ஸ்மார்ட்கீ வந்தாச்சு

ஆண்ட்ராய்டு ஆதிக்கம்

ஸ்மார்ட்போன் சந்தையில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதிக்கம் தொடர்கிறது. சமீபத்தில் ஆய்வு அமைப்பான ஸ்ட்ராடஜி அனல்டிக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி, 2014 ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உற்பத்தியான ஸ்மார்ட்போன்களில் 84 சதவீதம் ஆண்ட்ராய்ட் அடிப்படையிலானது. ஆனால் முந்தைய காலாண்டை விட இது நூலிழை அதாவது 1 சதவீதம் குறைவு என்றாலும் ஆண்ட்ரய்டு முன்னிலை இடத்தில் நீடிக்கிறது.
இரண்டாவது இடத்தில் ஆப்பிளின் ஐஓஎஸ் (12 சதவீதம் ) இருக்கிறது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன்கள் 3 சதவீத்துடன் அடுத்த இடத்தில் உள்ளது. பிளாக்பெரிக்கு ஒரு சதவீதம். ஆண்ட்ராய்டு போன்கள் தொடர்பான புள்ளிவிவரங்களில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் அதில் சாம்சங் ஸ்மார்ட்போனின் பங்கு 35 சதவீத்தில் இருந்து 25 சதவீதமாக குறைந்திருப்பது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் போட்டியே இதற்கு காரணம்.
ஆனால் ஆண்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்தினாலும் வளர்ச்சி கோட்டை பொருத்தவரை அது உச்சத்தை தொட்டுவிட்டதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். எனவே சந்தை பங்கை இதற்கு மேல் அதிகரிக்க முடியாது, தக்க வைத்துக்கொண்டாலே பெரிய விஷயமாக இருக்கும் என்கின்றனர்.
இதே போல , ஸ்மார்ட்போன் சந்தையில் லெனோவோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சீனாவிடன் லெனோவோ , மோட்டாரோலா மொபிலிட்டையை வாங்கியதை அடுத்து இந்த கூட்டணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவின் ஜியோமி மூன்றாவது இடத்துக்கு வந்த நிலையில் இந்த கூட்டு அந்நிறுவனத்தை 4 வது இடத்துக்கு தள்ளியுள்ளது. ஐ.டீசி (IDC) ஆய்வு தெரிப்விக்கும் தகவல் இது.
——————

மைக்ரோசாப்ட் லூமியா முதல் பார்வை

லூமியா போன்களில் நோக்கியா பெயருக்கு பதிலாக மைக்ரோசாப்ட் பெயரே முன்னிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. சரி , மைக்ரோசாப்ட் பெயரில் வெளியாகும் லூமியா போன் எப்படி இருக்கும் என அறிவதில் ஆர்வம் இருக்கிறதா? சீனாவின் வெய்போ இணையதளம் இதற்கான பதிலை அளித்துள்ளது. இந்த தளத்தில் மைக்ரோசாப்ட் லூமியாவின் போன் எனும் தகவலுடன் புதிய போனின் புகைப்படம் கசிந்துள்ளது. சீன அரசிடம் சான்றிதழ் பெற்ற RM-1090 போன்களில் இவை இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லூமியா 530 போலவே காட்சி அளிக்கும் இந்த போனின் மேல்பகுதியில் நோக்கியா லோலோவுக்கு பதில் மைக்ரோசாப்ட் பெயர் இடம் பெற்றுள்ளது. பின் பக்கத்திலும் மைக்ரோசாப்டின் பெயர் தான்.
9.32 மீமீ அகலம் , இரட்டை சிம் வசதி,1,905mAh பேட்டரி, 3 ஜி வசதி ஆகியவை இருப்பதாக சொல்லப்படுகிறது.
வரட்டும் பார்க்கலாம்.

