பாட்டி கற்றுக்கொடுத்த இணைய பாடம்!

_89993166_ben_john_granஇங்கிலாந்தைச்சேர்ந்த 86 வயது பாட்டி ஒருவர் கூகுளில் எப்படி தேடுவது என கற்றுக்கொடுத்திருக்கிறார். கூகுளில் தேடுவது தான் நமக்கெல்லாம் அத்துப்படியாயிற்றே, அப்படி இருக்க பாட்டியிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என பலரும் நினைக்கலாம். உண்மையில் பாட்டி, தேடல் நுட்பத்தை கற்றுக்கொடுக்கவில்லை, ஆனால் இணைய பயன்பாட்டில் கொஞ்சம் பணிவு தேவை என்பதை தனது அறியாமை மூலம் அழகாக புரிய வைத்திருக்கிறார்.

விஷயம் இது தான். இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் வசிப்பவர் மே அஸ்வத். 86 வயதான இந்த பாட்டி வயதானவர்களுக்கான இணைய வகுப்பில் சேர்ந்து அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் இன்னும் இமெயிலுக்கு கூட அவர் அதிகம் பழகவில்லை. ஆனால் அடிக்கடி கூகுளில் தேடிப்பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறார். இப்படி தான் சமீபத்தில் அவர் கூகுளில் ஒரு தகவலை தேடிப்பார்த்திருக்கிறார். அதன் பிறகு தனது லேப்டாப்பை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டார்.
பேரன் பென் எகர்ஸ்லே, பாட்டியை காண வந்த போது இந்த லேப்டாப்பை பார்த்து அதில் கூகுள் தேடல் பக்கம் அப்படியே இருப்பதை கவனித்திருக்கிறார். பாட்டி என்ன தேடிய விதத்தை பார்த்து பேரன் அசந்து போய்விட்டார்.

ஏனெனில் பாட்டி தனது தேடல் கோரிக்கையை மிகவும் பணிவாக டைப் செய்து நன்றியும் தெரிவித்திருந்தார்.
“ தயவு செய்து இந்த ரோமன் எழுத்துக்களை மொழிபெயர்க்கவும், மிக்க நன்றி” – இப்படி தான் பாட்டியின் தேடல் கோரிக்கை அமைந்திருந்தது. கூகுளில் கோடானு கோடி முறை தகவல்கள் தேடப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோர் கேள்விகளாக கூட கோரிக்கை வைத்துள்ளனர். சிலர் கேலியாக கூட தேடியுள்ளனர். ஆனால், இப்படி தயவு செய்து என கேட்டு பணிவுடன் தேடி அதற்கு நன்றியும் தெரிவித்துக்கொண்ட முதல் பயனாளியாக இந்த பாட்டி தான் இருக்க வேண்டும்.

பேரன் பென் உடனே பாட்டியின் தேடல் பக்கத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், பகிர்ந்து கொண்டார். “ என் பாட்டியின் லேப்டாப்பை திறந்து பார்த்த போது அவர் தயவு செய்து, மற்றும் நன்றி என பயன்படுத்தியதை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த பகிர்வு பற்றி அவர் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்களை பாட்டியின் பணிவான தேடல் மிகவும் கவர்ந்து விட்டது. பலரும் இந்த பணிவை பாராட்டி டிவிட்டர் மூலம் பதில் அளித்தனர். மேலும் பலர் இந்த குறும்பதிவை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். இந்த தகவலை பார்த்தவர்களும் வியந்து போய் அதை தங்கள் பங்கிற்கு மறு குறும்பதிவிட்டனர்.

இப்படியாக 10,000 முறைகளுக்கு மேல்க் அந்த குறும்பதிவு பகிரப்பட்டு அதைவிட அதிக முறை விரும்பப்பட்டு பாட்டி இணைய புகழ் பெற்ற பாட்டியாகிவிட்டார். அது மட்டும் அல்ல இந்த குறும்பதிவுகளை கவனித்த கூகுல் நிறுவனமே அவருக்கு பதில் அளித்து, எங்களுக்கு நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம் பாட்டியம்மா எனக்கூறி அவரது பணிவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

ஆனால் பாட்டி இணைய புகழ் பெற்றது முக்கியமல்ல: அவர் செய்த விஷயமும் அதற்கான எதிர்வினையுமே முக்கியமாக இருக்கிறது.

