விமர்சன சூறாவளியில் பேஸ்புக் – பின்னணியும், முக்கிய கேள்விகளும்!

https___d1e00ek4ebabms.cloudfront.net_production_a30372e2-8de6-4f89-8706-a28d4517ada0பேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்குவதோ, கடும் விமர்சனத்திற்கு உள்ளாவதோ புதிதல்ல. ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பேஸ்புக் இப்போது பெரும் விமர்சன சூறாவளியில் சிக்கியிருக்கிறது. இதன் விளைவாக, பேஸ்புக்கின் (தீய) தாக்கம் தொடர்பாக தீவிரமான கேள்விகளும், விவாதங்களும், விசாரணைகளும் தீவிரமடைந்துள்ளன. புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல் உலகின் செல்வாக்கு மிக்க சமூக வலைப்பின்னல் சேவை நிறுவனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

பேஸ்புக்கிற்கு எதிரான இந்த விமர்சன சூறாவளியின் மையமாக இருப்பவர் பிரான்சிஸ் ஹாகன். (Frances Haugen ). பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியான ஹாகன் நிறுவனத்தில் இருந்து விலகி விசூலூதியாக மாறி வெளியிட்டு வரும் தகவல்களே இணைய உலகில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

பேஸ்புக் சமூக நலன் மற்றும் பயனாளிகள் நலனை விட வர்த்தக லாபத்தையே முதன்மையாக கருதுகிறது என்பதே ஹாகனின் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது. இணைய உலகில் பேஸ்புக்கின் செல்வாக்கையும், வீச்சையும் மனதில் கொண்டு பார்க்கும் போது இந்த குற்றச்சாட்டின் தீவிரத்தை உணரலாம். இதற்கான ஆதாரங்களையும், தொடர்புடைய இன்னும் பிற தகவல்களையும் அவர் பத்திரிகை மூலம் வெளியிட்டு ஒட்டுமொத்த இணைய உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். பேஸ்புக்கை கொஞ்சம் கூடுதலாகவே அதிர வைத்திருக்கிறார்.

சர்ச்சை வரலாறு

கடந்த 2018 ம் ஆண்டு வெடித்த கேம்பிரிட்ஜ் அனல்டிகா விவகாரத்தில் பேஸ்புக் தகவல்களை விளம்பர நோக்கில் அறுவடை செய்வதில் தீவிரமாக இருப்பதும், இதன் விளைவாக பயனாளிகளின் தனியுரிமை கேள்விக்குள்ளாவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். பேஸ்புக்கின் லாப நோக்கிலான செயல்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி, ’பேஸ்புக்கை விட்டு வெளியேறுவோம்’ எனும் இணைய எதிர்ப்பு இயக்கத்திற்கும் இந்த சர்ச்சை வித்திட்டது.

இந்த சர்ச்சைக்கு மத்தியில், 2016 அமெரிக்க தேர்தலில் பேஸ்புக் மேடை பயன்படுத்தப்பட்ட விதமும் விவாத பொருளானது. பேஸ்புக்கின் தகவல் அறுவடை உத்திகள் மூலம் குறிப்பிட்ட இலக்கு வாக்காளர்களை குறி வைத்து பிரச்சாரம் செய்ய பேஸ்புக் பயன்பட்டதாகவும், பொய்ச்செய்திகள் இந்த பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ரஷ்யாவின் டிரால் படையும் இதில் விளையாடியாக விமர்சனம் எழுந்தது.

இதன் தொடர்ச்சியாக பேஸ்புக் தனது நியூஸ்ஃபீடில் தகவல்களை தோன்றச்செய்யும் விதமும், அதற்கு பின்னே உள்ள அல்கோரிதமின் செயல்பாடும் விமர்சனத்திற்கு உள்ளாயின. பேஸ்புக் தவறான தகவல்கள் மற்றும் பொய்ச்செய்திகளை பகிர்வதற்கான கூடாரமாக மாறிவிட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதனிடையே, 2021 அமெரிக்க தேர்தல் முடிவை ஏற்காமல் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் ஹில் பகுதியில் கட்டவிழ்த்துவிட்ட வம்முறைக்கும் பேஸ்புக் மேடை பயன்படுத்தப்பட்ட விதம் கண்டனத்திற்கு உள்ளானது.

