ஸ்மார்ட் பிரெஷ் , ஸ்மார்ட் பேக் , ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ் !

01-baiduசீனா ஸ்மார்ட்போன்களின் படையெடுப்பு ஒருபுறம் இருக்க, சீன இணைய நிறுவனமான பெய்டு ( Baidu) தனது புதிய அறிமுகங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. பெய்டு சீனாவின் தனிகாட்டு ராஜா தேடியந்திரம். உலகம் முழுவதும் கூகிள் நம்பர் ஒன் தேடியந்திரமாக விளங்கினாலும் சீனாவில் கதை வேறு. அங்கு பெய்டு தான் நம்பர் ஒன். இப்போது பெய்டு சர்வதேச சந்தையையும் குறி வைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் பெய்டு பிரேசிலில் அந்நாட்டுக்கான உள்ளூர் தேடியந்திரத்தை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் பெய்டு சினாவில் தனது வருடாந்திர கண்காட்சியில் சமீபத்தில் ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ்களை ( சீனர்களின் ஸ்பூன்) அறிமுகம் செய்துள்ளது.
இந்த சாப்ஸ்டிக் உணவின் தன்மை மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவை கண்டறிந்து சொலலக்கூடியது என பெய்டு தெரிவித்துள்ளது. எண்ணெயின் மணத்தை வைத்து , உணவு கெட்டுப்போயிருக்கிறதா என்பதையும் இந்த சாப்ஸ்டிக் உணர்த்திவிடும். இந்த தகவலை ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக தெரிவிக்கும். சோடியம் அனலைசர் கொண்ட இந்த சாதனத்தை வை-பீ அல்லது ப்ளுடூத் மூலம் கம்ப்யூட்டருடனும் இணைக்கலாம்.
சீனர்களின் பாரம்பரியங்களில் ஒன்றான சாப்ஸ்டிக்சை நவீன தொழில்நுட்பத்தின் இணைத்திருப்பதாக பெய்டு தெரிவித்துள்ளது. இந்த சாப்ஸ்டிக் சாப்பிட உதவுவதோடு சாப்பாடு கெட்டுப்போகாமல் இருக்கிறதா என்றும் சொல்லிவிடும் திறன் படைத்த்து என்கிறது பெய்டு.
இது தொடர்பான வீடியோவை பார்க்க :http://www.iqiyi.com/w_19rso054bp.html#vfrm=2-3-0-1
அதே போல கூகிள் கிளாசுக்கு போட்டியாக , ’பெய்டு ஐ’ எனும் அணி சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் காமிரா உண்டே தவிர டிஸ்பிளேக்கான திரை இல்லை.
எனினும் இந்த இரண்டும் எப்போது சந்தைக்கு வரக்கூடும் என்பது பற்றி பெய்டு எதுவும் தெரிவிக்கவில்லை. இப்போதைக்கு இவை மாதிரி தயாரிப்பு அளவிலேயே இருக்கின்றன.

