சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்களிப்பை சொல்லும் செயலி

muslimஸ்மார்ட்போன் செயலிகளில் பலவிதம் இருக்கின்றன. செயலிகள் உருவாக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அவற்றின் பயன்பாடும் பலவிதமாக அமைகின்றன. பொதுவாக பயன்பாட்டு வகை செயலிகள், பொழுதுபோக்கு சார்ந்தவை, கேம்கள் ஆகிய ரகங்கள் தான் அதிகம் அறியப்பட்டவையாக இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செயலிகளை பயன்படுத்தலாம். இதற்கு அழகான உதாரணமாக அமைகிறது முஸ்லீம் ஃபிரிடம் பைட்டர்ஸ் செயலி (‘Muslim Freedom Fighters’).

பெயர் உணர்த்தக்கூடியது போலவே இந்த செயலி இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை எடுத்துச்சொல்கிறது.

பன்முகத்தன்மை தான் இந்தியாவின் பலமாக இருந்து வருகிறது. இந்திய சுதந்திர போராட்டமும் இதற்கு சாட்சியாக இருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய போது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடுகள் இன்றி அதில் பங்கேற்றனர். இக்கால தலைமுறைக்கு இதை எடுத்துச்சொல்லும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது.

ஐதாராபாத்தை சேர்ந்த மென்பொறியாளரான சையது காலீத் சைபுல்லா (Syed Khalid Saifullah ) இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒரு சில குழுக்கள் இருட்டடிப்பு செய்ய முயன்று வருவதாகவும், அதில் அவர்கள் வெற்றியும் பெற்று வரும் நிலையில், முஸ்லிம்களின் பங்களிப்பை புரிய வைக்கும் வகையில் இந்த செயலியை உருவாக்கியதாக காலீத் கூறுகிறார். பொதுவாகவே முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும் , ஐந்து முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயரை கூறுமாறு கேட்டால் 95 சதவீதம் பேருக்கு அது சாத்தியமாவதில்லை என்றும் கூறும் காலீத், இந்த நிலையை போக்கவே, இந்த விஷயம் தொடர்பாக விரிவான தகவல்களை அளிக்கும் செயலியை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக கூறுகிறார்.

இந்த எண்ணத்துடன் ஆய்வு செய்வதவர் ஆரம்ப்பத்தில் போதிய தகவல்கள் கிடைக்காமல் அல்லாடினாலும், பின்னர் சையது நஸீர் அகமது எனும் பத்திரிகையாளர், எழுத்தாளர் இந்திய விடுதலை போராட்ட இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி விவரித்து எழுதிய தி இம்மார்டல்ஸ் புத்தகத்தை கண்டறிந்தார். நூலாசிரியர் 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியா முழுவதும் ஆய்வு செய்து அரிய தகவல்களை சேகரித்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு 155 முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்களை செயலியாக அமைத்துள்ளார். இந்த செயலியை இவர் உருவாக்கியுள்ள விதம் இதை மிகவும் சுவாரஸ்யமாக ஆக்குகிறது. சுதந்திர போராளிகள் தொடர்பான தகவல்கள் பெண்கள், வழக்கறிஞர்கள், மன்னர்கள், தியாகிகள், பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள், மதகுருமார்கள் என பல்வேறு தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பை கிளிக் செய்தவுடன் அதில் பட்டியலிடப்பட்டுள்ள வீர்ர்களின் சுருக்கமான வாழ்க்கை சித்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். அதோடு ஒவ்வொரு வீர்ர்கள் தொடர்பான தேர்விலும் பயனாளிகள் பங்கேற்கலாம். அதாவது அவர்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் இந்த தேர்வில் பங்கேற்கலாம். ஒவ்வொரு தேர்வாக சரியாக பதில் அளித்து அடுத்த வீர்ர் தேர்வுக்கு முன்னேறலாம். தேர்வில் பங்கேற்காமலே கூட தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றாலும், தேர்வில் பங்கேற்று சரியான பதில்களை அளித்தால் செயலி மூலம் அதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த விவரங்களை நண்பர்களுடன் சமூக ஊடகத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்த முதலில் அதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

muslim2மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் நம்முடைய சுதந்திர போராட்ட வரலாற்று தகவல்களை சுவாரஸ்யமான முறையில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் சுதந்திர போர் என வர்ணிகப்படும் 1857 சிப்பாய் கிளர்ச்சியில் பங்கேற்ற பேகம் ஹஸ்ரத் மஹால், இந்தியாவின் முதல் பெண் அமைச்சரான மசுமா பேகம், பகத்சிங் விடுதலைக்காக சட்டப்போராட்டம் நடத்திய முகமது ஆசிப் அலி, இரு தேசம் கொள்கையை எதிர்த்த டாக்டர் சையது முகமது, மாணவராக இருக்கும் போதே சுதந்திர போராட்ட்த்தில் இணைந்த டாக்டர். சாதிக் அலி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட டாக்டர்.குன்வர் முகமது அஷரப், சீர்திருத்த கருத்துக்களை முன்வைத்து போராடிய ஆகா சுல்தான் முகமது ஷா என சுதந்திர போராட்டத்தில் சுடர் விட்ட பல ஆளுமைகளை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.

