சென்னை மழை: நேசக்கரம் நீட்டிய சமூக ஊடகங்கள்

ch-2
கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சென்னை தத்தளித்து மெல்ல பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.தமிழகம் முழுவதும் பாதிப்பு தீவிரம் என்றாலும் தலைநகர் சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இப்படி மழை வெள்ளம் தங்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மழையின் கோரத்தாண்டவம் நம்முடைய உள்கட்டமைப்பு வசதிகளின் போதாமையையும், தயாரிப்பு இல்லாத நிலையையும் அம்பலமாக்கியது என்றால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சமூக ஊடகங்களின் உதவியோடு நெட்டிசன்கள் களத்தில் இறங்கி கைகொடுத்தவிதம் மனிதாபிமானத்தின் எழுச்சியை உணர்த்தி நெகிழ வைத்தது.
மழை நீர் உள்ளே புகுந்த குடியிருப்புகளில் உதவிக்கு வந்தது படகுகள் மட்டும் அல்ல; சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகுகளும் தான். இடையே மழை உச்சத்தை தொட்ட போது இணைய இணைப்பு மற்றும் செல்போன் இணைப்புகள் சிக்கலுக்கு இலக்காகி தகவல் தொடர்பே சோதனைக்கு உள்ளானாலும், மற்ற நேரங்களில் டிவிட்டர் குறும்பதிவுகளும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகளும் பெருமளவு உதவியாக இருந்தன.
இயற்கை சீற்றங்களுக்கு நடுவே மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவுவதில் சமூக ஊடகங்கள் உடனுக்குடன் உதவிக்கு வருவதே இணைய யுகத்தின் வழக்கமாக இருக்கிறது. பிலிப்பைன்சில் ஹயான் சூறாவளியின் போதும், நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்திலும் சமூக ஊடகங்கள் பயன்பட்ட விதம் பற்றி நெகிழ்ச்சியான கதைகள் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவிலேயே கூட கடந்த ஆண்டு காஷ்மீரில் வெள்ளம் சூழந்த போது சமூக ஊடககங்கள் பேருதவியாக அமைந்தன.

இப்போது சென்னை நெட்டிசன்களும்,மழை வெள்ளத்துக்கு நடுவே இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நேசக்கரம் நீட்டி இந்த வரிசையில் இணைந்துள்ளனர்.
புயல் மழையின் போதும், பேரிடர் காலங்களின் போதும் முதலில் தேவைப்படுவது தகவல்கள் தான்- பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி விவரங்கள் தெரிய வேண்டும். சிக்கியத்தவிப்பவர்கள் பற்றிய தகவல்கள் வேண்டும். உதவி கோருபவர்களின் நிலையும் மீட்பு குழுவுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.இன்னும் பல முக்கிய தகவல்கள் பகிரப்பட வேண்டும்.
CT6rx0SVAAAAIOk
இவற்றுக்கு அரசு அமைப்புகளை மட்டும் சார்ந்திருக்க முடியாது.இங்கு தான் தன்னார்வலர்களின் பங்கு முக்கியமாகிறது. சென்னையில் பல நெட்டிசன்கள் இப்படி தன்னார்வலர்களாக மாறினர்.
நெட்டிசன்களின் பங்களிப்பு இரண்டு கட்டங்களாக அமைந்திருந்ததை பார்க்கலாம். கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்க்க ஆரம்பித்த போது பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்த பாதிப்புக்கு நடுவே #சென்னைரைன்ஸ் ஹாஷ்டேக் எட்டிப்பார்த்தது. டிவிட்டரில் மழையின் நிலை பற்றி உணர்ந்த இந்த ஹாஷ்டேக் அடையாளத்துடன் வெளியான குறும்பதிவுகள் எந்த எந்த பகுதிகளில் மழையின் தீவிரம் எப்படி என உணர்த்தின. நகரின் எந்த இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகம், எந்த சாலைகள் வழியே செல்லலாம் என்பது போன்ற தகவல்கள் பகிரப்பட்டு வழிகாட்டியாக அமைந்தன.தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை சிக்கியவர்களை மீட்பதற்கான கோரிக்கைகளும் வெளியாயின. வானிலை பதிவர்களும் சுற்றிச்சுழன்று செயல்பட்டு மழை பற்றிய கணிப்புகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பேஸ்புக்கில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதற்கான பக்கங்களும் அமைக்கப்பட்டு உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
வாட்ஸ் அப்பிலும் உதவிக்கான கோரிக்கைகள் உலா வந்தன. இடையே வதந்திகளும் உலா வந்தன.
டிசம்பர் மாத துவக்கத்தில் சென்னை மீண்டும் ஒரு பெருமழையை எதிர்கொண்டு நிலைகுலைந்த போது சமூக ஊடக பங்களிப்பு விஸ்வரூபம் எடுத்தது. முழங்கால் அளவு தண்ணீருக்கும், தாழ்வான இடங்களில் இடுப்பளவு தண்ணீருக்கும் பழகியிருந்த சென்னை நகரம் பல இடங்களில் கழுத்தளவு நீர் உள்ளே புகந்த நிலை கண்டு திடுக்கிட்டது.முடிச்சூர்,வேளச்சேரி ,கோட்டுர்புரம் உள்ளிட்ட இடங்களில் கீழ் தளம் முழுவதையும் வெள்ளம் சூழந்து கொண்டது.

சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்த நிலையில் தன்னார்வலர்களாக களத்தில் இறங்குவதற்கு முன்னர் நெட்டிசன்கள் சமூக ஊடகங்கள் வழியே நேசக்கரம் நீட்டினர்.
#சென்னைபிளட்ஸ், #சென்னைரைன்ஸ், #சென்னை ரெஸ்கியூ, # சென்னை ரைன்ஸ் ஹெல்ப் உள்ளிட்ட ஹாஷ்டேகுகளுடன் பகிரப்பட்ட குறும்பதிவுகள் உதவி,உணவு,உரைவிடம் என எல்லாவற்றையும் அளித்தன. ராணுவம் மற்றும் தேசிய பேரிடன் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில்,குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் எந்த குடியிருப்புகளில் எல்லாம் உதவிக்கு காத்திருக்கின்றனர் என்ற தகவலை குறும்பதிவுகளாக வெளியிட்டு வழிகாட்டினர். ஈக்காட்டுத்தாங்களில் குறிப்பிட்ட தெருவில் இரண்டாவது தளத்தில் வயதான தம்பதி மீட்கப்பட காத்திருக்கின்றனர் என்பது போன்ற தகவல்கள் ஆபத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட உதவின.

இதனிடையே உதவிக்காக மற்றும் தகவல்களுக்காக தொடர்பு கொள்ள வேண்டிய முக்கிய தொலைபேசி எண்களையும் திரட்டி பகிர்ந்து கொண்டனர். உதவி தேவைப்படுபவர்கள் மற்றும் உதவ தயாராக இருப்பவர்களையும் இணைக்கும் தகவல் பக்கம் கூகுள் டாக்குமண்ட் மூலம் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. சென்னையில் வெள்ள பாதிப்பின் நிலையை உணர்த்தக்கூடிய வரைபட பக்கமும் (http://osm-in.github.io/flood-map/chennai.html#11/13.0000/80.2000) உருவாக்கப்பட்டு பொதுமக்களின் பங்களிப்பு கோரப்பட்டது. https://twitter.com/AidOffered பக்கம் உதவி மற்றும் நிவாரணம் பற்றிய சரி பார்க்கப்பட்ட தகவல்களை வழங்கியது. http://klipher.com/savechennai/ பக்கமும் இதே போன்ற தகவல்களை அளித்தது.மருத்துவ உதவி பற்றிய தகவல்களும் பகிரப்பட்டன.
இதனிடையே பல நல்ல இதயங்கள் ,வெள்ளத்தில் வீடுகளையும் உடமைகளையும் இழந்தவர்களுக்கு தங்கள் வீடுகளின் கதவுகளை திறந்துவிடுவதாகவும் அறிவித்தனர்.

பல நெட்டிசன்கள் களத்திலும் இறங்கி உதவி செய்தனர். நடிகர் சித்தார்த் போன்ற பிரபலங்களும் நிவாரணப்பணிகளில் தீவிரம் காட்ட, உதவிகள் பற்றிய தகவல்கள் # சென்னைமைக்ரோ எனும் ஹாஷ்டேக் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டன. என்னிடம் பால் பாக்கெட்கள் இருக்கின்றன, தருகிறேன்,.250 பேருக்கு உணவுத்தரத்தயார், என்பது போன்ற தகவல்களும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் குவிந்தன.
தலைநகர் சென்னைக்கு நிகராக பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டத்திலும் கவனம் தேவை என குரல் கொடுக்கப்பட்டு தன்னார்வலர்கள் அங்கும் விரைந்தனர். நிவாரணப்பொருட்களும் ,உதவியும் எங்கு அதிகம் தேவைப்படுகிறது என்ற விவரங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்த உதவிகள் தொடர்கின்றன.
சென்னை நகரம் பெரும் நெருக்கடிக்கு இலக்கான நிலையில், மனிதநேயத்தின் எழுச்சிக்கு அடையாளமாக இவை விளங்குவதோடு சோதனையான நிலையில் சமூக ஊடகம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதற்கான நெகிழ்ச்சியான வெளிப்பாடாகவும் அமைகிறது!.