நாம் எல்லோரும் தான் இணையத்தில் தேடுகிறோம். சொல்லப்போனால் தேடல் கலையில் நிபுணத்துவமும் பெற்று விடுகிறோம். ஆனால் தேடலை நாம் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். தேடல் என்றில்லை இணையத்தில் பல விஷயங்களை மிகச்சாதாரணமாக நினைத்து விடுகிறோம்.
ஆனால் பாட்டி மே அஸ்வத்தை போன்ற ஒருவர் நமக்கு அரிதான ஒரு விஷயத்தை நினைவுபடுத்தியிருக்கிறார். அதாவது இணையத்தில் புழங்கும் போது நாம் பணிவுடன் செயல்பட மறந்து விடுகிறோம் என்பதை அவர் உணர்த்தியிருக்கிறார்.

உண்மையில் பாட்டி இதை தெரியாமல் தான் செய்திருக்கிறார். இணையத்தில் தேடும் போது வேண்டுகோளே தேவையில்லை, கட்டளையிட்டாலே போதும் என்பதை அறியாமல், அவர் தயவு செய்து என விளித்து வேண்டுகோள் வைத்திருக்கிறார். ” கூகுளில் தேடும் போது மறுமுனையில் யாரோ ஒருவர் இருந்து தேடித்தருகிறார் என நினைத்ததாகவும், வேண்டுகோள் விடுத்தால் விரைவான பதில் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இவ்வாறு கோரிக்கை வைத்ததாகவும் பாட்டியே கூறியுள்ளார்.

பாட்டி அறியாமையில் செய்தாலும் அவரது செயல் யோசிக்க வைக்கிறது. இணையவாசிகள் பலரும் தேடலில் அவர் காட்டிய பணிவால் வியந்தும் நெகிழ்ந்தும் போயிருக்கின்றனர். ஒருவர் இது தான் மிகவும் அழகான விஷயம் என்று பாராட்டியுள்ளார். இன்னொருவர் அடுத்த முறை தேடும் போது நானும் இதே முறையை பின்பற்றுகிறேன் என கூறியுள்ளார். இன்னொருவர் பாட்டியின் பண்பாடு வியக்க வைக்கிறது என கூறியுள்ளார். முந்தைய தலைமுறைக்கு மட்டும் தான் இது சாத்தியம் என்றும் பலர் கூறியுள்ளனர்.

இந்த விவாதச்சரடு சில சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்புகிறது.தயவு செய்து மற்றும் நன்றி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது நல்ல பண்பாடு. இணையத்தில் நாம் ஏன் அதை மறந்து விடுகிறோம். யோசித்துப்பாருங்கள், இணையத்தில் தேடும் ஒவ்வொரு முறையும் , அந்த கோரிக்கையை பணிவோடு சமர்பித்தால் எப்படி இருக்கும். இணைய தேடலில் குறிச்சொல்லை அடிப்பதை விட்டுவிட்டு, தயவசெய்து என துவங்கி நீட்டி முழக்குவது எல்லாம் தேவையா? என பலரும் கேட்கலாம். ஆனால் இணையத்தில் தேடும் போது பணிவு தேவை என்பதல்ல விஷயம்; இந்த விதிவிலக்கான ஒரு நிகழ்வு அதன் அரிதான தன்மை காரணமாக இணையத்தை நாம் பயன்படுத்தும் விதம் பற்றி யோசிக்க வைக்கிறது. கூகுளில் தேடும் போது பணிவோ ,கணிவோ தேவைப்படாது தான். ஆனால் இணையத்தில் விவாதத்தில் பங்கேற்கும் போதும், கருத்துக்களை வெளியிடும் போதும் நாம் அடிப்படை மனித பண்புகளை கடைபிடிக்க வேண்டும் அல்லவா?

கருத்துக்களை வெளியிடுவது எளிதாக இருக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் ,எப்படி வேண்டுமானாலும் சொல்லும் போக்கு இணையத்தின் பிராகாசத்தையே குறைக்கிறதே!

