அப்துல் க‌லாமின் பேஸ்புக் பக்கம்!

கலாமின் வாழ்க்கையே ஒரு மைல்கல் தான்.இப்போது அந்த மனிதர் பேஸ்புக்கிலும் ஒரு மைல்கல்லை அடைந்திருக்கிறார்.

ஒரு மில்லியன் வலுவான சமூகமாக திகழ்கிறோம் என அவரே மகிழ்ச்சியோடு இது பற்றி சொல்லியிருக்கிறார்.சமூகம் என கலாம் சொல்வது அவருக்கு பின்னே திரண்டிருக்கும் பேஸ்புக் சமூகத்தை.

ஆம் பேஸ்புக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கலாமின் நண்பர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டிருக்கிறது.

இளைஞர்களின் கூடாரமாக திகழும் பேஸ்புக்கில் இளைஞர்களின் நம்பிக்கை நாயகரான கலாம் பத்து லட்சம் நண்பர்களை பெற்றிருப்பது ஒன்று வியப்பில்லை தான்.ஆனால் இந்திய மக்கள் மத்தியில் அவர் பெற்றிருக்கும் நன்மதிப்பிற்கும் செல்வாக்கிறகும் அடையாளமாக இந்த எண்ணிக்கையை கருதலாம்.

டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் மில்லியன் கணக்கில் பின்தொடர்பாளர்களையும் நண்பர்களையும் பெறுவது என்பது பாப் பாடகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் சாத்தியமாகி வரும் நிலையில் கலாம் போன்ற மக்கள் தலைவர்கள் இத்தகைய இணைய செல்வாக்கை பெற்றிருப்பது வரவேறகத்தக்கது.

யோசித்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது.இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கு இது சாத்தியம்?முதலில் பெரும்பாலான தலைவர்களுக்கு பேஸ்புகின் முக்கியத்துவம் புரிவதே கடினம்.அப்படியே புரிந்தாலும் அதன் சூடசமங்கள் புரிவது இன்னும் கடினமானது.

பகிர்வுக்கான சாதனமான பேஸ்புக்கையும் புகழ் பெறுவதற்கான இன்னொரு வழியாக அவர்கள் கருதி விட வாய்ப்புள்ளது.மேலும் பேஸ்புக்கின் செல்வாக்கால் கவரப்பட்டு அதில் அடியெடுத்து வைத்து விட்டு உதவியாளர்களை விட்டு பதிவுகளை எழுதச்சொல்லக்கூடும்.

ஆனால் கலாம் ஒரு இளைஞனின் உற்சாகத்தோடு பேஸ்புக்கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.81 வயதில் கலாமிற்கு இருக்கும் சுறுசுறுப்பும் கருத்துக்களை பகிர்வதில் உள்ள ஈடுபாடும் தான் அவரை பேஸ்புக் நாயகனாக ஆக்கியிருக்கிறது.

அதோடு தனது மைய இலக்கில் அவர் உறுதியாக இருக்கிறார்.வலுவான இந்தியாவை உருவாக்க இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்துவதை கலாம் தன் உயிர் மூச்சாக கொண்டிருப்பதை அவரது பேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்.

வழக்கமான தலைவர்களில் இருந்து விலகி மனதில் உள்ள லட்சியத்தை பகிர்ந்து கொள்வதில் கலாமிற்கு உள்ள விருப்பத்தை அவர் ஜனாதிபதியாக இருந்த போது கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலேயே பார்த்திருக்கிறோம்.எல்லா நிகழ்ச்சிகளிலுக் ஏதாவது ஒரு செய்தியை மனதில் பதிய வைக்க அவர் தவறியதில்லை.அதோடு உரையாற்றினோம் விடைபெற்றோம் என்றில்லாமல் பார்வையாளர்களோடு உரையாடி ஊக்கப்படுத்தவும் அவர் தவறியதில்லை.

குறிப்பாக இளைஞர்களையும் சிறார்களையும் கலாம் தனி கவனத்தோடு அணுகினார்.அவர்களை கவர்ந்தார்.கனவுகளை விதைத்தார்.