——-

அமேசானின் அதிரடி

மின்வணிக ஜாம்பவானான அமேசான் அமெரிக்க சந்தையில் அமேசான் பயர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததும் அது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததும் பழைய செய்தி. 83 மில்லியன் டாலர் மதிப்பிலான போன்கள் விற்காமல் தேங்கி இருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. இந்த நிலையில் அமேசான், ஸ்மார்ட்போனை இத்தோடு விட்டுவிடும் என்று யாரேனும் நினைத்தால் அது தவறாக தான் இருக்கும். ஏனெனில் அமேசான் தொடர்ந்து ஸ்மார்ட்போன் திட்டத்தில் ஈடுபட்டு எதிர்காலத்தில் அடுத்த போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக பார்டியூன் பத்திரிகை தெரிவிக்கிறது.
அமேசான் பயன் போன் விஷயத்தில் விலையில் தவறு செய்த்தாகவும் அதுவே மோசமான வரவேற்பிற்கு காரணம் என அமேசான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இபுக் ரீடர் சாதனமான கிண்டில் விஷயத்தில் இப்படி தான் ஆரம்பத்தில் நடந்தது ஆனால், தவறுகள் சர் செய்யப்பட்ட பின் கிண்டில் கலக்கவில்லையா? என அமேசான் நினைக்கிறது. ஆக, அமேசான் ஸ்மார்ட்போன் சந்தையில் வைத்த கண்ணை எடுக்காமலே இருக்கிறது.

———–

ஆண்ட்ரய்டு வியரில் பிளிப்கார்ட்

ஸ்மார்ட்போன் திரை போலவே ஸ்மார்ட்வாட்ச்க்கான திரையும் முக்கியத்துவம் பெறலாம். ஆக, எனவே நிறுவனங்கள் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான செயலிகளிலும் (ஆப்) கவனம் செலுத்தியாக வேண்டும். இதை பிளிப்கார்ட் உணர்ந்திருப்பதாக தெரிகிறது. அதன் அடையாளம் தான், ஆண்ட்ராய்டு வியருக்கான பிளிப்கார்ட்டின் செயலி.
இந்தியாவின் முன்னணி மின்வணிக தளமான பிளிப்கார்ட், ஆண்ட்ராய்ட் வியர் ஸ்டோருக்கான முதல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ 360 போன்ற பிளிப்கார்ட்டில் விற்பனையாகும் ஸ்மார்ட்வாட்சிகளில் இந்த செயலி முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ் லிஸ்ட் மற்றும் நோட்டிபிகேஷன ஆகிய வசதிகள் இந்த செயலியில் உண்டு. எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் செயலியில் உள்ள எல்லா வசதிகளும் இதிலும் இடம்பெறலாம்.
ஸ்மார்ட்வாட்சி வைத்திருப்பவர்கள் , ஆண்ட்ராய்டு சாதனத்தில் பிளிப்கார்ட் செயலியை அப்டேட் செய்தால் போதுமானதாம்.
ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் வாட்ச் பற்றிய சமீபத்திய தகவல் அதன் அறிமுகத்திற்கு இன்னமும் காத்திருக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கம் என்று எதிர்பார்கக்ப்பட்டதற்கு மாறாக 2015 வசந்தத்தில் தான் ஆப்பிள் வாட்ச் சந்தைக்கு வரலாம் என சொல்லப்படுகிறது.

————-

புதிய அறிமுகங்கள்

ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய அறிமுகங்கள் தொடர்கின்றன. தொடர இருக்கின்றன. தைவானை சேர்ந்த எச்.டி.சி ஏற்கனவே இந்த ஆண்டு புதிய அறிமுகங்களை செய்துள்ள நிலையில் மேலும் இரண்டு அறிமுகங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது. எச்டிசி டிசைர் 620 எனும் பெயரில் இரண்டு வடிவங்களில் இந்த போன் வரலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே இந்திய நிறுவனமான ஐபால் 3 புதிய ஆண்ட்ராய்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் ஆன்டி வரிசையில் அறிமுகமாகும் இந்த போன்கள் ரூ,3,499, ரூ,4,699 மற்றும் ரூ. 6499 ஆகிய விலை கொண்டிருக்கும் என நிறுவன இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் எப்போது கிடைக்கத்துவங்கும் எனும் தகவல் இல்லை. இதனிடையே கூகிள் நெக்சஸ் சாதனம் விரைவில் எனும் அறிவிப்புடன் பிளிப்கார்ட் தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ (Oppo ) நிறுவனம் தனது என்3 மற்றும் ஆர் 5 போன்களை டிசம்பர் முதல் விற்பனைக்கு கொண்டு வரலாம் என சொல்லப்படுகிறது. ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையை முக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளது. 4.85 மீமீ அகலம் கொண்ட ஒப்போ ஆர் 5 உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்று நிறுவனம் சொல்கிறது.