பேஸ்புக் கோப்புகள்

மேலும், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் பேஸ்புக் வன்முறை மற்றும் துவேஷத்தை தூண்டும் கருத்துகளையும் பொய் செய்திகளையும் பகிர்ந்து கொள்ளும் வாகனமாக விளங்குவதாக தெரிய வந்தது. இது போன்ற குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில், பேஸ்புக் தனது மேடையில் தோன்றும் கருத்துகளை நெறிப்படுத்துவதில் போதிய பொறுப்புணர்வை காட்டுவதில்லை எனும் விமர்சனமும் பலரால் முன்வைக்கப்பட்டது.

இந்த பின்னணியில் தான் பேஸ்புக் மீதான புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகத்துவங்கின. அமெரிக்காவின் ’வால்ஸ்டிரீட் ஜர்னல்’ நாளிதழில் இவை முதலில் வெளியாகத்துவங்கின. பேஸ்புக்கின் துணை சேவையான இன்ஸ்டாகிராம் இளம் பெண்களின் ஆரோக்கியத்திற்காக தீங்காக விளங்குகிறது என்பதை நன்கு அறிந்திருந்தும் பேஸ்புக் இது தொடர்பாக மாற்று நடவடிக்கை எடுக்காமல், பாதிப்பு ஏற்படுத்தும் உத்திகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என்பது இந்த குற்றச்சாட்டின் மையமாக அமைந்தது.

குழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம் சேவையை பேஸ்புக் அறிமுகம் செய்ய இருப்பதாக வெளியான தகவல் கடும் கண்டனத்திற்கு உள்ளான சூழலில் இந்த தகவல் வெளியானது. இதற்கு ஆதாரமாக பேஸ்புக் நிறுவனத்திற்குள் பயன்படுத்தப்பட்ட ஆய்வு குறிப்புகளையும், தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அந்த நாளிதழ் ஆதாரமாக வெளியிட்டிருந்தது.

பேஸ்புக்கின் நியூஸ்ஃபீடை இயக்கும் அல்கோரிதம் பயனாளிகளிடம் இருந்து கோபமான எதிர்வினையை தூண்டும் தகவல்களை முன்னிறுத்தும் வகையில் அமைந்திருப்பதும், பேஸ்புக் தெரிந்தே தொடர்கிறது என்ற மற்றொரு முக்கிய குற்றச்சாட்டும் இந்த நாளிதழில் வெளியானது. பயனாளிகள் அதிக நேரம் பேஸ்புக்கில் தங்கியிருக்கச்செய்வதே இதன் நோக்கம் என்றும், பேஸ்புக் பயனாளிகள் நலத்தைவிட தனது வர்த்தக நலனையே பிரதானமாக கருதுகிறது என்றும் இந்த செய்தியில் கூறப்பட்டது.

விசூலூதி ஹாகன்

பேஸ்புக்கின் தாக்கத்தையும், அதன் வர்த்தக நோக்கிலான செயல்பாட்டையும் அம்பலமாக்கிய இந்த தகவல்கள் பேஸ்புக் கோப்புகள் என குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் தான், இந்த தகவல்களை துணிந்து வெளிப்படுத்திய நபர் யார் எனும் விவரம் வெளியானது. அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பேஸ்புக் முன்னாள் அதிகாரியான பிரான்சிஸ் ஹாகன், தன்னை விசூலூதியாக அறிமுகம் செய்து கொண்டு மேலும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். துவேஷம், வன்முறை போன்ற கருத்துகளை பகிரப்படுவதை நெறிப்படுத்துவதை விட, பேஸ்புக் தனது லாப நோக்கத்தையே பேஸ்புக் முக்கியமாக கருதுவதாக கூறியவர், நிறுவன செயல்பாடுகளால் வெறுத்துபோய் அதிலிருந்து விலகியதாகவும் கூறினார்.