மென்பொருள் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் மிக்க காலீத் 4 மாத காலம் முயற்சி செய்து இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இதில் உள்ள கேள்விகளை வடிவமைக்க அவரது நண்பரான அமானுல்லா கான் உதவியுள்ளார்.

மறக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த விழிப்புணர்வை இந்த செயலி மூலம் ஏற்படுத்துவது மிகுந்த மனநிறைவை தருவதாக காலீத் சொல்கிறார். இந்த செயலியை உருவாக்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், இதை மக்களிடம் கொண்டு செல்வது தான் சவாலாக இருக்கிறது என்கிறார். எனினும் இந்த செயலி மெல்ல கவனத்தை ஈர்த்து வருகிறது.

சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 6,400 பேருக்கு மேல் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார். அதுமட்டும் அல்லாமல், பலரும் ஆர்வத்துடன் இதில் உள்ள தேர்வில் பங்கேற்று வருவதாகவும் அவர் உற்சாகத்துடன் சொல்கிறார்.

இந்த செயலிக்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து தமிழ், உருது உள்ளிட்ட மொழிகளிலும் இதை கொண்டு வர இருப்பதாக சொல்கிறார். ஏற்கனவே பலரிடம் இருந்து இதற்கான கோரிக்கைகள் வரத்துவங்கியிருக்கின்றன.

அடுத்த கட்டமாக, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் செயலியை பிரபல சமூக செயற்பாட்டாளரான டாக்டர்.ராம் புனைனி (Dr.Ram Puniani) வழிகாட்டுதலுடன் உருவாக்கி இருப்பதாகவும், குடியரசு தினத்தன்று இதை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

 

ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.raylabs.muslimfreedomfighters

 

 

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

 

muslimஸ்மார்ட்போன் செயலிகளில் பலவிதம் இருக்கின்றன. செயலிகள் உருவாக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அவற்றின் பயன்பாடும் பலவிதமாக அமைகின்றன. பொதுவாக பயன்பாட்டு வகை செயலிகள், பொழுதுபோக்கு சார்ந்தவை, கேம்கள் ஆகிய ரகங்கள் தான் அதிகம் அறியப்பட்டவையாக இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செயலிகளை பயன்படுத்தலாம். இதற்கு அழகான உதாரணமாக அமைகிறது முஸ்லீம் ஃபிரிடம் பைட்டர்ஸ் செயலி (‘Muslim Freedom Fighters’).

பெயர் உணர்த்தக்கூடியது போலவே இந்த செயலி இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை எடுத்துச்சொல்கிறது.

பன்முகத்தன்மை தான் இந்தியாவின் பலமாக இருந்து வருகிறது. இந்திய சுதந்திர போராட்டமும் இதற்கு சாட்சியாக இருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரத்திற்காக போராடிய போது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடுகள் இன்றி அதில் பங்கேற்றனர். இக்கால தலைமுறைக்கு இதை எடுத்துச்சொல்லும் வகையில் இந்த செயலி அமைந்துள்ளது.

ஐதாராபாத்தை சேர்ந்த மென்பொறியாளரான சையது காலீத் சைபுல்லா (Syed Khalid Saifullah ) இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒரு சில குழுக்கள் இருட்டடிப்பு செய்ய முயன்று வருவதாகவும், அதில் அவர்கள் வெற்றியும் பெற்று வரும் நிலையில், முஸ்லிம்களின் பங்களிப்பை புரிய வைக்கும் வகையில் இந்த செயலியை உருவாக்கியதாக காலீத் கூறுகிறார். பொதுவாகவே முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதாகவும் , ஐந்து முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பெயரை கூறுமாறு கேட்டால் 95 சதவீதம் பேருக்கு அது சாத்தியமாவதில்லை என்றும் கூறும் காலீத், இந்த நிலையை போக்கவே, இந்த விஷயம் தொடர்பாக விரிவான தகவல்களை அளிக்கும் செயலியை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டதாக கூறுகிறார்.