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவரது இந்த பணி தொடர்கிறது.இப்போது பேஸ்புக்கிலும் விரிவாகி இருக்கிறது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் கலாம் பேஸ்புக்கில் உறுப்பினரானார்.அதன் பிறகு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் தனது சுற்றுப்பயண விவரங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

முக்கிய நிகழ்வுகள் பற்றிய தனது கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.சச்சினின் நூறாவது சதத்தில் துவங்கி,தாராசிங் மரணம்,ஹிக்ஸ் போசன்ன் துகளில் இந்திய விஞ்ஞானி போசின் பங்கு,கூடங்குளம் சர்ச்சை என எல்லா முக்கிய நிகழ்வுகள் பற்றியும் கலாம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பேஸ்புக் கலாச்சாரத்தை நன்கறிந்தவர் போல நிகழ்ச்சிகள் பற்றி புகைப்படங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.அவரது பதிவுகள் எல்லாமே ஏதோ ஒரு செய்தியோடு சுவாரஸ்யமாகவே உள்ளது.

பல பகிர்வுகள் சிந்தனையை தூண்டுகின்றன.

டாக்கா நிகழ்ச்சி ஒன்றில் சன்க்யுதா என்னும் ஆறு வயது சிறுமி உங்களுக்கு விஞ்ஞானத்தில் ஆரவம் உண்டா என கலாமிடம் கேட்கிறாள்.கலாம் விஞ்ஞான்ம் தான் என வாழ்க்கை என பதில் அளிக்கிறார்.இதை கேட்ட சிறுமி அப்படியென்றால் நானும் விஞ்ஞானத்தை விரும்ப என்ன வழி என்று ஆர்வத்தோடு கேட்கிறாள்.இதை குறிப்பிடும் கலாம் இதே கேள்வியை நம்மிடம் எழுப்புகிறார்.கல்வியாளர்கள்,விஞ்ஞானிகளாகிய நாம் விஞ்ஞானத்தை எப்படி விரும்பக்கூடியதாக மாற்றப்போகிறோம் என்று.

இந்த ஆர்வம் தான் கலாம்.

இந்த ஆர்வம் தான் அவரை இளைஞர்களுக்கு நெருக்கமானவராக ஆக்கியிருக்கிறது.

கலாமின் ஒவ்வொரு பதிவும் அவரது அனுபவத்தையும் நம்பிக்கையையும் வெளீப்படுத்துவதாக இருக்கிறது.ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றிருக்கிறது.நூற்றுக்கணக்கான பின்னுட்டங்களை கொண்டிருக்கிறது.ஆக கலாம் இந்த பக்கம் மூலம் இளைய இந்தியாவோடு தீவிரமான உரையாடிக்கொண்டிருக்கிறார்.

இந்த உரையாடலாக கவரப்படும் இளைஞர்கள் மத்தியில் டேர்கெட் 3 பில்லியன்,வாட் ஐ கேன் கிவ் மிஷன் போன்ற திட்டங்களுக்கான ஆதரவையும் திரட்டி வருகிறார்.

தொழிநுட்பத்தின் அருமையை உணர்ந்த கலாம் பேஸ்புக்ககை தலைவர்கள் எப்படி பயன்படுத்தலாம் என வழி காட்டி வருகிறார்.

ஏற்கனவே கலாம் இணையத்தை சிறந்த முறையில் பயனபடுத்தி வருகிறார்.அப்துல்கலாம் டாட் காம் என்னும் முகவரியில் அவரது வலைமனை உள்ளது.யூடியூப் வாயிலாகவும் அவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

பேஸ்புக் பலரால் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கலாம் பேஸ்புக்கின் வீச்சுக்கும் ஆற்றலுக்கும் சான்றாக விளங்கி வருகிறார்.

கலாமின் பேஸ்புக் முகவரி;http://www.facebook.com/OfficialKalam

கலாமின் வாழ்க்கையே ஒரு மைல்கல் தான்.இப்போது அந்த மனிதர் பேஸ்புக்கிலும் ஒரு மைல்கல்லை அடைந்திருக்கிறார்.

ஒரு மில்லியன் வலுவான சமூகமாக திகழ்கிறோம் என அவரே மகிழ்ச்சியோடு இது பற்றி சொல்லியிருக்கிறார்.சமூகம் என கலாம் சொல்வது அவருக்கு பின்னே திரண்டிருக்கும் பேஸ்புக் சமூகத்தை.