பேஸ்புக்கில் இருந்து வெளியேறும் முன், அதன் மோசமான செயல்பாடுகளை உணர்த்தும் ஆதாரங்களை கவனமாக திரட்டிக்கொண்டார். இப்படி திரட்டிய ஆதாரங்களே பேஸ்புக் கோப்புகளாக இணைய உலகில் சூறாவளையை உண்டாக்கியது. இதைத்தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற துணைக்குழு முன் ஆஜாராகி, பேஸ்புக்கின் மோசமான செயல்பாடுகள் தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார். இதே போல பிரிட்டனில் நடைபெறும் விசாரணையிலும் சாட்சியம் அளித்திருக்கிறார். பேஸ்புக்கின் தீய விளைவுகளை துணிந்து அமபலமாக்கியதற்காக அமெரிக்காவின் நவீன நாயகி என்றும் ஹாகன் பாராட்டப்படுகிறார்.

பேஸ்புக் மீதான இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை ஏற்கனவே சொல்லப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருபவை தான். பேஸ்புக்கின் நியூஸ்ஃபீட் முன்னிறுத்தும் தகவல்களின் சார்பும், பல சமூகங்களில் இவை ஏற்படுத்தும் தாக்கமும் வல்லுனர்களால் தொடர்ந்து கவலையோடு விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. ஹாகன், பேஸ்புக்கின் ஆவணங்கள் மற்றும் அதன் சொந்த ஆய்வுக்குறிப்புகளை கொண்டு இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்த்திருக்கிறார் என்பதே விஷயம். ஹாகன் காட்டி வரும் வேகத்தையும், துடிப்பையும் பார்த்தால் இந்த விவகாரத்தை அவர் இத்துடன் விடமாட்டார் என்றும் தெரிகிறது.

நடவடிக்கை என்ன?

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் பதில் என்ன எனும் கேள்விகளுக்கு மத்தியில், இத்தனை பாதிப்பை ஏற்படுத்தும் பேஸ்புக் நிறுவனம் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான கேள்விகளும் தீவிரமடைந்துள்ளன. பேஸ்புக் செயல்பாடுகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் விசாரணை ஒருபக்கம் இருக்க, நிறுவனத்தின் ஏகபோக நிலையை குறைக்க அதன் துணை நிறுவனங்களை தனி நிறுவனமாக்குவது பற்றியும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதனிடையே இந்தியாவிலும் பேஸ்புக், துவேஷம் மற்றும் வன்முறை சார்ந்த உள்ளடக்கத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக நடந்து கொண்டவிதம் குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது மட்டும் அல்லாமல், பேஸ்புக் தனது விதிகளையும், நெறிமுறைகளையும் செல்வாக்கு மிக்க பயனாளிகளுக்காக தளர்த்திக்கொள்ளும் வழக்கம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பேஸ்புக்கின் பதில் பலவீனமாகவே இருக்கிறது. ஹாகன் சர்ச்சைக்கு பேஸ்புக் பதிவு மூலம் விளக்கம் அளித்த ஜுக்கர்பர்க், நிறுவனம் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்றும், நிறுவனம் பயனாளிகள் நலனைவிட லாப நோக்கில் செயல்படுவதாக சொல்லப்படுவதையும் மறுத்து கூறியிருந்தார். பேஸ்புக் ஆய்வுகளை அலட்சியம் செய்கிறது என்றால், இத்தகைய ஆய்வுகளை ஏன் நடத்த வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

