இமெயிலில் வரும் வில்லங்கங்கள் உஷார்

indexஇ-மெயில் மோசடிகள் மீண்டும் தலைப்புச்செய்திகளில் இடம் பிடிக்க துவங்கியுள்ளன;அமெரிக்காவின் பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை இணையதளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரை இப்படி தான் துவங்குகிறது!
பிஷிங் வகையான மோசடியை தான் இப்படி குறிப்பிடும் இந்த கட்டுரை முன்னணி பத்து மோசடிகளையும் பட்டியலிட்டு எச்சரித்துள்ளது.

இது அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை என்று நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.ஏனெனில் பிஷிங் மோசடி வையம் தழுவிய பிரச்சனையாக இருப்பதால் எல்லா நாடுகளில் உள்ள இணையவாசிகளும் இதற்கு இலக்காகும் ஆபத்து இருக்கிறது.அதோடு இந்தியாவில் இன்னமும் இந்த வகை மோசடி குறித்து பரவலான விழிப்புணர்வு இல்லாததால் நமக்கு இரட்டிப்பு ஆபத்து இருப்பதாக கூட சொல்லலாம்.
ஏற்கனவே பிஷிங் மோசடி இங்கு பலவிதமான பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.அவற்றை பார்க்கும் முன்னர் முதலில் பிஷிங் என்றால் என்ன? என்று சுருக்கமாக பார்த்து விடலாம்.

பொய்யான இ-மெயில் மூலம் ஏமாற்றி பயனாளிகளிடம் இருந்து வங்கி கணக்கு எண்,பாஸ்வேர்டு போன்ற பாதுகாப்பான தகவல்களை கறந்து விடும் முயற்சிகளே பிஷிங் மோசடி என்று குறிப்பிடப்படுகிறது.
பெரும்பாலும் முன்னணி வங்கிகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து வந்திருக்கும் மெயில் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் இந்த மெயில்கள் இணையவாசிகள் தங்கள் வங்கி கணக்கு அல்லது கிரிடிட் கார்டு எண் மற்றும் பாஸ்வேர்டை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளும்.

இவற்றை நிஜம் என நம்பி பாஸ்வேர்டு போன்ற விவரங்களை சமர்பித்தால் பின்னணியில் உள்ள டிஜிட்டல் களவானிகள் கைவரிசை காட்டி இணையவாசிகளின் கணக்கில் இருந்து பணத்தை அபகரித்து விடுவார்கள்.
வடிவமைப்பிலும் சரி,வாசகங்களிலும் சரி இந்த மெயில்கள் அச்சு அசல் உண்மையான மெயில்கள் போலவே தோற்றம் தரும் என்பதால் பல இணையவாசிகள் ஏமாறும் வாய்ப்பு இருக்கிறது.அதிலும் இவற்றின் உள்ளடக்கம் இணையவாசிகள் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உடனே செயல்படும் வகையில் அமைந்திருக்கும் என்பதால் பார்த்தவுடன் ஒரு சிலர் யோசிக்காமலே பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களை கண்ணை மூடிக்கொண்டு கொடுத்துவிடும் நிலை இருக்கிறது.உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட உள்ளது, அதை தவிர்க்க இங்கே கிளிக் செய்து புதுப்பித்துக்கொள்ளவும் போன்ற எச்சரிக்கையை பார்த்தால் திடுக்கிடத்தானே செய்யும்.அது தான் பலரும் ஏமாறுகின்றனர்.

பல நேரங்களில் இவை பெரும் பரிசுத்தொகை விழுந்திருப்பதாக அறிவித்து அதைப்பெற வங்கி கணக்கு விவரங்கள் தேவை என ஆசை வலை விரிப்பதும் உண்டு.
சூழ்நிலைக்கு ஏற்ப அப்போதைய செய்திகளை பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றுவதும் நடக்கிறது.உதாரணத்திற்கு சில காலம் முன் யுடிஐ வங்கி ஆக்சிஸ் வங்கி என பெயர் மாறிய போது இதை பயன்படுத்திக்கொண்டு,பெயர் மாறிய வங்கியில் கணக்கை புதுப்பித்துக்கொள்ளவும் எனக்கூறி ஏமாற்ற முயற்சித்தனர். இந்த மெயிலுக்கும் ஆக்சிஸ் வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை.உண்மையில் ஒரு போதும் வங்கிகள் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை.பாஸ்வேர்டு போன்ற விவரங்களை வங்கிகள் இந்த முறையில் கேட்பதற்கான அவசியமே இல்லை.

