பாஸ்வேர்டை விழுங்கலாம்

எதிர்கால பாஸ்வேர்டு எப்படி எல்லாம் இருக்கும் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மாதிரிக்கு ஒன்றை விழுங்கிப்பார்க்கலாமா? ஆமாம், வருங்காலத்தில் பாஸ்வேர்டை விழுங்கிவிடலாம் என்கின்றனர். இந்த ரக பாஸ்வேர்டை எடிபில் பாஸ்வேர்டு என்கின்றனர்.பாஸ்வேர்டை எப்படி விழுங்க முடியும்? மாத்திரை போல தான் என்கின்றனர் பாஸ்வேர்டு ஆய்வாளர்கள்!.

எழுத்துக்களும் எண்களும் கலந்த பாஸ்வேர்டு தான் இப்போது பழக்கத்தில் உள்ளது.இந்த வகை பாஸ்வேர்ட்களில் உள்ள போதாமைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டுவிட்டன. பாஸ்வேர்டு உருவாக்குவதில் உள்ள பலவீனங்கள் காரணமாக அவை எளிதாக தாக்காளர்கள் கையில் சிக்கக்கூடியதாக இருக்கின்றன. இதற்கு மாற்று மருந்தாக கைரேகையை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் பயோமெட்ரிக் முறை உள்ளிட்டவை முன்வைக்கப்பட்டாலும் எல்லாவற்றிலும் ஏதேனும் குறை இருக்கத்தான் செய்கின்றன. அதனால் தான் மனிதர்களின் இதயத்துடிப்பு போன்றவற்றை பாஸ்வேர்டாக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போலவே ஒருவரது தமணி இயக்கம், சர்க்கரை அளவு ஆகியவற்றை பாஸ்வேர்டாக கொள்ளும் ஆய்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இவை எல்லாமே ஒருவரது தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் என்பதால் இவற்றை பாஸ்வேர்டாக கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த இடத்தில் விழுங்கக்கூடிய பாஸ்வேர்ட் வருகிறது. இவை குட்டி கம்ப்யூட்டர் கொண்ட மாத்திரை வடிவில் இருக்கின்றன. இவை வயிற்றுக்குள் போனதும் சர்க்கரை அளவு அல்லது தமணி இயக்கத்தை அளவிட்டு வயர்லெஸ் மூலம் தகவல் அனுப்பும். கம்ப்யூட்டர்களுக்குள் ஏற்கனவே இந்த தகவல் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதால் அவை ஒப்பிடப்பட்டு அனுமதி கிடைக்கும்.

இவற்றை யாரும் போலி செய்ய முடியாது என்பதால் பாஸ்வேர்டு திருட்டு பற்றிய கவலையில்லை என்கின்றனர்.
மாத்திரை தவிர உடலில் பொருத்தக்கூடிய சிப்கள் அல்லது டாட்டூ போல ஒட்டக்கூடிய சிப்கள் என்றெல்லாமும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே மோட்டரோலா நிறுவனம் இதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் பே பால் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் பிரிவு தலைவர் லெப்லான்க் என்பவர் மாநாடு ஒன்றில் இந்த வகை பாஸ்வேர்டு ஆய்வு பற்றி விரிவான உரை நிகழ்த்தினார்.

பாஸ்வேர்டுகள் கற்கால சங்கதியாகிவிட்டன, மனித உடலோடு இணைக்க கூடிய பாஸ்வேர்டே எதிர்காலத்தில் செல்லுபடியாகும் என்று அவர் உற்சாகமாக கூறியிருக்கிறார்.

நிற்க, இணையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டு அவசியம் என்றும் அவை தனித்தன்மையாக இருக்க வேண்டும்.
பாஸ்வேர்டுக்கு எதற்கு தனித்தன்மை அவசியம் என்றால் அவை யாராலும் யூகிக்க முடியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான். எனவே தான் பரவலாக பின்பற்றப்படும் பிறந்த தேதி, மனைவியின் பெயர் போன்றவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்டு பாஸ்வேர்டை அமைக்க வேண்டாம் என்று வல்லுனர்கள் மன்றாடுகின்றனர். அது போலவே அகராதிகளில் பார்க்க கூடிய வார்த்தைகளையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
ஆக, நீங்கள் பாஸ்வேர்டு பொது விதிகளுக்கு உட்படாமல் உங்களுக்கான தனித்தன்மையுடன் இருந்தால் மற்றவர்களாலும் , களவாட பயன்படுத்தப்ப்டும் சாப்ட்வேர்களாலும் யூகிக்க முடியாமல் இருக்கும்.

