பாலுமகேந்திராவின் வலைப்பதிவு.

வலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகிறகு வந்திருக்கிறார்.திரைப்பட ரசிகர்களுக்கு இதை விட நல்ல செய்தி இருக்க முடியாது.

எழுதினாலும் பேசினாலும் சினிமா தான் மூச்சு என இருப்பவர் இப்போது வலைப்பதிவு மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.

பாலு ம‌கேந்திராவின் வலைப்பதிவு தலைப்பு என்ன தெரியுமா?மூன்றாம் பிறை!(முகவரி வேறு).மூன்றாம் பிறையை கிட்டத்தட்ட பாலுமகேந்திராவிற்கு காப்புரிமை கொடுத்து விடலாம் தான்.அது அவரது சினிமா கலையின் அடையளாமாகவே மாறிவிட்டது.

இந்த தலைப்பில் அவரது வலைப்பதிவை படிப்பது பொருத்தமானது மட்டும் அல்ல;பரவசமானதும் கூட!

வலைப்பதிவின் முதல் பதிவை பாலுமகேந்திரா பேசுகிறேன் என்றே ஆரம்பித்திருக்கிறார்.(கேட்க காத்திருக்கிறோம் சார்)

அந்த பதிவில் வெளிப்படும் தெனி கவனிக்கத்தக்கது.எத்தனை பெரிய மேதை அவர்.பாலுமகேந்திரா ஸ்கூல் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் தனது கலையால் கவரப்பட்ட மாணவர் படையை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.திரையில் காமிராவின் நுணுக்கங்களை பார்த்து ரசிகர்கள் கைத்தட்ட வைத்தவர் அல்லவா அவர்!

அவரிடம் சினிமா பற்றி சொல்ல கடலளவு இருக்கிறது.ஆனால் அவரோ எனது சுயசரிதையை பதிவு செய்ய வேண்டும் என மாணவர்களும் நலம் விரும்பிகளும் தன்னிடம் கேட்டு கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி விட்டு சுயசரிதை எழுதும் அளவுக்கு தான் ஒன்று சாதனையாளன் அல்ல சாமான்யான் என்கிறார்.

அது மட்டும் அல்ல நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை என்கிறார்.அந்த சேற்றில் பூத்த செந்தாமரைகளாக தனது மூடுபனியையும் அழியாத கோலங்களும் வீடு மற்றும் சந்தியாராகம் முன்றாம் பிறை போன்றவை மலர்ந்தன‌ என்கிறார்.

தனது வாழ்க்கை சொல்லிகொள்ளும் படியானதோ எழுதி கொள்ளும் படியானதோ அல்ல என்பவர் இருப்பினும் எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய அத்தியாயங்களை குறிப்பாக சினிமாவுக்கும் தனக்குமான உறவை வலைப்பதிவில் பதிவு செய்ய இருப்பதாக கூறுகிறார்.

பாலுமகேந்திராவின் கலையில் இருக்கும் உண்மையையும் நேர்மையையும் பாசாங்கற்ற தன்மையையும் இந்த அறிமுக உரையிலும் காணலாம்.அவரது கலையை கண்டு வியப்பது போலவே இந்த அறிமுகத்தையும் கண்டு வியக்கலாம்.

அறிமுகத்தில் குறிப்பிட்டது போலவே சினிமாவும் நானும் என்ற தலைப்பில் சினிமா மீது தனது காதல் ஏற்பட்ட விதத்தை விவரித்திருக்கிறார்.

13 வயதில் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதையும் ஒரு முரை பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் சினிமா மேதை டேவிட் லீன் படப்பிடிப்பை பார்த்து பிரம்மித்து போன அனுபவத்தையும் அதே சிறுவயது பரவசத்தோடு விவரித்துள்ளார்.