ஆனால் இணையவாசிகளின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு இ-மெயில் மூலம் வலைவிரிக்கும் முயற்சி டிஜிட்டல் களவானிகள் அதிகம் நாடும் உத்தியாகவே இருக்கிறது.
இந்தியாவை பொருத்தவரை இந்த வகையான சைபர் தாக்குதல்கள் நடப்பு ஆண்டில் இரு மடங்காகி இருப்பதாக பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. தனிநபர்கள் மட்டும் அல்லாமல் நிறுவனங்களும் இந்த தாக்குதலுக்கு இலக்காகின்றன.

இவ்வளவு ஏன்,சில மாதங்களுக்கு முன் கர்நாடக மாநில உயர் போலிஸ் அதிகாரி ஒருவரே இப்படி பிஷிங் தாக்குதலுக்கு உள்ளாகி கிரிடிட் கார்டு மூலம் 12,000 ரூபாயை இழ்ந்தார். தனியார் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் பிஷிங் மூலம் பணம் இழந்த சம்பவம் நீதிமன்ற வழக்காகி இருக்கிறது.
இதில் கவலை தரும் விஷயம் என்ன என்றால் இந்தியாவில் பிஷிங் மோசடிக்கு இலக்காகும் பலர் அது பற்றிய அறியாமலே இருப்பதாகவும், உண்மையில் பாதி அளவு மோசடிகளே புகார் செய்யப்படுவதாகவும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் டிஜிட்டல் மயம் தீவிரமாக வரும் நிலையிலும், இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வங்கிச்சேவை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையிலும் இத்தகையை மோசடிகள் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாக சைபர் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே இணையவாசிகள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பொதுவாக மோசடி மெயில் வலையில் விழாமல் இருக்க வல்லுனர்கள் சொல்லும் வழிகள் இவை:

* அறிமுகமில்லா இடங்களில் இருந்து வரும் மெயில்களை திறக்க வேண்டாம்.அவற்றில் உள்ள இணைப்புகளில் இன்னும் எச்சரிக்கை தேவை
* தனியே எட்டிப்பார்க்கும் பாப் அப் விண்டோ முலம் தகவல் கோரும் பக்கங்களில் எந்த விவரங்களையும் சமர்பிக்க வேண்டாம்.
* போன் அல்லது இ-மெயில் மூலம் பாஸ்வேர்டை தெரிவிக்க வேண்டாம்.
* பாஸ்வேர்ட் போன்றவை மிகவும் பாதுகாப்பானவை.வங்கி ஊழியர்களுக்கு கூட அவை தெரியாது, எனில் யாரோ கேட்கும் போது ஏன் கொடுக்க வேண்டும் என யோசியுங்கள்.
* மெயில் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். அதிகாரபூர்வ இணைய முகவரிகளை நாடவும்.
* பாஸ்வேர்டு அடிக்கும் முன் முகவரியில் பாதுகாப்பு தன்மையை உணர்த்தும் கூடுதல் எஸ் ( ‘https://’ )இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவும்.
ஒருவேளை உங்கள் வங்கியிடம் இருந்து மெயில் வந்திருக்கலாம் என சந்தேகம் இருந்தாலும் கூட அதனடிப்படையில் செயல்படும் முன் முதல் வங்கியை தொடர்பு கொண்டு உறுது செய்து கொள்ளுங்களேன்.

