இணையத்தை உருக வைத்தா தாத்தா!

324F545900000578-0-image-a-86_1458568581263சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெகிழ வைக்கும் இந்த கதையில் பேரப்பிள்ளைகளுக்கான பாடம் அடங்கியிருப்பதோட்டு, இணைய புகழ் சூறாவளியை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலும் இருக்கிறது.

முதலில் முன் கதை சுருக்கம்! அதற்கு முன்னர் உங்களுக்கு தாத்தவோ,பாட்டியோ இருந்து அவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருந்தால், அந்த தவற்றை சரி செய்து கொண்டு பாசக்கார பேரப்பிள்ளைகளாக மாறுங்கள். ஏனெனில் இந்த கதை உணர்த்தும் நீதி அது தான்- தாத்தாக்களும்,பாட்டிகளும் அன்புக்கு ஏங்கி கொண்டிருக்கிறார்கள், அதை ஒரளவுக்காவது தீர்த்து வைப்பது பேரப்பிள்ளைகளின் கடமை!
சாதாரணமாக சொன்னால் போதனையாக மாறி அலுப்பூட்டக்கூடிய இந்த விஷயத்தை நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் உணர்த்தியிருப்பது தான் இந்த கதையின் சிறப்பம்சம்.

இணையத்தை மெல்லப்பிடித்து உலுக்கியிருக்கும் இந்த கதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டிவிட்டரில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்துடன் துவங்குகிறது.

முதியவர் ஒருவர் தனியே சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் அது. முதியவரின் பேத்தியான கல்லூரி மாணவி கெல்சே ஹார்மன் தான் இதை தனது டிவிட்டர் பக்கத்தில் ( https://twitter.com/kelssseyharmon) பகிர்ந்து கொண்டார். அந்த படத்துடன் அவர் தெரிவித்திருந்த தகவலின் பின்னே வருத்ததின் சாயலும் இருந்தது; ”பாப்பாவுடன் ( தாத்தா) டின்னர் சாப்பிடுகிறேன். அவர் தனது ஆறு பேரப்பிள்ளைகளுக்காக 12 பர்கர்களை தயார் செய்திருந்தார். ஆனால் நான் மட்டும் தான் அதை சாப்பிட வந்திருக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன்”.

கையில் பாதி கடித்த படி தாத்தா தனிமையில் சோகத்துடன் காட்சி தரும் புகைப்படத்தை பார்த்து விட்டு இந்த செய்திய படிக்கும் போது, மனதில் தானாக ஒரு மெல்லிய சோகம் உண்டாகும். ஆறு பேரப்பிள்ளைகளுக்காக தாத்தா அன்புடன் பர்கர் செய்து காத்திருந்தால் அவர்களில் ஒருவரைத்தவிவிர மற்றவர்கள் எட்டிப்பார்க்காமல் அவரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றனரே , பாவம் அந்த தாத்தா என்றும் நினைக்கத்தோன்றும்.
அந்த படத்தை டிவிட்டரில் பார்த்தவர்கள் மனதில் எல்லாம் இது போன்ற எண்ணங்கள் அலைமோதின. முதியவரின் சோகமோ அல்லது பேரப்பிள்ளைகளின் பாராமுகமோ ஏதோ ஒன்று பார்த்தவர்கள் நெஞ்சத்தொட்டு இந்த படத்தை ரிடிவீட் மூலம் பகிர்ந்து கொள்ளத்தூண்டியது. அவ்வளவு தான் அடுத்த 24 மணி நேரத்தில் 70,000 முறை இந்த படம் பகிரப்பட்டது. அதைவிட அதிகமான முறை இந்த படம் மீது விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பார்த்தால் இணையமே இந்த படம் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தது.

பலரும் தாத்தா மீது பரிவு கொண்டு கருத்து தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் தாங்களும் கூட தாத்தா பாட்டியை அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருப்பதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர். குடும்ப உணர்வு, வயதானவர்களின் நிலை, பேரப்பிள்ளைகளின் கடமை ஆகிய விஷயங்கள் பற்றிய பாசம் ததும்பும் விவாதமாக இது உருவெடுத்தது. இதனிடயே சிலர் வராமல் போன அந்த பேரப்பிள்ளைகளை வறுத்தெடுக்கவும் தவறவில்லை.