அந்த படபிடிப்பின் போது டேவிட் லின் ரெயின் என்று கத்தியதும் மழை பெய்ததை பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்தவர் பெரியவனானதும் நான் சினிமா டைரக்டராக தான் வருவேன் ,நான் ரெயின் என்றால் மழை பெய்யும் என்று முடித்திருக்கிறார்.

பாலு மகேந்திரா சார் தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.இல்லை தொடர்ந்து கற்றுகொள்ள காத்திருக்கிறோம்.எழுதுங்கள் சார்.

————-
பாலுமாகேந்திராவின் வலைப்பதிவு முகவரி;http://filmmakerbalumahendra.blogspot.in/

குறிப்பு;பாலுமகேந்திராவின் இந்த வலைப்பதிவை சுட்டிக்காட்டி உடனடியாக படிக்க சொன்ன எனது நண்பனும் சக பத்திரிகையாளனுமான பரத்திற்கு எனது நன்றிகள்.

வலைப்பதிவில் பாலுமகேந்திரா சினிமா மீது தனக்கு காதல் ஏற்பட்ட அனுபவத்தை ஒரு முறை நிகழ்ச்சி ஒன்று நேரில் விவரிக்க கேட்டு ரசித்திருக்கிறேன்.நானும் ரெயின் என்று சொன்னால் மழை வரும் என்று அவர் சொன்னதை செய்தியாக பரவசமாக பதிவும் செய்திருக்கிறேன்.

அனுபுடன் சிம்மன்

வலைப்பதிவு வாசகர்கள் கொஞ்சம் எழுந்து நின்று கைதட்டி வரவேற்கலாம்.இது வரை காமிரா மூலம் பேசிய பாலுமகேந்திரா வலைப்பதிவு உலகிறகு வந்திருக்கிறார்.திரைப்பட ரசிகர்களுக்கு இதை விட நல்ல செய்தி இருக்க முடியாது.

எழுதினாலும் பேசினாலும் சினிமா தான் மூச்சு என இருப்பவர் இப்போது வலைப்பதிவு மூலம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறார்.

பாலு ம‌கேந்திராவின் வலைப்பதிவு தலைப்பு என்ன தெரியுமா?மூன்றாம் பிறை!(முகவரி வேறு).மூன்றாம் பிறையை கிட்டத்தட்ட பாலுமகேந்திராவிற்கு காப்புரிமை கொடுத்து விடலாம் தான்.அது அவரது சினிமா கலையின் அடையளாமாகவே மாறிவிட்டது.

இந்த தலைப்பில் அவரது வலைப்பதிவை படிப்பது பொருத்தமானது மட்டும் அல்ல;பரவசமானதும் கூட!

வலைப்பதிவின் முதல் பதிவை பாலுமகேந்திரா பேசுகிறேன் என்றே ஆரம்பித்திருக்கிறார்.(கேட்க காத்திருக்கிறோம் சார்)

அந்த பதிவில் வெளிப்படும் தெனி கவனிக்கத்தக்கது.எத்தனை பெரிய மேதை அவர்.பாலுமகேந்திரா ஸ்கூல் என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் தனது கலையால் கவரப்பட்ட மாணவர் படையை அவர் உருவாக்கி வைத்திருக்கிறார்.திரையில் காமிராவின் நுணுக்கங்களை பார்த்து ரசிகர்கள் கைத்தட்ட வைத்தவர் அல்லவா அவர்!

அவரிடம் சினிமா பற்றி சொல்ல கடலளவு இருக்கிறது.ஆனால் அவரோ எனது சுயசரிதையை பதிவு செய்ய வேண்டும் என மாணவர்களும் நலம் விரும்பிகளும் தன்னிடம் கேட்டு கொண்டிருப்பதை சுட்டிக்காட்டி விட்டு சுயசரிதை எழுதும் அளவுக்கு தான் ஒன்று சாதனையாளன் அல்ல சாமான்யான் என்கிறார்.

