டிவிட்டரில் மக்களை சந்தித்த அமெரிக்க கவர்னர்

டிவிட்டரில் நகரசபை கூட்டத்தை நடத்த முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சிகளை டிவிட்டரில் நடத்துவது சாத்தியமே.அமெரிக்கவின் புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் இப்படி டிவிட்டர் மூலம் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறார்.

டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளை அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்களர்களை கவர்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக மக்களோடு தொடர்பு கொள்ளவும்,அவர்களின் மனப்போக்கை அறியவும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கை பதவியில் இருப்பவர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

சமூக வலைப்பின்னல் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் தன்மையை வெளிப்படுத்தி கொள்வதோடு உள்ள படியே மக்கள் சேவையில் ஒரு அங்கமாகவும் இதனை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கருத துவங்கியுள்ளனர்.

இதன் வெளிப்பாடே டிவிட்டர் நேர்காணல் போன்றவை .அதாவது டிவிட்டரில் கேள்வி கேட்கப்பட்டு அதன் மூலமே பதில் அளிப்பது.டிவிட்டரில் பதிவிடும் போது பதில் அளிக்க உள்ள வசதியை கொண்டு டிவிட்டர் பேட்டிகள் நிகழத்தப்படுகின்றன.

இதே முறையில் பலரை கேள்வி கேட்க வைத்து டிவிட்டரில் பதில் அளிக்கலாம்.

புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் இந்த முறையில் தான் மாகாண மக்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் மூலம் பதில் அளித்துள்ளார்.

குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பது போல ஸ்காட் கடந்த வாரம் டிவிட்டரில் என்னிடம் கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்தார்.அதன்படியே வியாழக்கிழமை அன்று 38 நிமிடம் டிவிட்டரில் கேள்விகளை எதிர்கொண்டார்.

கவர்னரின் நூலக அறையில் லேப்டாப் முன் அமர்ந்த ஸ்காட் தனது டிவிட்டரில் கணக்கில் வந்து குவிந்த கேள்விகளுக்கு டிவிட்டர் பதிவுகளாக பதில் தந்தார்.

சரிந்து கிடக்கும் வீடுகளின் மதிப்பை உயர்த்த ஏதேனும் திட்டமிட்டிருக்கிறாதா என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு முதலில் வேலைவாய்ப்பினை பெருக்கி,வீடுகளை வாங்க வைத்து சொத்து வரியை குறைக்க இருப்பதாக ஸ்காட் பதில் அளித்தார்.

பள்ளிகளுக்கு ஐபேட் வழ்ங்கும் திட்டம் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் இல்லையா என்று வேறு ஒருவர் கேட்ட கேள்விக்கு பிள்ளைகளுக்கு நவீன தொழில்நுட்பததிஅ அறிமுக செய்வது நமது கடமை என்று அவர் பதிலளித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது சொன்ன விஷயங்களை சுட்டிக்காடி கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.குறிப்பிட்ட ஒருவர் பிரசாரத்தின் போது அதிக குழந்தைகள் இருந்திருக்க கூடாதா என அவர் கூறியதை குறிப்பிட்டு அதனை நிரைவேற்றும் எண்ணம் இருக்கிறதா என ஆர்வத்தோடு கேட்ட கேள்விக்கும் அவர் இல்லை என்று பதில் தந்தார்.

டிவிட்டர் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டாலும் எதிர்பார்க்க கூடியது போலவே சிக்கலான மற்றும் சர்ச்சைக்குறிய வினாக்களை தவிர்த்து விட்டு தனது வேலை திட்டத்திற்கு பொருத்தமானவற்றுக்கு மட்டும் உற்காமாக பதில் தந்தார்.

இருப்பினும் டிவிட்டர் மூலம் அவர் மேற்கொண்ட இந்த முயற்சியை வரவேற்க வேண்டும்.

குறும்பதிவு சேவையான டிவிட்டர் தகவல் பகிர்விற்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் வழி செய்து கொண்டிருக்கும் போது மக்கள் பிரதிநிதிகளும் தங்களுக்கு வாக்களித்தவர்களோடு தொடர்பு கொள்ள அதனை பயன்படுத்திக்கொள்வதே இரு தரப்பினருக்குமே நலன் பயக்கும்.அதிலும் டிவிட்டரின் உடனடித்தன்மை மற்றும் சுலபத்தன்மை புதியதொரு உறவு பாலத்தை ஏற்படுத்தி தரக்கூடியது.

அந்த வகையில் புளோரிடா கவர்னர் டிவிட்டர் மூலம் குறை கேட்பு நிகழச்சியை நடத்தியுள்ளார்.புளோரிடா மக்களிடமும் இதற்கு நல்ல வர்வேற்பு காணப்பட்டது.இந்த அறிவிப்புக்கு பின் டிவிட்டரில் அவரது பிந்தொடர்பாளர்கலின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

வருங்காலத்தில் இததகைய டிவிட்டர் நிகழ்ச்சிகள் மேன்மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கட்சிகளின் பொதுக்குழு செயற்குழு போல டிவிட்டர் குழுக்களும் பிரபலமாகலாம்.

டிவிட்டரில் நகரசபை கூட்டத்தை நடத்த முடியுமா என்று தெரியவில்லை.ஆனால் மக்கள் குறை கேட்கும் நிகழ்ச்சிகளை டிவிட்டரில் நடத்துவது சாத்தியமே.அமெரிக்கவின் புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் இப்படி டிவிட்டர் மூலம் மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக்காட்டியிருக்கிறார்.

டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகளை அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தின் போது வாக்களர்களை கவர்வதற்காக பயன்படுத்தி வருகின்றனர்.இதன் அடுத்த கட்டமாக மக்களோடு தொடர்பு கொள்ளவும்,அவர்களின் மனப்போக்கை அறியவும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கை பதவியில் இருப்பவர்கள் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

சமூக வலைப்பின்னல் சேவைகளை பயன்படுத்திக்கொள்ளும் தன்மையை வெளிப்படுத்தி கொள்வதோடு உள்ள படியே மக்கள் சேவையில் ஒரு அங்கமாகவும் இதனை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கருத துவங்கியுள்ளனர்.

இதன் வெளிப்பாடே டிவிட்டர் நேர்காணல் போன்றவை .அதாவது டிவிட்டரில் கேள்வி கேட்கப்பட்டு அதன் மூலமே பதில் அளிப்பது.டிவிட்டரில் பதிவிடும் போது பதில் அளிக்க உள்ள வசதியை கொண்டு டிவிட்டர் பேட்டிகள் நிகழத்தப்படுகின்றன.

இதே முறையில் பலரை கேள்வி கேட்க வைத்து டிவிட்டரில் பதில் அளிக்கலாம்.

புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் இந்த முறையில் தான் மாகாண மக்களின் கேள்விகளுக்கு டிவிட்டர் மூலம் பதில் அளித்துள்ளார்.

குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பது போல ஸ்காட் கடந்த வாரம் டிவிட்டரில் என்னிடம் கேள்விகள் கேட்கலாம் என்று அறிவித்தார்.அதன்படியே வியாழக்கிழமை அன்று 38 நிமிடம் டிவிட்டரில் கேள்விகளை எதிர்கொண்டார்.

கவர்னரின் நூலக அறையில் லேப்டாப் முன் அமர்ந்த ஸ்காட் தனது டிவிட்டரில் கணக்கில் வந்து குவிந்த கேள்விகளுக்கு டிவிட்டர் பதிவுகளாக பதில் தந்தார்.

சரிந்து கிடக்கும் வீடுகளின் மதிப்பை உயர்த்த ஏதேனும் திட்டமிட்டிருக்கிறாதா என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு முதலில் வேலைவாய்ப்பினை பெருக்கி,வீடுகளை வாங்க வைத்து சொத்து வரியை குறைக்க இருப்பதாக ஸ்காட் பதில் அளித்தார்.

பள்ளிகளுக்கு ஐபேட் வழ்ங்கும் திட்டம் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் இல்லையா என்று வேறு ஒருவர் கேட்ட கேள்விக்கு பிள்ளைகளுக்கு நவீன தொழில்நுட்பததிஅ அறிமுக செய்வது நமது கடமை என்று அவர் பதிலளித்தார்.

தேர்தல் பிரசாரத்தின் போது சொன்ன விஷயங்களை சுட்டிக்காடி கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.குறிப்பிட்ட ஒருவர் பிரசாரத்தின் போது அதிக குழந்தைகள் இருந்திருக்க கூடாதா என அவர் கூறியதை குறிப்பிட்டு அதனை நிரைவேற்றும் எண்ணம் இருக்கிறதா என ஆர்வத்தோடு கேட்ட கேள்விக்கும் அவர் இல்லை என்று பதில் தந்தார்.

டிவிட்டர் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டாலும் எதிர்பார்க்க கூடியது போலவே சிக்கலான மற்றும் சர்ச்சைக்குறிய வினாக்களை தவிர்த்து விட்டு தனது வேலை திட்டத்திற்கு பொருத்தமானவற்றுக்கு மட்டும் உற்காமாக பதில் தந்தார்.

இருப்பினும் டிவிட்டர் மூலம் அவர் மேற்கொண்ட இந்த முயற்சியை வரவேற்க வேண்டும்.

குறும்பதிவு சேவையான டிவிட்டர் தகவல் பகிர்விற்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் வழி செய்து கொண்டிருக்கும் போது மக்கள் பிரதிநிதிகளும் தங்களுக்கு வாக்களித்தவர்களோடு தொடர்பு கொள்ள அதனை பயன்படுத்திக்கொள்வதே இரு தரப்பினருக்குமே நலன் பயக்கும்.அதிலும் டிவிட்டரின் உடனடித்தன்மை மற்றும் சுலபத்தன்மை புதியதொரு உறவு பாலத்தை ஏற்படுத்தி தரக்கூடியது.

அந்த வகையில் புளோரிடா கவர்னர் டிவிட்டர் மூலம் குறை கேட்பு நிகழச்சியை நடத்தியுள்ளார்.புளோரிடா மக்களிடமும் இதற்கு நல்ல வர்வேற்பு காணப்பட்டது.இந்த அறிவிப்புக்கு பின் டிவிட்டரில் அவரது பிந்தொடர்பாளர்கலின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது.

வருங்காலத்தில் இததகைய டிவிட்டர் நிகழ்ச்சிகள் மேன்மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கட்சிகளின் பொதுக்குழு செயற்குழு போல டிவிட்டர் குழுக்களும் பிரபலமாகலாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.