இதன் வைரல் தன்மையும், அதற்கு பின்னே இருந்த பெரியவரின் சோகமும் மீடியாவின் கவனத்தையும் ஈர்த்து இந்த நிகழ்வு பற்றி செய்தி வெளியிட வைத்தது. சோகமான தாத்தா எனும் அடைமொழியுடன் வெளியாகிய செய்திகள் மேலும் பல லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது.
இணையம் ஒரு தாத்தாவின் சோகத்திற்கு உருகியதும், பேரப்பிள்ளைகள் தாத்தாக்களை மறக்காமல் இருக்க வேண்டும் எனும் செய்தியை இது உணர்த்துவதாக அமைவதும் வலுயுறுத்தப்பட்டன.

ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா.- ஒரு பேத்தி தனது தாத்தாவின் நிலை பற்றி தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படம்,இணையம் மூலம் பரவி, நம் காலத்தில் முதியவர்களின் நிலை தொடர்பான விவாதத்தின் மையமாக மாறியிருக்கிறது!

ஆனால் இந்த கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. இதில் கொஞ்சம் திருப்பங்களும் காத்திருந்தன.
பரவலாக கருதப்பட்டது போல மீது ஐந்து பேரப்பிள்ளைகளும் தாத்தாவை முற்றிலுமாக புறக்கணித்துவிடவில்லை. இணையத்தில் சிலர் கல் நெஞ்சக்காரர்கள் என தூற்றியதை மீறி அவர்கள் பாசக்கார பேரப்பிள்ளைகளாகவே இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. விஷயம் என்ன என்றால், பேரப்பிள்ளைகளில் இன்னொருவர் சற்று தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார். மற்ற நான்கு பேர் வாரத்தற்கு காரணம் , தாத்தாவின் டின்னர் பற்றி அவர்களுக்கு சரியாக தகவல் தெரிவிக்கப்படாதது தான். தாத்தா தனது மகனிடம் இது பற்றி தெரிவித்த தகவலை அந்த மறத்திக்கார அப்பா தனது மகன்களிடம் தெரிவிக்க மறந்திருக்கிறார். அதனால் தான் அவர்கள் வரவில்லை. புகழ்பெற்ற டெய்லிமெயில் நாளிதழ் இந்த வெளிவராத பின்னணி தகவல்களை தேடிப்பிடித்து செய்தி வெளியிட்டது.

இதனிடையே பேரப்பிள்ளைகள் தரப்பில் தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டது. தாங்கள் குடும்பத்தை முக்கியமாக கருதுபவர்கள் என்றும், தாத்தாவை தாங்கள் நிராகரித்ததில்லை என்றும் தெரிவித்திருந்தனர். இணையம் கருதும் அளவுக்கு தாத்தாவை தனிமையில் தவிக்கவிடவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இதற்குள் இணையம் அவர்களை விசாரணை கூண்டில் நிற்க வைத்து ,இந்தக்கால பிள்ளைகளே இப்படி தான் என விவாதம் நடத்தி, திருந்த வேண்டிய நெஞ்சங்கள் என்று தீர்ப்பும் வழங்கியிருந்தது. இன்னொரு பக்கம், இதெல்லாமே இணைய புகழுக்கான முயற்சி என்றும் சிலர் தூற்றியிருந்தனர்.

நல்லவேளையாக பேத்தி கெல்சே மற்றும் அவரது சகோதரர்கள் இந்த சூறாவளியை பக்குவமாக கையாண்டனர். தாத்தா மீதான பாசத்தை வெளிப்படுத்தவே புகைப்படத்தை பகிர்ந்து கொண்டதாகவும், இதன் மூலம் புகழ் பெறும் எண்ணம் இருக்கவில்லை என்றும் கெல்சே தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். அதோடு தன்னை தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்தபர்களுக்கு எல்லாம் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முடியாததால், அனைவருக்கும் பொதுவாக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்னொரு பேரனான பிராக் ஹார்மன் (https://twitter.com/BHarmon_10 ) தங்கள் தாத்தா மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதன் அடையாளமாக விருந்து ஒன்றை அளிக்க விரும்புவதாகவும் , இதற்கு யார் வேண்டுமானலும் வருகை தரலாம் என தெரிவித்திருந்தார்.