அது மட்டும் அல்ல நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை என்கிறார்.அந்த சேற்றில் பூத்த செந்தாமரைகளாக தனது மூடுபனியையும் அழியாத கோலங்களும் வீடு மற்றும் சந்தியாராகம் முன்றாம் பிறை போன்றவை மலர்ந்தன‌ என்கிறார்.

தனது வாழ்க்கை சொல்லிகொள்ளும் படியானதோ எழுதி கொள்ளும் படியானதோ அல்ல என்பவர் இருப்பினும் எழுத்தில் பதிவு செய்ய வேண்டிய அத்தியாயங்களை குறிப்பாக சினிமாவுக்கும் தனக்குமான உறவை வலைப்பதிவில் பதிவு செய்ய இருப்பதாக கூறுகிறார்.

பாலுமகேந்திராவின் கலையில் இருக்கும் உண்மையையும் நேர்மையையும் பாசாங்கற்ற தன்மையையும் இந்த அறிமுக உரையிலும் காணலாம்.அவரது கலையை கண்டு வியப்பது போலவே இந்த அறிமுகத்தையும் கண்டு வியக்கலாம்.

அறிமுகத்தில் குறிப்பிட்டது போலவே சினிமாவும் நானும் என்ற தலைப்பில் சினிமா மீது தனது காதல் ஏற்பட்ட விதத்தை விவரித்திருக்கிறார்.

13 வயதில் படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டதையும் ஒரு முரை பள்ளி சுற்றுலா சென்ற இடத்தில் சினிமா மேதை டேவிட் லீன் படப்பிடிப்பை பார்த்து பிரம்மித்து போன அனுபவத்தையும் அதே சிறுவயது பரவசத்தோடு விவரித்துள்ளார்.

அந்த படபிடிப்பின் போது டேவிட் லின் ரெயின் என்று கத்தியதும் மழை பெய்ததை பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்தவர் பெரியவனானதும் நான் சினிமா டைரக்டராக தான் வருவேன் ,நான் ரெயின் என்றால் மழை பெய்யும் என்று முடித்திருக்கிறார்.

பாலு மகேந்திரா சார் தொடர்ந்து படிக்க காத்திருக்கிறோம்.இல்லை தொடர்ந்து கற்றுகொள்ள காத்திருக்கிறோம்.எழுதுங்கள் சார்.

————-
பாலுமாகேந்திராவின் வலைப்பதிவு முகவரி;http://filmmakerbalumahendra.blogspot.in/

குறிப்பு;பாலுமகேந்திராவின் இந்த வலைப்பதிவை சுட்டிக்காட்டி உடனடியாக படிக்க சொன்ன எனது நண்பனும் சக பத்திரிகையாளனுமான பரத்திற்கு எனது நன்றிகள்.

வலைப்பதிவில் பாலுமகேந்திரா சினிமா மீது தனக்கு காதல் ஏற்பட்ட அனுபவத்தை ஒரு முறை நிகழ்ச்சி ஒன்று நேரில் விவரிக்க கேட்டு ரசித்திருக்கிறேன்.நானும் ரெயின் என்று சொன்னால் மழை வரும் என்று அவர் சொன்னதை செய்தியாக பரவசமாக பதிவும் செய்திருக்கிறேன்.

அனுபுடன் சிம்மன்

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பாலுமகேந்திராவின் வலைப்பதிவு.

  1. மிக்க நன்றி. நிச்சயம் படிக்க வேண்டியது.

    Reply
    1. cybersimman

      நன்றி.அவசியம் படியுங்கள்.படைப்பாளிகளின் அனுபங்கள் வலைப்பதிவு வாயிலாக பதிவு செய்யப்படுவது மிகவும் அவசியம்.அதை ஊக்குவிப்பது நம‌து கடமை.

      அன்புடன் சிம்மன்

      Reply
  2. SENGOTTUVEL K

Leave a Comment

Your email address will not be published.