட் எனும் கோட்நேம் கொண்ட இந்த வடிவில் விண்டோஸ் 8 ல் சொல்லப்பட்ட குறைகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லபடுகிறது.

*****

சுயபட சர்ச்சைக்கு சுவையான முடிவு
2macaca_nigra_selfie
சுயபடம் (selfie.) என்பது சுயம்புவான படமாகவே கருப்பட வேண்டும் என அமெரிக்க காப்புரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு சுயபட காப்புரிமை தொடர்பான சர்ச்சைக்கான தீர்ப்பாகவும் அமைந்துள்ளது. நிச்சயம் இந்த கருத்து புகைப்பட கலைஞர் டேவிட் ஸ்லேட்டருக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கும். அவர் தான் இந்த சுயபட சர்ச்சையின் மையத்தில் இருப்பவர். இல்லை, இந்த சர்ச்சையின் மையமாக இருப்பது ஒரு குரங்கு எடுத்த புகைப்படம். அந்த புகைப்படம் தனக்கு சொந்தமானது என்னும் உரிமையை நிலை நாட்ட ஸ்லேட்டர் போராடி வருகிறார்.
குரங்கு எடுத்த படத்திற்காக ஸ்லேட்டர் எப்படி உரிமை கொண்டாடலாம் ? இந்த கேள்வி தான் சர்ச்சையின் சுவாரஸ்யமே.
விஷயம் இது தான். பிரிட்டனைச்சேர்ந்த வனவிலங்கு புகைப்பட கலைஞரான டேவிட் ஸ்லேட்டர் 2011ல் இந்தோனேசியாவின் சுலாவேசி தீவுகளில் அங்குள்ள மாகாவு (macaque ) ரக குரங்குகளை படமெடுத்துக்கொண்டிருந்தார். அப்போது குரங்கு ஒன்று அவரது காமிராவை பறித்துக்கொண்டு சென்று அதை வைத்து கிளிக்கி தள்ளியது. இப்படி குரங்கு எடுத்த படங்களில் சுயபடமும் ஒன்று. அதாவது தன்னைத்தானே எடுத்துக்கொண்ட் புகைப்படம். குரங்கு காமிராவை பார்த்து சிரிப்பது போன்ற அந்த படம் பத்திரிகைகளில் வெளியாகி தலைப்புச்செய்தியானது.
அந்த படம் தான் ஸ்லேட்டருக்கு தலைவலியாகவும் மாறியது. அந்த புகைப்படத்தை ஆன்லைன் களஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வாகிக்கும் விக்கிமீடியா தனது புகைப்படங்கள் பகுதியில் இடம்பெற வைத்தது. இங்குள்ள படங்கள் எல்லாமே காப்புரிமை இல்லாதவை என்பதால் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
ஆனால் ஸ்லேட்டர், தனது காமிராவில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தனக்கு சொந்தமானது என கருதுகிறார். அந்த படத்தை எல்லோரும் பயன்படுத்த அனுமதிப்பதால் தனது வருமானம் பாதிப்பதாகவும் ஆகவே அந்த புகைப்படத்தை தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஸ்லேட்டர் விக்கிமீடியாவிடம் கோரிக்கை வைத்தார்.
விக்கிமீடியா இதை ஏற்க மறுத்துவிட்டது. குரங்கு எடுத்த சுயபடத்திற்கான காப்புரிமை ஸ்லேட்டருக்கு உரியது அல்ல எனவே படத்தை காப்புரிமை இல்லாததாகவே கருதுவோம் என கூறிவிட்டது.
விக்கிமீடியா டெக்னிக்கலாக பேசுகிறது, காமிரா விசையை அழுத்தியதை தவிர இதில் பல விஷயங்கள் இருக்கின்றன, இதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஸ்லேட்டர் சொல்கிறார்.
காமிரா தன்னுடையது என்பதால் அதில் குரங்கு எடுத்த சுயபடமும் தனக்கு உரிமையானது என்பது அவரது வாதம்.
இந்நிலையில் அமெரிக்க காப்புரிமை அலுவலகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குரங்கு எடுத்த சுயபடம் ,யானை வரைந்த ஓவியம் போன்றவை எல்லாம் காப்புரிமை பெற முடியாதவை என கூறியுள்ளது.
ஆக குரங்கு எடுத்த சுயபடம் யாருக்கும் சொந்தமில்லாதது!.