பேஸ்புக் கருத்துக்களிலும், வலைப்பதிவு விவாதங்களிலும் எத்தனை காழ்ப்புணர்ச்சியை, துவேஷத்தின் வெளிப்பாட்டை அடிக்கடி பார்க்க நேர்கிறது. கலாய்க்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஆளுமைகளை அடித்து நொறுக்குகிறோம். மறுமுனையில் இருப்பவர் நிலை பற்றி கவலைப்படாமல் மோசமாக கருத்துச்சொல்லி மனங்களை உடைக்கிறோம். உடன் பருமனாக இருப்பவர் புகைப்படத்தை பார்த்து எள்ளி நகையாடுவதும், ஒருவரின் நிறம் அல்லது பின்னணி குறித்து துவேஷமான கருத்துக்களை கூறி காயப்படுத்துகிறோம். எத்தனை பலவீனமான உள்ளங்களை இணையம் பக்கமே வராமல் ஓடச்செய்திருப்போம். இசங்களை கேலி செய்கிறோம். இன்னும் பலவிதங்களில் இணைய சுதந்திரத்தை அதன் அருமையே உணராமல் தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இவை எல்லாவற்றையும் தான் பாட்டி தன்னை அறியாமல் சுட்டிக்காட்டியிருக்கிறார். மாற்று கருத்தை முன்வைத்தால் கூட கண்ணியமாக தெரிவிக்க வேண்டும், கருத்து கூறும் போது மற்றவர் மனம் காயப்படாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற மனிதநேர பண்புகள் இணைய உரையாடலிலும் நமக்குத்தேவை என அவர் உணர்த்தியிருக்கிறார்.

பாட்டி பேரனின் டிவிட்டர் பக்கம்: @Push10Ben

பாட்டிக்கு கூகுள் பாராட்டு பற்றிய பிபிசி செய்தி: http://www.bbc.com/news/uk-36538356

_89993166_ben_john_granஇங்கிலாந்தைச்சேர்ந்த 86 வயது பாட்டி ஒருவர் கூகுளில் எப்படி தேடுவது என கற்றுக்கொடுத்திருக்கிறார். கூகுளில் தேடுவது தான் நமக்கெல்லாம் அத்துப்படியாயிற்றே, அப்படி இருக்க பாட்டியிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என பலரும் நினைக்கலாம். உண்மையில் பாட்டி, தேடல் நுட்பத்தை கற்றுக்கொடுக்கவில்லை, ஆனால் இணைய பயன்பாட்டில் கொஞ்சம் பணிவு தேவை என்பதை தனது அறியாமை மூலம் அழகாக புரிய வைத்திருக்கிறார்.

விஷயம் இது தான். இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டரில் வசிப்பவர் மே அஸ்வத். 86 வயதான இந்த பாட்டி வயதானவர்களுக்கான இணைய வகுப்பில் சேர்ந்து அடிப்படை விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறார். இருந்தாலும் இன்னும் இமெயிலுக்கு கூட அவர் அதிகம் பழகவில்லை. ஆனால் அடிக்கடி கூகுளில் தேடிப்பார்க்கும் பழக்கம் கொண்டிருக்கிறார். இப்படி தான் சமீபத்தில் அவர் கூகுளில் ஒரு தகவலை தேடிப்பார்த்திருக்கிறார். அதன் பிறகு தனது லேப்டாப்பை அணைக்காமல் அப்படியே விட்டுவிட்டார்.
பேரன் பென் எகர்ஸ்லே, பாட்டியை காண வந்த போது இந்த லேப்டாப்பை பார்த்து அதில் கூகுள் தேடல் பக்கம் அப்படியே இருப்பதை கவனித்திருக்கிறார். பாட்டி என்ன தேடிய விதத்தை பார்த்து பேரன் அசந்து போய்விட்டார்.