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

செயலி புதிது; மெசேஜிங் மாயம்

புதிதாக ஒரு மெசேஜிங் செயலி அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் டிரைப்.பிஎம் எனும் அந்த செயலியை, இன்னொரு மெசேஜிங் செயலி என அலட்சியம் செய்து ஒதுக்கிவிட முடியாமல் புதுமையான அம்சங்களுடன் வந்திருப்பது தான் கவனத்தை ஈர்க்கிறது. வாக்கி-டாக்கியின் மறுவடிவம் எனும் வர்ணனை செய்யப்படும் இந்த செயலியை மிக எளிதாக,ஒற்றை விரலில் இயக்கலாமாம். இதில் மெசேஜ் அனுப்ப கீபோர்டில் கைவைக்கும் தேவையும் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.எப்படி என்றால், செயலி மூலம் தொடர்பு கொள்ள வேண்டியவரின் புகைப்பட பகுதியை கிளிக் செய்து அப்படியே அழுத்திக்கொண்டிருந்தால் போதும், நாம் சொல்ல வேண்டிய செய்தியை பதிவு செய்து விடலாம். அதன் பிறகு அனுப்பு பட்டனை அழுத்தினால் போதும் அந்த செய்தி வீடியோ வடிவில் சென்றடையும். செய்தியை அனுப்பும் முன் நம்முடைய தோற்றம் எப்படி இருக்கிறது என முன்னோட்டம் பார்ப்பதற்கான கண்ணாடி வசதியும் செயலியில் இருக்கிறது. வீடியோ செய்தியை பெறுபவர் அதிலேயே கிளிக் செய்து பதில் செய்தியையும் அனுப்பலாம்.
தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாமல் குழுவில் உள்ள அனைவருக்கும் செய்தி அனுப்ப முடியும் என்பதால் இந்த மெசேஜிங் செயலியை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.
அனுப்பும் செய்திகளை சேமித்து வைக்கும் வசதியும் இருக்கிறது. உலகின் எந்த பகுதியிலும் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் அறிமுகமாகி இருக்கிறது.
தரவிறக்கம் செய்ய:http://tribe.pm/

——–

தளம் புதிது; யூடியூப் பாட்டு

யூடியூப் வீடியோக்களை பலவிதங்களில் பார்க்கலாம்; பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலருக்கு யூடியூப் வீடியோ மூலம் பாடல்களை கேட்பது பிடித்தமானதாகவும் இருக்கிறது. இத்தகைய இசைப்பிரியர்களில் பலர் யூடியூப் வீடியோக்களை எம்பி3 கோப்பாக தரவிறக்கம் செய்யவும் விரும்பலாம். இந்த தேவையை எளிதாக பூர்த்தி செய்யும் வடிவில் அறிமுகமாகி இருக்கிறது யூடி.காம் தளம். இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் யூடியூப் வீடியோ முகவரியை சமர்பித்தால் போதும் அதன் எம்பி3 வடிவத்தை தரவிறக்கம் செய்து தருகிறது. இந்த தேடல் கட்டத்திலேயே குறிச்சொல்லை டைப் செய்து யூடியூப்பில் தேடிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. பாடல் வீடியோ என்றில்லை எந்த வீடியோவையும் எம்பி3 கோப்பாக தரவிறக்கம் செய்தும் கொள்ளலாம். எம்பி4 வடிவத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: http://yout.com/