——-

தளம் புதிது:வரைபடத்தில் புகைப்பங்கள்

புகைப்பட பகிர்வு சேவைகளில் இன்ஸ்டாகிராம் கொடி கட்டி பறப்பது தெரிந்த விஷயம் தான். இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் புகைப்படங்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இப்போது இன்னும் ஒரு சுவாரஸ்யமான வழியாக வரைபடம் மீது புதிய இன்ஸ்டாகிராம் படஙளை கண்டு ரசிக்க வழி செய்கிறது இன்ஸ்டாமேப் இணையதளம்.
இந்த இணையதளம் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை அவை எடுத்து வெளியிடப்பட்ட இடங்களின் அடிப்படையில் உலக வரைபடம் மீது சுட்டிக்காட்டுகிறது. ஆக இந்த தளத்தில் உங்கள் இருப்பிடத்தை தெரிவித்து அருகாமையில் எடுக்கப்பட்ட படங்களை பார்க்கலாம்.அல்லது உங்களுக்கு விருப்பமான இடங்களை தேர்வு செய்து அங்கு எடுக்கப்பட்ட படங்களை பார்த்து ரசிக்கலாம். இடத்தை தேர்வு செய்த பின் அதில் உள்ள காமிரா ஐகானை கிளிக் செய்தால் சரசரவென்று புகைப்படங்கள் தம்ப்நைல் காட்சிகளாக வரைபடம் மீது தோன்றுகின்றன. இன்ஸ்டாகிராம் படங்களை ரசிக்க அருமையான வழி! அதோடு பார்த்து ரசித்த படங்களை சமூக ஊடகங்களில் பகிரவும் செய்யலாம்.

இணையதள முகவரி: https://instmap.com/

——–
unnamed
செயலி புதிது; சுங்க வரி வழிகாட்டி

இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு சுங்க இலாக்கா வரி மற்றும் விதிமுறைகள் தொடர்பாக வழிகாட்டும் விவரங்களை அளிக்கிறது கஸ்டம் டிராவலர் கைடு இந்தியா செயலி. எளிமையான கேள்விகள் மூலம் இந்த செயலி விதிகள் மற்றும் வரிகளை விளக்கிச்சொல்கிறது.எந்த வகையான பொருட்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.ஏதேனும் சந்தேம் என்றால் இமெயில் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
சுங்க வரிகளை கணக்கிடுவதற்கான கால்குலேட்டர் வசதியும் இருக்கிறது.கூகுள் பிளேஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி விரைவில் மற்ற இயங்கு தளங்களுக்கும் அறிமுகமாக உள்ளது.
தரவிறக்கம் செய்ய:https://play.google.com/store/apps/details?id=in.eightbitsystems.customstravellerguide_india&hl=en

———

ஷிப்ட் கீ ரகசியங்கள்

எல்லா பிரவுசர்களிலும் விசைப்பலகை பயன்பாட்டிற்கான குறுக்கு வழிகள் உண்டு.இந்த குறுக்கு வழிகளில் சில பரவலாக அறியப்பட்டவை.பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுபவை. ஆனால் பல அருமையான குறுக்கு வழிகள் இன்னமும் வெகுஜன பயன்பாட்டிற்கு வராமல் இணைய ரகசியங்களாகவே இருக்கின்றன.
அந்த வகையில் ஷிப்ட் கீ சார்ந்த சில முக்கிய பயன்பாட்டை மேக்யூஸ்ஆப் இணையதளம் அடையாளம் காட்டியுள்ளது.
sh
உங்கள் மவுசில் ஸ்கோரோல் வீல் எனும் சிறிய சக்கரம் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.இணைய பக்கங்களை மேலும் கீழுமாக நகர்த்த இந்த சக்கரத்தை பயன்படுத்தலாம்.ஆனால் சில இணைய பக்கங்களில் பக்கவாட்டில் நகர்த்தும் தேவை ஏற்படலாம். இது போன்ற இணைய பக்கங்களில் உலாவும் போது ஷிப்ட் கீயை பிடித்தபடி மவுஸ் சக்கரத்தை நகர்த்தினால் போதும் இணைய பக்கத்தின் உள்ளடக்கம் பக்கவாட்டில் நகரும்.
அதே போல ஒன்றுக்கும் மேற்பட்ட டேப்களை பயன்படுத்தும் பழக்கம் உங்களில் பலருக்கு இருக்கலாம்.இப்படி பல இணையதளங்களை பயன்படுத்தும் போது தற்செயலாக ஒரு இணையதளத்தை மூடிவிடும் நிலை உண்டாகலாம்.அடடா பார்த்துக்கொண்டிருந்த பக்கத்தை மூடிவிட்டோமே என்று கவலை கொள்ள வேண்டாம்.இப்போதும் ஷிப்ட் கீ கைகொடுக்கும்.ஷிப்ட் கீ மற்றும் கண்ட்ரோல் கீயை பிடித்த படி ‘டி’ எழுத்தை அழுத்தினால் சற்று முன் மூடப்பட்ட இணையதளம் மீண்டும் தோன்றும்.அப்படியே பிடித்த படி ‘டி’ எழுத்தை அழுத்திக்கொண்டிருந்தால் வரிசையாக மூடப்பட்ட தளங்கள் தலைகீழ் வரிசையில் தோன்றும்.
எப்போதுமே ஒன்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களை திறந்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு இந்த குறுக்கு வழி உற்சாகத்தை கொடுக்கும்.