ஏனெனில் பாட்டி தனது தேடல் கோரிக்கையை மிகவும் பணிவாக டைப் செய்து நன்றியும் தெரிவித்திருந்தார்.
“ தயவு செய்து இந்த ரோமன் எழுத்துக்களை மொழிபெயர்க்கவும், மிக்க நன்றி” – இப்படி தான் பாட்டியின் தேடல் கோரிக்கை அமைந்திருந்தது. கூகுளில் கோடானு கோடி முறை தகவல்கள் தேடப்பட்டு வருகின்றன. பெரும்பாலானோர் கேள்விகளாக கூட கோரிக்கை வைத்துள்ளனர். சிலர் கேலியாக கூட தேடியுள்ளனர். ஆனால், இப்படி தயவு செய்து என கேட்டு பணிவுடன் தேடி அதற்கு நன்றியும் தெரிவித்துக்கொண்ட முதல் பயனாளியாக இந்த பாட்டி தான் இருக்க வேண்டும்.

பேரன் பென் உடனே பாட்டியின் தேடல் பக்கத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில், பகிர்ந்து கொண்டார். “ என் பாட்டியின் லேப்டாப்பை திறந்து பார்த்த போது அவர் தயவு செய்து, மற்றும் நன்றி என பயன்படுத்தியதை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
இந்த பகிர்வு பற்றி அவர் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் மற்றவர்களை பாட்டியின் பணிவான தேடல் மிகவும் கவர்ந்து விட்டது. பலரும் இந்த பணிவை பாராட்டி டிவிட்டர் மூலம் பதில் அளித்தனர். மேலும் பலர் இந்த குறும்பதிவை தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டனர். இந்த தகவலை பார்த்தவர்களும் வியந்து போய் அதை தங்கள் பங்கிற்கு மறு குறும்பதிவிட்டனர்.

இப்படியாக 10,000 முறைகளுக்கு மேல்க் அந்த குறும்பதிவு பகிரப்பட்டு அதைவிட அதிக முறை விரும்பப்பட்டு பாட்டி இணைய புகழ் பெற்ற பாட்டியாகிவிட்டார். அது மட்டும் அல்ல இந்த குறும்பதிவுகளை கவனித்த கூகுல் நிறுவனமே அவருக்கு பதில் அளித்து, எங்களுக்கு நன்றி எல்லாம் சொல்ல வேண்டாம் பாட்டியம்மா எனக்கூறி அவரது பணிவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

ஆனால் பாட்டி இணைய புகழ் பெற்றது முக்கியமல்ல: அவர் செய்த விஷயமும் அதற்கான எதிர்வினையுமே முக்கியமாக இருக்கிறது.

நாம் எல்லோரும் தான் இணையத்தில் தேடுகிறோம். சொல்லப்போனால் தேடல் கலையில் நிபுணத்துவமும் பெற்று விடுகிறோம். ஆனால் தேடலை நாம் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். தேடல் என்றில்லை இணையத்தில் பல விஷயங்களை மிகச்சாதாரணமாக நினைத்து விடுகிறோம்.
ஆனால் பாட்டி மே அஸ்வத்தை போன்ற ஒருவர் நமக்கு அரிதான ஒரு விஷயத்தை நினைவுபடுத்தியிருக்கிறார். அதாவது இணையத்தில் புழங்கும் போது நாம் பணிவுடன் செயல்பட மறந்து விடுகிறோம் என்பதை அவர் உணர்த்தியிருக்கிறார்.

உண்மையில் பாட்டி இதை தெரியாமல் தான் செய்திருக்கிறார். இணையத்தில் தேடும் போது வேண்டுகோளே தேவையில்லை, கட்டளையிட்டாலே போதும் என்பதை அறியாமல், அவர் தயவு செய்து என விளித்து வேண்டுகோள் வைத்திருக்கிறார். ” கூகுளில் தேடும் போது மறுமுனையில் யாரோ ஒருவர் இருந்து தேடித்தருகிறார் என நினைத்ததாகவும், வேண்டுகோள் விடுத்தால் விரைவான பதில் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் இவ்வாறு கோரிக்கை வைத்ததாகவும் பாட்டியே கூறியுள்ளார்.

