இணையம் மூலம் நிறவேறிய இளைஞரின் கடைசி ஆசை


இது வெற்றிக்கதை அல்ல;நெகிழ வைக்கும் கதை!

ஒரு முகம் தெரியாத வாலிபரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அறிமுகம் இல்லாதவர்கள் நேசக்கரம் நீட்டி நிதி உதவி செய்து இணையத்தின் ஆற்றலையும் அதன் மூலம் மனிதநேயத்தின் மகத்துவத்தையும் உணர்த்திய கதை.

அந்த வாலிபரின் பெயர் ஆரான் காலின்ஸ்.கம்ப்யூட்டர் வல்லுனராக இருந்த ஆரான் 30 வயதில் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்.இதனால் ஆரானை துரதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம்.ஆனால் இந்த வர்ணனை ஆரானுக்கே பிடிக்காது.காரணம் சிறிய வயதில் இறக்க நேர்ந்தது பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.அதோடு அவர் தன்னைப்பற்றி நினைத்ததை விட மற்றவர்கள் பற்றியே அதிகம் கவலைப்பட்டிருக்கிறார்.

அதனால் தான் தனது கடைசி விருப்பமாக ஓட்டல் சர்வர் ஒருவருக்கு டாலர் கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.டிப்ஸ் என்றால் சும்மா 2 டாலர் 5 டாலர் எல்லாம் இல்லை,ஒரு பிட்சாவை சாப்பிட்டு விட்டு அதனை கொண்டு வந்து கொடுத்த சர்வருக்கு 500 டாலர் டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டும் அல்ல தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொண்டு பெற்றோர்களுக்கான தனது கடன் தொகையையும் கொடுத்து விட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இது கொஞ்சம் விசித்திரமான விருப்பமாக தோன்றலாம்.ஆனால் ஆரானின் மனித்நேயத்தை தெரிந்து கொண்டால் இது மிகவும் இயல்பானது என்று புரியும்.

ஆரான் எதிர்பாராத கருணையின் மூலம் மட்டற்ற மகிழ்ச்சி அடைய முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர்.கோபத்தை கூட கொடுப்பதன் மூலமே காட்டியவர்.ஒரு முறை ஓட்டலில் மிக மோசமாக நடந்து கொண்ட சர்வருக்கு அவர் 50 டாலர் டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ஆரான் தனது மறைவிற்கு பிறகு முகம் தெரியாத ஒரு சர்வரின் முகத்தில் எதிர்பாராத மகிழ்ச்சியின் மலர்ச்சியை ஏற்படுத்த விரும்பியிருக்கிறார்.

ஆரானின் சகோதரர் சேத காலின்ஸ் இந்த விருப்பத்தை நிறைவேற்ற முற்பட்ட போது ஆரானின் கணக்கில் பணம் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.கொடுத்தே பழக்கப்பட்ட ஆரான் பெரிய அளவில் சேமித்து வைத்திருக்கவில்லை.

எனவே சேத காலின்ஸ் மற்றவர்களின் உதவியோடு இந்த விருப்பத்தை நிறைவேற்ற விரும்பி அதற்காக ஒரு இணையதளத்தை(ஆலன்காலின்ஸ் ,ஆர்ஜி) அமைத்து தனது ககோதரரின் கடைசி விருப்பத்தை குறிப்பிட்டு அதற்காக நிதி உதவி அளிக்குமாறு கேட்டிருந்தார்.

மிக எளிமையாக அமைக்கப்பட்டிருந்த அந்த இணையதளத்தில் ஆரான் பற்றியும் அவரது கடைசி விருப்பம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

மிக சுருக்கமான அந்த அறிமுகத்தில் தனக்கு மற்றவர்கள் செய்த சிறு உதவிகளை மிகப்பெரிதாக கருதியவர் ஆரான் என குறிப்பிட்டு விட்டு,தனக்குறிய வரம்புகளோடு தாராள மனதுடன் நடந்து கொண்ட ஆரான் மற்றவர்கள் மீது மாற்றத்தை எற்படுத்தும் வகையில் தனது சார்பில் தாராளமாக கொடுக்கப்படும் நிதி அமைய வேண்டும் என விரும்பியதாக தெரிவித்திருந்தார்.