எதிர்கால பாஸ்வேர்டு எப்படி எல்லாம் இருக்கும் என நினைத்தால் வியப்பாக இருக்கிறது. மாதிரிக்கு ஒன்றை விழுங்கிப்பார்க்கலாமா? ஆமாம், வருங்காலத்தில் பாஸ்வேர்டை விழுங்கிவிடலாம் என்கின்றனர். இந்த ரக பாஸ்வேர்டை எடிபில் பாஸ்வேர்டு என்கின்றனர்.பாஸ்வேர்டை எப்படி விழுங்க முடியும்? மாத்திரை போல தான் என்கின்றனர் பாஸ்வேர்டு ஆய்வாளர்கள்!.

எழுத்துக்களும் எண்களும் கலந்த பாஸ்வேர்டு தான் இப்போது பழக்கத்தில் உள்ளது.இந்த வகை பாஸ்வேர்ட்களில் உள்ள போதாமைகள் பற்றி பக்கம் பக்கமாக எழுதப்பட்டுவிட்டன. பாஸ்வேர்டு உருவாக்குவதில் உள்ள பலவீனங்கள் காரணமாக அவை எளிதாக தாக்காளர்கள் கையில் சிக்கக்கூடியதாக இருக்கின்றன. இதற்கு மாற்று மருந்தாக கைரேகையை பாஸ்வேர்டாக பயன்படுத்தும் பயோமெட்ரிக் முறை உள்ளிட்டவை முன்வைக்கப்பட்டாலும் எல்லாவற்றிலும் ஏதேனும் குறை இருக்கத்தான் செய்கின்றன. அதனால் தான் மனிதர்களின் இதயத்துடிப்பு போன்றவற்றை பாஸ்வேர்டாக்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே போலவே ஒருவரது தமணி இயக்கம், சர்க்கரை அளவு ஆகியவற்றை பாஸ்வேர்டாக கொள்ளும் ஆய்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

இவை எல்லாமே ஒருவரது தனிப்பட்ட அடையாளமாக இருக்கும் என்பதால் இவற்றை பாஸ்வேர்டாக கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இந்த இடத்தில் விழுங்கக்கூடிய பாஸ்வேர்ட் வருகிறது. இவை குட்டி கம்ப்யூட்டர் கொண்ட மாத்திரை வடிவில் இருக்கின்றன. இவை வயிற்றுக்குள் போனதும் சர்க்கரை அளவு அல்லது தமணி இயக்கத்தை அளவிட்டு வயர்லெஸ் மூலம் தகவல் அனுப்பும். கம்ப்யூட்டர்களுக்குள் ஏற்கனவே இந்த தகவல் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதால் அவை ஒப்பிடப்பட்டு அனுமதி கிடைக்கும்.

இவற்றை யாரும் போலி செய்ய முடியாது என்பதால் பாஸ்வேர்டு திருட்டு பற்றிய கவலையில்லை என்கின்றனர்.
மாத்திரை தவிர உடலில் பொருத்தக்கூடிய சிப்கள் அல்லது டாட்டூ போல ஒட்டக்கூடிய சிப்கள் என்றெல்லாமும் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே மோட்டரோலா நிறுவனம் இதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் பே பால் நிறுவனத்தின் சர்வதேச டெவலப்பர் பிரிவு தலைவர் லெப்லான்க் என்பவர் மாநாடு ஒன்றில் இந்த வகை பாஸ்வேர்டு ஆய்வு பற்றி விரிவான உரை நிகழ்த்தினார்.

பாஸ்வேர்டுகள் கற்கால சங்கதியாகிவிட்டன, மனித உடலோடு இணைக்க கூடிய பாஸ்வேர்டே எதிர்காலத்தில் செல்லுபடியாகும் என்று அவர் உற்சாகமாக கூறியிருக்கிறார்.

நிற்க, இணையத்தில் ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனி பாஸ்வேர்டு அவசியம் என்றும் அவை தனித்தன்மையாக இருக்க வேண்டும்.
பாஸ்வேர்டுக்கு எதற்கு தனித்தன்மை அவசியம் என்றால் அவை யாராலும் யூகிக்க முடியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தான். எனவே தான் பரவலாக பின்பற்றப்படும் பிறந்த தேதி, மனைவியின் பெயர் போன்றவற்றை எல்லாம் அடிப்படையாக கொண்டு பாஸ்வேர்டை அமைக்க வேண்டாம் என்று வல்லுனர்கள் மன்றாடுகின்றனர். அது போலவே அகராதிகளில் பார்க்க கூடிய வார்த்தைகளையும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.
ஆக, நீங்கள் பாஸ்வேர்டு பொது விதிகளுக்கு உட்படாமல் உங்களுக்கான தனித்தன்மையுடன் இருந்தால் மற்றவர்களாலும் , களவாட பயன்படுத்தப்ப்டும் சாப்ட்வேர்களாலும் யூகிக்க முடியாமல் இருக்கும்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.