——-

கணித கண்காணிப்பு

மைக்ரோசாப்ட் வேர்ட் மென்பொருளை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. ஆனால் வேர்டில் உள்ள பல அம்சங்களை நீங்கள் அறியாமலே இருக்ககலாம். உதாரணமாக வேர்டில் டைப் செய்யும் போது கணித சூத்திரங்களை சரி பார்க்க அதில் உள்ள ஆட்டோ கரெக்ட் அம்சம் கைகொடுக்கிறது தெரியுமா?
ஆட்டோ கரெக்ட் அம்சம், எழுத்து பிழை மற்றும் இலக்கண பிழைகள் உள்ளிட்டவற்றை சரி பார்க்க உதவுகிறது. இந்த அம்சத்திலேயே மேத் ஆட்டோ கரெக்ட் எனும் வாய்ப்பும் உள்ளது. பைல் மெனு மூலம் ஆட்டோ கரெக்ட் பகுதிக்கு சென்று இந்த வசதியை இயக்கிவிட்டால் அதன் பிறகு கணித சமன்பாடுகளுக்கான குறியீடுகளை மிக எளிதாக பயன்படுத்தலாம். எண்ணற்ற குறியீடுகளுக்கான குறுக்கு வழி விசை இதில் உள்ளது. குறியீடுகளை எளிதாக இடைச்சொருக இந்த வசதி கைகொடுக்கும். இந்த பட்டியலில் இல்லாத குறியீடுகளை நாமே சேர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. மேக்யூஸ் ஆப் தளம் இது பற்றிய விரிவான குறிப்புகளை வெளியிட்டுள்ளது. : http://www.makeuseof.com/tag/microsoft-words-math-autocorrect-makes-equations-easier-to-type/

——–

மாற்றம் கோரும் மனு!

அமெரிக்காவின் கலிபோர்னியா என்றதும் சிலிக்கான் வேலி தானே முதலில் நினைவுக்கு வரும். உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களின் தாய்வீடாக சிலிக்கான் வேலி அமைந்திருப்பது கலிபோர்னியாவுக்கு பெருமை தரும் விஷயம் என்றாலும் இதில் முரணான ஒரு விஷயம் இருக்கிறது. கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு முன்னிரிமை இல்லை என்பது தான் அது!
கலிபோர்னியாவில் உள்ள பள்ளிகளில் உயர்நிலை மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு காரணம் கல்லூரி அனுமதியில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களின் மதிப்பெண் வலியுறுத்தப்படுவது போல கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் முக்கியமாக கருதப்படுவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் இதை ஒரு விருப்ப பாடமாகவே அளிக்கின்றன. இந்த காரணத்தினாலேயே மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் தேஎவு செய்வதிலும் அதில் தேர்ச்சி பெறுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலை வருந்த தக்கது மற்றும் மாற்றத்திற்கு உரியது என கருதுபவர்கள் ஒன்று சேர்ந்து கலிபோர்னிய கல்வி அமைப்பு ,கம்ப்யூட்டர் அறிவியலை அடிப்படையாக பாடமாக கருத வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மாற்றத்திற்கான கோரிக்கைகளை மனுக்களாக வெளியிட்டு ஆதரவு திரட்டும் சேஞ்ச்.ஆர்க் தளத்தில் ஒரு மனு வெளியிடப்பட்டு பத்தாயிரத்துக்கு மேல் ஆதரவு கையெழுத்துக்களை பெற்றுள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் கலிபோர்னியா முன்னணியில் இருந்தும் கூட அங்குள்ள மாணவர்கள் தரமான கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை அணுக முடியாமல் இருப்பது குறித்தும், மாணவர்களின் எதிர்கால நலனுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தின் அடிப்படை எந்த அளவு முக்கியம் என்றும் இந்த மனு வலியுறுத்துகிறது.
மாணவர்கள் எதிர்காலத்தில் தேர்வு செய்யும் துறை எதுவாக இருந்தாலும் 21 ம் நூற்றாண்டில் அவர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியலில் அடிப்படை அறிவு பலமாக இருப்பது மிகவும் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் மாணவர்களின் கணிணி சிந்தனை மற்றும் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொள்ள வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல புதிய்வற்றை படைக்கும் ஆற்றலையும் உண்டாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கலிப்போர்னியா கவர்னர் கெவின் நியூசம் எழுதியுள்ள கடிதத்தில் அல்ஜீப்ரா ,போல கால்குலஸ் போல் கம்ப்யூட்டர் அறிவியலும் முக்கியமாக கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கவனிகக் வேண்டியது கலிபோர்னியா மட்டும் அல்ல;நாமும் தான் இல்லையா!