இதனை படித்தவர்கள் ஆரானின் மனதையும் அதில் நிறைந்திருந்த மனித நேயத்தையும் உணர்ந்திருக்க வேண்டும்.விளைவு சிறு தொகைகளாக நிதி உதவி குவிந்தது.

இந்த தொகையை கொண்டு சேத் காலின்ஸ் சகோதரரின் கடைசி விருப்பத்தை பூர்த்தி செய்ததோடு அதனை வீடியோவில் பதிவு செய்து யூடியூப்பிலும் வெளியிட்டார்.ஓட்டலில் பிட்சா சாப்பிட்டு விட்டு சாரா வார்டு என்னும் சர்வருக்கு 500 டாலர் டிப்ஸ் அளிப்பததையும் அதை சர்வரும் எதிர்பாராத ஆச்சர்யத்தையும் மகிழ்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அந்த வீடியோ காட்சி அமைந்திருந்தது.

அந்த வீடியோவை பார்த்தவர்கள் ஒரு மனிதரின் கடைசி விருப்பம் எப்படி இன்னொருவருக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை தர முடிந்த மனித்நேயத்தால் நெகிழ்ந்து போய தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டனர்.அவர்களும் இந்த காட்சியை பார்த்து நெகிழ்ந்து போய் தங்கள் பங்கிற்கு அதனை பகிர்ந்து கொள்ள அடுத்த சில நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்து நெகிழந்து போயினர்.

நெகிழ்ந்தவர்கள் தாரளமாக நன்கொடையும் அளித்தனர்.500 டாலர் நிதி கோரிக்கைக்கு மாறாக முதல் நாள் அன்றே பத்தாயிரம் டாலர் நிதி திரண்டது.தொடர்ந்து நிதி குவித்த வண்ணம் இருக்கிறது.

எதிர்பார்த்த தொகையை விட பல மடங்கு நிதி குவிந்தது ஒரு புறமிருக்க ஆரானின் விருப்பம் பலரிடம் ஏற்படுத்திய பாதிப்பு அதைவிட ஆச்சர்யத்தை அளிப்பதாக இருந்தது.

இந்த பாதிப்பை இணையவாசிகள் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிவித்திருந்த கருத்துக்களின் வாயிலாக பார்க்க முடிந்தது.

நான் சேவையில் துறையில் இருக்கிறேன்.டிப் அளிப்பதன் அருமை எனக்கு தெரியும்.அடுத்த முறை ஏதாவது ஓட்டலுக்கு சென்றால் எனக்கு ஆரானின் நினைவே வரும் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இன்னொருவரோ நான் பத்து டாலர் நன்கொடை வழங்கியுள்ளேன்,ஆரானின் கருணை போரை தொடர்வேன் என கூறியிருந்தார்.

ஆஷ்லே என்பவர்,நான் சர்வராக பணியாற்றுகிறேன்,இந்த வீடியோவை பார்த்ததும் நெகிழ்ந்து போய்விட்டேன்,ஆரானை போன்றவர்களை நினைத்து மகிழ்கிறேன் என்று கூறியிருந்தார்.

இன்னொருவர் இந்த செயலை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளேன் எல்லோருக்கும் இது பரவட்டும் என தெரிவித்திருந்தார்.

ஆஹா ஆரான் உலகில் எத்தகைய தாக்கத்தை விட்டு சென்றிருக்கிறார் என வியப்பை வெளிபடுத்தியிருந்தார்.

இனி எப்போது சாப்பிட சென்றாலும் டிப் வழங்கும் போது ஆரானை நினைத்து கொள்வோம் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி பின்னூட்டங்களும் நெகிழ வைக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறன.

ஆரானின் நல்லெண்ணம் அவரது மறைவுக்கு பின்னும் உயிர் வாழ்கிறது.

இணையதள முகவரி;http://aaroncollins.org/


இது வெற்றிக்கதை அல்ல;நெகிழ வைக்கும் கதை!

ஒரு முகம் தெரியாத வாலிபரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்ற அறிமுகம் இல்லாதவர்கள் நேசக்கரம் நீட்டி நிதி உதவி செய்து இணையத்தின் ஆற்றலையும் அதன் மூலம் மனிதநேயத்தின் மகத்துவத்தையும் உணர்த்திய கதை.

