உன்னை நான் கண்காணித்தேன்

செல்போன் யுகத்தில், பிள்ளை களுக்கு செல்போன் வாங்கித் தரலாமா? வேண்டாமா? எனும் குழப்பமும், தடுமாற்றமும் பல பெற்றோர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.
.
எல்லோரும் கையில் செல்போன் வைத்திருப்பதால் பிள்ளைகள் தங்களுக்கும் ஒரு செல்போன் வேண்டும் என்று கேட்டு நச்சரிப்பதை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம்.

ஆனால் இந்த கோரிக்கைக்கு உடன்படுவது எல்லா பெற்றோர் களுக்கும் சாத்தியமாவதில்லை. செல்போனால் ஏற்படக் கூடிய நன்மைகளை நன்கு அறிந்திருக்கும் அதே நேரத்தில் அதனால் ஏற்படக் கூடிய தீமைகளையும் பெற்றோர்கள் அறிந்திருப்பதால் பிள்ளைகள் கையில் செல்போனை கொடுப்ப தில் நிறையவே தயக்கம் இருக்கிறது.

பிள்ளைகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்து விட்டால் அவர்கள் பாதுகாப்பு பற்றி நிம்மதியாக இருக்கலாம். எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசலாம் என்பதால் பிள்ளைகளின் இருப்பிடம் மற்றும் அவர்கள் செல்லுமிடம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

அவசரம் அவசரமாக தொடர்பு கொள்ள நினைத்தாலும் உடனே தொடர்பு கொள்ள முடியும். இந்த காரணங்களுக்காக செல்போன் வாங்கி கொடுத்தால் நல்லது என்று எண்ணத் தோன்றும்.

ஆனால் அதே நேரத்தில் பிள்ளை கள் கையில் செல்போன் வைத்திருப் பதால் அதனை அவர்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதை நினைத்து கவலைப் படவும் வேண்டியிருக்கிறது.

செல்போன் வருவதற்கு முன்பாக பிள்ளைகள் பேசுவதை வைத்துக் கொண்டே அவர்களின் பழக்க வழக்கங்களை பெற்றோர்கள் கண் காணிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று பிள்ளைகள் செல்போனில் ரகசியமாக பேசிக் கொள்வதால் அவர்களின் தொடர்பு விவரங்கள் பற்றி பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை.

மேலும் செல்போன் மூலம் யாரை வேண்டுமானாலும் எளிதாக தொடர்பு கொள்ளலாம் என்பதால் பிள்ளைகள் வம்பில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அதோடு படிப்பு கெட்டுப் போகிறது.

அது மட்டுமல்லாமல் பிள்ளைகள் செல்போன் பேசிக் கொண்டே சாலையை கடந்து செல்வது, வாகனம் ஓட்டிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது உயி ருக்கே ஆபத்தாக முடியலாம். இதற்கு பல சோகக் கதைகள் உதாரணமாக இருக்கின்றன.
இப்படி பல பாதகமான விஷயங் கள் பெற்றோர் மனதை உலுக்கிக் கொண்டிருக்கிறது. எனவேதான் செல்போன் வாங்கித் தருவது பலருக்கு தயக்கம் இருக்கிறது.

பெற்றோர்களின் இந்த குழப்பத் திற்கு தீர்வு காணும் வகையில் அருமையான சாப்ட்வேர் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது.

மைகிட்ஈஸ்சேப்.காம் எனும் இணையதளம் அறிமுகம் செய் துள்ள இந்த சாப்ட்வேர் மூலம் பெற் றோர்கள் எந்தவித தயக்கமுமின்றி தங்களது பிள்ளைகளுக்கு செல் போனை வாங்கி கொடுத்து விட லாம். அதே நேரத்தில் அவர்கள் மீது ஒரு கண்ணையும் வைத்திருக்கலாம்.
இந்த சாப்ட்வேரின் உதவியோடு பெற்றோர்கள் தங்களது பிள்ளை களின் செல்போன் பயன்பாட்டை கண்காணித்துக் கொண்டே இருக்க முடியும்.

வாகனம் ஓட்டியபடி அவர்கள் போன் செய்தாலோ, சாலையை கடந்தாலோ இந்த சாப்ட்வேர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து விடும்.

அதே போல இந்த சாப்ட்வேரில் பிள்ளைகள் எப்போது செல்போ னில் பேசலாம் என்பதை குறிப்பிட முடியும். இந்த நேரத்தை கடந்து பிள்ளைகள் செல்போனில் பேசி னால் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப் பட்டு விடும்.