———

ch-2
கொட்டித்தீர்த்த வரலாறு காணாத கனமழையால் பெரும்பாலான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கி சென்னை தத்தளித்து மெல்ல பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது.தமிழகம் முழுவதும் பாதிப்பு தீவிரம் என்றாலும் தலைநகர் சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இப்படி மழை வெள்ளம் தங்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போடும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

மழையின் கோரத்தாண்டவம் நம்முடைய உள்கட்டமைப்பு வசதிகளின் போதாமையையும், தயாரிப்பு இல்லாத நிலையையும் அம்பலமாக்கியது என்றால், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க சமூக ஊடகங்களின் உதவியோடு நெட்டிசன்கள் களத்தில் இறங்கி கைகொடுத்தவிதம் மனிதாபிமானத்தின் எழுச்சியை உணர்த்தி நெகிழ வைத்தது.
மழை நீர் உள்ளே புகுந்த குடியிருப்புகளில் உதவிக்கு வந்தது படகுகள் மட்டும் அல்ல; சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகுகளும் தான். இடையே மழை உச்சத்தை தொட்ட போது இணைய இணைப்பு மற்றும் செல்போன் இணைப்புகள் சிக்கலுக்கு இலக்காகி தகவல் தொடர்பே சோதனைக்கு உள்ளானாலும், மற்ற நேரங்களில் டிவிட்டர் குறும்பதிவுகளும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் பதிவுகளும் பெருமளவு உதவியாக இருந்தன.
இயற்கை சீற்றங்களுக்கு நடுவே மீட்பு பணி மற்றும் நிவாரண பணிகளுக்கு உதவுவதில் சமூக ஊடகங்கள் உடனுக்குடன் உதவிக்கு வருவதே இணைய யுகத்தின் வழக்கமாக இருக்கிறது. பிலிப்பைன்சில் ஹயான் சூறாவளியின் போதும், நேபாளத்தை உலுக்கிய பூகம்பத்திலும் சமூக ஊடகங்கள் பயன்பட்ட விதம் பற்றி நெகிழ்ச்சியான கதைகள் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவிலேயே கூட கடந்த ஆண்டு காஷ்மீரில் வெள்ளம் சூழந்த போது சமூக ஊடககங்கள் பேருதவியாக அமைந்தன.

இப்போது சென்னை நெட்டிசன்களும்,மழை வெள்ளத்துக்கு நடுவே இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நேசக்கரம் நீட்டி இந்த வரிசையில் இணைந்துள்ளனர்.
புயல் மழையின் போதும், பேரிடர் காலங்களின் போதும் முதலில் தேவைப்படுவது தகவல்கள் தான்- பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி விவரங்கள் தெரிய வேண்டும். சிக்கியத்தவிப்பவர்கள் பற்றிய தகவல்கள் வேண்டும். உதவி கோருபவர்களின் நிலையும் மீட்பு குழுவுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.இன்னும் பல முக்கிய தகவல்கள் பகிரப்பட வேண்டும்.
CT6rx0SVAAAAIOk
இவற்றுக்கு அரசு அமைப்புகளை மட்டும் சார்ந்திருக்க முடியாது.இங்கு தான் தன்னார்வலர்களின் பங்கு முக்கியமாகிறது. சென்னையில் பல நெட்டிசன்கள் இப்படி தன்னார்வலர்களாக மாறினர்.
நெட்டிசன்களின் பங்களிப்பு இரண்டு கட்டங்களாக அமைந்திருந்ததை பார்க்கலாம். கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்க்க ஆரம்பித்த போது பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இந்த பாதிப்புக்கு நடுவே #சென்னைரைன்ஸ் ஹாஷ்டேக் எட்டிப்பார்த்தது. டிவிட்டரில் மழையின் நிலை பற்றி உணர்ந்த இந்த ஹாஷ்டேக் அடையாளத்துடன் வெளியான குறும்பதிவுகள் எந்த எந்த பகுதிகளில் மழையின் தீவிரம் எப்படி என உணர்த்தின. நகரின் எந்த இடங்களில் வெள்ளப்பெருக்கு அதிகம், எந்த சாலைகள் வழியே செல்லலாம் என்பது போன்ற தகவல்கள் பகிரப்பட்டு வழிகாட்டியாக அமைந்தன.தாழ்வான பகுதிகளில் வெள்ளத்தை சிக்கியவர்களை மீட்பதற்கான கோரிக்கைகளும் வெளியாயின. வானிலை பதிவர்களும் சுற்றிச்சுழன்று செயல்பட்டு மழை பற்றிய கணிப்புகளையும், தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