*****

துணிகளை சுத்தமாக்கும் ரோபோ மீன்.

2lectroluxdesignlab_
கொரியாவை சேர்ந்த வடிவமைப்பாளர் ஒருவர் ரோபோ மீன்கள் கொண்டு துணிகளை சுத்தமாக்கும் வஷிங் மிஷினை உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார். இந்த ரோபோ மீன்கள் துணியின் உள்ள அழுக்கை எல்லாம் உறிஞ்சி எடுத்துவிடும் என்பதால் சலவைத்தூள் இல்லாமலே துணி துவைத்து விடலாம் .
சான் யோப் ஜியோங் (Chan Yeop Jeong. ) எனும் அந்த வடிவமைப்பாளர் உருவாக்கி உள்ள வாஷிங் மெஷினின் பெயர் பெசிரா. இது பார்த்தற்கு வாஷிங்மெஷின் போல இல்லாமல் அழகிய மீன் தொட்டி போல இருக்கும். இந்த தொட்டியில் உள்ள தண்ணீரில் டோஃபி ( Dofi) எனும் குட்டி ரோபோ மீன்கள் நீந்திக்கொண்டிருக்கும்.
இந்த ரோபோ மீன்கள் தான் ,துணிகளில் உள்ள அழுக்குகளை எல்லாம் உறிஞ்சி எடுத்து விடுகிறது. ரோபோ மீன்களில் கண்கள் போல பொருத்தப்பட்டுள்ள காமிரா மூலம் துணிகளில் உள்ள அழுக்கை கண்டுபிடித்து செயல்படுகிறது.
மனிதர்கள் கால்களில் உள்ள அழுக்குகளை உணவாக கொண்டு தூய்மையாக்கும் டாக்டர் பிஷ் என்று சொல்லப்படும் காரா ருஃபா ( Garra rufa) மீன்களை அடிப்படையாக கொண்டு இந்த துணிகளை சுத்தமாக்கும் ரோபோ மீன்களுக்கான எண்ணம் பிறந்ததாக வடிவமைப்பாளர் ஜியோங் சொல்கிறார்.
எலக்ட்ரோலக்ஸ் நிறுவனம் நடத்திய புதுமையான வாஷிங் மிஷின் வடிவமைப்பு போட்டிக்காக இந்த ரோபோ மீன் ஐடியாவை அவர் சமர்பித்திருக்கிறார்.
இந்த முறையில் சலவைத்தூளும் தேவை கிடையாது என்கிறார் ஜியோங். ரோபோ மீன் துணிகளை சுத்தமாக்கி தருவதோடு தொட்டியில் உள்ள தண்ணீரையும் சுத்தமாகவே வைத்திருப்பதால் நீரை மீண்டும் பயன்படுத்தலாம் என்கிறார்.
ஆக இந்த எந்திரம் சுற்றுச்சூழலுக்கு நட்பானது என்கிறார். எலக்ட்ரோலக்ஸ் டிசைன்லேப் தளத்தில் இந்த ரோபோ மீன் பற்றிய விரிவான விவரங்கள் மற்றும் அவை செயல்படும் விவரங்கள் வீடியோவுடன் இடம்பெற்றுள்ளன.
மீன் தொட்டி வடிவில் இருப்பதால் இதை வீட்டில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைத்திருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு இதில் துணி துவைக்கும் அழகை பார்த்து கொண்டே இருக்கலாமாம்.
இப்போதைக்கு சிறந்த வடிவமைப்பு கருத்தாக்கமாக மட்டுமே இது இருக்கிறது. இந்த ரோபோ மீன் துணி துவைக்க, அதாவது தயாரிப்புக்கு எப்போது வரும் என்று தெரியவில்லை.
ரோபோ மீன் துணை துவைப்பதை பார்க்க: http://electroluxdesignlab.com/2014/development-blog/chan-yeop-jeong/
——

நன்றி; விகடன்.காம்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.