முழு விவாதம்

ஆக பேஸ்புக் மீதான விவாதமும், விசாரணையும் தீவிரமாகியுள்ள நிலையில், இது பேஸ்புக் என்ற தனி நிறுவனம் தொடர்பான பிரச்சனை மட்டும் அல்ல, உண்மையில் இணைய யுகத்தில் சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் பிக் டெக் என குறிப்பிடப்படும் பேஸ்புக், கூகுள், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களை உள்ளடக்கிய பிரச்சனை இது என்று இணைய வல்லுனர்கள் கூறுகின்றனர். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தகவல் அறுவடை மற்றும் அல்கோரிதம் செயல்பாடு தொடர்பான விளைவுகளை நெறிப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

இதனிடையே பேஸ்புக் தனது பெயரை மாற்றிக்கொண்டு, மெட்டார் வெர்ஸ் எனப்படும் மெய்நிகர் உலகம் சார்ந்த தொழில்நுட்ப மேடையில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக, பேஸ்புக் தனது வளர்ச்சியில் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. மாறிவரும் உலகில் வளர்ச்சியை தக்க வைப்பதற்கான எதிர்கால உத்திகளை வகுப்பதில் கவனம் செலுத்துகிறது. பேஸ்புக் போன்ற எல்லாம் வல்ல இணைய நிறுவனங்கள் கடிவாளம் போடுவதற்கான செயல்களும் இதற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பதே இணைய வல்லுனர்கள், செயற்பாட்டாளர்கள் கருத்தாக இருக்கிறது.

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

 

தொடர்புடைய முந்தைய பதிவுகள்; 

http://cybersimman.com/2021/10/15/facebook-83/

 

 

 

 

பேஸ்புக் செயல்பாடுகளை அம்பலமாக்கும் விசூலூதி பெண்மணி

 

 

 

https___d1e00ek4ebabms.cloudfront.net_production_a30372e2-8de6-4f89-8706-a28d4517ada0பேஸ்புக் நிறுவனம் சர்ச்சையில் சிக்குவதோ, கடும் விமர்சனத்திற்கு உள்ளாவதோ புதிதல்ல. ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பேஸ்புக் இப்போது பெரும் விமர்சன சூறாவளியில் சிக்கியிருக்கிறது. இதன் விளைவாக, பேஸ்புக்கின் (தீய) தாக்கம் தொடர்பாக தீவிரமான கேள்விகளும், விவாதங்களும், விசாரணைகளும் தீவிரமடைந்துள்ளன. புகார்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் நேரடியாக பதில் சொல்ல முடியாமல் உலகின் செல்வாக்கு மிக்க சமூக வலைப்பின்னல் சேவை நிறுவனம் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

பேஸ்புக்கிற்கு எதிரான இந்த விமர்சன சூறாவளியின் மையமாக இருப்பவர் பிரான்சிஸ் ஹாகன். (Frances Haugen ). பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் அதிகாரியான ஹாகன் நிறுவனத்தில் இருந்து விலகி விசூலூதியாக மாறி வெளியிட்டு வரும் தகவல்களே இணைய உலகில் அதிர்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

பேஸ்புக் சமூக நலன் மற்றும் பயனாளிகள் நலனை விட வர்த்தக லாபத்தையே முதன்மையாக கருதுகிறது என்பதே ஹாகனின் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது. இணைய உலகில் பேஸ்புக்கின் செல்வாக்கையும், வீச்சையும் மனதில் கொண்டு பார்க்கும் போது இந்த குற்றச்சாட்டின் தீவிரத்தை உணரலாம். இதற்கான ஆதாரங்களையும், தொடர்புடைய இன்னும் பிற தகவல்களையும் அவர் பத்திரிகை மூலம் வெளியிட்டு ஒட்டுமொத்த இணைய உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறார். பேஸ்புக்கை கொஞ்சம் கூடுதலாகவே அதிர வைத்திருக்கிறார்.

