செல்பேசி சரி,மீன்பேசி தெரியுமா?

seafoodஒவ்வொரு முறையும் மீன் வாங்கச் செல்லும் போதும் ஒரு எஸ் எம் எஸ் அனுப்பி அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டால் எப்படி இருக்கும் . எதற்காக அனுமதி வாங்க வேண்டும் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று நீங்கள் ஆவேசப்படவேண்டாம். உங்களை சமூக அக்கறை மிக்கவராகவும் சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ளவராகவும் நினைத்துக்கொள்ளுங்கள் .
நீங்கள் வாங்க உள்ள மீன் நல்ல மீனா என்று பார்த்து தானே வாங்குவீர்கள்.அது மட்டும் போதுமா அந்த மீன் சுற்றுச்சூழல் நோக்கில் நல்ல மீன் தானா என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டாமா
அதற்காக தான் இந்த எஸ்எம்எஸ் .சரி எஸ்எம்எஸ் அனுப்பினால் எப்படி அது தெரியும்.
நீலச்சமுத்திரம்(blueocean) என்னும் பெயரில் ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்புக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அதில் வாங்க உள்ள மீன் பெயரை தெரிவித்தால் அந்த அமைப்பு குறிப்பிட்ட அந்த மீனை வாங்கலாமா என தெரிவிக்கும். அதாவது அந்த மீன் பாதிப்புக்குள்ளானதா அதனை சாப்பிடாமல் இருப்பது நல்லதா என்பதை தெரிவிக்கும்.
வர்த்தகரீதியான மீன் பிடித்தலால் பல மீன் வகைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.சில வகை மீன் வகைகள் அழியும் நிலைக்கே தள்ளப்பட்டு விட்டன.இதே நிலை தொடர்ந்தால் அரிய ரக மீன் இனங்களை நிரந்தரமாக இழக்க நேரிடலாம். இதை உணர்ந்துள்ள சுற்றுச்சூழல் இயக்கங்கள் அழியும் நிலையில் உள்ள மீன் ரகங்களை பாதுகாக்க பாடுபட்டு வருகின்றன. பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இவை முயன்று வருகின்றன.
நீலச்சமுத்திரம் அமைப்பும் இதில் ஒன்று. சர்வதேச அமைப்பான இது சுற்றுச்சூழல் நோக்கில் நல்ல மீன்களை மட்டுமே உண்ணச்செய்யும் வகையில் மீன்பேசி(fishphone) என்னும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் தாங்கள் வாங்க உத்தேசித்துள்ள மீன் பெயரை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் செய்தால் அது பற்றிய விவரங்களை அனுப்பிவைக்கும். அந்த மீனை வாங்கலாமா என்றும் பதில் எஸ்எம்எஸ் வந்து சேரும். குறிப்பிட்ட அந்த மீன் சுற்றுச்சூழல் நோக்கில் பாதிப்புக்குள்ளானது எனும் பட்சத்தில் அதற்கு பதில் வேறு மீனையும் பரிந்துரைக்கும்.
எந்த மீன் பாதிப்புக்குள்ளானது எவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது என்பதை அந்த மீனின் வரலாறு அது எத்தனை விரைவாக வளர்ந்து இனப்பெருக்கம் செய்யக்கூடியது மீன்பிடித்தலால் எப்படி பாதிப்புக்குள்ளாகின்றன போன்ற அம்சங்களை எல்லாம் பரிசிலித்து பின்னர் மீனை சாப்பிடலாம் என்ற பச்øச்கொடி காட்டப்படும்.
மேலும் இந்த மீனை பிடிக்கும் போது மற்ற மீன்கள் பாதிக்கப்படுகின்றனவா போன்ற சங்கதிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.கடலில் பிடிக்கப்படும் மீன்களுக்கு இவை பின்பற்றப்படுகின்றன. வளர்க்கப்படும் மீன்களுக்கும் இதே போன்ற விவரங்கள் பரிசிலிக்கப்பட்டு பதில் அனுப்ப படுகிறது.
இப்படி பாதிப்புக்குள்ளான மீன்களை வாங்காமல் தவிர்ப்பதன் மூலம் அவற்றின் பாதுகாப்பிற்கு பொது மக்களும் உதவ முடியும் என்னும் நம்பிக்கையில் இந்த மீன்பேசி சேவையை நீலச்சமுத்திரம் அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு அதனடிப்படையில் முடிவு எடுப்பது மிகவும் ஆர்வம் உள்ளவர்களுக்கு கூடி நடைமுறை சாத்தியமில்லை. ஆனால் கையில் உள்ள செல்போனில் இருந்து ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைப்பதன் மூலம் சரியான தகவலை தெரிந்துக்கொண்டு முடிவெடுத்து செயல்பட முடியும்.
இது சுலபமானது மட்டும் அல்ல சுற்றுச்சூழல் நோக்கில் பயன் தரக்கூடியது. நீலச்சமுத்திர அமைப்பு பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்க பாடுப்பட்டு வருகிறது.பருவநிலை மாற்றம் பாதிப்புகளின் தீவிரத்தை புரிந்துகொள்ள சமுத்திரம் உதவுவதாக கூறும் இந்த அமைப்பு இது தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
இதற்காக தனது இணையதளத்தில் விரிவான தகவல்களை அளித்து வரும் இந்த அமைப்பு பாதிப்பில்லாத மீன்கனை சாப்பிட வழி செய்யும் மீன்பேசி எஸ்எம்எஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த தளத்தின் செல்போனுக்கு ஏற்ற வடிவமும் இருக்கிறது.
எஸ்எம்எஸ் வசதியை சமூக வழிப்புணர்வுக்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்
என்பதற்கான மற்றொரு உதாரணம் இது.

