ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்கும் ஹாஷ்டேக்

ஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்டரில் தமிழர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி கவனத்தை ஈர்த்துள்ளது.
செம்மர கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீசாரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் ஆவேசத்தி ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டு வருகிறது.

கடத்தல்காரர்கள் தப்பிவிட அப்பாவி தமிழர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டிவிட்டரிலும் தமிழர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து குரல் கொடுக்கத்துவங்கியுள்ளனர். தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்கும் வகையில் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இத்தகைய எதிர்ப்பு குறும்பதிவுகளை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேகும் பிரபலமாகியுள்ளது.

பலரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
@NanTamizachi என்பவர் ’20 தமிழர் கொலைசெய்யப்பட்டதை அறிந்தேன் கடத்தல்காரராயினும் விசாரணை இன்றி வேட்டையாடியமை தவறு கண்டிக்கப்படவேண்டியதே
#20தமிழர்கொலையைகண்டிப்போம்’ எனும் குறும்பதிவை வெளியிட்டார்.
தொடர்ந்து பலரும் இந்த இந்த ஹாஷ்டேகை பயன்படுத்த துவங்கினர்.

@eraam17 ( வாழ்க தமிழ்) எனும் டிவிட்டர் பயனாளியும், @Dhuvans (சிலிக்கான் சிற்பி) உள்ளிட்டோர் இதை வழிமொழிவது போல இந்த ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஹாஷ்டேகை பகிர்ந்து கொண்வர்கள் இதை டிரெண்டிங் ஆக்கவும் கோரிக்கை வைக்க மேலும் பலரும் இதில் இணைந்தனர். இதனால் #20தமிழர்கொலையைகண்டிப்போம்’ டிவிட்டரில் பிரபலமாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ஹாஷ்டேகுடன் வெளியான சில குறும்பதிவுகள் வருமாறு:

* @kalvankallan; மரம் வெட்டி கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் ஒருவர் கூட பலியாகாதது எப்படி? அவர்களை தப்பிக்கவைத்தது யார்?

* @bhuviii_; “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்றவன் இன்று உயிரோடு இருந்தால் வெக்கி தலைகுனிவான்!

* @CrazeTalk; தமிழன்டா என்று சொன்ன காலம் போய் .! தமிழன் தானடா என சொல்லும் காலம் வந்துவிட்டது

* @MSoundraa; அந்திரா போலீசுக்கு புரியிற மாதிரி ஒரு டேக்க ட்ரென்டு பண்ணுங்கைய்யா பிரபலங்களே

* @govikannan; மரம் வெட்டியர்களை சுட்டாச்சு, மரம் வெட்டச் சொன்னவர்களுக்கு வெண்சாமரம்

* @apdipodra; நாங்க அவங்க மரம் வெட்டுனது சரின்னு சொல்ல வரல. ஆனா ஆந்திரா போலீஸ் பண்ணது அதை விட பெரிய தப்புன்னுதான் சொல்றோம்.

* @itsurjoe: கண்டனத்திற்காவது தமிழன் ஒன்று சேரட்டும்

* @Dinakar89; அவர்கள் குடும்பத்திற்கு
நிதி வழங்கினால் மட்டும் போதாது !!
நீதியும் வழங்குங்கள்!

• @psvelu1979; மொழிவேறுபாடுகள் எல்லாம் மனிதர்களுக்குத்தானே அன்றி மனித உயிர்களுக்கு இல்லை.
• @Im_AriGM; 20 தொழிலாளிகள் செய்தது தவறுதான் அவர்களை நீதியின் வாசலில் நிறுத்துவதை விடுத்து தண்டனை கொடுக்க நீங்கள் யார்?

தொடர்ந்து இந்த ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகள் வெளியாகி வருகின்றன. குறும்பதிவுகளில் ஆவேசம் வெளிப்படுவதுதுடன், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை கண்டிக்கும் குறும்பதிவுகளையும் சிலர் வெளியிட்டுள்ளனர்.சிலர் இந்த ஹாஷேடேகை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து புரிய வைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். ஒரு சிலர் இப்படி ஹாஷ்டேக் மூலமாவது போராடுவோம் என்று கூறியுள்ளனர். சில குறும்பதிவுகள் எல்லை மீறுவதாக இருந்தாலும் இந்த பிரச்சனையை தெலுங்கு மக்களுக்கு எதிரானதாக பார்க்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஹாஹ்டேக் மூலமான போராட்டம் என்பது வீட்டிற்குள்ளேயே இருந்து போராடுவதற்கு சமம் என்று கூறப்பட்டாலும் சமூக வலைப்பின்னல் யுகத்தில் இது கவனத்தை ஈர்ப்பதற்கான முக்கிய ஆயுதமாகவும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழியாகவும் அமைந்திருக்கிறது. இதன் அடையாளமாக கொல்லப்பட்ட அப்பாவித்தமிழர்களுக்காக டிவிட்டரில் குரல் ஒலிக்கிறது.

தமிழர் கொலைகளை கண்டிக்கும் குறும்பதிவுகளை பின் தொடர் ஹாஷ்டேக்: #20தமிழர்கொலையைகண்டிப்போம்


நன்றி; விகடன்.காமில் எழுதியது.

ஆந்திர வனப்பகுதியில் என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் டிவிட்டரில் தமிழர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி கவனத்தை ஈர்த்துள்ளது.
செம்மர கடத்தல் விவகாரத்தில் ஆந்திர போலீசாரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் ஆவேசத்தி ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தும் போராட்டம் நடத்தியும் வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டு வருகிறது.