தற்செயலாக ஸ்பேஸ் பாரை அழுத்தும் போது இணைய பக்கத்தின் கீழ்ப்பகுதிக்கு போய்விடுவதை நீங்க்ள் கவனித்திருக்கலாம்.இதையே ஷிப்ட் கீயை அழுத்திய படி செய்தால் மீண்டும் இணைய பக்கத்தின் மேலேறி வந்துவிடலாம்.
சற்றே நீளமான கட்டுரையை படித்ததும் ஒரே தாவலில் மேலே வர இந்த வசதி கைகொடுக்கும்.

———

நன்றி;தமிழ் இந்துவில் எழுதியது

indexஇ-மெயில் மோசடிகள் மீண்டும் தலைப்புச்செய்திகளில் இடம் பிடிக்க துவங்கியுள்ளன;அமெரிக்காவின் பிரபலமான போர்ப்ஸ் பத்திரிகை இணையதளத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரை இப்படி தான் துவங்குகிறது!
பிஷிங் வகையான மோசடியை தான் இப்படி குறிப்பிடும் இந்த கட்டுரை முன்னணி பத்து மோசடிகளையும் பட்டியலிட்டு எச்சரித்துள்ளது.

இது அமெரிக்கர்களுக்கான எச்சரிக்கை என்று நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது.ஏனெனில் பிஷிங் மோசடி வையம் தழுவிய பிரச்சனையாக இருப்பதால் எல்லா நாடுகளில் உள்ள இணையவாசிகளும் இதற்கு இலக்காகும் ஆபத்து இருக்கிறது.அதோடு இந்தியாவில் இன்னமும் இந்த வகை மோசடி குறித்து பரவலான விழிப்புணர்வு இல்லாததால் நமக்கு இரட்டிப்பு ஆபத்து இருப்பதாக கூட சொல்லலாம்.
ஏற்கனவே பிஷிங் மோசடி இங்கு பலவிதமான பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.அவற்றை பார்க்கும் முன்னர் முதலில் பிஷிங் என்றால் என்ன? என்று சுருக்கமாக பார்த்து விடலாம்.

பொய்யான இ-மெயில் மூலம் ஏமாற்றி பயனாளிகளிடம் இருந்து வங்கி கணக்கு எண்,பாஸ்வேர்டு போன்ற பாதுகாப்பான தகவல்களை கறந்து விடும் முயற்சிகளே பிஷிங் மோசடி என்று குறிப்பிடப்படுகிறது.
பெரும்பாலும் முன்னணி வங்கிகள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து வந்திருக்கும் மெயில் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் இந்த மெயில்கள் இணையவாசிகள் தங்கள் வங்கி கணக்கு அல்லது கிரிடிட் கார்டு எண் மற்றும் பாஸ்வேர்டை சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளும்.