———–

செல்பீ போனும்,செல்பீ பிரெஷும்

01brushஎதிர்பார்த்தபடியே மைக்ரோசாப்ட் லூமியா 830 உள்ளிட்ட புதிய ஸ்மார்ட்போன்களை பெர்லின் தொழிநுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியாவின் செல்போன் பிரிவை கைகப்படுத்திக்கொண்டுள்ள மைக்ரோசாபட்டால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரகங்களில் லூமியா 735 சுயபடம் என்று சொல்லப்படும் செல்பீகளுக்கு ஏற்றது என வர்ணிக்கப்படுகிறது. அதற்கேற்ற 5 மெகா பிக்சல் காமிரா மற்றும் வைடு ஆங்கில் தன்மை கொண்டுள்ளது. இந்த போனில் நவீன் பிளாஷ் உத்தியும் இருப்பதை பிபிசி இணையதளம் அடையாளம் காட்டியுள்ளது. அதாவது இந்த போனில் குறைந்த ஒளியில் படம் எடுக்கும் போது,பிளாஷ் ஒளியுடன் ஒரு படம், அடுத்த்தாக பிளாஷ் இல்லாமல் ஒரு படம் என இரண்டு படங்கள் எடுக்கப்பட்டு பின்னர் இரண்டும் தானாக இணைக்கப்பட்டு சிறந்த தோற்றம் கொண்ட படம் உருவாக்கப்படும். லூமியா டெனிம் எனும் சாப்ட்வேர் இதை சாத்தியமாக்குகிறது. மற்ற லூமியா போன்களிலும் இதே அப்டேட் செய்யப்படலாம்.
லூமியா 830 போன் 3 ஜி மற்றும் 4 ஜி வசதி கொண்டது. இந்தியாவில் அடுத்த மாதம் இது அறிமுகமாகலாம் என்றும் விலை 26,000 வாக்கில் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
செல்பீ மோகத்தின் இன்னொரு வெளிப்பாடாக செல்பீ பிரெஷ் அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ளது. அதென்ன செல்பீ பிரெஷ்? சுயபடம் எடுத்துக்கொள்வதற்கு முன் தலைமுடி கலைந்திருந்தால் நன்றாகவா இருக்கும்? ஆனால் தலையை வார பிரெஷை தேடிக்கொண்டிருந்தால் கச்சிதமான சுயபட தருணம் மிஸ் ஆகி விடலாம் அல்லவா? அது தான் , செல்பீ பிரெஷ் வந்திருக்கிறது. இதில் தலையை வாரிக்கொண்டு அப்படிசே செல்பீயும் எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இந்த பிரெஷ் , ஐபோனுக்கான கேஸ் போன்றது. அதில் பிரெஷும் இணைந்திருக்கிறது. முன்பக்கத்தில் போனும் இருக்கிறது.எப்படி?
செல்பி பிரஷ் இணையதளம்: http://www.selfiebrush.com/


சாம்சங் முந்தியது!

பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் சாம்சங் மற்றும் மோட்டரோலா,சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தன. மோட்டரோலா, மோட்டோ ஜி ,மோட்டோ எக்ஸ் போன்கள் மற்றும் மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்த்து. வட்ட வடிவிலான மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் பரவலாக விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக் எல்ஜி நிறுவனமும் வட்ட வடிவில் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது. தைவான் நிறுவனமான ஆசசும் (Asus ) தனது ஜென் வாட்ச் சாதனத்தை இங்கு அறிமுகம் செய்தது. சோனி புதிய எக்ஸ்பிரியா ஸ்மார்ட்போன் , ஸ்மார்ட் வாட்ச் 3 மற்றும் ஸ்மார்ட் பேண்ட் பிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது.
சாம்சங், கலெக்ஸி நோட்4 ,காலெக்ஸி எட்ஜ் மற்றும் கியர் எஸ் சாதன்ங்களை அறிமுகம் செய்தது. காலெக்ஸி எட்ஜ் ஓரத்திலும் பார்க்க் கூடிய புதுமையான டிஸ்பிலே கொண்டிருக்கிறது. கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் ரகத்தை சேர்ந்தது. சாம்சங் கியர் வீஆர் எனும் மெய்நிகர் சாதனத்தையும் (வர்ச்சுவ்சல் ரியாலிட்டி) அறிமுகம் செய்தது. வர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவில் செயல்பட்டு வரும் ஆக்குலஸ் ரிப்ட் டவலப்பர் கிட்டுடன் இணைந்து இதனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. பல நிறுவங்கள் இந்த பிரிவில் திட்டங்களை வைத்திருக்கும் நிலையில் சாம்சங் முந்திக்கொண்டு முதல் நுகர்வோர் மெய்நிகர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆக்குலஸ் ரிப்டின் சாதனங்களே கூட அடுத்த ஆண்டிலேயே சந்தைக்கு வர உள்ளது.