டிவிட்டர், வைரல் புகழ் பற்றி எல்லாம் அதிகம் அறிந்திராத அந்த முதியவர் ,எல்லோரும் தன்னைப்பற்றியே பேசுவதை பார்த்து கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போயிருக்கிறார். இந்த திடீர் புகழ் வெளிச்சம் அவருக்கு வியப்பை அளித்தாலும், உற்சாகத்தோடு எல்லோரையும் விருந்துக்கு அழை நான் பர்கர் தயார் செய்கிறேன் என கூறியிருக்கிறார்.

வரும் 26 ம் தேதி நடைபெற உள்ள இந்த விருந்து இணைய பேரப்பிள்ளைகளுக்கானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ( பர்கருக்கு 2 டாலர் கட்டணம் உண்டு) . இதற்காக என்றே சேட்பாப்பா.காம் ( www.sadpapaw.com.) எனும் இணையதளமும் அமைக்கப்பட்டு தாத்தாவின் பாசத்தை வெளிப்படுத்து டிஷர்ட் மற்றும் தொப்பி விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றால் பர்த்துக்கொள்ளுங்கள்.

———
நன்றி;தமிழ் இந்துவில் எழுதியது

324F545900000578-0-image-a-86_1458568581263சமூக ஊடக செயல்பாடுகள் பற்றி எதுவுமே அறியாத தாத்தா ஒருவர் பேரப்பிள்ளைகளால் இணையம் மூலம் புகழ் பெற்றிருக்கும் கதை இது. நெகிழ வைக்கும் இந்த கதையில் பேரப்பிள்ளைகளுக்கான பாடம் அடங்கியிருப்பதோட்டு, இணைய புகழ் சூறாவளியை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான வழிகாட்டுதலும் இருக்கிறது.

முதலில் முன் கதை சுருக்கம்! அதற்கு முன்னர் உங்களுக்கு தாத்தவோ,பாட்டியோ இருந்து அவர்களை நீங்கள் அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருந்தால், அந்த தவற்றை சரி செய்து கொண்டு பாசக்கார பேரப்பிள்ளைகளாக மாறுங்கள். ஏனெனில் இந்த கதை உணர்த்தும் நீதி அது தான்- தாத்தாக்களும்,பாட்டிகளும் அன்புக்கு ஏங்கி கொண்டிருக்கிறார்கள், அதை ஒரளவுக்காவது தீர்த்து வைப்பது பேரப்பிள்ளைகளின் கடமை!
சாதாரணமாக சொன்னால் போதனையாக மாறி அலுப்பூட்டக்கூடிய இந்த விஷயத்தை நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் உணர்த்தியிருப்பது தான் இந்த கதையின் சிறப்பம்சம்.

இணையத்தை மெல்லப்பிடித்து உலுக்கியிருக்கும் இந்த கதை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் டிவிட்டரில் பகிரப்பட்ட ஒரு புகைப்படத்துடன் துவங்குகிறது.

முதியவர் ஒருவர் தனியே சோகமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் அது. முதியவரின் பேத்தியான கல்லூரி மாணவி கெல்சே ஹார்மன் தான் இதை தனது டிவிட்டர் பக்கத்தில் ( https://twitter.com/kelssseyharmon) பகிர்ந்து கொண்டார். அந்த படத்துடன் அவர் தெரிவித்திருந்த தகவலின் பின்னே வருத்ததின் சாயலும் இருந்தது; ”பாப்பாவுடன் ( தாத்தா) டின்னர் சாப்பிடுகிறேன். அவர் தனது ஆறு பேரப்பிள்ளைகளுக்காக 12 பர்கர்களை தயார் செய்திருந்தார். ஆனால் நான் மட்டும் தான் அதை சாப்பிட வந்திருக்கிறேன். அவரை நான் நேசிக்கிறேன்”.

