டிவிட்டரில் ஒரு மோதல்.

டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு டிவிட்டர் உரையாடலை திட்டமிட்டு நடத்துவது சாத்தியம் தான்.சில நேரங்களில் எதிர்பாராத விதமாகவும் அழகான டிவிட்டர் உரையாடல் அமைந்து விடுவதுண்டு.

அமெரிக்க பாடகருக்கும் அந்நாட்டு கோடீஸ்வரருக்கும் இடையே இப்படி தான் ஒரு உரையாடல் நடைபெற்றிருக்கிறது.

உரையாடல் என்றால் நீண்ட விவாதம் எல்லாம் இல்லை.ஒரு குறும்பதிவு அதற்கு பதிலாக ஒரு குறும்பதிவு .அதற்கு பதிலாக இன்னொரு குறும்பதிவு.அத்தோடு முற்றுப்புள்ளி என சுருக்கமாக இருந்தாலும் இந்த உரையாடல் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

புகழ் பெற்ற பாடகரான டிரேக் தான் அந்த‌ உரையாடலை துவக்கி வைத்தார்.இல்லை அப்படியும் சொல்வதற்கில்லை.டரேக் எந்த எண்ணமும் இல்லாமல் தனது மனதில் உள்ள கருத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் தான் அந்த குறும்பதிவை வெளியிட்டார்.

‘முதல் மில்லியனை சம்பாதிப்பது தான் கடினமானது.’

இது தான் டிரேக் வெளியிட்ட குறும்பதிவு.

டிவிட்டரில் 74 லட்சம் பின் தொடர்பாளர்களை கொண்டவரான டிரேக் பணம் சம்பாதிப்பது தொடர்பான தனது எண்ணத்தை இதன் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்பியிருக்கலாம்.எது எப்படியாக இருந்தாலும் இதனை தனது பின் தொடர்பாளர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினார்ர்.மற்றபடி அவர் எதையும் பெரிதாக நினைக்கவில்லை.

ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத வகையில் கோடீஸ்வரரான பூனே பிக்கின்ஸ் இந்த குறும்பதிவை படித்து அதற்கு பதில் அளிக்க தீர்மானித்தார்.

பிபி கேபிட்டல் நிறுவனத்தின் அதிபரான பிக்கின்ஸ் ,டிரேக்கின் குறும்பதிவை அப்படியே ரீடிவீட் செய்து அதனோடு ,அதைவிட முதல் பில்லியனை சம்பாதிப்பது இன்னும் கடினமானது என குறிப்பிட்டிருந்தார்.

லட்சங்களை சம்பாதிப்பது கஷ்டம் என்றால் கோடிகளை சம்பாதிப்பது அதை விட கடினம் இல்லையா என கேட்பது போல அமைந்திருந்த அந்த குறும்பதிவு ஆயிரக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டு ரீடிவீட் செய்யப்பட்டன.

இதை பார்த்த பாடக‌ர் டிரேக் கோடீஸ்வரர் பிக்கின்ஸ் தனது செல்வதால் வாயடைத்து போக வைத்து விட்டதாக குறும்பதிவிட்டு தனது பதிலை முடித்து கொண்டார்.

இந்த பதிலும் பல ஆயிரக்கணக்கானோரால் ரீடிவீட் செய்யப்பட்டது. இந்த‌ மூன்று குறும்பதிவுகளுக்கும் சேர்த்து 25 ஆயிரம் ரீடிவீட்களுக்கு மேல் பதிவானது.

டிரேக் சொன்னது சரியா,அதற்கு பிக்கின்ஸ் பதிலடி கொடுத்தது சரியா என்றெலாம் கேள்விகளை எழுப்பும் இந்த சம்பவம் டிவிட்டரின் உரையாடல் தன்மைக்கு அழகான உதாரணமாக அமைகிறது.

டிவிட்டர் வெளியில் இருந்து மேலும் இரண்டு செய்திகள்.

ஒன்று பாப் பாடகி லேடி காகா டிவிட்டரில் 2.5 கோடியாவது பின் தொடர்பாளர்களை பெற்றிருக்கிறார் என்பது.முதல் முறையாக இந்த எண்ணிக்கையை எட்டிப்பிடிக்கும் டிவிட்டர் பயனாளியாக காகா கருதப்படுகிறார்.