பேஸ்புக்கில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதற்கான பக்கங்களும் அமைக்கப்பட்டு உதவிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
வாட்ஸ் அப்பிலும் உதவிக்கான கோரிக்கைகள் உலா வந்தன. இடையே வதந்திகளும் உலா வந்தன.
டிசம்பர் மாத துவக்கத்தில் சென்னை மீண்டும் ஒரு பெருமழையை எதிர்கொண்டு நிலைகுலைந்த போது சமூக ஊடக பங்களிப்பு விஸ்வரூபம் எடுத்தது. முழங்கால் அளவு தண்ணீருக்கும், தாழ்வான இடங்களில் இடுப்பளவு தண்ணீருக்கும் பழகியிருந்த சென்னை நகரம் பல இடங்களில் கழுத்தளவு நீர் உள்ளே புகந்த நிலை கண்டு திடுக்கிட்டது.முடிச்சூர்,வேளச்சேரி ,கோட்டுர்புரம் உள்ளிட்ட இடங்களில் கீழ் தளம் முழுவதையும் வெள்ளம் சூழந்து கொண்டது.

சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளித்த நிலையில் தன்னார்வலர்களாக களத்தில் இறங்குவதற்கு முன்னர் நெட்டிசன்கள் சமூக ஊடகங்கள் வழியே நேசக்கரம் நீட்டினர்.
#சென்னைபிளட்ஸ், #சென்னைரைன்ஸ், #சென்னை ரெஸ்கியூ, # சென்னை ரைன்ஸ் ஹெல்ப் உள்ளிட்ட ஹாஷ்டேகுகளுடன் பகிரப்பட்ட குறும்பதிவுகள் உதவி,உணவு,உரைவிடம் என எல்லாவற்றையும் அளித்தன. ராணுவம் மற்றும் தேசிய பேரிடன் மீட்பு படையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில்,குடியிருப்பில் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் எந்த குடியிருப்புகளில் எல்லாம் உதவிக்கு காத்திருக்கின்றனர் என்ற தகவலை குறும்பதிவுகளாக வெளியிட்டு வழிகாட்டினர். ஈக்காட்டுத்தாங்களில் குறிப்பிட்ட தெருவில் இரண்டாவது தளத்தில் வயதான தம்பதி மீட்கப்பட காத்திருக்கின்றனர் என்பது போன்ற தகவல்கள் ஆபத்தில் இருந்தவர்கள் மீட்கப்பட உதவின.

இதனிடையே உதவிக்காக மற்றும் தகவல்களுக்காக தொடர்பு கொள்ள வேண்டிய முக்கிய தொலைபேசி எண்களையும் திரட்டி பகிர்ந்து கொண்டனர். உதவி தேவைப்படுபவர்கள் மற்றும் உதவ தயாராக இருப்பவர்களையும் இணைக்கும் தகவல் பக்கம் கூகுள் டாக்குமண்ட் மூலம் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. சென்னையில் வெள்ள பாதிப்பின் நிலையை உணர்த்தக்கூடிய வரைபட பக்கமும் (http://osm-in.github.io/flood-map/chennai.html#11/13.0000/80.2000) உருவாக்கப்பட்டு பொதுமக்களின் பங்களிப்பு கோரப்பட்டது. https://twitter.com/AidOffered பக்கம் உதவி மற்றும் நிவாரணம் பற்றிய சரி பார்க்கப்பட்ட தகவல்களை வழங்கியது. http://klipher.com/savechennai/ பக்கமும் இதே போன்ற தகவல்களை அளித்தது.மருத்துவ உதவி பற்றிய தகவல்களும் பகிரப்பட்டன.
இதனிடையே பல நல்ல இதயங்கள் ,வெள்ளத்தில் வீடுகளையும் உடமைகளையும் இழந்தவர்களுக்கு தங்கள் வீடுகளின் கதவுகளை திறந்துவிடுவதாகவும் அறிவித்தனர்.

பல நெட்டிசன்கள் களத்திலும் இறங்கி உதவி செய்தனர். நடிகர் சித்தார்த் போன்ற பிரபலங்களும் நிவாரணப்பணிகளில் தீவிரம் காட்ட, உதவிகள் பற்றிய தகவல்கள் # சென்னைமைக்ரோ எனும் ஹாஷ்டேக் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டன. என்னிடம் பால் பாக்கெட்கள் இருக்கின்றன, தருகிறேன்,.250 பேருக்கு உணவுத்தரத்தயார், என்பது போன்ற தகவல்களும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் குவிந்தன.
தலைநகர் சென்னைக்கு நிகராக பாதிப்புக்குள்ளான கடலூர் மாவட்டத்திலும் கவனம் தேவை என குரல் கொடுக்கப்பட்டு தன்னார்வலர்கள் அங்கும் விரைந்தனர். நிவாரணப்பொருட்களும் ,உதவியும் எங்கு அதிகம் தேவைப்படுகிறது என்ற விவரங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்த உதவிகள் தொடர்கின்றன.
சென்னை நகரம் பெரும் நெருக்கடிக்கு இலக்கான நிலையில், மனிதநேயத்தின் எழுச்சிக்கு அடையாளமாக இவை விளங்குவதோடு சோதனையான நிலையில் சமூக ஊடகம் எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதற்கான நெகிழ்ச்சியான வெளிப்பாடாகவும் அமைகிறது!.