—————-
link;
www.fishphone.org

seafoodஒவ்வொரு முறையும் மீன் வாங்கச் செல்லும் போதும் ஒரு எஸ் எம் எஸ் அனுப்பி அனுமதி வாங்க வேண்டும் என்று சொல்லப்பட்டால் எப்படி இருக்கும் . எதற்காக அனுமதி வாங்க வேண்டும் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று நீங்கள் ஆவேசப்படவேண்டாம். உங்களை சமூக அக்கறை மிக்கவராகவும் சுற்றுச்சூழலில் ஆர்வம் உள்ளவராகவும் நினைத்துக்கொள்ளுங்கள் .
நீங்கள் வாங்க உள்ள மீன் நல்ல மீனா என்று பார்த்து தானே வாங்குவீர்கள்.அது மட்டும் போதுமா அந்த மீன் சுற்றுச்சூழல் நோக்கில் நல்ல மீன் தானா என்பதை நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டாமா
அதற்காக தான் இந்த எஸ்எம்எஸ் .சரி எஸ்எம்எஸ் அனுப்பினால் எப்படி அது தெரியும்.
நீலச்சமுத்திரம்(blueocean) என்னும் பெயரில் ஒரு அமைப்பு இருக்கிறது. இந்த அமைப்புக்கு எஸ்எம்எஸ் அனுப்பி அதில் வாங்க உள்ள மீன் பெயரை தெரிவித்தால் அந்த அமைப்பு குறிப்பிட்ட அந்த மீனை வாங்கலாமா என தெரிவிக்கும். அதாவது அந்த மீன் பாதிப்புக்குள்ளானதா அதனை சாப்பிடாமல் இருப்பது நல்லதா என்பதை தெரிவிக்கும்.
வர்த்தகரீதியான மீன் பிடித்தலால் பல மீன் வகைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன.சில வகை மீன் வகைகள் அழியும் நிலைக்கே தள்ளப்பட்டு விட்டன.இதே நிலை தொடர்ந்தால் அரிய ரக மீன் இனங்களை நிரந்தரமாக இழக்க நேரிடலாம். இதை உணர்ந்துள்ள சுற்றுச்சூழல் இயக்கங்கள் அழியும் நிலையில் உள்ள மீன் ரகங்களை பாதுகாக்க பாடுபட்டு வருகின்றன. பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இவை முயன்று வருகின்றன.
நீலச்சமுத்திரம் அமைப்பும் இதில் ஒன்று. சர்வதேச அமைப்பான இது சுற்றுச்சூழல் நோக்கில் நல்ல மீன்களை மட்டுமே உண்ணச்செய்யும் வகையில் மீன்பேசி(fishphone) என்னும் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் தாங்கள் வாங்க உத்தேசித்துள்ள மீன் பெயரை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் செய்தால் அது பற்றிய விவரங்களை அனுப்பிவைக்கும். அந்த மீனை வாங்கலாமா என்றும் பதில் எஸ்எம்எஸ் வந்து சேரும். குறிப்பிட்ட அந்த மீன் சுற்றுச்சூழல் நோக்கில் பாதிப்புக்குள்ளானது எனும் பட்சத்தில் அதற்கு பதில் வேறு மீனையும் பரிந்துரைக்கும்.