இந்த எண்ணத்துடன் ஆய்வு செய்வதவர் ஆரம்ப்பத்தில் போதிய தகவல்கள் கிடைக்காமல் அல்லாடினாலும், பின்னர் சையது நஸீர் அகமது எனும் பத்திரிகையாளர், எழுத்தாளர் இந்திய விடுதலை போராட்ட இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றி விவரித்து எழுதிய தி இம்மார்டல்ஸ் புத்தகத்தை கண்டறிந்தார். நூலாசிரியர் 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியா முழுவதும் ஆய்வு செய்து அரிய தகவல்களை சேகரித்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்த புத்தகத்தை அடிப்படையாக கொண்டு 155 முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்களை செயலியாக அமைத்துள்ளார். இந்த செயலியை இவர் உருவாக்கியுள்ள விதம் இதை மிகவும் சுவாரஸ்யமாக ஆக்குகிறது. சுதந்திர போராளிகள் தொடர்பான தகவல்கள் பெண்கள், வழக்கறிஞர்கள், மன்னர்கள், தியாகிகள், பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள், மதகுருமார்கள் என பல்வேறு தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தலைப்பை கிளிக் செய்தவுடன் அதில் பட்டியலிடப்பட்டுள்ள வீர்ர்களின் சுருக்கமான வாழ்க்கை சித்திரத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். அதோடு ஒவ்வொரு வீர்ர்கள் தொடர்பான தேர்விலும் பயனாளிகள் பங்கேற்கலாம். அதாவது அவர்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் அளிப்பதன் மூலம் இந்த தேர்வில் பங்கேற்கலாம். ஒவ்வொரு தேர்வாக சரியாக பதில் அளித்து அடுத்த வீர்ர் தேர்வுக்கு முன்னேறலாம். தேர்வில் பங்கேற்காமலே கூட தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்றாலும், தேர்வில் பங்கேற்று சரியான பதில்களை அளித்தால் செயலி மூலம் அதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த விவரங்களை நண்பர்களுடன் சமூக ஊடகத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த செயலியை பயன்படுத்த முதலில் அதில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும்.

muslim2மிகவும் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் நம்முடைய சுதந்திர போராட்ட வரலாற்று தகவல்களை சுவாரஸ்யமான முறையில் தெரிந்து கொள்ளலாம்.

முதல் சுதந்திர போர் என வர்ணிகப்படும் 1857 சிப்பாய் கிளர்ச்சியில் பங்கேற்ற பேகம் ஹஸ்ரத் மஹால், இந்தியாவின் முதல் பெண் அமைச்சரான மசுமா பேகம், பகத்சிங் விடுதலைக்காக சட்டப்போராட்டம் நடத்திய முகமது ஆசிப் அலி, இரு தேசம் கொள்கையை எதிர்த்த டாக்டர் சையது முகமது, மாணவராக இருக்கும் போதே சுதந்திர போராட்ட்த்தில் இணைந்த டாக்டர். சாதிக் அலி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட டாக்டர்.குன்வர் முகமது அஷரப், சீர்திருத்த கருத்துக்களை முன்வைத்து போராடிய ஆகா சுல்தான் முகமது ஷா என சுதந்திர போராட்டத்தில் சுடர் விட்ட பல ஆளுமைகளை இந்த செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.

மென்பொருள் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் மிக்க காலீத் 4 மாத காலம் முயற்சி செய்து இந்த செயலியை உருவாக்கியுள்ளார். இதில் உள்ள கேள்விகளை வடிவமைக்க அவரது நண்பரான அமானுல்லா கான் உதவியுள்ளார்.

மறக்கப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்த விழிப்புணர்வை இந்த செயலி மூலம் ஏற்படுத்துவது மிகுந்த மனநிறைவை தருவதாக காலீத் சொல்கிறார். இந்த செயலியை உருவாக்குவதில் எந்த சிக்கலும் இல்லை என்றும், இதை மக்களிடம் கொண்டு செல்வது தான் சவாலாக இருக்கிறது என்கிறார். எனினும் இந்த செயலி மெல்ல கவனத்தை ஈர்த்து வருகிறது.

சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 6,400 பேருக்கு மேல் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தியிருப்பதாக சொல்கிறார். அதுமட்டும் அல்லாமல், பலரும் ஆர்வத்துடன் இதில் உள்ள தேர்வில் பங்கேற்று வருவதாகவும் அவர் உற்சாகத்துடன் சொல்கிறார்.

இந்த செயலிக்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து தமிழ், உருது உள்ளிட்ட மொழிகளிலும் இதை கொண்டு வர இருப்பதாக சொல்கிறார். ஏற்கனவே பலரிடம் இருந்து இதற்கான கோரிக்கைகள் வரத்துவங்கியிருக்கின்றன.

அடுத்த கட்டமாக, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் செயலியை பிரபல சமூக செயற்பாட்டாளரான டாக்டர்.ராம் புனைனி (Dr.Ram Puniani) வழிகாட்டுதலுடன் உருவாக்கி இருப்பதாகவும், குடியரசு தினத்தன்று இதை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

 

ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.raylabs.muslimfreedomfighters

 

 

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.