சர்ச்சை வரலாறு

கடந்த 2018 ம் ஆண்டு வெடித்த கேம்பிரிட்ஜ் அனல்டிகா விவகாரத்தில் பேஸ்புக் தகவல்களை விளம்பர நோக்கில் அறுவடை செய்வதில் தீவிரமாக இருப்பதும், இதன் விளைவாக பயனாளிகளின் தனியுரிமை கேள்விக்குள்ளாவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். பேஸ்புக்கின் லாப நோக்கிலான செயல்பாடு கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி, ’பேஸ்புக்கை விட்டு வெளியேறுவோம்’ எனும் இணைய எதிர்ப்பு இயக்கத்திற்கும் இந்த சர்ச்சை வித்திட்டது.

இந்த சர்ச்சைக்கு மத்தியில், 2016 அமெரிக்க தேர்தலில் பேஸ்புக் மேடை பயன்படுத்தப்பட்ட விதமும் விவாத பொருளானது. பேஸ்புக்கின் தகவல் அறுவடை உத்திகள் மூலம் குறிப்பிட்ட இலக்கு வாக்காளர்களை குறி வைத்து பிரச்சாரம் செய்ய பேஸ்புக் பயன்பட்டதாகவும், பொய்ச்செய்திகள் இந்த பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. ரஷ்யாவின் டிரால் படையும் இதில் விளையாடியாக விமர்சனம் எழுந்தது.

இதன் தொடர்ச்சியாக பேஸ்புக் தனது நியூஸ்ஃபீடில் தகவல்களை தோன்றச்செய்யும் விதமும், அதற்கு பின்னே உள்ள அல்கோரிதமின் செயல்பாடும் விமர்சனத்திற்கு உள்ளாயின. பேஸ்புக் தவறான தகவல்கள் மற்றும் பொய்ச்செய்திகளை பகிர்வதற்கான கூடாரமாக மாறிவிட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதனிடையே, 2021 அமெரிக்க தேர்தல் முடிவை ஏற்காமல் அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் கேபிடல் ஹில் பகுதியில் கட்டவிழ்த்துவிட்ட வம்முறைக்கும் பேஸ்புக் மேடை பயன்படுத்தப்பட்ட விதம் கண்டனத்திற்கு உள்ளானது.

பேஸ்புக் கோப்புகள்

மேலும், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் பேஸ்புக் வன்முறை மற்றும் துவேஷத்தை தூண்டும் கருத்துகளையும் பொய் செய்திகளையும் பகிர்ந்து கொள்ளும் வாகனமாக விளங்குவதாக தெரிய வந்தது. இது போன்ற குற்றச்சாட்டுகள் குவிந்த நிலையில், பேஸ்புக் தனது மேடையில் தோன்றும் கருத்துகளை நெறிப்படுத்துவதில் போதிய பொறுப்புணர்வை காட்டுவதில்லை எனும் விமர்சனமும் பலரால் முன்வைக்கப்பட்டது.

இந்த பின்னணியில் தான் பேஸ்புக் மீதான புதிய குற்றச்சாட்டுகள் வெளியாகத்துவங்கின. அமெரிக்காவின் ’வால்ஸ்டிரீட் ஜர்னல்’ நாளிதழில் இவை முதலில் வெளியாகத்துவங்கின. பேஸ்புக்கின் துணை சேவையான இன்ஸ்டாகிராம் இளம் பெண்களின் ஆரோக்கியத்திற்காக தீங்காக விளங்குகிறது என்பதை நன்கு அறிந்திருந்தும் பேஸ்புக் இது தொடர்பாக மாற்று நடவடிக்கை எடுக்காமல், பாதிப்பு ஏற்படுத்தும் உத்திகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது என்பது இந்த குற்றச்சாட்டின் மையமாக அமைந்தது.

குழந்தைகளுக்கான இன்ஸ்டாகிராம் சேவையை பேஸ்புக் அறிமுகம் செய்ய இருப்பதாக வெளியான தகவல் கடும் கண்டனத்திற்கு உள்ளான சூழலில் இந்த தகவல் வெளியானது. இதற்கு ஆதாரமாக பேஸ்புக் நிறுவனத்திற்குள் பயன்படுத்தப்பட்ட ஆய்வு குறிப்புகளையும், தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அந்த நாளிதழ் ஆதாரமாக வெளியிட்டிருந்தது.