ஸ்மார்ட் பேக் -ஸ்மார்ட் சார்ஜர்

ஸ்மார்ட்போன்களிலும் டேப்லெட்களிலும் புதுப்புது மாதிரிகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. பலரும் லேப்டாப் உள்ளிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்ப சாதன்ங்களை வைத்திருக்கின்றனர். அப்படி இருக்க தொழில்நுட்ப சாதனங்களுக்கான சார்ஜர்கள் ஈடு கொடுக்கவிட்டால் எப்படி? அது தான் , அமெரிக்காவில் இருந்து போர்ஸ் ப்ரோ (Phorce Pro) ஸ்மார்ட் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேக் , தொழில்நுட்ப சாதன்ங்களை சார்ஜ் செய்வதற்கான பேட்டரி கொண்டது. லேப்டாப் சார்ஜர், கேபில் மற்றும் கனெக்டர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாமாம். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள செயலி, எந்த அளவு சார்ஜ் மிச்சமுள்ளது என்பதையும் தெரிவிக்க கூடியது. ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதன்ங்களின் சார்ஜ் நிலையையும் அறிந்து கொள்ளலாம். இந்த பேகை எங்காவது மறந்து வைத்தாலும் இந்த செயலியே அது குறித்த எச்சரிக்கை செய்தியையும் அனுப்பி வைக்கும். இந்த மாத இறுதியில் சந்தைக்கு வருகிறது. இந்த பேக்கை தேவைப்பட்டால் ப்ரீப்கேசாகவும் மாற்றிக்கொள்ளலாமாம். இணையதளம்: http://phorce.com/
இதே போலவே சாம்சங் நிறுவனமும் ஒரே நேரத்தில் மூன்று சாதன்ங்களை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் கேபிளை அறிமுகம் செய்துள்ளது.

கீபோர்ட் புதிது
01logitech-bluetooth-multi-device-keyboard-k480
லாஜிடெக் நிறுவனம் புதிய கீபோர்டை பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்த்து. ஸ்மார்ட்போன்களுக்கும், ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் கீபோர்டா என நினைக்க வேண்டாம். இந்த கீபோர்ட் விஷேசமானது. இது பல சாதன்ங்களில் இயங்க கூடியது. அதாவது மல்டி டிவைஸ் (Multi-Device Keyboard K480 ) தன்மை கொண்டது. ப்ளுடூத் மூலம் இயங்கும் இந்த கீபோர்டை கொண்டு கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் என மூன்று சாதங்களிலும் டைப் செய்யலாம். அதிலும் ஒரே நேரத்தில். கீபோர்டில் உள்ள ஈஸி ஸ்விட்சை மாற்றினால் கீபோர்ட் இயங்கும் சாதனமும் மாறிவிடுகிறது. கீபோர்ட் கொண்டு ஸ்மார்ட் போனில் டைப் செய்வது தேவையானது தான் இல்லையா? கீபோட்ர்டுக்கான வீடியோ விளக்கம் : http://www.youtube.com/watch?v=MceLc7-w1lQ

அந்த நான்கு செயலிகள்

சில மாதங்களுக்கு முன்னர் நீல்சன் நிறுவனம் நடத்திய ஆயவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் சராசரியாக மாதாந்தோறும் 22 முதல் 28 செயலிகளை (ஆப்ஸ்) பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தது. இப்போது காம்ஸ்கோர் நிறுவன தகவலின் படி வரைபட விளக்க இணையதளமான ஸ்டேடிஸ்டா (Statista ) வெளியிட்டுள்ள தகவல் ஸ்மார்ட்போன் பயனாளிகளில் 75 சதவீத நேரம் தங்களுடைய நான்கு அபிமான செயலிகளை மட்டுமே பயன்படுத்துதாக தெரிவிக்கிறது. அதிலும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி 42 சதவீத நேரத்தை எடுத்துக்கொள்கிறதான். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் நான்கு செயலிகளை வைத்து ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்!.

———

தமிழ் இந்துவுக்காக எழுதியது; நன்றி தமிழ் இந்து.