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

செயலி புதிது; மெசேஜிங் மாயம்

புதிதாக ஒரு மெசேஜிங் செயலி அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் டிரைப்.பிஎம் எனும் அந்த செயலியை, இன்னொரு மெசேஜிங் செயலி என அலட்சியம் செய்து ஒதுக்கிவிட முடியாமல் புதுமையான அம்சங்களுடன் வந்திருப்பது தான் கவனத்தை ஈர்க்கிறது. வாக்கி-டாக்கியின் மறுவடிவம் எனும் வர்ணனை செய்யப்படும் இந்த செயலியை மிக எளிதாக,ஒற்றை விரலில் இயக்கலாமாம். இதில் மெசேஜ் அனுப்ப கீபோர்டில் கைவைக்கும் தேவையும் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.எப்படி என்றால், செயலி மூலம் தொடர்பு கொள்ள வேண்டியவரின் புகைப்பட பகுதியை கிளிக் செய்து அப்படியே அழுத்திக்கொண்டிருந்தால் போதும், நாம் சொல்ல வேண்டிய செய்தியை பதிவு செய்து விடலாம். அதன் பிறகு அனுப்பு பட்டனை அழுத்தினால் போதும் அந்த செய்தி வீடியோ வடிவில் சென்றடையும். செய்தியை அனுப்பும் முன் நம்முடைய தோற்றம் எப்படி இருக்கிறது என முன்னோட்டம் பார்ப்பதற்கான கண்ணாடி வசதியும் செயலியில் இருக்கிறது. வீடியோ செய்தியை பெறுபவர் அதிலேயே கிளிக் செய்து பதில் செய்தியையும் அனுப்பலாம்.
தொடர்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டும் அல்லாமல் குழுவில் உள்ள அனைவருக்கும் செய்தி அனுப்ப முடியும் என்பதால் இந்த மெசேஜிங் செயலியை பலவிதங்களில் பயன்படுத்தலாம்.
அனுப்பும் செய்திகளை சேமித்து வைக்கும் வசதியும் இருக்கிறது. உலகின் எந்த பகுதியிலும் செயல்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இரண்டிலும் அறிமுகமாகி இருக்கிறது.
தரவிறக்கம் செய்ய:http://tribe.pm/

——–

தளம் புதிது; யூடியூப் பாட்டு

யூடியூப் வீடியோக்களை பலவிதங்களில் பார்க்கலாம்; பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலருக்கு யூடியூப் வீடியோ மூலம் பாடல்களை கேட்பது பிடித்தமானதாகவும் இருக்கிறது. இத்தகைய இசைப்பிரியர்களில் பலர் யூடியூப் வீடியோக்களை எம்பி3 கோப்பாக தரவிறக்கம் செய்யவும் விரும்பலாம். இந்த தேவையை எளிதாக பூர்த்தி செய்யும் வடிவில் அறிமுகமாகி இருக்கிறது யூடி.காம் தளம். இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில் யூடியூப் வீடியோ முகவரியை சமர்பித்தால் போதும் அதன் எம்பி3 வடிவத்தை தரவிறக்கம் செய்து தருகிறது. இந்த தேடல் கட்டத்திலேயே குறிச்சொல்லை டைப் செய்து யூடியூப்பில் தேடிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. பாடல் வீடியோ என்றில்லை எந்த வீடியோவையும் எம்பி3 கோப்பாக தரவிறக்கம் செய்தும் கொள்ளலாம். எம்பி4 வடிவத்தையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