இவற்றை நிஜம் என நம்பி பாஸ்வேர்டு போன்ற விவரங்களை சமர்பித்தால் பின்னணியில் உள்ள டிஜிட்டல் களவானிகள் கைவரிசை காட்டி இணையவாசிகளின் கணக்கில் இருந்து பணத்தை அபகரித்து விடுவார்கள்.
வடிவமைப்பிலும் சரி,வாசகங்களிலும் சரி இந்த மெயில்கள் அச்சு அசல் உண்மையான மெயில்கள் போலவே தோற்றம் தரும் என்பதால் பல இணையவாசிகள் ஏமாறும் வாய்ப்பு இருக்கிறது.அதிலும் இவற்றின் உள்ளடக்கம் இணையவாசிகள் மத்தியில் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உடனே செயல்படும் வகையில் அமைந்திருக்கும் என்பதால் பார்த்தவுடன் ஒரு சிலர் யோசிக்காமலே பாஸ்வேர்டு உள்ளிட்ட விவரங்களை கண்ணை மூடிக்கொண்டு கொடுத்துவிடும் நிலை இருக்கிறது.உங்கள் வங்கி கணக்கு முடக்கப்பட உள்ளது, அதை தவிர்க்க இங்கே கிளிக் செய்து புதுப்பித்துக்கொள்ளவும் போன்ற எச்சரிக்கையை பார்த்தால் திடுக்கிடத்தானே செய்யும்.அது தான் பலரும் ஏமாறுகின்றனர்.

பல நேரங்களில் இவை பெரும் பரிசுத்தொகை விழுந்திருப்பதாக அறிவித்து அதைப்பெற வங்கி கணக்கு விவரங்கள் தேவை என ஆசை வலை விரிப்பதும் உண்டு.
சூழ்நிலைக்கு ஏற்ப அப்போதைய செய்திகளை பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றுவதும் நடக்கிறது.உதாரணத்திற்கு சில காலம் முன் யுடிஐ வங்கி ஆக்சிஸ் வங்கி என பெயர் மாறிய போது இதை பயன்படுத்திக்கொண்டு,பெயர் மாறிய வங்கியில் கணக்கை புதுப்பித்துக்கொள்ளவும் எனக்கூறி ஏமாற்ற முயற்சித்தனர். இந்த மெயிலுக்கும் ஆக்சிஸ் வங்கிக்கும் எந்த தொடர்பும் இல்லை.உண்மையில் ஒரு போதும் வங்கிகள் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை.பாஸ்வேர்டு போன்ற விவரங்களை வங்கிகள் இந்த முறையில் கேட்பதற்கான அவசியமே இல்லை.

ஆனால் இணையவாசிகளின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு இ-மெயில் மூலம் வலைவிரிக்கும் முயற்சி டிஜிட்டல் களவானிகள் அதிகம் நாடும் உத்தியாகவே இருக்கிறது.
இந்தியாவை பொருத்தவரை இந்த வகையான சைபர் தாக்குதல்கள் நடப்பு ஆண்டில் இரு மடங்காகி இருப்பதாக பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது. தனிநபர்கள் மட்டும் அல்லாமல் நிறுவனங்களும் இந்த தாக்குதலுக்கு இலக்காகின்றன.

இவ்வளவு ஏன்,சில மாதங்களுக்கு முன் கர்நாடக மாநில உயர் போலிஸ் அதிகாரி ஒருவரே இப்படி பிஷிங் தாக்குதலுக்கு உள்ளாகி கிரிடிட் கார்டு மூலம் 12,000 ரூபாயை இழ்ந்தார். தனியார் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் பிஷிங் மூலம் பணம் இழந்த சம்பவம் நீதிமன்ற வழக்காகி இருக்கிறது.
இதில் கவலை தரும் விஷயம் என்ன என்றால் இந்தியாவில் பிஷிங் மோசடிக்கு இலக்காகும் பலர் அது பற்றிய அறியாமலே இருப்பதாகவும், உண்மையில் பாதி அளவு மோசடிகளே புகார் செய்யப்படுவதாகவும் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.