———–

ஸ்மார்ட்கீ வந்தாச்சு

ஸ்மார்ட்போனிலேயே பணம் செலுத்தும் வசதி வந்தாச்சு. இனி ஹோட்டல் அறைகளுக்கான சாவியாகவும் ஸ்மார்ட்போனே பயன்படலாம். அமெரிக்காவின் ஸ்டார்வுட் ஹோட்டல் குழுமம் தனது ஹோட்டல்களில் இத்தகைய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹோட்டல் அறையில் உள்ள பூட்டுகள் பளுடூத் வசதி கொண்டதாக இருக்கும். ஸ்மார்ட்போன் அல்லது ஆன்லைனில் ரூம் புக் செய்யும் போது அறை எண் போனுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆக, ஹோட்டலுக்கு வந்தால் வரவேற்பறையில் காத்திருக்காமல் நேராக ரூமுக்கு சென்று ஸ்மார்ட்போனை காட்டி கதை திறக்கச்செய்யலாம்.
மற்ற ஹோட்டல்களும் இதே போன்ற திட்டத்தை வைத்துள்ளன. இந்த வசதி எளிதானது என்றாலும் பாதுகாப்பு பற்றிய அச்சங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால் ஹோட்டல் சாவியை மறந்து வைத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது. ஸ்மார்ட்போன் போல ஸ்மார்ட்வாட்சிலும் இந்த வசதி வரலாம் என்கின்றனர். ஹோட்டல் மட்டுமா வீடுகளுக்கும் ஸ்மார்ட் கீ வரப்போகிறது. எல்லாம் தொழில்நுட்பம் செய்யும் மாயம்.

————
தமிழ் இந்துவுக்காக எழுதியது. நன்றி; தமிழ் இந்து

ஆண்ட்ராய்டு ஆதிக்கம்

ஸ்மார்ட்போன் சந்தையில் ஆண்ட்ராய்டு ஓஎஸ் ஆதிக்கம் தொடர்கிறது. சமீபத்தில் ஆய்வு அமைப்பான ஸ்ட்ராடஜி அனல்டிக்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி, 2014 ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் உற்பத்தியான ஸ்மார்ட்போன்களில் 84 சதவீதம் ஆண்ட்ராய்ட் அடிப்படையிலானது. ஆனால் முந்தைய காலாண்டை விட இது நூலிழை அதாவது 1 சதவீதம் குறைவு என்றாலும் ஆண்ட்ரய்டு முன்னிலை இடத்தில் நீடிக்கிறது.
இரண்டாவது இடத்தில் ஆப்பிளின் ஐஓஎஸ் (12 சதவீதம் ) இருக்கிறது. மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன்கள் 3 சதவீத்துடன் அடுத்த இடத்தில் உள்ளது. பிளாக்பெரிக்கு ஒரு சதவீதம். ஆண்ட்ராய்டு போன்கள் தொடர்பான புள்ளிவிவரங்களில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் அதில் சாம்சங் ஸ்மார்ட்போனின் பங்கு 35 சதவீத்தில் இருந்து 25 சதவீதமாக குறைந்திருப்பது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் போட்டியே இதற்கு காரணம்.
ஆனால் ஆண்ட்ராய்டு ஆதிக்கம் செலுத்தினாலும் வளர்ச்சி கோட்டை பொருத்தவரை அது உச்சத்தை தொட்டுவிட்டதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். எனவே சந்தை பங்கை இதற்கு மேல் அதிகரிக்க முடியாது, தக்க வைத்துக்கொண்டாலே பெரிய விஷயமாக இருக்கும் என்கின்றனர்.
இதே போல , ஸ்மார்ட்போன் சந்தையில் லெனோவோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. சீனாவிடன் லெனோவோ , மோட்டாரோலா மொபிலிட்டையை வாங்கியதை அடுத்து இந்த கூட்டணி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவின் ஜியோமி மூன்றாவது இடத்துக்கு வந்த நிலையில் இந்த கூட்டு அந்நிறுவனத்தை 4 வது இடத்துக்கு தள்ளியுள்ளது. ஐ.டீசி (IDC) ஆய்வு தெரிப்விக்கும் தகவல் இது.
——————