ஆம் பேஸ்புக்கில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கலாமின் நண்பர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தொட்டிருக்கிறது.

இளைஞர்களின் கூடாரமாக திகழும் பேஸ்புக்கில் இளைஞர்களின் நம்பிக்கை நாயகரான கலாம் பத்து லட்சம் நண்பர்களை பெற்றிருப்பது ஒன்று வியப்பில்லை தான்.ஆனால் இந்திய மக்கள் மத்தியில் அவர் பெற்றிருக்கும் நன்மதிப்பிற்கும் செல்வாக்கிறகும் அடையாளமாக இந்த எண்ணிக்கையை கருதலாம்.

டிவிட்டரிலும் பேஸ்புக்கிலும் மில்லியன் கணக்கில் பின்தொடர்பாளர்களையும் நண்பர்களையும் பெறுவது என்பது பாப் பாடகர்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் சாத்தியமாகி வரும் நிலையில் கலாம் போன்ற மக்கள் தலைவர்கள் இத்தகைய இணைய செல்வாக்கை பெற்றிருப்பது வரவேறகத்தக்கது.

யோசித்து பார்த்தால் வியப்பாக இருக்கிறது.இந்தியாவில் வேறு எந்த தலைவருக்கு இது சாத்தியம்?முதலில் பெரும்பாலான தலைவர்களுக்கு பேஸ்புகின் முக்கியத்துவம் புரிவதே கடினம்.அப்படியே புரிந்தாலும் அதன் சூடசமங்கள் புரிவது இன்னும் கடினமானது.

பகிர்வுக்கான சாதனமான பேஸ்புக்கையும் புகழ் பெறுவதற்கான இன்னொரு வழியாக அவர்கள் கருதி விட வாய்ப்புள்ளது.மேலும் பேஸ்புக்கின் செல்வாக்கால் கவரப்பட்டு அதில் அடியெடுத்து வைத்து விட்டு உதவியாளர்களை விட்டு பதிவுகளை எழுதச்சொல்லக்கூடும்.

ஆனால் கலாம் ஒரு இளைஞனின் உற்சாகத்தோடு பேஸ்புக்கில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.81 வயதில் கலாமிற்கு இருக்கும் சுறுசுறுப்பும் கருத்துக்களை பகிர்வதில் உள்ள ஈடுபாடும் தான் அவரை பேஸ்புக் நாயகனாக ஆக்கியிருக்கிறது.

அதோடு தனது மைய இலக்கில் அவர் உறுதியாக இருக்கிறார்.வலுவான இந்தியாவை உருவாக்க இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்துவதை கலாம் தன் உயிர் மூச்சாக கொண்டிருப்பதை அவரது பேஸ்புக் பக்கத்தில் பார்க்கலாம்.

வழக்கமான தலைவர்களில் இருந்து விலகி மனதில் உள்ள லட்சியத்தை பகிர்ந்து கொள்வதில் கலாமிற்கு உள்ள விருப்பத்தை அவர் ஜனாதிபதியாக இருந்த போது கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலேயே பார்த்திருக்கிறோம்.எல்லா நிகழ்ச்சிகளிலுக் ஏதாவது ஒரு செய்தியை மனதில் பதிய வைக்க அவர் தவறியதில்லை.அதோடு உரையாற்றினோம் விடைபெற்றோம் என்றில்லாமல் பார்வையாளர்களோடு உரையாடி ஊக்கப்படுத்தவும் அவர் தவறியதில்லை.

குறிப்பாக இளைஞர்களையும் சிறார்களையும் கலாம் தனி கவனத்தோடு அணுகினார்.அவர்களை கவர்ந்தார்.கனவுகளை விதைத்தார்.

பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும் அவரது இந்த பணி தொடர்கிறது.இப்போது பேஸ்புக்கிலும் விரிவாகி இருக்கிறது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் கலாம் பேஸ்புக்கில் உறுப்பினரானார்.அதன் பிறகு தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் பற்றியும் தனது சுற்றுப்பயண விவரங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டு வருகிறார்.

