நான் நானே தான்;ஒரு டிவிட்டர் சூளுரை.

எந்த பிரபலத்திற்கும் டிவிட்டரில் ஏற்படக்கூடிய நிலை தான்.அதாவது நீங்கள் நீங்கள் தானா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய‌ சங்கடமான நிலை.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிற‌து.இப்போது மாடல் அழகி கெல்லி புருக்கும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆனால் கெல்லி இந்த நிலைக்கு பதில் அளித்துள்ள விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

டிவிட்டரில் பிரபலங்கள் பெயரில் ஒரு சிலர் போலியான டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருவதால் பிரபலங்களின் குறும்பதிவுகளை படிக்கும் போது அந்த பதிவுகளுக்கு பின்னே இருப்பது உண்மையிலேயே அவர்கள் தானா என்ற சந்தேகம் எழுவது இயல்பானது தான்.

எனவே ஏமாற விரும்பாதவர்கள் பிரபலங்களின் டிவிட்டர் பக்கத்தை பின்தொடருவதற்கு முன் அந்த பதிவுகளை எழுதுவது அவர்கள் தானா என்பதை உறுதி படுத்தி கொள்ள விரும்புவார்கள்.ஒரு சிலர் அக்னிபரிட்சை வைப்பது போல பிரபலங்களிடமே இது நீங்கள் தான் என்பதை நிருபித்து காட்ட முடியுமா என்று கேட்பது உண்டு.

பிரபல‌ மாடல் அழகியான கெல்லி புருக்கிடம் லே பிரான்சிஸ் என்பவர் இது போன்ற கேள்வியை தானெ எழுப்பினார்.இது உண்மையான கெல்லி தானா அல்லது,வேறு யாராவது வயதான மனிதர் கெல்லி பெயரில் ஏமாற்றுகிறாரா என்பது போல அவர் கேள்வி அமைந்திருந்தது.

கெல்லி இதை படித்ததும் ,ஆம் நானே தான்,அதை நிருபிக்க என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.

வேறு ஒன்றும் வேண்டாம் எனக்கு உங்கள் டிவிட்டர் பக்கத்தில் இருந்து நேரடியாக ஒரு மெசேஜ் அனுப்புங்கள் போதும் என்று அவர் கூறியிருந்தார்.

கெல்லி என்ன நினைத்தாரோ தெரியவில்லை,கண்ணாடி முன் அரை நிர்வான்மாக நிற்பது போன்ற படத்தை எடுத்து வெளியிட்டதோடு ,இந்த படத்தை பார்த்த பின்னாவது நான் தான் என நம்புவீர்களா என கேட்டிருந்தார்.

நடிகைகள் அவப்போது தங்கள் எக்ஸ்குலுசிவ் படங்களை ரசிகர்களுடன் நேரடியாக் பகிர்ந்து கொள்ள டிவிட்டரை பயன்படுத்துவதால் இப்படி செய்தாரா என்று தெரியவில்லை.ஆனால் இந்த படத்தை பார்த்த பிற‌கும் அந்த நபர் இந்த படமும் போலியாக இருக்கலாம் என்று சொன்னது தான் இந்த கதையின் கிளைமாக்ஸ்.

எந்த பிரபலத்திற்கும் டிவிட்டரில் ஏற்படக்கூடிய நிலை தான்.அதாவது நீங்கள் நீங்கள் தானா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய‌ சங்கடமான நிலை.

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கும் இந்த நிலை ஏற்பட்டிருக்கிற‌து.இப்போது மாடல் அழகி கெல்லி புருக்கும் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆனால் கெல்லி இந்த நிலைக்கு பதில் அளித்துள்ள விதம் சுவாரஸ்யமாக இருக்கிறது.

டிவிட்டரில் பிரபலங்கள் பெயரில் ஒரு சிலர் போலியான டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு வருவதால் பிரபலங்களின் குறும்பதிவுகளை படிக்கும் போது அந்த பதிவுகளுக்கு பின்னே இருப்பது உண்மையிலேயே அவர்கள் தானா என்ற சந்தேகம் எழுவது இயல்பானது தான்.

எனவே ஏமாற விரும்பாதவர்கள் பிரபலங்களின் டிவிட்டர் பக்கத்தை பின்தொடருவதற்கு முன் அந்த பதிவுகளை எழுதுவது அவர்கள் தானா என்பதை உறுதி படுத்தி கொள்ள விரும்புவார்கள்.ஒரு சிலர் அக்னிபரிட்சை வைப்பது போல பிரபலங்களிடமே இது நீங்கள் தான் என்பதை நிருபித்து காட்ட முடியுமா என்று கேட்பது உண்டு.

பிரபல‌ மாடல் அழகியான கெல்லி புருக்கிடம் லே பிரான்சிஸ் என்பவர் இது போன்ற கேள்வியை தானெ எழுப்பினார்.இது உண்மையான கெல்லி தானா அல்லது,வேறு யாராவது வயதான மனிதர் கெல்லி பெயரில் ஏமாற்றுகிறாரா என்பது போல அவர் கேள்வி அமைந்திருந்தது.

கெல்லி இதை படித்ததும் ,ஆம் நானே தான்,அதை நிருபிக்க என்ன செய்ய வேண்டும் என கேட்டார்.

வேறு ஒன்றும் வேண்டாம் எனக்கு உங்கள் டிவிட்டர் பக்கத்தில் இருந்து நேரடியாக ஒரு மெசேஜ் அனுப்புங்கள் போதும் என்று அவர் கூறியிருந்தார்.

கெல்லி என்ன நினைத்தாரோ தெரியவில்லை,கண்ணாடி முன் அரை நிர்வான்மாக நிற்பது போன்ற படத்தை எடுத்து வெளியிட்டதோடு ,இந்த படத்தை பார்த்த பின்னாவது நான் தான் என நம்புவீர்களா என கேட்டிருந்தார்.

நடிகைகள் அவப்போது தங்கள் எக்ஸ்குலுசிவ் படங்களை ரசிகர்களுடன் நேரடியாக் பகிர்ந்து கொள்ள டிவிட்டரை பயன்படுத்துவதால் இப்படி செய்தாரா என்று தெரியவில்லை.ஆனால் இந்த படத்தை பார்த்த பிற‌கும் அந்த நபர் இந்த படமும் போலியாக இருக்கலாம் என்று சொன்னது தான் இந்த கதையின் கிளைமாக்ஸ்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.