மைக்ரோசாப்ட் லூமியா முதல் பார்வை

லூமியா போன்களில் நோக்கியா பெயருக்கு பதிலாக மைக்ரோசாப்ட் பெயரே முன்னிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. சரி , மைக்ரோசாப்ட் பெயரில் வெளியாகும் லூமியா போன் எப்படி இருக்கும் என அறிவதில் ஆர்வம் இருக்கிறதா? சீனாவின் வெய்போ இணையதளம் இதற்கான பதிலை அளித்துள்ளது. இந்த தளத்தில் மைக்ரோசாப்ட் லூமியாவின் போன் எனும் தகவலுடன் புதிய போனின் புகைப்படம் கசிந்துள்ளது. சீன அரசிடம் சான்றிதழ் பெற்ற RM-1090 போன்களில் இவை இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லூமியா 530 போலவே காட்சி அளிக்கும் இந்த போனின் மேல்பகுதியில் நோக்கியா லோலோவுக்கு பதில் மைக்ரோசாப்ட் பெயர் இடம் பெற்றுள்ளது. பின் பக்கத்திலும் மைக்ரோசாப்டின் பெயர் தான்.
9.32 மீமீ அகலம் , இரட்டை சிம் வசதி,1,905mAh பேட்டரி, 3 ஜி வசதி ஆகியவை இருப்பதாக சொல்லப்படுகிறது.
வரட்டும் பார்க்கலாம்.

——-

அமேசானின் அதிரடி

மின்வணிக ஜாம்பவானான அமேசான் அமெரிக்க சந்தையில் அமேசான் பயர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததும் அது எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறாததும் பழைய செய்தி. 83 மில்லியன் டாலர் மதிப்பிலான போன்கள் விற்காமல் தேங்கி இருப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. இந்த நிலையில் அமேசான், ஸ்மார்ட்போனை இத்தோடு விட்டுவிடும் என்று யாரேனும் நினைத்தால் அது தவறாக தான் இருக்கும். ஏனெனில் அமேசான் தொடர்ந்து ஸ்மார்ட்போன் திட்டத்தில் ஈடுபட்டு எதிர்காலத்தில் அடுத்த போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக பார்டியூன் பத்திரிகை தெரிவிக்கிறது.
அமேசான் பயன் போன் விஷயத்தில் விலையில் தவறு செய்த்தாகவும் அதுவே மோசமான வரவேற்பிற்கு காரணம் என அமேசான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இபுக் ரீடர் சாதனமான கிண்டில் விஷயத்தில் இப்படி தான் ஆரம்பத்தில் நடந்தது ஆனால், தவறுகள் சர் செய்யப்பட்ட பின் கிண்டில் கலக்கவில்லையா? என அமேசான் நினைக்கிறது. ஆக, அமேசான் ஸ்மார்ட்போன் சந்தையில் வைத்த கண்ணை எடுக்காமலே இருக்கிறது.

———–

ஆண்ட்ரய்டு வியரில் பிளிப்கார்ட்

ஸ்மார்ட்போன் திரை போலவே ஸ்மார்ட்வாட்ச்க்கான திரையும் முக்கியத்துவம் பெறலாம். ஆக, எனவே நிறுவனங்கள் ஸ்மார்ட்வாட்ச்களுக்கான செயலிகளிலும் (ஆப்) கவனம் செலுத்தியாக வேண்டும். இதை பிளிப்கார்ட் உணர்ந்திருப்பதாக தெரிகிறது. அதன் அடையாளம் தான், ஆண்ட்ராய்டு வியருக்கான பிளிப்கார்ட்டின் செயலி.
இந்தியாவின் முன்னணி மின்வணிக தளமான பிளிப்கார்ட், ஆண்ட்ராய்ட் வியர் ஸ்டோருக்கான முதல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ 360 போன்ற பிளிப்கார்ட்டில் விற்பனையாகும் ஸ்மார்ட்வாட்சிகளில் இந்த செயலி முன்கூட்டியே இடம்பெற்றிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஷ் லிஸ்ட் மற்றும் நோட்டிபிகேஷன ஆகிய வசதிகள் இந்த செயலியில் உண்டு. எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் செயலியில் உள்ள எல்லா வசதிகளும் இதிலும் இடம்பெறலாம்.
ஸ்மார்ட்வாட்சி வைத்திருப்பவர்கள் , ஆண்ட்ராய்டு சாதனத்தில் பிளிப்கார்ட் செயலியை அப்டேட் செய்தால் போதுமானதாம்.
ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஆப்பிள் வாட்ச் பற்றிய சமீபத்திய தகவல் அதன் அறிமுகத்திற்கு இன்னமும் காத்திருக்க வேண்டும் என்பதாக இருக்கிறது. அடுத்த ஆண்டு துவக்கம் என்று எதிர்பார்கக்ப்பட்டதற்கு மாறாக 2015 வசந்தத்தில் தான் ஆப்பிள் வாட்ச் சந்தைக்கு வரலாம் என சொல்லப்படுகிறது.