முக்கிய நிகழ்வுகள் பற்றிய தனது கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்.சச்சினின் நூறாவது சதத்தில் துவங்கி,தாராசிங் மரணம்,ஹிக்ஸ் போசன்ன் துகளில் இந்திய விஞ்ஞானி போசின் பங்கு,கூடங்குளம் சர்ச்சை என எல்லா முக்கிய நிகழ்வுகள் பற்றியும் கலாம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

பேஸ்புக் கலாச்சாரத்தை நன்கறிந்தவர் போல நிகழ்ச்சிகள் பற்றி புகைப்படங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.அவரது பதிவுகள் எல்லாமே ஏதோ ஒரு செய்தியோடு சுவாரஸ்யமாகவே உள்ளது.

பல பகிர்வுகள் சிந்தனையை தூண்டுகின்றன.

டாக்கா நிகழ்ச்சி ஒன்றில் சன்க்யுதா என்னும் ஆறு வயது சிறுமி உங்களுக்கு விஞ்ஞானத்தில் ஆரவம் உண்டா என கலாமிடம் கேட்கிறாள்.கலாம் விஞ்ஞான்ம் தான் என வாழ்க்கை என பதில் அளிக்கிறார்.இதை கேட்ட சிறுமி அப்படியென்றால் நானும் விஞ்ஞானத்தை விரும்ப என்ன வழி என்று ஆர்வத்தோடு கேட்கிறாள்.இதை குறிப்பிடும் கலாம் இதே கேள்வியை நம்மிடம் எழுப்புகிறார்.கல்வியாளர்கள்,விஞ்ஞானிகளாகிய நாம் விஞ்ஞானத்தை எப்படி விரும்பக்கூடியதாக மாற்றப்போகிறோம் என்று.

இந்த ஆர்வம் தான் கலாம்.

இந்த ஆர்வம் தான் அவரை இளைஞர்களுக்கு நெருக்கமானவராக ஆக்கியிருக்கிறது.

கலாமின் ஒவ்வொரு பதிவும் அவரது அனுபவத்தையும் நம்பிக்கையையும் வெளீப்படுத்துவதாக இருக்கிறது.ஒவ்வொரு பதிவும் ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றிருக்கிறது.நூற்றுக்கணக்கான பின்னுட்டங்களை கொண்டிருக்கிறது.ஆக கலாம் இந்த பக்கம் மூலம் இளைய இந்தியாவோடு தீவிரமான உரையாடிக்கொண்டிருக்கிறார்.

இந்த உரையாடலாக கவரப்படும் இளைஞர்கள் மத்தியில் டேர்கெட் 3 பில்லியன்,வாட் ஐ கேன் கிவ் மிஷன் போன்ற திட்டங்களுக்கான ஆதரவையும் திரட்டி வருகிறார்.

தொழிநுட்பத்தின் அருமையை உணர்ந்த கலாம் பேஸ்புக்ககை தலைவர்கள் எப்படி பயன்படுத்தலாம் என வழி காட்டி வருகிறார்.

ஏற்கனவே கலாம் இணையத்தை சிறந்த முறையில் பயனபடுத்தி வருகிறார்.அப்துல்கலாம் டாட் காம் என்னும் முகவரியில் அவரது வலைமனை உள்ளது.யூடியூப் வாயிலாகவும் அவர் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.

பேஸ்புக் பலரால் எதிர்மறையாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் கலாம் பேஸ்புக்கின் வீச்சுக்கும் ஆற்றலுக்கும் சான்றாக விளங்கி வருகிறார்.

கலாமின் பேஸ்புக் முகவரி;http://www.facebook.com/OfficialKalam

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “அப்துல் க‌லாமின் பேஸ்புக் பக்கம்!

  1. இணைப்பு பலருக்கும் மிகவும் பயன் தரும்…

    அற்புத மனிதரைப்பற்றி சிறப்பான பகிர்வு… மிக்க நன்றி சார்…

    Reply
    1. cybersimman

  2. Pingback: பேஸ்புக்கில் நுழைந்தார் சச்சின்!. | Cybersimman's Blog

  3. saddam hussain

    eppadi avaridam thodarbu kolvathu

    Reply
    1. cybersimman

      பேஸ்புக் கணக்கு மூலம் பின்னுட்டம் இடலாம்.

      Reply
  4. அன்பின் சிம்மன்

    அருமையான தகவல் – பகிர்வினிற்கு நன்றி – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா

    Reply

Leave a Comment

Your email address will not be published.