கடத்தல்காரர்கள் தப்பிவிட அப்பாவி தமிழர்கள் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகவும் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டிவிட்டரிலும் தமிழர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து குரல் கொடுக்கத்துவங்கியுள்ளனர். தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நியாயம் கேட்கும் வகையில் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இத்தகைய எதிர்ப்பு குறும்பதிவுகளை ஒன்றிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட #20தமிழர்கொலையைகண்டிப்போம் எனும் ஹாஷ்டேகும் பிரபலமாகியுள்ளது.

பலரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
@NanTamizachi என்பவர் ’20 தமிழர் கொலைசெய்யப்பட்டதை அறிந்தேன் கடத்தல்காரராயினும் விசாரணை இன்றி வேட்டையாடியமை தவறு கண்டிக்கப்படவேண்டியதே
#20தமிழர்கொலையைகண்டிப்போம்’ எனும் குறும்பதிவை வெளியிட்டார்.
தொடர்ந்து பலரும் இந்த இந்த ஹாஷ்டேகை பயன்படுத்த துவங்கினர்.

@eraam17 ( வாழ்க தமிழ்) எனும் டிவிட்டர் பயனாளியும், @Dhuvans (சிலிக்கான் சிற்பி) உள்ளிட்டோர் இதை வழிமொழிவது போல இந்த ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த ஹாஷ்டேகை பகிர்ந்து கொண்வர்கள் இதை டிரெண்டிங் ஆக்கவும் கோரிக்கை வைக்க மேலும் பலரும் இதில் இணைந்தனர். இதனால் #20தமிழர்கொலையைகண்டிப்போம்’ டிவிட்டரில் பிரபலமாகி கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த ஹாஷ்டேகுடன் வெளியான சில குறும்பதிவுகள் வருமாறு:

* @kalvankallan; மரம் வெட்டி கொண்டிருந்த ஆந்திர தொழிலாளர்கள் ஒருவர் கூட பலியாகாதது எப்படி? அவர்களை தப்பிக்கவைத்தது யார்?

* @bhuviii_; “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா” என்றவன் இன்று உயிரோடு இருந்தால் வெக்கி தலைகுனிவான்!

* @CrazeTalk; தமிழன்டா என்று சொன்ன காலம் போய் .! தமிழன் தானடா என சொல்லும் காலம் வந்துவிட்டது

* @MSoundraa; அந்திரா போலீசுக்கு புரியிற மாதிரி ஒரு டேக்க ட்ரென்டு பண்ணுங்கைய்யா பிரபலங்களே

* @govikannan; மரம் வெட்டியர்களை சுட்டாச்சு, மரம் வெட்டச் சொன்னவர்களுக்கு வெண்சாமரம்

* @apdipodra; நாங்க அவங்க மரம் வெட்டுனது சரின்னு சொல்ல வரல. ஆனா ஆந்திரா போலீஸ் பண்ணது அதை விட பெரிய தப்புன்னுதான் சொல்றோம்.

* @itsurjoe: கண்டனத்திற்காவது தமிழன் ஒன்று சேரட்டும்

* @Dinakar89; அவர்கள் குடும்பத்திற்கு
நிதி வழங்கினால் மட்டும் போதாது !!
நீதியும் வழங்குங்கள்!

• @psvelu1979; மொழிவேறுபாடுகள் எல்லாம் மனிதர்களுக்குத்தானே அன்றி மனித உயிர்களுக்கு இல்லை.
• @Im_AriGM; 20 தொழிலாளிகள் செய்தது தவறுதான் அவர்களை நீதியின் வாசலில் நிறுத்துவதை விடுத்து தண்டனை கொடுக்க நீங்கள் யார்?

தொடர்ந்து இந்த ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகள் வெளியாகி வருகின்றன. குறும்பதிவுகளில் ஆவேசம் வெளிப்படுவதுதுடன், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளை கண்டிக்கும் குறும்பதிவுகளையும் சிலர் வெளியிட்டுள்ளனர்.சிலர் இந்த ஹாஷேடேகை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து புரிய வைக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். ஒரு சிலர் இப்படி ஹாஷ்டேக் மூலமாவது போராடுவோம் என்று கூறியுள்ளனர். சில குறும்பதிவுகள் எல்லை மீறுவதாக இருந்தாலும் இந்த பிரச்சனையை தெலுங்கு மக்களுக்கு எதிரானதாக பார்க்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஹாஹ்டேக் மூலமான போராட்டம் என்பது வீட்டிற்குள்ளேயே இருந்து போராடுவதற்கு சமம் என்று கூறப்பட்டாலும் சமூக வலைப்பின்னல் யுகத்தில் இது கவனத்தை ஈர்ப்பதற்கான முக்கிய ஆயுதமாகவும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான வழியாகவும் அமைந்திருக்கிறது. இதன் அடையாளமாக கொல்லப்பட்ட அப்பாவித்தமிழர்களுக்காக டிவிட்டரில் குரல் ஒலிக்கிறது.

தமிழர் கொலைகளை கண்டிக்கும் குறும்பதிவுகளை பின் தொடர் ஹாஷ்டேக்: #20தமிழர்கொலையைகண்டிப்போம்


நன்றி; விகடன்.காமில் எழுதியது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.