கையில் பாதி கடித்த படி தாத்தா தனிமையில் சோகத்துடன் காட்சி தரும் புகைப்படத்தை பார்த்து விட்டு இந்த செய்திய படிக்கும் போது, மனதில் தானாக ஒரு மெல்லிய சோகம் உண்டாகும். ஆறு பேரப்பிள்ளைகளுக்காக தாத்தா அன்புடன் பர்கர் செய்து காத்திருந்தால் அவர்களில் ஒருவரைத்தவிவிர மற்றவர்கள் எட்டிப்பார்க்காமல் அவரை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றனரே , பாவம் அந்த தாத்தா என்றும் நினைக்கத்தோன்றும்.
அந்த படத்தை டிவிட்டரில் பார்த்தவர்கள் மனதில் எல்லாம் இது போன்ற எண்ணங்கள் அலைமோதின. முதியவரின் சோகமோ அல்லது பேரப்பிள்ளைகளின் பாராமுகமோ ஏதோ ஒன்று பார்த்தவர்கள் நெஞ்சத்தொட்டு இந்த படத்தை ரிடிவீட் மூலம் பகிர்ந்து கொள்ளத்தூண்டியது. அவ்வளவு தான் அடுத்த 24 மணி நேரத்தில் 70,000 முறை இந்த படம் பகிரப்பட்டது. அதைவிட அதிகமான முறை இந்த படம் மீது விருப்பம் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பார்த்தால் இணையமே இந்த படம் பற்றி தான் பேசிக்கொண்டிருந்தது.

பலரும் தாத்தா மீது பரிவு கொண்டு கருத்து தெரிவித்திருந்தனர். இன்னும் பலர் தாங்களும் கூட தாத்தா பாட்டியை அடிக்கடி பார்க்கச்செல்லாமல் இருப்பதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொண்டிருந்தனர். குடும்ப உணர்வு, வயதானவர்களின் நிலை, பேரப்பிள்ளைகளின் கடமை ஆகிய விஷயங்கள் பற்றிய பாசம் ததும்பும் விவாதமாக இது உருவெடுத்தது. இதனிடயே சிலர் வராமல் போன அந்த பேரப்பிள்ளைகளை வறுத்தெடுக்கவும் தவறவில்லை.

இதன் வைரல் தன்மையும், அதற்கு பின்னே இருந்த பெரியவரின் சோகமும் மீடியாவின் கவனத்தையும் ஈர்த்து இந்த நிகழ்வு பற்றி செய்தி வெளியிட வைத்தது. சோகமான தாத்தா எனும் அடைமொழியுடன் வெளியாகிய செய்திகள் மேலும் பல லட்சக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்தது.
இணையம் ஒரு தாத்தாவின் சோகத்திற்கு உருகியதும், பேரப்பிள்ளைகள் தாத்தாக்களை மறக்காமல் இருக்க வேண்டும் எனும் செய்தியை இது உணர்த்துவதாக அமைவதும் வலுயுறுத்தப்பட்டன.

ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா.- ஒரு பேத்தி தனது தாத்தாவின் நிலை பற்றி தனிப்பட்ட முறையில் பகிர்ந்து கொண்ட ஒரு புகைப்படம்,இணையம் மூலம் பரவி, நம் காலத்தில் முதியவர்களின் நிலை தொடர்பான விவாதத்தின் மையமாக மாறியிருக்கிறது!

