நன்றி நவிலல் இனையதளம்.

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது.

நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று கேட்கலாம்?

ஆனால் எல்லாவற்றையும் இணையமயமாக்கி வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் பல்வேறு இணைய சேவைகளின் வரிசையில் நன்றி சொல்வதையும் சுலபமாக்கி தரும் இந்த தளம் இணைய யுகத்தில் மிகவும் இயல்பானதே என்றே சொல்ல வேண்டும்.

தீபாவளி வாழ்த்துக்களையும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் சொல்ல வாழ்த்து அட்டைகள் இருப்பது போல தேங்க்யூஸ் என்னும் இந்த தளம் நன்றி சொல்வதற்காக அழகான அட்டைகளை உருவாக்கி வைத்திருக்கிறது.

நண்பர்கள்,உறவினர்கள்,சக ஊழியர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக நன்றி சொல்லுங்கள் என்று உற்சாகப்டுத்துகிறது இந்த தளம்.இவ்வளவு ஏன் பிரபலங்கலூக்கும்,உங்கள் வாழ்க்கையின் சிறப்பான நபர்களுக்கும் நன்றி தெரிவியுங்கள் என்கிறது.

அதுவும் சரி தான்,என்று ஒப்பு கொண்டு நன்றி நவிலலுக்கு தயாராகி விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்,நன்றி குறிப்பை உருவாக்கி கொள்ள வேண்டியது தான்.நன்றியை உருவாக்குங்கள் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் ஒரு கடித வாசகம் வந்து நிற்கிறது.நன்றிக்கான உடனடி வாசக அமைப்பான இதில் கோடிட்ட இடத்தை நிரப்புக என்பது போல இடை இடையே காலி இடம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் நன்றிக்கு உரியவரின் பெயரையும்,நன்றி பெருக்கிற்கான காரணத்தையும்,மேலும் சில விவரங்களையும் பூர்த்தி செய்து நன்றி செய்தியை தயார் செய்து விடலாம்

ஆக யாருக்கு நன்றி சொல்வது என தீமானித்தால் போதும்,எப்படி சொல்வது,எந்த வாசகங்களை எழுதுவது என்றெல்லாம் யோசித்து குழம்ப வேண்டாம்.அதற்காக என்றே அழகான நன்றி படிவத்தை இந்த தளம் தயாராக வைத்திருக்கிறது.

நன்றி படிவத்தை பூர்த்தி செய்த பின் தான் இன்னும் சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.

நண்பருக்கா,உறவினருக்கா,சக ஊழியருக்கா, யாருக்க நன்றி தெரிவிக்கிறோம் என்பதையும் ,நன்றி உணர்வின் வெளிப்பாடா,பரிசளிப்பா எந்த வகையை சேர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பொருத்தமானவற்ரை கிளிக் செய்த பின் நன்றி சொல்பவரின் புகைப்படத்தையும் இனைக்கலாம்.நன்றி சீட்டுக்கான விதவிதமான எழுத்துரு வடிவங்களும் இருக்கின்றன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.இந்த எழுத்துருக்கள் கைப்பட கடித்தம் எழுதியது போனர உணர்வை தர வல்லவை.

நன்றி குறிப்பை தயார் செய்த பின் பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் உரியவருக்கு அனுப்பி வைக்கலாம்.இமெயில் மூலமும் அனுப்பலாம்.

யோசித்து பார்த்தால் நாம் பலருக்கு நன்றி கடன் பட்டிருப்பது புரியும்.பல நேரங்களில் அவற்றை வெளிப்படுத்தவும் செய்திருப்போம்.சில நேரங்கள் தள்ளிப்போட்டிருப்போம்.மறந்திருப்போம்.சொல்லாமல் விட்டிருப்போம்.

ஆனால் நன்றி சொல்ல நினைத்ததும் அதனை செய்து முடிக்க இந்த தளம் உதவுகிறது.அதோடு யாருக்கெல்லாம் நன்றி சொல்லலாம் என யோசிக்கவும் வைக்கிறது.எதிரபாராத நேரத்தில் லிப்ட் கொடுத்து உதவிய நண்பருக்கி நன்றி சொல்லலாம்.நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்த நண்பருக்கு நன்றி சொல்லலாம்.காலையில் அத்தனை அவசரத்திலும் புன்னகையோடு வழியனுப்பும் மனைவிக்கு நன்றி சொல்லலாம்.

இந்தியாவுக்காக சாதனைகள் படைக்கும் சாசினுக்கு நன்றி சொல்லலாம்.பூங்கதவே பாடலி கேட்டு மெய்மறந்து ராஜாவுக்கு நன்றி சொல்லலாம். ஆதமாநாம் பாணியில் இத்துடனாவது விட்டதற்கு நன்றி என்று அரசியல்வாதிகளுக்கு நன்றி சொல்லலாம்.இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

நண்பர்கள் இந்த நன்றி செய்தியை பார்த்து வியந்து மகிழ்வார்கள் அல்லவா?அதிலும் மோசமான மனநிலையில் இருக்கும் போது இந்த நண்றி செய்தி எட்டிப்பார்த்தால் மனது லேசாகி விடாது?

நன்றி என்பது ஒரு நல் உணர்வு ,அதை தள்ளிப்போடாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.எங்கும் அன்பு பெருகட்டும்.

இணையதள முகவரி;http://thankuz.com/

நினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது.

நன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று கேட்கலாம்?