அந்த வாலிபரின் பெயர் ஆரான் காலின்ஸ்.கம்ப்யூட்டர் வல்லுனராக இருந்த ஆரான் 30 வயதில் இவ்வுலகை விட்டு சென்று விட்டார்.இதனால் ஆரானை துரதிர்ஷ்டசாலி என்று சொல்லலாம்.ஆனால் இந்த வர்ணனை ஆரானுக்கே பிடிக்காது.காரணம் சிறிய வயதில் இறக்க நேர்ந்தது பற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.அதோடு அவர் தன்னைப்பற்றி நினைத்ததை விட மற்றவர்கள் பற்றியே அதிகம் கவலைப்பட்டிருக்கிறார்.

அதனால் தான் தனது கடைசி விருப்பமாக ஓட்டல் சர்வர் ஒருவருக்கு டாலர் கொடுக்க வேண்டும் என்று எழுதி வைத்திருந்தார்.டிப்ஸ் என்றால் சும்மா 2 டாலர் 5 டாலர் எல்லாம் இல்லை,ஒரு பிட்சாவை சாப்பிட்டு விட்டு அதனை கொண்டு வந்து கொடுத்த சர்வருக்கு 500 டாலர் டிப்ஸ் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

அது மட்டும் அல்ல தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொண்டு பெற்றோர்களுக்கான தனது கடன் தொகையையும் கொடுத்து விட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இது கொஞ்சம் விசித்திரமான விருப்பமாக தோன்றலாம்.ஆனால் ஆரானின் மனித்நேயத்தை தெரிந்து கொண்டால் இது மிகவும் இயல்பானது என்று புரியும்.

ஆரான் எதிர்பாராத கருணையின் மூலம் மட்டற்ற மகிழ்ச்சி அடைய முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தவர்.கோபத்தை கூட கொடுப்பதன் மூலமே காட்டியவர்.ஒரு முறை ஓட்டலில் மிக மோசமாக நடந்து கொண்ட சர்வருக்கு அவர் 50 டாலர் டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

இப்படிப்பட்ட ஆரான் தனது மறைவிற்கு பிறகு முகம் தெரியாத ஒரு சர்வரின் முகத்தில் எதிர்பாராத மகிழ்ச்சியின் மலர்ச்சியை ஏற்படுத்த விரும்பியிருக்கிறார்.

ஆரானின் சகோதரர் சேத காலின்ஸ் இந்த விருப்பத்தை நிறைவேற்ற முற்பட்ட போது ஆரானின் கணக்கில் பணம் எதுவும் எஞ்சியிருக்கவில்லை.கொடுத்தே பழக்கப்பட்ட ஆரான் பெரிய அளவில் சேமித்து வைத்திருக்கவில்லை.

எனவே சேத காலின்ஸ் மற்றவர்களின் உதவியோடு இந்த விருப்பத்தை நிறைவேற்ற விரும்பி அதற்காக ஒரு இணையதளத்தை(ஆலன்காலின்ஸ் ,ஆர்ஜி) அமைத்து தனது ககோதரரின் கடைசி விருப்பத்தை குறிப்பிட்டு அதற்காக நிதி உதவி அளிக்குமாறு கேட்டிருந்தார்.

மிக எளிமையாக அமைக்கப்பட்டிருந்த அந்த இணையதளத்தில் ஆரான் பற்றியும் அவரது கடைசி விருப்பம் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்.

மிக சுருக்கமான அந்த அறிமுகத்தில் தனக்கு மற்றவர்கள் செய்த சிறு உதவிகளை மிகப்பெரிதாக கருதியவர் ஆரான் என குறிப்பிட்டு விட்டு,தனக்குறிய வரம்புகளோடு தாராள மனதுடன் நடந்து கொண்ட ஆரான் மற்றவர்கள் மீது மாற்றத்தை எற்படுத்தும் வகையில் தனது சார்பில் தாராளமாக கொடுக்கப்படும் நிதி அமைய வேண்டும் என விரும்பியதாக தெரிவித்திருந்தார்.

இதனை படித்தவர்கள் ஆரானின் மனதையும் அதில் நிறைந்திருந்த மனித நேயத்தையும் உணர்ந்திருக்க வேண்டும்.விளைவு சிறு தொகைகளாக நிதி உதவி குவிந்தது.