இணையதள முகவரி: http://yout.com/

——-

கணித கண்காணிப்பு

மைக்ரோசாப்ட் வேர்ட் மென்பொருளை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. ஆனால் வேர்டில் உள்ள பல அம்சங்களை நீங்கள் அறியாமலே இருக்ககலாம். உதாரணமாக வேர்டில் டைப் செய்யும் போது கணித சூத்திரங்களை சரி பார்க்க அதில் உள்ள ஆட்டோ கரெக்ட் அம்சம் கைகொடுக்கிறது தெரியுமா?
ஆட்டோ கரெக்ட் அம்சம், எழுத்து பிழை மற்றும் இலக்கண பிழைகள் உள்ளிட்டவற்றை சரி பார்க்க உதவுகிறது. இந்த அம்சத்திலேயே மேத் ஆட்டோ கரெக்ட் எனும் வாய்ப்பும் உள்ளது. பைல் மெனு மூலம் ஆட்டோ கரெக்ட் பகுதிக்கு சென்று இந்த வசதியை இயக்கிவிட்டால் அதன் பிறகு கணித சமன்பாடுகளுக்கான குறியீடுகளை மிக எளிதாக பயன்படுத்தலாம். எண்ணற்ற குறியீடுகளுக்கான குறுக்கு வழி விசை இதில் உள்ளது. குறியீடுகளை எளிதாக இடைச்சொருக இந்த வசதி கைகொடுக்கும். இந்த பட்டியலில் இல்லாத குறியீடுகளை நாமே சேர்த்துக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. மேக்யூஸ் ஆப் தளம் இது பற்றிய விரிவான குறிப்புகளை வெளியிட்டுள்ளது. : http://www.makeuseof.com/tag/microsoft-words-math-autocorrect-makes-equations-easier-to-type/

——–

மாற்றம் கோரும் மனு!

அமெரிக்காவின் கலிபோர்னியா என்றதும் சிலிக்கான் வேலி தானே முதலில் நினைவுக்கு வரும். உலகின் முன்னணி கம்ப்யூட்டர் நிறுவனங்களின் தாய்வீடாக சிலிக்கான் வேலி அமைந்திருப்பது கலிபோர்னியாவுக்கு பெருமை தரும் விஷயம் என்றாலும் இதில் முரணான ஒரு விஷயம் இருக்கிறது. கலிபோர்னியாவில் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு முன்னிரிமை இல்லை என்பது தான் அது!
கலிபோர்னியாவில் உள்ள பள்ளிகளில் உயர்நிலை மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு காரணம் கல்லூரி அனுமதியில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களின் மதிப்பெண் வலியுறுத்தப்படுவது போல கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் முக்கியமாக கருதப்படுவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான பள்ளிகள் இதை ஒரு விருப்ப பாடமாகவே அளிக்கின்றன. இந்த காரணத்தினாலேயே மாணவர்களும் கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் தேஎவு செய்வதிலும் அதில் தேர்ச்சி பெறுவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை.
இந்த நிலை வருந்த தக்கது மற்றும் மாற்றத்திற்கு உரியது என கருதுபவர்கள் ஒன்று சேர்ந்து கலிபோர்னிய கல்வி அமைப்பு ,கம்ப்யூட்டர் அறிவியலை அடிப்படையாக பாடமாக கருத வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் மாற்றத்திற்கான கோரிக்கைகளை மனுக்களாக வெளியிட்டு ஆதரவு திரட்டும் சேஞ்ச்.ஆர்க் தளத்தில் ஒரு மனு வெளியிடப்பட்டு பத்தாயிரத்துக்கு மேல் ஆதரவு கையெழுத்துக்களை பெற்றுள்ளது.
டிஜிட்டல் யுகத்தில் கலிபோர்னியா முன்னணியில் இருந்தும் கூட அங்குள்ள மாணவர்கள் தரமான கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை அணுக முடியாமல் இருப்பது குறித்தும், மாணவர்களின் எதிர்கால நலனுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தின் அடிப்படை எந்த அளவு முக்கியம் என்றும் இந்த மனு வலியுறுத்துகிறது.
மாணவர்கள் எதிர்காலத்தில் தேர்வு செய்யும் துறை எதுவாக இருந்தாலும் 21 ம் நூற்றாண்டில் அவர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியலில் அடிப்படை அறிவு பலமாக இருப்பது மிகவும் அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் அறிவியல் பாடம் மாணவர்களின் கணிணி சிந்தனை மற்றும் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொள்ள வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்ல புதிய்வற்றை படைக்கும் ஆற்றலையும் உண்டாக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி கலிப்போர்னியா கவர்னர் கெவின் நியூசம் எழுதியுள்ள கடிதத்தில் அல்ஜீப்ரா ,போல கால்குலஸ் போல் கம்ப்யூட்டர் அறிவியலும் முக்கியமாக கருதப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கவனிகக் வேண்டியது கலிபோர்னியா மட்டும் அல்ல;நாமும் தான் இல்லையா!

———

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.