மற்றொரு செய்தியும் டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் தொடர்பானது தான்.

வெனிசுலா அதிபர் டிவிட்டரில் 30 லட்சமாவது பின் தொடர்பாளரை கடந்திருக்கிறார்.சாவேஸ் தீவிரமான டிவிட்டர் பயனாளி.எதிர்கட்சிகளின் விமரசங்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக டிவிட்டருக்கு வந்த சாவேஸ் டிவிட்டர் மூலம் பொது மக்கள் தன்னை தொடர்பு கொள்ளத்துவங்கி உதவி கேட்கத்துவங்கியதை அடுத்து அதிபராக தனது செய்லபாடுகளை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார்.

பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறத்துவங்கிய நிலையில் டிவிட்டர் மூலம் கருத்துக்களை பகிர்வதோடு உத்தரவுகளையும் பிறப்பிக்கதுவங்கினார்.

டிவிட்டர் மூலமே அரசாள்வதாக விமர்சிக்கப்பட்டாலும் சாவேசை டிவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது.சமீபத்தில் இந்த எண்ணிக்கை 30 லட்சத்தை தொட்டது.

சிறுமி ஒருவர் 30 லட்சமாவது பின் தொடர்பாளராகி இருக்கிறார்.இது குறித்து டிவிட்டர் மூலம் சாவேஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.அது மட்டும் அல்ல அந்த சிறுமிக்கு வீடு ஒன்று அரசு சார்பில் பரிசளிக்கப்பவும் உள்ளது.ஏற்கனவே 20 லட்சமாவது பின் தொடர்பாளருக்கு சாவேஸ் சார்பில் கம்ப்யூட்டர் பரிசாக வழங்கப்பட்டது.

டிவிட்டர் குறும்பதிவுகளை கொண்டு டிவிட்டர் உரையாடலை திட்டமிட்டு நடத்துவது சாத்தியம் தான்.சில நேரங்களில் எதிர்பாராத விதமாகவும் அழகான டிவிட்டர் உரையாடல் அமைந்து விடுவதுண்டு.

அமெரிக்க பாடகருக்கும் அந்நாட்டு கோடீஸ்வரருக்கும் இடையே இப்படி தான் ஒரு உரையாடல் நடைபெற்றிருக்கிறது.

உரையாடல் என்றால் நீண்ட விவாதம் எல்லாம் இல்லை.ஒரு குறும்பதிவு அதற்கு பதிலாக ஒரு குறும்பதிவு .அதற்கு பதிலாக இன்னொரு குறும்பதிவு.அத்தோடு முற்றுப்புள்ளி என சுருக்கமாக இருந்தாலும் இந்த உரையாடல் சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

புகழ் பெற்ற பாடகரான டிரேக் தான் அந்த‌ உரையாடலை துவக்கி வைத்தார்.இல்லை அப்படியும் சொல்வதற்கில்லை.டரேக் எந்த எண்ணமும் இல்லாமல் தனது மனதில் உள்ள கருத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் தான் அந்த குறும்பதிவை வெளியிட்டார்.

‘முதல் மில்லியனை சம்பாதிப்பது தான் கடினமானது.’

இது தான் டிரேக் வெளியிட்ட குறும்பதிவு.

டிவிட்டரில் 74 லட்சம் பின் தொடர்பாளர்களை கொண்டவரான டிரேக் பணம் சம்பாதிப்பது தொடர்பான தனது எண்ணத்தை இதன் மூலம் பகிர்ந்து கொள்ள விரும்பியிருக்கலாம்.எது எப்படியாக இருந்தாலும் இதனை தனது பின் தொடர்பாளர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பினார்ர்.மற்றபடி அவர் எதையும் பெரிதாக நினைக்கவில்லை.

ஆனால் அவர் சற்றும் எதிர்பாராத வகையில் கோடீஸ்வரரான பூனே பிக்கின்ஸ் இந்த குறும்பதிவை படித்து அதற்கு பதில் அளிக்க தீர்மானித்தார்.