பேஸ்புக்கின் நியூஸ்ஃபீடை இயக்கும் அல்கோரிதம் பயனாளிகளிடம் இருந்து கோபமான எதிர்வினையை தூண்டும் தகவல்களை முன்னிறுத்தும் வகையில் அமைந்திருப்பதும், பேஸ்புக் தெரிந்தே தொடர்கிறது என்ற மற்றொரு முக்கிய குற்றச்சாட்டும் இந்த நாளிதழில் வெளியானது. பயனாளிகள் அதிக நேரம் பேஸ்புக்கில் தங்கியிருக்கச்செய்வதே இதன் நோக்கம் என்றும், பேஸ்புக் பயனாளிகள் நலத்தைவிட தனது வர்த்தக நலனையே பிரதானமாக கருதுகிறது என்றும் இந்த செய்தியில் கூறப்பட்டது.

விசூலூதி ஹாகன்

பேஸ்புக்கின் தாக்கத்தையும், அதன் வர்த்தக நோக்கிலான செயல்பாட்டையும் அம்பலமாக்கிய இந்த தகவல்கள் பேஸ்புக் கோப்புகள் என குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் தான், இந்த தகவல்களை துணிந்து வெளிப்படுத்திய நபர் யார் எனும் விவரம் வெளியானது. அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பேஸ்புக் முன்னாள் அதிகாரியான பிரான்சிஸ் ஹாகன், தன்னை விசூலூதியாக அறிமுகம் செய்து கொண்டு மேலும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். துவேஷம், வன்முறை போன்ற கருத்துகளை பகிரப்படுவதை நெறிப்படுத்துவதை விட, பேஸ்புக் தனது லாப நோக்கத்தையே பேஸ்புக் முக்கியமாக கருதுவதாக கூறியவர், நிறுவன செயல்பாடுகளால் வெறுத்துபோய் அதிலிருந்து விலகியதாகவும் கூறினார்.

பேஸ்புக்கில் இருந்து வெளியேறும் முன், அதன் மோசமான செயல்பாடுகளை உணர்த்தும் ஆதாரங்களை கவனமாக திரட்டிக்கொண்டார். இப்படி திரட்டிய ஆதாரங்களே பேஸ்புக் கோப்புகளாக இணைய உலகில் சூறாவளையை உண்டாக்கியது. இதைத்தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற துணைக்குழு முன் ஆஜாராகி, பேஸ்புக்கின் மோசமான செயல்பாடுகள் தொடர்பாக அவர் விளக்கம் அளித்தார். இதே போல பிரிட்டனில் நடைபெறும் விசாரணையிலும் சாட்சியம் அளித்திருக்கிறார். பேஸ்புக்கின் தீய விளைவுகளை துணிந்து அமபலமாக்கியதற்காக அமெரிக்காவின் நவீன நாயகி என்றும் ஹாகன் பாராட்டப்படுகிறார்.

பேஸ்புக் மீதான இந்த குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை ஏற்கனவே சொல்லப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருபவை தான். பேஸ்புக்கின் நியூஸ்ஃபீட் முன்னிறுத்தும் தகவல்களின் சார்பும், பல சமூகங்களில் இவை ஏற்படுத்தும் தாக்கமும் வல்லுனர்களால் தொடர்ந்து கவலையோடு விவாதிக்கப்படும் விஷயமாக இருக்கிறது. ஹாகன், பேஸ்புக்கின் ஆவணங்கள் மற்றும் அதன் சொந்த ஆய்வுக்குறிப்புகளை கொண்டு இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்த்திருக்கிறார் என்பதே விஷயம். ஹாகன் காட்டி வரும் வேகத்தையும், துடிப்பையும் பார்த்தால் இந்த விவகாரத்தை அவர் இத்துடன் விடமாட்டார் என்றும் தெரிகிறது.