————-

புதிய அறிமுகங்கள்

ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய அறிமுகங்கள் தொடர்கின்றன. தொடர இருக்கின்றன. தைவானை சேர்ந்த எச்.டி.சி ஏற்கனவே இந்த ஆண்டு புதிய அறிமுகங்களை செய்துள்ள நிலையில் மேலும் இரண்டு அறிமுகங்கள் நிகழலாம் என கூறப்படுகிறது. எச்டிசி டிசைர் 620 எனும் பெயரில் இரண்டு வடிவங்களில் இந்த போன் வரலாம் என சொல்லப்படுகிறது. இதனிடையே இந்திய நிறுவனமான ஐபால் 3 புதிய ஆண்ட்ராய்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் ஆன்டி வரிசையில் அறிமுகமாகும் இந்த போன்கள் ரூ,3,499, ரூ,4,699 மற்றும் ரூ. 6499 ஆகிய விலை கொண்டிருக்கும் என நிறுவன இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சந்தையில் எப்போது கிடைக்கத்துவங்கும் எனும் தகவல் இல்லை. இதனிடையே கூகிள் நெக்சஸ் சாதனம் விரைவில் எனும் அறிவிப்புடன் பிளிப்கார்ட் தளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ஒப்போ (Oppo ) நிறுவனம் தனது என்3 மற்றும் ஆர் 5 போன்களை டிசம்பர் முதல் விற்பனைக்கு கொண்டு வரலாம் என சொல்லப்படுகிறது. ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையை முக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்துள்ளது. 4.85 மீமீ அகலம் கொண்ட ஒப்போ ஆர் 5 உலகின் மெல்லிய ஸ்மார்ட்போன் என்று நிறுவனம் சொல்கிறது.

———–

ஸ்மார்ட்கீ வந்தாச்சு

ஸ்மார்ட்போனிலேயே பணம் செலுத்தும் வசதி வந்தாச்சு. இனி ஹோட்டல் அறைகளுக்கான சாவியாகவும் ஸ்மார்ட்போனே பயன்படலாம். அமெரிக்காவின் ஸ்டார்வுட் ஹோட்டல் குழுமம் தனது ஹோட்டல்களில் இத்தகைய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹோட்டல் அறையில் உள்ள பூட்டுகள் பளுடூத் வசதி கொண்டதாக இருக்கும். ஸ்மார்ட்போன் அல்லது ஆன்லைனில் ரூம் புக் செய்யும் போது அறை எண் போனுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆக, ஹோட்டலுக்கு வந்தால் வரவேற்பறையில் காத்திருக்காமல் நேராக ரூமுக்கு சென்று ஸ்மார்ட்போனை காட்டி கதை திறக்கச்செய்யலாம்.
மற்ற ஹோட்டல்களும் இதே போன்ற திட்டத்தை வைத்துள்ளன. இந்த வசதி எளிதானது என்றாலும் பாதுகாப்பு பற்றிய அச்சங்களும் இருக்கவே செய்கின்றன. ஆனால் ஹோட்டல் சாவியை மறந்து வைத்துவிட்டோமே என்ற கவலை இருக்காது. ஸ்மார்ட்போன் போல ஸ்மார்ட்வாட்சிலும் இந்த வசதி வரலாம் என்கின்றனர். ஹோட்டல் மட்டுமா வீடுகளுக்கும் ஸ்மார்ட் கீ வரப்போகிறது. எல்லாம் தொழில்நுட்பம் செய்யும் மாயம்.

————
தமிழ் இந்துவுக்காக எழுதியது. நன்றி; தமிழ் இந்து

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

One Comment on “ஸ்மார்ட்கீ வந்தாச்சு

  1. நீங்கள் தொழில்நுட்ப அல்லது அறிவியல் தகவல் பற்றி வலைப்பூ வைத்துள்ளீர்களா?

    உங்கள் தளத்தை தானியங்கி திரட்டியில் இணையுங்கள்.

    இதன் மூலம் உங்கள் தளத்தின் புதிய பதிவு தானியங்கி முறையில் அப்டேட் செய்யப்படுவதுடன் பதிவு நிறைய பேரை சென்றடையும்.

    உங்கள் தளத்தை இணைக்க

    http://tamil-tech-feeds.blogspot.com/

    Reply

Leave a Comment

Your email address will not be published.