பேசினால்தானே வம்பு என்று பிள்ளைகள் எஸ்எம்எஸ் செய்திக ளாக அனுப்பி வைத்தும் தப்பித்துக் கொள்ள முடியாது. எஸ்.எம்.எஸ்.சில் தவறான வார்த்தைகளை பயன் படுத்தினால் இந்த சாப்ட்வேர் கண்டுபிடித்து சொல்லி விடும். இவ்வாறு சுமார் 1500 வார்த்தை களை இந்த சாப்ட்வேர் கவனித்துக் கொண்டு இருக்கும். அவற்றில் எதை பயன்படுத்தினாலும் பெற் றோர்களுக்கு தகவல் அனுப்பி விடும்.

இந்த கட்டுப்பாட்டை மீறி தவறான எஸ்எம்எஸ் அல்லது விவ காரமான எஸ்எம்எஸ் பிள்ளைகளின் செல்போனிலிருந்து அனுப்பப்படு வதற்கான வாய்ப்பு இல்லை.
மைகிட்ஈஸ்சேப்.காம் தளத்தில் சென்று அதிலுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப் பிப்பதன் மூலம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிள்ளையின் பெயர், செல்போன் மாதிரி, செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், செல்போன் சேவை நிறுவனத்தின் பெயர் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து இந்த படிவத்தை சமர்ப்பித்தால் சாப்ட் வேரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அமெரிக்காவை மையமாக கொண்டு இந்த சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் இருக்கும் தைரியத் தோடு பெற்றோர்கள் பிள்ளைகளின் கையில் செல்போனை ஒப்படைக்கலாம்.

நிச்சயமாக இந்த இணையதளத் தையும், இந்த சாப்ட்வேரையும் பெற்றோர்கள் விரும்பவே செய்வார்கள். ஆனால் பிள்ளைகள் இதனை நேசிப்பார்களா என்பதை உறுதியாக சொல்வதற்கில்லை.

————

link;
www.mykidissafe.com

செல்போன் யுகத்தில், பிள்ளை களுக்கு செல்போன் வாங்கித் தரலாமா? வேண்டாமா? எனும் குழப்பமும், தடுமாற்றமும் பல பெற்றோர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது.
.
எல்லோரும் கையில் செல்போன் வைத்திருப்பதால் பிள்ளைகள் தங்களுக்கும் ஒரு செல்போன் வேண்டும் என்று கேட்டு நச்சரிப்பதை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம்.

ஆனால் இந்த கோரிக்கைக்கு உடன்படுவது எல்லா பெற்றோர் களுக்கும் சாத்தியமாவதில்லை. செல்போனால் ஏற்படக் கூடிய நன்மைகளை நன்கு அறிந்திருக்கும் அதே நேரத்தில் அதனால் ஏற்படக் கூடிய தீமைகளையும் பெற்றோர்கள் அறிந்திருப்பதால் பிள்ளைகள் கையில் செல்போனை கொடுப்ப தில் நிறையவே தயக்கம் இருக்கிறது.

பிள்ளைகளுக்கு செல்போனை வாங்கிக் கொடுத்து விட்டால் அவர்கள் பாதுகாப்பு பற்றி நிம்மதியாக இருக்கலாம். எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு பேசலாம் என்பதால் பிள்ளைகளின் இருப்பிடம் மற்றும் அவர்கள் செல்லுமிடம் குறித்து அறிந்து கொள்ளலாம்.

அவசரம் அவசரமாக தொடர்பு கொள்ள நினைத்தாலும் உடனே தொடர்பு கொள்ள முடியும். இந்த காரணங்களுக்காக செல்போன் வாங்கி கொடுத்தால் நல்லது என்று எண்ணத் தோன்றும்.

ஆனால் அதே நேரத்தில் பிள்ளை கள் கையில் செல்போன் வைத்திருப் பதால் அதனை அவர்கள் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதை நினைத்து கவலைப் படவும் வேண்டியிருக்கிறது.

செல்போன் வருவதற்கு முன்பாக பிள்ளைகள் பேசுவதை வைத்துக் கொண்டே அவர்களின் பழக்க வழக்கங்களை பெற்றோர்கள் கண் காணிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் இன்று பிள்ளைகள் செல்போனில் ரகசியமாக பேசிக் கொள்வதால் அவர்களின் தொடர்பு விவரங்கள் பற்றி பெற்றோர்கள் அறிந்து கொள்ள முடிவதில்லை.