01-baiduசீனா ஸ்மார்ட்போன்களின் படையெடுப்பு ஒருபுறம் இருக்க, சீன இணைய நிறுவனமான பெய்டு ( Baidu) தனது புதிய அறிமுகங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. பெய்டு சீனாவின் தனிகாட்டு ராஜா தேடியந்திரம். உலகம் முழுவதும் கூகிள் நம்பர் ஒன் தேடியந்திரமாக விளங்கினாலும் சீனாவில் கதை வேறு. அங்கு பெய்டு தான் நம்பர் ஒன். இப்போது பெய்டு சர்வதேச சந்தையையும் குறி வைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் பெய்டு பிரேசிலில் அந்நாட்டுக்கான உள்ளூர் தேடியந்திரத்தை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் பெய்டு சினாவில் தனது வருடாந்திர கண்காட்சியில் சமீபத்தில் ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ்களை ( சீனர்களின் ஸ்பூன்) அறிமுகம் செய்துள்ளது.
இந்த சாப்ஸ்டிக் உணவின் தன்மை மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவை கண்டறிந்து சொலலக்கூடியது என பெய்டு தெரிவித்துள்ளது. எண்ணெயின் மணத்தை வைத்து , உணவு கெட்டுப்போயிருக்கிறதா என்பதையும் இந்த சாப்ஸ்டிக் உணர்த்திவிடும். இந்த தகவலை ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக தெரிவிக்கும். சோடியம் அனலைசர் கொண்ட இந்த சாதனத்தை வை-பீ அல்லது ப்ளுடூத் மூலம் கம்ப்யூட்டருடனும் இணைக்கலாம்.
சீனர்களின் பாரம்பரியங்களில் ஒன்றான சாப்ஸ்டிக்சை நவீன தொழில்நுட்பத்தின் இணைத்திருப்பதாக பெய்டு தெரிவித்துள்ளது. இந்த சாப்ஸ்டிக் சாப்பிட உதவுவதோடு சாப்பாடு கெட்டுப்போகாமல் இருக்கிறதா என்றும் சொல்லிவிடும் திறன் படைத்த்து என்கிறது பெய்டு.
இது தொடர்பான வீடியோவை பார்க்க :http://www.iqiyi.com/w_19rso054bp.html#vfrm=2-3-0-1
அதே போல கூகிள் கிளாசுக்கு போட்டியாக , ’பெய்டு ஐ’ எனும் அணி சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் காமிரா உண்டே தவிர டிஸ்பிளேக்கான திரை இல்லை.
எனினும் இந்த இரண்டும் எப்போது சந்தைக்கு வரக்கூடும் என்பது பற்றி பெய்டு எதுவும் தெரிவிக்கவில்லை. இப்போதைக்கு இவை மாதிரி தயாரிப்பு அளவிலேயே இருக்கின்றன.

———–

செல்பீ போனும்,செல்பீ பிரெஷும்

01brushஎதிர்பார்த்தபடியே மைக்ரோசாப்ட் லூமியா 830 உள்ளிட்ட புதிய ஸ்மார்ட்போன்களை பெர்லின் தொழிநுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியாவின் செல்போன் பிரிவை கைகப்படுத்திக்கொண்டுள்ள மைக்ரோசாபட்டால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரகங்களில் லூமியா 735 சுயபடம் என்று சொல்லப்படும் செல்பீகளுக்கு ஏற்றது என வர்ணிக்கப்படுகிறது. அதற்கேற்ற 5 மெகா பிக்சல் காமிரா மற்றும் வைடு ஆங்கில் தன்மை கொண்டுள்ளது. இந்த போனில் நவீன் பிளாஷ் உத்தியும் இருப்பதை பிபிசி இணையதளம் அடையாளம் காட்டியுள்ளது. அதாவது இந்த போனில் குறைந்த ஒளியில் படம் எடுக்கும் போது,பிளாஷ் ஒளியுடன் ஒரு படம், அடுத்த்தாக பிளாஷ் இல்லாமல் ஒரு படம் என இரண்டு படங்கள் எடுக்கப்பட்டு பின்னர் இரண்டும் தானாக இணைக்கப்பட்டு சிறந்த தோற்றம் கொண்ட படம் உருவாக்கப்படும். லூமியா டெனிம் எனும் சாப்ட்வேர் இதை சாத்தியமாக்குகிறது. மற்ற லூமியா போன்களிலும் இதே அப்டேட் செய்யப்படலாம்.
லூமியா 830 போன் 3 ஜி மற்றும் 4 ஜி வசதி கொண்டது. இந்தியாவில் அடுத்த மாதம் இது அறிமுகமாகலாம் என்றும் விலை 26,000 வாக்கில் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
செல்பீ மோகத்தின் இன்னொரு வெளிப்பாடாக செல்பீ பிரெஷ் அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ளது. அதென்ன செல்பீ பிரெஷ்? சுயபடம் எடுத்துக்கொள்வதற்கு முன் தலைமுடி கலைந்திருந்தால் நன்றாகவா இருக்கும்? ஆனால் தலையை வார பிரெஷை தேடிக்கொண்டிருந்தால் கச்சிதமான சுயபட தருணம் மிஸ் ஆகி விடலாம் அல்லவா? அது தான் , செல்பீ பிரெஷ் வந்திருக்கிறது. இதில் தலையை வாரிக்கொண்டு அப்படிசே செல்பீயும் எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இந்த பிரெஷ் , ஐபோனுக்கான கேஸ் போன்றது. அதில் பிரெஷும் இணைந்திருக்கிறது. முன்பக்கத்தில் போனும் இருக்கிறது.எப்படி?
செல்பி பிரஷ் இணையதளம்: http://www.selfiebrush.com/