இந்த தொகையை கொண்டு சேத் காலின்ஸ் சகோதரரின் கடைசி விருப்பத்தை பூர்த்தி செய்ததோடு அதனை வீடியோவில் பதிவு செய்து யூடியூப்பிலும் வெளியிட்டார்.ஓட்டலில் பிட்சா சாப்பிட்டு விட்டு சாரா வார்டு என்னும் சர்வருக்கு 500 டாலர் டிப்ஸ் அளிப்பததையும் அதை சர்வரும் எதிர்பாராத ஆச்சர்யத்தையும் மகிழ்சியையும் வெளிப்படுத்தும் வகையில் அந்த வீடியோ காட்சி அமைந்திருந்தது.

அந்த வீடியோவை பார்த்தவர்கள் ஒரு மனிதரின் கடைசி விருப்பம் எப்படி இன்னொருவருக்கு எதிர்பாராத மகிழ்ச்சியை தர முடிந்த மனித்நேயத்தால் நெகிழ்ந்து போய தங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டனர்.அவர்களும் இந்த காட்சியை பார்த்து நெகிழ்ந்து போய் தங்கள் பங்கிற்கு அதனை பகிர்ந்து கொள்ள அடுத்த சில நாட்களில் பல்லாயிரக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்து நெகிழந்து போயினர்.

நெகிழ்ந்தவர்கள் தாரளமாக நன்கொடையும் அளித்தனர்.500 டாலர் நிதி கோரிக்கைக்கு மாறாக முதல் நாள் அன்றே பத்தாயிரம் டாலர் நிதி திரண்டது.தொடர்ந்து நிதி குவித்த வண்ணம் இருக்கிறது.

எதிர்பார்த்த தொகையை விட பல மடங்கு நிதி குவிந்தது ஒரு புறமிருக்க ஆரானின் விருப்பம் பலரிடம் ஏற்படுத்திய பாதிப்பு அதைவிட ஆச்சர்யத்தை அளிப்பதாக இருந்தது.

இந்த பாதிப்பை இணையவாசிகள் பின்னூட்டங்கள் வாயிலாக தெரிவித்திருந்த கருத்துக்களின் வாயிலாக பார்க்க முடிந்தது.

நான் சேவையில் துறையில் இருக்கிறேன்.டிப் அளிப்பதன் அருமை எனக்கு தெரியும்.அடுத்த முறை ஏதாவது ஓட்டலுக்கு சென்றால் எனக்கு ஆரானின் நினைவே வரும் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இன்னொருவரோ நான் பத்து டாலர் நன்கொடை வழங்கியுள்ளேன்,ஆரானின் கருணை போரை தொடர்வேன் என கூறியிருந்தார்.

ஆஷ்லே என்பவர்,நான் சர்வராக பணியாற்றுகிறேன்,இந்த வீடியோவை பார்த்ததும் நெகிழ்ந்து போய்விட்டேன்,ஆரானை போன்றவர்களை நினைத்து மகிழ்கிறேன் என்று கூறியிருந்தார்.

இன்னொருவர் இந்த செயலை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டுள்ளேன் எல்லோருக்கும் இது பரவட்டும் என தெரிவித்திருந்தார்.

ஆஹா ஆரான் உலகில் எத்தகைய தாக்கத்தை விட்டு சென்றிருக்கிறார் என வியப்பை வெளிபடுத்தியிருந்தார்.

இனி எப்போது சாப்பிட சென்றாலும் டிப் வழங்கும் போது ஆரானை நினைத்து கொள்வோம் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி பின்னூட்டங்களும் நெகிழ வைக்கும் வகையிலேயே அமைந்திருக்கிறன.

ஆரானின் நல்லெண்ணம் அவரது மறைவுக்கு பின்னும் உயிர் வாழ்கிறது.

இணையதள முகவரி;http://aaroncollins.org/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இணையம் மூலம் நிறவேறிய இளைஞரின் கடைசி ஆசை

  1. நெகிழ வைத்த கதை தான்…
    பகிர்வுக்கு நன்றி… தொடர வாழ்த்துக்கள்…

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே.

      Reply
  2. அட இப்படியும் நடக்குமா ? நடந்திருக்கிறது – பகிர்வினிற்கு நன்றி சிம்மன் – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply

Leave a Comment to cheenakay Cancel Reply

Your email address will not be published.