மேலும் செல்போன் மூலம் யாரை வேண்டுமானாலும் எளிதாக தொடர்பு கொள்ளலாம் என்பதால் பிள்ளைகள் வம்பில் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அதோடு படிப்பு கெட்டுப் போகிறது.

அது மட்டுமல்லாமல் பிள்ளைகள் செல்போன் பேசிக் கொண்டே சாலையை கடந்து செல்வது, வாகனம் ஓட்டிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது உயி ருக்கே ஆபத்தாக முடியலாம். இதற்கு பல சோகக் கதைகள் உதாரணமாக இருக்கின்றன.
இப்படி பல பாதகமான விஷயங் கள் பெற்றோர் மனதை உலுக்கிக் கொண்டிருக்கிறது. எனவேதான் செல்போன் வாங்கித் தருவது பலருக்கு தயக்கம் இருக்கிறது.

பெற்றோர்களின் இந்த குழப்பத் திற்கு தீர்வு காணும் வகையில் அருமையான சாப்ட்வேர் ஒன்று அறிமுகமாகி இருக்கிறது.

மைகிட்ஈஸ்சேப்.காம் எனும் இணையதளம் அறிமுகம் செய் துள்ள இந்த சாப்ட்வேர் மூலம் பெற் றோர்கள் எந்தவித தயக்கமுமின்றி தங்களது பிள்ளைகளுக்கு செல் போனை வாங்கி கொடுத்து விட லாம். அதே நேரத்தில் அவர்கள் மீது ஒரு கண்ணையும் வைத்திருக்கலாம்.
இந்த சாப்ட்வேரின் உதவியோடு பெற்றோர்கள் தங்களது பிள்ளை களின் செல்போன் பயன்பாட்டை கண்காணித்துக் கொண்டே இருக்க முடியும்.

வாகனம் ஓட்டியபடி அவர்கள் போன் செய்தாலோ, சாலையை கடந்தாலோ இந்த சாப்ட்வேர் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து விடும்.

அதே போல இந்த சாப்ட்வேரில் பிள்ளைகள் எப்போது செல்போ னில் பேசலாம் என்பதை குறிப்பிட முடியும். இந்த நேரத்தை கடந்து பிள்ளைகள் செல்போனில் பேசி னால் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப் பட்டு விடும்.

பேசினால்தானே வம்பு என்று பிள்ளைகள் எஸ்எம்எஸ் செய்திக ளாக அனுப்பி வைத்தும் தப்பித்துக் கொள்ள முடியாது. எஸ்.எம்.எஸ்.சில் தவறான வார்த்தைகளை பயன் படுத்தினால் இந்த சாப்ட்வேர் கண்டுபிடித்து சொல்லி விடும். இவ்வாறு சுமார் 1500 வார்த்தை களை இந்த சாப்ட்வேர் கவனித்துக் கொண்டு இருக்கும். அவற்றில் எதை பயன்படுத்தினாலும் பெற் றோர்களுக்கு தகவல் அனுப்பி விடும்.

இந்த கட்டுப்பாட்டை மீறி தவறான எஸ்எம்எஸ் அல்லது விவ காரமான எஸ்எம்எஸ் பிள்ளைகளின் செல்போனிலிருந்து அனுப்பப்படு வதற்கான வாய்ப்பு இல்லை.
மைகிட்ஈஸ்சேப்.காம் தளத்தில் சென்று அதிலுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப் பிப்பதன் மூலம் இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிள்ளையின் பெயர், செல்போன் மாதிரி, செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர், செல்போன் சேவை நிறுவனத்தின் பெயர் ஆகிய விவரங்களை பூர்த்தி செய்து இந்த படிவத்தை சமர்ப்பித்தால் சாப்ட் வேரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அமெரிக்காவை மையமாக கொண்டு இந்த சாப்ட்வேர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் இருக்கும் தைரியத் தோடு பெற்றோர்கள் பிள்ளைகளின் கையில் செல்போனை ஒப்படைக்கலாம்.

நிச்சயமாக இந்த இணையதளத் தையும், இந்த சாப்ட்வேரையும் பெற்றோர்கள் விரும்பவே செய்வார்கள். ஆனால் பிள்ளைகள் இதனை நேசிப்பார்களா என்பதை உறுதியாக சொல்வதற்கில்லை.

————

link;
www.mykidissafe.com

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உன்னை நான் கண்காணித்தேன்

  1. அருமையான த்கவல்!நன்றி !

    Reply

Leave a Comment

Your email address will not be published.