சாம்சங் முந்தியது!

பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் சாம்சங் மற்றும் மோட்டரோலா,சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தன. மோட்டரோலா, மோட்டோ ஜி ,மோட்டோ எக்ஸ் போன்கள் மற்றும் மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்த்து. வட்ட வடிவிலான மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் பரவலாக விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக் எல்ஜி நிறுவனமும் வட்ட வடிவில் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது. தைவான் நிறுவனமான ஆசசும் (Asus ) தனது ஜென் வாட்ச் சாதனத்தை இங்கு அறிமுகம் செய்தது. சோனி புதிய எக்ஸ்பிரியா ஸ்மார்ட்போன் , ஸ்மார்ட் வாட்ச் 3 மற்றும் ஸ்மார்ட் பேண்ட் பிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது.
சாம்சங், கலெக்ஸி நோட்4 ,காலெக்ஸி எட்ஜ் மற்றும் கியர் எஸ் சாதன்ங்களை அறிமுகம் செய்தது. காலெக்ஸி எட்ஜ் ஓரத்திலும் பார்க்க் கூடிய புதுமையான டிஸ்பிலே கொண்டிருக்கிறது. கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் ரகத்தை சேர்ந்தது. சாம்சங் கியர் வீஆர் எனும் மெய்நிகர் சாதனத்தையும் (வர்ச்சுவ்சல் ரியாலிட்டி) அறிமுகம் செய்தது. வர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவில் செயல்பட்டு வரும் ஆக்குலஸ் ரிப்ட் டவலப்பர் கிட்டுடன் இணைந்து இதனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. பல நிறுவங்கள் இந்த பிரிவில் திட்டங்களை வைத்திருக்கும் நிலையில் சாம்சங் முந்திக்கொண்டு முதல் நுகர்வோர் மெய்நிகர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆக்குலஸ் ரிப்டின் சாதனங்களே கூட அடுத்த ஆண்டிலேயே சந்தைக்கு வர உள்ளது.


ஸ்மார்ட் பேக் -ஸ்மார்ட் சார்ஜர்

ஸ்மார்ட்போன்களிலும் டேப்லெட்களிலும் புதுப்புது மாதிரிகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. பலரும் லேப்டாப் உள்ளிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்ப சாதன்ங்களை வைத்திருக்கின்றனர். அப்படி இருக்க தொழில்நுட்ப சாதனங்களுக்கான சார்ஜர்கள் ஈடு கொடுக்கவிட்டால் எப்படி? அது தான் , அமெரிக்காவில் இருந்து போர்ஸ் ப்ரோ (Phorce Pro) ஸ்மார்ட் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேக் , தொழில்நுட்ப சாதன்ங்களை சார்ஜ் செய்வதற்கான பேட்டரி கொண்டது. லேப்டாப் சார்ஜர், கேபில் மற்றும் கனெக்டர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாமாம். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள செயலி, எந்த அளவு சார்ஜ் மிச்சமுள்ளது என்பதையும் தெரிவிக்க கூடியது. ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதன்ங்களின் சார்ஜ் நிலையையும் அறிந்து கொள்ளலாம். இந்த பேகை எங்காவது மறந்து வைத்தாலும் இந்த செயலியே அது குறித்த எச்சரிக்கை செய்தியையும் அனுப்பி வைக்கும். இந்த மாத இறுதியில் சந்தைக்கு வருகிறது. இந்த பேக்கை தேவைப்பட்டால் ப்ரீப்கேசாகவும் மாற்றிக்கொள்ளலாமாம். இணையதளம்: http://phorce.com/
இதே போலவே சாம்சங் நிறுவனமும் ஒரே நேரத்தில் மூன்று சாதன்ங்களை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் கேபிளை அறிமுகம் செய்துள்ளது.