ஆனால் இந்த கதை இத்துடன் முடிந்துவிடவில்லை. இதில் கொஞ்சம் திருப்பங்களும் காத்திருந்தன.
பரவலாக கருதப்பட்டது போல மீது ஐந்து பேரப்பிள்ளைகளும் தாத்தாவை முற்றிலுமாக புறக்கணித்துவிடவில்லை. இணையத்தில் சிலர் கல் நெஞ்சக்காரர்கள் என தூற்றியதை மீறி அவர்கள் பாசக்கார பேரப்பிள்ளைகளாகவே இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. விஷயம் என்ன என்றால், பேரப்பிள்ளைகளில் இன்னொருவர் சற்று தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார். மற்ற நான்கு பேர் வாரத்தற்கு காரணம் , தாத்தாவின் டின்னர் பற்றி அவர்களுக்கு சரியாக தகவல் தெரிவிக்கப்படாதது தான். தாத்தா தனது மகனிடம் இது பற்றி தெரிவித்த தகவலை அந்த மறத்திக்கார அப்பா தனது மகன்களிடம் தெரிவிக்க மறந்திருக்கிறார். அதனால் தான் அவர்கள் வரவில்லை. புகழ்பெற்ற டெய்லிமெயில் நாளிதழ் இந்த வெளிவராத பின்னணி தகவல்களை தேடிப்பிடித்து செய்தி வெளியிட்டது.

இதனிடையே பேரப்பிள்ளைகள் தரப்பில் தன்னிலை விளக்கம் அளிக்கப்பட்டது. தாங்கள் குடும்பத்தை முக்கியமாக கருதுபவர்கள் என்றும், தாத்தாவை தாங்கள் நிராகரித்ததில்லை என்றும் தெரிவித்திருந்தனர். இணையம் கருதும் அளவுக்கு தாத்தாவை தனிமையில் தவிக்கவிடவில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

இதற்குள் இணையம் அவர்களை விசாரணை கூண்டில் நிற்க வைத்து ,இந்தக்கால பிள்ளைகளே இப்படி தான் என விவாதம் நடத்தி, திருந்த வேண்டிய நெஞ்சங்கள் என்று தீர்ப்பும் வழங்கியிருந்தது. இன்னொரு பக்கம், இதெல்லாமே இணைய புகழுக்கான முயற்சி என்றும் சிலர் தூற்றியிருந்தனர்.

நல்லவேளையாக பேத்தி கெல்சே மற்றும் அவரது சகோதரர்கள் இந்த சூறாவளியை பக்குவமாக கையாண்டனர். தாத்தா மீதான பாசத்தை வெளிப்படுத்தவே புகைப்படத்தை பகிர்ந்து கொண்டதாகவும், இதன் மூலம் புகழ் பெறும் எண்ணம் இருக்கவில்லை என்றும் கெல்சே தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்தார். அதோடு தன்னை தொடர்பு கொண்டு கருத்து தெரிவித்தபர்களுக்கு எல்லாம் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவிக்க முடியாததால், அனைவருக்கும் பொதுவாக நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்னொரு பேரனான பிராக் ஹார்மன் (https://twitter.com/BHarmon_10 ) தங்கள் தாத்தா மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அதன் அடையாளமாக விருந்து ஒன்றை அளிக்க விரும்புவதாகவும் , இதற்கு யார் வேண்டுமானலும் வருகை தரலாம் என தெரிவித்திருந்தார்.

டிவிட்டர், வைரல் புகழ் பற்றி எல்லாம் அதிகம் அறிந்திராத அந்த முதியவர் ,எல்லோரும் தன்னைப்பற்றியே பேசுவதை பார்த்து கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போயிருக்கிறார். இந்த திடீர் புகழ் வெளிச்சம் அவருக்கு வியப்பை அளித்தாலும், உற்சாகத்தோடு எல்லோரையும் விருந்துக்கு அழை நான் பர்கர் தயார் செய்கிறேன் என கூறியிருக்கிறார்.

வரும் 26 ம் தேதி நடைபெற உள்ள இந்த விருந்து இணைய பேரப்பிள்ளைகளுக்கானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ( பர்கருக்கு 2 டாலர் கட்டணம் உண்டு) . இதற்காக என்றே சேட்பாப்பா.காம் ( www.sadpapaw.com.) எனும் இணையதளமும் அமைக்கப்பட்டு தாத்தாவின் பாசத்தை வெளிப்படுத்து டிஷர்ட் மற்றும் தொப்பி விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றால் பர்த்துக்கொள்ளுங்கள்.

———
நன்றி;தமிழ் இந்துவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.