பிபி கேபிட்டல் நிறுவனத்தின் அதிபரான பிக்கின்ஸ் ,டிரேக்கின் குறும்பதிவை அப்படியே ரீடிவீட் செய்து அதனோடு ,அதைவிட முதல் பில்லியனை சம்பாதிப்பது இன்னும் கடினமானது என குறிப்பிட்டிருந்தார்.

லட்சங்களை சம்பாதிப்பது கஷ்டம் என்றால் கோடிகளை சம்பாதிப்பது அதை விட கடினம் இல்லையா என கேட்பது போல அமைந்திருந்த அந்த குறும்பதிவு ஆயிரக்கணக்கானோரால் ரசிக்கப்பட்டு ரீடிவீட் செய்யப்பட்டன.

இதை பார்த்த பாடக‌ர் டிரேக் கோடீஸ்வரர் பிக்கின்ஸ் தனது செல்வதால் வாயடைத்து போக வைத்து விட்டதாக குறும்பதிவிட்டு தனது பதிலை முடித்து கொண்டார்.

இந்த பதிலும் பல ஆயிரக்கணக்கானோரால் ரீடிவீட் செய்யப்பட்டது. இந்த‌ மூன்று குறும்பதிவுகளுக்கும் சேர்த்து 25 ஆயிரம் ரீடிவீட்களுக்கு மேல் பதிவானது.

டிரேக் சொன்னது சரியா,அதற்கு பிக்கின்ஸ் பதிலடி கொடுத்தது சரியா என்றெலாம் கேள்விகளை எழுப்பும் இந்த சம்பவம் டிவிட்டரின் உரையாடல் தன்மைக்கு அழகான உதாரணமாக அமைகிறது.

டிவிட்டர் வெளியில் இருந்து மேலும் இரண்டு செய்திகள்.

ஒன்று பாப் பாடகி லேடி காகா டிவிட்டரில் 2.5 கோடியாவது பின் தொடர்பாளர்களை பெற்றிருக்கிறார் என்பது.முதல் முறையாக இந்த எண்ணிக்கையை எட்டிப்பிடிக்கும் டிவிட்டர் பயனாளியாக காகா கருதப்படுகிறார்.

மற்றொரு செய்தியும் டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் தொடர்பானது தான்.

வெனிசுலா அதிபர் டிவிட்டரில் 30 லட்சமாவது பின் தொடர்பாளரை கடந்திருக்கிறார்.சாவேஸ் தீவிரமான டிவிட்டர் பயனாளி.எதிர்கட்சிகளின் விமரசங்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக டிவிட்டருக்கு வந்த சாவேஸ் டிவிட்டர் மூலம் பொது மக்கள் தன்னை தொடர்பு கொள்ளத்துவங்கி உதவி கேட்கத்துவங்கியதை அடுத்து அதிபராக தனது செய்லபாடுகளை டிவிட்டர் மூலம் பகிர்ந்து கொள்ளத்துவங்கினார்.

பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறத்துவங்கிய நிலையில் டிவிட்டர் மூலம் கருத்துக்களை பகிர்வதோடு உத்தரவுகளையும் பிறப்பிக்கதுவங்கினார்.

டிவிட்டர் மூலமே அரசாள்வதாக விமர்சிக்கப்பட்டாலும் சாவேசை டிவிட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது.சமீபத்தில் இந்த எண்ணிக்கை 30 லட்சத்தை தொட்டது.

சிறுமி ஒருவர் 30 லட்சமாவது பின் தொடர்பாளராகி இருக்கிறார்.இது குறித்து டிவிட்டர் மூலம் சாவேஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.அது மட்டும் அல்ல அந்த சிறுமிக்கு வீடு ஒன்று அரசு சார்பில் பரிசளிக்கப்பவும் உள்ளது.ஏற்கனவே 20 லட்சமாவது பின் தொடர்பாளருக்கு சாவேஸ் சார்பில் கம்ப்யூட்டர் பரிசாக வழங்கப்பட்டது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டரில் ஒரு மோதல்.

  1. Pingback: டிவிட்டரில் பதிலடி கொடுத்த அதிபர். | Cybersimman's Blog

Leave a Comment

Your email address will not be published.