கீபோர்ட் புதிது
01logitech-bluetooth-multi-device-keyboard-k480
லாஜிடெக் நிறுவனம் புதிய கீபோர்டை பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்த்து. ஸ்மார்ட்போன்களுக்கும், ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் கீபோர்டா என நினைக்க வேண்டாம். இந்த கீபோர்ட் விஷேசமானது. இது பல சாதன்ங்களில் இயங்க கூடியது. அதாவது மல்டி டிவைஸ் (Multi-Device Keyboard K480 ) தன்மை கொண்டது. ப்ளுடூத் மூலம் இயங்கும் இந்த கீபோர்டை கொண்டு கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் என மூன்று சாதங்களிலும் டைப் செய்யலாம். அதிலும் ஒரே நேரத்தில். கீபோர்டில் உள்ள ஈஸி ஸ்விட்சை மாற்றினால் கீபோர்ட் இயங்கும் சாதனமும் மாறிவிடுகிறது. கீபோர்ட் கொண்டு ஸ்மார்ட் போனில் டைப் செய்வது தேவையானது தான் இல்லையா? கீபோட்ர்டுக்கான வீடியோ விளக்கம் : http://www.youtube.com/watch?v=MceLc7-w1lQ

அந்த நான்கு செயலிகள்

சில மாதங்களுக்கு முன்னர் நீல்சன் நிறுவனம் நடத்திய ஆயவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் சராசரியாக மாதாந்தோறும் 22 முதல் 28 செயலிகளை (ஆப்ஸ்) பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தது. இப்போது காம்ஸ்கோர் நிறுவன தகவலின் படி வரைபட விளக்க இணையதளமான ஸ்டேடிஸ்டா (Statista ) வெளியிட்டுள்ள தகவல் ஸ்மார்ட்போன் பயனாளிகளில் 75 சதவீத நேரம் தங்களுடைய நான்கு அபிமான செயலிகளை மட்டுமே பயன்படுத்துதாக தெரிவிக்கிறது. அதிலும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி 42 சதவீத நேரத்தை எடுத்துக்கொள்கிறதான். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் நான்கு செயலிகளை வைத்து ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்!.

———

தமிழ் இந்துவுக்காக எழுதியது; நன்றி தமிழ் இந்து.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

5 Comments on “ஸ்மார்ட் பிரெஷ் , ஸ்மார்ட் பேக் , ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ் !

  1. வணக்கம் ஐயா … அனைத்து தமிழ் தினசரி நாளிதழ்களின் தலையங்கம் மற்றும் கட்டுரைகள் மட்டும் காணும் (application) செயலிகள் உள்ளதா?

    Reply
    1. cybersimman

      நான் அறிந்தவரை அப்படி ஒரு செயலி இல்லை. இருந்தும் தேடிப்பார்த்து இருந்தால் தகவல் சொல்கிறேன். இப்போதைக்கு தனித்தனி நாளிதழ்களுக்கான செயலிகளே உள்ளன.
      உங்கள் தேவை அருமையான யோசனை. இது போன்ற செயலி அருமையாக இருக்கும்.

      நாளிதழ்களுக்கான செயலி : http://www.9apps.com/android-apps/Tamil-Paper/

      அன்புடன் சிம்மன்

      Reply
      1. நன்றி ., தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்…..

        Reply
        1. cybersimman

          thanks. keep reading. thanks

          simman

          Reply
          1. மன்னிக்கவும்… மிரள வைக்கும் விஞ்ஞான… Stephen hawkins

Leave a Comment to cybersimman Cancel Reply

Your email address will not be published.