நடவடிக்கை என்ன?

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் பதில் என்ன எனும் கேள்விகளுக்கு மத்தியில், இத்தனை பாதிப்பை ஏற்படுத்தும் பேஸ்புக் நிறுவனம் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான கேள்விகளும் தீவிரமடைந்துள்ளன. பேஸ்புக் செயல்பாடுகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள் விசாரணை ஒருபக்கம் இருக்க, நிறுவனத்தின் ஏகபோக நிலையை குறைக்க அதன் துணை நிறுவனங்களை தனி நிறுவனமாக்குவது பற்றியும் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதனிடையே இந்தியாவிலும் பேஸ்புக், துவேஷம் மற்றும் வன்முறை சார்ந்த உள்ளடக்கத்தை நெறிப்படுத்துவது தொடர்பாக நடந்து கொண்டவிதம் குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அது மட்டும் அல்லாமல், பேஸ்புக் தனது விதிகளையும், நெறிமுறைகளையும் செல்வாக்கு மிக்க பயனாளிகளுக்காக தளர்த்திக்கொள்ளும் வழக்கம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு பேஸ்புக்கின் பதில் பலவீனமாகவே இருக்கிறது. ஹாகன் சர்ச்சைக்கு பேஸ்புக் பதிவு மூலம் விளக்கம் அளித்த ஜுக்கர்பர்க், நிறுவனம் தவறாக சித்தரிக்கப்படுகிறது என்றும், நிறுவனம் பயனாளிகள் நலனைவிட லாப நோக்கில் செயல்படுவதாக சொல்லப்படுவதையும் மறுத்து கூறியிருந்தார். பேஸ்புக் ஆய்வுகளை அலட்சியம் செய்கிறது என்றால், இத்தகைய ஆய்வுகளை ஏன் நடத்த வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

முழு விவாதம்

ஆக பேஸ்புக் மீதான விவாதமும், விசாரணையும் தீவிரமாகியுள்ள நிலையில், இது பேஸ்புக் என்ற தனி நிறுவனம் தொடர்பான பிரச்சனை மட்டும் அல்ல, உண்மையில் இணைய யுகத்தில் சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் பிக் டெக் என குறிப்பிடப்படும் பேஸ்புக், கூகுள், ஆப்பிள் போன்ற பெரிய நிறுவனங்களை உள்ளடக்கிய பிரச்சனை இது என்று இணைய வல்லுனர்கள் கூறுகின்றனர். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தகவல் அறுவடை மற்றும் அல்கோரிதம் செயல்பாடு தொடர்பான விளைவுகளை நெறிப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

இதனிடையே பேஸ்புக் தனது பெயரை மாற்றிக்கொண்டு, மெட்டார் வெர்ஸ் எனப்படும் மெய்நிகர் உலகம் சார்ந்த தொழில்நுட்ப மேடையில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக, பேஸ்புக் தனது வளர்ச்சியில் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. மாறிவரும் உலகில் வளர்ச்சியை தக்க வைப்பதற்கான எதிர்கால உத்திகளை வகுப்பதில் கவனம் செலுத்துகிறது. பேஸ்புக் போன்ற எல்லாம் வல்ல இணைய நிறுவனங்கள் கடிவாளம் போடுவதற்கான செயல்களும் இதற்கு ஈடு கொடுக்க வேண்டும் என்பதே இணைய வல்லுனர்கள், செயற்பாட்டாளர்கள் கருத்தாக இருக்கிறது.

 

நன்றி; தமிழ் இந்துவில் எழுதியது.

 

தொடர்புடைய முந்தைய பதிவுகள்; 

http://cybersimman.com/2021/10/15/facebook-83/

 

 

 

 

பேஸ்புக் செயல்பாடுகளை அம்பலமாக்கும் விசூலூதி பெண்மணி

 

 

 

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.