இந்தியாவில் டிஜிட்டல் மயம் தீவிரமாக வரும் நிலையிலும், இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வங்கிச்சேவை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையிலும் இத்தகையை மோசடிகள் அதிகரிப்பதற்கான அபாயம் உள்ளதாக சைபர் வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

எனவே இணையவாசிகள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பொதுவாக மோசடி மெயில் வலையில் விழாமல் இருக்க வல்லுனர்கள் சொல்லும் வழிகள் இவை:

* அறிமுகமில்லா இடங்களில் இருந்து வரும் மெயில்களை திறக்க வேண்டாம்.அவற்றில் உள்ள இணைப்புகளில் இன்னும் எச்சரிக்கை தேவை
* தனியே எட்டிப்பார்க்கும் பாப் அப் விண்டோ முலம் தகவல் கோரும் பக்கங்களில் எந்த விவரங்களையும் சமர்பிக்க வேண்டாம்.
* போன் அல்லது இ-மெயில் மூலம் பாஸ்வேர்டை தெரிவிக்க வேண்டாம்.
* பாஸ்வேர்ட் போன்றவை மிகவும் பாதுகாப்பானவை.வங்கி ஊழியர்களுக்கு கூட அவை தெரியாது, எனில் யாரோ கேட்கும் போது ஏன் கொடுக்க வேண்டும் என யோசியுங்கள்.
* மெயில் மற்றும் குறுஞ்செய்தி மூலம் வரும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். அதிகாரபூர்வ இணைய முகவரிகளை நாடவும்.
* பாஸ்வேர்டு அடிக்கும் முன் முகவரியில் பாதுகாப்பு தன்மையை உணர்த்தும் கூடுதல் எஸ் ( ‘https://’ )இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளவும்.
ஒருவேளை உங்கள் வங்கியிடம் இருந்து மெயில் வந்திருக்கலாம் என சந்தேகம் இருந்தாலும் கூட அதனடிப்படையில் செயல்படும் முன் முதல் வங்கியை தொடர்பு கொண்டு உறுது செய்து கொள்ளுங்களேன்.

——-

தளம் புதிது:வரைபடத்தில் புகைப்பங்கள்

புகைப்பட பகிர்வு சேவைகளில் இன்ஸ்டாகிராம் கொடி கட்டி பறப்பது தெரிந்த விஷயம் தான். இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் புகைப்படங்களை பார்த்து ரசிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இப்போது இன்னும் ஒரு சுவாரஸ்யமான வழியாக வரைபடம் மீது புதிய இன்ஸ்டாகிராம் படஙளை கண்டு ரசிக்க வழி செய்கிறது இன்ஸ்டாமேப் இணையதளம்.
இந்த இணையதளம் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை அவை எடுத்து வெளியிடப்பட்ட இடங்களின் அடிப்படையில் உலக வரைபடம் மீது சுட்டிக்காட்டுகிறது. ஆக இந்த தளத்தில் உங்கள் இருப்பிடத்தை தெரிவித்து அருகாமையில் எடுக்கப்பட்ட படங்களை பார்க்கலாம்.அல்லது உங்களுக்கு விருப்பமான இடங்களை தேர்வு செய்து அங்கு எடுக்கப்பட்ட படங்களை பார்த்து ரசிக்கலாம். இடத்தை தேர்வு செய்த பின் அதில் உள்ள காமிரா ஐகானை கிளிக் செய்தால் சரசரவென்று புகைப்படங்கள் தம்ப்நைல் காட்சிகளாக வரைபடம் மீது தோன்றுகின்றன. இன்ஸ்டாகிராம் படங்களை ரசிக்க அருமையான வழி! அதோடு பார்த்து ரசித்த படங்களை சமூக ஊடகங்களில் பகிரவும் செய்யலாம்.