பாட்டி அறியாமையில் செய்தாலும் அவரது செயல் யோசிக்க வைக்கிறது. இணையவாசிகள் பலரும் தேடலில் அவர் காட்டிய பணிவால் வியந்தும் நெகிழ்ந்தும் போயிருக்கின்றனர். ஒருவர் இது தான் மிகவும் அழகான விஷயம் என்று பாராட்டியுள்ளார். இன்னொருவர் அடுத்த முறை தேடும் போது நானும் இதே முறையை பின்பற்றுகிறேன் என கூறியுள்ளார். இன்னொருவர் பாட்டியின் பண்பாடு வியக்க வைக்கிறது என கூறியுள்ளார். முந்தைய தலைமுறைக்கு மட்டும் தான் இது சாத்தியம் என்றும் பலர் கூறியுள்ளனர்.

இந்த விவாதச்சரடு சில சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்புகிறது.தயவு செய்து மற்றும் நன்றி போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது நல்ல பண்பாடு. இணையத்தில் நாம் ஏன் அதை மறந்து விடுகிறோம். யோசித்துப்பாருங்கள், இணையத்தில் தேடும் ஒவ்வொரு முறையும் , அந்த கோரிக்கையை பணிவோடு சமர்பித்தால் எப்படி இருக்கும். இணைய தேடலில் குறிச்சொல்லை அடிப்பதை விட்டுவிட்டு, தயவசெய்து என துவங்கி நீட்டி முழக்குவது எல்லாம் தேவையா? என பலரும் கேட்கலாம். ஆனால் இணையத்தில் தேடும் போது பணிவு தேவை என்பதல்ல விஷயம்; இந்த விதிவிலக்கான ஒரு நிகழ்வு அதன் அரிதான தன்மை காரணமாக இணையத்தை நாம் பயன்படுத்தும் விதம் பற்றி யோசிக்க வைக்கிறது. கூகுளில் தேடும் போது பணிவோ ,கணிவோ தேவைப்படாது தான். ஆனால் இணையத்தில் விவாதத்தில் பங்கேற்கும் போதும், கருத்துக்களை வெளியிடும் போதும் நாம் அடிப்படை மனித பண்புகளை கடைபிடிக்க வேண்டும் அல்லவா?

கருத்துக்களை வெளியிடுவது எளிதாக இருக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் ,எப்படி வேண்டுமானாலும் சொல்லும் போக்கு இணையத்தின் பிராகாசத்தையே குறைக்கிறதே!

பேஸ்புக் கருத்துக்களிலும், வலைப்பதிவு விவாதங்களிலும் எத்தனை காழ்ப்புணர்ச்சியை, துவேஷத்தின் வெளிப்பாட்டை அடிக்கடி பார்க்க நேர்கிறது. கலாய்க்கும் வாய்ப்பை பயன்படுத்தி ஆளுமைகளை அடித்து நொறுக்குகிறோம். மறுமுனையில் இருப்பவர் நிலை பற்றி கவலைப்படாமல் மோசமாக கருத்துச்சொல்லி மனங்களை உடைக்கிறோம். உடன் பருமனாக இருப்பவர் புகைப்படத்தை பார்த்து எள்ளி நகையாடுவதும், ஒருவரின் நிறம் அல்லது பின்னணி குறித்து துவேஷமான கருத்துக்களை கூறி காயப்படுத்துகிறோம். எத்தனை பலவீனமான உள்ளங்களை இணையம் பக்கமே வராமல் ஓடச்செய்திருப்போம். இசங்களை கேலி செய்கிறோம். இன்னும் பலவிதங்களில் இணைய சுதந்திரத்தை அதன் அருமையே உணராமல் தவறாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

இவை எல்லாவற்றையும் தான் பாட்டி தன்னை அறியாமல் சுட்டிக்காட்டியிருக்கிறார். மாற்று கருத்தை முன்வைத்தால் கூட கண்ணியமாக தெரிவிக்க வேண்டும், கருத்து கூறும் போது மற்றவர் மனம் காயப்படாமல் இருக்க வேண்டும் என்பது போன்ற மனிதநேர பண்புகள் இணைய உரையாடலிலும் நமக்குத்தேவை என அவர் உணர்த்தியிருக்கிறார்.

பாட்டி பேரனின் டிவிட்டர் பக்கம்: @Push10Ben

பாட்டிக்கு கூகுள் பாராட்டு பற்றிய பிபிசி செய்தி: http://www.bbc.com/news/uk-36538356

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.