ஆனால் எல்லாவற்றையும் இணையமயமாக்கி வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் பல்வேறு இணைய சேவைகளின் வரிசையில் நன்றி சொல்வதையும் சுலபமாக்கி தரும் இந்த தளம் இணைய யுகத்தில் மிகவும் இயல்பானதே என்றே சொல்ல வேண்டும்.

தீபாவளி வாழ்த்துக்களையும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் சொல்ல வாழ்த்து அட்டைகள் இருப்பது போல தேங்க்யூஸ் என்னும் இந்த தளம் நன்றி சொல்வதற்காக அழகான அட்டைகளை உருவாக்கி வைத்திருக்கிறது.

நண்பர்கள்,உறவினர்கள்,சக ஊழியர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக நன்றி சொல்லுங்கள் என்று உற்சாகப்டுத்துகிறது இந்த தளம்.இவ்வளவு ஏன் பிரபலங்கலூக்கும்,உங்கள் வாழ்க்கையின் சிறப்பான நபர்களுக்கும் நன்றி தெரிவியுங்கள் என்கிறது.

அதுவும் சரி தான்,என்று ஒப்பு கொண்டு நன்றி நவிலலுக்கு தயாராகி விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்,நன்றி குறிப்பை உருவாக்கி கொள்ள வேண்டியது தான்.நன்றியை உருவாக்குங்கள் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் ஒரு கடித வாசகம் வந்து நிற்கிறது.நன்றிக்கான உடனடி வாசக அமைப்பான இதில் கோடிட்ட இடத்தை நிரப்புக என்பது போல இடை இடையே காலி இடம் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் நன்றிக்கு உரியவரின் பெயரையும்,நன்றி பெருக்கிற்கான காரணத்தையும்,மேலும் சில விவரங்களையும் பூர்த்தி செய்து நன்றி செய்தியை தயார் செய்து விடலாம்

ஆக யாருக்கு நன்றி சொல்வது என தீமானித்தால் போதும்,எப்படி சொல்வது,எந்த வாசகங்களை எழுதுவது என்றெல்லாம் யோசித்து குழம்ப வேண்டாம்.அதற்காக என்றே அழகான நன்றி படிவத்தை இந்த தளம் தயாராக வைத்திருக்கிறது.

நன்றி படிவத்தை பூர்த்தி செய்த பின் தான் இன்னும் சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.

நண்பருக்கா,உறவினருக்கா,சக ஊழியருக்கா, யாருக்க நன்றி தெரிவிக்கிறோம் என்பதையும் ,நன்றி உணர்வின் வெளிப்பாடா,பரிசளிப்பா எந்த வகையை சேர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பொருத்தமானவற்ரை கிளிக் செய்த பின் நன்றி சொல்பவரின் புகைப்படத்தையும் இனைக்கலாம்.நன்றி சீட்டுக்கான விதவிதமான எழுத்துரு வடிவங்களும் இருக்கின்றன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.இந்த எழுத்துருக்கள் கைப்பட கடித்தம் எழுதியது போனர உணர்வை தர வல்லவை.

நன்றி குறிப்பை தயார் செய்த பின் பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் உரியவருக்கு அனுப்பி வைக்கலாம்.இமெயில் மூலமும் அனுப்பலாம்.

யோசித்து பார்த்தால் நாம் பலருக்கு நன்றி கடன் பட்டிருப்பது புரியும்.பல நேரங்களில் அவற்றை வெளிப்படுத்தவும் செய்திருப்போம்.சில நேரங்கள் தள்ளிப்போட்டிருப்போம்.மறந்திருப்போம்.சொல்லாமல் விட்டிருப்போம்.

ஆனால் நன்றி சொல்ல நினைத்ததும் அதனை செய்து முடிக்க இந்த தளம் உதவுகிறது.அதோடு யாருக்கெல்லாம் நன்றி சொல்லலாம் என யோசிக்கவும் வைக்கிறது.எதிரபாராத நேரத்தில் லிப்ட் கொடுத்து உதவிய நண்பருக்கி நன்றி சொல்லலாம்.நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்த நண்பருக்கு நன்றி சொல்லலாம்.காலையில் அத்தனை அவசரத்திலும் புன்னகையோடு வழியனுப்பும் மனைவிக்கு நன்றி சொல்லலாம்.

இந்தியாவுக்காக சாதனைகள் படைக்கும் சாசினுக்கு நன்றி சொல்லலாம்.பூங்கதவே பாடலி கேட்டு மெய்மறந்து ராஜாவுக்கு நன்றி சொல்லலாம். ஆதமாநாம் பாணியில் இத்துடனாவது விட்டதற்கு நன்றி என்று அரசியல்வாதிகளுக்கு நன்றி சொல்லலாம்.இப்படி சொல்லி கொண்டே போகலாம்.

நண்பர்கள் இந்த நன்றி செய்தியை பார்த்து வியந்து மகிழ்வார்கள் அல்லவா?அதிலும் மோசமான மனநிலையில் இருக்கும் போது இந்த நண்றி செய்தி எட்டிப்பார்த்தால் மனது லேசாகி விடாது?

நன்றி என்பது ஒரு நல் உணர்வு ,அதை தள்ளிப்போடாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.எங்கும் அன்பு பெருகட்டும்.

இணையதள முகவரி;http://thankuz.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “நன்றி நவிலல் இனையதளம்.

  1. g varadharajan

    good plan thank you very much sir keep it always and do your best level

    Reply

Leave a Comment

Your email address will not be published.