இணையதள முகவரி: https://instmap.com/

——–
unnamed
செயலி புதிது; சுங்க வரி வழிகாட்டி

இந்தியாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு சுங்க இலாக்கா வரி மற்றும் விதிமுறைகள் தொடர்பாக வழிகாட்டும் விவரங்களை அளிக்கிறது கஸ்டம் டிராவலர் கைடு இந்தியா செயலி. எளிமையான கேள்விகள் மூலம் இந்த செயலி விதிகள் மற்றும் வரிகளை விளக்கிச்சொல்கிறது.எந்த வகையான பொருட்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்பதையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.ஏதேனும் சந்தேம் என்றால் இமெயில் மூலம் தொடர்பு கொள்ளும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
சுங்க வரிகளை கணக்கிடுவதற்கான கால்குலேட்டர் வசதியும் இருக்கிறது.கூகுள் பிளேஸ்டோரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த செயலி விரைவில் மற்ற இயங்கு தளங்களுக்கும் அறிமுகமாக உள்ளது.
தரவிறக்கம் செய்ய:https://play.google.com/store/apps/details?id=in.eightbitsystems.customstravellerguide_india&hl=en

———

ஷிப்ட் கீ ரகசியங்கள்

எல்லா பிரவுசர்களிலும் விசைப்பலகை பயன்பாட்டிற்கான குறுக்கு வழிகள் உண்டு.இந்த குறுக்கு வழிகளில் சில பரவலாக அறியப்பட்டவை.பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுபவை. ஆனால் பல அருமையான குறுக்கு வழிகள் இன்னமும் வெகுஜன பயன்பாட்டிற்கு வராமல் இணைய ரகசியங்களாகவே இருக்கின்றன.
அந்த வகையில் ஷிப்ட் கீ சார்ந்த சில முக்கிய பயன்பாட்டை மேக்யூஸ்ஆப் இணையதளம் அடையாளம் காட்டியுள்ளது.
sh
உங்கள் மவுசில் ஸ்கோரோல் வீல் எனும் சிறிய சக்கரம் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.இணைய பக்கங்களை மேலும் கீழுமாக நகர்த்த இந்த சக்கரத்தை பயன்படுத்தலாம்.ஆனால் சில இணைய பக்கங்களில் பக்கவாட்டில் நகர்த்தும் தேவை ஏற்படலாம். இது போன்ற இணைய பக்கங்களில் உலாவும் போது ஷிப்ட் கீயை பிடித்தபடி மவுஸ் சக்கரத்தை நகர்த்தினால் போதும் இணைய பக்கத்தின் உள்ளடக்கம் பக்கவாட்டில் நகரும்.
அதே போல ஒன்றுக்கும் மேற்பட்ட டேப்களை பயன்படுத்தும் பழக்கம் உங்களில் பலருக்கு இருக்கலாம்.இப்படி பல இணையதளங்களை பயன்படுத்தும் போது தற்செயலாக ஒரு இணையதளத்தை மூடிவிடும் நிலை உண்டாகலாம்.அடடா பார்த்துக்கொண்டிருந்த பக்கத்தை மூடிவிட்டோமே என்று கவலை கொள்ள வேண்டாம்.இப்போதும் ஷிப்ட் கீ கைகொடுக்கும்.ஷிப்ட் கீ மற்றும் கண்ட்ரோல் கீயை பிடித்த படி ‘டி’ எழுத்தை அழுத்தினால் சற்று முன் மூடப்பட்ட இணையதளம் மீண்டும் தோன்றும்.அப்படியே பிடித்த படி ‘டி’ எழுத்தை அழுத்திக்கொண்டிருந்தால் வரிசையாக மூடப்பட்ட தளங்கள் தலைகீழ் வரிசையில் தோன்றும்.
எப்போதுமே ஒன்றுக்கும் மேற்பட்ட இணையதளங்களை திறந்து வைத்துக்கொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு இந்த குறுக்கு வழி உற்சாகத்தை கொடுக்கும்.

தற்செயலாக ஸ்பேஸ் பாரை அழுத்தும் போது இணைய பக்கத்தின் கீழ்ப்பகுதிக்கு போய்விடுவதை நீங்க்ள் கவனித்திருக்கலாம்.இதையே ஷிப்ட் கீயை அழுத்திய படி செய்தால் மீண்டும் இணைய பக்கத்தின் மேலேறி வந்துவிடலாம்.
சற்றே நீளமான கட்டுரையை படித்ததும் ஒரே தாவலில் மேலே வர இந்த வசதி கைகொடுக்கும்.

———

நன்றி;தமிழ் இந்துவில் எழுதியது

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published.