எந்த மீன் பாதிப்புக்குள்ளானது எவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது என்பதை அந்த மீனின் வரலாறு அது எத்தனை விரைவாக வளர்ந்து இனப்பெருக்கம் செய்யக்கூடியது மீன்பிடித்தலால் எப்படி பாதிப்புக்குள்ளாகின்றன போன்ற அம்சங்களை எல்லாம் பரிசிலித்து பின்னர் மீனை சாப்பிடலாம் என்ற பச்øச்கொடி காட்டப்படும்.
மேலும் இந்த மீனை பிடிக்கும் போது மற்ற மீன்கள் பாதிக்கப்படுகின்றனவா போன்ற சங்கதிகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.கடலில் பிடிக்கப்படும் மீன்களுக்கு இவை பின்பற்றப்படுகின்றன. வளர்க்கப்படும் மீன்களுக்கும் இதே போன்ற விவரங்கள் பரிசிலிக்கப்பட்டு பதில் அனுப்ப படுகிறது.
இப்படி பாதிப்புக்குள்ளான மீன்களை வாங்காமல் தவிர்ப்பதன் மூலம் அவற்றின் பாதுகாப்பிற்கு பொது மக்களும் உதவ முடியும் என்னும் நம்பிக்கையில் இந்த மீன்பேசி சேவையை நீலச்சமுத்திரம் அமைப்பு அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு அதனடிப்படையில் முடிவு எடுப்பது மிகவும் ஆர்வம் உள்ளவர்களுக்கு கூடி நடைமுறை சாத்தியமில்லை. ஆனால் கையில் உள்ள செல்போனில் இருந்து ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைப்பதன் மூலம் சரியான தகவலை தெரிந்துக்கொண்டு முடிவெடுத்து செயல்பட முடியும்.
இது சுலபமானது மட்டும் அல்ல சுற்றுச்சூழல் நோக்கில் பயன் தரக்கூடியது. நீலச்சமுத்திர அமைப்பு பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுக்க பாடுப்பட்டு வருகிறது.பருவநிலை மாற்றம் பாதிப்புகளின் தீவிரத்தை புரிந்துகொள்ள சமுத்திரம் உதவுவதாக கூறும் இந்த அமைப்பு இது தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது.
இதற்காக தனது இணையதளத்தில் விரிவான தகவல்களை அளித்து வரும் இந்த அமைப்பு பாதிப்பில்லாத மீன்கனை சாப்பிட வழி செய்யும் மீன்பேசி எஸ்எம்எஸ் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த தளத்தின் செல்போனுக்கு ஏற்ற வடிவமும் இருக்கிறது.
எஸ்எம்எஸ் வசதியை சமூக வழிப்புணர்வுக்காக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்
என்பதற்கான மற்றொரு உதாரணம் இது.

—————-
link;
www.fishphone.org

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “செல்பேசி சரி,மீன்பேசி தெரியுமா?

  1. நம்ம ஆளுங்க SMS அனுப்பும் நேரத்திற்குள் இரண்டு மீன்

    வறுவல்களை முழுங்கிடுவாங்க. இல்லைன்னா குவாட்டர்

    காலியாயிடுமே.?

    Reply

Leave a Comment

Your email address will not be published.